Jump to content

தமிழகத்தில் புலிகளை ஆதரிக்கத் தடை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைப் புலிகளை ஆதரித்துக் கருத்து வெளியிடுவதற்கு தமிழக அரசாங்கம் தடை

தமிழீழ விடுதலைப் புலிகளை ஆதரித்துக் கருத்து வெளியிடுவதற்கு, தமிழக மாநில அரசாங்கம் அதிகாரபூர்வமாக தடை விதித்துள்ளது. இன்று தமிழக சட்டமன்றத்தில் உரையாற்றிய மாநில பொதுப்பணி - சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன், தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட இந்தியாவில் தடை செய்யப்பட்ட சகல அமைபப்புக்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் கருத்து வெளியிடுவதற்கு, 1967ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்ட விரோத நடவடிக்கை சட்டத்தின் கீழ் இன்று முதல் தமது அரசாங்கம் தடை விதிப்பதாக அறிவித்துள்ளார்.

மாநில முதலமைச்சர் கலைஞர் முத்துவேல் கருணாநிதி அவர்களின் தலைமையில், இன்று இடம்பெற்ற உயர்நிலை ஆலோசனைக் கூட்டத்தின் பொழுது, இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் தமிழக பொதுப்பணி - சட்டத்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பரப்புரைக் கூட்டங்களை ஒழுங்கு செய்தல், துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தல், சுவரொட்டிகளை ஒட்டுதல், ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தல், உண்ணா நிலைப் போராட்டங்களில் ஈடுபடுதல் போன்றவை, தண்டனைக்குரிய குற்றங்களாகும் என்றும், தமிழக பொதுப்பணி - சட்டத்துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக கருத்துக்கூறுவது சட்டவிரோதமானது அல்ல என்றும், எனினும் இது விடயத்தில் புதிய சட்ட நடைமுறைகளை கொண்டு வருவதற்கு தயாராக இருப்பதாகவும், நேற்று முன்தினம் சட்டமன்றத்தில் முதலமைச்சர் கலைஞர் முத்துவேல் கருணாநிதி அவர்கள் கூறியிருந்த நிலையில், நேற்று இருபத்து நான்கு மணிநேரத்திற்குள், தமிழகத்தில் இதற்கான சட்ட நடைமுறைகளை கலைஞரின் அரசாங்கம் அமுல்படுத்தியுள்ளது.

நீதியை மதிக்காத காங்கிரஸ் கட்சியின் ஆணவப் போக்கிற்கு அடிபணிந்து, கருத்துரிமையை மறுக்கும் சட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கு தமிழக முதலமைச்சர் முற்படுவது, ஜனநாயக விரோதச் செயல் என்றும், இவ்வாறான நடவடிக்கைகளில் கலைஞர் ஈடுபடும் பட்சத்தில் சகல சனநாயக சக்திகளையும் ஒன்றிணைத்து அதனை முறியடிப்பதற்கான போராட்டங்களை முன்னெடுக்க நேரிடும் என்றும், தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பதிவு.கொம்

Link to comment
Share on other sites

உலகத்தமிழினத் தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு நன்றி..! ஈழத்தமிழர்கள் செய்நன்றி மறக்க மாட்டார்கள்...!! :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பு திருமலை முல்லைத்தீவு கிளிநொச்சி மடு வன்னி யாழ்ப்பாணம் மலையகம் என்று தமிழ் மக்கள் சிறீலங்காச் சிங்களப் பேரினவாத பயங்கரவாத அரசால படுகொலை செய்யப்படேக்க ஒரு கண்டன அறிக்கை விடத் தைரியமில்லாதவை எல்லாம் எப்படி உலகத் தமிழினத்தின் தலைவர் ஆவினம். அவையா கற்பனை பண்ணிட்டு.. இருக்கிறதுக்கு நாங்க ஒன்றும் செய்ய ஏலாது..! :lol::wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில சர்ச்சைக்குரிய சொற்களைப் பாவிக்காமல் தமிழீழப் போராளிகளுக்கான ஆதரவைத் தொடர்ந்து கொடுக்கலாம். அதே நேரம் தடையை நீக்கக்கோரி ஜனநாயக ரீதியில ஆர்ப்பாட்டங்களைச் செய்யலாம். அதிலேயே ஆதரவைக் காட்டிப்போடலாம் எல்லாத்துக்கும் லொஜிக் இருக்குது. ஆனபடியால் கவலைப்படத்தேவையில்லை.

