Jump to content

செய்வதெல்லாம் அவங்க பிசினஸ்ங்க...ஆண்கள் நினைப்பு இது தான்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

செய்வதெல்லாம் அவங்க பிசினஸ்ங்க...ஆண்கள் நினைப்பு இது தான்

புதுடில்லி :

"குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்வதெல்லாம் மனைவியின் வேலை; அவர்கள் தான் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். நாங்கள் கவலைப் பட வேண்டியதில்லை!' இப்படி தான், இந்திய ஆண்களில் பெரும்பாலானோர் மனநிலை உள்ளது என் பது, சமீபத்தில் நடத்தப்பட்ட சர்வேயில் தெரியவந்துள்ளது.

மத்திய அரசின், தேசிய சுகாதார மற்றும் குடும்ப நலன் பற்றிய சர்வேயில் தெரியவந்த தகவல்கள்:

* செக்ஸ் உறவு வைப்பதன் மூலம், கரு உருவாகி விடு மோ என்று கணவர்களை விட, மனைவிகள் தான் அதிகம் கவலைப்படுகின்றனர்.

* செக்ஸ் உறவில் முழுமையான திருப்தி கிடைக்காது என்று கணவன் நினைப்பதால், காண்டம் பயன்படுத்த விரும்புவதில்லை.

* ஆனால், கருவுறும் நிலை ஏற்படுமோ என்று பயந்து, கருத்தடை மாத்திரை, சாதனத்தை பயன்படுத்துகின்றனர் மனைவியர்.

* "நாங்கள் ஆண்கள்; குடும்பக் கட்டுப் பாடு செய்துகொள்ள முடியாது; இது பெண்களின் "பிசினஸ்' அவர்கள் தான் குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் செய்து கொள்ள வேண்டும்' என்று, 32 சதவீத ஆண்கள் கூறியுள்ளனர்.

* "தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள், செக்ஸ் வைத்தாலும் கருவுற முடியாது" என்று, பாதி ஆண்கள் நம்புகின்றனர்.

* குடும்பக் கட்டுப்பாடு தொடர்பான விஷயங்களை தெரிந்து கொண்டு, செக்ஸ் வைப்பதாக, 61 சதவீத ஆண்களும், 49 சதவீத பெண்களும் கூறியுள்ளனர்.

* ஒரு குழந்தைக்கும் இன் னொரு குழந்தைக்கும் போதிய கால இடைவெளி இருக்க வேண்டும் என்பது தொடர் பான விழிப்புணர்வு, நகர தம்பதியரிடம் தான் உள்ளது. கிராமங்களில் இன்னும் பலருக்கு தெரியவில்லை.

* நகரத்தில் உள்ள 15 49 வயதுள்ள 74 சதவீத பெண்களுக்கு, கருத்தடை விஷயங்கள் முழுமையாக தெரிந்துள்ளது. கிராமங்களில் 54 சதவீதம் பேருக்கு தான் தெரிந்துள்ளது.

*சர்வே எடுத்த 29 மாநிலங்களில், 26ல், பெண்கள் தான் கருத்தடை ஆபரேஷன் செய்து கொள்ள வேண்டும் என்ற மனப் பான்மை வளர்ந்துள்ளது; பெண்கள் ஆபரேஷன் செய்யும் நடைமுறையும் காணப்படுகிறது.

* நகரங்களில் உள்ள பெண்கள், சராசரியாக அதிகபட்சம் இரண்டு குழந் தைகள் பெறுகின்றனர்; கிராமங்களில் இந்த எண்ணிக்கை மூன்றாக உள்ளது.

http://www.dinamalar.com/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேற்குநாடுகளிலும் பெண்கள் தான் அதிகம் கருத்தடை மாத்திரிகைகள் மற்றும் உபகரணங்களைப் பாவிக்கிறாங்க. காரணம் என்னான்னா.. கரு உருவாகிட்டா கருவை அழிக்கவும் அவங்க தான் அலையனும்.. கரு வளர்ந்திட்டாலும் அவங்களுக்குத்தானே பிரச்சனை. ஆண்களுக்கு என்ன வந்திச்சுது..! ஆண்கள் சிங்கங்களாச்சே.. பெண்கள் பன்றிகளாச்சே குட்டியைப் போட்டிட்டு இருக்க வேண்டியது தான்..! சும்மா தொன தொன என்று பேசாம ஆண்களை மகிழ்விக்கிற காரியத்தைப் பாருங்க.. இதுதான் ஆண்கள் பலரினதும் நிலை..!

