Jump to content

எஸ் பி. பாலா Vs சு ப தமிழ்ச்செல்வன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

:wub: இடி வீழ்ந்து நொறுங்கிய இதயத்தோடு ஒரு வாரம் போய்விட்டது. இன்னும் செல்வன் அண்ணா பற்றி வரும் செய்திகள் பார்க்கும்போது விம்மல் முட்டுகிறது. எல்லாமே வெறுமையாகி விட்டது போன்ற ஒரு உணர்வு.

சரி. இனி விசயத்துக்கு வருவோம். என்னுடன் வேலை பார்க்கும் இரண்டு யாழ்பாணத்து தமிழ் நண்பர்களை சென்ற திங்கட்கிழமை சந்தித்தேன். ஒருவரிடம் கண்டவுடன் கேட்ட கேள்வி, "என்னப்பா, எங்கட தமிழ்ச்செல்வனை கொண்டுட்டாங்கள்". அதற்கு அவர் கேட்ட கேள்வி, "எந்த தமிழ்ச்செல்வனை ?". எனக்கு தூக்கிவாரிப்போட்டுது. "அதுதானப்பா, எங்கட அரசியல் துறைப்பொறுப்பாளர்" என்று நான் சொன்னேன். அதற்கு அவர் கேட்ட கேள்வி," சண்டையிலயோ செத்தவர் ?". அதற்கு மேல் என்னத்தைச் சொல்ல ?

மற்றவரிடம், "என்னண்டப்பா இந்த வீகெண்ட் போச்சுதெண்டே தெரியவில்லை, வாழ்க்கையே வெறுத்துப் போச்சுது" எண்டு சொன்னேன். அதற்கு அவர், "சண்டே பாலசுப்ரமணியம் புரோக்ராம் அந்தமாதிரி,ஒவ்வொரு நிமிஷமும் அநுபவிச்சுப் பார்த்தேன்" எண்டு சொன்னார்.

எங்களுக்காக 20,000 பேர் உயிரக் குடுத்து விட்டு போயிருக்கிறாங்கள், ஒரு சந்ததியே தங்கட வாழ்வை அர்பணிச்சு களத்தில நிற்குது. இங்கு எங்களுக்கு ஆர் தமிழ்ச்செல்வன் எண்டு தெரியவில்லை, பாட்டுப்பாடுற ஒருவர் பெரிய ஆளாப் போட்டுது.

நாங்களும் தமிழர் !!! உருப்பட்டமாதிரித்தான்.

தலைப்பு தமிழ்ப்படுத்தப்பட்டுள்ளது- யாழ்பாடி

Link to comment
Share on other sites

இப்படி கனபேர் உள்ளனர்... புலத்திலும்.... நிலத்திலும்.... இவர்களை பற்றி நாம்கதைத்து பிரியோசனம் இல்லை... தாங்களே ஒருகாலம் உயிரோடு இருந்தால் உணர்ந்துகொள்வார்கள்... அல்லது உணர்தப்படுவார்கள்... :wub: அதற்கான தண்டனையையும் இந்தகாலத்திலையே பெற்றுக்கொள்வார்கள். :lol: இதை நாம் யாவரும் யதார்தத்துடன் அறிந்து கொள்ளவோண்டும். :)^_^

