Jump to content

தூய தமிழ்ச் சொற்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் அறிந்த ஒரு சில தூய தமிழ்ச் சொற்களை இப் பகுதிக்கு எடுத்து வந்துள்ளேன்.

மேலதிகமான தூய தமிழ்ச் சொற்களை அறிந்தவர்கள் இப்பகுதிக்கு எடுத்து வந்தால் மிகவும் பயனுள்ளதாக அமையும்.

நன்றி

சைக்கிள் - மிதியுந்து

அலாரம் - துயிலெழுப்பி

மோட்டார்ச்சைக்கிள் - உந்துருளி

லொறி - பாரஊந்து

பேக்கரி - வெதுப்பகம்

ஜிவலரி - பொற்தொழிலகம்

ஐஸ்கிறீம் - குளிர்கழி

கூல்பார் - குளிர்பருகை நிலையம்

எயிட்ஸ் - எசகு நோய் (திர்ப்பு க்தி குறைவு)

புகையிரதம் - தொடருந்து

சந்தோசம் - மகிழ்ச்சி

Link to comment
Share on other sites

பிசகு களால் (காதல் , இரத்தம், சவரம் போண்ற) வருவது எசகு நோய் எண்று சொல்லலாமா...?? :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜிவலரி - பொற்தொழிலகம்

இதற்கு நகையகம், நகைமாளிகை, தங்கமாளிகை, நகைச்சுரங்கம் என்ற சொற்களைப் பாவித்தும் அழைக்கலாம். கட்டாயம் முழுஅர்த்தப்பாட்டோடு தான் அமையவேண்டும் என்றில்லை.

இப்படி நீண்டபெயராக வைத்தால் கடையுரிமையாளர்களுக்கு கடினமாக இருக்கக் கூடும். அத்தோடு நேரடி மொழிபெயர்ப்பும் அவசியமற்றது. சுருக்கமாக, அழகாக, அர்த்தமுள்ளதாக இருந்தால் மிகவும் நல்லது.

Link to comment
Share on other sites


சைக்கிள் - மிதியுந்து 

மிதி+ உந்து = மிதியுந்து இது செயற்பாட்டை குறிக்கிறது

ஓரு பொருளை குறிப்பதானால் மிதியுந்தி என்றல்லவா வரவேண்டும்

எதுசரி?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிதி+ உந்து = மிதியுந்து இது செயற்பாட்டை குறிக்கிறது

ஓரு பொருளை குறிப்பதானால் மிதியுந்தி என்றல்லவா வரவேண்டும்

எதுசரி?

அப்படிப் பார்த்தால்

பாரவுந்து என்பது பாரவூந்தி என்றும், தொடரூந்து என்பது தொடரூந்தி என்றுமல்லவா வரவேண்டும்?

Link to comment
Share on other sites

தூயவன் மாளிகை சுரங்கம் இவை தமிழ்ச்சொற்களில்லை. நகை என்பது கூட தமிழ்ச்சொல்லா என்று தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூயவன் மாளிகை சுரங்கம் இவை தமிழ்ச்சொற்களில்லை. நகை என்பது கூட தமிழ்ச்சொல்லா என்று தெரியவில்லை.

தவறுக்கு வருந்துகின்றேன்.

யாழ்பாணத்தில் பல நகைக்கடைகள் வைத்திருக்கின்ற பெயர்களைத் தான் தந்திருந்தேன்.

நகை என்பது தமிழாகத் தான் இருக்கும் என நினைக்கின்றேன். நகை, நகைப்பு, நகைத்தல் என்ற பிறிதொரு அர்த்தம் தரக்கூடிய சொற்கள் இருக்கின்றனவே!

Link to comment
Share on other sites

தூயவன் மாளிகை சுரங்கம் இவை தமிழ்ச்சொற்களில்லை. நகை என்பது கூட தமிழ்ச்சொல்லா என்று தெரியவில்லை.

