Jump to content

அமெரிக்காவின் றாடர் கருவி: இந்தியா அச்சத்தில் - இந்தியப் பத்திரிகை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புதன் 14-11-2007 18:41 மணி தமிழீழம் [தாயகன்]

அமெரிக்காவின் றாடர் கருவி: இந்தியா அச்சத்தில் - இந்தியப் பத்திரிகை

அமெரிக்கா வழங்கியுள்ள றாடர் கருவி தொடர்பாக இந்தியா ஆழ்ந்த கரிசனை செலுத்தி வருவதாக, இந்தியாவிலிருந்து வெளிவரும் "ரைம்ஸ் நவ்" என்ற பத்திரிகை தெரிவித்துள்ளது.

வவுனியாவில் தற்பொழுது தளப்படுத்தப்பட்டுள்ள இந்த றாடர் கருவி மூலம் இந்தியாவின் தென்பகுதியிலுள்ள முக்கிய படைத்தளங்களை அவதானிக்க முடியும் என இந்திய படை நிபுணர்கள் அச்சம் வெளியிட்டுள்ளதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

pathivu.com

Link to comment
Share on other sites

இப்ப இலங்கை நினைக்க போது அப்ப இந்தியா வேலை செய்யாத றாடர்களைத் தான் தந்தது என்று :(:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வவுனியாவில் பொருத்தப்பட்டுள்ள அமெ.ராடர் மூலம் இந்தியத் தளங்களை வேவுபார்க்க முடியுமென அச்சம்!

வவுனியாவில் தற்போது அமைக்கப் பட்டுள்ள அமெரிக்காவின் ராடர் கருவி மூலம் இந்தியாவின் தென்பகுதியில் உள்ள முக்கிய படைத் தளங்களை அவதானிக்க முடியும் என்று இந்திய படை நிபுணர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

இந்தியாவிலிருந்து வெளிவரும் "ரைம்ஸ் நவ்' என்ற பத்திரிகை இத் தகவலை வெளியிட்டுள்ளது

அமெரிக்கா நவீன ராடர் கருவிகளை இலங்கைக்கு வழங்கியுள்ளது. பயங்கர வாதத்துக்கு எதிரான போருக்கு என்று இக் கருவியை அமெரிக்கா வழங்கிய போதி லும் இந்தியாவின தென்பகுதிப் படைத் தளங்களை உளவு பார்க்கும் வலுக்கொண்ட இந்த ராடரால் இந்தியா ஆழ்ந்த அக்கறை செலுத்துகிறது.

திருவனந்தபுரத்துக்கு அருகில் உள்ள "தும்பா' ஏவுகணை செலுத்தித் தளம், கல் பாக்கம் அணுவாயுத தளம், விசாக பட்டி னத்தில் உள்ள கடற்படை கட்டுமானத் தளம் என்பன உட்பட பல்வேறு தளங்களை இந்த ராடர் மூலம் அவதானித்து வேவு பார்க்க முடியும்.

இந்த ராடர் அமெரிக்க அரசை இந்திய எல்லைக்குள் காலூன்ற வைக்கின்றது.

இந்தியாவின் இந்தக் கரிசனை தொடர் பாக இலங்கை சென்ற நிதி அமைச்சர் ப.சிதம்பரம் இலங்கை அரசுக்கு எடுத்துக் கூறியதாகவும் அறியவருகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் கருணா நிதியும் இது தொடர்பாக மத்திய அரசிற்கு எடுத்துக்கூறியிருப்பதாக நம்பப்படுகிறது.

தமிழ்ச்செல்வனின் நடமாட்டம்

அவதானிக்கப்பட்டது

விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்சசெல்வ னின் நடமாட்டம் வவுனியாவில் உள்ள ராடர் நிலையத்தின்மூலமே அவதானிக் கப் பட்டு இலங்கை வான்படையினரால் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் நம்பப் படு கிறது.

சு.ப.தமிழ்ச்செல்வனின் மறைவைத் தொடர்ந்து பாதுகாப்பு அமைச்சின் செய லாளர் கோத்தபாய ராஜபக்ஷ விடுதலைப் புலிகளின் தலைவர்கள் ஒவ்வொருவரும் இவ்வாறு இலக்குவைக்கப்படுவார்கள் என வும் தம்மிடம் அதற்கான படைக்கல வளங் கள் இருப்பதாகவும் கூறியிருந்ததையும் இங்கு உற்றுநோக்கவேண்டும்