Link to comment
Share on other sites

ரகுநாதன் அங்கிள் நீங்களும் அவுஸ்ரெலியாவோ :D இங்கே இருகிற ஆட்களை பற்றி தெரியாதோ :) !!பிரிகேடியர் தமிழ் செல்வன் யார் என்று தெரிந்தாலும் தெரியாத மாதிரி யார் என்று கேட்பார்கள் அவர்களிடம் கதைத்தா எமக்கு தான் விசர் வரும் :( !!அவர்களின் பேச்சு ஒன்று செயல் ஒன்றாக இருக்கும் இதற்கு எல்லாம் நீங்க பீல் பண்ண கூடாது ^_^ இன்னும் இப்படி பல கூத்து எல்லாம் நடக்கும் போறதிற்கு ஒவ்வொரு காரணமும் சொல்லுவீனம் :wub: !!போறது அவர்களின் சுகந்திரம் ஆனா கதைக்கும் போது பார்க்க வேண்டும் "தமிழ் தேசியம்" தலைவர் இப்ப அடிகிறார் இல்லை என்று அந்த மாதிரி கதைப்பார்கள் :( !!பிறகு பாலாவிற்கு கை தட்டி கொண்டு இருப்பார்கள் :lol: .........என்றாலும் நேற்றைய அஞ்சலி கூட்டத்தில் சனம்திரளாக வந்து அஞ்சலி செலுத்தி சென்றது மகிழ்வாக இருகிறது என்றே சொல்லலாம் :( !!!நீங்களும் வந்தனீங்களோ அஞ்சலி கூட்டதிற்கு!!ஆகவே நீங்க பீல் பண்ண வேண்டாம் அங்கிள்!! :)

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:wub: நீங்கள் சொல்வது சரிதான். இதையும் பாருங்கள்.

அதே வேலைத்தளத்தில் என்னுடன் பெங்களூரில் பிறந்து வளர்ந்த ஒரு தமிழரும் வேலை செய்கிறார். அவரின் மாமனார் சமீபத்தில்தான் ஊறிலிருந்து வந்திருந்தார். அவர் தீவிர ஈழ ஆதரவாளர் என்றும் என்னை கட்டாயம் சந்திக்க வேண்டும் என்று ஆவலோடு இருப்பதாகவும் எனது நண்பர் கூறினார். அதனால் ஒருமுறை அவரது வீட்டிற்குச் சென்றிருந்தேன்.

எமது சம்பாஷனை கர்னாடகத்தில் உள்ள தமிழர்களின் பிரச்சனைகளுடன் ஆரம்பமாகியது. தமிழ்நாட்டிலிருந்து பெங்களூர் தனியே பிரிக்கப்பட்டதும், 80 % பெரும்பான்மயாக இருந்த தமிழர் அங்கு சிறுபான்மையாக்கப்பட்டதும், தமிழரின் வாழ்வாதாரங்கள் சிதைக்கப்பட்டதும் அவர் வாயிலாக சொல்லக்கேட்டேன். காவேரி ஆற்றுப்பிரச்சனையை ஒட்டி கர்நாடகத்தில் தமிழர் அடித்து நொருக்கப்பட்ட வரலாறு அங்கு விரிந்தது.

கர்நாடகத்தில் இருந்து மெதுவாக தமிழ்நாட்டிற்குள் நுழைந்தோம். ஆரியப் பார்ப்பனியரால் திராவிடர் படும் அவலங்களும், தமிழரல்லாத முதலமைச்சர்களால் ஆழப்படும் தமிழ்நாட்டில் தமிழ் மொழியும் தமிழ் கலாச்சாரமும் எவ்வாறு திட்டமிட்டு மழுங்கடிக்கப்பட்டது என்பதும் நான் அறிந்ததற்கும்மேல் அதிகமானது என்றும் தெரிந்து கொண்டேன். ராஜீவ் காந்தி என்ற ஆரிய மனிதரின் பதவித்திமிருக்காக இலங்கைக்கு அனுப்பப்பட்ட இந்திய ஜவான்கள் செய்த அட்டூழியங்களில் இருந்து 1991 ஆம் ஆண்டு புலிகளல்லாத ஒரு குழுவினரால் ராஜீவ் கொல்லப்படும்வரை தமிழ்நாட்டில் நடந்தேறிய சம்பவங்களும் பிண்ணனிகளும் அங்கு அக்கு வேறு ஆணி வேறாக எனக்கு விளக்கப்பட்டது. நீறு பூத்த நெருப்பாக அங்கு இருக்கும் தமிழ் ஈழ ஆதரவும், அவ் ஆதரவை எப்படியாவது முளையிலேயே கிள்ளி எறிய கங்கணம் கட்டிக்கொண்டு திரியும் ஆரியப் பார்ப்பனிய ஊடகங்களினதும் சோ, ராம் மாணிக்கலிங்கம், சுப்ரமணியசுவாமி, நாராயணன், ஜெயலலிதா போன்ற தனி மனிதர்களினதும் செயற்பாடு பற்றியும் எனக்குக் கூறப்பட்டது.

