Jump to content

தமிழில் நாம் விடும் தவறுகள்


Recommended Posts

தமிழழைப் பேசும் பொழுதும் எழுதும் பொழுதும் நாம் விடும் தவறுகள் பற்றி இதில் எழுதலாம் என்று நினைக்கின்றேன்.

இதை என்னால் மட்டும் செய்ய முடியாது. தமிழறிவு உள்ள கள உறவுகளும் கை கொடுத்தால்தான் முடியும்.

இன்றைக்கு தைத் திருநாள்.

இதற்கு "வாழ்த்துகள்" சொன்னவர்களை விட "வாழ்த்துக்கள்" சொன்னவர்கள் அதிகம்.

இது நாள் வரை நானும் "வாழ்த்துக்கள்" என்றே சொல்லி வந்தேன்.

ஆனால் அண்மையில் கலைஞர் அவர்கள் "வாழ்த்துக்கள்" என்ற திரைப்பட விழாவில், "வாழ்த்துக்கள்" என்ற பெயர் தவறு என்றும் அதில் "க்" வரக்கூடாது என்றும் சொன்னார்.

இப்பொழுது அப் படத்தின் பெயர் "வாழ்த்துகள்" என்று மாற்றப்பட்டுள்ளது.

ஆனால் இதை எம்மில் பெரும்பாலானோர் கவனிப்பது இல்லை. வானொலி, தொலைக்காட்சி, மேடை, ஊடகங்கள் என்று அனைத்து இடங்களிலும் "வாழ்த்துக்கள்" சொல்லி மகிழ்வோம்.

"வாழ்த்துக்கள்" என்று "க்" போட்டுச் சொன்னால் என்ன அர்த்தம் வரும்?

பனங்கள், தென்னங்கள் போன்று ஒருவகையான கள் என்ற அர்த்தம் வரும். அதாவது "வாழ்த்துக் கள்" என்று வரும்.

"வாழ்த்து" என்று சொல்லின் பன்மையை நாம் குறிக்க விரும்பினால், அங்கே "க்" வராது. வாழ்த்துகள் என்றே வரும்.

அதே போன்று "கருத்துக்களில் மாற்றங்கள்" என்பதும் தவறு.

"கருத்துகளில் மாற்றங்கள்" என்பதே சரி!

இதே போன்று தமிழில் நாம் நிறைய தவறுகளை அறியாது விடுகின்றோம். இவ்வாறான தவறுகளை இங்கே சுட்டிக் காட்டி எழுதுவது நல்லது என்று நினைக்கின்றேன்.

இதற்கு மற்றைய களஉறவுகளின் ஒத்துழைப்பை வேண்டி நிற்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • Replies 55
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பாவை அய்ரோப்பா என்று எழுதுவதும் தவறு தான். ஐயை நீக்க வேண்டும் என்று நினைத்துத் தமிழைச் சிதைக்க முனைபவர்கள், மெய்யெழுத்தோடு, ஐ புணர்ந்து வரும் அனைத்துச் சொற்களையும் பாவிக்க இயலாது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

கலை என்பது, கல்அய், விலை என்பது, வில்அய் என்றும், மரை என்பது மரஅய் என்று தான் பிறகு எழுத வேண்டும்.

Link to comment
Share on other sites

தூயவன் இங்கும் வந்து எமது பிரச்சனையை தொடர வேண்டுமா?

நான் "ஐரோப்பா" என்றுதான் எழுதுகிறேன். தந்தை பெரியார் முன்மொழிந்தார் என்பதற்கான அனைத்தையும் கண்மூடிக் கொண்டு பின்பற்றும் பழக்கம் என்னிடம் இல்லை. அப்படிப் பின்பற்றினால் அது பகுத்தறிவும் இல்லை.

தந்தை பெரியார் தமிழை இலகுபடுத்துவதற்காக சில முன்மொழிவுகளை செய்தார். ஆனால் இன்றைக்கு கணணியில் "அய்" என்று எழுதுவதை விட "ஐ" என்று எழுதுவதுதான் நேரம் குறைவானதும் இலகுவானதும் ஆகும்.

நான் இங்கே தொடங்கி வைத்தது வேறு ஒன்று. நீங்கள் சொல்வது வேறு ஒன்று.

தயவு செய்து இதற்குள் வந்து குழப்பாது, உங்களுடைய நல்ல பங்களிப்பை தாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழில் தவறாக எழுதுவதைப் பற்றிச் சொல்ல விழைகின்றபோது, இதை மட்டும் எப்படித் தவிர்க்க முடியும். அதுவும் பிழை தானே?

உங்களைக் குற்றம் சாட்டவில்லையே. பொதுவாகத் தானே சொன்னேன். தவறு விடுபவர்கள் திருத்திக் கொள்ளட்டும்.

Link to comment
Share on other sites

நாம் அறியாது விடுகின்ற தவறுகளைப் பற்றித்தான் நான் இங்கே எழுத விரும்புகின்றேன்.

"அய்ரோப்பா" எழுதுபவர்கள் தெரிந்துதான் அப்படி எழுதுகின்றார்கள். "தமிழில் தேவையில்லாமல் நிறைய எழுத்துக்கள் இருக்கின்றன, அவைகளை குறைக்க வேண்டும்" என்ற சிந்தனையோடு அவர்கள் அப்படி எழுதுகிறார்கள்.

அவர்கள் ஒரு மாற்றம் வேண்டி அப்படிச் செய்கிறார்கள். அது சரியா தவறா என்பது தனியான ஒரு விவாதம். ஆனால் அவர்கள் அறியாமல் அப்படி எழுதவில்லை.

