Jump to content

அன்பு வேண்டுகோள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்பு நண்பர்களே,

ஈழப் போராட்டத்தினை பற்றி எம் தமிழக இளைஞர்கள் எந்த அளவு அறிவுடையவர்களய் உள்ளார்கள் என அறிய விரும்பி கீழ்கண்ட ஓர் மின் அஞ்சலை என் நண்பர்களுக்கு அனுப்பினேன். இது குறித்து ஓர் விவாதத்தை அவர்களிடம் ஏற்படுத்தி, ஈழ ஆதரவை வளர்க்கவேண்டும் என்பதே என் முயற்சி.

அன்பு நண்பர்களுக்கு வணக்கம் ,

இலங்கை நாட்டில் உள்ள நம் தமிழ் சகோதரர்கள் அனுபவிக்கும் துயரங்ககளை குறித்தும், அவர்களது துயர் துடைக்க போராடும் விடுதலை புலிகளின் செயற்பாடுகள் குறித்தும் ஓர் விவாதத்தை தொடங்கிட விழைகிறேன்.

கீழ்கண்ட தலைப்புகளின் கீழ் கொண்டுள்ள நிலைப்பாடுகளை இவ்விவாதத்தில் தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

அ. இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக சிங்கள அரசால் நிகழ்த்தப்படும் இனப்படுகொலைகளைப் பற்றியும் , அதற்கு எதிராக விடுதலைப் புலிகள் நடத்திவரும் போர்களைப் பற்றி உங்களுக்கு எந்த அளவிற்கு தெரியும்? அதுகுறித்து உங்கள் நிலைப்பாடு என்ன?

ஆ. இலங்கையில் நடைபெறும் போரில் இந்திய அரசின் நிலைப்பாடு குறித்து உங்களது கருத்துக்கள் என்ன?

இ. தமிழக அரசியல்வாதிகளின் நிலைப்பாடு குறித்து உங்கள் கருத்துக்கள் என்ன?

ஈ. சிங்கள அரசின் இனவாத பயங்கரத்தால் மிக மோசமான சூழலில் வாடும் நம் தமிழ் மக்களுக்கு நாம் செய்ய வேண்டியது என்ன? அதுகுறித்து உங்ககளின் கருத்துக்கள் என்ன?

உ. இனாவத பயங்கரத்தால் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக பாதிப்படைந்து, தங்களின் பிரச்சனைக்கு தீர்வு தனி நாடு காண்பதே என்று போராடி வருவது சரியா? அவர்களின் தனி நாட்டு போராட்டத்தை நீங்கள் ஆதரிகின்றீர்களா? இல்லை எதிர்கின்றீர்களா? உங்கள் கருத்து என்ன ?

கடைசியாக ஒன்று: உங்களுக்கு இலங்கை பிரச்சினையை பற்றி தெரியாது எனில், இது குறித்து அறிய உங்களுக்கு ஆர்வம் உண்டா?

மேற்கண்ட கேள்விகளுக்கு உங்களது பதிலை அனுப்புங்கள்.

முதலில் நாம் விவாதிப்போம் தெளிவடைவோம்.

முயற்சிக்கு ஆதரவு தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன்

உங்கள் அன்பு ,

ஜோசப் பால்ராஜ் .

இதற்கு கிடைத்த பதிகளில் இருந்து, எம் இளையோர் கணிப்பொறியை

அறிந்த அளவுக்கு , சக தமிழனின் போராட்டத்தை அறியவில்லை என்று அறிய முடிந்தது. ஆனால் இவர்களுள் பலர், ஈழப் போராட்டத்தை பற்றி அறிய மிக ஆவலாய் உள்ளார்கள். எனவே ஈழ போராட்டம் குறித்து தெளிவான விவரங்களை அவர்களுக்கு தர முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். எனக்கும் விடுதலை புலிகளின் காலத்திற்கு முந்தய போராட்ட வரலாறு தெரியாதென்பதால் , இங்குள்ள நண்பர்கள் எனக்கு ஈழ விடுதலையின் முழு வரலாற்றை கொடுத்து உதவுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறேன்.

எனது முயற்சிக்கு உங்கள் முழு ஆதரவை தருவீர்கள் என்று நம்புகிறேன்.

இப்படிக்கு

சோழ இளவரசன்.

Link to comment
Share on other sites

வணக்கம் சோழமன்னன். உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்.

உங்கள் நண்பர்கள் நீங்கள் கேட்ட கேள்விகளிற்கு கூறிய பதில்களை இன்னும் விளக்கமாக கூறி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

கீழ் உள்ள இணையத்தளம் தமிழர்களின் கலைக்களஞ்சியம் போல் அரிய பல தகவல்களை கொண்டது. இங்கு சென்றால் உங்களுக்கு தேவையான பல விடயங்களை தெரிந்துகொள்ள முடியும்.

http://www.tamilnation.org/

நன்றி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி கலைஞன் அண்ணா. நீங்கள் குறிப்பிட்ட தளத்தில் இருந்து தகவல்களை திரட்டி, எனது சிறு பணியை செவ்வனே செய்கிறேன்.

நான் மேலே குறிப்பிட்டிருந்த அனைத்தும் கேள்விகள் மட்டுமே.

இக் கேள்விகளை கொண்டு ஓர் விவாதத்தை துவங்கி அதன் மூலம் ஈழத்தில் நம் தமிழ் உடன்பிறப்புகள் அடையும் வேதனையையும், விடுதலை புலிகளின் போராட்டத்தையும் புரியவைக்க முயற்சிசெய்துகொண்டுள்ளேன்.

தற்போது எங்களிடையே ஓர் நல்ல விவாதம் நடந்து கொண்டுள்ளது. பலரும் இப்போது தான் உண்மைகளை அறிகிறார்கள்.

மேலும் ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் உங்களை தொடர்புகொள்கிறேன்.

Link to comment
Share on other sites

அடட இப்படி ஒரு திரியை நானும் முன்பே எதிர்பார்த்தேன் ஆனால் பாருங்கள் இங்கே விவாதிக்க இயாலமல் போய்விட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களையும் அன்போடு அழைக்கிறேன். வாருங்கள் விவாதிப்போம் , எனக்கு தனி மடல் அனுப்புங்கள். இவ் விவாதத்தில் பங்குகொள்ள நான் வழி செய்கிறேன்.

இந்தியர்களாகிய நாம் நம் ஈழ உறவுகளுக்கு செய்ய வேண்டியது யாதெனில் நமது மத்திய அரசை வலியுறுத்தி, அனைத்து கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் அடங்கிய ஓர் குழுவை அமைத்து, தமிழ் ஈழத்தில் நம் சொந்தங்கள் படும் வேதனையை நேரில் அறிந்து அக் குழு அளிக்கும் முடிவை கருத்தில் கொண்டு மேல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்த வேண்டும். இதற்கு முதலில் நாம் தெளிவாக வேண்டும்.

இதுகுறித்து நாம் அனைவரும் நமது அரசின் கவனத்தை ஈர்க்க என்ன செய்யலாம்

என்பது குறித்து விவாதித்து ஓர் நல்வழி காண உங்கள் அனைவரின் உதவியும் தேவை. வாருங்கள் இணைந்து போராடுவோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி ஈழவன் அண்ணா.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.