Jump to content

சிட்னி கோசிப் 35


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வீரகாவியமான வீரமறவர்களுக்கு வீரவணக்கங்கள்..

தமிழீழம் முழுவதும் வீரகாவியமான சு.ப தமிழ்செல்வன் உட்பட ஏனைய ஜந்து போராளிகளிற்கு தொடர்ந்து ஜந்து நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கிறார்கள்,புலத்தில? வாழும் நாமும் செய்தி கேட்டவுடன் உணர்ச்சிவசபட்டோம் தொலைபேசியில் எமக்கு தெரிந்த நண்பர்களுடன் எமது ஆத்திரத்தை,மகிந்தாவை வெட்ட வேண்டும்,தலைவர் எனி பார்த்து கொண்டிருக்கக் கூடாது இன்றிரவே போய் குண்டு போட வேண்டும்,இதற்கு கட்டாயம் தலைவர் நல்ல பதில் கொடுக்கவேண்டும் அப்போது தான் எங்களின்ட ஆத்திரம் தீரும் என்று எமது ஆதங்களை கொட்டி தீர்தோம் யாழ்களத்திலும் அதே உணர்ச்சிகள் கொந்தளித்தன. வெள்ளி இரவு தான் கொந்தளித்தோம் கொதித்தோம் தூங்கி முழித்தவுடன் உணர்ச்சிகள் கொஞ்சம் அடங்கிட்டு சனிகிழமை தொடர்ந்து நண்பர்களுடன் உரையாடல் எப்படி நடந்திருக்கும் என்று புலன் விசாரனைகள்,சீனாகாரன் கொடுத்திருப்பான் இந்தியா கொடுத்திருக்கும் இல்ல உள்ளுகுள்ள இருந்து யாராவது மெசேஜ் கொடுத்திருப்பார்கள் என்று பல ஊகங்களும் விவாதங்களும், நடத்தினோம் இதிலும் சில நண்பர்கள் அவர்கள் வன்னியில் தொடர்பு கொண்டு கதைத்து போல் சில முடிவுகளை கூறினார்கள்.

சனி,ஞாயிற்று கிழமைகளிள் வழமையாக புலத்தி வாழும் எம்மவர்களுக்கு கலை நிகழ்ச்சி,இசை நிகழ்ச்சி அது தவிர்க்கமுடியாது.

நிகழ்ச்சிகளுக்கு ஏற்ற கலாச்சார உடைகளை அணிந்து போவது தான் எனது வழக்கம் கல்யாண வீடு என்றா பட்டுவேட்டி,பரதநாட்டிய இசை நிகழ்ச்சிகள் என்றால் படையப்பா ஸ்டைலில் குருத்தா போட்டு தமிழ் கலாச்சாரம் என்று நானே என்னுள் பெருமிதம் பட்டுகொள்வதும் உண்டு.இந்த ஞாயிற்கிழமை எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் "இன்னிசை இரவு" மூன்று மாதத்திற்கு முதலே டிக்கட் வாங்கி போட்டேன் 2கிழமைக்கு முதலே குருத்தா சலவை செய்து அழகாக அறையில் தொங்கவிட்டிட்டேன்.வெள்ளி இரவு நிகழ்ச்சியிற்கு போக கூடாது என்று மனம் சொன்னது சனி இரவு மனம் மாற தொடங்கவிட்டது.ஆசை மனம் பேச தொடங்கியது $250 கொடுத்து டிக்கட் வாங்கி போட்டாய் வீணக்க போறாயா,இந்த நிகழ்ச்சிக்கு போகாட்டி இனி எப்ப எஸ்.பி.பி வந்து பாடுவாரோ தெரியாது போய் பார்,அவர் தொடக்க காலத்தில் பாடிய "ஆயிரம் நிலவே வா" என்ற பாடலை இப்பவும் குரல் மாறாம அப்படியே பாடுகிறார் போனால் கேட்கலாம் போ என்று ஆசை மனம் பேசி முடித்தது.

மனசாட்சி எதிர் கேள்வி கேட்டது "நீ ஈழ ஆதரவாளன் என்று புலம்புவாய்" அதற்காக உயிர் தியாகம் செய்த ஆறு மறவர்களிள் சு.ப தமிழ்செல்வன் அவர்களின் வித்துடல் இன்னும் விதைக்கபடவில்லை ஆனால் நீ இசை நிகழ்சிக்கு போக போறாயா என்றது.