ஒறுவாறாக ராமேஷ்வரமூடாக இலங்கயை அடைந்தோம். இப்போது எனது முறை என்று எண்ணி நான் ஆரம்பிக்கும்போது அவரே தொடர்ந்தார். எமது தேசியத்தலைவர் பற்றிய அவரின் புரிதலுடன் கதை ஆரம்பமாகியது. எடுத்த எடுப்பிலேயே பழந்தமிழ் கடவுளாகிய முருகனுடன் எம் தலைவர் ஒப்பிடப்பட்டார். ஒவ்வொரு முறையும் எம் தலைவர் பற்றி அவர் விழிக்கும்போதும்"மேதகுத் தமிழ்த் தலைவன்" என்று அவர் சொல்லக்கண்டு எனக்கே கண்கள் பனித்தன. "புலிகள் வெல்லப்படமுடியாத இலக்கிய காலத்து தமிழ் மறவர்கள்" என்றும் சோழப்பேரரசின் தொடர்ச்சியே இன்றய தமிழ் ஈழம் என்றும் அவர் சொல்லிக்கொண்டே போனார்.

தலைவர் பற்றியும் புலிகள் பற்றியும் பேசும்போதெல்லம் அவர் கண்களில் பிரகாசமும் குரலில் தழதழப்பும் கண்டேன்.

யாரிந்த மனிதர் ? எமது ஈழ மண் என்ன வர்ணம் என்று தெரியாது, எம் தலைவரயோ புலிகளையோ நேரில் பார்த்தது கூடக்கிடயாது. ஆனாலும் ஈழத்தமிழன் மேல் அசைக்கமுடியாத நம்பிக்கையும் பாசமும் வைத்திருக்கிறார். "நீங்கள் வெல்வீர்கள்","பிரபாகரன் படை வெற்றி காணும்" என்று எனக்கே நம்பிக்கை ஊட்டுகிறார். இறுதியில்"எங்களை மன்னித்து விடுங்கள், எங்களை தமிழர்கள் என்று கூற நாங்கள் வெற்கப்படுகிறோம்" என்று நாத்தளதளக்கிறார்.

நான் வாயடைத்துப்போனேன். நான் கூற விழைந்தவற்றையெல்லாம் இந்த 60 வயது முதியவர் கூறிக்கொண்டு செல்கிறாரே என்ற வியப்பும் ஒரு ஈழத்தமிழனையாவது காணவேண்டும் என்ற ஆவலும், ஈழத்தமிழர் மேல் அவர் வைத்திருக்கும் அசைக்கமுடியாத நம்பிக்கையும் என்னைக் கட்டிப்போட்டு விட்டது. என்னால் பேச முடியவில்லை. ஒருகணம் அழுதே விட்டேன்.

நீண்ட மவுனத்தின் பின் நான் விடை பெற்றேன். " நன்றி ஐய்யா", "மறுமுறை உங்களைச்சந்திக்கும்போது நல்ல செய்தியுடன் வருகிறேன்"என்று கிளம்பி வந்தேன். வரும் வழியெல்லாம் அந்த முதியவரின் தெளிவும் தமிழ்பற்றும் எம்மில் பலருக்கு இருந்தால் தலைவர் இவ்வளவு இழப்புகளை தாங்க வேண்டி இருந்திருக்காது என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்.

இவர்களும் தமிழர்கள்தான் !!!!!!!!!!!!!!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:wub: நன்றி யமுனா,

நானும் சிட்னிதான். புதனிரவு எனக்கு நயிட் ஷிfட் வேலை. மிகுந்த மனவருத்ததுடன் வேலைக்குப் போனேன். ஆனாலும் தமிழ்செல்வன் அண்ணாவினது நினைவுகள் என்னை விட்டு அகலாது. மாவீரர் தினத்துக்கு எப்படியாவது வருவேன். அன்று எனது தம்பியினது ஆறாவது

வீரவணக்க நாள்.