மாளிகை சுரங்கம் போன்ற சொற்கள் தமிழ் இல்லையா? விட்டால் தமிழே தமிழ் இல்லை என்று சொல்லுவீர்கள் போல இருக்குது. இதற்கு எதாவது ஆதாரம் இருக்கின்றதா? சமற்கிருதத்தில் உள்ள சொற்்கள் எல்லாம் தமிழிலிருந்தால் அது தமிழ் இல்லை என்று முடிவு செய்துவிடுவீர்களா? அது தமிழிலிருந்து சமற்கிருத்திற்குப் போன சொல்லாகக் கூட இருக்கலாம். உங்களைப்போல் சமற்கிருத்தில் உள்்ள சொற்கள் எல்லாம் தமிழ் இல்லை என்று முடிவு செய்தா கடைசியில் நாம் ஒன்றும் இல்லைமல் தான் அலைய வேண்டி வரும். ஏற்கனவே இந்துசமயத்தோடு தொடர்புபட்ட எந்த ஒரு சொல்லும் தமிழ் இல்லை என்று ஒரு கூட்டம் கிளம்பியிருக்குது. இதற்குள் நீங்களும் எழுந்தமானத்திற்கு இது தமிழ் இல்லை இதுதான் தமிழ் என்று மக்களைக் குழப்பாதீர்கள்.

Link to comment
Share on other sites

சும்மா போங்கோ நான் போய் இப்படி எல்லாம் சிட்னியில கதைக்க தொடங்கினா :mellow: தமிழ் ஆட்கள் எல்லாம் என்னை கொண்டு போய் வேற ஆஸ்பத்திரியில வைத்தாலும் வைத்துபோடுவார்கள் :unsure: என்றாலும் அறியதந்ததிற்கு மிக்க நன்றி!! :unsure:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

மாளிகை சுரங்கம் போன்ற சொற்கள் தமிழ் இல்லையா? விட்டால் தமிழே தமிழ் இல்லை என்று சொல்லுவீர்கள் போல இருக்குது. இதற்கு எதாவது ஆதாரம் இருக்கின்றதா? சமற்கிருதத்தில் உள்ள சொற்்கள் எல்லாம் தமிழிலிருந்தால் அது தமிழ் இல்லை என்று முடிவு செய்துவிடுவீர்களா? அது தமிழிலிருந்து சமற்கிருத்திற்குப் போன சொல்லாகக் கூட இருக்கலாம். உங்களைப்போல் சமற்கிருத்தில் உள்்ள சொற்கள் எல்லாம் தமிழ் இல்லை என்று முடிவு செய்தா கடைசியில் நாம் ஒன்றும் இல்லைமல் தான் அலைய வேண்டி வரும். ஏற்கனவே இந்துசமயத்தோடு தொடர்புபட்ட எந்த ஒரு சொல்லும் தமிழ் இல்லை என்று ஒரு கூட்டம் கிளம்பியிருக்குது. இதற்குள் நீங்களும் எழுந்தமானத்திற்கு இது தமிழ் இல்லை இதுதான் தமிழ் என்று மக்களைக் குழப்பாதீர்கள்.

அண்ணை நான் சொன்னது அவை தூய தமிழ்ச்சொற்கள் இல்லை என்று. உங்களைப் போன்றவர்கள் ஆங்கிலக்கலப்பற்ற சொற்களை மாத்திரம் தூய தமிழ் சொற்கள் எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள்.

தமிழில் பல்லாயிரம் சொற்கள். தூய்மையான தமிழ்ச்சொற்கள் இருக்கின்றன. நாம் தற்காலத்தில் பயன்படுத்தும் பிறமொழிச்சொற்களை விட எமது தமிழ்ச்சொற்கள் மிகவும் பொருளுடைய சொற்களாக இருக்கின்றன.

தமிழில் களையாக குப்பையாக உள்ள வடமொழிச்சொற்கள் உள்ளிட்ட திசைச்சொற்களை முற்றாக அகற்றி விட்டாலும் அழிந்து போவதற்கு எமது மொழி வளம் குறைந்த மொழியல்ல. இரண்டாயிரம் ஆண்டுகளிற்கு முன்பேயே மிகச்செழுமையான மொழியாக இருந்த மொழி எமது மொழி.