உடனே ஆசை மனம் சமாதானபடுத்தி ஈழத்திற்காக தானே $50 - $100 என்று 3 வருடதிற்கு ஒரு முறை கொடுக்கிறனி தானே மற்றும் மாவீரர் நிகழ்ச்சிக்கு ஒவ்வொரு தடவையும் போறனி தானே தேசியத்திற்கு ஆதரவாக தானே நீ கதைக்கிறனி ஆகவே நீ ஈழ அபிமானி ஆதரவாளி ஏன் நீ ஒரு புலத்து போராளி என்று கூட சொல்லலாம் என்று ஆசை மனம் என்னை உசுபேற்றி எஸ்.பியின் நிகழ்ச்சிக்கு போ என்றது.ஆசை மனம் கோபபட்டு இப்படியும் சில கேள்விகளி எழுப்பியது நீ போகாட்டி என்ன நிகழ்ச்சி நடக்காதோ இல்லாடி பாலாவிற்கு தான் பாட்டு பாட வராதோ இல்லை ஈழபோராட்டம் தான் பின்னடையுமா என்ற கோப வினாக்களை எழுப்பியது . இறுதியில் ஆசை மனம் வென்றுவிட்டது.

தற்போது நிகழ்சிக்கு செல்ல தயார் நிக்ழ்ச்சியால் வந்த பின் என் ஆசை மனம் புலம்பதொடங்கும்......

Link to comment
Share on other sites

புத்து மாமா,

இசை நிகழ்ச்சிக்கு போகக்கூடாது என்று நீங்கள் ஏன் நினைக்கின்றீர்கள்? நீங்கள் அவுஸ்திரேலியாவில் - சிட்டினியில் இசை நிகழ்ச்சிக்கு போவதற்கும் தாயகத்தில் நடைபெறும் பிரச்சனைக்கும் என்ன சம்மந்தம் உள்ளது?

தினமும் தாயகத்தில் போராளிகள் வீரமரணம் அடைகின்றார்கள். தினமும் தாயகத்தில் மக்கள் கொல்லப்படுகின்றார்கள். இது தாயகத்தின் வழமையான நிகழ்ச்சி நிரல். இதற்காக நீங்கள் ஏதாவது உதவிகள் செய்து அவர்களின் துயர்போக்க தோள்கொடுப்பது தாயகத்தின் மீது நீங்கள் கொண்டுள்ள பற்றை காட்டுகின்றது.

அதேவேளை, நீங்கள் எஸ்.பி. பியின் இசை நிகழ்ச்சிக்கு செல்வதால் தாயத்தின்பால் நீங்கள் கொண்டுள்ள பற்று குறையப்போகின்றது அல்லது நீங்கள் ஒரு துரோகி என்று அர்த்தம் இல்லை.

பல ஆயிரம் மைல்களிற்கு அப்பால் உள்ள தாயகத்தில் நடைபெறும் சம்பவங்கள் எங்கள் மனங்களை, வாழ்க்கையை பாதிப்பது உண்மை. அதற்காக நாங்கள் இங்கு எங்கள் வாழ்வை மாற்றியமைக்க முடியுமா?

இந்தா.. நான் இப்போது தட்டச்சு செய்துகொண்டு இருக்கின்றேன். வீதியில் ஏராளம் வாகனங்கள் பிசியாக போய்க்கொண்டு இருக்கின்றன. வீதியில் குப்பை துப்பரவு செய்யும் இயந்திரம் சத்தம் போட்டபடி தனது வேலையை செய்து கொண்டு இருக்கின்றது. தீயணைப்பு வண்டிகள், அம்புலன்ஸ்கள், போலிஸ் வாகனங்கள் அவ்வப்போது வீதியில் போய் வருகின்றன. சனங்கள் அப்படியும், இப்படியும் விறுவிறு என்று ஒவ்வொரு யோசனைகளுடன் தெருவில் நடந்து திரிகின்றார்கள். இவ்வளவற்றையும் எனது வீட்டு யன்னலினூடாக பார்க்கக்கூடியதாக உள்ளது.

நாங்கள் எங்களை வெளி உலகத்தில் இருந்து தனிமைப்படுத்துவதால் நட்டம் எங்களுக்குத்தான். மற்றவர்களுக்கு அல்ல.