கருத்தடை மாத்திரைகளின் பக்க விளைவால் பெண்கள் படும் வேதனைகள் எல்லாம் ஆண்களுக்குப் புரியாதுங்க.. ! இந்த விசயத்தில என் சப்போட் பெண்களுக்குத்தான். அவங்களும் சீவராசிகள் தானே..! மனசு என்ற ஒன்று அவங்கட்ட இல்லை என்றாலும் உயிர் என்ற ஒன்றிருக்கில்ல..! :wub:

Link to comment
Share on other sites

அதுமட்டுமல்ல மேற்கத்தைய நாடுகளில் அதிக பெண்கள் கருகலைப்பும் செய்து கொள்கின்றார்களாம்...சிசுக்கள

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுமட்டுமல்ல மேற்கத்தைய நாடுகளில் அதிக பெண்கள் கருகலைப்பும் செய்து கொள்கின்றார்களாம்... சிசுக்களை கொலை செய்வதிலும் பெண்கள் முன்னிலை வகிக்கின்றன் என்கின்ற போது வெட்கக்கேடாக இருக்கின்றது...... :D:blink::huh::lol:

அதுதான் சொல்லிட்டனில்ல பெண்களிட்ட மனசு என்ற ஒன்றில்லை என்று. மனசிருந்தா கொலைச் செய்ய சொந்த சிசுவை கருவில அழிக்க மனசு வருமா..??! பெண்கள் உயிருள்ள பொருளா மட்டும் இருக்காங்க. மற்றும் படி அவங்கிட்ட மனசு என்ற ஒன்றிருந்து அதிலிருந்து எழும் மனித உணர்வுகள் செத்தே போச்சுது..! :wub:

Link to comment
Share on other sites

அதுதான் சொல்லிட்டனில்ல பெண்களிட்ட மனசு என்ற ஒன்றில்லை என்று. மனசிருந்தா கொலைச் செய்ய சொந்த சிசுவை கருவில அழிக்க மனசு வருமா..??! பெண்கள் உயிருள்ள பொருளா மட்டும் இருக்காங்க. மற்றும் படி அவங்கிட்ட மனசு என்ற ஒன்றிருந்து அதிலிருந்து எழும் மனித உணர்வுகள் செத்தே போச்சுது..! :wub:

அந்தப்பிள்ளையை நன்றாக வளர்த்து ஆளாக்க முடியாது என்று உறுதியாக தெரிந்த பின்னரும் ஒரு தாய் அவ்வாறு முடிவு செய்வதில் தவறில்லை. பிறக்கும் போதும் வளர்க்கும் போதும் வலி அவளுக்கு மட்டும்தான் தெரியும். கருகட்டும் எல்லாப் பிள்ளைகளையும் பெறுவதானால் இன்றும் பல குடும்பங்களில் முன்னர் போல 10, 15 பிள்ளைகள் இருக்க வேண்டுமே. ஏன் உங்கள் குடும்பங்களில் அவ்வாறு சகோதரர்கள் உள்ளனரா? அடுக்கு மாடி வீடுகளில் 10 பிள்ளைகளுடன் குடும்பம் நடத்தமுடியுமா? கருக்கட்டுதல் தவறுதலாக நடைபெறும் ஒரு விடையம். இங்கு எத்தனை பேர் போக்குவரத்து விதிகளை மீறி தண்டம் கட்டாதவர்கள் இருக்கறீர்கள்?

Link to comment
Share on other sites

**** சானக்கியா அப்பிடி வளர்க்க கஸ்டம்னா எதுக்கு குழந்தையை கருவில எடுப்பான் எத்தனையோ பாதுகாப்பு வழிமுறைகள் இருக்கின்றனவே அதை கடைப்பிடிக்லாமே சற்றுநேரமே கிடைக்க கூடிய ஒரு சுகத்துக்காக ஒரு உயிரை கொள்ளுவதும் அதற்க்கு வளக்கிறது கஷ்டம் அப்பிடினு சாக்கு போக்கு சொல்லுதும் வன்மையாக கண்டிக்க தக்கது....

