Jump to content

"சண்டே லீடர்" அச்சகம் அடையாளம் தெரியாத ஆயுதக்குழுவினால் தீவைப்பு


Recommended Posts

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பின் தென்பகுதியில் உள்ள இரத்மலானையில் அமைந்துள்ள "சண்டே லீடர்" மற்றும் "மோர்ணிங் லீடர்" ஆகிய வார ஏடுகளின் அச்சகம் இன்று அதிகாலை அடையாளம் தெரியாத ஆயுதக்குழு ஒன்றினால் எரித்துச் சாம்பராக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து வாசிக்க

Link to comment
Share on other sites

'Sunday Leader' printing house set on fire

(LeN-2007 Nov. 21, 4.20am) unidentified gang set fire to one of the major newspaper printing houses early this morning (21st Nov 2007). Printing press of the Leader Publications, which publish weekly The Sunday Leader, mid weekly Morning Leader and Sinhala Weekly Irudina was completely destroyed by the fire.

The printing house was situated at 24, Katukurunduwatta Road, Rathmalana. The damage estimated at millions of rupees.

Today issue of Morning Leader print run was on, when the gang of 15 forced themselves into the printing house. The gang first forced management and workers to hand over their mobile phones and to kneel down before setting fire to the machines, according to journalists who visited the scene.

Recently the Morning Leader editor has been very critical of Asia Tribune website, which according to the editor working in hand in hand with the break away LTTE militant group now headed by Pilleyan. She filed a civil defamation case against the web site weeks ago and in retaliation website unleashed a series of articles attacking the editor.

The Sunday leader printing press was set on fire earlier occasion on 17th October 2005 in the run up to presidential election. The newspaper and its editor Mr. Lasantha Wikramatunga as well as Morning Leader Editor Sonali Samarasinghe have been harassed and threatened continuously during the last two years. All Leader publications are very critical towards the government and exponents of opposition political views.

http://www.lankaenews.com/English/news.php...e0b28b37f789bf7

Link to comment
Share on other sites

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பின் தென்பகுதியில் உள்ள இரத்மலானையில் அமைந்துள்ள "சண்டே லீடர்" மற்றும் "மோர்ணிங் லீடர்" ஆகிய வார ஏடுகளின் அச்சகம் இன்று அதிகாலை அடையாளம் தெரியாத ஆயுதக்குழு ஒன்றினால் எரித்துச் சாம்பலாக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து வாசிக்க

Link to comment
Share on other sites

சிறிலங்காவின் முன்னணி ஊடக நிறுவனமான லீடர் குழுமத்தின் ("சண்டே லீடர்" மற்றும் "மோர்ணிங் லீடர்" வார ஏடுகள்) அச்சகத்தை தீக்கிரையாக்கியமைக்கு 5 ஊடக அமைப்புக்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.

தொடர்ந்து வாசிக்க

Link to comment
Share on other sites

பத்திரிகை சுதந்திரத்தை பாதுகாப்பதற்கு சிவில் அமைப்புக்கள் கிளர்ந்தெழ வேண்டும் 5 ஊடக அமைப்புக்கள் அறைகூவல்

சண்டே லீடர் பத்திரிகை நிறுவனத்தின் அச்சகம் இனந்தெரியாத ஆயுததாரிகளினால் தாக்கப்பட்டமை கண்டிக்கத்தக்கது. ஊடக சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய அரசாங்கம் தொடர்ந்தும் அதனை தட்டிக்கழித்து வருகின்றது என்று ஐந்து ஊடக அமைப்புக்கள் இணைந்து விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து வாசிக்க

Link to comment
Share on other sites

அரசின் அனுமதியுடனேயே பத்திரிகை நிறுவனம் தீக்கிரை ரணில் குற்றச்சாட்டு

அரசாங்கத்தினதும், பாதுகாப்பு அமைச்சினதும் அனுமதியுடனேயே அதியுயர் பாதுகாப்பு வலயத்திற்குள் புகுந்து சண்டே லீடர் நிறுவனம் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. ஊடக சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கும் இச்சம்பவத்தை ஐ.தே.க. கடுமையாக கண்டிக்கின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Posted on : 2007-11-22

