Jump to content

வியாழ மாற்றம் - (16.11.2007)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நாளை வியாழ மாற்றம்

[15 - November - 2007] [Font Size - A - A - A]

- பிரம்மஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபுசர்மா-

சர்வஜித் வருடம் ஐப்பசி மாதம் 29 ஆம் திகதி (16.11.2007) வெள்ளிக்கிழமை அதிகாலை 5.30 அளவில் இதுவரை குருபகவான் இருந்து வந்த பகை வீடான விருச்சிக ராசி (கேட்டை 4 ஆம் பாதத்திலிருந்து) தனது ஆட்சி வீடான தனுசு ராசிக்கு (மூலம் - 1 ஆம் பாதம்) பெயர்ச்சியாகிறார். மேடம், மிதுனம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகிய 5 ராசிக்காரர்களுக்கு மிக மிக நல்ல பலன்களாகவும் கன்னி மீனம் ஆகிய இரண்டு இராசிகாரர்களுக்கும் மத்திம பலன்களாகவும், இடபம், கடகம், துலாம், தனுசு, மகரம் போன்ற இராசிகாரர்களுக்கு பலன்கள் பெருமளவு நன்மையானதாக அமையவில்லை. இவர்களுக்கு 08.05.2008 முதல் 04.09.2008 வரையிலான குரு வக்ர காலப் பகுதியில் நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்.

குருபகவான் தனது ஸ்தான பலனை விட 5 ஆம் பார்வையாக மேடராசியினையும் 7 ஆம் பார்வையாக மிதுனராசியினையும் 9 ஆம் பார்வையாக சிங்கராசியினையும் பார்ப்பது "குரு பார்க்க கோடி நன்மை" என்பது மிகவும் விசேடமானதும் மிகவும் நல்ல பலன்களை இவ்விராசிக் காரர்கள் ஏனைய ராசியினரைவிட கூடுதலாக எதிர்பார்க்கலாம்.

மேடம் : (அஸ்வினி, பரணி, கார்த்திகை1)

செவ்வாய் கிரகம் உங்கள் இராசிக்கு ஆட்சி. எனவே துணிச்சல் குணம் உடையவர்கள். முன்கோப குணம் உடையவர்கள். குருபகவான் உங்களது 9 ஆம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் வருகின்றார். அத்துடன் தனுசு இராசியிலிருந்து குருபகவான் 5 ஆம் பார்வையாக உங்கள் ஜென்மராசி (மேட ராசி)யினையும் பார்க்கின்றார். குருபார்க்க கோடி நன்மையுண்டாகும்.

தேக ஆரோக்கியம் மேம்படும். பொன், பொருள், வண்டி, வீடு என்பன வந்து சேரும். திருமண பாக்கியம் கைகூடும். தொழிலில் முன்னேற்றம் உண்டு. உத்தியோகஸ்தர் உயர்வு அடைவர். மாணவர்களின் கல்வி மேம்படும். அரசியல் வாதிகளுக்கு நன்மையான காலம். விவசாயிகளுக்கு இலாபமாக அமையும் காலம். 5 இல் சனி சஞ்சரிப்பதால் பெருமளவு பாதிப்பு இல்லை. சனிவிரதம் நன்று. 08.05.2008 முதல் 04.09.2008 வரை குரு வக்கர கதியில் சஞ்சாரம் செய்வது அவ்வளவு சிறப்பான காலம் அல்ல. சிவப்பு நிறம் நன்மை தரும், பவளம் அணிவது எப்போதும் நன்மை.

இடபம் : கார்த்திகை 2,3,4, ரோகிணி, மிருகசீரிடம் 1,2

வேடிக்கையாக பேசும் குணம் உடையவர்களே. 8 இல் வியாழன் வருவதும் 4 இல் சனிபகவான் பகை வீட்டில் இருப்பதும் 2008 ஆம் ஆண்டு மொத்தத்தில் வில்லங்கம் தான். "ஆகட்டும் பார்க்கலாம்" எனும் நிலை உகந்தது. 08.05.2008 முதல் 04.09.2008 வரையான குரு வக்ர கதி நிலை ஓரளவு பரவாயில்லாத காலம். புதிய கூட்டு முயற்சிகள், புதிய தொழில், புதிய நண்பர்கள் போன்றவற்றில் முன் ஜாக்கிரத்தையுடன் நடந்து கொள்ளுங்கள். மருத்துவ செலவு கூடும். குடும்பத்தில் பிரச்சினைகள் தோன்றலாம். உத்தியோகஸ்தர்களும் வீண் சச்சரவில் அகப்படலாம். கல்வி நாட்டம் குறையும். `குடத்து விளக்கு' வாழ்வாகவே பிரமுகர்களுக்கு இக்காலம் அமையும்.

சனி பகவான் 4 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் ஆஞ்சநேய வழிபாடும், வியாழன் 8 இல் வருவதால் தர்ஷணாமூர்த்தி வழிபாடு நன்மை தரும். பட்டு வெண்ணிறம் நன்று. வைரம் அணிவது மிகவும் சிறப்பு.

மிதுனம் : மிருகசீரிடம் 3, 4, திருவாதிரை, புனர்பூசம் 1 ஆம், 2 ஆம், 3 ஆம் பாதம்

7-1/2 சனியின் பிடியிலிருந்து தற்போது விடுபட்டுள்ள நீங்கள், இந்த குரு மாற்றம் உங்கள் ராசிக்கு 7 ஆம் வீட்டில் வருவதால் யோகத்திற்கு மேல் யோகம் தான். உயர்வு வரும் போது பணிவு கொள்வது பெருமை. ஆரோக்கியம் மேம்படும். பணவரவு குறைவிருக்காது. மங்கள கரமான காரியங்கள் வீட்டில் நிகழும். மாணவர்களின் கல்வி நிலை மேம்படும். உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வு ஏற்படும்.

08.05.2008 முதல் 04.09.2008 வரையிலான குரு வக்ர நிலை அடைவதால் சற்று சங்கடமாக சில காரியங்கள் அமையலாம். இக்காலத்தில் தட்ஷணாமூர்த்தி வழிபாடு செய்து கொள்வது நல்லது.

பச்சை நிறம் நன்று, மரகத பச்சை கல் உங்களுக்கு அதிர்ஷ்டம் தரும்.

கடகம்: புனர்பூசம் 4 ஆம் பாதம், பூசம், ஆயிலியம்,

கற்பனை வளம் கூடியவர்களே, குருபகவான் அதிர்ஷ்டத்தை அள்ளித்தந்தவர் இப்போது உடல் ஆரோக்கியத்தை பாதிக்க கூடிய 6 ஆம் இடத்திற்கு குருபகவான் வருவது கடகராசிகாரர்களுக்கு இம்மாற்றம் நல்லதல்ல. மேலும் குருபகவான் 08.05.2008 முதல் 04.09.2008 வரையிலான வக்ரகதி அடைவது பொதுவாக உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தமாட்டார். வீண் அலைச்சல் இருக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். மற்றவர்களை நம்பி ஏமாந்துவிடாதீர்கள். திருமண முயற்சிகள் தாமதமாகும். செய்யும் தொழிலில் போட்டி ஏற்படும். உத்தியோகத்தர்களுக்கு பிரச்சினைகள் இருக்கும், கல்வியில் மாணவர்களுக்கு நாட்டம் குறையும்.

08.05.2008 முதல் 04.09.2008 வரையிலான குரு வக்ர காலம் ஓரளவு சாதகமாக உங்களுக்கு அமையும். 7-1/2 சனியின் கடைசி காலம் நிகழ்வதால் பாதிப்புகள் நிச்சயம் இருக்காது. நன்மையான காரியங்களுக்காக சுப செலவுகள் ஏற்படும்.

ஆஞ்சநேய வழிபாடு, தட்ஷணாமூர்த்தி வழிபாடு செய்து கஷ்டங்களில் இருந்து விடுபட்டு கொள்ள உதவும். வெண்ணிறம் நன்மை. முத்து அணிந்து கொள்வது மிகவும் நல்லது.

சிங்கம் : மகம், பூரம், உத்தரம் 1

வீரமும், சாதிக்கும் குணம் உடையவர் நீங்கள். 7-1/2 சனியின் நடுக்கூரில் அகப்பட்டு கொண்டுள்ளீர்கள். அதாவது ஜென்மசனி. இது சிரமமான காலம் தான். ஆனால் குருமாற்றம் 5 ஆம் இடத்திற்கு வருவது மிகமிக சிறப்பு. புத்திரரால் சந்தோஷம் ஏற்படும். 2008 ஆம் ஆண்டு முழுவதும் ஜன்ம சனியின் கொடூரம் குருபகவானின் மாற்றம் மூலம் குறையும்.

2009 ஆம் ஆண்டு சிரமமான ஆண்டு தான். உங்களுக்கு உடல் ஆரோக்கியம் மேம்படும். வியாபார சிக்கல்கள் குறையும். திருமணம் கைகூடலாம். குழந்தை பாக்கியம் ஏற்படும். பதவி உயர்வு ஏற்படலாம். கல்வி முன்னேற்றம் ஏற்படும். சமூகத்தில் கௌரவம் அதிகரிக்கும்.

08.05.2008 முதல் 04.09.2008 வரையிலான குரு வக்ரகதி நிலை சிறப்பு அல்ல. இக் காலப்பகுதியில் அமைதி காத்து நடவுங்கள். தட்ஷணாமூர்த்தி, ஆஞ்சநேய வழிபாடு செய்யுங்கள். சனி விரதமும் நன்று. சிவப்பு நிறம் நன்மை தரும். மாணிக்கம் அணிந்து கொள்ளுங்கள் மிகவும் நல்லது.

கன்னி: உத்தரம் 2, 3, 4, அத்தம் , சித்திரை 1, 2

எதிலும் தூய்மையான தூயமனதுடன் எதிர்பார்க்கும் கன்னி ராசிக்காரர்களே!

7 1/2 சனியின் ஆரம்பகாலப் பிடியில் உள்ளீர்கள். செலவுகள் கட்டுக் கடங்காமல் இருக்கும். குருபகவான் 4 ஆம் இடத்திலிருந்து திடீர் யோகத்தினையும் தரலாம்.

பொருளாதார நிலைமை சற்று ஏற்றமும், இறக்கமும் தான். திருமண காரியங்கள் கை கூடுவது சிரமம். குடும்ப உறவும் சச்சரவுமிக்கதாக இருக்கும். தொழில் போட்டி கடுமையாக இருக்கும். உத்தியோகத்தர்களுக்கு சக அதிகாரிகளால் தொல்லை இருக்கும். கல்வி முன்னேற்றத்தில் பாதிக்கப்படலாம். புதிய முயற்சிகளை தள்ளி வையுங்கள். பொதுவாழ்வில் உள்ளோர் வீண்பழி கேட்க நேரிடலாம். 8/5/08 முதல் 4/9/08 வரையிலான காலப்பகுதியில் குரு வக்ரம் அடைவது ஓரளவு நன்மையே.

7 1/2 சனி காரணமாக சனி விரதம், விஷ்ணு ஆஞ்சநேய வழிபாடு நல்லது. தட்சணாமூர்த்தி வழிபாடு செய்வது நன்மை.

துலாம்: சித்திரை 3, 4, சுவாதி, விசாகம் 1, 2, 3

கலையார்வமும், சுறுசுறுப்பும் கொண்டவர்கள் நீங்கள். உங்களது ராசிக்கு குரு பகவான் 3 ஆம் இடத்துக்கு வருவது அவ்வளவு சிறப்பானது அல்ல. மேலும் சனி பகவான் 11 ஆம் இடத்தில் சிறப்பு பலன்களைத் தந்து கொண்டு தான் இருப்பார். சிலவேளை கைக்கெட்டியது வாய்க்கு எட்டாமல் போகலாம்.

உடல் ஆரோக்கியம் பெரிதாகப் பாதிப்பதற்கான பலன்கள் இல்லை. துணைபோனாலும் பிணைபோகாதீர்கள் . திருமண பலன்கள் இடைஞ்சல்பட்டே நிறைவேறும். தொழில்துறைகளில் கண்ணும், கருத்தும் இருந்தால் தான் முன்னேற்றத்தை காணமுடியும். மாற்றத்துடன் கூடிய பதவி உயர்வான உத்தியோகம் கிடைக்கலாம். ஊக்கமது கைவிடேல் என்ற மனவுறுதி மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தை அடைய முடியும். குறைகூறுவதை தவிர்த்து விடுங்கள். 8.5.2008 முதல் 4.9.2008 வரை குருபகவான் வக்ர கதி நிலை பரவாயில்லாத காலம்.

வியாழக்கிழமைகளில் தட்சணாமூர்த்திக்கு மஞ்சள் பூமாலை அணிவித்து வழிபாடு செய்து கொள்ளுங்கள்.

விருச்சிகம் : விசாகம் 4, அனுசம், கேட்ைட

தீவிர குணம் உடையவர்கள் நீங்கள். குருபகவான் குடும்ப ஸ்தானமான 2 ஆம் இடத்தில் சந்திப்பு மகிழ்ச்சிகரமான குடும்ப வாழ்க்கையும் , செல்வந்தமும், செல்வாக்கும் உயரும்.ஆனால், 10 ஆம் இடத்தில் உள்ள சனி பகவானினால் வீண் பழி அல்லது வீண் பெயர் கேட்க நேரிடலாம்.

தேக ஆரோக்கியம் மேம்படும் . வாகனம், வீடு, சொத்து என்பன புதிதாக சேரும். திருமண பந்தம் ஏற்படலாம். குழந்தைப் பாக்கியம் ஏற்படலாம்.

சொந்தத் தொழில் புரிவோர் , அரச ஊழியர்கள் நல்ல முன்னேற்றத்தை அடைவார்கள். மாணவர்களின் கற்கை நெறிகளில் நல்ல முன்னேற்றத்தையும் காணலாம். 8.5.2008 முதல் 4.9.2008 வரையிலான காலம் குருபகவானின் வக்ரகதி சிறப்பான பலன்களைத் தராது. சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் , மகாவிஷ்ணு வழிபாடு, சனிதோறும் விரதம் என்பன நன்று.

தனுசு : மூலம், பூராடம், உத்தராடம் 1

வேலை செய்வதில் சலிப்படையாத குணம் உடையவர்கள் நீங்கள். உங்களது ஜென்மராசியில் அதாவது 1 ஆம் இடத்தில் தனது நட்பு வீடான தனுசு ராசிக்கு வருவது பயமுறுத்தல்களாக இருந்தாலும் பயப்பட வேண்டியதில்லை. சனிபகவானும் 9 ஆம் இடத்தில் இருப்பது எதனையும் சுதாகரித்து சமாளித்துவிடுவீர்கள். இடையிடையே உடல் நலம் சற்று குறையும். வரவுக்கு ஏற்ப செலவுகளும் இருக்கும். இன - சன - உறவு சற்று குழப்பம் தரும் சூழலை அனுசரித்து வியாபாரங்களை, தொழிலை செய்து கொள்ளுங்கள். ஒத்துப்போவது நல்லது. வெளியூர் பிரயாணம் ஏற்படலாம். கல்விமுன்னேற்றத்தில் அக்கறையும், சிரத்தையையும் காட்டுங்கள். மனதை தளரவிடாதீர்கள். அயலவர்களுடன் பழகுவதில் முன் ஜாக்கிரதையுடன் பழகுவது நன்று.

08.05.2008 முதல் 04.09.2008 வரையிலான இரு பகவானின் வக்ர கால பகுதி கொஞ்சம் சிரமங்களை எதிர்பார்க்கலாம். தட்ஷணாமூர்த்தி வழிபாடு செய்து கொள்வது நன்மை தரும்.

மகரம் : உத்தரம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2

பெரியவர்களை மதிக்கும் குணம் கொண்ட ராசிக்காரர்கள் நீங்கள். 8 ஆம் இட சனியும் (அட்டமத்து சனி), 12 ஆம் இட குருபகவானின் வருகையும் சாண் ஏற முழம் சறுக்கும் காலமாக அமையப்போகின்றது. எதிலும் அலட்சிய உணர்வு ஏற்படும். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். நம்ப நட நம்பி நடவாதீர்கள். துணை போனாலும் பிணை போகாதீர்கள். குடும்ப வாழ்விலும் சிக்கல்களை எதிர்நோக்கலாம். பொறுத்துப் போங்கள். தொழிலில் முன் கவனம் நின்று. நல்லவர்களின் ஆலோசனையை கேட்டு புதிய முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். ஊக்கமது கைவிடேல் என்பதற்கு அமைய கல்வித் துறையில் ஈடுபட்டு கொள்ளுங்கள். சமூக துறைகளில் ஈடுபாடு உள்ளோர் அமைதியுடன் செயல்படுங்கள். 08.05.2008 முதல் 04.09.2008 வரையிலான வக்ரகாலப் பகுதி கொஞ்சம் மூச்சுவிடக் கூடிய காலப்பகுதியாக அமையும். தட்ஷணாமூர்த்தி வழிபாடு நன்மை தரும். மஞ்சள் பூமாலை அணிவித்து வழிபட்டுக் கொள்ளுங்கள்.