வளக்கிறது கஷ்டம்னா அண்ணா மேற்கத்தைய நாடகள் பல்வேறு சலுகைள செய்யிதே அதை பெற்றுக்கொள்ளிறது தானே...

நீக்கப்பட்டுள்ளது.-யாழ்பிரியா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்தப்பிள்ளையை நன்றாக வளர்த்து ஆளாக்க முடியாது என்று உறுதியாக தெரிந்த பின்னரும் ஒரு தாய் அவ்வாறு முடிவு செய்வதில் தவறில்லை. பிறக்கும் போதும் வளர்க்கும் போதும் வலி அவளுக்கு மட்டும்தான் தெரியும். கருகட்டும் எல்லாப் பிள்ளைகளையும் பெறுவதானால் இன்றும் பல குடும்பங்களில் முன்னர் போல 10, 15 பிள்ளைகள் இருக்க வேண்டுமே. ஏன் உங்கள் குடும்பங்களில் அவ்வாறு சகோதரர்கள் உள்ளனரா? அடுக்கு மாடி வீடுகளில் 10 பிள்ளைகளுடன் குடும்பம் நடத்தமுடியுமா? கருக்கட்டுதல் தவறுதலாக நடைபெறும் ஒரு விடையம். இங்கு எத்தனை பேர் போக்குவரத்து விதிகளை மீறி தண்டம் கட்டாதவர்கள் இருக்கறீர்கள்?

போரில் மரணத்துக்காக கண்ணீர் வடிக்கிறோம்.. சிறுவர்களின் மனித உரிமைகள் பற்றி வாய் கிழியக் கத்திறம்.. பெண்களுக்கு எதிரா வன்முறை என்று கூவிறம்.. ஆனால் மனித உருவாக்கத்தின் அடிப்படையான கருவை அழிக்கிறதை ஆமோதிக்கிறம். என்ன அற்புதமான மனித சிந்தனையும் மனித உரிமைக் காப்பும்..!

கரு உருவாகாமல் தடுக்க எத்தனையோ வழிமுறைகள் இருக்கின்றன. வீதியில் வாகனம் செலுத்துவது போன்ற செய்றபாடல்ல கருக்கட்டல் செயற்பாடென்பது. இரண்டு வளர்ந்த மனிதர்கள் செய்யும் செயலது. சும்மா கண்ணும் கண்ணும் பார்க்க கருக்கட்டும் என்று இயற்கை அனுமதிச்சிருந்தா உங்கள் வாதப்படி கருக்கட்டல் என்பது அக்சிடண்ட் என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இயற்கை கூட சில தயாரிப்புக்களின் ஊடுதான் கருக்கட்டலுக்கான சாத்தியத்தை மனிதர்கள் முன் வைத்திருக்கிறது. அந்தத் தயாரிப்புக்களில் மனிதன் ஈடுபடும் போது தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள முனையின் அவசியமற்ற கருக்கட்டல்களை தடுக்க முடியும். இதற்கான அறிவூட்டல் இப்போ எல்லோருக்கும் வழங்கப்பட்டே வருகிறது. அப்படி இருந்தும் கருக்கலைப்புகள் என்பது ஆண்டு தோறும் பெருகி வரும் விடயமாகிவிட்டது. இவை போர்க்களத்துக்கு அப்பால் பல சிவிலியன்களை கண்ணை மூடிக்கொண்டு சுட்டுக் கொல்வதற்கு நிகரானது என்பதை நாம் மறுதலிக்க முடியாது..!

தற்கொலைப்படைக்கு பயங்கரவாதம் என்று பெயர் சூட்டமுடியும் என்றால் கருக்கலைப்பை சட்ட ரீதியாவோ சட்ட விரோதமாவோ அனுமதிக்கும் அரசுகளும் பயங்கரவாத அரசுகள் தான். உடலெடுத்த உயிர் அழிக்கப்படும் போது பார்க்கப்படும் மனித உரிமைகள் உடலெடுக்காத முளையக் கரு அழிக்கப்படும் போது பார்க்கப்படுவதில்லை. முட்டை தனித்தும் விந்து தனித்தும் அவரவர் உடலில் அழிவது என்பது வேறு விடயம். ஆனால் இரண்டும் இணைந்து உருவான கருவை அழிப்பது என்பதும் ஒரு முழு மனிதனை அழிப்பது என்பதும் உயிரின் அடிப்படையில் ஒன்றுதான்..! :blink::wub:

