Jump to content

ரஜினியின் 'குசேலர்'!


Recommended Posts

மம்முட்டி, சீனிவாசன், மீனா நடிப்பில் உருவான கத பறயும்போல் படத்தைப் பார்த்து தூக்கம் வராமல் தவித்தாராம் ரஜினி. இதையடுத்தே இப்படத்தின் தமிழ், தெலுங்கு ரீமேக்கில் நடிக்க சம்மதம் தெரிவித்தாராம்.

கே.பாலச்சந்தரின் கவிதாலயா மற்றும் மலையாளத் தயாரிப்பு நிறுவனமான செவன் ஆர்ட்ஸ் பிலிம்ஸ் ஆகியவை இணைந்து தயாரிக்கவுள்ள குசேலர் என்ற படத்தில் ரஜினிகாந்த் அடுத்து நடிக்கவுள்ளார். பி.வாசு இப்படத்தை இயக்கவுள்ளார்.

இதுகுறித்த முறைப்படியான அறிவிப்பை பி.வாசு சென்னையில் வெளியிட்டார். அப்போது கே.பாலச்சந்தர், அவரது மகளும் கவிதாலயா நிர்வாகியுமான புஷ்பா கந்தசாமி, அவரது கணவர் கந்தசாமி, செவன் ஆர்ட்ஸ் பிலிம்ஸ் அதிபர் விஜயக்குமார், தெலுங்குத் தயாரிப்பாளர் அஸ்வினி தத் (இவரது வைஜயெந்தி பிலிம்ஸ்தான் இப்படத்தை தெலுங்கில் தயாரிக்கிறது), கத பறயும்போல் படத்தின் திரைக்கதை ஆசிரியும், நடிகருமான சீனிவாசன், மலையாள நடிக்ர முகேஷ் (நடிகை சரிதாவின் முன்னாள் கணவர்) ஆகியோரும் உடனிருந்தனர்.

வாசு கூறுகையில், இது மலையாள ரீமேக் படம் என்றாலும் கூட, படத்தின் திரைக்கதையில் தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களுக்கேற்ப பெருமளவில் மாற்றம் செய்யவுள்ளோம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினிகாந்த் நேரடித் தெலுங்குப் படத்தில் நடிப்பது இதுவே முதல் முறை.

தமிழில் இப்படத்துக்கு குசேலர் என தற்காலிகமாக பெயர் வைத்துள்ளோம். இருப்பினும் பெயர் மாறலாம். தெலுங்கில் இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. பிப்ரவரி முதல் வாரத்தில் ஷூட்டிங் தொடங்கி ஜூன் மாதத்தில் முடியும். ஆகஸ்ட் மத்தியில் படத்தை திரையிடத் திட்டமிட்டுள்ளோம்.

டிசம்பர் 31ம் தேதி கத பறயும் போல் படத்தை சென்னையில் பார்த்தேன். சீனிவாசன் எனக்காக திரையிட்டு காண்பித்தார். படத்தை பார்த்ததுமே, இந்த படத்தை தமிழில் ரஜினிகாந்த் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று கருதினேன். உடனே ரஜினிகாந்திடம் தொடர்புகொண்டு என் விருப்பத்தை சொன்னேன்.

மறுநாள், அவர் படத்தை பார்த்தார். படம் அவருக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது. அன்று இரவு முழுவதும் தூங்கவே இல்லை என்று சொன்னார். படத்தின் கதை, அவரை அந்தளவுக்கு பாதித்து இருந்தது. இதையடுத்து அப்படத்தின் ரீமேக்கில் நடிக்க சம்மதித்தார்.

ரஜினிகாந்தின் திரையுலக வாழ்க்கையில், அவர் விரும்பி நடிக்கும் கதாபாத்திரம் இது. இந்த படத்தில் அவர் நடிப்பது, கெளரவ வேடம் அல்ல. முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தமிழ் படத்துக்காக, திரைக்கதை மாற்றி அமைக்கப்படுகிறது.

மணிச்சித்ரதாழ் படத்தை ரஜினிக்காக நான் ரீமேக் செய்ய முயன்றபோது அது அப்படியே ரீமேக் செய்யப்படும் படம் என்றுதான் பலரும் கூறினார்கள். ஆனால் ஒரிஜினலை விட சந்திரமுகி பெரும் மாற்றங்களுடன் வெளிவந்தது.

அதேபோல குசேலரும் இருக்கும். நிச்சயம் ரஜினி ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதாக அமையும். விருந்து படைக்கும் வகையில் இப்படம் இருக்கும்.

விரைவில் படத்தின் பிற கலைஞர்கள் குறித்த விவரம் வெளியிடப்படும் என்றார்.