அன்புடன்

ரகுனாதன் அண்ணா.

Link to comment
Share on other sites

மெல்பேனில் சனி இரவு எமது பல்கலை கழக மண்டபத்தில் நடந்தது படிப்பதற்காக பல்கலைகழகம் சென்றிருந்தேன் ஏராளமானவர்கள் ஒரு தலைவனை இழந்து விட்டோம் என்ற துக்கமில்லாது சென்றார்கள் இவர்களுக்கு அஸைலம் அடிக்கத்தான் புலிகள் தேவை அதற்கு பிறகு சுயநலவாதிகள்.

மெல்பேனில் தமிழ்செல்வன் அண்ணாவின் நினைவு நிகழ்வினை ஒழுங்கு படுத்தி இருந்திருகிரார்கள் ஆனால் நான் அறியவில்லை தமிழ்நாதத்தில் காண முடியவில்லை அதற்கு செல்ல முடியவில்லை என வருத்தமாக இருக்குது

Link to comment
Share on other sites

அவுஸ்ரேலியத் தமிழர்கள் தேவையில்லாமல் அஞ்சி நடுங்கின்றார்கள் போல் தெரிகிறது.

அஞ்சலி நிகழ்வில் தமிழ்செல்வனுடன் மரணித்த மற்றைய போராளிகளின் சீருடைகள் பூக்களால் கிராபிக் செய்து மறைக்கப்பட்டிருந்தது.

சீருடையோடு உள்ள படத்திற்கு அஞ்சலி செய்வது அவுஸ்ரேலிய சட்டத்தின் எந்தப் பிரிவின் படி குற்றம்?

இது தேவையற்ற அர்த்தமற்ற அச்சம்!

எனக்கு இந்தத் தமிழர்களை நினைத்தால் கோபமாக இருக்கிறது. அவர்கள் போடுகின்ற தடைகளுக்கு மேலால், எமக்கு நாமே தடைகளை போட்டுக் கொண்டு இருக்கிறோம்.

Link to comment
Share on other sites

அரசியல் துறையை சார்ந்தவர்களாக காட்ட முற்பட்டிருக்கலாம் எனக்கு சரியாக தெரியாது சபேசன் பயப்பிட வேன்டிய அவசியம் இல்லை தேசிய கொடி ஏற்றப்பட்டுதானே இருக்குது சிலவேளை நான் சொன்னது காரனமாக இருக்கலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:lol: இடி வீழ்ந்து நொறுங்கிய இதயத்தோடு ஒரு வாரம் போய்விட்டது. இன்னும் செல்வன் அண்ணா பற்றி வரும் செய்திகள் பார்க்கும்போது விம்மல் முட்டுகிறது. எல்லாமே வெறுமையாகி விட்டது போன்ற ஒரு உணர்வு.

நாங்களும் தமிழர் !!! உருப்பட்டமாதிரித்தான்.

தலைப்பு தமிழ்ப்படுத்தப்பட்டுள்ளது- யாழ்பாடி

விடுதலை உணர்வு உள்ள ஒவ்வொரு தமிழனும் நிலைகுலைந்து போன நாள் நவம்பர் 2ம் திகதி. காலை வேலைக்கு கிளம்ப முன்னர் சாமிப்படத்தடியில் கும்பிட்டுவிட்டு திருநீற்றைப் பூசிக்கொண்டு நிமிர்ந்த போது அப்பா சொன்னார் "தமிழ்ச்செல்வனையெல்லோ கொண்டுபோட்டாங்கள்'...!! அவர் சொல்லி முடிக்கவும் " என்ன? என்ற அதிர்வோடு கூடிய என் உணர்வலைகளோடு என் ஒட்டுமொத்த உடலுமே உறைந்துபோனது போன்ற உணர்வு.

தமிழ்ச்செல்வன் அண்ணா. சொல்லும் போதே அவர் உதட்டில் பூக்கின்ற புன்னகைதான் நெஞ்சை நிறைக்கும்!.