கும்பம் : அவிட்டம் 4, சதயம், பூரட்டாதி 1,2,3

ஊர் அறியாமல் பெரிய காரியங்களை செய்து முடிக்கும் குணம் உடையவர்கள் நீங்கள். 11 ஆம் இடமான இலாப ஸ்தாபனத்திற்கு வருவது சிறப்பு. மங்களகரமான காரியங்கள் நிறைவேறும். ஆனால் 7 ஆம் வீட்டில் சனிபகவானின் சஞ்சாரம் காரணமாக பிரச்சினைகளை சமாளித்து கொண்டே வாழ்வை கொண்டு செல்ல வேண்டி இருக்கும். உடல் நலம் மேம்படும். வரவும் - செலவும் சமமாக இருக்கும். குழந்தை பாக்கியம் ஏற்படலாம், திருமண உறவு ஏற்படலாம். தொழில் முயற்சிகள் வெற்றியளிக்கும், உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வான நிலை ஏற்படலாம். மாணவர்களின் கல்வி மேம்பாடு அதிகரிக்கும். சமுதாயத்தில் மதிப்பு உயரும்.

08.05.2008 முதல் 04.09.2008 வரையிலான குருபகவானின் வக்ர காலப்பகுதி கொஞ்சம் மனதை தளர்வடையச் செய்யும். 7 ஆம் இட சனி காரணமாக சனிவிரதம் இருங்கள். மாதம் ஒரு முறையாவது தட்ஷணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது சிறப்பு.

மீனம் : புரட்டாதி 4, உத்தரட்டாதி, ரேவதி

அழகாக எல்லாம் இருக்க வேண்டும் என்னும் குணம் உடையவர்கள் நீங்கள். 10 ஆம் இட குருபகவானின் மாற்றம் பதியை விட்டு கிளப்பும் என்னும் வழக்கான கருத்துக்கு மாற்றங்கள் ஏற்பட்டாலும் 6 ஆம் இட சனி பகவானின் நல்ல பலன்கள் காரணமாக உயர்வுடன் கூடிய நல்ல முன்னேற்றங்களை எதிர்பார்க்கலாம். உடல் ஆரோக்கியம் மேம்படும். வெளியூர் பிரயாணம் அலைச்சலையும் தரலாம். பிணை எதிலும் நிற்கவேண்டாம். வீணாக மாட்டிக் கொள்ள வேண்டும். குடும்பசுகம் மேம்படும். மங்கள கரமான காரியங்கள் குடும்பத்தில் நிகழும். அரச உத்தியோகஸ்தர்கள் அனுசரித்து மற்றவர்களுடன் நடப்பது நன்மை தரும். மாணவர்கள் தமது கல்வித்துறையில் சிரத்தையை மேற்கொள்ள வேண்டும். சமூக துறைகளில் உள்ளோர் பொறுமை காத்து கூட்டு ஆலோசனையுடன் நடந்து கொள்ளுங்கள்.

08.05.2008 முதல் 04.09.2008 வரையிலான குரு பகவானின் வக்ரகதி சஞ்சாரம் நல்ல மாற்றங்களை தரும். சிவவழிபாடு, வியாழக்கிழமைகளில் தட்ஷணாமூர்த்தி வழிபாடு செய்வது நல்லது.

http://www.thinakkural.com/news/2007/11/15...s_page40300.htm

Link to comment
Share on other sites

கறுப்பி அக்கா உங்களுக்கு சுவீட்( இனிப்பு) தரவேண்டும் எனக்கு நல்லகாலம் வருகிறதென்று எழுதினத்திற்கு ( வியாழமாற்றத்தை யாழில் போட்டதற்கு)

Link to comment
Share on other sites

கொடுக்க போறிங்களா இல்ல அல்வா கொடுக்க போறிங்களா? சரி சரி எதிலும் தூய்மையுள்ள கன்னி ராசி ஹி ஹி கேக்கவே சந்தோஷமா இல்ல....

7 அரையில சனி பிடிச்சு இருக்குன்னு பாத்தா சுண்டல்க்கு இப்ப வியாழனும் அவ்ளவு நல்லம் இல்ல போல இருக்கே... :lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பி அக்கா உங்களுக்கு சுவீட்( இனிப்பு) தரவேண்டும் எனக்கு நல்லகாலம் வருகிறதென்று எழுதினத்திற்கு ( வியாழமாற்றத்தை யாழில் போட்டதற்கு)

நல்லகாலம் எண்டதால சுவீட் தரபோறீங்க.

இதை வாசித்துட்டு கூடாத காலம் எண்டால் என்ன தரப்போறாங்களோ தெரியல :lol:

Link to comment
Share on other sites

மகர ராசிநேயர்களே கஸ்டகாலந்தான் இனி அஸ்டமத்துச்சனியோட வியாழனும் சேர்ந்து ஆப்பு வைக்கப்போவுது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குருப் பெயர்ச்சி பலன்கள்!

ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்

குரு பகவான் பார்வை பட்டாலே பாவங்கள் சாம்பலாகும். இவரே தேவர்களின் தலைவன், அசுரர்களின் எதிரி. வேத, உபநிடதங்களின் சாரமும் இவர்தான். நிகழும் சர்வஜித்து வருடம், ஐப்பசி மாதம் 30-ஆம் நாள் வெள்ளிக்கிழமை (16.11.2007) அதிகாலை 4.24-மணிக்கு குருபகவான், விருச்சிக ராசியிலிருந்து தனது கோதண்ட வீடான தனுசு ராசிக்குள் ஆட்சி பெற்று அமர்கிறார்.

இந்த கோதண்ட குருவால், உலகெங்கும் பல ஆச்சர்ய மாற்றங்கள் நிகழும். நமது நாட்டில் கிராமங்கள் வளர்ச்சி பெறும். ஆயினும் விவசாயம் புரிவோரின் எண்ணிக்கை குறையும். வெளிநாட்டு முதலீடும் வேலை வாய்ப்புகளும் அதிகரிக்கும். அடித்தள மக்களும் அநேக வசதி, வாய்ப்புகளைப் பெறுவார்கள்.

இந்த குருப் பெயர்ச்சி ஒவ்வொரு ராசியிலும் செய்யும் மாற்றங்களை இனி காண்போம்.

மேஷம்:

புன்சிரிப்பால் அனைவரையும் கவருபவர்களே, நீங்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்யும் மதிநுட்பமும், எப்போதும் பளிச்சென உடுத்தும் குணமும் உடையவர்கள். இதுவரையில் உங்கள் ராசிக்கு எட்டாவது வீட்டில் அமர்ந்து பாடாய்ப் படுத்திய குரு, இப்போது ஒன்பதாம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்கிறார். குருவின் அருட்பார்வையால், இனி நீங்கள் சுறுசுறுப்பு அடைவீர்கள். அரைகுறையாக நின்ற பல வேலைகள் முடியும். மாமியார், நாத்தனாருடன் நிலவி வந்த சச்சரவு போக்கு நீங்கும்! கணவன் - மனைவிக்குள் அன்னியோன்யம் கூடும். மகளுக்கு நல்ல வரன் அமையும். பையனுக்கு வெளிநாட்டில் வேலை பார்க்கும் யோகம் உண்டு.

குரு பகவான் ஐந்தாம் வீட்டைப் பார்ப்பதால், சொந்த ஊரில் செல்வாக்கு கூடும். ரொம்ப நாளாக ஆசைப்பட்ட டிசைனில் துணி, நகை வாங்குவீர்கள். கன்னிப் பெண்களுக்கு ஊரே மெச்சும்படி கல்யாணம் நடக்கும். மாணவர்களுக்கு மறதி, அலட்சியம் விலகும். வியாபாரத்-தில் புது திட்டங்களைப் புகுத்துவீர்கள். ஸ்டேஷனரி, மருந்து, கமிஷன், ஏற்றுமதி, இறக்குமதி வகைகளால் ஆதாயம் அதிகமாகும். உத்தியோகத்தில் உங்கள் திறமை வெளிப்படும். தனியார் நிறுவனம், கணினி துறையில் உள்ளவர்களுக்கு வெளிநாட்டு வாய்ப்புகள் தேடி வரும்.

ரிஷபம்:

எல்லோரிடமும் மனம்விட்டுப் பேசும் நீங்கள், மற்றவர்களின் அந்தரங்க விஷயங்களில் ஒருபோதும் தலையிட மாட்டீர்கள். இதுவரையில் உங்களின் ராசிக்கு ஏழாம் வீட்டில் இருந்து, மகிழ்ச்சியையும் அவ்வப்போது சில சங்கடங்களையும் தந்த குரு பகவான், இப்போது எட்டா-வது வீட்டில் சென்று மறைகிறார். கவலைப்படாதீர்கள். சுக்ரனின் ராசியில் பிறந்த உங்களுக்கு குரு பகவான் நஷ்டத்தைத் தர மாட்டார். நான்காவது வீட்டில் நிற்கும் சனி பகவான் தரும் சங்கடங்களின் வேகத்தையும் இந்த அஷ்டம குரு குறைப்பார்.

குடும்பத்தில் நிலவி வந்த சலசலப்புகள் நீங்கும். புதிய முயற்சிகளுக்கு கணவரின் அனுசரணை கிடைக்கும். வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்க வழி கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். என்றாலும், சேமிக்க முடியாதபடி செலவினங்கள் துரத்தும். திடீர் பயணங்கள் அதிகரிக்கும்.

பிள்ளைகளின் நட்பு வட்டத்தைக் கண்காணி-யுங்கள். அக்கம்-பக்க வீட்டாரிடம் இடைவெளி தேவை. மாணவர்களுக்கு இலக்கியப் போட்டிகளில் பதக்கம், பரிசு கிடைக்கும்.

வழக்குகளில் வெற்றி அடைவீர்கள். ஷேர் லாபம் தரும். தனி நபர் விமர்சனத்தைத் தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்-பீர்-கள். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். கணினி துறையினருக்கு புது வாய்ப்புகள் உண்டு.

மிதுனம்:

இனம், மொழி, நாடு கடந்த நட்பு வட்டத்தில் வலம் வரும் நீங்கள், கற்பனை வானில் சிறகடித்துப் பறப்பவர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் அமர்ந்திருந்த குரு பகவான் இப்போது ஏழாம் வீட்டில் அடி எடுத்து வைக்கிறார். உங்களின் லாப வீட்டையும் ராசியையும் தைரிய வீட்டையும் அவர் பார்வையிடுவதால் நல்ல பலன்களே அமையும். கணவன் & மனைவிக்குள் இருந்த வெறுப்பும் சண்டையும் சுமுகமாகும். குடும்பத்தினருடன் அதிக நேரம் பேசி மகிழ்வீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும்.

பிள்ளைகளின் பிடிவாத குணம் விலகும். மகனுக்கு நல்ல வேலை கிடைப்பதுடன், நல்ல மணப்பெண்ணும் உடனே அமைவார். உடல் எடையை பயிற்சி மூலம் குறைப்பீர்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வெளிச்சம் இல்லாத, அடிக்கடி மின்சாரம் தடைபடும் பகுதியிலிருந்து நல்ல காற்றோட்டமான இடத்துக்கு வீடு மாறுவீர்கள். புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.

வியாபாரத்தில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வேற்று நாட்டவரால் ஆதாயம் உண்டாகும். உத்யோகத்தில் நீண்ட நாளாக எதிர்பார்த்திருந்த பதவி உயர்வு உடனே கிட்டும்.

கடகம்:

எதிரில் உள்ளவர்களையும் எதிரி-களையும் சிந்திக்க வைக்கும் செயல் திறன் உடைய நீங்கள், கண் கலங்கி, கையேந்தி வருபவர்களின் சுமைதாங்கி சுகமளிப்பவர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் அமர்ந்திருந்த குரு பகவான், இப்போது ஆறாவது வீட்டில் அமர்கிறார். அது குரு பகவானின் சொந்த வீடானதால் நல்ல பலன்களையே உண்டாக்குவார். இரண்டாவது வீட்டில் உள்ள சனியையும் கேதுவையும் குரு பார்ப்பதால், சோர்ந்து கிடந்த நீங்கள் சுறுசுறுப்பு அடைவீர்கள்.

கணவன்&மனைவிக்குள் சந்தேகம் விலகும். மாமனார், கொழுந்தனார் வகையில் சின்னச் சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும். மகளின் கல்யாணத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பயணங்களால் கையிருப்பு கரையும்.

சகோதரர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்லுங்கள். விலை உயர்ந்த பொருட்களை கவனமாகக் கையாளுங்கள். கன்னிப் பெண்களுக்கு கனவுத் தொல்லை, தூக்கமின்மை வந்து நீங்கும். தக்க நேரத்தில் வி.ஐ.பி-க்கள் உதவுவார்கள். பழைய வாகனத்தை மாற்றுவீர்கள். வியாபாரத்தில் அதிரடி முதலீடுகள் வேண்டாம். வேலையாட்களிடமும் பங்குதாரர்களிடமும் கறாராக இருங்கள். இரும்பு, ரசாயனம் மற்றும் கமிஷன் வகைகளால் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.

சிம்மம்:

சுதந்திர மனப்பான்மையும் சுய ஒழுக்கமும் உடைய நீங்கள், என்றும் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக வாழ்வீர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் இருந்து பலவகையிலும் பாடாய்ப் படுத்திய குரு பகவான், வாழ்வுக்குத் தேவையான வசதிகளைத் தேடிக் கொடுக்கும் அற்புத வீடான ஐந்தாம் வீட்டுக்குள் அடியெடுத்து வைக்கிறார்.

கணவன் -.மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். குடும்ப வருமானம் உயரும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். அவர்களுக்காக அதிக நேரம் ஒதுக்கி பேசி, சிரிப்பீர்கள். விலையுயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். குழந்தை இல்லாத ஏக்கம் தீரும்.

கன்னிப் பெண்களுக்கு கல்யாணப் பேச்சு-வார்த்தைகள் சுமுகமாக முடியும். தாயின் உடல் நிலை சீராகும். சொந்த ஊரில் வீடு, மனை வாங்குவீர்கள். மாணவர்கள் உயர் கல்வியில் எதிர்பார்த்தபடி நல்ல மதிப்பெண்களுடன் வெற்றி பெறுவார்கள். அயல்நாட்டில் இருக்கும் உறவினர்கள், நண்பர்களால் உதவிகள் கிடைக்கும்.

வியாபாரத்தில் போட்டிகளைத் தவிடுபொடி ஆக்குவீர்கள். பழைய வாடிக்கையாளர் தேடி வருவார். கொடுக்கல் - வாங்கலில் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும். கணினி உதிரி பாகங்கள், ரியல் எஸ்டேட், ஏற்றுமதி - இறக்குமதி வகைகளால் நல்ல லாபம் அடைவீர்கள்.

உத்யோகத்தில் உங்களின் கடின உழைப்பை எல்லோரும் மதிப்பார்கள். பதவி உயரும். உங்களைப் பற்றி தவறாக நினைத்திருந்த சக ஊழியர்கள் இனி வலிய வந்து நட்புறவாடுவார்கள். கணினி துறையில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். கலைஞர்களின் படைப்புகளுக்கு பட்டிதொட்டியெங்கும் பாராட்டு கிடைக்கும். அரசால் கவுரவிக்கப்-படுவீர்கள்.

கன்னி:

அடுக்கடுக்காக தோல்வி வந்தாலும் அஞ்சாத நீங்கள், தன்னம்பிக்கையால் தடைக்கற்களை படிக்கட்டுக்களாக்கி பயணிப்பவர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு மூன்றாவது வீட்டில் அமர்ந்து-கொண்டு, எந்தப் புது முயற்சியில் இறங்கினாலும் தடை செய்து வந்த குரு பகவான், இப்போது வலுவடைந்து நான்காவது வீட்டில் அமர்கிறார்.