என்று அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

-உதயன்

Link to comment
Share on other sites

இலங்கை அமரிக்க இஸ்ரவேல் பாகிஸ்தானிடம் இருந்து ஆயுத உதவிகளையும் நவீன விமானங்களையும் வாங்குவது தொன்று தொட்டு நடக்கும் ஒன்று. இப்போது தமிழ் நாட்டில் ஈழ ஆதரவு எழுந்துள்ளதால்அதை மழுங்கடிக்க கூப்பாடு போடுகின்றார்கள். அமரிக்க ராடரை கொடுக்குது பாகிஸ்தான் பயிற்சியை கொடுக்குது சீன டாங்கியை கொடுக்குது நாம் கொடுத்திருந்தால் இவை எல்லாம் நடக்குமா எங்கட பாதுகாப்புக்கு பிரச்சனை வருமா என்று ஒரு கருத்து மூலம் இந்திய மகிந்தருக்கு உதவிசெய்ய ஆயத்தமும் பண்ணுகின்றது. ஈழ ஆதரவை சிதைக்கவும் பார்க்கின்றது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • பாஜகவோட கூட்டணிவைச்ச வாசனுக்கும் தினகரனுக்கும் மட்டும் அவர் கேட்ட சின்னத்தைக் கொடுத்தது என்ன மாதிரியான தேர்ததல் விதிமுறை?பாஜக இந்த முறை 3 வது இடம் பிடிக்கணும் அதுக்காககத்தான் இந்த குழறுபடிகள்.ஆனால் அது நடக்காது. தேர்தலிலே நிற்காத கமலுக்கு டோர்ச்லைற் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
    • இந்திய‌ அள‌வில் ஏவிம் மிசினுக்கு எதிர்ப்பு கூடுதே அண்ணா அது எத‌ற்காக‌.................ப‌ல‌ர் ஊட‌க‌ங்ளில் நேர‌டியா சொல்லுகின‌ம் ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்ய‌லாம் என்று ஏன் அவ‌ர்க‌ள் மீது தேர்த‌ல் ஆனைய‌ம் வ‌ழ‌க்கு போட‌ வில்லை................இப்ப‌டி கேட்க்க‌ ப‌ல‌ இருக்கு...............யாழிலே வ‌ய‌தில் மூத்த‌வ‌ர்க‌ள் எழுதி விட்டின‌ம் இந்தியாவில் தேர்த‌ல் என்ப‌து க‌ண்துடைப்பு நாட‌க‌ம் என்று அப்ப‌ புரிய‌ வில்லை இப்ப புரியுது...............இப்ப இருக்கும் தேர்த‌ல் ஆனைய‌ம் கிடையாது மோடியின் ஆனைய‌ம்..............ப‌ல‌ருக்கு ப‌ல‌ ச‌ந்தேக‌ம் வ‌ந்து விட்ட‌து த‌மிழ் நாட்டு தேர்த‌ல் ஆனைய‌ம் மேல்..........................
    • வைகோ தனது மகனை அரசியிலில் முன்னிறுத்துவதற்காக நீண்டகாலம் வைகோவிற்கு விசுவாசமாக இருந்த கணேசமூர்த்த்திக்கு  தேர்தலில் இடங் கொடுக்கவில்லை.. திமுக ஒரு இடம்தான் கொடுக்குமென்றால் அதிமுகவுடன் கூட்டணி அமைந்திருந்தால் அவர்கள் கட்டாயம் 2 இடம் கொடுத்திருப்பார்கள்.கூட்டணிமாறுவது வைகோவுக்கு புதிதில்லை.வைகோவைக் திமுகவில் இருந்து வெளியேற்றியதற்காக எத்தனையோ போர் தீக்குளித்தார்கள். வாரிசு அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கியவர் அதே வாரிசு அரசியலைக் கையில் எடுத்தது மட்டுமல்ல யாரை எதிர்த்து கட்சி தொடங்கினாரோ அவரின் காலடியில் கிடக்கிறார். கணேசகமூர்த்தியின் சாவுக்கு வைகோவே பொறுப்பு.
    • தமிழ் தேசியத்தை தனது கட்சியின் கொள்கையாக கொண்டுள்ள சீமான் பிள்ளைகளை தமிழ்வழி கல்வியில் சேர்க்காதது தவறான முன்னுதாரணம்.. படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில் என்று வாழும் திராவிடகட்சிகளுக்கும் தனக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை தனது சில அண்மைக்கால நடவடிக்கைகள் மூலம் சீமான் வெளிப்படித்தி வருகிறார்.. அவரை நம்பி பின்தொடரும் பல லட்சம் இளைஞர்கள் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் இருக்கும் என்று வந்தவர்கள்.. இலட்சிய பிடிப்புள்ளவர்கள்.. இப்படியான செயல்களை அவர்களை வெறுப்பேற்றும்.. நமக்கெதுக்கு வம்பு.. நம்மூர் அரசியலே நாறிக்கிடக்கு.. தமிழக உறவுகள் தம் அரசியலை பார்த்துக்கொள்வார்கள்..
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.