அன்றைய நாள் எனக்கு வேலை ஓடவே இல்லை!.ஓடிவந்து யாழையே பார்த்தேன். 'அண்ணா நிஜமாகவே இது உண்மையா அண்ணா? பொய்யாகிப்போகக்கூடாதோ இச்செய்தி!..என்று நெஞ்சு துடித்தபடியே இருந்தது!.

முத்தமிழ் என்ற குழுமத்தின் மூலம் பல இந்திய உறவுகள் எனக்கு உண்டு. அவர்கள் அனைவருமே மிகப் பெரும் சோகத்தில் ஆழ்ந்திருந்தனர். மஞ்சூரார் என்றொரு அண்ணன் குறிப்பிட்டார் நாங்கள் ஆழமாக நேசிக்கின்ற மனிதர்கள் எல்லாம் ஏன் இளம் வயதிலேயே மரணத்தைத் தழுவிக்கொள்கின்றார்கள்?

இன்னொருவர் எனக்குத் தொலைபேசினார். தங்கையே விடுதலைப்போராட்டத்தில் இணைந்தவர் உயிருக்கு உத்தரவாதமில்லை, உங்கள் தலைவர் நாம் வியந்து பார்க்கும் போற்றும் ஒரு நிறைமனிதர், நீங்கள் இப்படிக் கலங்குவதை உங்கள் தமிழ்ச்செல்வன் அண்ணாவும் சரி தலைவரும் சரி விரும்ப மாட்டார்கள்.

உங்கள் செயற்பாடு எல்லாம் ஈழத்தின் உண்மை நிலையை உலகமக்களூக்கு குறிப்பாக தமிழகத்தில் உள்ளவர்களுக்குப் புரிய வையுங்கள் தெளிய வையுங்கள். அவர்களுக்கு ஈழத்தில் என்ன நடக்குதென்ற உண்மையான செய்தி தெரியவே தெரியாது". ! உங்களைப் பயங்கரவாதி என்று சித்தரிக்கும் கூட்டம் தான் அங்கு நிறைய..அதைத் தெளிவுபடுத்துங்கள் என்றார்.

கலங்கி நிற்காமல் நமது கடமைகளை மிகத் துரிதப்படுத்த வேண்டும் என்று தோன்றியது. அதற்கான என் முயற்சியில் நான் இருக்கின்றேன்.

நன்றி!!..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பலருக்கு அசைலம் அடிக்கத்தான் நாட்டில புலியும் பிரச்சனையும் இருக்க வேணும் எண்டு நினைக்கினம். தங்களுக்கு அசைலம் அல்லது வதிவிட வாசாக் கிடைச்சிட்டாக் காணும்.. போராட்டமென்ன புலியென்ன...அப்படித்தான் பலர் புகலிடத்தில். :lol::o

Link to comment
Share on other sites

கடைசியாகவந்த சிறப்புப்பார்வையை பாருங்கள்

யதார்தத்தை விழங்கிக்கொள்ழுங்கள். பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வனின் மறைவுகுறித்து கவலைப்பட்டு ஒன்றையும் காணோம்.. ஆனால்.... (அந்த மறைமுக.... உலகஅரசியல்மொழியில்.... உலகுக்கும்.... உரியவருக்கும்.... சொல்லி உள்ளனர் விளங்கினால் சரி....) :lol: அவர்கள்.... எமதுதாகம்... என்றும் ஒன்றாகவே இருக்கும்.... அது தமிமீழத்தாயகம். :o

Link to comment
Share on other sites

ஆனால் சிட்னி அஞ்சலி நிகழ்விற்க்கு வந்திருந்தோர் தொகை மிக மிக அதிகமாக இருந்ததது ம்ண்டபம் கீழ் மாடி மேல் மாடி என நிறம்பி வழிந்திருந்தது மக்கள் வந்து வந்து சென்று கெர்ண்டிருந்தார்கள்.. ஆகவே இது மனதுக்கு சற்று ஆறுதல் தர கூடியதாக இருந்தாலும் இப்படியான பேரிழப்புகளின் ழூலம் தான் சிட்னியில் ஒரு எழுச்சியை உணர்சிகளை பார்க்க கூடியதாக இருக்கின்றது என்பது சற்று மனதை கலங்க செய்கின்றது....