உங்கள் ராசிக்கு குருதான் பாதகாதிபதி என்பதால், நீங்கள் கொஞ்சம் எச்சரிக்கையாகத்தான் இருக்க வேண்டும். இருந்தாலும் குரு உங்களின் தன பாக்கியாதிபதியான அக்னி நட்சத்திரத்தில் 16.1.2008 முதல் 30.3.2008 முடிய, மற்றும் 6.7.2008 முதல் 10.11.2008 முடிய உள்ள காலகட்டத்தில் உலா வருவதால் நன்மையே கிட்டும். தன்னம்பிக்கை பிறக்கும். புதிய கோணத்தில் சிந்தித்து புதிய அணுகுமுறையில் சில காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள்.

எதிலும் குடும்பத்தாரின் ஆலோசனையை ஏற்பது நல்லது. பிள்ளைகளின் உடல்நிலையில் கவனம் தேவை. ஏழரைச் சனி ஒருபக்கம் நடந்து கொண்டிருப்பதால் முன்கோபத்தைத் தவிர்க்கப் பாருங்கள். கணவரின் மனநிலையைப் புரிந்து கொண்டு செலவு செய்யப் பாருங்கள். யாருக்-காகவும் ஜாமீன், கேரன்ட்டர் கையெழுத்து போட வேண்டாம். மாமனார், மாமியாரை அனுசரித்துப் போவது நல்லது. விலையுயர்ந்த நகைகளை இரவல் தரவோ, வாங்கவோ வேண்டாம்.

உறவினர்கள், நண்பர்கள் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். மாணவர்கள் கணிதம், அறிவியல் சம்பந்தப்பட்ட பாடங்களில் அதிக கவனம் செலுத்துங்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களைப் பகைத்துக் கொள்ள வேண்டாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் வேலையையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். தனியார் துறைகளில் இருப்பவர்கள் மேலதிகாரியைப் பற்றி விமர்சனம் செய்வது, அலுவலக ரகசியங்களை வெளியில் சொல்வது.. ஆகியவற்றைத் தவிருங்கள்.

துலாம்:

தும்பைப்பூ சிரிப்பும், பலரை வழிநடத்திச் செல்லும் அளவுக்குப் பட்டறிவும் உள்ள நீங்கள், தடைகளைத் தாண்டி எடுத்த காரியங்களை முடிக்கும் திறன் கொண்டவர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் இருந்த குரு, சுமாரான பணப் புழக்கத்தையும், குடும்பத்தில் அமைதியையும் தந்தார். இப்போது மூன்றாவது வீட்டில் நுழைகிறார். புது முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். பேச்சில் முதிர்ச்சி பிறக்கும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். குரு பகவான் ஏழாவது வீட்டைப் பார்ப்பதால் கணவன் & மனைவிக்குள் அன்பும் அன்னியோன்யமும் அதிகரிக்கும்.

மாமியாரின் ஆதரவு இருந்தாலும் நாத்தனார் உரசிப் பார்ப்பார். உங்கள் மகளுக்கு திருமணம் முடியும். குரு உங்கள் ஒன்பதாவது ராசியைப் பார்ப்பதால் வரவேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். மாணவர்கள் உயர் கல்வியில் வெற்றி பெறுவார்கள். வெகுநாட்களாக போக நினைத்த குலதெய்வக் கோயிலுக்குச் சென்று வருவீர்கள். தந்தையோடு இருந்த கருத்து மோதல்கள் நீங்கும். பொது சேவைகள் செய்வீர்கள். உறவினர்கள் உதவி கேட்டு நச்சரிப்பார்கள். அவர்களிடம் நிலைமையை எடுத்து சொல்லி விடுவது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களின் அனுசரணை கிடைக்கும். பழைய பாக்கிகளை சற்றுப் போராடியாவது வசூலித்து விடுவீர்கள். வாடிக்கையாளர்களின் வருகை அதிகரிக்கும்.

உத்யோகத்தில் உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். கணினி துறையினர் உற்சாகத்துடன் காணப்படுவார்கள். கலைத் துறையினர்களுக்கு புது வாய்ப்புகள் தேடிவரும்.

விருச்சிகம்:

கொடுத்துச் சிவந்த கைகளுடைய நீங்கள், எவரிடமும் உதவி கேட்டு கை நீட்ட மாட்டீகள். பேதம் பார்க்காமல் எல்லோரிடமும் சமமாக பழகுவீர்கள்.

இதுவரையில் உங்கள் ராசிக்குள்ளேயே உட்கார்ந்து உங்களை பலவழியிலும் அலைக்-கழித்துக் கொண்டிருந்த குரு பகவான் இப்போது குடும்ப ஸ்தானமான இரண்டாவது ராசிக்கு வருவதால் குடும்பத்தில் மகிழ்ச்சிக்குக் குறைவிருக்-காது. கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். இருவரும் அவரவர் உறவினர்களைப் பற்றிப் பெருமை பேச வேண்டாம்.

உங்கள் ராசிநாதன் எட்டில் மறைவதால் மருத்துவச் செலவுகள், குடும்பத்தில் சலசலப்புகள், பண இழப்புகள் ஏற்படலாம். உங்களின் கோபத்தை பிள்ளைகளிடம் காட்ட வேண்டாம். வெளிநாடு சென்று வருவீர்கள். பால்ய நண்பர்கள் மூலம் திடீர் திருப்பங்கள் ஏற்படும். குலதெய்வக் கோயிலை புதுப்பிக்க முற்படுவீர்கள்.

குரு பகவான் ஆறாவது வீட்டையும், எட்டாவது வீட்டையும் பார்ப்பதால் இழந்த பணத்தைப் பெறுவீர்கள். பிள்ளைகளுக்கு உயர் கல்வியில் வெற்றி உண்டு. சிலர் அயல்நாடு சென்று படிப்பார்கள். தடைப்பட்ட சுப காரியங்கள் நடக்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிடைக்கும்.

கன்னிப் பெண்களுக்கு கல்யாணத் தடைகள் நீங்கும். புதிய வாகனம் வாங்குவீர்கள். மாணவர்கள் ஆர்வமே இல்லாமல் இருந்த கணிதம், அறிவியல் பாடங்களில் இனி ஆர்வம் காட்டுவார்கள்.

வியாபாரத்தில் வராது என்றிருந்த பழைய பாக்கிகளெல்லாம் வந்து சேரும். பல் பொருள் அங்காடி, எலெக்ட்ரிக்கல்ஸ், உணவு வகைகள் லாபம் தரும். உத்யோகத்தில் இழுபறியான பதவி உயர்வு, சம்பள உயர்வு இப்போது தேடி வரும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்பும் பாராட்டும் கிடைப்பதுடன் பண முடிப்பும் உண்டு.

தனுசு:

கலகலப்பாகப் பேசி சிரிப்பதுடன், மற்றவர்களின் இன்ப - துன்பங்களில் பங்கெடுக்கும் நீங்கள், செயற்கரிய செயல்களை செய்தாலும் எளிமையாக இருப்பீர்கள். இதுவரை பன்னிரண்டாம் வீட்டில் அமர்ந்து வீண் செலவுகளையும், அலைக்கழிப்புகளையும் தந்த உங்கள் ராசிநாதனான குரு பகவான், இப்போது ராசிக்குள்ளேயே வந்திருப்பதால் கணவன் & மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். ஆனால், கணவர் வழி உறவினருடன் சின்னச் சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும்.

குரு தனது 5-ம் பார்வையாக பிள்ளைகள் ஸ்தானத்தைப் பார்ப்பதால், இனி பொறுப்பாக நடந்து கொள்வார்கள். மகளுக்கு நல்ல இடத்தில் திருமணம் செய்து வைப்பீர்கள். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பூர்வீகச் சொத்தில் இருந்த வில்லங்கம் விலகும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். புது வீடு கட்ட வங்கிக் கடனுதவி கிடைக்கும். கன்னிப் பெண்களுக்கு கல்யாணப் பேச்சு வார்த்தைகள் முன்னேற்றம் தரும். புது வேலையில் அமர்வார்கள். தடைபட்ட உயர் கல்வியை தொடர்வார்கள்.

25.4.2008 முதல் 17.7.2008 வரை உள்ள காலகட்டத்தில் வீண் அலைச்சல்கள், பொருட்-செலவுகள், உடல் உபாதைகள் வந்து நீங்கும். குரு உங்கள் ராசியில் ஆட்சி பெற்று உட்கார்ந்திருந்தாலும் அவ்வப்போது ஜென்ம குருவுக்கான கவலையையும் காட்டுவார். வெளியுணவுகளைத் தவிர்ப்பது நல்லது.

வியாபாரத்தில் அரசுக்குச் செலுத்த வேண்டிய விற்பனை வரி, வருமான வரியை தாமதிக்காமல் செலுத்துவது நல்லது. உத்யோகத்தில் எல்லாப் பணியையும் நீங்களே சுமந்து செய்யும் இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்படுவீர்கள். ஆனாலும் சம்பள உயர்வு, பதவி உயர்வு பெறுவீர்கள். கணினி துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும்.

மகரம்:

மலர்ந்த முகத்துடன் வந்தாரை உபசரித்து உதவும் குணமும், எந்த ஒரு வேலையை-யும் முழு ஈடுபாட்டுடன் செய்து முடிக்கும் வல்லமையும் கொண்டவர்கள் நீங்கள்.

இதுவரை உங்கள் ராசிக்கு 11-வது வீட்டில் இருந்த குரு பகவான் ஓரளவு மகிழ்ச்சியைக் கொடுத்தார். அர்த்தாஷ்டமச் சனியில் இருந்த பிரச்னையையும் குறைத்தார். இப்போது குரு பகவான் உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் நுழைகிறார். உங்களின் யோகாதிபதி சுக்ரனின் சாரத்தில் குரு அதிக நாட்கள் செல்வதால் தடைபட்ட காரியங்கள் உடனே முடியும்.

கணவன் - மனைவிக்குள் நிலவி வந்த கருத்து மோதல்கள் நீங்கும். வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். ராகு & கேதுவின் சஞ்சாரமும் சனியின் போக்கும் சரியில்லாததால் உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள்.

பிள்ளைகளால் பெருமை உண்டு. உயர் கல்வி தொடரும் பொருட்டு வெளிநாடு அனுப்பி வைப்பீர்கள். குழந்தை இல்லாதவர்களுக்கு வாரிசு கிட்டும். வெளிவட்டாரத்தில் உங்களை எதிர்த்தவர்களெல்லாம் அடங்குவார்கள். போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள்.

குரு பகவான் உங்களின் சுகஸ்தானத்தைப் பார்ப்பதால் மன நிம்மதி பிறக்கும். பழைய கடனை பைசல் செய்வீர்கள். தடைபட்ட கல்யாணம் சிறப்பாக முடியும். தாயாரின் உடல் நிலை சீராகும். புது வாகனம் வாங்குவீர்கள். வெளிநாடுகளுக்கு சென்று வருவீர்கள்.

வியாபாரத்தில் சில முக்கிய வேலைகளை நீங்களே செய்வது நல்லது. கணினி, மூலிகை, உணவு வகைகளால் ஆதாயம் பெறுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் கடின உழைப்பால் பதவி உயர்வு கிடைக்கும். சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் மூக்கை நுழைக்காதீர்கள்.

கும்பம்:

பொதுவுடைமைச் சிந்தனையுள்ள நீங்கள் மற்றவர்களிடம் மனம் நோகாமல் பேசி பழகுவீர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் உட்கார்ந்து கொண்டு கலங்கடித்த குரு பகவான், இப்போது லாப வீட்டான பதினொன்றாம் வீட்டில் நுழைகிறார். இனி உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வரும். கணவன் - மனைவிக்குள் நிலவி வந்த பனிப்போர் மறையும். பிள்ளைகளால் மனநிம்மதி பிறக்கும். மகனுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும்.

பாகப்பிரிவினையில் இருந்த பிரச்னைகள் சுமுகமாக முடியும். விலையுயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டை குரு பார்ப்பதால் மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். வாங்கிய கடனை திருப்பித் தருவீர்கள். உங்கள் ராசிநாதனை குரு பார்ப்பதால் எதிரிகள் அடங்குவார்கள்.

கன்னிப் பெண்களுக்கு சர்ப்ப தோஷங்கள் நீங்கி கல்யாணம் நடக்கும். உறவினர், நண்பர்கள் வீட்டு சுபநிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். ராகு உங்கள் ராசியில் தொடர்வதால் யாருக்கும் வாக்குறுதி தர வேண்டாம். மாணவர்களின் மறதி, மந்தம் நீங்கும். ஆசிரியரின் அன்பை பெறுவீர்கள். கெட்ட நண்பர்களை அறவே ஒதுக்கித் தள்ளுங்கள்.

வியாபாரத்தில் புது முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். வராது என்றிருந்த பாக்கிகள் வசூலாகும். ஹார்டுவேர், துணி வகைகளால் லாபமடைவீர்கள். சட்டத்துக்குப் புறம்பான வகையில் உங்களை சிலர் அழைத்துச் செல்லக் கூடும். ஏமாறாதீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். எதிர்பார்த்த இடத்துக்கே இடமாற்றம் உண்டு. கணினி துறையினருக்கு புது வேலை கிடைக்கும். கலைஞர்களுக்கு பெரிய நிறுவனங்களிடமிருந்து அழைப்பு வரும்.

பரிகாரம்: கும்பகோணத்துக்கு அருகில் உள்ள திருவிடை மருதூரில் அருள்மிகு பெருநல மாமுலை-நாயகி உடனுறை ஸ்ரீ மகாலிங்கேஸ்-வரரையும், ஸ்ரீ மருதப்ப ஈஸ்வரரையும், ஸ்ரீ தட்சணாமூர்த்தியையும், பூசம் நட்சத்திர நாளில் நெய்தீபம் ஏற்றி வணங்குங்கள். எலுமிச்சை சாதம் தானமாகக் கொடுங்கள். எதிர்பாராத பணவரவு உண்டு.

மீனம்:

வெள்ளை மனசுக்காரரான நீங்கள், எந்த நேரத்திலும் உண்மையே பேசி எல்லோரையும் ஆச்சர்யப்படுத்துவீர்கள். இதுவரை உங்கள் ராசிநாதனான குரு பகவான் ஒன்பதாம் வீட்டில் அமர்ந்து நல்லதையே செய்தார். என்றாலும், உங்களின் பாதகாதிபதி புதனின் நட்சத்திரத்தில் சென்று சில சிக்கல்களையும் சந்திக்க வைத்தார். இப்போது அவர் பத்தாவது வீட்டை வந்தடைகிறார். அவர் தன் வீட்டிலே ஆட்சி பெற்று அமர்வதால் உங்களுக்கு யோகப் பலன்களையே தருவார். கணவன் - மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலையறிந்து புரிந்து நடப்பார்கள். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.

புது வீடு மாறுவீர்கள். வாகன வசதி உண்டு. நகை, ஆடை வாங்குவீர்கள். வெளியூர் பயணங்கள் மகிழ்ச்சிகரமாக அமையும். வருங்காலத்துக்காக சேமிக்கத் தொடங்குவீர்-கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வேற்று மதத்தினரால் நன்மையுண்டு. மாணவர்கள் எதிர்பார்த்த பாடப் பிரிவில் உயர் கல்வியைத் தொடர்வீர்கள். அக்கம் பக்கம் வீட்டாருடன் அளவாகப் பழகுங்கள்.

வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் தேவை-யறிந்து செயல்படுவதன் மூலம் லாபம் அதிகரிக்கும். வேலையாட்களை மாற்றுவீர்கள். இரும்பு, வாகனங்கள், ஏற்றுமதி, இறக்குமதி, ஷேர் மார்க்கெட் மூலம் லாபம் அதிகரிக்கும். புது ஒப்பந்தங்கள் தொடர்பாக பத்திரத்தில் கையெழுத்துப் போடும்போது கவனம் தேவை.உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் உதவுவார்கள். மேலதிகாரியுடன் உங்கள் நெருக்கத்தைக் கண்டு சிலர் பொறாமைப்படுவார்கள். கணினி துறையினருக்கு அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனத்தி-லிருந்து நல்ல வேலை கிடைக்கும். இடமாற்றம் உண்டு.

விகடன்.கொம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இடபம் : கார்த்திகை 2,3,4, ரோகிணி, மிருகசீரிடம் 1,2

வேடிக்கையாக பேசும் குணம் உடையவர்களே. 8 இல் வியாழன் வருவதும் 4 இல் சனிபகவான் பகை வீட்டில் இருப்பதும் 2008 ஆம் ஆண்டு மொத்தத்தில் வில்லங்கம் தான். "ஆகட்டும் பார்க்கலாம்" எனும் நிலை உகந்தது. 08.05.2008 முதல் 04.09.2008 வரையான குரு வக்ர கதி நிலை ஓரளவு பரவாயில்லாத காலம். புதிய கூட்டு முயற்சிகள், புதிய தொழில், புதிய நண்பர்கள் போன்றவற்றில் முன் ஜாக்கிரத்தையுடன் நடந்து கொள்ளுங்கள். மருத்துவ செலவு கூடும். குடும்பத்தில் பிரச்சினைகள் தோன்றலாம். உத்தியோகஸ்தர்களும் வீண் சச்சரவில் அகப்படலாம். கல்வி நாட்டம் குறையும். `குடத்து விளக்கு' வாழ்வாகவே பிரமுகர்களுக்கு இக்காலம் அமையும்.