UN Reports 45 Million Abortions Per Year Worldwide -

ஒரு வருடத்தில் கணக்கிடப்பட்டு கருக்கலைப்பு மூலம் கொல்லப்படும் மனிதர்களின் எண்ணிக்கை சுமார் 45 மில்லியன் (இது இப்ப பத்து வருடத்துக்கு முன்னால் இப்ப இது இன்னும் அதிகரிச்சிட்டுது). இலங்கையின் மொத்த சனத்தொகை சுமார் 19 மில்லியன்.

http://www.cwnews.com/news/viewstory.cfm?recnum=57

45 மில்லியனை சும்மா கொல்லுறீங்க.. 4 பேர் தாய்நாட்டுக்காக தற்கொலைப்படையாகி இறந்த உடன மனித உரிமைன்னு கண்ணீர் வடிக்கிறீங்க.. என்ன அர்ப்புதமான சிந்தனை..???! 45 மில்லியன் + 4க்காக கண்ணீர் வடியுங்கள் நிச்சயம் அதில் நியாயமிருக்கும்..! :D:huh:

Link to comment
Share on other sites

ஐயோ, ஐயோ.....நானும் நினைச்சன் நீங்கள் ஏதோ முற்போக்கு சிந்தனையாளர் என்று!

காலை வைச்சது சேற்றிலை என்று தெரிந்தும், விடாமல் அடம்பிடிப்பதை பிற்போக்கு வாதம் என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்வது?

நீங்கள் ஏதோ உங்கடை விளக்கம்(?) மனக்கட்டுப்பாடு(?) உலகத்தில எல்லோருக்கும் இருக்கவேணும் என்ற எடுகோள் நடைமுறைக்கு ஒவ்வாதது. வாகனமோட்டுவதற்கு கூட பரீட்சையில் சித்தியடைய வேண்டும். கலவியில் ஈடுபடுவதற்கோ அல்லது திருமணம் புரிவதற்கு கூட எந்த மனக்கட்டுப்பாட்டு பரீட்சைகளும் இல்லை. நாட்கூலித் தொழிலாளர்கள், இரந்து பிழைப்பவர்கள், என்று எல்லோருமே மனிதர்கள்தான். அவர்களுக்கும் திரு. நெடுக்ஸ்சிற்கு இருக்கும் அறிவு வேண்டும் என்று எதிர்பார்ப்பது எத்துனை அறிவீனமானது?

கருவாக இருக்கும் தன்னுணர்வு பெறாத மனிதனின் உரிமைக்காக போராடும் நெடுக்கு, அவ்வாறு பிறந்து வீதிச்சைகை விளக்குகளில் நின்று இரந்து வாழும் கோடானுகோடி சிறுவர்களுக்கு வழியை காண்பிக்க வேண்டும். அல்லது அவ்வாறு குழந்தைகளை வளர்க்க போராடி உயிர் மற்றும் மானம் துறந்த பெற்றோரின் இழப்புகளுக்கு தார்மீக உரிமை கோரவேண்டும். அல்லது அவர்கள் கஸ்டத்தில் பங்கெடுக்கவேண்டும்.

பிறக்காத குழந்தையின் உரிமைபற்றி பேசும் இவர்களுக்கு பிறந்த மனிதனின் உரிமையில் தலையிடும் உரிமையை வழங்கியது யார்?

ஆயிரம் மனிதர்கள் விந்துகளாகவும், முட்டைகளாகவும் இறப்பது பாவமில்லையாம், பிறந்த பின் துன்புற்றாலும் கவலை இல்லையாம், ஆனால் கருவாக இறக்க கூடாதாம்!

என்னே கருவபிமானம்!

தலையிடியும் காச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும்!

Link to comment
Share on other sites

**** சானக்கியா அப்பிடி வளர்க்க கஸ்டம்னா எதுக்கு குழந்தையை கருவில எடுப்பான் எத்தனையோ பாதுகாப்பு வழிமுறைகள் இருக்கின்றனவே அதை கடைப்பிடிக்லாமே சற்றுநேரமே கிடைக்க கூடிய ஒரு சுகத்துக்காக ஒரு உயிரை கொள்ளுவதும் அதற்க்கு வளக்கிறது கஷ்டம் அப்பிடினு சாக்கு போக்கு சொல்லுதும் வன்மையாக கண்டிக்க தக்கது....