அவர்கள் ஒளவையார் என்பதை அவ்வையார் என்று எழுதுவார்கள்.

அத்துடன் இதை தமிழ் இலக்கணம் அனுமதித்திருக்கிறது என்பதையும் நீங்கள் உணர வேண்டும்.

"போலி" (போல வருவது போலியாகும்) என்ற தலைப்பில் மொழிமுதற்போலி, மொழியிடைப்போலி, மொழியிறுதிப்போலி என்று மூன்று பிரிவாக இதைத் தமிழ் இலக்கணம் வகுக்கின்றது.

இதைத் தவறு என்று தமிழ் இலக்கணம் சொல்லவில்லை.

ஆகவே இந்தத் தலைப்பில் நாம் அறியாது விடுகின்ற தவறுகள் பற்றியே நான் தொடர விரும்புகின்றேன்.

தயவுசெய்து ஒத்துழைக்கவும்!

Link to comment
Share on other sites

இப்படி பல தவறுகள் நமது அன்றாட வாழ்க்கையில் நடப்பது இப்போது இயல்பாகிவிட்டது. அதனை முடிந்தவரை தவிர்ப்பதே நம் மொழிக்கு நாம் செய்யும் மரியாதையாக இருக்கும்.

பல வானொலிகள், தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பவர்கள்; செய்திகளை வாசிப்பது என்று ஆரம்பிக்கின்றார்கள். அவர்களுக்கே தாம் உயர்திணையா, அஃறிணையா என்ற சந்தேகமுள்ளது போலுள்ளது. உண்மையில் செய்திகள் வாசிப்பவர் என்றே ஆரம்பித்திருக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

சபேசன் உந்த க் விவகாரம் போல் பல பிழைகள் விடுகிறனான். உதுகளிற்கு பொதுவாக விதிகளை பட்டியில் இட்டால் நல்லம். கணனியில் தமிழில் இலக்கண பிழைசுட்டிகாட்டி (grammar checker) ஒன்று உருவாக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

வசம்பு சுட்டிக்காட்டியது போன்று செய்திகள் வாசிப்பது.. என்று சொல்லி ஒரு நபரின் பெயரைக் குறிப்பிடுகின்ற வழக்கம் அனைத்து தொலைக்காட்சி வானொலிகளிலும் உள்ளது.

இதிலே எனக்கு சிறு சந்தேகம் உண்டு.

"திணைபால் வழுவமைதி" என்று ஒரு விடயம் இருக்கிறது.

உதாரணம்: மூர்க்கனும் முதலையும் கொண்டது விடா

இங்கே மூர்க்கன் என்ற உயர்திணை "விடா" என்று அஃறிணையோடு முடியும்.

இப்படியான திணைபால்வழுவமைதிக்குள் இந்த "செய்திகள் வாசிப்பது..." என்பது அடங்குமா என்று சற்று ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

இப்பொழுது நாம் விடுகின்ற இன்னும் ஒரு தவறு பற்றி சொல்கிறேன்.

"சின்னத் திரை"

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பற்றி பேசுகின்ற போது வெகு இயல்பாக பயன்படுத்தப்படும் சொல் இது. ஆனால் இது தவறான சொல் ஆகும்.

"சின்ன திரை" என்பதுதான் சரி. "த்" இங்கே வரக் கூடாது.

ஏன் வரக் கூடாது?

இதை விளக்க ஒரு சொல்லை உதாரணம் எடுப்போம்

"வண்ணத் திரை" : இதனுடைய அர்த்தம் வண்ணம் உள்ள திரை என்பதாகும்.

சின்னத் திரை": இதனுடைய அர்த்தம் சின்னம் உள்ள திரை என்பதாகும்.

"சின்னம்" என்ற ஒரு சொல் இருக்கின்றது. அச் சொல் திரை என்ற சொல்லுடன் இணையும் போதுதான் "சின்னத் திரை" என்று வரும்.

ஆகவே "சின்னத் திரை" என்று சொன்னால் அதனுடைய அர்த்தம் மாறி விடுகிறது.

நாம் குறிப்பிடுகின்ற "சின்ன" என்ற சொல் "சிறிய" என்பதன் மருவலாகும்.

சிறிய திரை = சின்ன திரை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதே போல அப்துல் கமீதுவை ஈயடிச்சான் காப்பி அடிக்கும் ஜிப்ரி, அபர்ணா சுதன், ஈஸ்வரதாசன் போன்ற "அன்பு அறிவிப்பாளர்களும்" நடத்தியது என்பதை நடாத்தியது என்கிறார்கள். இதில் எது சரி?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சிலர் தாங்களும் குழம்பி மற்றவர்களையும் குழப்புகின்றார்கள்.

Link to comment
Share on other sites

சபேசன் முழு விதிகள் அல்லது விதிவிலக்குகளை பட்டியல் இடச்சொல்லிக் கேட்டா பொங்கலுக்கு பயறு போட்டமாதிரி தொட்டன் தொட்டனாக உதாரணம் தாறியள்.

Link to comment
Share on other sites

முதலில் இப்படி உதாரணங்களை சொல்வது நல்லது என்று நினைக்கின்றேன். இப் பொழுதே விதிகளை எழுதினால் ஏதோ இலக்கணப் பாடம் மாதிரி இருக்கும். எத்தனை பேர் ஆர்வம் காட்டுவார்கள் என்று தெரியவில்லை.

ஆரம்பத்தில் இப்படி சில சொற்களை உதாரணம் தருவதுதான் படிப்பவர்களை கவரும் என்று நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

வணக்கம் சபேசன் அண்ணா

உங்கள் ஆக்கங்களை தொடர்ந்து பார்ப்பவன் நான். ஆனால் கருத்துக்கள் எதுவும் எழுத விரும்புவது இல்லை.ஆனால் இம்முறை எழுதுகிறேன்.ஏனென்றால் நான் நேசிக்கும் தமிழ் பற்றியது என்பதால்...