ஊடக சுதந்திரத்துக்குச் சாவுமணி

தென்பகுதி மக்களை குறிப்பாக சிங்கள மக்களை அரசியல் அந்தகாரத்துக்குள் வைத்துக்கொண்டு, யதார்த்தத் தையும் நிதர்சனத்தையும் அவர்களுக்கு மறைத்துக்கொண்டு, தமது திருகுதாள அரசியலைக் கனகச்சிதமாக முன்னெடுக் கும் சிங்கள அரசியல் கட்சிகளின் மனவமைப்பில் மாற்றம் ஏதும் ஏற்படவே போவதில்லை என்பது தெளிவாகி வருகின்றது.

"த லீடர் பப்ளிகேஷன்ஸ்' நிறுவனத்தின் அச்சு இயந்தி ரங்கள் எரிக்கப்பட்ட அராஜகம் இந்தச் செய்தியையே ஆணித் தரமாக உரைத்து நிற்கின்றது.

இலங்கையின் அரசியல் நிலைவரங்களைப் பற்றிய உண்மைகளைத் தென்னிலங்கையில் எடுத்துரைக்க முனை யும் ஊடகவியலாளர்கள் "தேசத் துரோகிகள்' எனப் பச்சை குத்தப்படுகின்றார்கள். அல்லது அந்த ஊடக நிறுவனங் களுக்கு ஊறு விளைவிக்கப்படுகின்றது.

அந்த வகையில் இரண்டாவது தடவையாகக் கொழும் பில் "லீடர் பப்ளிகேஷன்ஸ்' நிறுவனத்தின் பத்திரிகைகளை அச்சிடும் அச்சகப்பிரிவு அராஜக அட்டகாசத்தில் நாசமாக்கப் பட்டிருக்கின்றது.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் சமயத்திலும் தேர்தலுக்கு முதல் மாதத்தில் இந்த நிறுவனத்தின் அச்சகப் பிரிவுக்குத் தீயிடப்பட்டது.

ஆனால் இம்முறை சேதம் அதிகம் எனக் கூறப்படுகின் றது.

இரத்மலானை விமான நிலையத்தை ஒட்டிய உயர் பாது காப்பு வலயத்துக்குள் இந்த அச்சு இயந்திரசாலை அமைந்தி ருக்கின்றது.

அத்தகைய பகுதிக்குள்தான் சுமார் பதினைந்து பேர் முகமூடி அணிந்தபடி, ரி 56 ரக ஆயுதங்களுடன் இரு வாகனங் களில் வந்து, அச்சு இயந்திரங்களை எல்லாம் எரித்து அராஜ கம் புரிந்துவிட்டு, ஆசுவாசமாகத் தப்பிச் சென்றிருக்கின்றார் கள்.

""இந்த அரசின் கீழ் ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் எதிராகப் புரியப்பட்ட மோசமான வன்முறை நட வடிக்கைகள் குறித்து அர்த்தமுள்ள விசாரணைகள் நடை பெறுவதை, குற்றம் புரிந்த படையினருக்கு குற்ற விலக் களிப்பு வழங்கும் வகையில் நாட்டில் விளங்கும் விசேட சிறப்புரிமைக் கலாசாரம் தடுத்து, இடையூறு செய்து வரு கின்றது.'' என்று சுதந்திர ஊடக இயக்கம் உண்மையை விளம்பியிருக்கின்றது.

ஊடக நிறுவனங்களுக்குள் புகுந்து தாக்குதல்கள் நடத் தப்படுகின்றன. ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப் படுகின்றார்கள்; கடத்தப்பட்டுக் காணாமற்போகின்றார்கள். ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்படுகின்றனர்; தாக்கப்படு கின்றனர். அவர்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்புகள் விலக் கப்பட்டு அவர்கள் கையறு நிலையில் அந்தரிக்க விடப்படு கின்றனர். ஊடக நிறுவனங்களுக்கு எதிராகப் பழிவாங்கும் அரச நிர்வாக நடவடிக்கைகள் திட்டமிட்டு முன்னெடுக்கப் படுகின்றன.

