Jump to content

தமிழீழத்தின் தலைமைத்துவத்திற்கும் சிறீ லங்காவின் தலைமைத்துவத்திற்கும் இடையில் உள்ள வித்தியாசங்கள் எவை என்று உங்களுக்கு தெரியுமா?


Recommended Posts

தமிழீழத்தின் தலைமைத்துவத்திற்கும் சிறீ லங்காவின் தலைமைத்துவத்திற்கும் இடையில் உள்ள வித்தியாசங்கள் எவை என்று உங்களுக்கு தெரியுமா?

தமிழீழ அரசியல் துறை பொறுப்பாளரின் மறைவின்போது தமிழீழத்தின் தலைமைத்துவத்தினாலும், சிறீ லங்காவின் தலைமைத்துவத்தினாலும் பரிமாறப்பட்ட உணர்வலைகள்:

தலைவர்

ltte_leader_27_05_48287_435.jpg

  • நீண்ட நெருப்பு நதியாக நகரும் எமது விடுதலை வரலாற்றில் தமிழ்ச்செல்வன் ஒரு புதிய நெருப்பாக இணைந்திருக்கிறான். இந்த இணைவிலே, எமது கனத்த இதயங்களில் ஒரு பெரும் இலட்சிய நெருப்பை மூட்டியிருக்கிறான். எமது இலட்சிய உறுதிக்கு உரமேற்றியிருக்கிறான். இந்த உறுதியில் உரம்பெற்று, நாம் எமது இலட்சியப் பாதையில் தொடர்ந்தும் உறுதியோடு பயணிப்போம்.

தமிழீழ புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர்

poddu_05_11_07_01.jpg

  • சிங்கள தேசம் தமிழ்ச்செல்வனை வீழ்த்தியதற்கு பதில் என்னென்று கேட்கிறார்கள். அதற்கு சொல்லக்கூடியது ஒரு பதில் தான். ஒரு சில படையினரோ அல்லது ஓராயிரம் படையினரோ ஒரு சில அரசியல் தலைவர்களோ ஒரு சில வல்லாதிக்க சக்திகளோ தமிழ்ச்செல்வனின் உயிருக்கு ஈடாக முடியாது. தமிழீழம் என்ற உயர்ந்த கனவு தமிழீழத்திதற்காக தமது உயிர்களை ஈர்ந்த மாவீரர்களின் கனவை ஈடுசெய்ய உழைப்பதே தமிழ்ச்செல்வனின் உயிருக்கான விலை. அந்த உணர்வு என்பது தமிழ்ச்செல்வன் உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்களின் மனங்களில் பதித்து விட்டுச் சென்றுள்ளார் என்று சொன்னால் அந்த உணர்வை இனிவரும் காலங்களில் சிங்களதேசம் சந்திப்பதுதான். இனிவரும் எத்தனை ஆண்டு காலத்தின் பின்பும் தமிழர்களை அடக்கி வைத்திருந்தாலும் சுதந்திரத்திற்கான குரலை ஒலித்துக்கொண்டே இருப்பார்கள். ஓய விடமாட்டார்கள் என்ற உறுதியை எடுத்துக்கொள்வது தான் தமிழ்ச்செல்வனின் உயிருக்கான விலையாக இருக்கும்.

சிறீ லங்கா பாதுகாப்பு செயலாளர் கோத்தபாயா

Gothabhaya.jpg

  • இது சும்மா ஒரு செய்திதான். எங்களுக்கு புலிகளின் தலைவர்கள் எங்கே இருக்கின்றார்கள் என்பது தெரியும். சகல புலித் தலைவர்களினதும் இருப்பிடங்கள் எங்களுக்கு தெரியும். எமக்கு தேவை என்றால் ஒருவர் பின் ஒருவராக அவர்களை தூக்கமுடியும். எனவே இவர்கள் கட்டாயம் தமது மறைவிடங்களை மாற்றவேண்டும். நேரம் வரும்போது மட்டுமே நாம் ஒருவர் பின் ஒருவராக புலித்தலைவர்களை தூக்குகின்றோம்.

சிறீ லங்கா பிரதமர்

Ratnasri%20Wickramanayake4.jpg

  • எமது பாதுகாப்பு படையினர் புலிப்பயங்கரவாத தலைவர்களின் இரகசிய மறைவிடங்களையும், பாதுகாப்பு குடியிருப்புக்களையும் இலக்குவைத்து பேரழிவை ஏற்படுத்திவருகின்றார்கள். எமது இலக்கு எல்.டீ.டீ.ஈ பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டில் அமைதியை கொண்டுவருவதாகும்.