விடயத்துக்கு வருவோம்

செய்திகள் வாசிப்பது என்பது முற்றிலும் தவறானது. அது வசம்பன் அண்ணா சொன்னதுபோல்

உயர்திணை சொல் அல்ல. செய்திகள் வாசிப்பவர்(இரு பாலாருக்கும் பொருந்தும்) என்பதுதான் சரியானது.

சின்னத்திரை என்பது சின்னம்+திரை அல்ல, சின்னன்+ திரை= சின்னத்திரை (சின்னனாக உள்ள திரை)

உ+ம் , சின்னன்+தம்பி = சின்னத்தம்பி பெரிய+தம்பி= பெரியதம்பி

சின்னன்+கடை = சின்னக்கடை பெரிய+கடை = பெரியகடை

க்,ச்,ட்,த்,ப்,ற் இந்த வல்லின எழுத்துக்கள் மெல்லின,இடையின மெய்யெழுத்துக்களுடன்

சேரும் போது அவ்வெழுத்துக்கள் அங்கே தோன்றும்.

சின்னன்+மாமி = சின்னமாமி பெரிய+ மாமி = பெரியமாமி

சின்னன்+ வெங்காயம் = சின்னவெங்காயம் பெரிய+ வெங்காயம் = பெரியவெங்காயம்

தமிழ் என்ற எழுத்துக்குள் வல்லினம்,மெல்லினம்,இடையினம் மூன்றும் இணைந்துள்ளது.வேறு எந்த மொழிக்கும் இல்லாத சிறப்பு தமிழுக்கு மட்டும்தான் உண்டு.

மீண்டும் சந்திப்போம்.

Link to comment
Share on other sites

மருமகன்

பேசாமல் நீங்கள் எழுதாமலேயே இருந்திருக்கலாம். காரணம் நீங்களும் குளம்பி மற்றையவர்களையும் குளப்ப முயல்கின்றீர்கள்.

உயர்திணை, அஃறிணை என்பதனையும் ஆண்பால், பெண்பாலையும் தவறான புரிதல் அடிப்படையில் நீங்கள் புரிந்துள்ளீர்கள்.

உ+ம் : ஆசிரியன்-ஆண்பால், ஆசிரியை- பெண்பால், ஆசிரியர்- பொதுப்பால்

அதே போல் சிறிய + திரை = சின்னதிரையே யொழிய நீங்கள் எழுதியது போல் சின்னன் + திரையல்ல சின்னன் என்பது பேச்சு வழக்கிற்கு மட்டுமே பாவிப்பது.

உ+ம்; தேங்காய் = தேங்கு + காய் அல்ல தென்னை + காய் தான்.

Link to comment
Share on other sites

மருமகன்,

"சின்னன்" என்பது பேச்சு வழக்கில் உள்ள ஒரு கொச்சைச் சொல். "சிறிய" என்பதன் மருவல் "சின்ன"

அத்துடன் நீங்கள் சொன்னது மாதிரியான புணர்ச்சிகள் நான் அறிந்தவரை தமிழில் இல்லை.

நீங்கள் சொன்னது போன்று பார்த்தாலும் இப்படித்தான் வரும்

சின்னன் + திரை = சின்னற்றிரை

சின்னன் + தம்பி = சின்னற்றம்பி

சின்னன் + அம்மா = சின்னனம்மா

இலக்கணத்தில் "மெய்யீற்றுத் திரிபுகள்" என்ற பகுதியில் இதனுடைய விளக்கத்தை நீங்கள் அறியலாம்.

நிலைமொழியில் "ம்" என்பது இறுதியாக வந்து வருமொழியில் "த்" என்பது தொடக்கமாக இருந்தால், "ம்" என்பது "த்" என்று திரியும்.

உதாரணங்கள்

வண்ணம் + திரை = வண்ணத் திரை

வண்ணம் + தோட்டம் = வண்ணத் தோட்டம்

நீலம் + தலை = நீலத் தலை

காலம் + தடை = காலத் தடை

சின்னம் + திரை = சின்னத் திரை

Link to comment
Share on other sites

நல்ல விடயம்.. தொடருங்கள்.. பலசமயங்களில் தவறானவைகளை வாசிப்பதனால் தவறாகவும் எழுத நேரிடுகிறது. இதேபோல.. ல, ழ.. பாவனை விவகாரம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்க O/L க்கு 40 MCQ செய்வதற்காக மட்டும் படித்த கொஞ்ச இலக்கணம் தான். அதுகூட மண்டையை விட்டு மாயமாய் மறைந்துவிட்டது.

சரி சபேசன் அப்போ சின்ன + திரை என்ற இரு சொற்களை சேர்த்து ஒரு சொல்லாக எழுதவே தமிழ் இலக்கணத்தில் இடமில்லையா?

ஆனால் சொல்லும் போது "த்" விழாவிட்டால் அந்த நயமே கெட்டுவிடுமே?

Link to comment
Share on other sites

ஆகா.. :wub: பூனை படுத்திட்டுதெண்டால் பெருச்சாளி கில்லி விளையாடக் கூப்பிடுமாம்..! :wub:

ஐயாமாரே.. சின்னத்திரை, சின்னதிரை எல்லாமே தவறு. புணர்ச்சி விதிகளின் அடிப்படையில் இதை அணுகவேண்டும்.