எப்ப வடக்கிலிருந்து மதம் எண்ட பெயரில் கண்ட கண்ட கழிவுகள் எல்லாம் தமிழர் நிலத்திற்கு வரத்தொடங்கியதோ அப்போதே தமிழனுக்கும், அவனது மொழிக்கும் தொடங்கிய அழிவு இன்றும் தொடர்கிறது. இதில் இழிவு என்வென்றால் வேற்று மொழிப் பெயர்களை தமிழ் பெயர் என்று நினைத்து தமிழன் தன் பிள்ளைக்கு வைக்கிறான். தமிழ்ச்சொற்களென நினைத்து கண்ட கண்ட மொழிச்சொற்களையும் தமிழுடன் கலந்து பேசுகிறான். இதுதான் தமிழனின் இழிவு நிலை.

இந்து மதத்தில் எதனைத் தமிழில் காண்கின்றீர்கள். எல்லாமே வடமொழிதானே. கோவில்களில் வழிபாட்டின்போது பூசாரிகளால் ஓதப்படும் மந்திரங்கள் என்ன தமிழா? (அதனைக் கூட தமிழ் என்று நீங்கள் நினைத்துக்கொண்டுகூட இருக்கலாம்). வீபூதி, அர்ச்சனை, அபிஷேசகம், ஆரார்தி, பஞ்சாமிர்தம், கும்பாவிஷேஷம், எண்டு எல்லாம் தமிழில்தானே இருக்கிறது?

எமது பயன்பாட்டில் உள்ள வடமொழிச்(சமஸ்கிரத) சொற்கள் அந்த மொழியில் நாம் பயன்படுத்துவது போன்று இருக்காது. ஓசைகள் மாறுபட்டோ அல்லது பொருள் மாறுபட்டோ இருக்கும்

Sujeenthan, தூய தமிழ் என்பது ஆங்கிலமில்லாத தமிழல்ல. ஆங்கிலமோ வடமொழியோ எந்த மொழிச் சொல்லையும் எமது மொழிக்குள் பயன்படுத்தாது முழுமையாக எமது மொழிச்சொற்கள் மூலம் எழுதுவது, பேசுவது. இதுவே தூய தமிழ் பயன்பாடு.

தமிழைத் தூய்மைப் படுத்துவது என்பது நீங்கள் காதல் கொண்டிருக்கும் இந்து மதத்திற்கோ அல்லது சமஸ்கிரத மொழிக்கோ எதிரானதல்ல. முற்று முழுதாக எமது மொழியைத் தூய்மைப் படுத்துவது மாத்திரமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழைத் தூய்மைப் படுத்துவது என்பது நீங்கள் காதல் கொண்டிருக்கும் இந்து மதத்திற்கோ அல்லது சமஸ்கிரத மொழிக்கோ எதிரானதல்ல. முற்று முழுதாக எமது மொழியைத் தூய்மைப் படுத்துவது மாத்திரமே.

<<

மின்னல் அவர்களே,

மிக அழகாக எடுத்தியம்பி இருக்கின்றீர்கள். தூய தமிழ்ச் சொற்களை அறிந்து கொள்வதில் என்ன தவறு

வங்கி - வைப்பகம்

ஐஸ்கீரிம்- குளிர்களி என்றுதான் வரவேண்டும் "ழி" வராது. அப்படி எனில் கழித்துவிடு என்ற பொருள்.

நன்றி.

Link to comment
Share on other sites

வெதுப்பி, வெதுப்பகம் - சரி. வெதுப்பியை சமைக்கும் அடுப்புக்கு - அவன் என்று சொல்லப்பயம்- வெண்ணிலா அக்காவுக்கு கோபம் வரும்- என்ன பெயர்?

Link to comment
Share on other sites

உதவி தேவை!

மச்சான், இதென்னடா புது சேட் ரவுசர் எண்டு வலு ஸ்டைலா கிடக்கு? என்ன பிளான்?

ஒண்டுமில்லையடாப்பா, சும்மா பிரண்ஸ்சோடை டவுனுக்கு போனனான், பேமன்டில போட்டு வித்தாங்கள், நல்ல சீப் அதான் எடுத்தனான்!

டேய் சும்மா பம்ஸ் விடாத, எப்ப உன்டை பேத்டே? டிசம்பரில தானே? எங்க பேசை தா ஐசியை பாப்பம்!

உந்த அரியண்டத்தால தான் நான் இஞ்சால பக்கம் வாரேல, நான் வாரன் மச்சான்!