பசுபதி ஜோடியாக சிம்ரன்:

இப்படத்தில் ரஜினிகாந்த் ஏழை நண்பனாக பசுபதி நடிக்கிறார். கிட்டத்தட்ட ரஜினிக்கு நிகரான கேரக்டர் இவருக்கு.

ஒரிஜினல் படத்தில் மம்முட்டிக்கு ஜோடி கிடையாது. ஆனால் தமிழில் ரஜினிக்கு ஜோடி இருக்கிறாராம்.

முதலில் நயனதாராவின் பெயர் இந்த கேரக்டருக்கு அடிபட்டது. ஆனால் தமிழ் மற்றும் தெலுங்கில் ஈஸியாக பிரபலமாகக் கூடிய வகையிலான ஒரு கவர்ச்சிகரமான நாயகியாக இருந்தால் நலம் என வாசு நினைக்கிறாராம். அனேகமாக பாலிவுட் நடிகை யாராவது இதில் நடிக்கக் கூடும் என்று தெரிகிறது.

மேலும், மலையாளத்தில் சீனிவாசனுக்கு ஜோடியாக மீனா நடித்திருந்தார். அவரே இப்படத்தில் பசுபதிக்கு ஜோடியாக நடிப்பாரா என்ற எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தற்போது மீனாவுக்குப் பதில் பசுபதியின் ஜோடியாக சிம்ரனை நடிக்க வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

சந்திரமுகி படத்தில் முதலில் ஜோதிகா நடித்த வேடத்தில் புக் செய்யப்பட்டவர் சிம்ரன்தான். ஓரிரு காட்சிகளிலும் நடித்தார். ஆனால் அப்போது அவர் கர்ப்பமாக இருந்ததால் தொடர்ந்து நடிக்காமல் விலகிக் கொண்டார்.

இந்த நிலையில் பசுபதியின் ஜோடியாக நடிக்க சிம்ரனை வாசு தேர்வு செய்துள்ளாராம்.

படத்திற்கு இசையமைக்க ஜி.வி.பிரகாஷ் குமாரை புக் செய்துள்ளனராம்.

Link to comment
Share on other sites

(ரஜினி படத்தில் சிம்ரன் )

--------------------------------

பொறுத்தார் பூமி ஆள்வார்! இது யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ சிம்ரனுக்கு நூறு சதம் பொருந்தும் கவிதாலயா தயாரிப்பில் பி.வாசு இயக்கும் 'குசேலர்' படத்தில் நடிக்கிறார் சிம்ரன்.

இந்தத் தகவலை நேற்று பி.வாசு வெளியிட்டு இளம் நடிகைகளின் வயிற்றில் தீ வார்த்தார்.

'சந்திரமுகி' படத்தில் ஜோதிகா நடித்த வேடத்தில் முதலில் ஒப்பந்தமானவர் சிம்ரன். அவரை வைத்து சில காட்சிகள் எடுக்கப்பட்ட நிலையில் திடீரென்று படத்திலிருந்து விலகிக் கொண்டார். சிம்ரன் கர்ப்பமாக இருந்ததால், பாடல் காட்சிகளில் ரிஸ்க் எடுத்து ஆட முடியாது, அதனால்தான் படத்திலிருந்து விலகினார் என அப்போது காரணம் கூறப்பட்டது.

திருமணத்திற்குப்பின் சிம்ரனை தமிழ் சினிமா கண்டு கொள்ளவில்லை. வடிவேலு ஜோடியாக நடிக்க சிம்ரனை கேட்டு, நான் அந்தளவு மவுசு குறைந்து போகவில்லை என சிம்ரன் சீறிய சம்பவம் நடந்தேறியது.

நடித்தால் நல்ல சம்பளத்தில் பெரிய ஹீரோவுடன்தான் நடிப்பேன் என்ற சிம்ரனின் காத்திருப்பு வீண் போகவில்லை. 'குசேலர்' படத்தில் ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பு அவரை தேடி வந்திருக்கிறது.

ரஜினியுடன் நடித்த நயன்தாரா, ஸ்ரேயா இருவரும் இன்று எட்டிப்பிடிக்க முடியாத உயரத்தில் உள்ளனர். ரஜினியுடன் தொடங்கும் சிம்ரனின் இரண்டாம் இன்னிங்ஸ் அவரை நெ.1 இடத்திற்கு கொண்டு செல்லுமா?

இளம் நடிகைகள் முன்னிருக்கும் மிகப் பெரிய கேள்வி இது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படத்தைப் பார்த்து தூக்கம் வராமல் தவித்தாராம் ரஜினி.

ஏன் படத்தில் அப்பிடி இப்பிடி பலான காட்சியளோ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.