Link to comment
Share on other sites

சில சர்ச்சைக்குரிய சொற்களைப் பாவிக்காமல் தமிழீழப் போராளிகளுக்கான ஆதரவைத் தொடர்ந்து கொடுக்கலாம். அதே நேரம் தடையை நீக்கக்கோரி ஜனநாயக ரீதியில ஆர்ப்பாட்டங்களைச் செய்யலாம். அதிலேயே ஆதரவைக் காட்டிப்போடலாம் எல்லாத்துக்கும் லொஜிக் இருக்குது. ஆனபடியால் கவலைப்படத்தேவையில்லை.

உப்பிடியே காலத்தை இழுத்தடிக்கலாம் அப்ப கொஞ்சம் இருக்கிற தமிழ் சனமும் செத்துப் போயிடும் அப்படியே பிரச்சனையும் தீர்ந்து போயிடும்!

பிறகு இலங்கை அரசாங்கத்தேடை ஒப்பந்த அடிப்படையில யாழ்ப்பாணத்திற்கு தமிழக கூலித்தொழிலாளர்களை அனுப்பி லாபமும் ஈட்டலாம்!

எனக்கெண்டா இந்த முறை கட்டாயம் தமிழீழம் கிடைக்கும் போலத்தான் தெரியுது!

Link to comment
Share on other sites

சரி விடுதலைப்புலிகளை ஆதரிப்பதாக கத்துவதை விட்டு விட்டு

ஈழபோரை ஆதரியுங்கள்.

ஈழத்தை அங்கீகரியுங்கள்.

ஈழத்தமிழரை காப்பாற்றுங்கள்..

ஈழத்தில் போராடுபவர்களுக்கு தார்மீக ஆதரவு கொடுங்கள்

என்று பல வகையில் ஆதரவு கோசங்களை மாற்றி தமிழக மக்களை எங்களோடு சேர்த்துக்கொள்ளலாம்.

தமிழக கட்சிகளே கோசங்களை மாற்றுங்கள்.

தடைகளை உடையுங்கள்.

தமிழீழம் என்ற பெயரை தமிழக மக்களிடம் அடிக்கடி வரும் சொல்லாக மாற்றுங்கள்..

வெற்றி கிடைக்கும்

Link to comment
Share on other sites

எமது சுயநலங்களை மட்டும் முன்வைத்து தமிழக அரசையோ தமிழக முதலமைச்சரையோ விமர்சிப்பது தேவையில்லாதது. ஏற்கனவே புலிகள் விடயத்தால்த்தான் திமுக அரசு 2 தடவைகள் கலைக்கப்பட்டது. தற்போது கூட அதிமுக, காங்கிரஸ் கட்சிகளின் அழுத்தங்களினால்த் தான் சில நிலைப்பாடுகளை திமுக எடுக்க வேண்டி வந்துள்ளது. இப்போது கூட ஜெயலலிதா சட்டசபைக்கு வந்து பிரைச்சியாக்க கையாண்டது இந்த விடுதலைப்புலிகள் விவகாரத்தையே. சில இலட்சங்கள் கொண்ட எமது பிரைச்சினையையே எம்மால் இலகுவாகத் தீர்க்க முடியாமல் நாம் இருக்கும் போது; 8 கோடிக்கு மேல் சனத்தொகை கொண்ட தமிழ் நாட்டின் பிரைச்சினையை திமுக அரசு கையாள்வதிலுள்ள சிரமங்களையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டியது முக்கியம். எனவே தான் தோன்றித்தனமாக கருத்துக்களை எழுதாமல் மற்றவர்களின் பிரைச்சினைகளையும் அவர்கள் நிலையிலிருந்து சிந்தித்துப் பார்ப்பதே சிறந்தது. புரிய முடிந்தவர்கள் புரிந்து கொண்டால்ச் சரி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமது சுயநலங்களை மட்டும் முன்வைத்து தமிழக அரசையோ தமிழக முதலமைச்சரையோ விமர்சிப்பது தேவையில்லாதது. ஏற்கனவே புலிகள் விடயத்தால்த்தான் திமுக அரசு 2 தடவைகள் கலைக்கப்பட்டது. தற்போது கூட அதிமுக, காங்கிரஸ் கட்சிகளின் அழுத்தங்களினால்த் தான் சில நிலைப்பாடுகளை திமுக எடுக்க வேண்டி வந்துள்ளது. இப்போது கூட ஜெயலலிதா சட்டசபைக்கு வந்து பிரைச்சியாக்க கையாண்டது இந்த விடுதலைப்புலிகள் விவகாரத்தையே. சில இலட்சங்கள் கொண்ட எமது பிரைச்சினையையே எம்மால் இலகுவாகத் தீர்க்க முடியாமல் நாம் இருக்கும் போது; 8 கோடிக்கு மேல் சனத்தொகை கொண்ட தமிழ் நாட்டின் பிரைச்சினையை திமுக அரசு கையாள்வதிலுள்ள சிரமங்களையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டியது முக்கியம். எனவே தான் தோன்றித்தனமாக கருத்துக்களை எழுதாமல் மற்றவர்களின் பிரைச்சினைகளையும் அவர்கள் நிலையிலிருந்து சிந்தித்துப் பார்ப்பதே சிறந்தது. புரிய முடிந்தவர்கள் புரிந்து கொண்டால்ச் சரி.