தாயகத்திற்கு நாங்கள் ஏதாவது உருப்படியாக உதவிகள் செய்வது வரவேற்கத்தக்கது. ஆனால், அதைவிடுத்துவிட்டு அங்கே போகாதே, இங்கே போகாதே... அப்படி செய்யாதே.. இப்படிச் செய்யாதே... என்று சின்னப்பிள்ளைகளிற்கு உத்தரவு போடுவதுபோல் அறிவுரைகள் சொல்வது பயனற்றது.

என்னைப் பொறுத்தவரை நீங்கள் ஏற்கனவே டிக்கட் வாங்கி இருந்தால் இசை நிகழ்ச்சிக்குபோய் அதை கண்டு களிப்பதில் தவறு இல்லை. சும்மா வெளியாருக்காக, வெளியாரை திருப்திப்படுத்துவதற்கு நாங்கள் கட்டுப்பாட்டுடனும், கண்ணியத்துடனும் வாழ்கின்றோம் என்று காட்டிக்கொள்வதில் அர்த்தம் இல்லை.

நான் சிறிது காலத்திற்கு முன் யாழில் சிவாஜி படத்தை புறக்கணிப்பு செய்ய நீங்கள் தயாரா என்று கேட்டு ஒரு கருத்தாடல் செய்தேன். நான் இன்னும் கூடத்தான் சிவாஜி படம் பார்க்கவில்லை. பாடல்கள் கேட்கவில்லை. ஆனால், மற்றவர்கள் அப்படி இருப்பார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. மேலும், நான் இவ்வாறு செய்ததால் எனக்கு ஏதாவது விருது, பாராட்டு ஒன்றும் கிடைக்கப்போவதில்லை. அல்லது நான் ஒரு நல்ல மனுசன் என்று ஒரு பெயர் கிடைக்கப்போவதில்லை.

நான் சொல்ல வருவது என்னவென்றால் மற்றவர்களுக்காக நாங்கள் ஆசைகளை அடக்கி போலியாக வாழத்தேவையில்லை. நீங்கள் இன்று போகாவிட்டாலும் எதிர்காலத்தில் இசை நிகழ்ச்சிகள் தொடர்ந்து பார்க்கத்தான் போகின்றீர்கள். இன்று போகாதுவிடுவதால் நீங்கள் ஏதாவது தியாகம் செய்வதாக நான் நினைக்கவில்லை.

தாயகத்தில் நடைபெறும் பிரச்சனைகளை வெளிநாட்டு வாழ்வுடன் சேர்த்து குழப்பாதீர்கள்.

நாங்கள் வெளியில் படம் காட்டுவதை விட, எங்கள் உள்ளங்களில் அந்த நல்ல ஆத்துமாக்களிற்காக இரண்டு நிமிடங்கள் பிரார்த்தனை செய்வதே போதுமானது.

நாங்கள் மற்றவர்களை திருப்திப்படுத்துவதற்காக எங்கள் வாழ்க்கையை வாழமுடியாது.

நன்றி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீரகாவியமான வீரமறவர்களுக்கு வீரவணக்கங்கள்..

தமிழீழம் முழுவதும் வீரகாவியமான சு.ப தமிழ்செல்வன் உட்பட ஏனைய ஜந்து போராளிகளிற்கு தொடர்ந்து ஜந்து நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கிறார்கள்,புலத்தில? வாழும் நாமும் செய்தி கேட்டவுடன் உணர்ச்சிவசபட்டோம் தொலைபேசியில் எமக்கு தெரிந்த நண்பர்களுடன் எமது ஆத்திரத்தை,மகிந்தாவை வெட்ட வேண்டும்,தலைவர் எனி பார்த்து கொண்டிருக்கக் கூடாது இன்றிரவே போய் குண்டு போட வேண்டும்,இதற்கு கட்டாயம் தலைவர் நல்ல பதில் கொடுக்கவேண்டும் அப்போது தான் எங்களின்ட ஆத்திரம் தீரும் என்று எமது ஆதங்களை கொட்டி தீர்தோம் யாழ்களத்திலும் அதே உணர்ச்சிகள் கொந்தளித்தன. வெள்ளி இரவு தான் கொந்தளித்தோம் கொதித்தோம் தூங்கி முழித்தவுடன் உணர்ச்சிகள் கொஞ்சம் அடங்கிட்டு சனிகிழமை தொடர்ந்து நண்பர்களுடன் உரையாடல் எப்படி நடந்திருக்கும் என்று புலன் விசாரனைகள்,சீனாகாரன் கொடுத்திருப்பான் இந்தியா கொடுத்திருக்கும் இல்ல உள்ளுகுள்ள இருந்து யாராவது மெசேஜ் கொடுத்திருப்பார்கள் என்று பல ஊகங்களும் விவாதங்களும், நடத்தினோம் இதிலும் சில நண்பர்கள் அவர்கள் வன்னியில் தொடர்பு கொண்டு கதைத்து போல் சில முடிவுகளை கூறினார்கள்.