நிலைமொழி: சிறுமை

வருமொழி: திரை

நிலைமொழி+வருமொழி ==> சிறுமை+திரை

ஈறுபோதல் என்றவிதிப்படி நிலைமொழியின் ஈற்றிலுள்ள 'மை' அழிந்து

சிறு+திரை ஆகும். அதற்குமேல் மாறாது. ஆகவே சிறுதிரை என்பதே சரி.. :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா... நல்ல விடயம் எழுதியிருக்கெண்டு வந்து பார்தால், ஒவ்வொருத்தரும் மாறி மாறி எழுதி இருக்கிறதையும் குளப்பி வீடுவீர்கள் போலுள்ளது. பறவாயில்லை தொடருங்கோ.

நடாத்துனர் / நடத்துனர்சரியானது?

Link to comment
Share on other sites

வணக்கம் வசம்பண்ணே

நீங்கள் சொன்னால் சரிதான் நான் எழுதாமல் இருப்பதுதான் நல்லம்.

இனிமேல் இதில் எழுதமாட்டேன்.

வாசிப்பது ------ அஃறிணை ஒன்றன்பால்

வாசிப்பதுகள்---------- அஃறிணை பலவின்பால்

வாசிப்பவன் -------- உயர்திணை ஆண்பால்

வாசிப்பவள் ---------- உயர்திணை பெண்பால்

வாசிப்பவர் ------------- உயர்திணை பொதுப்பால்( ஒருமை)

வாசிப்பவர்கள்---------- உயர்திணை பொதுப்பால் ( பன்மை )

இதை வாசித்துப் பாருங்கள் நான் எழுதியதின் அர்த்தம் புரிந்திருக்கும்.

புரியவில்லையா? மன்னித்துக்கொள்ளுங்கள்.

தேங்காய் ----- தெங்கு+ காய் ( தேங்கு+காய் அல்ல) சரிதானே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகுத்தறிவு படிப்பிச்சு முடிஞ்சுது இப்பதமிழ் படிப்பிக்க வெளிக்கிட்டாச்சு!நல்ல விடயம் உண்மையாக மனதார வரவேற்கின்றேன்.

ஆனால் இந்த பகுதிக்குரியவரின் ஒருசில விளக்கங்களை பார்க்கும் போது எனக்கு தமிழ் இலக்கணம் கற்றுவித்த சட்டாம்பியாரை பார்த்து நாக்கை பிடுங்கி சாகிற மாதிரி நான்கு கேள்விகள் கேட்க வேண்டும் போலுள்ளது. :lol::D:D:lol:

அவரின் உள்நோக்கம் தெரியாமல் ஒருசிலர் பாராட்டுக்கள் வேறு கொடுக்கின்றனர். :)

இப்பகுதிக்குரியவரின் போலிமுகம் வெகு விரைவில் கிழித்தெறியப்படும். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் இந்த பகுதிக்குரியவரின் ஒருசில விளக்கங்களை பார்க்கும் போது எனக்கு தமிழ் இலக்கணம் கற்றுவித்த சட்டாம்பியாரை பார்த்து நாக்கை பிடுங்கி சாகிற மாதிரி நான்கு கேள்விகள் கேட்க வேண்டும் போலுள்ளது.

என்ன கேள்வி கேட்க போறிங்க

Link to comment
Share on other sites

மருமகன்,

நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள்.

"செய்திகள் வாசிப்பது..." என்ற விடயத்தில் வசம்பு சொன்னதோ, அல்லது நீங்கள் சொன்னதோ தவறு என்று சொல்லவில்லை. அநேகமாக உங்கள் இருவருடைய கருத்தும் சரியாகத்தான் இருக்கும்.

என்றாலும் "திணைபால்வழுவமைதி" என்பதன் காரணமாக எனக்கு ஒரு சிறு சந்தேகம் இருக்கின்றது.

ஆனால் "சின்னத் திரை" என்பதற்கு நீங்கள் தந்த விளக்கம் (சின்னன் திரை) தவறு.

அதே வேளை "தேங்காய்" என்பதை நீங்கள் பகுத்த விதம் சரி என்பதுதான் என்னுடைய கருத்து

தென்னை + காய் = தென்னங்காய்

தெங்கு + காய் = தேங்காய்

அடுத்தது டங்குவார் சொன்னதைப் பார்ப்போம்.

சின்ன" என்பது ஒரு கொச்சையான சொல். அந்த வகையில் "சின்ன திரை" என்பதும் தவறு என்று சொல்வது ஏற்கத்தக்கதுதான்.

ஆனால் நான் இங்கே சொல்வது "சின்னத் திரை" என்று "த்" போட்டு சொல்கின்ற போது, அதனுடைய அர்த்தமே மாறி விடுகின்றது என்பதைத்தான்.

"சிறிய திரை" என்பதைத்தான் "சின்ன திரை" என்று சொல்வார்கள். அந்த வகையில் "த்" வராது. இதைத்தான் நான் சொல்கிறேன்.

இன்னும் ஒன்றை சொல்ல வேண்டும். நான் ஆரம்பத்திலேயே தெளிவாகச் சொல்லியிருக்கின்றேன். இப் பகுதியயை என்னால் மட்டும் தனியாகத் தொடர முடியாது. நான் ஒன்றும் தமிழ்ப் பேராசிரியன் அல்ல. மற்றைய கள உறவுகளும் இணைந்தால்தான் சரியாக செய்யலாம்.

ஆகவே எல்லோரும் தங்களுடைய கருத்துக்களை பதிந்து விவாதித்து தீர்வு காண்பதுதான் சிறந்தது.

புதிதாக வேறு ஒரு விடயத்தைப் பார்ப்போம்.