உங்களின் இந்த நிலைப்பாட்டை என்னால் ஏற்க முடிவில்லை. அன்ரன் பாலசிங்கம் அவர்களின் மறைவின் போதும் தமிழ்செல்வனின் மறைவின் போதும் தான் அஞ்சலிக் கவிதை எழுதி தன்னை ஈழ ஆதரவாளன் என்று காட்டிக் கொண்டவர் சமீபத்திய ஈழத்தமிழ் மக்களின் படுகொலைகள் எதனையும் கண்டிக்கவோ.. அல்லது பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கவோ.. உதவிகளை அனுப்பவோ முயற்சிக்கவில்லை.

இந்திய அரசின் சிறீலங்காவுக்கான இராணுவ உதவிகளை தான் கண்டிக்கமாட்டன் என்று அறிக்கை விட்டும் கொண்டார். ஏன் தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட போது கூட சிறீலங்கா அவர்களை தடுத்து வைத்திருக்கும் வரை சும்மா தானே இருந்தார். தமிழக மீனவர்களை பாதிக்கக் கூடிய வகையில் கடற்கண்ணிகளை விதைத்து விட்டு.. புலிகள் ஆயுதம் கடத்திறதைத் தடுக்கினமாம் என்றதை நம்புறார் தானே..!

ஈழத்தமிழர்கள் எல்லோரும் புலிகள் என்று இந்தியாவும் சிறீலங்காவும் தீர்மானித்து விட்டன என்றால் அதை வெளிப்படையாகச் சொன்னால் சர்வதேசமானவது உண்மையை உணருமே.

இப்படி பதவிக்குப் பயந்து பச்சோந்திகளாக.. அரசியல் செய்வதற்கு ஈழத்தமிழர்களின் ஆதரவாளனாக போலி வேடம் போடுவதும் பின்னர் அரசியல் அழுத்தம் என்று காரணம் காட்டி தமிழக மக்களின் உணர்வுகளை அடக்கிறதும் அவசியமா..??! :wub:

Link to comment
Share on other sites

நெடுக்கு

எவரும் என் கருத்தை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்பதற்காக எனது கருத்தை நான் இங்கே பதியவில்லை. உண்மைகளை மறந்து எமது சுயநலங்களுக்காக எதை எழுதினாலும் அவை எடுபடப்போவதில்லை.

கலைஞரின் அரசை விடுதலைப்புலிகளின் விடயத்தை வைத்து 2 முறை மத்திய அரசு கலைத்தபோது நம்மவர் எத்தனை பேர் அதனைக் கண்டித்தார்கள்?? ஒரு அறிக்கையாவது விட்டார்களா?? அப்போது கலைஞரும் மத்திய அரசின் எதிர்பார்ப்புகளுக்காக வளைந்து கொடுத்து இருந்திருப்பாரேயானால் அவரது அரசும் கலைக்கப்பட்டிருக்காது. ஆனால் அவர் அதைச் செய்யாமல் எமது போராட்டத்திற்கு எவரது மிரட்டலுக்கும் பயப்படாது எவ்வளவோ செய்தார். அதே போல் இலங்கையிலிருந்து இந்திய இராணுவம் வெளியேற்றப்பட்டதற்கும் பெரும் பங்கு கலைஞருடையது. இந்திய இராணுவம் நாடு திரும்பிய போது சம்பிரதாய வரவேற்பைக் கூட கலைஞர் செய்யாது பலராலும் விமர்சிக்கப் பட்டார். பல விடயங்களிலும் இந்தியாவின் நிலைப்பாட்டையே மாற்றியமைத்தது தமிழக மண்ணில் இடம்பெற்ற இராஜீவ்காந்தியின் படுகொலைதான்.