சிறீ லங்கா அமைச்சர் ஹெகலிய ரம்புக்குவல

Minister-Rambukwella.jpg

  • தமிழீழ விடுதலைப்புலி பயங்கரவாதிகள் மீது அக்கறை கொண்ட பலகுழுக்கள் எமது தாக்குதல் விமானங்கள் மூலம் கொல்லப்பட்ட பயங்கரவாதி தமிழ்செல்வனை சமாதானத்தின் காவலனாக காட்ட முயல்கின்றன. அவர்கள் இதுபற்றி பொய்யான ஒரு விம்பத்தை உருவாக்க முயல்கின்றார்கள். எமது அரசுடனான சமாதான பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைய காரணமாக இருந்த தமிழ்செல்வன் தமிழீழ விடுதலைப்புலி பயங்கரவாதிகளின் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தார்.

மேற்கண்ட இரண்டு தலைமைத்துவத்தினதும் உணர்வலைகளை பார்க்கும்போது உங்களால் தமிழீழத்தின் தலைமைத்துவத்திற்கும் சிறீ லங்காவின் தலைமைத்துவத்திற்கும் இடையில் உள்ள வித்தியாசங்களை கண்டுபிடிக்க கூடியதாக இருக்கின்றதா?

வித்தியாசம் இவைதான்:

அருச்சுனன் கண்களிற்கு தெரிந்தது குருவி மட்டும் தான். வேறு ஒன்றும் இல்லை. தலைவரினதும், பொட்டுஅம்மானினதும் தெளிவான செய்திகள் குறி எங்கு வைக்கப்பட்டு உள்ளது என்பதை காட்டுகின்றது. இலக்கு தமிழீழம். இதுதான் குறி.

மறுபுறத்தில்..

சிறீ லங்கா தலைமைத்துவத்தின் உணர்வலைகளில் காணப்படுவது பகட்டான பேச்சு,பெருமிதம் என்பவை மட்டுமே. எத்தனை தலைகள் உருளப்போகின்றன, எவர் தலைகள் உருளப்போகின்றன, மற்றும் இவற்றுக்கான வியாக்கியானங்களே இவர்களின் உணர்வலைகளில் காணப்படுகின்றது. அதாவது சிறீ லங்கா தலைமைத்துவத்திடம் தெளிவான ஒரு இலக்கு இல்லை. பயங்கரவாதிகள் போல் பேசுபவர்கள் சிறீ லங்கா தலைமைத்துவத்தில் இருப்பவர்களே. இவர்களின் பேச்சு அனுபவமற்ற தலைமைத்துவத்தையும், தெளிவான இலக்கின்றி பயணிப்பதையும் காட்டிக்கொடுக்கின்றது.

எக்காலத்திற்கும் பொருத்தமான தீர்க்கதரிசனமான பார்வை தமிழீழத்தின் தலைமைத்துவத்தின் உணர்வலைகளில் காணப்படுகின்றது. நேரத்துக்கு ஏற்றபடி குழந்தைப் பிள்ளைகளிற்கு கதைசொல்வதுபோல் சந்தர்ப்பவாத அரசியல் செய்யும் தன்மை சிறீ லங்கா தலைமைத்துவத்தின் உணர்வலைகளில் காணப்படுகின்றது.

அதாவது..

சுருக்கமாக ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். ஒன்றை உருவாக்கும் தலைமைத்துவம் தமிழீழத்தின் தலைமைத்துவம். ஒன்றை செய்யவிடாது தடுக்கும் தலைமைத்துவம் சிறீ லங்காவின் தலைமைத்துவம். ஒன்றை புதிதாக உருவாக்குபவன் வெற்றி பெறுகின்றானா அல்லது ஒன்றை புதிதாக உருவாக்கவிடாது தடுப்பவன் வெற்றிபெறுகின்றானா என்று காலம் விரைவில் பதில் சொல்லும்.

உங்களுக்கு வேறு ஏதாவது வித்தியாசங்கள் தெரிகின்றனவா?

Link to comment
Share on other sites

நீங்கள் சரியாக கூறியிருக்கிறீஎகள். (குரைக்கும் நாய் கடிக்காது என்றும் சொல்வார்கள்)

அத்துடன் நான் இன்னுமோர் வித்தியாசத்தை கண்டுபிடித்துள்ளேன்.