ஆனால் இந்தக் குற்றங்களுக்காக அட்டூழியங்களுக் காக யாரும் தண்டிக்கப்படுவதில்லை. யாரும் கைது செய் யப்படுவதில்லை. இத்தகைய கொடூரங்களில் சம்பந்தப் பட்ட எவருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப் படுவதில்லை.

அநாமதேயங்கள் புரியும் செயலாகக் காட்டிக்கொண்டு ஊடக சுதந்திரத்தையே குழிதோண்டிப் புதைக்கும் மிகவும் ஆபத்தான மோசமான கலாசாரம் ஒன்று இலங்கையைப் பற்றிப் பீடித்து நிற்கின்றது.

அண்மைக்காலத்தில் பன்னிரண்டு ஊடகப் பணியாளர் கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள

Link to comment
Share on other sites

இவ்வளவு காலமும் ஊடக சுதந்திரம் கொடிகட்டிப் பறந்தது

போல இருக்கு.

தலைவலியும் காச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும். :lol:

Link to comment
Share on other sites

"சண்டே லீடர்" குழும அச்சகம் தீக்கிரையாக்கப்பட்டமைக்கு சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கண்டனம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

Link to comment
Share on other sites

பயங்கரவாத இயக்கத்தைப் போல செயற்படும் ஆட்சியின் வேலை இது! "த சண்டே லீடர்' ஆசிரியர் லஸந்த சீற்றம்[/b

"பயங்கரவாத இயக்கம் போல முன்னெடுக்கப்படும் ஓர் ஆட்சியினால் உயர் பாதுகாப்பு வலயப் பிரதேசத்துக்குள் மேற் கொள்ளப்பட்ட கோழைத்தனமான தாக்கு தல் இது!''

இப்படித் தமது பத்திரிகை நிறுவன அச்சகசாலை மீதான தீவைப்புத் தாக்குதலைக் கண்டித்திருக்கின்றார் "த சண்டே லீடர்' பத்திரிகையின் ஆசிரியர் லஸந்த விக்கிரமதுங்க.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நிர்வாகத்தை இப்பத்திரிகை கடுமையாகச் சாடி வந்தது என்பது தெரிந்ததே. தமது பத்திரிகையின் அச்சகசாலை மீதான இந்தக் கொடூரத்துக்கு அரசின் மீதே லஸந்த குற்றம் சுமத்தியிருக்கின்றார்.

"ஆள்களைக் களவாகப் பிறநாடுகளுக் குக் கடத்தும் ஓர் அரசிடமிருந்து இதற்கு மேல் நீங்கள் எதை எதிர்பார்க்க முடியும்? ஆனாலும் நாம் நின்று எமது கடமையைத் தாக் குப் பிடித்துச் செய்வோம்'' என்றார் அவர். கருணா பிரிட்டனுக்கு களவாக அனுப்பப் பட்டதையே அவர் இப்படிக் கூறினார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

அரச தரப்பின் நிலைப்பாடு

இது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம். இது பற்றி முழுமையாக விசாரிக்கும்படி ஜனாதிபதி எனக்கு உத்தரவிட்டுள்ளார். இலங்கையில் பல்வேறு குழுக்கள் செயற்பட்டு வருகின்றன. அவர்களில் யாரா வது இதைச் செய்திருக்கலாம். இதற்குப் பின்னால் பல்வேறு சதிகள் இருக்கலாம். தற்போதைய நிலையில் அரசுக்குக் கெட்ட பெயரை ஏற்படுத்த சிலர் விரும்புகிறார்கள் இவ்வாறு தெரிவித்தார் அமைச்சரவை அந்தஸ்தற்ற ஊடகத்துறை அமைச்சர் லசஷ் மன் யாப்பா அபேவர்த்தன.

நன்றி உதயன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.