ஆனால் நாம் என்ன செய்கின்றோம் எவர் எக்கேடு கெட்டாலும் பறுவாயில்லை என்ற மனப்பான்மையோடு நன்றி மறந்து எல்லோரையும் விமர்சிக்கின்றோம். இதனால் நாம் அடைந்த நன்மை என்ன என்று உங்களால்ச் சொல்ல முடியுமா?? எம்மை ஆதரித்தவர்களையும் எதிரிகளாக்கி எம்மைச் சுற்றி எல்லோரையும் எதிரிகளாக்கியது தான் மிச்சம். இன்று எமக்கு ஆதரவு நாடாக ஒரு நாட்டையாவது உங்களால் குறிப்பிட முடியுமா?? எல்லோரும் நம்மை எதிர்க்கின்றார்கள் என்றால் எம்மிலும் ஏதோ குறையுள்ளது என்று தானே அர்த்தம். முதலில் நாம் அடுத்தவர்களின் குறைகளை விமர்சிப்பதை விடுத்து எம் குறைகளை கண்டுபிடித்து அவற்றைக் களைவதுதான் முக்கியம். அதற்கு நம்மை நாமே சுயபரிசோதனை செய்வதே சாலச்சிறந்தது. அதைவிடுத்து அடுத்தவர்களை மட்டுமே விமர்சித்து எழுவது வெறும் பக்கங்களை மட்டுமே நிரப்ப உதவும்.

Link to comment
Share on other sites

தவறாக இரு தடவைகள் பதியப்பட்டதால் ஒன்றை நீக்கியுள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் நாம் என்ன செய்கின்றோம் எவர் எக்கேடு கெட்டாலும் பறுவாயில்லை என்ற மனப்பான்மையோடு நன்றி மறந்து எல்லோரையும் விமர்சிக்கின்றோம். இதனால் நாம் அடைந்த நன்மை என்ன என்று உங்களால்ச் சொல்ல முடியுமா?? எம்மை ஆதரித்தவர்களையும் எதிரிகளாக்கி எம்மைச் சுற்றி எல்லோரையும் எதிரிகளாக்கியது தான் மிச்சம். இன்று எமக்கு ஆதரவு நாடாக ஒரு நாட்டையாவது உங்களால் குறிப்பிட முடியுமா?? எல்லோரும் நம்மை எதிர்க்கின்றார்கள் என்றால் எம்மிலும் ஏதோ குறையுள்ளது என்று தானே அர்த்தம். முதலில் நாம் அடுத்தவர்களின் குறைகளை விமர்சிப்பதை விடுத்து எம் குறைகளை கண்டுபிடித்து அவற்றைக் களைவதுதான் முக்கியம். அதற்கு நம்மை நாமே சுயபரிசோதனை செய்வதே சாலச்சிறந்தது. அதைவிடுத்து அடுத்தவர்களை மட்டுமே விமர்சித்து எழுவது வெறும் பக்கங்களை மட்டுமே நிரப்ப உதவும்.

எந்த நாடு எமது விடுதலையை கருத்தில் கொண்டு எமது போராட்டத்தை ஆரம்பிச்சு வைச்சது. எந்த நாடும் இல்லை. அப்படி இருக்க எப்படி எந்த நாடு எமக்கு நேரடி ஆதரவளிக்கிறது என்று நீங்கள் கேள்வி எழுப்ப முடியும்..??!

கருணாநிதி அவர்களின் இரண்டு ஆட்சி அவர் விடுதலைப்புலிகளுக்காக குரல் கொடுத்ததுக்காகத்தான் பறிக்கப்பட்டதா இல்ல அதை காரணம் காட்டி வேறு அரசியல் தேவைகள் வேண்டிச் செய்யப்பட்டதா என்பதை ஆராய்ந்திருக்கிறீர்களா..??!

கருணாநிதி மட்டும் விடுதலைப்புலிகள் பெயரைப் பயன்படுத்தி வைகோவின் அரசியல் வாழ்க்கையையே சூனியத்துக்குள் தள்ள நினைக்கவில்லையா..???! இருந்தும் வைகோ எப்போதும் போல ஆதரவளிக்கிறார் தானே..??!

கருணாநிதி விடுதலைப்புலிகளை ஆதரிப்பதாக வெளியில் காட்டிக் கொள்ளவே தேவையில்லையே. அவர் ஈழத்தமிழர்களின் துயரில் தனது கவலையை ஈடுபாட்டை வெளிப்படுத்துவதால் அவரின் ஆட்சிக்கு என்ன தீமை ஏற்பட்டு விடும்..??! அவர் ஈழ மக்கள் மீது அக்கறை செய்வது இந்தியாவில் தடை செய்யப்பட்டவில்லையே.