நாம் எல்லோரும் "அல்ல" என்ற சொல்லை பல இடங்களில் பயன்படுத்துகின்றோம். நானும் பல இடங்களில் பயன்படுத்தியுள்ளேன். ஆனால் எல்லோரும் தவறாகப் பயன்படுத்துகின்றோம்.

மேலே நான் எழுதிய ஒரு வசனத்தைப் பார்ப்போம்.

நான் ஒன்றும் தமிழ்ப் பேராசிரியன் அல்ல - இது தவறு

நான் ஒன்றும் தமிழ்ப் பேராசிரியன் அல்லன் - இதுதான் சரி

அவள் நல்ல பெண் அல்லள் - பெண்பால் என்றால் "அல்லள்" என்றும் பலர்பால் என்றால் "அல்லர்" என்றும் வரும்.

"அல்ல" என்பது அஃறிணையின் பன்மைச் சொற்களுக்கு மட்டும்தான் வரும்.

உதாரணம்

மரத்தில் இருப்பவை குரங்குகள் அல்ல (பன்மை)

ஒரு குரங்கு என்றால் "அன்று" என்று வரும்

மரத்தில் இருப்பது குரங்கு அன்று (ஒருமை)

இதிலே இன்னும் ஒரு முக்கியமான விடயம் உண்டு. "அல்ல - அன்று" போன்றவை வருகின்ற போது வசனம் முடியாது.

மரத்தில் இருப்பவை குரங்குகள் அல்ல, அவைகள் பறவைகள்.

மரத்தில் இருப்பது குரங்கு அன்று, அது ஒரு பறவை.

அதாவது "அல்ல" என்று சொல்கின்ற போது, மறுக்கப்பட்ட விடயம் எது என்று சொல்ல வேண்டும்.

"இல்லை" என்று சொல்கின்ற போதுதான் வசனம் முடியும்.

மரத்தில் பறவைகள் இல்லை.

(கவிதைகளில் "அல்ல" பாவிக்கின்ற போது, வசனத்தை முடிக்க வேண்டிய கட்டாயம் இல்லை. மிகுதியை வாசகரிடம் விடலாம்)

Link to comment
Share on other sites

அச்சியந்திர காலத்துக்கு முன் எழுத்திலக்கியத்துக்கு மட்டுமல்ல பிறப்புக்கும் இறப்புக்கும் நோய்க்கும் மருந்துக்கும் சாத்திரத்துக்கும் சம்பிரதாயத்துக்கும் பாடல்கள்தான் வரி வடிவம் கொடுத்தன. அதனால், தொல்காப்பிய இலக்கண விதிமுறைகள் ஏறக்குறைய முழுவதும் செய்யுள் அமைப்புக்கானதே அன்றி உரைநடைக்குரியது அல்ல.

நவீன தமிழ் உரைநடைக்கு வரலாறு அதிக பட்சம் இரண்டு நூற்றாண்டைத்தாண்டாது. பொதுவாக செய்யுள்களில் ஓசைநயத்துக்காக சொற்களை இணைப்பதால் புணர்ச்சி விதிகள் தெளிவாக இல்லாவிட்டால் பொருள் மயக்கம் அல்லது குழப்பம் வர வாய்ப்புகள் அதிகம். செய்யுள் மொழிக்காக வகுக்கப்பட்ட இலக்கண விதிகளை உரைநடைக்குள் நிறுவமுனையும் போது பல இடங்களில் அமைதி கண்டாலும் சில இடங்களில் நெருடவே செய்கின்றன.

இதற்கு நல்ல எடுத்துக்காட்டு சொல்ல கனதூரம் போகவேண்டியதில்லை. ஏற்கனவே விவாதத்தில் இருக்கும் 'சின்னத்திரை' அல்லது 'சின்ன திரை' சிறப்பான உதாரணமாகும். சின்னத்திரை என்பதை பிரித்தேயாக வேண்டுமென்றால் சின்ன + திரை என்பதே மிகப்பொருத்தமானது. சின்னன்+திரை என்பதும் சின்னம்+திரை என்பதும் பொருள் குழப்பம் உடையன. அடுத்து 'சின்னத்திரை' சரியா அல்லது 'சின்ன திரை' சரியா என்பதைப்பார்ப்போம்.

என்னால் இப்போ நினைவு கூர முடியவில்லை அதை தொடக்கியது குமுதமா விகடனா அல்லது வேறு பத்திரிகையா என்பதை. ஆனால் சமாச்சாரம் ஒன்றும் ரொக்கெற் விஞ்ஞானம் அல்ல. உரைநடையில் சொற்களை உடைக்கும் போது 'சின்னத்திரை' என்பதை 'சின்ன திரை' என்பதாக எழுதுவதாகும். 'சின்ன' என்பது பேச்சு வழக்கு சொல்லாகினும் அதற்கு தனித்த அர்த்தம் உண்டு.

சில உதாரணங்கள்

வகை-1

என்பதைப்பார்ப்போம் = என்பதை பார்ப்போம்

நூற்றாண்டைத்தாண்டாது = நூற்றாண்டை தாண்டாது

வகை-2

சமாச்சாரமொன்றும் = சமசாரம் ஒன்றும்

குழப்பமுடையன = குழப்பம் உடையன

வகை-3

பாகல் காய் 'எனவெழுத' முடியாது = பாகல் காய் 'என எழுத' முடியாது

அனுகூலங்கள்' நிறையவுண்டு' = அனுகூலங்கள் ' நிறைய உண்டு'

வகை-4

பார்த்ததில்லை = பார்த்தது இல்லை

வகை-5

பொருட்குழப்பம் = பொருள் குழப்பம்

பெருங்கடல் = பெரும் கடல்

அந்த பகற்பொழுது போயிற்று = அந்தப்பகல் பொழுது போயிற்று.