சனி பகவான் 4 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் ஆஞ்சநேய வழிபாடும், வியாழன் 8 இல் வருவதால் தர்ஷணாமூர்த்தி வழிபாடு நன்மை தரும். பட்டு வெண்ணிறம் நன்று. வைரம் அணிவது மிகவும் சிறப்பு.

ரிஷபம்:எல்லோரிடமும் மனம்விட்டுப் பேசும் நீங்கள், மற்றவர்களின் அந்தரங்க விஷயங்களில் ஒருபோதும் தலையிட மாட்டீர்கள். இதுவரையில் உங்களின் ராசிக்கு ஏழாம் வீட்டில் இருந்து, மகிழ்ச்சியையும் அவ்வப்போது சில சங்கடங்களையும் தந்த குரு பகவான், இப்போது எட்டா-வது வீட்டில் சென்று மறைகிறார். கவலைப்படாதீர்கள். சுக்ரனின் ராசியில் பிறந்த உங்களுக்கு குரு பகவான் நஷ்டத்தைத் தர மாட்டார். நான்காவது வீட்டில் நிற்கும் சனி பகவான் தரும் சங்கடங்களின் வேகத்தையும் இந்த அஷ்டம குரு குறைப்பார்.

குடும்பத்தில் நிலவி வந்த சலசலப்புகள் நீங்கும். புதிய முயற்சிகளுக்கு கணவரின் அனுசரணை கிடைக்கும். வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்க வழி கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். என்றாலும், சேமிக்க முடியாதபடி செலவினங்கள் துரத்தும். திடீர் பயணங்கள் அதிகரிக்கும்.

பிள்ளைகளின் நட்பு வட்டத்தைக் கண்காணி-யுங்கள். அக்கம்-பக்க வீட்டாரிடம் இடைவெளி தேவை. மாணவர்களுக்கு இலக்கியப் போட்டிகளில் பதக்கம், பரிசு கிடைக்கும்.

வழக்குகளில் வெற்றி அடைவீர்கள். ஷேர் லாபம் தரும். தனி நபர் விமர்சனத்தைத் தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்-பீர்-கள். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். கணினி துறையினருக்கு புது வாய்ப்புகள் உண்டு.

மனுசன் எதையப்பா நம்புறது? :(

Link to comment
Share on other sites

நன்றி கறுப்பி இணைப்பிற்கு.

:( அட சுண்டல் நீர் கன்னி இராசியா??? அட அட இப்ப புரியுது நீர் ஏன் அடிக்கடி கோவில் குளமென்று ஏன் சுற்றுகின்றீரென்று!!!!!!!! :wub:

Link to comment
Share on other sites

அட நம்மளுக்கு 7 அரை சனி முடிந்து இதுவும் "ஆகா" என்று இருக்கு சுண்டல் அண்ணா எங்கே கறுப்பி அக்கா ரொம்ப நன்றி கறுப்பி அக்கா :( நல்ல மெசெஜ் ஒன்றை சொல்லி இருக்கிறீங்க!! :lol: அது சரி வியாழன் வந்து வியாழகிழமை மாறாம ஏன் வெள்ளிகிழமை மாறுது என்ட டவுட்டை யாராவது தீர்த்துவையுங்கோ!!! :lol:

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி பஞ்-

"வியாழன் மாறினா என்ன சனி மாறினா என்ன ஜம்மு பேபி மாறமாட்டான் :wub: (அட நல்லா இருக்கு இந்த பஞ் அடுத்த என்னுடைய படதிற்கு போடலாம்) :wub:

Link to comment
Share on other sites

சனிபகவான் மாதிரி வியாழபகவானின் சத்தத்தை பதிவு செய்து

போட்டாத்தான் அடங்குவினம்... :wub::(

எங்க நம்ம குறுக்ஸ் அண்ணாத்தை and கலைஞன்.. :wub:

Link to comment
Share on other sites

கலகலப்பாகப் பேசி சிரிப்பதுடன், மற்றவர்களின் இன்ப - துன்பங்களில் பங்கெடுக்கும் நீங்கள், செயற்கரிய செயல்களை செய்தாலும் எளிமையாக இருப்பீர்கள். இதுவரை பன்னிரண்டாம் வீட்டில் அமர்ந்து வீண் செலவுகளையும், அலைக்கழிப்புகளையும் தந்த உங்கள் ராசிநாதனான குரு பகவான், இப்போது ராசிக்குள்ளேயே வந்திருப்பதால் கணவன் & மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும்.

ஏன் தம்பதிகளுக்குதான் ராசி பலன்கள் சொல்லுவார்களாமோ? :(

தனிய இருக்கிற ஆட்களுக்கு யார் மேலை நெருக்கம் வருமாம்? சொன்னால் நெருங்கலாம் இல்லையா? :wub::wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் தம்பதிகளுக்குதான் ராசி பலன்கள் சொல்லுவார்களாமோ? :(

தனிய இருக்கிற ஆட்களுக்கு யார் மேலை நெருக்கம் வருமாம்? சொன்னால் நெருங்கலாம் இல்லையா? :wub::lol:

இஞ்சை தான் சிக்கல்சிதம்பரம்.......இனி நான் இந்தப்பக்கம் தலைவைச்சும் படுக்க மாட்டன்..... :lol::lol::lol::):wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகர ராசிக்குக் கஷ்ட காலம் என்றிருப்பதால் இந்தச் சோதிட சாத்திரங்களை நம்புவதை நான் இன்றுடன் கைவிடுகிறேன். மீண்டும் நல்ல காலம் பிறக்கும் போது நம்பலாம் :(

Link to comment
Share on other sites

இஞ்சை தான் சிக்கல்சிதம்பரம்.......இனி நான் இந்தப்பக்கம் தலைவைச்சும் படுக்க மாட்டன்..... :lol::lol::lol::lol::(

:wub: தலைவைக்க கஸ்டமெனில்

கால்வைச்சு படுங்கோ :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப மகிந்தாவுக்கு என்ன பலன் என்று சொல்லுங்கோ. 17ம் திகதி வரவு செலவுத்திட்ட வாக்களிப்பு நடக்கப்போகிறதில்லே.

எனக்கு ஒரு சந்தேகம். உந்தச் அழிப்பேரலை வரெக்க கடற்கரைக்கு அருகில் இருந்த அனைவரும் இறந்துவிட்டார்களே. அப்படியானால் அவர்கள் எல்லாம் ஒரே ராசியா?.

Link to comment
Share on other sites

நான் ஜோதிடத்தை நம்புவதில்லை ஆனாலும் எனது ராசியில் சொல்லப்பட்டவை அனைத்தும் கடந்த 2 வாரங்களுகுள் நடந்து இருகின்றன.

முக்கியமாக வாகனம் படிப்பு ,புதிய வேலை,முன்கோவம் அதன் விளைவு என்பவை நடந்தே இருகிறது :)

அப்ப மகிந்தாவுக்கு என்ன பலன் என்று சொல்லுங்கோ. 17ம் திகதி வரவு செலவுத்திட்ட வாக்களிப்பு நடக்கப்போகிறதில்லே.

எனக்கு ஒரு சந்தேகம். உந்தச் அழிப்பேரலை வரெக்க கடற்கரைக்கு அருகில் இருந்த அனைவரும் இறந்துவிட்டார்களே. அப்படியானால் அவர்கள் எல்லாம் ஒரே ராசியா?.

அருமையான கேள்வி :unsure::lol:

Link to comment
Share on other sites

வேயிறு தோழி பங்கன் விடமுண்டகண்டன் மிக நல்ல வீணை தடவி

மாசறு திங்கள் கங்கை முடிமேலணிந்து எனுளமே புகுந்த அதனால்

ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பிரண்டுமுடனே

ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்குமிகவே.

Link to comment
Share on other sites

நான் ஜோதிடத்தை நம்புவதில்லை ஆனாலும் எனது ராசியில் சொல்லப்பட்டவை அனைத்தும் கடந்த 2 வாரங்களுகுள் நடந்து இருகின்றன.

முக்கியமாக வாகனம் படிப்பு ,புதிய வேலை,முன்கோவம் அதன் விளைவு என்பவை நடந்தே இருகிறது :unsure:

சர்வஜித் வருடம் ஐப்பசி மாதம் 29 ஆம் திகதி (16.11.2007) வெள்ளிக்கிழமை அதிகாலை 5.30 அளவில் இதுவரை குருபகவான் இருந்து வந்த பகை வீடான விருச்சிக ராசி (கேட்டை 4 ஆம் பாதத்திலிருந்து) தனது ஆட்சி வீடான தனுசு ராசிக்கு (மூலம் - 1 ஆம் பாதம்) பெயர்ச்சியாகிறார்.

ஈழவன் அவர் (வியாழபகவான்) 16ம் திகதி அதாவது நாளைக்குத்தான் வீடு மாறப்போறார்

என்று எழுதியிருக்கினம்...... எப்படி உங்களுக்கு 2 கிழமைக்கு முன்னமே

எல்லாம் நடந்திச்சு? :lol::D

mr.வியாழபகவான் உங்கட சொந்தக்காரரோ? :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துலாம்:

தும்பைப்பூ சிரிப்பும்இ பலரை வழிநடத்திச் செல்லும் அளவுக்குப் பட்டறிவும் உள்ள நீங்கள்இ தடைகளைத் தாண்டி எடுத்த காரியங்களை முடிக்கும் திறன் கொண்டவர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் இருந்த குருஇ சுமாரான பணப் புழக்கத்தையும்இ குடும்பத்தில் அமைதியையும் தந்தார். இப்போது மூன்றாவது வீட்டில் நுழைகிறார். புது முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். பேச்சில் முதிர்ச்சி பிறக்கும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். குரு பகவான் ஏழாவது வீட்டைப் பார்ப்பதால் கணவன் ரூ மனைவிக்குள் அன்பும் அன்னியோன்யமும் அதிகரிக்கும்.

மாமியாரின் ஆதரவு இருந்தாலும் நாத்தனார் உரசிப் பார்ப்பார். உங்கள் மகளுக்கு திருமணம் முடியும். குரு உங்கள் ஒன்பதாவது ராசியைப் பார்ப்பதால் வரவேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். மாணவர்கள் உயர் கல்வியில் வெற்றி பெறுவார்கள். வெகுநாட்களாக போக நினைத்த குலதெய்வக் கோயிலுக்குச் சென்று வருவீர்கள். தந்தையோடு இருந்த கருத்து மோதல்கள் நீங்கும். பொது சேவைகள் செய்வீர்கள். உறவினர்கள் உதவி கேட்டு நச்சரிப்பார்கள். அவர்களிடம் நிலைமையை எடுத்து சொல்லி விடுவது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களின் அனுசரணை கிடைக்கும். பழைய பாக்கிகளை சற்றுப் போராடியாவது வசூலித்து விடுவீர்கள். வாடிக்கையாளர்களின் வருகை அதிகரிக்கும்.

உத்யோகத்தில் உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். கணினி துறையினர் உற்சாகத்துடன் காணப்படுவார்கள். கலைத் துறையினர்களுக்கு புது வாய்ப்புகள் தேடிவரும்.

ராசிபலன் கூறுகிறோம் என பலபேர் இவர்கள் காசில் பிழைப்பைப் பார்க்கிறான் இதுகள் கஸ்டப்பட்டு உழைத்த காசில் பாதியை ஜோதிடகாரனுக்கும் மீதியை கல்லுக்கு மாலையாயும் பாலாயும் ஊற்றினால் எப்படி முன்னேறுவது? இதையும் விதியென்று புலம்ப ஓரு கூட்டம் வரும்...... சேர்ந்துக்கோ!

"கணணிதுறையினர் உற்சாகத்துடன் காணப்படுவர்" இத்துறைணினருக்கு 75ம் ஆண்டுக்கு முன்பு எந்த வியாளமாற்றமும் எந்த மாற்றத்தையும் உண்டு பண்ணவில்லை ஆனாலும் வியாளனும் வெள்ளியும் கூடவே சனியும் மாறி முhறி மாறின......... தன்னைத் தானே நம்பிய மனிதர்கள் சிலர் உலகில் மாற்றத்தை உண்டு பண்ணினர்...................... இதையும் அவர்கள் ஊடாக கடவுள் மாறிறினார் என்று பிதற்றலாம்தான். அறிவை அப்படியே யாரிடமாவது அடகுவைத்துவிட்டு வாழ்வோருக்கு இதுவும் இலகுதான்.

Link to comment
Share on other sites

கன்னிப் பெண்களுக்கு கல்யாணத் தடைகள் நீங்கும். புதிய வாகனம் வாங்குவீர்கள். மாணவர்கள் ஆர்வமே இல்லாமல் இருந்த கணிதம், அறிவியல் பாடங்களில் இனி ஆர்வம் காட்டுவார்கள்

நல்ல காலம் பிறக்கப்போகிறது

Link to comment
Share on other sites

வேயிறு தோழி பங்கன் விடமுண்டகண்டன் மிக நல்ல வீணை தடவி

மாசறு திங்கள் கங்கை முடிமேலணிந்து எனுளமே புகுந்த அதனால்

ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பிரண்டுமுடனே

ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்குமிகவே.

இறைவன் அங்கிள் இந்த சோங்கை எங்கையோ கேட்டிருகிறேன் :) எந்த படத்தில என்று மறந்து போனேன் ஒருக்கா சொல்லுங்கோ!! :unsure:

அப்ப நான் வரட்டா!!

இனம், மொழி, நாடு கடந்த நட்பு வட்டத்தில் வலம் வரும் நீங்கள், கற்பனை வானில் சிறகடித்துப் பறப்பவர்கள்.

அட நேக்கு இப்படி போட்டு இருக்கிறாங்க என்னாலேயே நம்பமுடியவில்லை!! :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குரு பெயர்ச்சி பலன்கள் - 2007

ஜோதிடர் மௌலீஸ்வரன்

குரு பகவானால் அமையும் யோகங்கள்

மேஷ ராசி நேயர்களே!

சர்வஜித் ஆண்டு, கார்த்திகை மாதம், 6ஆம் தேதியன்று (22.11.07) குரு பகவான் திருக்கணிதப் பஞ்சாங்கப்படி விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார்.

உங்களுக்கு அஷ்டம ராசியிலிருந்து நவமம் என்கிற உச்ச திரிகோண ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சி ஆவது சிறப்பு. "ஓடினவனுக்கு ஒன்பதில் குரு' என்ற ஜோதிடச் சொல் வழக்குக்கு ஏற்ப இதனால் பல அதிர்ஷ்ட வாய்ப்புகளை எதிர்பாராத விதமாக நீங்கள் பெறப் போகிறீர்கள்.

"ஒன்பதாம் ராசி பாக்ய ஸ்தானம்' என்கிற வகையில் உங்களின் சிறிய முயற்சிகள்கூட பல மடங்கு வெற்றிகளைக் கொண்டு வந்து சேர்க்கும். உங்கள் எண்ணங்கள் உயர்வாகவும், ஆக்கபூர்வமாகவும் அமையும். உங்களின் நன்னடத்தையினால் உங்களை அனைவரும் பாராட்டுவார்கள். தர்ம சிந்தனை மேலோங்கும்.

ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். குழந்தை இல்லாதவர்கள் மழலைச் செல்வத்தைப் பெறுவார்கள். பாக்ய ஸ்தானத்தில் அமர்ந்துள்ள குரு பகவானின் கனிந்த பார்வை உங்கள் ராசியின் மீது படிவதால் உங்கள் தோற்றப் பொலிவு கூடும். நடையில் மிடுக்கு உண்டாகும்.

எதையும் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் ஆற்றலைப் பெறுவீர்கள். உங்கள் உழைப்பு வீண் போகாது. உடலில் இருந்து வந்த சோர்வு மற்றும் ஆயாசம் மறையும். சுறுசுறுப்பு கூடும். குறிப்பாக இடுப்பு வலியால் அவதிப்பட்டு வந்தவர்கள் நலம் பெறுவர். மேலும் உடல் உபாதைகள் வைத்தியத்திற்குக் கட்டுப்படும்.