இவர் ஏன் விடுதலைப்புலிகளை இதற்குள் இழுக்கிறார். விடுதலைப்புலிகள் ஆதரிச்சு கவிதை எழுதினா தனக்கு மட்டுமல்ல விடுதலைப்புலிகளுக்கும் பிரச்சனை என்று அறியாதவரா அவர். இருந்தும் எழுதினார். அந்தத் துணிச்சல் உள்ளவர் , ஈழத்தமிழர் மீது அக்கறையுள்ள ஒருவர் வெளிப்படையாக இன்றி எத்தனையோ விசயங்களை அந்த மக்களுக்காகச் செய்யலாம் தானே. வெளிப்படையாச் சொன்னா பிரச்சனை வரும் என்றால் ரகசியமாகச் செய்து கொள்வதில் தப்பில்லையே..!

அப்படி ரகசியமாகச் செய்கிறார் என்றால் பாராட்டத்தான் வேண்டும். ஆனால் ஈழத்தமிழ் மக்களை பகிரங்கமாக ஆதரித்து நிற்பதை இது தடுக்காதே. ஈழத்தமிழர்கள் தமிழீழத்தை முன்னர் பல தடவைகள் சட்டமன்றத்தில் கூட்டம் போட்டு அங்கீகரித்தவர்கள் இன்று அதைப் பற்றிப் பேசவே மறுக்கின்றரே ஏன்..??! விடுதலைப்புலிகள் நேரடியாக உச்சரிக்காமல் ஈழத்தமிழர்களுக்கு பல வழிகளிலும் வெளிப்படையாகவே உதவலாம் தானே. ஏன் அதைச் செய்கிறார்கள் இல்லை. அதற்கும் தடையா இந்திய மத்திய அரசால். அப்படியென்றால் அதை நேரடியாகச் சொல்லி விட வேண்டியதுதானே.

ஈழத்தமிழர்களை ஆதரிப்பதை இந்தியா விரும்பவில்லை என்று..! அது இந்திய மத்திய அரசின் உண்மை முகத்தை தமிழகத்துக்கும் ஈழத்தமிழர்களுக்கும் உலகுக்கும் காட்ட உதவும் தானே. இவற்றை ஏன் செய்கிறார்கள் இல்லை. விடுதலைப்புலிகளின் பெயரை வைச்சு ஏன் தமிழக மக்களின் ஈழத்தமிழர் ஆதரவுக் குரலை உணர்வை அடக்க வேண்டும்..??! இங்கு தான் நீங்களும் கருணாநிதியின் தவறை உணராமல் கேள்வி கேட்கிறீர்கள்..! :wub:

Link to comment
Share on other sites

தமிழ் நாடு என்று ஒன்றே இல்லை அங்கு தமிழர்கள் என்று எவரும் இல்லை என்று வைத்துக் கொள்வோம். தமிழர்கள் என்று சொல்லக் கூடியவர்கள் இலங்கைத் தீவில் சிறுபான்மையினமாக இருந்து சிங்களவர்களிடம் இருந்து அடக்குமுறைகளை சந்திக்கிறார்கள்.

தமிழீழ விடுதலைப் போராட்டம் நடந்திருக்குமா இல்லை தமிழ்நாடு இல்லை என்பதால் நடக்காது விட்டிருக்குமா?

தமிழீழ விடுதலைப் போராட்டம் தமிழீழ மக்களை நம்பித்தானே ஆரம்பித்தது?

எனவே தமிழ்நாடு என்று ஒன்று இல்லை என்று வைத்துக் கொண்டால் இந்தியாவில் இருந்து வரும் சவால்களை எப்படி எதிர் கொள்ளுவோம் என்று சிந்திப்போம் செயற்படுவோம். அப்படி நாம் இயங்குவதற்கு தயாரானால் தமிழ்நாடு தரக் கூடிய எந்தவொரு ஆதரவும் மேலதிகமாக மகிழ்ச்சியான அதிர்ச்சியாக இருக்கும்.

இந்தியா மாத்திரமல்ல சீனா பாக்கிஸ்தான் அமெரிக்கா கனடா ஐரோப்பிய ஒன்றியம் பிரித்தானியா ரஸ்யா யப்பான் என்று எல்லாரும் தான் சிறீலங்காவிற்கு உதவுகிறார்கள். ஆனால் இந்த நாடுகளில் எல்லாம் தமிழ்நாடு கலைஞர் நெடுமாறன் வைகோ என்று குற்றம் சாட்ட ஒரு தரப்பும் இல்லை. வாயை ஒரு கைய்யால் *த்தை ஒரு கைய்யால் பொத்திக் கொண்டு இருக்கினம் பனங்கொட்டையள்.