(இவைகளில் சுவாரசியமான ஒரு நுண்ணிய பொருள் மாற்றமும் நிகழ்கிறது)

வகை-6

பாவற்காய் = 'பாவல் காய்' என எழுத முடியாது.

அகல்விளக்கு = அகல் விளக்கு (அகற்விளக்கு என எழுதுவது தவறு)

பொருட்குழப்பம் வராதபடி இவ்வகையாக சொற்களை புணர்த்தாமல் தனித்தனியாகவும் தேவையாயின் புணர்த்தி கூட்டாக எழுத அனுமதிப்பது தமிழ் மொழிக்கே உரித்தான சிறப்பம்சங்களில் ஒன்றாகும்.

'தமிழ்ச்சொற்கள்' என்பதை 'தமிழ்ச் சொற்கள்' என்பதைவிட 'தமிழ் சொற்கள்' என்றெழுதுவதால் 'கூகிள்' பெருங்கடலில் அகல நீந்த வாய்ப்பு இருப்பினும் ஆழ நீந்த தேடல் தொழில் நுட்பம் இன்னும் அகலப்படுத்தப்பட வேண்டும்.

கூகிள் தேடலின் முடிவுகள் சொல்லும் தொகை இன்றைய நிலவரம்.

1. தமிழ்ச்சொற்கள் ----> 1090

2. தமிழ்ச் சொற்கள் ----> 13400

3. தமிழ் சொற்கள் ------> 213000

இனிவரும் காலத்தில் வாசிப்பு என்பதும் ஒரு திரை சார்ந்த நிகழ்வாகவும் அனுபவமாகவும் தீவிரமாக மாறிவிடும் என்பதால், வாசகன் தனக்குரிய முறையில் எழுத்தாக்கங்களை கண்களின் பார்வைக்கு கொண்டுவர, சொற்களை பொருட்குழப்பம் வராதபடி உடைந்து எழுதுவதில் அனுகூலங்கள் சில உண்டு.