சனி,ஞாயிற்று கிழமைகளிள் வழமையாக புலத்தி வாழும் எம்மவர்களுக்கு கலை நிகழ்ச்சி,இசை நிகழ்ச்சி அது தவிர்க்கமுடியாது.

நிகழ்ச்சிகளுக்கு ஏற்ற கலாச்சார உடைகளை அணிந்து போவது தான் எனது வழக்கம் கல்யாண வீடு என்றா பட்டுவேட்டி,பரதநாட்டிய இசை நிகழ்ச்சிகள் என்றால் படையப்பா ஸ்டைலில் குருத்தா போட்டு தமிழ் கலாச்சாரம் என்று நானே என்னுள் பெருமிதம் பட்டுகொள்வதும் உண்டு.இந்த ஞாயிற்கிழமை எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் "இன்னிசை இரவு" மூன்று மாதத்திற்கு முதலே டிக்கட் வாங்கி போட்டேன் 2கிழமைக்கு முதலே குருத்தா சலவை செய்து அழகாக அறையில் தொங்கவிட்டிட்டேன்.வெள்ளி இரவு நிகழ்ச்சியிற்கு போக கூடாது என்று மனம் சொன்னது சனி இரவு மனம் மாற தொடங்கவிட்டது.ஆசை மனம் பேச தொடங்கியது $250 கொடுத்து டிக்கட் வாங்கி போட்டாய் வீணக்க போறாயா,இந்த நிகழ்ச்சிக்கு போகாட்டி இனி எப்ப எஸ்.பி.பி வந்து பாடுவாரோ தெரியாது போய் பார்,அவர் தொடக்க காலத்தில் பாடிய "ஆயிரம் நிலவே வா" என்ற பாடலை இப்பவும் குரல் மாறாம அப்படியே பாடுகிறார் போனால் கேட்கலாம் போ என்று ஆசை மனம் பேசி முடித்தது.

மனசாட்சி எதிர் கேள்வி கேட்டது "நீ ஈழ ஆதரவாளன் என்று புலம்புவாய்" அதற்காக உயிர் தியாகம் செய்த ஆறு மறவர்களிள் சு.ப தமிழ்செல்வன் அவர்களின் வித்துடல் இன்னும் விதைக்கபடவில்லை ஆனால் நீ இசை நிகழ்சிக்கு போக போறாயா என்றது.

உடனே ஆசை மனம் சமாதானபடுத்தி ஈழத்திற்காக தானே $50 - $100 என்று 3 வருடதிற்கு ஒரு முறை கொடுக்கிறனி தானே மற்றும் மாவீரர் நிகழ்ச்சிக்கு ஒவ்வொரு தடவையும் போறனி தானே தேசியத்திற்கு ஆதரவாக தானே நீ கதைக்கிறனி ஆகவே நீ ஈழ அபிமானி ஆதரவாளி ஏன் நீ ஒரு புலத்து போராளி என்று கூட சொல்லலாம் என்று ஆசை மனம் என்னை உசுபேற்றி எஸ்.பியின் நிகழ்ச்சிக்கு போ என்றது.ஆசை மனம் கோபபட்டு இப்படியும் சில கேள்விகளி எழுப்பியது நீ போகாட்டி என்ன நிகழ்ச்சி நடக்காதோ இல்லாடி பாலாவிற்கு தான் பாட்டு பாட வராதோ இல்லை ஈழபோராட்டம் தான் பின்னடையுமா என்ற கோப வினாக்களை எழுப்பியது . இறுதியில் ஆசை மனம் வென்றுவிட்டது.

தற்போது நிகழ்சிக்கு செல்ல தயார் நிக்ழ்ச்சியால் வந்த பின் என் ஆசை மனம் புலம்பதொடங்கும்......