ஆனா இந்தியா ஏதாவது செய்தவுடன் பனங்கொட்டையள் திண்டது செமிக்க புலம்பிறதுக்கு தமிழ்நாடு கலைஞர் நெடுமாறன் வைகோ எண்டு கனபேர் இருக்கினம். இது வந்து இந்தியர்களையும் இந்தியத் தமிழர்களையும் இழக்காரமாக (தரக்குறைவாக) பார்க்கும் ஈழத்தமிழரின் கொழுப்பின் வெளிப்பாடே அன்றி உண்மையான ஆதங்கம் அல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனா இந்தியா ஏதாவது செய்தவுடன் பனங்கொட்டையள் திண்டது செமிக்க புலம்பிறதுக்கு தமிழ்நாடு கலைஞர் நெடுமாறன் வைகோ எண்டு கனபேர் இருக்கினம். இது வந்து இந்தியர்களையும் இந்தியத் தமிழர்களையும் இழக்காரமாக (தரக்குறைவாக) பார்க்கும் ஈழத்தமிழரின் கொழுப்பின் வெளிப்பாடே அன்றி உண்மையான ஆதங்கம் அல்ல.

இவர் சந்தடி சாக்கில் ஈழத்தமிழர்களையும் தமிழகத் தமிழர்களையும் பிரிச்சுக் காட்டி சீண்டு முடியுற -நாசகார வேலையைப் பார்க்க முற்படுறார்.

ஒரு விடயம் மட்டும் தெளிவானது. தமிழகத்தில் ஈழத்தமிழருக்கான ஆதரவுத்தளம் எப்பவும் இருந்திட்டுத்தான் இருக்கிறது. ஆனால் அது குறித்த ஒரு காலத்தில் வெளிப்படையாக இருக்க அனுமதிக்கப்பட்டதும் இன்று அனுமதிக்கப்பாடததற்கும் இந்திய மத்திய அரசின் போக்குத்தான் காரணம். அதை இந்திய மத்திய அரசோடு அரசியல் கூட்டணி வைச்சிருப்பவர்கள் தமிழகத்திலும் செயற்படுத்துகின்றனர்.

ஈழத்தமிழர் விவகாரத்தையே 100% அரசியல் முதலீடாக்கி 80களின் பிற்பகுதியில் தமிழகம் அரசியல் செய்ததை பலர் மறந்து விட்டார்கள் போல. எதற்கும் வரலாற்றை திரும்பப் படிப்பது நல்லம். தமிழக முதல்வர் எம் ஜி ஆர் அவர்கள் தன்னாலான பங்களிப்பை ஈழத்தமிழர்களின் போராட்டத்துக்கு வழங்கியது மட்டுமன்றி மத்திய அரசுக்கு சவால் விடும் வகையில் தனது ஈழத்தமிழர் ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டிருந்தவர்.

அமெரிக்கா என்ற நாட்டின் அமைதிக்கும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கும அரசியல் உறுதிக்கும் கனடா மெக்சிக்கோ போன்ற நாடுகளின் ஆதரவு அவசியமா ஈரானின் ஆதரவு அவசியமா..??!

சிலர் பனங்கொட்டையள் என்று அடுத்தவையை திட்டிக் கொண்டு தங்கள் களிமண்ணை இறுக்கிக் கொண்டிருக்கின்றனர். தமிழக ஆதரவுத்தளம் என்பது எமது போராட்டம் கூர்மை பெற்றிருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் அவசியமானது. இது ஈழத்தமிழரின் எதிர்பார்ப்பு. தமிழகம் மெளனமாக இருப்பதிலும் ஈழத்தமிழர் மீது ஆதரவை வெளிப்படுத்திக் கொண்டிருப்பது முக்கியமானது.. காரணம் ஈழத்தமிழர்களுக்கு நெருங்கியது தமிழகமே அன்றி.. அமெரிக்காவோ.. பாகிஸ்தானோ .. புதுடெல்லியோ.. ஐரோப்பிய யூனியனோ அல்ல..!