எது எப்படி இருப்பினும் ஒரு குறுகிய கால இடைவேளையில் மக்கள் ஆயிரக்கனக்கில் வந்திருந்தது சிறப்பே....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:rolleyes: நீங்கள் சொல்வதில் எனக்கும் பூரண சம்மதம். தமிழ்செல்வன் என்னும் சாகரம் எம்மிடம் எதிர்பார்ப்பதுவெல்லாம் தனக்காக துக்கம் கொண்டாடிக் கொண்டு இருப்பதையல்ல. தான் விட்டுச் சென்ற பணியை தொடர தலைவருக்குப் பின்னால் அணி திரள வேண்டும் என்பதைத்தான்.

புலத்தில் இருக்கும் எமக்கு இதில் பெரும் கடமையொன்று இருக்கிறது. எமது போராட்டம் விரைவு பெற நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை விரைவில் தீர்மாணிக்க வேண்டும். இலத்திரணியல் சாதனங்கள் இதில் எமக்கு உதவியாக இருக்கும். குறிப்பாக யூ டீயூப் போன்ற இணயத் தளங்களில் தர்க்க ரீதியான பிரச்சாரங்களின் மூலம் எமது விடுதலைக்கான தேவயை நியாயப்படுத்தலாம். சிங்கள ஆக்கிரமிப்பின் அட்டூழியங்களை புகைப்படம் மற்றும் ஒளிப்படம் மூலம் அம்பலப்படுத்தலாம். மேலதிகமாக சிங்கள கோமாளி அமைச்சர்களின் தமிழ்க் காழ்புணர்ச்சி சொற்பொழிவுகளை தகுந்த தலைப்புகளின் கீழ் அம்பலப்படுத்தலாம்.

எல்லாவற்றயும் விட தமிழீழ வெற்றிக்காக இங்கு பாடுபடும் நம்மவர்களை ஊகுவிப்பதுடன் அவர்களுக்கு தேவயான உதவிகளயும் செய்யலாம்.

எங்களில் எத்தனை பேர் நிதி கேட்டு வரும் தமிழீழ ஆதரவாளர்களை இன்முகத்துடன் வரவேற்று இருக்கிறோம் ? இந்த நிதியில்லாமல் தானே எங்களால் செல்வனை கொன்ற அந்த கிfஈரை சுட்டு வீழ்த்த முடியவில்லை ?

சிந்திப்போம்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம்மட அப்பு சிட்னிவிடயம் என்றால் எதாவது எழுதுவார் .சத்தத்தை கானவில்லை என்ன விசயம்?

Link to comment
Share on other sites

இவற்றைப் போல தான் இஞ்கும் சிலரின் செயற்பாடுகளை நிளைக்கும் போது கவலையல்ல இவர்களிற்கு

இவ்வாறு நடைபெறும் போது நாமும் பதிலுக்க இவ்வாறே செய்ய வேண்டம்

உதாரணத்திற்கு ஒன்ளை தெரிவிக்க விரும்புகின்றேன்.

கடந்த வெள்ளிக்கிமை தமிழ்ச்செல்வன் அண்ணா வீரச்சாவு என்றதும் பெரும்பாலன கொழும்பு வாழ் உணர்வுள்ள தமிழர்கள் மிகக் கவலையடைந்நத பொழுதும் அவற்றை வெளியில் காட்டிக் கொள்ளாது மெனமாக இருந்தனர். ஆனால் சில கேவலம் கெட்ட பிறவிகள் முக்கியமாக வெள்ளவத்தை பகுதியில் உள்ள சில வாத்த நிலையங்களில் சினிமாப் பாடல்கள் வானோலியில் ஒலிபரப்பிக் கொண்டிருந்தமை மிக வேதனையான விடயம்

அதாவது தமக்கும் தமிழ் தமிழிழம் என்பவற்றிக்கும் எந்த சம்பந்தம் இல்லை என்ற வகையில் இருக்கிற்னார்ளக் .