ஆக,

இலக்கண விதிமுறைகளை மென்மையாக கையாளுதல், தேவைக்கேற்ப புதிய விதிமுறைகளை உருவாக்கி கொள்ளல் கணினி தொழில் நுட்பவளர்ச்சியின் அதியுட்ச பலாபலன்களை உள்வாங்க தமிழுக்கு வாய்ப்பாக இருக்கும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • புதிய ஆடுகளம் அமைத்து தானே அதில் சுருண்டு பலியாகிவிட்டதா குஜராத் அணி? ஏன் இந்த மோசமான தோல்வி? பட மூலாதாரம்,SPORTZPICS ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 4வது ஓவர் தொடக்கத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி, 169 ரன்கள் வரை சேர்க்கும் என்று கணினியின் முடிவுகள் கணிக்கப்பட்டது. இது 6-வது ஓவரில் திடீரெனக் குறைந்து 120 ரன்களாகக் குறைந்தது. முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த சீசனிலேயே குறைந்தபட்ச ஸ்கோருக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தது. 2022ம் ஆண்டு இந்த ஐபிஎல் தொடருக்குள் வந்தபின் குஜராத் டைட்டன்ஸ் அணி சேர்த்த மிகக்குறைந்த ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன் 125 ரன்களில் சுருண்டிருந்தது குஜராத் அணி. அதைவிட இந்த ஆட்டத்தில் மோசமாகும். ஆமதாபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 32-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ் அணி. முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 17.3 ஓவர்களில் 89 ரன்களில் சுருண்டது. 90 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 53 பந்துகளில் 4 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் சேர்த்து 67 பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றியால் டெல்லி கேபிடல்ஸ் அணி 7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்வி என 6 புள்ளிகளுடன் 9வது இடத்தில் இருந்தது, 6-வது இடத்துக்கு முன்னேறியது. குறைந்த ஓவரில் வெற்றி வெற்றி பெற்றதால் நிகர ரன்ரேட்டும் மைனஸ் 0.975 லிருந்து மைனஸ் 0.074 ஆக முன்னேறிவிட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES நிகர ரன்ரேட் மோசமாக இருந்தநிலையில் தற்போது பாசிட்டிவ் நோக்கி டெல்லி அணி நகர்ந்துள்ளது. அடுத்ததாக ஒரு வெற்றி பெற்றால், நிகரரன்ரேட் பிளஸ்குக்குள் சென்றுவிடும். அதேசமயம், குஜராத் டைட்டன்ஸ் அணி அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்துள்ளது.7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்விகள் என 6 புள்ளிகளுடன் 6-வது இடத்திலிருந்து 7-வது இடத்துக்கு சரிந்துள்ளது. நிகர ரன்ரேட்டும் மைனஸ் 1.303 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. நிகர ரன்ரேட்டை உயர்த்த குறைந்தபட்சம் அடுத்த இரு போட்டிகளில் பெரிய வெற்றியை குஜராத் அணி பெற்றால்தான் முன்னேற்ற முடியும். டெல்லி கேபிடல்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கியக்காரணம், ஹீரோக்களாக இருந்தவர்கள் பந்துவீச்சாளர்கள்தான். 6 பந்துவீச்சாளர்கள் பந்துவீசியதில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு. 4.50 ரன்களுக்கும் குறைவாகவே வழங்கினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இதுவரை 79 டி20 போட்டிகளில் விளையாடி 177 பந்துகளை மட்டுமே வீசியுள்ளார். இந்த ஆட்டத்தில் ஸ்டப்ஸ் ஒரு ஓவர் மட்டும் சுழற்பந்துவீசி 11 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES கலீல் அகமது 4 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் 18 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இசாந்த் சர்மா 2 ஓவர்கள் வீசி 8ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். முகேஷ் குமார் 2.3 ஓவர்கள் வீசி 14 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அக்ஸர் படேல் 4ஓவர்கள் வீசி 17 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இதில் விக்கெட் வீழ்த்தாமல் இருந்தது குல்தீப் யாதவ் மட்டும்தான். குறிப்பாக இந்த ஆட்டத்திஸ் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் உள்நாட்டு பந்துவீச்சாளர்களை வைத்தே டெல்லி கேபிடல்ஸ் விளையாடியது. கடந்த ஆட்டத்திலும் இதேபோன்று வெளிநாட்டு பந்துவீச்சாளர்கள் உதவி இல்லாமல் உள்நாட்டு வீரர்களை வைத்தே டெல்லி அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்டத்தில் இரு முக்கிய கேட்ச்கள், இரு முக்கிய ஸ்டெம்பிங்குகள் ஆகியவற்றுடன்16 ரன்கள் சேர்த்த டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.   பட மூலாதாரம்,SPORTZPICS ரிஷப் பந்த் கூறியது என்ன? டெல்லி கேபிடல்ஸ் ரிஷப் பந்த் கூறுகையில் “ ஏராளமான நேர்மறையான அம்சங்கள் நடந்தன. சாம்பியன் மனநிலையோடு எங்கள் அணி விளையாடியது. ஐபிஎல் சீசனில் சிறந்த பந்துவீச்சாக இருக்கும். தொடர்ந்து நாங்கள் எங்களை முன்னேற்றி வருகிறோம். நிகர ரன்ரேட்டை இழந்துவிட்டதால் இனிமேல் அதை உயர்த்த கவனம் செலுத்தவோம். பந்துவீச்சாளர்கள் அவர்கள் பணியை ரசித்துச் செய்தனர், அதனால்தான் வெற்றி எளிதாகியது” எனத் தெரிவித்தார் குஜராத் அணியின் பேட்டிங் நேற்று படுமோசமாக இருந்தது. சுருக்கமாகக் கூறினால், குஜராத் அணியின் பேட்டர்கள் களத்தில் சந்தித்ததே 17.3 ஓவர்கள்தான். அதில் பேட்டர்கள் டாட் பந்துகளாகச் சந்தித்தது 63 பந்துகள். ஏறக்குறைய 10 ஓவர்களுக்கு எந்த பேட்டர்களும் ரன்கள் ஏதும் சேர்க்கவில்லை. ஆக 7.3 ஓவர்களில்தான் 89 ரன்கள் சேர்த்தனர். அது மட்டுமல்லாமல் ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு ஆட்டத்தில் குறைந்தபட்சமாக குஜராத் அணி ஒரே ஒரு சிக்ஸர் மட்டுமே நேற்று அடித்தது. குஜராத் அணியில் காயத்திலிருந்து மீண்டு டேவிட் மில்லர் அணிக்கு திரும்பி இருந்தார், இம்பாக்ட் ப்ளேயராக ஷாருக்கான் சேர்க்கப்பட்டிருந்தார். குஜராத் அணியில் 8-வது வரிசைவரை ஓரளவுக்கு நன்கு பேட்டிங் செய்யக்கூடிய வீரர்கள்தான் இருந்தனர். ஆனால், நேற்று ரஷித் கான் சேர்த்த 24 பந்துகளில் 31 ரன்கள்தான் அதிகபட்ச ஸ்கோர். மற்ற எந்த பேட்டரும் பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை.   