வளக்கிறது கஷ்டம்னா அண்ணா மேற்கத்தைய நாடகள் பல்வேறு சலுகைள செய்யிதே அதை பெற்றுக்கொள்ளிறது தானே...

**** சுண்டு,

மேலே எழுதியதுதான் உமக்கும் பதில்!

அப்படியே எங்களை போன்ற கீழைத்தேய மக்கள் எல்லோருக்கும் வதிவிட அனுமதி பெற்றுத் தரலாமே!

நீக்கப்பட்டுள்ளது.-யாழ்பிரியா

Link to comment
Share on other sites

என்னைப் பொறுத்தவரை கருக்கலைப்பை கருத்தடை முறையாக பாவிக்கும் அசமந்தப் போக்கை உருவாக்காது பார்த்துக் கொண்டால் போதும். அதற்கு தொடர்ச்சியான விழிப்பூட்டல்கள் தேவை. மற்றும்படி கருக்கலைப்பை தடை செய்வது தவறு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதென்னங்க பெரியவிடயம்! மழைபெய்கிறதென்கிறது இயற்கையானதுதான். நாமதான் விரும்பினால் நனையலாம். இல்லையெனில் பக்குவமாக நல்ல ஒழுக்கில்லாத குடையாக எடுத்துக்கொண்டுபோய் உலாத்திட்டு வர வேண்டியதுதான்.

இல்ல! குடையும் கூடாது, நனையவும்கூடாது என்றால்.... ம்.ம்.. இப்ப நீங்க காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டைக்கு பிரயாணம் செய்யுறீங்க. கோட்டையில இறங்கினால் பிரச்சனையென்டு தெரியுதெல்ல, பேசாம நீர்கொழும்பில இறங்கி பக்கத்தில இருக்கிற தெமிலியை (இளனி) வாங்கிக் குடித்துக்கொண்டு நடந்து போயிடுங்களேன் பிரச்சினை சால்வ்ட். என்ன நா சொல்றது! :wub::D

Link to comment
Share on other sites

என்னைப் பொறுத்தவரை கருக்கலைப்பை கருத்தடை முறையாக பாவிக்கும் அசமந்தப் போக்கை உருவாக்காது பார்த்துக் கொண்டால் போதும். அதற்கு தொடர்ச்சியான விழிப்பூட்டல்கள் தேவை. மற்றும்படி கருக்கலைப்பை தடை செய்வது தவறு.

இந்தத் தலையிடி நமக்கும் வந்தது. அந்த வலியை அனுபவித்தவன் நான். என்னடா இவனே இப்படியா என்று நீங்கள் என்னை கேவலமாக பார்த்தாலும் பரவாயில்லை, எனது அனுபவத்தை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். சிலருக்கு உபயோகமாக இருக்கும்.

அது ஒரு நாள் எதிர்பாராமல் நடந்துவிட்டது. திகைத்துப்போன நான் மனைவியுடன் கலந்துபேசினேன். பொருளாதார நிலமை, மற்றும் ஏற்கனவே பிள்ளை வளர்ப்பில் பட்ட துன்பம், கொழும்பில் அகதி வாழ்க்கை என்று எல்லாவற்றையும் யோசித்து அதற்க்கு அவளை சம்மதிக்க வைத்தேன். மருத்துவரிடம் போனால், அவரோ கைவிரித்துவிட்டார் "என்ன என்னை கம்பி எண்ணச் சொல்கிறீர்களா?" என்றார். பின்னர் ஒரு மருந்து(Gynocide) எழுதிக் கொடுத்து சொன்னார் "தம்பி இது 90% வேலை செய்யாது, எதுக்கும் முயற்சி செய்து பாருங்கள்" என்றார். அந்த மருந்து கூட எல்லா மருந்தகங்களிலும் கிடைக்காது. அவர் சொன்ன இடத்திற்கு சென்று கேட்டபோது ஏதோ கெரோயின் வாங்கவந்தது மாதிரி எங்களை உபசரித்தார்கள். இரகசியமாக மருந்தை தந்து மருத்துவர் கூறியதிலும் அதிக பணம் (ரூபாய் 450/=) வாங்கினார். உடனடியாக இணையத்தில் சென்று அந்த மருந்தைப்பற்றி பார்த்தால், அது பாக்கிஸ்தானில் தயாரிக்கப்பட்டதாம், மேலும் இதனை பல நாடுகளால் அங்கீகரிக்கப்படவில்லை. பக்கவிளைவுகளை பற்றியும் பாவித்தவர்கள் கருத்துக்களங்களில் எழுதியிருந்தனர். வேறு வழியின்றி பாவிப்பது என்று முடிவெடுத்தோம். போட்ட அன்று தலையிடி, வயிற்றுளைவு இருந்தது, பின்னர் அமைதியாக ஒருவாரம் காத்திருந்தும் ஒரு மாறுதலையும் காணவில்லை.