கருணாநிதி இச்சந்தர்ப்பத்தில் இதைத் தெளிவுபடுத்துவதை விடுத்து.. விடுதலைப்புலிகளை சாட்டு வைத்து இந்திய மத்திய அரசின் கொள்கைகளை தமிழக மக்களிடம் திணிப்பது சரியான நடவடிக்கையா..??! என்பதுதான் இங்கு கேள்விக்கு உரியதாக்கப்படுகிறது.

உலகத்தமிழினத் தலைவர் என்று தன்னைத்தானே உச்சரிச்சுக் கொள்பவரிடம் உலகில் அடக்கப்படும் தமிழ் மக்களான ஈழத்தமிழர்கள் நியாயம் கேட்பது பனங்கொட்டைத்தனமென்றால் அது அப்படியே இருந்தாலும் உபயோகமானது. கருணாநிதி அவர்களும் ஈழத்தமிழரின் ஆதங்கத்தைப் புரிஞ்சு கொள்ள வேண்டும். இதைப் போய் பனங்கொட்டைக் குமுறல் என்பது களிமண் இறுக்கின குண்டானைக் காட்டிலும் உபயோகமானது என்பதை கூறிக்கொள்ளலாம். :lol::wub:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1988 இல் இருந்து 1997 (என நினைக்கிறேன்) நடைமுறையில் இருந்த இலங்கை தமிழ் இலக்கியம் தரம் 10, 11 பாட நூலில் “சிரிக்க தெரிந்த பாரசீகன்” என்று ஒரு கட்டுரை இருந்தது. நல்ல ஜோக்குகள் பல அதில் கையாளப்பட்டிருந்தது. அதில் (நினைவில் இருந்து) ஒரு ஜோக்: அரசவையில் ஒருவன் பொய்யாக தன்னை இறைதூதன் என கூறிய வழக்கை விசாரிக்கிறார் கலிபா. கலிபா: உனக்குத் தெரியுமா, பொய்யாக தம்மை இறைவனால் அனுப்பபட்ட தூதர் என கூறி மக்களை ஏமாற்றிய பலரை நான் கடும் சித்திரவதையுடன் கூடிய மரண தண்டணைக்கு ஆளாக்கியுள்ளேன்! குற்றம் சாட்டபட்டவர்: ஓ….கலிபா! நன்றே செய்தாய்….. நான் எவரையும் அவ்வாறு அனுப்பவில்லை!!!
    • விடுமுறைகள் தொடங்க போகுது. நம்மவர்கள் கூடுதலாக மத்திய கிழக்கூடாகவே பயணிக்கிறார்கள். ஆனபடியால் சட்டுபுட்டென்று அலுவல்களை முடியுங்கோ.
    • சிறிதோ பெரிதோ தவறு தவறு தானே அண்ணா.  இவர்கள் பலமுறை செய்து ருசிப்பட்டவர்களாக இருக்க வாய்ப்புண்டு. ஆனால் ஏழை எளிய மக்களாக இருந்து அமெரிக்க படிப்புக்கு முயற்சித்து அதன் அழுத்தம் காரணமாக இவ்வாறு நடந்திருந்தால் இவர்களுக்காக நானும் இரங்குகிறேன்.
    • இஸ்ரேல் இரானுக்குள் (நின்று, அதன் முகவர்களை பாவித்து) தாக்குதல் செய்தது போல தோன்றுகிறது. இப்படி செய்வதற்கு இஸ்ரேல்   இரு கூட்டங்களை பாவிக்கிறது. ஒன்று, ஈரானில் இருந்து இஸ்ரேலுக்கு வந்த  யூதர்களால். இவர்களால் ஈரானியர்களாகவே (Persian) இரானுக்குள் புழங்க முடியும்.  ஈரானின் இப்போதும் யூதர்கள் இருக்கிறார்கள், அனால், முன்பை விட மிக குறைவு. மற்றது, ஈரானில் கொடூர ஆட்சி ஷா வுக்கு, மொசாட், Savak எனும் கொடூர (இரகசிய) போலீசை உருவாக்கி கொடுத்தது.   