போடா போ....டேய் நீ ஏன் கழண்டிட்ட எண்டு தெரியும், அவா வாற நேரம் தானே! கூ.... கூ.....

யாராவது இந்த யாழ்ப்பாண இளவட்ட சம்பாசனையை தூய தமிழில் பேச்சு மொழியாக்கி தர முடியுமா? (பல்லுக் கொழுவாம)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உதவி தேவை!

யாராவது இந்த யாழ்ப்பாண இளவட்ட சம்பாசனையை தூய தமிழில் பேச்சு மொழியாக்கி தர முடியுமா? (பல்லுக் கொழுவாம)

வாசிக்கவே நாக்கு திக்குது. இதில் மொழிபெயர்ப்பு வேறா?

Link to comment
Share on other sites

உதவி தேவை! யாராவது இந்த யாழ்ப்பாண இளவட்ட சம்பாசனையை தூய தமிழில் பேச்சு மொழியாக்கி தர முடியுமா? (பல்லுக் கொழுவாம)

உது என்ன யாழ்ப்பாண தமிழ் என்றுறியள் உது ஊருல எல்லாப் பெடியளும் உப்படித்தான் கதைக்கிறவை. நீங்கள் ஏன் யாழ்ப்பாண,ம் வன்னி என்டு பிரிச்சுப் பறையிறியள் :lol::rolleyes:

Link to comment
Share on other sites

உது என்ன யாழ்ப்பாண தமிழ் என்றுறியள் உது ஊருல எல்லாப் பெடியளும் உப்படித்தான் கதைக்கிறவை. நீங்கள் ஏன் யாழ்ப்பாண,ம் வன்னி என்டு பிரிச்சுப் பறையிறியள் :lol::rolleyes:

மற்ற வட்டாரங்கள் எப்படி எண்டு எனக்கு தெரியாது ரசிகை அக்கா!

டவுனும் டவுன் சார்ந்த இடம் தான் எனக்கு பூர்வீகம்!

வாசிக்கவே நாக்கு திக்குது. இதில் மொழிபெயர்ப்பு வேறா?

அது சரி கொழும்பில 10 வருசம் இருந்தா சுளுக்காம விட்டதே பெரிய விசயம்!

Link to comment
Share on other sites

வெதுப்பி, வெதுப்பகம் - சரி. வெதுப்பியை சமைக்கும் அடுப்புக்கு - அவன் என்று சொல்லப்பயம்- வெண்ணிலா அக்காவுக்கு கோபம் வரும்- என்ன பெயர்?

:lol::D:lol::rolleyes:

Link to comment
Share on other sites

சாணக்கியன் அண்ணா நான் தூய தமிழில மொழி பெயர்த்து தருவோ. :rolleyes: .........கண்டிப்பா பல்லு கொழுவாம நான் மொழி பெயர்பேன் சரி இப்ப பெயர்கிறேன்!! :wub:

மச்சி என்னடா இன்னைக்கு புது ஜீன்ஸ் எல்லாம் போட்டு கலக்குறாய் என்ன நைனா இன்றைக்கு சம்திங் ஸ்பேசலோ :o .........நத்திங் ஸ்பேசல் பசங்களோட டவுண் பக்கம் ரவுண்ட்ஸ் போனனாங்க அப்ப பேமர்ண்டில நம்ம துட்டிற்கு ஏற்ற மாதிரி இருந்தது அது தான் தூக்கிட்டோம் :icon_mrgreen: .........சும்மா பிலிம் காட்டாதே எப்படா உன்ட பேர்டே......நெஸ்ட் மந் தானே எங்க சாக்கில இருந்து பர்சை எடுடா எங்கே ஜசியை காட்டு நமக்கு :rolleyes: .......இது தான் இந்த ஏரியா பக்கமே வாரதில்லை நான் விடுங்கடா சும்மா.........நான் கிளம்புறேன்.........டேய் போடா போடா துண்டு வாற நேரம் என்றவுடனே ஆள் நமக்கே அல்வா தாரான்!! :icon_mrgreen:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