பட மூலாதாரம்,GETTY IMAGES சாய் சுதர்சன்(12), திவேட்டியா(10) ரஷித்கான்(31) ஆகிய 3 பேட்டர்கள் மட்டும்தான் இரட்டை இலக்க ரன்கள் சேர்த்தனர். மற்ற பேட்டர்களான சுப்மான் கில்(2), சாஹா(8), மில்லர்(2) அபினவ் மனோகர்(8), ஷாருக்கான்(0), மோஹித் சர்மா(2), நூர் அகமது(1) என 7 பேட்டர்கள் ஒற்றை இலக்க ரன்கள் மட்டுமே சேர்த்து மோசான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். ரஷித்கான் தவிர வேறு எந்த பேட்டரும் களத்தில் 15 பந்துகளைக் கூட சந்திக்காமல் தேவையின்றி டெல்லி பந்துவீச்சாளர்களிடம் விக்கெட்டை வழங்கி வெளியேறினர். ஆடுகளத்தின் தன்மை என்ன, பந்து எப்படி பேட்டை நோக்கி வருகிறது என்பது குறித்த எந்தப் புரிதலும் இல்லாமல், பொறுமை இல்லாமல் மோசமான ஷாட்களை ஆடியே ஒட்டுமொத்தமாக விக்கெட்டுகளை இழந்தனர். அதிலும் இசாந்த் சர்மா வீசிய 5வது ஓவரில் சுதர்சன் 12 ரன்னில் ரன்அவுட் ஆக, அதே ஓவரின் கடைசிப்பந்தில் மில்லர் 2 ரன்னில் ரிஷப்பந்திடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இதேபோல டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய 9-வது ஓவரில் 3வது பந்தில் அபினவ் மனோகர் 8ரன்னில் ரிஷப்பந்தால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார், அடுத்த பந்தைச் சந்தித்த இம்பாக்ட் ப்ளேயர் ஷாருக்கானும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். இரு முறை ஒரே ஓவர்களில் 2 விக்கெட்டுகள் என குஜராத் அணி இழந்தது. முதல் விக்கெட்டை 11 ரன்களில் இழந்த குஜராத் அணி, அடுத்த 36 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அடுத்த 42 ரன்களுக்குள் மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் குஜராத் ஒட்டுமொத்தமாக இழந்தது.   பட மூலாதாரம்,SPORTZPICS குஜராத் சரிவுக்கு ஆடுகளம்தான் காரணமா? ஆமதாபாத்தில் போட்டி நடந்த ஆடுகளம் இதற்கு முன் நடந்த சீசன்களில் பயன்படுத்தப்படாத புதிய விக்கெட்டாகும். ஆடுகளத்தில் பந்து பிட்ச் ஆனதும் பேட்டரை நோக்கி மெதுவாகவே வரக்கூடிய ஸ்லோ பிட்சாகும். சுழற்பந்துவீச்சாளர்களுக்கும் பந்து வேகமாகத் திரும்பாமல் மெதுவாகத் திரும்பக்கூடிய ஆடுகளம். இதனால் மோசமான ஷாட்களை தேர்ந்தெடுத்து குஜராத் பேட்டர்கள் வெளியேறினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய ஒரு ஓவரில் அடுத்தடுத்த பந்தில் மனோகர், ஷாருக்கான் இருவரும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டனர். இவர்கள் இருவருமே பந்து இந்த அளவு டர்ன் ஆகும் என நினைத்திருக்கமாட்டார்கள். பந்து வருவதற்கு முன்பே பேட்டர்கள் பேட்டை சுழற்றியதும், ஸ்லோ பந்துகளில் பெரிய ஷாட்களை அடிக்க முற்பட்டதும் எளிதாக விக்கெட்டுகளை வீழ்த்த உதவியது. ஆனால் புதிய ஆடுகளத்தால் தங்களுக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை என்று சுப்மான் கில் கூறினார். தோல்விக்குப் பிறகு அவர் கூறுகையில் “ எங்கள் பேட்டிங் சராசரியாகவே இருந்தது. விக்கெட் ஓரளவுக்கு நன்றாகத்தான் இருந்தது. விக்கெட் மோசம் என்று நான் கூறவில்லை. எங்கள் வீரர்கள் ஆட்டமிழந்த விதத்தைப் பார்த்தால், குறிப்பாக நான்ஆட்டமிழந்ததற்கும் ஆடுகளத்துக்கும் தொடர்பில்லை. சாஹா ஆட்டமிழந்தது, சாய் சுதர்சன் ரன்அவுட் ஆகியவையும் பிட்சுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. என்னைப் பொருத்தவரை மோசமான பேட்டிங், மட்டமான ஷாட் தேர்வுகள்தான் தோல்விக்கு காரணம்” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால், குஜராத் பேட்டர் டேவிட் மில்லர் ஆடுகளத்தை குற்றம்சாட்டினார். அவர் கூறுகையில் “ விக்கெட் மிக மெதுவாக இருந்தது. எந்த அணியும் இதுபோன்று மோசமாக குறைந்த ஸ்கோரில் ஆட்டமிழந்தது இல்லை. அதிலும் ஒரு முன்னாள் சாம்பியன் அணி ஆட்டமிழந்தது இல்லை. இரு விக்கெட்டுகள் திடீரென அடுத்தடுத்து பறிபோனது அதிர்ச்சியளித்தது.” “சுப்மான் கில் கவர் ட்ரைவ் ஷாட்களை பந்து வரும்முன்பே ஆடிவிட்டார். பந்து ஆடுகளத்தில் நின்று மெதுவாக பேட்டரை நோக்கி வந்ததை புதிய பேட்டராக வருபவரால் கணிக்க முடியவில்லை அதனால்தான் 90 ரன்களுக்குள் ஆட்டமிழந்தோம். இந்த உலகத்திடம் ஆயிரம் மன்னிப்புகள் கேட்கலாம். ஆனால், இறுதியில் பார்த்தால் நாங்கள் மோசமான கிரிக்கெட்டைத்தான் விளையாடியிருக்கிறோம். 120 ரன்கள் சேர்த்திருந்தால்கூட பந்துவீச்சாளர்கள் டிபெண்ட் செய்ய உதவியிருக்கும். ஆனால்,90 ரன்கள்கூட வரவில்லை. ரஷித்கான் அணியை பெரிய ஸ்கோருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் பேட் செய்ததால்தான் ஓரளவுக்கு ஸ்கோர் கிடைத்தது. இல்லாவிட்டால் மோசமாகி இருந்திருக்கும் ” எனத் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/cqqny66krveo
    • @goshan_che எழுதிய தாயக பயண அனுபவங்கள் என்ற இந்த பயண கட்டுரைக்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைப்பதால் அவரின் அனுமதியுடன் இந்த தாயக இளைஞர்களின் முயற்சிகள் தொடர்பான  காணோளியை இணைக்கிறேன்.    பி. கு அனுமதி பெறாமலே😂
    • ஆம் இது உண்மை எனக்கு பலமுறை இப்படி ஏற்பட்டது. இது ஒரு புதிய யுக்தி. பெரெரா அன்ட் சன்ஸ் இல் சாப்பிட்டு கொண்டிருக்கும்போது இப்படி அடிக்கடி நடக்கும். கடை வாசலுக்கு முன் வந்து சாப்பிட்டு கொண்டிருப்பவரை பர்ர்த்து, கெஞ்சி மன்றாடி உணவ வாங்கி கேட்பது, அலுப்பு கொடுப்பது அடிக்கடி நடக்கும்.
    • வைகாசி மாதம் என்றால்  அகம் குளிரும் அன்னையின் முகம் காணும் ஆசைவரும்  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.