குரு பகவானின் நேர் பார்வை உங்களின் 3ஆம் இடமான தைரிய ஸ்தான ராசியின் மீது படிவதால் உங்கள் செயல்களில் வெற்றி உண்டாகும். அதனால் பாராட்டுகளைப் பெறுவீர்கள். உங்களின் மதிப்பு, மரியாதைகள் உயரும். சகோதரர்களுக்கு நன்மைகள் உண்டாகும். அவர்களால் உங்களுக்கும் அனுகூலம் ஏற்படும். உங்களிடையே நிலவி வந்த பிணக்குகளும், மனக்கசப்புகளும் நீங்கும்.

பூர்வ புண்ணிய, புத்திர, பஞ்சம திரிகோணங்கள் குரு பகவானின் கனிந்த பார்வையைப் பெறுகின்றன. இதனால் அங்கு அமர்ந்துள்ள சனி பகவானும், கேது பகவானும் உங்களின் பூர்வ புண்ய பலத்தைப் பெருக்குவார்கள். உங்கள் சிந்தனைகள் மேலோங்கும்.

மனதில் முன்னேறுவதற்கான புதிய வழிமுறைகள் தோன்றும். உங்களின் அறிவுத் திறன் பிரகாசிக்கும். சில நேரங்களில் நீங்கள் தீர்க்கதரிசி என்று பாராட்டப்படும் வகையில் உங்கள் மதி நுட்பம் வெளிப்படும். முன்யோசனையுடன் செயலாற்றுவீர்கள். வேலையாட்களால் நன்மைகள் அதிகரிக்கும். அவர்கள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். மொத்தத்தில் இந்தப் பெயர்ச்சி உங்களின் வாழ்க்கையைப் பலவிதத்திலும் மேம்படுத்திவிடும் என்று கூற முடிகிறது.

உத்யோகஸ்தர்களுக்கு விரும்பிய பணி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு இரண்டும் கிடைக்கும். மேலதிகாரிகள் உங்களின் செயலாற்றும் திறனைக் கண்டு பாராட்டுவார்கள். சில முக்கியப் பொறுப்புகளையும் ஒப்படைப்பார்கள். அதேசமயம் சிலர் அலுவலகங்களில் செய்யாத தவறுகளுக்காக இடை நீக்கம் செய்யப்படுவார்கள்.

ஆனாலும் உண்மை நிலையை ஆதாரங்களுடன் நிரூபித்து, சாதகமான தீர்ப்புகளைப் பெற்று மீண்டும் அதே பணியில் அமர்வார்கள். உங்கள் செயல் திறனும், ஆற்றலும் கூடும். வெளிநாட்டு வேலைகளை எதிர்பார்த்திருப்பவர்கள் அவற்றைப் பெறுவார்கள். சிலருக்கு குறுகிய காலப் பயணமாக வெளிநாடு சென்று வரும் யோகமும் உண்டாகும்.

வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சுமுகமாக முடியும். கூட்டாளிகள் உங்களிடம் நட்போடு பழகுவர். வியாபாரத்தைப் பெருக்க புதிய சந்தைகளையும் நாடிச் செல்வீர்கள். உங்களின் வியாபார யுக்திகள் வெற்றிகரமாக முடியும். சிறிய முதலீடுகளில் பெரிய தன ப்ராப்தியைக் காண்பீர்கள்.

விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும். விளைச்சலை சரியான நேரத்தில் சந்தைகளுக்கு அனுப்பி லாபத்தைப் பெறுவீர்கள். அரசு வழியில் மானியங்கள் கிடைக்கும். அதே சமயம் பூச்சி மருந்துகளுக்காகவும், உரங்களுக்காகவும் சிறிய அளவில் செலவு செய்ய நேரிடும்.

இந்த ராசி அரசியல்வாதிகள் தங்கள் கட்சியின் தொண்டர்களுக்கும், நெருங்கியவர்களுக்கும் மிகப் பெரிய உதவிகளைச் செய்து பாராட்டுகளைப் பெறுவார்கள். இதனால் கௌரவம் உயரும். சமுதாயத்தில் அந்தஸ்து உண்டாகும்.

உங்கள் சிந்தனையில் தெளிவுகள் தென்படும். செயல்கள் வெளிப்படையாக அமையும். இந்த சீரிய போக்கைக் கட்சி மேலிடம் கவனித்துப் பாராட்டும். அதோடு எதிரிகளின் சதியை முன்னதாகப் புரிந்துகொண்டு அவற்றுக்குச் சரியான பதிலடி கொடுப்பீர்கள்.

கலைத்துறையினர் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். புதிய ஒப்பந்தங்களை சிறப்பான முறையில் முடித்துக் கொடுப்பீர்கள். சக கலைஞர்களின் உதவியையும், பாராட்டையும் பெற வாய்ப்புகள் உண்டாகும். இருப்பினும் எதிலும் பொறுப்பும், நிதானமும் தேவை. மற்றபடி ரசிகர்களின் ஆதரவு எதிர்பார்த்ததைவிட சிறப்பாகவே இருக்கும். எனவே புகழைத் தக்க வைத்துக் கொள்வீர்கள்.

பெண்மணிகளைப் பொறுத்தவரை கடமை உணர்வுடன் செயல்பட்டு குடும்பத்தைப் பொறுப்புடன் நடத்திச் செல்வார்கள். திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடப்பதில் இருந்த தடைகள் விலகும். கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். இருப்பினும் குடும்பத்தில் சிறு சிறு பிரச்சினைகள் தோன்றி மன அமைதியைக் குறைக்கும். கர்வத்தை விட்டொழித்து திறந்த மனத்துடன் பழகி வந்தால் உறவினர்களிடமும் மற்றவர்களிடமும் நல்லுறவைத் தக்கவைத்துக் கொள்ளலாம்.

மாணவமணிகளுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்கும். அதோடு விளையாட்டுகளிலும் ஆர்வத்துடன் ஈடுபட்டு சாதனைகள் படைப்பீர்கள். வருங்காலக் கனவுகள் நிறைவேறுவதற்காக உங்களைத் தயார்படுத்திக் கொள்வீர்கள். மற்றபடி மனதை ஒரு நிலைப்படுத்தும் கலையைக் கற்றுக் கொண்டால் மேலும் பலனடையலாம்.

ரிஷப ராசி நேயர்களே!

ரிஷப ராசி நேயர்களுக்கு சப்தமம் என்கிற ஏழாம் ராசியிலிருந்து, அஷ்டமம் என்கிற எட்டாம் ராசிக்கு குரு பகவான் பெயர்ந்து செல்வது சற்று அனுகூலமற்ற அமைப்பு ஆகும். அஷ்டம ஸ்தானத்தில் அமர்ந்த குரு பகவான் உங்கள் ஆத்ம சக்தியைக் குறைக்க முற்படுவார்.

உங்கள் மனதில் குழப்பங்கள் சூழும். பொருளிழப்பும் உண்டாக நேரிடலாம். சிலர் விஷ ஜந்துக்களால் உபாதைக்கு உள்ளாகி அதனால் மனப் பிராந்திக்கு ஆளாவார்கள். உங்களின் பொருட்கள் களவு போதல் போன்ற அனுகூலமற்ற பலன்களைச் சந்திக்க நேரிடும். சிலர் வாகனங்களில் செல்லும்போது விபத்துகள் ஏற்பட்டு உடல் காயங்களையும், தீப்புண்களையும் பெற நேரிடலாம்.

அதேசமயம் இந்தப் பெயர்ச்சி, உங்களுக்கு முழுவதும் அனுகூலமற்ற பலன்களையே தந்துவிடும் என்று பயந்துவிட வேண்டாம். ஏனெனில் குரு பகவான் பூரண சுபக்கிரகம் என்கிற வரிசையில் முதற்கிரகம் என்பதாலும், அவரின் பார்வைகள் முழுச் சுபத் தன்மையை பெற்றுத் தரும் என்பதாலும் நீங்கள் நிச்சயம் ஸ்திரத் தன்மைகளைப் பெற்று விடுவீர்கள்.

குரு பகவானின் பார்வை உங்களின் தனம், வாக்கு மற்றும் குடும்ப ஸ்தானத்தின் மீது படிவதால் உங்கள் நுண்ணிய அறிவு வெளிப்படும். உங்களின் பேச்சுத் திறமைக்கு மதிப்பு அதிகரிக்கும். புதிய யுக்திகளில் பணம் சம்பாதிக்கும் யோகமும் உண்டாகும். கண் கோளாறுகளால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் குணமடைவார்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். உங்கள் மதிப்பு, மரியாதை உயரும்.

குரு பகவானின் அருட் பார்வை உங்கள் ராசிக்கு 4ஆம் ராசியான சுகஸ்தானத்தின் மீது படிவதால் உங்கள் தாயாரின் உடல் நலன் சீர்படும். உற்றார், உறவினர்கள் மாமன் வகையறாக்களில் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கி, சுமுகமான உறவுகள் உண்டாகும். புதிய வீடு, மனைகள் வாங்கும் யோகம் ஏற்படும். சிலர் குடியிருக்கும் வீட்டை விட்டு சற்று கூடுதல் வசதியுள்ள வீடுகளுக்குச் செல்வார்கள். புதிய ஆடை, ஆபரணச் சேர்க்கைகள் ஏற்படும்.

குரு பகவானின் கனிந்த பார்வை உங்களின் விரய ராசியின் மீது படிவதால், அனாவசியச் செலவுகள் குறைந்து சுபச் செலவுகளாக முடியும். தூக்கமின்மையால் அவதிப்பட்டவர்கள் அதிலிருந்து விடுபடுவார்கள்.

ஆன்மீகத்தில் பற்றுள்ளவர்கள் பெரியவர்களைச் சந்தித்து ஆசிகளைப் பெறுவார்கள். உங்களால் முடிந்த அளவிற்கு மற்றவர்களுக்கு உதவி செய்து மகிழ்வீர்கள். தியானம், யோகா போன்றவற்றில் ஈடுபாடு ஏற்பட்டு அதில் சாதனைகளைச் செய்வீர்கள்.

உத்யோகஸ்தர்கள் பயணங்களால் பண வரவைக் காண்பார்கள். பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண முடியாவிட்டாலும் தாற்காலிகத் தீர்வைக் காண்பீர்கள். அதேசமயம் அலுவலகங்களில் வேலைப் பளு சற்று கூடுதலாகவே இருக்கும். ஆனாலும் பதவி உயர்வு கிடைக்கும்.

உங்களிடம் இருந்த அவ நம்பிக்கைகள் அகலும்; மற்றவர்கள் பார்த்து பொறாமைப்படும் அளவிற்கு நடந்து கொள்வீர்கள். அதேசமயம் மேலதிகாரிகளின் கோபத்திற்கும் சிலர் ஆளாக நேரிடலாம். எனவே கொடுத்த பொறுப்புகளைத் தட்டிக் கழிக்காமல் பொறுப்புடனும், நிதானத்துடனும், திட்டமிட்டும் செய்து முடிப்பது நல்லது.

இந்த ராசி வியாபாரிகள் சற்று கூடுதல் எச்சரிக்கையுடன் வியாபாரம் செய்யவும். எதையும் ஒருமுறைக்கு, இருமுறை சிந்தித்துச் செயல்படுத்துங்கள். அனைத்தையும் உங்களின் கட்டுப்பாட்டுக்குள்ளே வைத்துக் கொள்ளவும்.

மற்றவர்களிடம் பண விஷயங்களில் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளவும். கூட்டாளிகளிடம் கலந்து பேசிய பிறகே முக்கிய முடிவுகளை எடுக்கவும். வாடிக்கையாளர்களின் வருகை குறைவாக இருப்பதால், செலவுகளைக் குறைக்கும் வழிகளைத் தேடுங்கள். அதோடு தற்போது வியாபாரத்தைச் சீர்திருத்தம் செய்ய நினைக்க வேண்டாம்.

விவசாயிகளுக்கு அலைச்சல்கள் ஏற்படும். இதனால் டென்ஷனுடன் காணப்படுவீர்கள். மேலும் முரட்டுப் பிடிவாதத்தையும், முரணான யோசனைகளையும் தவிர்க்கவும். புதிய குத்தகைகள் எடுக்கும் முயற்சிகள் வேண்டாம். மற்றபடி கடன் தொல்லைகள் உங்களின் கடுமையான முயற்சிகளால் நீங்கும்.

அதே சமயம் விதைகளுக்காகவும், விவசாய இடுபொருட்களுக்காகவும் சற்று கூடுதல் செலவு செய்ய நேரிடும். நிலம், குத்தகை போன்றவை சம்பந்தமாக வழக்குகள் தொடுக்க இது சரியான கால கட்டமல்ல. வருமானத்தைச் சரிக்கட்ட காய்கறிகளையும், பழங்களையும் பயிர் செய்து நலன் பெறவும்.

அரசியல்வாதிகள் திட்டமிட்டுச் செயல்படுவார்கள். உங்களின் எண்ணங்களைச் செயலாக்குவதில் எந்தத் தடையும் ஏற்படாது. மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். மக்களின் பிரச்சினைகளில் கவனம் செலுத்துவீர்கள். அதேநேரம் எவரையும் கெடுக்க நினைத்து ரகசியத் திட்டங்களைத் தீட்ட வேண்டாம்; வீண் விரோதங்களையும் வளர்த்துக் கொள்ள வேண்டாம். சம்பந்தமில்லாத விஷயங்களில் உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்காதீர்கள்.

கலைத்துறையினரின் புகழ் அதிகரிக்கும். எதிர்பார்த்த இடங்களிலிருந்து உதவிகள் கிடைக்கும். உங்களின் முயற்சியும், உழைப்பும் வெற்றியைத் தேடித் தரும். வெகு நாட்களாக மனதை அரித்துக் கொண்டிருந்த ஒரு விஷயத்தில் நல்ல முடிவை எடுப்பீர்கள். உங்களின் நிதானப்போக்கு பெரிய முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும். புதிய வாய்ப்புகள் புகழுடன், வருமானத்தையும் கொண்டு வரும். அதேசமயம் ரசிகர்களால் எதிர்பார்த்த அளவுக்கு நன்மைகள் கிடைக்காது.

பெண்மணிகள் மன நிம்மதியைக் காண்பீர்கள். தர்ம காரியங்களிலும், தெய்வ வழிபாட்டிலும் ஈடுபடுவீர்கள். புதிய சொத்து வாங்குவதற்கான ஆரம்பக் கட்ட வேலைகளைத் தொடங்குவீர்கள். குடும்பத்தினருடன் சந்தோஷமாகப் பொழுதைப் போக்குவீர்கள். கணவருடன் ஒற்றுமையைக் காண்பீர்கள். குடும்பப் பொறுப்புகளை சிறப்பாக நிறைவேற்றுவீர்கள்.

மாணவமணிகளைப் பொறுத்தவரை நினைவாற்றல் அதிகரிக்கும். நல்ல மதிப்பெண்களை அள்ளுவீர்கள். உபரி நேரங்களில் மனதிற்குப் பிடித்த கேளிக்கைகளிலும், விளையாட்டுகளிலும் ஈடுபடுவீர்கள். பெற்றோர்களும், ஆசிரியர்களும் உங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவார்கள். அதேநேரம் புதிய நண்பர்களுடன் ஓர் அளவுக்கு மேல், நட்பு கொள்ள வேண்டாம். ஏனெனில் அவர்களால் சிரமங்கள் உண்டாகும்.

மிதுன ராசி நேயர்களே!

மிதுன ராசிக்காரர்களுக்கு, சப்தமம் என்கிற பலம் பெற்ற சப்தம கேந்திர ஸ்தானத்திற்கு குரு பகவான் பெயர்ச்சி ஆவது சிறப்பு. இந்த ஏழாம் ராசியை "களத்ர ஸ்தானம்' என்றும் கூறுவர்.

அதனால் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண யோகத்தை குரு பகவான் ஏற்படுத்திக் கொடுப்பார். குழந்தை ப்ராப்தத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். நோயினால் பீடிக்கப்பட்டிருந்த வாழ்க்கைத் துணைவர் பாதிப்புகளிலிருந்து விடுபடுவார்.

உங்களிடம் பாராமுகமாக நடந்து கொண்டிருந்த நண்பர்களும், கூட்டாளிகளும் நேசக்கரம் நீட்டுவார்கள். சமூகத்தில் பெயரும், புகழும் உயரும். சிலருக்கு தாயின் வழியில் பூர்வீகச் சொத்துக்கள் வந்து சேரும்.