ஜம்மு உங்களுடைய தமிழை வாசிக்க எங்கேயோ இடம் மாறி வந்துட்டேன் போல இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா போங்கோ நான் போய் இப்படி எல்லாம் சிட்னியில கதைக்க தொடங்கினா :o தமிழ் ஆட்கள் எல்லாம் என்னை கொண்டு போய் வேற ஆஸ்பத்திரியில வைத்தாலும் வைத்துபோடுவார்கள் :lol: என்றாலும் அறியதந்ததிற்கு மிக்க நன்றி!! :unsure:

ஏன் இப்போது எந்த ஆஸ்பத்திரியில் இருக்கின்றீர்கள்

Link to comment
Share on other sites

ஜம்மு உங்களுடைய தமிழை வாசிக்க எங்கேயோ இடம் மாறி வந்துட்டேன் போல இருக்கு.

நிலா அக்கா அவ்வளவு நல்லாவோ :o இருக்கு சா மாறி எல்லாம் வரவில்லை சரியா தான் வந்திருகிறியள் :unsure: என்னை பார்த்து நீங்களும் கொஞ்சம் டிரை பண்ணுங்கோவேன்!! :D

"என்னைத்தை எல்லாம் செயிறோம் இதை செய்யமாட்டோமா"

அப்ப நான் வரட்டா!!

ஏன் இப்போது எந்த ஆஸ்பத்திரியில் இருக்கின்றீர்கள்

என்ன இப்படி கேட்டுபோட்டியள் தூயவன் நானா :lol: நீங்க இருகிற ஆஸ்பத்திரியில உங்களுக்கு டொக்டரா நான் தானே இருகிறேன் அதையே மறந்துபோட்டியளோ!! :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்போது பார்த்தாலும் உம்மை வைத்தியராக நினைத்துக் கொள்ளும் வருத்தம் தெளியவில்லையா? நீங்கள் சொன்னது மாதிரி வேற வைத்தியசாலைக்கு மாத்தத் தான் வேணும் போல

Link to comment
Share on other sites

எப்போது பார்த்தாலும் உம்மை வைத்தியராக நினைத்துக் கொள்ளும் வருத்தம் தெளியவில்லையா? நீங்கள் சொன்னது மாதிரி வேற வைத்தியசாலைக்கு மாத்தத் தான் வேணும் போல

