Jump to content

இலங்கை அணி 96 ஓட்டங்களால் தோல்வி


Recommended Posts

சங்ககாரா 192 ஓட்டங்களைப் பெற்றபோதும் இலங்கை அணி 96 ஓட்டங்களால் தோல்வி

[21 - November - 2007] [Font Size - A - A - A]

* தொடரைக் கைப்பற்றியது அவுஸ்திரேலியா

இலங்கை - அவுஸ்திரேலிய அணிகளிடையே ஹோபேற்றில் நடைபெற்ற 2 ஆவது டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்றதன் மூலம் 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரை அவுஸ்திரேலியா 2-0 என கைப்பற்றியுள்ளது.

பிறிஸ்பேனில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி இனிங்ஸாலும் 40 ஓட்டங்களாலும் வெற்றிபெற்றது.

2 ஆவது டெஸ்டின் 4 ஆம் நாள் ஆட்டநேர முடிவில் தனது 2 ஆவது இனிங்ஸில் 3 விக்கெட் இழப்புக்கு 247 ஓட்டங்களைப் பெற்றிருந்த இலங்கை அணிக்கு 5 ஆம் நாள் ஆரம்பமே மோசமாக அமைந்தது.

4 ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 33 ஓட்டங்களுடன் ஆடிக்கொண்டிருந்த சனத் ஜெயசூரியா மேலும் 12 ஓட்டங்களைப் பெற்ற நிலையில், பிரட்லீயின் பந்து வீச்சில் விக்கெட் காப்பாளர் கில்கிறிஸ்ரிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

நான்காவது விக்கெட் வீழ்ந்த போது அணி 265 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. நான்காவது விக்கெட் ஜோடியாக ஜெயசூரியாவும் குமார் சங்ககாராவும் 107 ஓட்டங்களைப் பெற்றனர்.

ஜெயசூரியா ஆட்டமிழந்ததையடுத்து இலங்கை அணியின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரியத் தொடங்கின.

சாமரசில்வாவும் பிரசன்ன ஜெயவர்தனவும் அணியின் ஓட்ட எண்ணிக்கை 272 ஆக இருந்தபோது ஜோன்சனின் பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இந்த நிலையில், மஹ்ரூப் 4 ஓட்டங்களுடனும் டில்ஹாரா பெர்னாண்டோ 2 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்க, இலங்கை அணி எட்டு விக்கெட் இழப்புக்கு 290 ஓட்டங்களென்ற மோசமான நிலைக்குச் சென்றது.

5 ஆம் நாள் ஆட்டம் தொடங்கி 43 ஓட்டங்களைப் பெறுவதற்கிடையில் இலங்கை அணி ஐந்து விக்கெட்டுகளை இழந்து தோல்வி நிச்சயமென்ற நிலைக்குத் தள்ளப்பட்டது.

எனினும், முதல் நாள் ஆட்டநேர முடிவில் 109 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்த குமார் சங்ககாரா முடிந்தவரை ஒரு பக்கம் விக்கெட் வீழ்ச்சியைத் தடுத்து நிறுத்த முயன்றவாறு தனது ஓட்ட எண்ணிக்கையையும் அதிகரித்தார்.

ஒன்பதாவது விக்கெட்டுக்கு இவருடன் ஜோடி சேர்ந்த லசித்த மலிங்க அதிரடியாக ஆடி ஓட்டங்களைக் குவித்தார்.

9 ஆவது விக்கெட் ஜோடியாக இவ்விருவரும் 74 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளையில், மிகச் சிறப்பாகவும் தனிமனிதராகவும் போராடிக் கொண்டிருந்த சங்ககாரா, 192 ஓட்டங்களில் கிளார்க்கின் பந்துவீச்சில் பொண்டிங்கிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

இவர் 282 பந்துகளைச் சந்தித்து 27 பவுண்டரிகள் , ஒரு சிக்சருடன் 192 ஓட்டங்களைப் பெற்று அவுஸ்திரேலிய அணிக்கு பெரும் அச்சுறுத்தலாகவிருந்தார்.

இவரது விக்கெட், அணி 364 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளையில் வீழ்ந்தது.

இதையடுத்துக் களமிறங்கிய முரளிதரன், மலிங்கவுடன் இணைந்து அதிரடியாக ஆடினார். இவ்விருவரும் 10 ஆவது விக்கெட்டுக்கு 46 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் 15 ஓட்டங்களில் முரளிதரன் ஆட்டமிழந்தார். இதன் மூலம் இலங்கை அணி 2 ஆவது இனிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 410 ஓட்டங்களைப் பெற்று 96 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.

மலிங்க 58 பந்துகளில் 5 பவுண்டரிகள் மூன்று சிக்சர்கள் அடித்து 42 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் இரண்டாவது இனிங்ஸிலும் பிரட்லீ 4 விக்கெட்டைக் கைப்பற்றினார். ஜோன்சன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்த டெஸ்டில் பெற்ற வெற்றி2மூலம் அவுஸ்திரேலிய அணி கப்டன் பொண்டிங் தலைமையில் தொடர்ச்சியாக 14 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

ஏற்கனவே, 1999-2001 காலப்பகுதியில் அவுஸ்திரேலிய அணிக் கப்டன் ஸ்ரீவோ தலைமையில் தொடர்ச்சியாக 16 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

thinakural.com

Link to comment
Share on other sites

44034656si2.png

வாழ்த்துகள் அவுஸ்ரெலிய அணிக்கு பொன்டிங்கின் சிறந்த தலைமையில் சிறிலங்கா இனவெறியர்களுக்கு எதிராக ஆடி வெற்றியை சுவிகரித்து கொண்டமைக்கு :o அத்துடன் எமது மண்ணில் முரளிதரன் சாதனையை முறியடிக்காம பண்ணியமைக்கு ஸ்பேசல் வாழ்த்துகளும் நன்றிகளும் உரித்தாகட்டும்!! :lol: மேலும் பல வெற்றிகளை எமது நாட்டிற்கு பெற்று தந்து எமது நாட்டின் புகழை உயர்த்த வாழ்த்துகிறேன்!! :icon_idea:

இங்கனம்,

வரும்கால அவுஸ்ரெலிய பிரதமர்,

ஜெனரல் ஜம்மு பேபி!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.