இப்போது மீண்டும் பதட்டம் பலமடங்காகியது இனி முன்வைத்த காலை பின்வைக்க முடியாது, ஏனென்றால் இனிப்பிறக்கும் குழந்தை குறையுடன் பிறப்பது உறுதி. உறவினர் யாரிடமும் உதவி கேட்க வழியில்லை, என்ன நினைப்பார்களோ என்று வெட்கம்! நண்பனிடம் ஒருவனிடம் கேட்டபோது விடிவெள்ளியாய் அவன் கூறினான் "ஒரு இடம் இருக்கிறது முகவரி தருகிறேன் போய் பார்" என்று. உடனடியாக செயலில் இறங்கி அங்கு போனால் அது மருத்துவமனை போல இல்லாமல் எந்தவித முறையான அறிவித்தலும் இன்றி ஒரு மர்மமான இடமாக இருந்தது. ஒரு பெரிய வரவேற்பறையில் பல கதிரைகள் போடப்பட்டு, சோடிகளாக பலரும், தாயும் மகளும் போன்று சிலரும் என சுமார் 100 பேர் வரை அங்கே தலையை குனிந்தபடி இறுகி முகத்துடன் ஏதோ குற்றஉணர்வுடன் மயான அமைதியில் இருந்தனர். யாரிடம் விசாரிப்பது என்று தெரியாமல் அங்கிருந்த ஒருவரை அணுகி மருத்துவரை சந்திக்கலாமா என்று கேட்க அவர் கூறினார் "நானும் தெரியாமல்தான் ஒரு மணி நேரமாக இருக்கிறேன்" என்றார் சிங்களத்தில். ஏனையவர்களும் அப்படித்தான் போல் தெரிந்தது. இனம்புரியாத பயம் மற்றும் குற்ற உணர்வில் கூனிக் குறுகி இருவரும் கிடைத்த கதிரையில் அமர்ந்தோம், சுமார் 2 மணி நேரத்தின் பின் மருத்துவர் வந்து ஒவ்வொருவராக அழைத்தார். எங்கள் முறை வந்ததும் உள்ளே போனோம், நாங்கள் எப்படித் துவங்குவது என்று தயங்கும் போதே "ருபாய் 1000 தாருங்கள்" என்றார் ஏன் எதற்கு என்று கேட்காமல் எடுத்துக் கொடுத்தோம், உடனே ஸ்கான் பண்ணினார், சரியாக ஒன்றரை மாதம் இருக்குமா? என்று கேட்டார், நாங்கள் ஆம் என்றோம், சரி ரூபாய் 9,000 செலவாகும் என்றார். நாங்கள் வேறு வழியின்றி தலையை ஆட்டினோம், ஒரு துண்டில் தொகையை எழுதி ஒரு கிழமை கழித்து அதிகாலை வரும்படி கூறினார். உணவேதும் சாப்பிடாமல் காலை 5 மணியளவில் அங்கே சென்றோம் அங்கே எங்களுக்கு முன்னரே ஒரு 30 பேர் வரையில் நின்றனர். பின்னர் எந்த ரசீதும் இன்றி ஒரு பெண் வந்து பணத்தை வாங்கினாள், அப்போது தான் கவனித்தேன் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு தொகை அறவிடப்பட்டது. பின்னர் எல்லாப் பெண்களையும் சத்திரசிகிச்சை அறைக்கு அழைத்துச் செல்லும் வழியில் இன்னும் ஒருவர் ருபாய் 500 கேட்டார், ஏன் என்று தெரியாமல் கொடுத்தேன். பிறகு அங்கு நின்ற ஒருவர் கூறினார் போலிசுக்காம்.