என்ன செய்யிறது என்ட பேஷ்ன்ட் என்ன செய்தாலும் கேட்கதானே வேண்டும் :o சரி கூல்டவுண் இப்ப என்ன ஊசி போடுற நேரமோ சரி சரி வாரேன் :unsure: .........என்றாலும் இப்ப நல்ல இம்புருமன்ட் கவலைபடவேண்டாம் :lol: இப்ப தான் தொடக்கம் குணபடுத்திடலாம்!! :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்களுக்கு தெரியுமா,  யாழ்பாண பல்கலைக்கழகம் அன்றைய தமிழ் தேசிய வாதிகளான  தமிழரசு கட்சியின்,  மிக கடுமையான எதிர்ப்பின் மத்தியிலேயே திறந்து  வைக்கப்பட்டது. பல்கலைக்கழகத்தை திறக்க விடபாட்டோம் என்று அவர்கள் அடம் பிடித்தார்கள். யாழ்பாணம் முழுவதும் கறுப்பு கொடி ஆர்பாட்டங்கள் நடந்தன.    கூறப்பட்ட காரணம்,  இராமநாதன் என்ற தமிழினத்தின் மாபெரும் தலைவர் பெயரில் உள்ள இராமநாதன் கல்லூரியை,   அதன் பெருமைகளை அழிக்கவே  அதை அரச பல்கலைக்கழகமாக சிங்கள அரசு மாற்றுகிறது என்பதாகும்.   அரசின் மிக சிறிய கிராமிய மட்டதிலான  அபிவிருத்தி திட்டங்கள் கூட  தமிழரசு கட்சியால் கடுமையாக எதிர்க்கப்பட்டு  அவற்றிற்கு ஒத்துழைக்க வேண்டாம் என அன்று மக்கள் மத்தியில் கடுமையான  பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. எதிர் காலத்தில் தாம் உருவாக்க நினைக்கும் தமிழீழ புரட்சிக்கு அது இடையூறு விளைவிக்கும் என தமிழ் தேசியவாதிகள் அன்று கருதினர்.   அதன் தொடர்சசியாக எந்த தொழிற்துறை யாழில் உருவாக்கப்பட்டாலும் அதை எதிர்க்க காரணங்களை தேடித் தேடி  கண்டுபிடித்து அதை எதிர்கக ஒரு கூட்டம் எப்போதும் இருக்கின்றது.  அப்பாவி மக்களை தூண்டி அவற்றிற்கெதிராக போராட்டம் நடத்த அந்த கும்பல் முயற்சி செய்துகொண்டே இருக்கும். தற்போதைய போலி அறிவியல் வட்சப், யூரிப் காணோளிகள் அதற்கு பலம் சேர்ககின்றன.   சுற்றுலாதுறையை வளர்கக முற்பட்டால் பல்வேறு நாட்டவர்கள் இங்கு  வருவதால் யாழ்பாண கலாச்சாம் கெடுகிறது என்று ஒரு கூட்டம் வரும்.   ஒரு காலத்தில் “யாழ்பாண வெங்காயங்கள்” இலங்கை முழுவதும் பிரபல்யமாக அதிக  கேள்வி உள்ளதாக இருந்தது. நிரம்பலை யாழ்பாண விவசாயிகள் செய்து தமது பொருளாதாரத்தை பெருக்க  ஶ்ரீமாவோ பண்டாரநாயக்கா தனது பொருளாதார கோட்பாடுகள் மூலம் உதவி செய்தார்.   இன்றைய உலகமயமாக்கல் பொருளாதார மாற்றங்களினால் அந்த நிலை இன்று இல்லை என்றாலும் ஏனைய தொழிற்துறைகளை முற்றாக நிராகரித்து   யாழ்பாணத்தில் வெங்காயங்களை உற்பத்தி செய்து சந்தைப்டுத்தி மீண்டும் யாழ்பாண வெங்காயங்களை இலங்கை முழுவதும் பிரபல்யப்படுத்தலாம்.  இலங்கையின் மற்றைய பிரதேசங்கள் பல்வேறு தொழிற் துறைகளால் வளர்சியடைய அவர்களுக்கு தேவையான வெங்காயங்களை நாம் சப்ளை செய்யலாம்.   
    • உண்மை தான். ஆனால் இதில் முதலிட்டவர்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது உக்ரைன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கடமை. இதில் பல கோடி மக்களின் அன்றாட அத்தியாவசிய பொருட்களின் வாழ்வு இருக்கிறது. இதை உணர்ந்து தான் புட்டினும் நரித்தனம் செய்தார். 
    • இங்கு மற்றைய நாடுகள் தடைசெய்ய காரணம் விவசாயத்தின் போது உபயோகிக்கப்படும் மிதமிஞ்சிய பூச்சிக் கொல்லிகள். 2022 இல் Eu இந்த எத்திலின் சோதனையை குறிப்பாக இந்தியாவிலிருந்து வரும் பொருட்களுக்கு கட்டாயாமாக்கினார்கள். மார்ச் மாதத்திலிருந்து U.K. கட்டாயாமாக்கி உள்ளது. தற்போது இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் செத்தல் அரிசி மல்லி சீரகம்  உட்பட பலவற்றிற்கு Pesticide சோதனை செய்யப்பட வேண்டும். அதேபோல்  இந்தியாவிலிருந்து சிறீலங்கா சென்று  Product of Sri Lanka என்று U.K. வரும் செத்தல் மிளகாய் ( மிளகாய் தூள் உட்பட)  இனி Aflatoxins அளவு பரிசோதனை செய்யப்படும். மேலதிக விபரங்கள் https://www.legislation.gov.uk/uksi/2024/120/schedule/1/made https://www.legislation.gov.uk/uksi/2024/120/schedule/2/made
    • ஹா ஹா அதெல்லாம் அந்த‌க் கால‌ம் இப்ப‌ கூட‌ இவ‌ரின் பெய‌ரை சொன்னால் சில‌ இட‌ங்க‌ள் அதிரும் லொல்🙏🥰.................................. ஓ மோம் உந்த‌ பெரிசுக்கு குசும்பு அதிக‌ம் தான்.........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.