இதைவிட இன்னொன்று தமிழ்ச்செல்வன் அண்ணையின்ர வீரச்சாவு பற்றி ஓருவருடன் கதைத்துக் கொண்டிருந்த பொழுது அவர் சொன்னார் தமிழ்ச்செல்வனை இழந்தது பெரிய விடயமல்லாவாம் ஏன் என்றால் அவர் படிக்கவில்லையாம் ஆனால் இதிலர் கேவலம் என்னவென்றால் இதை சொன்வருக்கோ சாதராரண தரத்ததை தவிர வேறதுவும் இல்லை அதுமட்டுமல்ல அவர் கொழும்பில் வாழ்வதும் புலம்பெயர் நாட்டில் இருந்து கிடைக்கும் பிச்சை யில் அதற்குள் கதைக்கள் வேறு.

இன்னொரு சம்பவம் ஓரளவு வயதானவருடன் கதைக்கும் போது சொன்னார் " உங்கட ஆளை போட்டுட்டாங்காங்களாம்" என்று அப்ப அவருக்கு நான் சொன்ன பதில் பேச்சுவாhத்தைக்கு போகேக்க மட்டும் எங்கட பொடியள் எங்கட இயக்கம் எங்கட் தம்பி எங்கட அண்ணi எண்டு நொடிப்பியள் சண்டை என்றவுடன் படிக்காதவர் இயக்கத்திற்கு .ழப்பில்லை என்ற நாடகங்களை நடியாதேங்கோ எப்பவாவது சிங்களவன் கொழும்பலி இருக்கிற ஈடகளை போட வெளிக்கிட்டால் முதல்ல உங்கள போல ஆட்களை காட்டிக் கொடுக்கிறது நான் தான் என்று இதைவிட இப்பிடியானதுகளிற்கு வேற பதில்லை.

Link to comment
Share on other sites

சமுதாயத்தில இப்படிப்பட்ட பலர் இருக்கத்தான் செய்வார்கள். இது இயல்புதான். இவர்களை மாற்றவும் முடியாது இவர்கள் ஆதரவாக கதைப்பதால் விடிவும் வந்துவிடாது. சமுதாயத்தில இருக்கிற 10 முதல் 20 வீதமானவர்களால்த்தான் மாற்றம் ஏற்படுகிறது. அவர்கள்தான் ஆணிவேர். அவர்கள் தான் செயல்வீரர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்று நடந்த எஸ்.பி பாலாவின் நிகழ்ச்சிக்கு ஈழ ஆதரவு பேசும் மக்கள் போகாம தங்களது ஆதங்களை காட்டி இருந்தா அன்று நிகழ்ச்சி நடத்த தென்னிந்தியாவில் இருந்து வந்திருந்த சகல கலைஞர்களுக்கும் ஈழதமிழர்கள் ஒரு உன்னதமான இலட்சியதிற்காக தான் போராடுகிறார்கள் என்பது வெட்ட வெளிச்சமா விளங்கி இருக்கும் அதற்கு போகாம விட்டிருந்தால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு பண நட்டம் நிச்சயமாக ஏற்பட்டிருகாது ஏனேனில் முன்கூட்டியே பணம் கொடுத்து டிக்கேட் வாங்கி விட்டார்கள்.தமிழ் செல்வனின் பூதவுடல் விதைக்கபட முன்னரே நாம் அதில் கலந்து கொள்கிறோம் இதில் இருந்து நாம் ஈழ ஆதரவு பேச்சளவிள் தான் செயலில் ஒரு இசை நிகழ்ச்சியை கூட புறகணிக்க முடியவில்லை ஆனால் உயிர்தியாகம் செய்து இராணுவ தளங்களை தாக்கும் போது சந்தோசபடமட்டும் நாம் தயங்குவதில்லை.

இதையும் ஒருக்கா பாருங்கோ

http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=357167

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.