என்ன நடக்குமோ என்று பயமாக இருந்தது. மனைவிக்கு எதுவும் நடந்துவிடக் கூடாது என்று நினைத்துக் கொண்டு சுமார் 3 மணி நேரம் வெளியில் காத்திருந்தேன். அப்போது ரூபாய் 20,000 செலுத்தியவரிடம் மெதுவாக கதை கொடுத்தேன். அவர் சொன்னார் மனைவிக்கு 4 மாதமாமாம்! 5 1/2 மாதம் ஆனால் நோயாளியை பாரம் எடுக்கமாட்டாரம் இந்த மருத்துவர். ஆனால் அவரோ என்னை விட ஏழை போல தெரிந்தார். சிலாபத்திலிருந்து இரண்டு பிள்ளைகளுடன் வந்திருந்தார். காரில் கூட சிலர் வந்திருந்தனர். 7 பேர் ஒன்றாக ஒரு வானில் வந்திருந்தனர். அவர்களுடன் வந்த சாரதி அந்த இடத்திற்கு மிகவும் பரீட்சியமானவர் போல தென்பட்டார். எல்லாவற்றிலும் அவருடன் வந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. அவருடன் வந்தவர்கள் பதுளையிலிருந்து வந்திருந்தனர். அவர் ஒரு தரகராம். அங்கே ஒரு மருத்துவ காவு வண்டி ஒன்று நின்றது. ஏதாவது சிக்கல் என்றால் உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லவாம்.

அப்போது இருவர் சிங்களத்தில் கதைத்தது காதில் விழுந்தது, அரசாங்க மருத்துவமனையில் கூட இதனை சில விசேட சந்தர்ப்பங்களில் செய்வார்களாம். அதாவது பெண் பாலியல் வல்லுறவுக் குள்ளானதாக நீதிமன்றத்தின் விசேட உத்தரவின் பேரில், சுற்று வட்டாரத்திலேயே இந்த மருத்துவமனையில்தான் இது நீண்டகாலமாக நடைபெறுகிறதாம். காரணம் உயர் மட்டத்தினரின் அணைவாம். கருத்தடை சாதனங்கள் பொருத்துவதும் நடைபெறுமாம்.

எனது நிலையை நினைக்க எனக்கே வெறுப்பாக இருந்தது. ஏன் இப்படி என்று யோசித்தேன். ஏதற்காக இதை சட்டவிரோதம் என்கிறார்கள்? இப்படி தாங்கள் உழைப்பதற்காகவா? ஒரு வாறு சிக்கல் எதுவும் இன்றி சிகிச்சை முடிவடைந்தது. கனத்த இதயத்துடன் வீடு திரும்பும் போது மனைவி கூறினாள் இதைவிட பிரசவம் மேல் என்று!

கருக்கலைப்பு என்பதில் கருவைவிட கலைப்பவர்களுக்கே வலி அதிகம்! அதை புரிந்துகொள்ளுங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பியக்கா தலைப்பைத் தொடங்கியதற்காக கண்ணீர் விட்டு அழுவது எனக்குக் கேட்கின்றது. வேற யாருக்காவது கேட்குதோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முற்போக்காக எழுதுவதற்கும் இலவச அறிவுரைகள் செய்வதற்கும் தாராளமாய் பலர் உள்ளனர்.. விரும்பினால் கருக்கட்டியதற்காகப் பெண்களையும் வசைபாடலாம்.. ஆனால் பிரச்சினை மிகவும் ஆழமானது என்பதைப் பலர் புரிந்துகொள்ளவதில்லை..