மேலுள்ள படங்களில் தமிழீழ தலைமைத்துவத்தைச் சேர்ந்தவர்கள் அவர்களின் உண்மையான சீருடையை அணிந்துள்ளார்கள்.ஆனால் இலங்கை தலைமைத்துவத்தைச் சேர்ந்தவர்கள் (specially கோத்தபாய) அவர்களின் சீருடையை அணிந்திருக்கவிலை. (Gas station uniform)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு முக்கிய தலைவனை இழந்த பின்னும், சுதாரித்துக் கொண்டு அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தது தமிழீழம். மேலே விமானம் பறக்க எந்த சலனமும் இல்லாமல் முக்கிய தளபதிகள் சூழ்ந்திருந்தார்கள் அங்கே. சிறி லங்காவில் மூன்று நாள் அதே அரற்றல் பிதற்றல் கொண்டாட்டம். முக்கிய தலைவர்கள் ஓடி ஒளித்துக் கொண்டார்கள் புலி பாயும் என்று.யாரைப் பார்த்தால் தடை செய்யப் பட்ட அமைப்பு மாதிரித் தெரிகிறது? புலிகளையா சிங்கள அரசையா?

Link to comment
Share on other sites

இரண்டு தலைமைக்கும் உள்ள இந்த வேறுபாடுகளை உணர்ந்ததனால் தான் , தமிழீழத் தேசியத்தலைமைக்குப் பின்னால் உலகத்தமிழினம் அணிதிரண்டு நிக்கிது. ஆனால் சில பேர்

அவர்களின் எச்சிலைக்கு லைனில நிக்கிறார்கள். எப்ப உணரப்போகிறார்களோ???????

Link to comment
Share on other sites

எமக்கு கிடைத்த உறுதியான தீர்கதரிசனமான தலமை உலகில் எவருக்கும் கிடைக்கவில்லை என்பதே உண்மை

Link to comment
Share on other sites

கோத்தபாய தலையில் கை வைத்த போதே(படத்தில்) தெரிகிறது. எங்கோ பிழை விடுகிறார் என்று.

Link to comment
Share on other sites

ஜெனரல்!!

சூப்பராக இருக்கு வித்தியாசங்கள் எல்லாம் :lol: நானும் கொஞ்ச வித்தியாசங்களை கண்டுள்ளேன் அதாவது தேசிய தலைவரின் இராணுவ சீறுடையிலும் தமீழிழ புலனாய்வு துறை பொறுப்பாளரின் இராணுவ சீறுடையில் பேனாக்களை காணமுடிகிறது ஆனா சிறிலங்கா அதிகாரி ஒருவரினதும் ஆடையிலும் பேனாவை காணவில்லை இதில் இருந்து இவர்களின் அறிவாற்றலை விளங்கி கொள்ள முடியும் என்று நினைக்கிறேன்!! :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

ஆனால் சில பேர் அவர்களின் எச்சிலைக்கு லைனில நிக்கிறார்கள். எப்ப உணரப்போகிறார்களோ???????

அவர்கள் என்று நீங்கள் எவர்களை கூறுகின்றீர்கள் கலைநேசன்?

Link to comment
Share on other sites

மன்னிக்கவும் கலைஞன்,எழுதும்போது விபரமாக அழுதாமல் விட்டுவிட்டேன்.

நான் அவர்களென்று கூறியது, மகிந்தவையும் அவரது கூட்டத்தையும்.

இப்ப ஓகே யா??