உடல் பருமனாகிக் கஷ்டப்பட்டவர்கள் தோற்றத்தில் பொலிவும், மிடுக்கும் பெறுவார்கள். பேச்சில் வசீகரம் கூடும். சிறந்த பேச்சாளர் என்ற பெயரை வாங்குவீர்கள். பலர் இந்தக் கால கட்டத்தில் பாராட்டையும், விருதுகளையும் பெறுவார்கள்.

குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு 2ஆம் இடமான தைரிய ஸ்தானத்தின் மீது படிகிறது. இதனால் உங்கள் மனதில் நிலவி வந்த அச்சம், பஞ்சாய்ப் பறந்தோடி விடும். கவலைகள் இல்லாமல் காணப்படுவீர்கள். எப்படிப்பட்ட கடுமையான நிலைமைகளையும் திறம்படச் சமாளீப்பீர்கள். உங்களை எதிர்த்த போட்டியாளர்கள் படு தோல்வி அடைவது திண்ணம்.

நீங்கள் சரியான நேரத்தில் உணவு உட்கொள்ளும் சூழ்நிலை உருவாகும். உங்கள் சகோதர, சகோதரிகள் உங்களிடம் நட்புடன் நடந்து கொள்வார்கள். பணம் பல வழிகளில் வந்து சேரும். அரசாங்கத்தின் மூலம் ஆதாயங்களையும், சலுகைகளையும் பெறுவீர்கள்.

வாகனச் சேர்க்கை உண்டாகும். எந்த சமயத்திலும் உங்களின் சமயோஜித புத்தி வெளிப்படும். திருமணமாகாத மூத்த சகோதர, சகோதரிகளுக்கு திருமண யோகம் உண்டாகும். மொத்தத்தில் இந்தப் பெயர்ச்சி உங்கள் வாழ்வில் பல நன்மைகளையும், அனுகூலங்களையும் உண்டாக்கும்.

உத்யோகஸ்தர்களுக்கு விரும்பிய பணி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு இரண்டுமே கிடைக்கும். மேலதிகாரிகள் உங்களிடம் புதிய பொறுப்புகளை ஒப்படைப்பர். உடலில் இருந்த சோர்வு அகலும். சக ஊழியர்கள், உங்களிடம் பகைமை மறந்து நட்பு பாராட்டுவர். அதேசமயம் புதிய பயிற்சிகளில் கலந்து கொண்டு உங்களின் திறமைகளை வளர்த்துக் கொள்வீர்கள்.

வியாபாரிகள் கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் சிறு சிக்கல்களைச் சந்திப்பார்கள். அதேசமயம் போட்டிகளை சாதுர்யமாகச் சமாளிப்பார்கள். உங்களுக்குத் தலைவலி கொடுத்து வந்த வேலையாட்களும், விற்பனைப் பிரதிநிதிகளும் சற்று அடங்கி நடப்பார்கள்.

வங்கிகளில் இருந்து கடன்கள் உடனடியாகக் கிடைக்கும். தீயோர் சேர்க்கையை அடியோடு ஒழித்து, சுக சௌகரியங்களை அதிகம் எதிர்பார்க்காமல் உழைத்தால் நலம் பெறுவீர்கள்.

விவசாயிகளுக்கு வர வேண்டிய குத்தகைப் பாக்கிகள் கிடைக்கும். பயிர்களுக்கு புழு, பூச்சிகளால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. மாற்றுப் பயிர்களைப் பயிரிட்டு மேலும் லாபத்தை அள்ளலாம். அதேநேரம் புதிய பூமிகளை வாங்கும் எண்ணங்களைக் கைவிடவும். கிணறு வெட்டுதல், ஆழப்படுத்துதல், தூர்வாருதல் போன்ற பாசன வசதி மேம்பாட்டுக்காகச் செலவு செய்ய நேரிடும். மற்றபடி முன்கோபப்படாமல் செயலாற்றவும்.

இந்த ராசி அரசியல்வாதிகளுக்கு கனவுகள் நனவாகும் காலகட்டம் இது. உங்கள் செயல்களுக்கு எந்த நாளும் இல்லாத அளவுக்குப் புது அங்கீகாரம் கிடைக்கும். எதிர்பாராத இடங்களிலிருந்து உதவிகள் தேடிவரும். மன உற்சாகத்துடன் தைரியமாக மேடைகளில் பேசுவீர்கள். வழக்கு விவகாரங்கள் முடிவுக்கு வரும். பதவி அதிகாரங்கள் மேலிடத்தின் ஆசியுடன் கிடைக்கும். கட்சியில் உள்ளவர்கள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். தொண்டர்கள் உங்கள் மனம் கோணாமல் நடந்து கொள்வார்கள். பயணங்கள் வெற்றிகரமாகும்.

கலைத்துறையினருக்கு அனைத்துக் காரியங்களும் சுமுகமாக முடிவடையும். உங்களைத் தேடி, புதிய வாய்ப்புகள் வந்து சேரும். திறமைகளை வெளிப்படுத்த சந்தர்ப்பங்கள் தேடி வரும். பொருளாதார வசதிகள் மேம்படும். புதிய வாகனங்களை வாங்குவீர்கள். ரசிகர்மன்றங்களுக்கு செலவு செய்து மகிழ்வீர்கள். ஆக்கப்பூர்வமான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். உழைப்பைக் கூட்டிக் கொண்டு திறமையாக உழைத்தால் மேலும் பயனடையலாம்.

பெண்மணிகள், குடும்பத்தாரின் நல்லெண்ணங்களுக்குப் பாத்திரமாவார்கள். கடன் தொல்லைகள் அண்டாது. கணவரிடம் நல்லுறவு நிலவும். அதே சமயம் அவரிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்ளுங்கள். மனதில் அனாவசியப் பயங்களைப் போக்க ஆன்மீகத்தில் மனதைச் செலுத்தவும்.

மாணவமணிகளின் பயிற்சியும், முயற்சியும் வெற்றியை நோக்கி இட்டுச் செல்லும். கடினமாக உழைத்து, கணிசமான மதிப்பெண்களைப் பெறுவீர்கள். மற்றபடி பயத்தையும், பதற்றத்தையும் குறைத்துக் கொண்டு படிப்பில் ஈடுபடவும். உடன்பிறந்தோரிடம் தகுந்த உதவிகளை எதிர்பார்க்கலாம். பெற்றோர்களும், ஆசிரியர்களும் உங்களிடம் கனிவாகப் பழகுவார்கள். உற்சாகத்துடன் விளையாட்டுகளில் ஈடுபடுவீர்கள்

கடக ராசி நேயர்களே!

கடக ராசி அன்பர்களுக்கு குரு பகவான் ருணம் (கடன்), ரோகம் (நோய்), சத்ரு (விரோதி) ஸ்தானத்திற்குப் பெயர்ச்சி ஆவது அவ்வளவு சிறப்பல்ல. இது மறைவு ஸ்தானமாகும்.

எனினும் குரு பகவான் உங்கள் ராசிக்கு ஆறாம் ராசிக்கு அதிபதியாகி, ஆறாம் வீட்டிலேயே ஆட்சி பெற்று இருப்பது விபரீத ராஜ யோகத்தை உண்டு பண்ணுகிறது. இதனால் உடல் உபாதைகள் சற்று கட்டுக்குள் இருக்கும். அதே சமயம் பலம் பெற்ற குருபகவானால் வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகளால் நீங்கள் அவதிப்பட நேரிடலாம். உங்கள் விரோதிகளின் பலம் சற்று கூடும்.

அதனால் நேர்முக-மறைமுக எதிர்ப்புகளைச் சமாளிக்க வேண்டிவரும். சிலருக்கு அரசாங்க வகையில் அனுகூலமற்ற பலன்கள் உண்டாகும். தவிர அனாவசியக் கடன்களிலும், வம்புகளிலும் சிக்கிக் கொள்ளவும் நேரிடலாம். எடுத்த காரியங்களைச் சரியாகச் செய்து முடிக்க பகீரதப் பிரயத்தனம் செய்ய வேண்டிவரும். ஒரு சிலருக்கு நேத்ர (கண்) வியாதிகள் உண்டாகி மறையும். அதனால் வெளிச்சம் குறைவான இடத்தில் அமர்ந்து படிப்பதைத் தவிர்க்கவும்.

இந்தக் கால கட்டத்தில் மற்றவர்களிடம் சவால் விடுவதையும், வாய்ச் சவடால் பேசுவதையும் குறைத்துக் கொண்டு "கருமமே கண்ணாக இருந்து' செயல்களை ஆற்றினால் பாதிப்புகளிலிருந்து தப்பிக்கலாம். குரு பகவானின் பார்வை பெறும் தனம், வாக்கு மற்றும் குடும்ப ஸ்தானம் உங்களுக்குப் பொருளாதாரத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். செல்வந்தர் என்கிற அந்தஸ்தைப் பெறுவீர்கள்.

குரு பகவானின் பார்வை அங்கு அமர்ந்துள்ள சனி பகவான் மற்றும் கேது பகவானின் மீதும் விழுவதால் சமயத்திற்குத் தக்கபடி பேசும் திறமையால் உங்கள் காரியங்களை முடித்துக் கொள்வீர்கள். உங்கள் முன்கோபக் குணம் மாறி, பேச்சில் நிதானமும், நயமும் உண்டாகும். உங்கள் செயல்களில் தன்னம்பிக்கை மிகுந்து வெற்றிக்கு வழிவகுக்கும்.

புதிய தொழில் பயிற்சிகளை மேற்கொள்ளுவீர்கள். மற்றவர்கள் புகழ்ந்து பேசும் நிலைமைக்கு உயர்வீர்கள். சரியான நேரத்தில் படுத்து, நித்திரை சுகம் அனுபவிப்பீர்கள். மேலும் மோட்ச ஸ்தானத்தின் மீது குரு பகவானின் பார்வை படுவதால், ஆன்மீகப் பற்றும் அதிகரிக்கும். தியானம், யோகா போன்ற கலைகளில் ஒரு மைல்கல்லை அடைவீர்கள். அலைபாயும் மனது கட்டுக்குள் வரும்.

சமுதாயத்திற்குப் பயன் உண்டாகும் தர்ம கைங்கர்யங்களில் மனதைச் செலுத்துவீர்கள். சிலர் தொலைதூரப் பயணங்களை மேற்கொள்ள நேரிடும். அதேசமயம் உங்களால் அதிகமாகச் சேமிக்க வழியிராது. மொத்தத்தில் இந்தப் பெயர்ச்சி உங்களுக்குச் சற்று அனுகூலமற்றதாகவே அமைகிறது.

உத்யோகஸ்தர்களுக்கு எதிர்ப்புகள் குறைந்து காணப்படும். மேலதிகாரிகளிடமும், சக ஊழியர்களிடமும் இணக்கமான சூழ்நிலைகள் உருவாகும். சிலருக்கு அலுவலக வேலைகளில் எதிர்பாராத, திடீர் திருப்பங்கள் உருவாகும். ஆனால் அவை சாதகமானதாகவே அமையும். அதேசமயம் மேலதிகாரிகளிடம் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். அவசியம் ஏற்பட்டாலொழிய அலுவலக ரீதியான பயணங்களை மேற்கொள்ளாதீர்கள்.

வியாபாரிகளுக்கு பொருளாதாரம் நன்றாக இருக்கும். கொடுக்கல், வாங்கல் சிறப்பாகவே அமையும். புதிய வாகனங்களை வாங்கி, அதில் சரக்குகளை ஏற்றி புதிய சந்தைகளில் விற்க முற்படுவீர்கள். தேவையில்லாத சில அலைச்சல்கள் உண்டானாலும், முடிவு என்னவோ சாதகமாகவே அமையும். கூட்டாளிகள் உங்களின் பொறுப்புகளை சிறிது குறைப்பார்கள். அவர்களுடன் சண்டைச் சச்சரவுகள் ஏற்படாமல் நடந்து கொள்ளவும்.

விவசாயிகளுக்கு மகசூல் அதிகரித்து, லாபம் பெருகும். புதிய கால்நடைகளையும் வாங்கி லாபமடைவீர்கள். எல்லா வகையிலும் உங்களுக்கு நன்மைகள் ஏற்படும் என்பதால், புதிய முயற்சிகளிலும் ஈடுபடலாம். பழைய கடன்களைத் திருப்பி அடைப்பீர்கள். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்களை நடத்தி மகிழ்வீர்கள். பணவிஷயங்களில் உங்களுக்குப் பதிலாக யாரையும் நம்பாமல், நீங்களே தனித்துச் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். பூர்வீகச் சொத்துகளுக்குப் பராமரிப்புச் செலவு கூடும்.

இந்த ராசி அரசியல்வாதிகள் எச்சரிக்கையுடன் இருந்து காரியமாற்றாவிடில் நம்பிக்கை மோசம் போக வாய்ப்புள்ளது. எதிர்காலத்தைப் பற்றிய கற்பனையில் சில தவறுகளை நீங்கள் செய்யலாம். அதனால் மனதைச் சமநிலையில் வைத்துக் கொள்ளவும். அரசாங்க அதிகாரிகளிடம் மனம் திறந்து பேச வேண்டாம். கட்சியில் நல்ல பதவிகள் கிடைத்தாலும் எதிரிகளின் கை ஓங்கியே இருக்கும். மற்றபடி தொண்டர்களிடம் எதிர்பார்த்த பாராட்டு கிடைக்கும்.

கலைத்துறையினர் சுமாரான வாய்ப்புகளையே பெறுவார்கள். ரசிகர்களின் ஆதரவும் எதிர்பார்த்த அளவு இராது. புகழைத் தக்க வைத்துக் கொள்ள உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிவரும். உழைப்பைக் கூட்டிக் கொண்டு, திறமையுடன் உழைக்கவும். அதே சமயம், சக கலைஞர்களுடன் இருந்து வந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். சிலர் தொலைதூரப் பயணங்களை மேற்கொள்வார்கள். புதிய திறமைகளைப் பெறும் காலம் இது.

பெண்மணிகளுக்கு கணவருடனான உறவு சுமாராகவே இருக்கும். அதனால் நிதானத்துடன் செயல்படவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். உணவுப் பழக்கங்களில் கார உணவைத் தவிர்க்கவும். மற்றபடி பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். செலவுகள் கூடும் என்றாலும், வரவுக்குள் கட்டுப்பட்டு இருக்கும். தெய்வ வழிபாட்டினால் ஆன்மீக பலம் கூடும்.

மாணவமணிகள் படிப்பில் கவனம் அதிகம் செலுத்த வேண்டும். இல்லாவிடில், எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெற முடியாமல் போகலாம். பெற்றோர்கள் உங்களுக்குப் பக்கபலமாக இருப்பதால் முயற்சிகளைத் தீவிரப்படுத்தவும். உள்ளரங்கு விளையாட்டில் மட்டுமே ஈடுபடவும். அதே சமயம், நண்பர்கள் உங்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வார்கள்.

சிம்ம ராசி நேயர்களே!

சிம்ம ராசிக்காரர்களுக்கு, இப்பெயர்ச்சியில் தன் ஆட்சி வீட்டில் சஞ்சரிக்கின்ற குரு பகவான் விவேகத்தைப் பெருக்குவார். உங்களின் பேச்சில் நகைச்சுவை வெளிப்படும். உங்களின் செயல்களில் முன்யோசனையுடன் ஈடுபடுவீர்கள்.

குழந்தைப் பிறப்பிற்கு ஏங்கும் தம்பதிகள் இந்தக் கால கட்டத்தில் குரு பகவானின் அருளால் மழலைச் செல்வங்களைப் பெறுவார்கள். குடும்பத்தில் குழந்தைகள், குறிப்பாகப் பெண் குழந்தைகள் செயற்கரிய செயல்களில் ஈடுபட்டு வெற்றி பெறுவர்; பாராட்டுகளையும், பதக்கங்களையும் அள்ளுவர். இதனால் பெற்றோர்களின் மனதில் பெருமையும், பூரிப்பும் உண்டாகும்.

பூர்வ புண்ணிய ஸ்தானத்தை "புத்தி ஸ்தானம்' என்றும் கூறுவர். அதில் அறிவுக்கும், மூளைக்கும் அதிபதியான குரு பகவான் அமர்வது உங்களின் ஞாபக சக்தியைத் தூண்டிவிடும். எவரையும் குறை சொல்லாமல் உங்கள் செயல்களை கர்ம சிரத்தையுடன் செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். மேலும் உங்கள் காரியங்களில் சுயநலமிராது.