அமெரிக்காவில் உள்ள pro-life பிரச்சாரகர்களும், கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவர்களும், இந்திய உபகண்டத்தில் உள்ளவர்களும் கருத்தடையை எதிர்ப்பவர்கள்.. அதைப் போலவே கருத்தடையை ஆதரிக்கச் சமூக, பெருளாதாரக் காரணிகளைத் துணைகொண்டுள்ள நாடுகளும் உள்ளன. எனினும் கருத்தடையை ஆதரிக்கும் பிரச்சாரங்களை விட கருவுறாமல் இருக்க செய்யப்படும் பிரச்சாரங்களே அதிகம்.. பெண் கருவுறாமல் இருப்பது அதிகம் ஆணில்தான் தங்கியுள்ளது, குறிப்பாக இந்திய உபகண்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆணுறையைப் பாவிக்க விரும்புவதில்லை..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ, ஐயோ.....நானும் நினைச்சன் நீங்கள் ஏதோ முற்போக்கு சிந்தனையாளர் என்று!

காலை வைச்சது சேற்றிலை என்று தெரிந்தும், விடாமல் அடம்பிடிப்பதை பிற்போக்கு வாதம் என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்வது?

நீங்கள் ஏதோ உங்கடை விளக்கம்(?) மனக்கட்டுப்பாடு(?) உலகத்தில எல்லோருக்கும் இருக்கவேணும் என்ற எடுகோள் நடைமுறைக்கு ஒவ்வாதது. வாகனமோட்டுவதற்கு கூட பரீட்சையில் சித்தியடைய வேண்டும். கலவியில் ஈடுபடுவதற்கோ அல்லது திருமணம் புரிவதற்கு கூட எந்த மனக்கட்டுப்பாட்டு பரீட்சைகளும் இல்லை. நாட்கூலித் தொழிலாளர்கள், இரந்து பிழைப்பவர்கள், என்று எல்லோருமே மனிதர்கள்தான். அவர்களுக்கும் திரு. நெடுக்ஸ்சிற்கு இருக்கும் அறிவு வேண்டும் என்று எதிர்பார்ப்பது எத்துனை அறிவீனமானது?

கருவாக இருக்கும் தன்னுணர்வு பெறாத மனிதனின் உரிமைக்காக போராடும் நெடுக்கு, அவ்வாறு பிறந்து வீதிச்சைகை விளக்குகளில் நின்று இரந்து வாழும் கோடானுகோடி சிறுவர்களுக்கு வழியை காண்பிக்க வேண்டும். அல்லது அவ்வாறு குழந்தைகளை வளர்க்க போராடி உயிர் மற்றும் மானம் துறந்த பெற்றோரின் இழப்புகளுக்கு தார்மீக உரிமை கோரவேண்டும். அல்லது அவர்கள் கஸ்டத்தில் பங்கெடுக்கவேண்டும்.

பிறக்காத குழந்தையின் உரிமைபற்றி பேசும் இவர்களுக்கு பிறந்த மனிதனின் உரிமையில் தலையிடும் உரிமையை வழங்கியது யார்?

ஆயிரம் மனிதர்கள் விந்துகளாகவும், முட்டைகளாகவும் இறப்பது பாவமில்லையாம், பிறந்த பின் துன்புற்றாலும் கவலை இல்லையாம், ஆனால் கருவாக இறக்க கூடாதாம்!

என்னே கருவபிமானம்!

தலையிடியும் காச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும்!

வாகனமோட்டுவதற்கு பயிற்சி அளிக்கினம்.. ஆனால்... திருமணம் செய்யும் ஆணுக்கும் பெண்ணுக்கும்.. பயிற்சி அளிக்கினமோ..??! :)

தனிமனிதர்கள் தாங்க விடுற தப்புக்காக கருக்களை அழிப்பது எந்த வகையில் நியாயம். கருக்கட்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டியதுதான் நியாயம். அதைவிடுத்து உருவான கருவை அழிப்பதை மனித உரிமை மீறலாகக் காண முடியாது என்ற வாதம் எந்த வகையிலும் மானுடம் சார்ந்து எழ முடியாது. அப்படி எழுமாயின் போர்க்களத்தில் மடியும் மனிதனுக்காகவும் நீங்கள் கன்ணீர் விட அருகதையை இழக்கிறீர்கள்..! கருவில் அழிஞ்சால் என்ன பிறந்து அழிஞ்சால் என்ன அழிவது என்னவோ மனித உயிர்தான்..! இதை விளங்கிக் கொள்ள முற்போக்குச் சிந்தனை அவசியமில்லை. சர்வ சாதாரண சிந்தனையே போதும் சாணக்கியன்..! :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.