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடுத்த அடுத்த வரிகளில் எப்படி இப்படி 180 பாகை எதிராக எழுத முடிகிறது? 👆🏼👇 2016 இல் இறங்கினார் சரி.  2021 வரை அனுபவம் ஜனநாயகம் செயல் அளவில் இல்லை என சொன்னபின்னும் ஏன் அதையே 2024 இல் செய்கிறார்? The definition of  insanity is doing the same thing again and gain and expecting a different outcome. அண்ணன் என்ன லூசா? அல்லது கமிசன் வாங்கி கொண்டு வாக்கை பிரிக்க இப்படி செய்கிறாரா? நான் என்ன ரோ எஜெண்டா அல்லது பிஜேபி பி டீமா? எனக்கு எப்படி தெரியவரும்? உங்களை சவுத் புளொக் கூப்பிட்டு காதுக்குள் ஐபி டைரக்டர் சொல்லி இருப்பார் என நினைக்கிறேன்? மாற்றுக்கருத்து ஏதும் இல்லை. நேற்று டவுனிங் ஸ்டிரீட் பக்கம் சும்மா வாக்கிங் போனேன். உங்களை பற்றி இந்த வகையில்தான் பேசி கொண்டார்கள். நான் கேள்விபட்ட வரையில் டிரம்ப் தான் வென்றதாம்….நீங்கள் சொல்லி விட்டீர்கள் என்பதால், தேர்தல் முடிவை குளறுபடி செய்து மாற்றினார்களாம்.
    • உங்க‌ட‌ அறிவுக்கு நீங்க‌ள் இப்ப‌டி எழுதுறீங்க‌ள் அவ‌ர்க‌ள் ஜ‌ன‌நாய‌க‌த்தின் மீது ந‌ம்பிக்கை இருந்த‌ ப‌டியால் தான் அர‌சிய‌லில் இற‌ங்கின‌வை இந்தியாவில் ஜ‌ன‌நாய‌க‌ம் என்ற‌து சொல் அள‌வில் தான் இருக்கு செய‌லில் இல்லை................ 2023 டெல்லிக்கு உள‌வுத்துறை கொடுத்த‌ த‌க‌வ‌ல் உங்க‌ளுக்கு வேணும் என்றால் தெரியாம‌ இருக்க‌லாம் இது ப‌ல‌ருக்கு போன‌ வ‌ருட‌மே தெரிந்த‌ விடைய‌ம்.........................நீங்க‌ள் யாழில் கிறுக்கி விளையாட‌ தான் ச‌ரியான‌ ந‌ப‌ர்.............................என‌க்கும் த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் அமெரிக்கா அர‌சிய‌ல் டென்மார்க் அர‌சிய‌ல் ப‌ற்றி ந‌ங்கு தெரியும் ஆனால் நான் பெரிதாக‌ அல‌ட்டி கொள்வ‌து கிடையாது.................   ந‌ண்ப‌ர் எப்போதும் த‌மிழ‌ன் ம‌ற்றும் விவ‌சாயிவிக் அண்ணா இவ‌ர்க‌ள் இருவ‌ரும் 2020ம் ஆண்டு ர‌ம் தான் மீண்டும் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்ன‌வை  நான் அதை ம‌றுத்து பைட‌ன் தான் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்னேன் அதே போல் நான் சொன்ன‌ பைட‌ன் அமெரிக்கன் ஜனாதிபதி ஆனார்😏............................ ஆர‌ம்ப‌த்தில் தாங்க‌ளும் வீர‌ர்க‌ள் தான் என்று வார்த்தைய‌ வீடுவின‌ம் ஒரு சில‌ர் அடிக்கும் போது  அடிக்கு மேல் அடி விழுந்தால் ப‌தில் இல்லாம‌ கோழை போல் த‌ங்க‌ளை தாங்க‌ளே சித்த‌ரிப்பின‌ம்🤣😁😂..............................
    • இந்த மாத முடிவில் சில நாடுகளின் நரித்தனத்தாலும், சுயநலத்தாலும் இரு நாடுகள் அணு ஆயுதங்களால் பலமாக தாக்கபட போகின்றன. ஜீசசும் வருகின்றார் என்ற செய்தும் உலாவுகிறது.
    • நான் யாழில் எழுத தொடங்கியது 2013. அதுதான் உளவுதுறை பிஜேபி கைப்பாவை ஆச்சே? அதேபோல் இப்படி சொன்ன தேர்தல் ஆணையம் மீது ஏன் சீமான் வழக்கு போடவில்லை? நம்ப வேண்டிய தேவை இல்லை. என் கருத்து அது. ஆனால் தேர்தல் ஆணையம் இப்படி ஒரு விடயத்தை சீமானிடம் சொல்லாது. எந்த அதிகாரியாவது மேலிட பிரசரால் இப்படி செய்கிறோம் என சீமானிடமே வெளிப்படையாக சொல்வாரா? மிகவும் சின்னபிள்ளைதனமாக சீமான் கதை பின்னுகிறார். நம்ப ஆள் இருக்கு என்ற தைரியத்தில். சீமான் சொல்வது உண்மை எனில் சீமான் வழக்கு போட்டிருக்க வேண்டும்.  போடமாட்டார் ஏன் என்றால் இது சும்மா….லுலுலுலா கதை. இந்த 😎 இமோஜியை பாவிக்காமலாவது விட்டிருக்கலாம். திருடப்போகும் இடத்தில் சிக்னேச்சர் வைத்தது போல் உள்ளது. 🤣🤣🙏
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.