பாட்டனார் வழி சொத்துக்கள் வந்து சேரும். அவற்றில் இருந்து வந்த தடைகள், வில்லங்கங்கள் அகலும். தர்ம காரியங்களைச் செய்ய முனைவீர்கள். குரு பகவானின் பார்வை உங்கள் ராசியின் மீது படுவதால் உங்கள் உடலில் ஜீவ சக்தி ஏறியதுபோல் உணர்வீர்கள். நல்லது, கெட்டதைப் பகுத்தறியும் ஆற்றலையும் பெறுவீர்கள்.

மனதில் சதாகாலமும் தூய சிந்தனைகள், எண்ணங்கள் உண்டாகியபடியே இருக்கும். உங்கள் செயல்களை நிதானத்துடனும், கவனத்துடனும் அதேசமயம் சுறுசுறுப்புடனும் செய்வீர்கள். அதேநேரம் சில நேரங்களில் முன் கோபத்திற்கும் ஆளாவீர்கள். ஏனெனில் உங்களின் நல்ல எண்ணங்களை அடுத்தவர்கள் சரியான நோக்கத்தில் புரிந்து கொள்ள மாட்டார்கள்.

மற்றபடி குருபகவானின் அருட்பார்வை உங்களின் பாக்ய ஸ்தான ராசியைப் பார்வையிடுவதால், தந்தைக்கு நலன்கள் கூடும். சமூகத்தில் பெரிய மனிதர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். உங்களின் பெருந்தன்மையான குணத்தால் உற்றார்-உறவினர்களை அரவணைத்துச் செல்வீர்கள். உங்களை ஆன்மீகத்தில் வெற்றி பெறச் செய்ய சரியான குரு, ஆசான் கிடைப்பார்.

உங்களின் உழைப்பு பலமடங்கு நன்மைகளைப் பெற்றுத் தரும். குரு பகவானின் அருட்பார்வை உங்களின் லாப ஸ்தான ராசியின் மீது படிவதால் உங்களைச் சார்ந்தவர்களுக்கு நீங்கள் தலைவர்போல் ஆவீர்கள். உங்கள் நம்பிக்கைகள் பலப்படும்.

மூத்த சகோதர, சகோதரிகளுக்கு நன்மைகள் உண்டாகும். அவர்களின் வாழ்க்கைத் தரம் உயரும். அவர்களும் உங்களுடன் இருந்து வந்த பிணக்குகள் மாறி, சுமுகமாக நடந்து கொள்வார்கள். புதிய கலைகளைக் கற்றுக் கொள்ளும் ஆவல் உண்டாகும். அதில் ஓரளவு வெற்றியும் காண்பீர்கள். அதனால் இந்தப் பெயர்ச்சி உங்களின் வாழ்க்கையில் அனுகூலத் திருப்பங்களை உண்டாக்கப்போகிறது என்றால் மிகையாகாது.

உத்யோகஸ்தர்கள் பயணங்களால் நன்மை காண்பார்கள். மேலதிகாரிகள் சற்று பாராமுகமாக நடந்து கொண்டாலும், தொல்லைகள் கொடுக்கமாட்டார்கள். சக ஊழியர்களும் ஒத்துழைப்பு நல்குவார்கள். பதவி உயர்வு உரிய நேரத்தில் வந்து சேரும். அதே சமயம் உங்கள் வேலைகளைத் திட்டமிட்டுச் சரியாக ஆற்றி வருவது அவசியம். சோம்பலுக்கும் இடம் தர வேண்டாம். சிலர் வெளியூருக்கு மாற்றலாகிச் செல்லலாம்.

வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் நிலவி வந்த போட்டி, பொறாமைகள் குறைந்து சுமுக நிலைமை ஏற்படும். கவனமாக இருந்து வியாபாரத்தை விரிவுப்படுத்தவும். கொடுக்கல், வாங்கலில் சிறு சிரமங்கள் ஏற்படலாம் என்பதால், வரவு-செலவு விஷயங்களில் கவனமாக இருக்கவும். சில நேரங்களில் நண்பர்களிடமும், கூட்டாளிகளிடமும் மனக் கசப்புகள் உண்டாகலாம். எனவே புதிய முயற்சிகளில் கவனத்துடன் ஈடுபடவும்.

விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருக்கும். ஆனால் பாசன வசதிகளைப் பெருக்குவதற்கு சில செலவுகளைச் செய்ய வேண்டியிருக்கும். மாற்றுப் பயிர்களைப் பயிரிட்டு லாபத்தை அள்ளலாம். கால்நடைகளை வைத்திருப்போர் நல்ல வருமானத்தைக் காண்பார்கள். பால் வியாபாரத்தை மேலும் பெருக்கிக் கொள்ளலாம். உங்களின் கடின உழைப்பு பல வகையிலும் நன்மைகளை உண்டாக்கும். குறிப்பாக பழைய குத்தகைப் பாக்கிகள் அடைப்பட்டு விடும்.

இந்த ராசி அரசியல்வாதிகளுக்கு பெயரும், புகழும் அதிகரிக்கும். உங்களின் பாணியில் வேலைகளைச் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். மக்களைக் கவரும் வண்ணம் உங்களின் செயல்கள் இருக்கும். தொண்டர்களையும் அனுசரித்து நடந்து கொள்வீர்கள். அவர்களையும் நல்ல முறையில் உற்சாகப்படுத்துவீர்கள்.

அதேசமயம் மேலிடத்திற்குத் தகவல் அனுப்பும் பொழுது எச்சரிக்கையுடன் இருக்கவும். உங்களுக்கு எதிராக சிறு சலசலப்புகள் ஏற்பட்டாலும், அவற்றை நீங்கள் பெரிதுப்படுத்த வேண்டாம். மற்றபடி அனைத்து வேலைகளையும் நன்றாகத் திட்டமிட்டே செய்வீர்கள். இருக்கும் நற்பெயரைக் காப்பாற்றிக் கொள்வீர்கள்.

கலைத்துறையினர் சுமாரான வாய்ப்புகளையே பெறுவீர்கள். அதிலேயே உங்கள் திறமையைக் காண்பித்துப் பெயரும், புகழும் அடைவீர்கள். ரசிகர்கள் சிலர் உங்களை அலட்சியப்படுத்தினாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் ரசிகர் மன்றங்களுக்குப் பணம் செலவு செய்வீர்கள். இதனால் மற்றவர்களின் நன்மதிப்பிற்கு ஆளாவீர்கள். சக கலைஞர்களுடன் நல்லுறவை வைத்துக் கொள்வீர்கள். மற்றபடி உழைப்பைக் கூட்டிக் கொண்டு திறமையுடன் உழைக்க வேண்டிய கால கட்டம் இது என்றால் மிகையாகாது. முன்கோபத்தைத் தவிர்த்து, மனதில் பட்டதையெல்லாம் பேசாமல் இருப்பது நல்லது.

பெண்மணிகள் குடும்பத்தில் சிறு குழப்பங்களைச் சந்திப்பார்கள். அவற்றை பெரியோர்களின் ஆலோசனைகளின்படி சரி செய்தும் விடுவார்கள். இதனால் மன நிம்மதிகளைப் பெறுவார்கள். எதிர்பார்த்த கடன் வசதிகளைப் பெறுவதில் தாமதங்கள் உண்டாகும். விரக்திக்கு இடம் தராமல் குடும்பத்தினரிடமும், உறவினரிடமும் பழகி வருவது நல்லது. எதைச் செய்தாலும் நன்றாக யோசித்துச் செய்யும் மனப் பக்குவத்தை உருவாக்கிக் கொள்ளவும்.

மாணவமணிகள் தகாத நடவடிக்கை உள்ளவர்களின் நட்பைத் தவிர்த்து, படிப்பில் முழு ஆர்வத்துடன் ஈடுபடுவது நல்லது. கல்வியில் முயற்சிக்கு ஏற்ற மதிப்பெண்களைப் பெறுவீர்கள். முயற்சியைச் சரியான முறையில் ஒரு மனதோடு செய்தால்தான் ஆசிரியர்களிடம் பாராட்டைப் பெற முடியும். மற்றபடி விளையாட்டுகளில் வெற்றியும், பாராட்டுகளும் கிட்டும். அதேசமயம் பெற்றோர்களின் கருத்துப்படி நடக்கவும்.

கன்னி ராசி நேயர்களே!

உங்களுக்கு சகோதரம், தைரிய ஸ்தான ராசியிலிருந்து குரு, சுகம் மற்றும் கல்வி ஸ்தான ராசியான நாலாம் ராசிக்கு பெயர்ச்சியாவது சிறப்பு என்று கூறமுடியாவிட்டாலும், சராசரிக்கும் சற்று கூடுதலான நற்பலன்களை அருள்வார் என்றால் மிகையாகாது.

சுகஸ்தானத்தில் தன் மூலத்திரிகோண ராசியில் ஆட்சி பெற்ற குருபகவான் உங்களை கல்வி, கேள்விகளில் சிறப்படையச் செய்வார். உங்களைத் தொழிலில் முன்னேறச் செய்வார். சிலர் தங்கள் பழைய வாகனங்களைக் கொடுத்துவிட்டு, புதிய வாகனங்களை வாங்குவார்கள்.

நாலாம் ராசியான சுக ஸ்தானத்தில் உள்ள குரு பகவான் உங்களை சளித்தொல்லை, சைனஸ், நுரையீரல் கோளாறு, ஆஸ்துமா போன்ற உடல் உபாதைகளுக்கும் ஆட்படுத்திவிடலாம்; அதனால் கவனமாக இருக்கவும். சிலர் குடியிருக்கும் வீட்டை மாற்றும் சூழ்நிலை உண்டாகும். தாயாரின் உடல் நலம் கவனிக்கப்படவேண்டி வரும். மற்றபடி வாசனைத் திரவியங்களைப் பயன்படுத்தும் காலமாக இது அமையும். உணவு வகைகளில் அறுசுவை உணவை உண்பீர்கள். நண்பர்கள் உங்களிடம் நட்புப் பாராட்டி, வேண்டிய உதவிகளையும் செய்வார்கள்.

கல்வி ஸ்தானத்தில் குரு பகவான் அமர்ந்திருப்பதால் ஆசிரியர்கள் தொழிலில் சிறந்து விளங்குவார்கள். வேலையாட்கள் உங்களுக்குச் சரியான ஒத்துழைப்பை நல்குவார்கள். குரு பகவான் உங்களின் அஷ்டம ஸ்தான ராசியைப் பார்வை செய்வதால் நீங்கள் சிக்கனமாகச் செலவு செய்வீர்கள்; வீண் ஆடம்பரச் செலவுகளைத் தவிர்ப்பீர்கள். உங்களின் முன்யோசனைகளால் பெரிய நஷ்டங்களில் இருந்து தப்பித்துக் கொள்வீர்கள். உங்களின் செயல்களை எப்பாடுபட்டாவது பிடிவாதமாகச் செய்து முடிப்பீர்கள்.

வாழ்க்கையில் அனைத்து ரகசியங்களையும் புரிந்து கொள்ளும் ஆற்றல் உண்டாகும். உங்களை எவரும் ஏமாற்ற முடியாது என்கிற நிலைமையில் இருப்பீர்கள். குரு பகவானின் கனிந்த பார்வை தொழில் ஸ்தானம் மற்றும் கர்ம ஸ்தான ராசியின் மீது படுவதால், அனைத்துத் தொழில்களையும் சிறப்பாகச் செய்து முடிக்கும் வல்லமையைப் பெறுவீர்கள்.

மேலும் சோர்வு இல்லாமல் உழைக்கும் மனஉறுதியும், உடல் வலிமையும் ஏற்படும். ஸ்பெகுலேஷன் போன்ற துறைகளில் நல்ல வெற்றி பெறுவீர்கள். எப்படியும் தொழிலில் பணம் வந்து சேரும். சமூக சேவைகளில் நாட்டம் அதிகரிக்கும். மருந்து சம்பந்தமான துறையில் உள்ளவர்கள் எடுக்கும் முடிவுகள், அனுகூலங்களைக் கொண்டு வந்து சேர்க்கும். பலருக்கு ஆலோசனை வழங்கவும், பல நிறுவனங்களைப் பராமரிக்கவும் வாய்ப்புகள் ஏற்படும்.

குரு பகவானின் பார்வை உங்களின் அயன சயன ராசியான விரய ஸ்தானத்தின் மீது படுவதால், உங்களுக்கு மறைமுக விரோதிகளிடமிருந்து விமோசனம் கிடைக்கும். அங்கு அமர்ந்துள்ள சனி பகவான் மற்றும் கேது பகவானையும் அவர் பார்ப்பதால் உடலில் சோம்பல் மறைந்து, பணம் சேர்க்கும் முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.

முன்யோசனையின்றி பேசத் தொடங்கும் நேரத்தில் எச்சரிக்கை உணர்வு உண்டாகும். அதனால் வீண் விரோதங்களை குறைத்துக் கொள்வீர்கள். வேலையாட்களை அலட்சியம் செய்யாமல் அவர்களை அரவணைத்துச் செல்வீர்கள். பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பீர்கள். அதேநேரம் தகாதவர்களிடம் பணத்தைக் கொடுத்து மாட்டிக்கொள்ள நேரிடும் என்பதால் பண விஷயங்களில் எச்சரிக்கையுடன் இருக்கவும். பொதுவாக இந்தப் பெயர்ச்சி உங்களுக்கு சராசரிக்கும் சற்று கூடுதலான பலன்களையே தரும் என்று கூற முடிகிறது.

உத்யோகஸ்தர்கள் கடின உழைப்பை தங்களின் மூச்சாகக் கொண்டு உழைக்கவும். சுறுசுறுப்புக்கு முதலிடம் கொடுத்து காரியமாற்றவும். மேலதிகாரிகள் சற்று பாராமுகமாகவே நடந்து கொள்வார்கள். சக ஊழியர்களிடம் பழகும்போது நல்ல முறையில் பேசிப் பழகவும். அதே சமயம் வருமானம் நன்றாகவே இருக்கும். அலுவலக ரீதியான பயணங்களினால் அனுகூலங்களைக் காண்பீர்கள். அதேநேரம் மனதில் இனம் புரியாத சஞ்சலம் சூழ்ந்து இருக்கும். இறை வழிபாட்டை மேற்கொண்டு அமைதி பெறுங்கள்.

வியாபாரிகளுக்கு முயற்சிகளுக்குத் தகுந்த லாபங்கள் கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் இருந்த சிரமங்கள் குறையும். அனைத்துச் செயல்களும் தடைகளுக்குப் பிறகே வெற்றியைக் கொடுக்கும். வாடிக்கையாளர்களைக் கவர, புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். அதே சமயம், பெரிய முதலீடுகளில் தொழிலை விரிவுப்படுத்த நினைக்க வேண்டாம். இருப்பதை நேர்த்தியாகச் செய்து முடிப்பதே சிறப்பு. புதிய கடன்கள் கூடாமல் பார்த்துக் கொள்ளவும். கூட்டாளிகளிடம் விட்டுக்கொடுத்து நடந்து கொள்ளவும். வீண் பேச்சைத் தவிர்க்கவும்.

விவசாயிகளுக்கு மகசூல் திருப்திகரமாக இருக்கும். எதிர்பாராத பணவரவால் பழைய கடன்களைத் திருப்பிச் செலுத்த முற்படுவீர்கள். பாசன வசதிகளில் கவனம் செலுத்துவீர்கள். அதே சமயம் பூச்சிக்கொல்லி மருந்துகளுக்குச் சிறிது செலவு செய்ய நேரிடும். உங்களின்கீழ் வேலை செய்யும் விவசாயக் கூலிகளிடமிருந்து சரியான ஒத்துழைப்பைப் பெறமுடியாமல் போகலாம். அதனால் கோபப்படாமல் அவர்களின் குறைகளுக்கு ஏற்றவாறு செயல்படவும். புதிய குத்தகை எடுக்கும் முயற்சிகளைத் தள்ளி வைக்கவும்.

இந்த ராசி அரசியல்வாதிகள் புதிய முயற்சிகளில் திடத்துடன் செயல்படுவார்கள். மேலிடத்தின் ஆதரவு நன்றாக இருக்கும். சமூகத்தில் கெüரவமான பதவிகளில் அமர்வீர்கள். உங்களின் ரகசியங்களை எவரிடமும் பரிமாறிக் கொள்ள வேண்டாம். வீண் வம்பு விவகாரங்களில் மாட்டிக் கொள்ளாமல் தள்ளியிருப்பது அவசியம். உங்களுக்குத் தடையாய் இருந்தவர்கள் விலகி விடுவார்கள். அதனால் உங்கள் வழியில் தைரியத்துடன் செல்லலாம். இதுவரை ஒதுக்கி வைத்திருந்த காரியங்களையும் செயல்படுத்தலாம்.