உண்மையில், Savak ஐ உருவாக்கி தருமாறு ஷா கேட்டது CIA இடம். ஏனெனில், CIA தான், பிரித்தானியரின் வேண்டுதலில் , 1953 இல்  ஈரானின் உண்மையான சனநாயக   அரசை கவிட்டு, Sha ஐ ஆட்சிக்கு கொண்டுவந்தது. இந்த  ஈரானின் உண்மையான சனநாயக ஆட்சி 1953 இல்  கவிழ்த்தலின் முக்கிய காரணம், அன்றைய உண்மையான சனநாயக ஈரானிய அரசாங்கம் எண்ணெய் வளத்தை, கம்பனியை தேசியமயப்படுத்தியது, அதில் பிரித்தானியரின் BP தேசியமயப்படுத்தப்பட்டது. CIA அதன் குளிர் யுத்தத்தை வேலைப்பளுவால்,  Savak ஐ பயிற்சி அளித்து உருவாகுவதை Mosad இடம் அளித்தது. Mosad கொடூர Savak ஐ உருவாக்கியது. ஷா, Savak  இன் மிக கொடுமையான ஆட்சியை எதிர்க்க ஈரான் மண்ணில் அதுவாக பிறந்ததே இந்த முல்லாக்கள். முல்லாக்கள் ஆட்சியை பிடித்து, அகப்பட்ட Savak எல்லோரையும் (கொடூரமாக) கொன்றது, அனால், ஈரான் பெரும்பான்மை மக்கள் அதை வரவேற்றனர் அல்லது நிம்மதி அடைந்தனர். (முல்லாக்களுக்கும், ஈரான் மக்களுக்கும் உள்ள உறவு மேற்கால் சொல்லப்படுவது போல ஒரே வெறுப்பு அல்ல. சிலவற்றை எதிர்க்கிறாரக்ள் , சிலவற்றை வரவேற்றுகிறாரக்ள், முக்கியாக, அணுத்துறை, தொழில்நுட்ப வளர்ச்சி, இராணுவ வளர்ச்சி, குறிப்பாக அமெரிக்கா எதிர்ப்பு போன்றவை. மேற்கின் பிரச்சனை, மசகு, படிம எண்ணை, வாயு  நழுவி, மசகு, படிம எண்ணெய், வாயுவில் தவழ்ந்து மசகு, படிம எண்ணெய், வாயுவில் விழும்  ஈரானில், மேற்கிற்கு  ஒத்து ஊதக்கூடிய ஆட்சி இல்லாதது, ஈரானின் மக்கள் பற்றி முதலை கண்ணீர்  வடிக்கிறது).  முல்லாக்கள் கொன்று  எஞ்சிய Savak இன் எச்சம், சொச்சத்தை, Mosad தத்தெடுத்து பேணி வருகிறது, இரானுக்குள் இருந்து ஆட்தேர்வும் செய்கிறது, தாக்குதலுக்கு பாவிக்கிறது.  (சிறு குறிப்பு: இப்போதைய யூதர், தம்மை யூதர் என்று அழைக்கத்தொடங்கியது, சைரஸ் கிமு 500-550 களில் அவர்களை (யூதரை) (இப்போதைய ஈரானில்) அடிமை சிறைவாசத்தில் இருந்து  விடுவித்து, விடுவிக்கப்பட்டவர்கள் Judea வந்ததினால் என்று அவர்களே சொல்கிறார்கள். அதன் முதல் (யூதர்கள்) இஸ்ரேல் இன் புதல்வர்கள் என்றே அழைக்கப்பட்டார்கள். இங்கு இஸ்ரேல் என்பது, ஆபிரகாமின் பேரன் Jacob, இஸ்ரேல் (இராச்சியம் அல்ல) என்று பெயர் மாற்றப்பட்டவர் (கடவுளினால் என்கிறது விவிலியம்), அதுக்கும் முதல், Canaan (இப்போதைய இஸ்ரேல், பலஸ்தீன், பகுதி ஜோர்டான், சிரியா)  ஐ பிடிக்கும் வரையிலும் ஆபிரகாம் ஐயும் உள்ளடக்கி Hebrew என்ற அடையாளம் என்கிறது (Hebrew) விவிலியம். ).  (இன்னொரு வளமாக, திராவிடர் என்ற கூட்டமும், இப்போதைய ஈரானின் சாகிறோஸ் மலைப்பகுதியில் இருந்து வந்த, ஒழுங்குபடுத்தப்பட்ட விவசாயத்தை வாழ்வாதரமாக கொண்ட மக்கள் கூட்டம் என்பதற்கு விஞ்ஞான  ஆதாரங்கள் பெருகி வருகிறது. இதில் ஒரு பகுதியை சிறீனிவாச ஐயங்கார், 1920 களில் சொல்லி இருந்தார்.)
    • போட்டியில் இணைந்துகொண்ட @கறுப்பிக்கும் @Eppothum Thamizhan க்கும் வெற்றிக்கனியைப் பறிக்க வாழ்த்துக்கள்! @கறுப்பி 17 கேள்விக்கு பதிலைத் தாருங்கள்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.