கலைத்துறையினருக்கு பழைய ஒப்பந்தங்களை முடித்துக் கொடுப்பதில் சிரமங்கள் உண்டாகும். அதே சமயம், உங்களின் திறமை பளிச்சிடும். ரசிகர்களின் ஆதரவும் சற்று கூடும். அதனால் காலத்திற்குத் தகுந்தாற்போல் விட்டுக் கொடுத்து நடந்து கொள்ளவும். மற்றபடி பணவரவு நன்றாகவே இருக்கும். பயணங்கள் வீண் போகாது; புதிய அனுபவங்களை அவை உங்களுக்குக் கொடுக்கும். உங்கள் மனக்குறைகளை வெளிக்காட்ட வேண்டாம்.

பெண்மணிகளுக்கு கணவரிடம் அன்பும், பாசமும் அதிகரிக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கைகள் உண்டாகும். சுற்றுலா சென்று, மனமகிழ்ச்சியைக் கூட்டிக் கொள்வீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை நிறைந்து காணப்படும். குழந்தைகளால் சந்தோஷம் பெருகும். உங்களின் தைரியமும், தன்னம்பிக்கையும் வளரும். வெளிவட்டாரச் செல்வாக்கு உயர்ந்து காணப்படும்.

மாணவமணிகள் கல்வியில் நன்றாகத் தேர்ச்சி பெறுவார்கள். நண்பர்களுடன் நல்ல முறையில் விளையாட்டில் ஈடுபடுவீர்கள். பெற்றோர்கள் உங்களின் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்வார்கள். அதேநேரம், படிப்பைத் தவிர வேறு எதையும் நினைக்க வேண்டாம்.

துலாம் ராசி நேயர்களே!

துலாம் ராசிக்காரர்களுக்கு சகோதர மற்றும் தைரிய ஸ்தான ராசியான மூன்றாம் இடத்துக்கு குரு பெயர்ச்சி ஆவது சிறப்பு என்று கூற முடியாவிட்டாலும், பொதுவாக "மறைந்த குரு' என்கிற வகையில் அனுகூலமான பலன்களையே உங்களுக்குத் தருவார்.

மூன்றாமிட குரு பகவான் உங்களின் செயல்களில் தைரியத்துடன் ஈடுபட வைத்து வெற்றியையும், கீர்த்தியையும் உண்டாக்கித் தருவார். நீங்கள் கவலையற்றவராகவும், திட சிந்தனை உள்ளவராகவும் காணப்படுவீர்கள். அலுவலகத்தில் உங்களின் பொறுப்புகளை சீரிய முறையில் முடித்து விடுவீர்கள்.

உங்களின் இளைய சகோதர, சகோதரிகள் உங்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்வார்கள். அதே நேரம் அவர்களிடம் வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். சிறிய தூரப் பயணங்களை மேற்கொண்டு நன்மைகளை அடைவீர்கள். பொருளாதாரம் சீராக இருப்பதால் சேமிப்புகளிலும் கவனம் செலுத்துவீர்கள்.

தயவு தாட்சண்யத்திற்காக பிறருக்கு உதவி செய்யப் போய் வம்பில் மாட்டிக் கொள்ள நேரிடும்; அதனால் கவனமாக இருக்கவும். மனதில் பட்டதை யோசிக்காமல் பேசுவதால், சில நேரங்களில் உங்கள் வாயே உங்களுக்கு சத்ருவாகிவிடும். மற்றபடி குரு பகவானின் பார்வை உங்களின் பாக்ய ராசியின் மீது படிவதால் உங்களின் பெருமையை அனைவரும் உணருவார்கள். பெரியோர்களால் பாராட்டப்படுவீர்கள்.

உங்களுக்கு நல்லது என்று பட்டதைச் செய்யத் தயங்கமாட்டீர்கள். உங்கள் வேலைகளில் விவேகத்துடன் ஈடுபடுவீர்கள். உங்களின் பரந்த குணத்தால் தான தர்மங்களைச் செய்ய முற்படுவீர்கள். தீயோர்க்கும் நல்லதே செய்ய நினைப்பீர்கள். வஞ்சிக்கும் மனப்பான்மையோ, பொறாமைக் குணமோ உங்களுக்கு இல்லை என்கிற அளவில் குரு உங்களைச் செயலாற்ற வைப்பார். அவரது அருட்பார்வையால் உங்களுக்கு தனவந்தர் அந்தஸ்து கிட்டும்.

எதிர்பாராத வகையில் சில சன்மானங்களைப் பெறுவீர்கள். மற்றவர்களின் சொத்துக்களைப் பராமரிக்கும் பொறுப்பும் கிட்டும். மொத்தத்தில் இந்தப் பெயர்ச்சி உங்களுக்கு சராசரிக்கும் அதிகமான பலன்களை வழங்கும் என்பதில் சந்தேகமில்லை.

உத்யோகஸ்தர்களின் கோரிக்கைகளை மேலதிகாரிகள் உடனுக்குடன் பரிசீலிப்பார்கள். இதனால் அலுவலகத்தில் சிறப்பான சூழ்நிலையில் இருப்பீர்கள். சக ஊழியர்களும் நட்பு பாராட்டுவார்கள். அதனால் அனைத்து இடையூறுகளையும் தாண்டி வந்துவிடுவீர்கள். அலுவலக ரீதியாக நீங்கள் சில பயணங்களை மேற்கொள்ள வேண்டி வரும். இந்தப் பயணங்கள் உங்கள் வாழ்க்கையில் திருப்பங்களைக் கொண்டு வரும். சிலர் விரும்பிய இடங்களுக்கு மாறிச் செல்வார்கள். ஊதியம் இரட்டிப்பாகும் காலமிது.

வியாபாரிகள் புதிய முயற்சிகளை மேற்கொண்டு பலனடைவார்கள். கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சாதகமாக முடிவடையும். வாடிக்கையாளர்களைக் கவர புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். கூட்டாளிகளின் ஆதரவும் கிடைக்கும். உங்களின் விற்பனைப் பிரதிநிதிகள் பல இடங்களுக்குச் சென்று விற்பனையைக் கூட்டுவார்கள். அதே சமயம் அரசாங்க வழிகளில் கெடுபிடிகள் கூடுமாகையால் கணக்கு வழக்குகளைச் சரியாக வைத்துக் கொள்ளவும்.

விவசாயிகளுக்கு மகசூல் பெருகி, லாபம் அதிகரிக்கும். புதிய விவசாய உபகரணங்களை வாங்கி, விவசாயத்தை நவீனமாக்குவீர்கள். கால்நடைகளால் நல்ல பலன்களையும் காண்பீர்கள். குறிப்பாக பால்வியாபாரம் செய்வோர், நல்ல வருமானத்தைப் பெறுவார்கள். மேலும் கரும்பு பயிரிடுவோர் நல்ல விளைச்சலையும், வருமானத்தையும் காண்பார்கள். அதேநேரம் தற்போதைக்கு புதிய குத்தகைகளைப் பெற முனைய வேண்டாம். இருப்பதையே திருப்தியாகச் செய்து முடியுங்கள்.

இந்த ராசி அரசியல்வாதிகளின் பெயரும், புகழும் வளரும். புதிய பதவிகள் உங்களைத் தேடி வரும். பயணங்களால் நன்மை உண்டாகும். உங்களின் கடமைகளைச் சுறுசுறுப்புடனும், திடமான முயற்சிகளுடனும் செய்வீர்கள். தொண்டர்களின் ஆதரவுடன் பதவிகளைத் தக்க வைத்துக் கொள்வீர்கள். கட்சியின் ஆலோசனைக் கூட்டங்களில் எக்குதப்பாக எதையாவது பேசி, கட்சி மேலிடத்தின் கண்டனத்திற்கு ஆளாகலாம். அதனால் பேசும்போது முன்னெச்சரிக்கையுடன் இருக்கவும். எவரையும் பகைத்துக் கொள்ளாமல், உங்கள் வேலையைச் செய்யவும்.

கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களை நல்லமுறையில் முடித்துக் கொடுப்பார்கள். புகழும், பாராட்டும் கிடைக்க சற்று காலதாமதமாகும். திட்டமிட்ட வேலைகளைப் பொறுப்புடனும், நிதானத்துடனும் செய்து முடிக்கவும். சக கலைஞர்களுடன் சச்சரவுகள் இல்லாமல் நடந்து கொள்ளவும். ரசிகர்களை அரவணைத்துச் செல்லுங்கள்.

பெண்மணிகளுக்கு பணவரவு நன்றாக இருப்பதால் ஆடம்பரப்பொருட்களை வாங்குவார்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். கணவரிடம் ஒற்றுமையோடு நடந்து கொள்வார்கள். கணவரும், உங்களை மதித்து நடப்பார். அதே சமயம் ஆரோக்யம் கவனிக்கப்பட வேண்டியிருக்கும். மேலும் பேசும் நேரத்தில் வார்த்தைகளில் எச்சரிக்கையுடன் இருக்கவும்.

மாணவமணிகள் படிப்பில் கவனம் செலுத்தி நன்றாக உழைத்தால், முதல் ரேங்க்கைப் பெறுவார்கள். பொதுவாக எதையும் சிந்தித்துப் பார்த்து செயலாக்குவார்கள். விளையாட்டிலும் வெற்றி பெறுவார்கள். வெளி விளையாட்டுகளில் ஆர்வம் குறையும். மற்றபடி மனதை ஒருமுகப்படுத்த தியானம், யோகா போன்றவற்றில் ஈடுபடவும்

விருச்சிக ராசி நேயர்களே!

விருச்சிக ராசி வாசகர்களுக்கு குரு பகவான் ஜென்ம ராசியிலிருந்து தனம், வாக்கு, குடும்ப ராசியான இரண்டாம் ராசிக்குப் பெயர்ச்சி ஆவது சிறப்பு என்று கூற முடிகிறது. தன ஸ்தான குரு, உங்களுக்குச் செல்வச் சீமான் என்கிற அந்தஸ்தை வழங்குவார். பொன், பொருள் சேரும்.

உங்களின் கனிவான பேச்சினால் மற்றவர்களிடம் அன்பாகப் பழகி, பலர் போற்றும்படி நடந்து கொள்வீர்கள். அதே சமயம் மற்றவர்களின் ஏளனப் பேச்சைப் பெரிதுபடுத்த வேண்டாம். சூதுவாது செய்யும் நண்பர்களிடம் அவர்களுக்கு ஏற்றாற்போல் பழகி, அவர்களையும் உங்களுக்கு நன்மை செய்ய வைத்துவிடுவீர்கள்.

வாக்கு ஸ்தானத்தில் அமர்ந்த குரு பகவான், உங்களின் கற்பனா சக்தியைக் கூட்டுவார். அதேநேரம் பொருளாதாரம் சிறப்பாக இருப்பதால் சிலர் வீம்புக்காகச் செலவு செய்ய முற்படுவார்கள். சில சமயம், மனதில் பட்டதைப் பேசுவீர்கள். இதனால் சில அனாவசியச் சிக்கல்களிலும் சிக்கிக் கொள்வீர்கள்.

திருமணமாகாதவர்களின் திருமண முயற்சிகள் வெற்றி பெறும். கண்ணில் இருந்த பார்வைக் கோளாறுகள் சரியாகி விடும். உங்களைச் சார்ந்தவர்களின் மத்தியில் நீங்கள் முக்கியமானவராகக் கருதப்படுவீர்கள். சில நேரங்களில் சிறு குழுவுக்குத் தலைமை தாங்கிச் செல்லும் வாய்ப்பும் உண்டாகும். குரு பகவானின் அருட்பார்வை உங்கள் ராசியின் ஆறாம் ராசியான ருணம், ரோகம், சத்ரு ஸ்தான ராசியைப் பார்ப்பதால் உங்களுக்குக் கடன்கள் குறைந்துவிடும் என்று கூறமுடிகிறது.

பல நாட்களாக உங்களுக்குத் தொல்லை கொடுத்து வந்த எதிரிகள் பறந்தோடிவிடுவார்கள். உங்களை ஏமாற்ற நினைத்தவர்கள் ஏமாறுவார்கள். குரு பகவானின் கனிந்த பார்வை உங்களின் அஷ்டம ராசியின் மீது படிவதால் உங்களின் ரகசியங்களை நன்றாக மறைக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். உங்களின் கசப்பான அனுபவங்களை அடுத்தவர் அறியா வண்ணம் காப்பீர்கள். சிலருக்கு சித்து வேலை செய்பவர்களிடம் நட்பு உண்டாகி, அவர்களின் மூலம் சில நன்மைகளையும் அடைவார்கள்.

குரு பகவானின் சுப பார்வையால் உங்களின் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும். உங்களின் வளர்ச்சியைக் கண்டு மற்றவர்கள் பொறாமைப்படுவார்கள். சமுதாயத்தில் முக்கியஸ்தர் என்கிற அளவில் புனித காரியங்களான கோயில் வேலைகளில் நீங்கள் முன்னிலைப்படுத்தப்படுவீர்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன இது அரசியல்வாதிகள் போல நேரம் ஆக ஆக ஜோதிடக்காரர்களின் வாக்கும் மாறுது. முதலில ஒருத்தர் நல்லதாச் சொல்ல..பின்னாடி ஒருத்தர் கெட்டதாச் சொல்லுறார். ஏன் வியாழன் தண்ணியடிச்சிட்டு அங்கும் இங்கும் தளம்பித்தளம்பிச் சுத்துதோ...??! :unsure:

இப்பதான் விளங்குது லண்டனில எப்படி ஜோதிடம் பெருகினது என்று. எல்லாம் நம்ம கறுப்பி அக்காட உபயம் தான் போல..! சும்மா ஜோக்..! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயே இந்த சோதிடரிடம் எல்லாம் போறது இல்லைங்க.

மனதில இருக்கும் அமைதி எல்லாம் இந்த சோதிடரிடம் போகும் போது காணமால் போயிடும் . இல்லாத பொல்லாத எல்லாம் சொல்லி குழப்பிடுவாங்களே.

இணையத்தில வாறதில எதுல நல்லதா எழுதியிருக்கோ அதை மட்டும் உள்வாங்கிறதோட சரி .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • சீமான் உட்பட எவருமே தங்கம் இல்லை. ஆகவே இவரும் மாற்று இல்லை. ஒரு கள்ளனை இன்னொரு கள்ளனால் பிரதியிடுவது அல்ல மாற்று. ஓம். ஏன் எண்டால் அவர் சின்ன கருணாநிதி என நான் எப்போதோ அடையாளம் கண்டு கொண்டதால்.
    • இராக்கில் உள்ள ஈரானிய புரொக்சி படைகள் மீதும் விமானத்தாக்குதலாம். அமெரிக்கன் சென்ரல் கொம்மாண்ட் தாம் இல்லை என மறுப்பு. இஸ்ரேல் லெப்ட் சிக்க்னல் போட்டு ரைட் கட் பண்ணி இருக்குமோ? விமானங்கள் ஜோர்தான் பக்கம் இருந்தே வந்தனவாம்.
    • ஆழ்ந்த அஞ்சலிகள். மத்திய கல்லூரியில் என் அப்பாவுக்கு சீனியர். எதிர் என ஆரம்பித்து இவரை பற்றி ஒரு அசகாய சூரனை போல கதைத்து கொண்டே இருப்பார் அப்பா. அதே போலத்தான் கந்தப்பு சொன்ன அதிபர் ஸ்மித்தை பற்றியும்.   
    • யார் சொன்னார் சீமான் மட்டும் தங்கம் என? சீமான் இன்னும் ஆட்சி செய்யவில்லையே? அவரவர் தாம் விரும்பும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை விரும்புகின்றனர். விஜய் கட்சி ஆரம்பிக்க முதலே நீங்கள் சீமான் எதிர்ப்பாளர் தானே? அது சரி விஜய் அரசியல் கட்சியின் கொள்கை என்ன? 🤣
    • ஓம் கருணாநிதி கூட ஒரு முறை சொன்னார் “நெல்லை எனக்கு எல்லை, குமரி எனக்குத் தொல்லை” என. எப்போதும் ஏனைய தமிழ் நாட்டு தொகுதி முடிவுக்கு மாறாக போக அதிக வாய்ப்பு உள்ள தொகுதி கன்யாகுமரி. தவிர பொன்னாருக்கு தனிப்பட்ட செல்வாக்கும் உண்டு. ஆனால் வாலி சொல்லும் காரணங்களும் பலமானவையே. கடும் போட்டி இருக்கும் என நினைக்கிறேன். மாற்று உண்மையான மாற்றாக இருக்க வேண்டும்.  உங்களை போலவே மேலே உள்ள காரணங்களுக்காக நான் விஜையின் அரசியல் வரவை வரவேற்கிறேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.