நிகழ்ச்சிக்கு குறுத்தாபோட்டு அலங்கரித்து கொண்டு அரை மணித்தியாலதிற்கு முன்பே சென்று பாலாவையும் அவரின் தேன்மதுரகுரலையும் கேட்கதக்க இடத்தை கண்டுபிடித்து அமர்ந்தேன் இசை வெள்ளத்தில் மூழ்கியே விட்டேன் அவரது சரிரத்தை விட சாரீரம் நன்றாகவே இருந்தது என்னை மறந்தே விட்டேன் வீடு வந்து நாளைக்கு வேலைக்கு போக வேண்டும் ஆகவே மணிகூட்டில் அலார்ம் செட் பண்ணிவிட்டுபோட்டு தூங்கி விட்டேன்.

"அடே விசரா பைத்தியகாரா,$250 டொலர் பணம்,பாலாவின் முதல் பாட்டு அவரின் தேன்மதுர குரல் போன்ற துறக்க ஏலாத நீ எல்லாம் ஈழபோராட்டம் பற்றி கதைக்க வெளிகிட்டாய்,சரி சாதாரண நாட்களில் நடந்திருந்தாலும் அந்த மாவீரர்களின் ஆத்மா உன்னை மன்னித்திருக்கும் ஆனா நீயோ உன் சமுதாய விடிவிற்காக தனது இன்னுயிரை தியாக செய்த தியாகியின் உடல் அடக்கம் செய்ய முதலே எஸ்.பி பாலாவின் குரல் தேவைபடுகிறதோ" என்ற குரல் கேட்டு திடுகிட்டெழுந்தேன்.

புரிந்தது எனது ஆழ்மனதில் குற்ற உணர்வு தான் என்று உடனே தண்ணி குடித்துவிட்டு அடுத்த முறை எந்த நிகழ்ச்சி நடந்தாலும் போகிறது இல்லை என்ற முடிவுடன் குறட்டை விட்டு தூங்கிவிட்டேன் அடுத்த நாள் எழுந்து பத்திரிகை விளம்பர பகுதியை பார்த்தேன் பிரபல தென்னிந்திய பாடகியின் "கானமழை" என்று பிரசுரிக்கபட்டிருந்தது அதனை கண்டவுடன் கைகள் தொலைபேசியை நாடி சென்று மனதும் உற்சாகத்துடன் டிக்கட்டை பதிவு செய்ய தயாராகியது.மீண்டும் அநுராதபுர செய்தி போல் எப்போது வரும் என்று நண்பருக்கு தொலைபேசியை அடித்து வினாவினேன்.

Link to comment
Share on other sites

புத்து மாமா நீங்களும் போனனீங்களோ சொல்லவே இல்லை யாரும் யாழ்கள மெம்பர்ஸ் வந்து இருந்தவையோ இல்லை சும்மா கேட்டனான் :D !!அவை எல்லாம் அப்படி வரமாட்டீனம் என்றாலும் கேட்டு பார்த்தனான்........யாரும் எங்கையும் போகலாம் புத்து மாமா அவைக்கு சுகந்திரம் இருக்கு அல்லோ ஆனாலும் பாருங்கோ சிலர் சொல்லுவீனம் "தலைவர் என்ன செய்யிறார்" என்று எல்லாம் அவைய பார்த்தா விசில் அடிக்கிற முதல் ஆட்கள் அவையா தான் இரூக்கீனம் :( பிறகு அவை என்ன சொல்லுவீனம் இந்திய சினிமா படங்களை பார்க்க கூடாது என்று எங்களுக்கு அறிவிரை கூறுவீனம் பார்த்தா இந்திய சினிமா ஸ்டார்ஸ் வந்தா போய் கும்பலோட கும்பலா கை தட்டுறவை அவை தான் :( !!இப்படியே மற்றவைக்கு சொல்லி சொல்லி தாங்க எல்லாம் செய்து கொண்டே இருப்பீனம்!! :)

மற்றவைய திருப்திபடுத்த நாங்கள் வாழ்கையை வாழ முடியாது என்று பிரிகேடியர் சு.ப தமிழ்செல்வன் அண்ணாவும் நினைத்திருந்தால் இன்றைக்கு உலக மட்டத்தில் ஈழதமிழர்கள் என்ற அடையாளத்தை பெற்று இருப்போமா!! :lol:

புத்து மாமா என்னவும் கதைக்க நல்லா இருக்கும் பாருங்கோ செய்யிறது சரியான கஷ்டம் பாருங்கோ!!இதற்காக நான் ஒன்றுக்கும் போறதில்லை என்று நினைக்க கூடாது நான் எல்லாவற்றிற்கும் போவேன் ஆனா மற்றவைய மாதிரி வரைவிலக்கணம் எல்லாம் கொடுக்கிறதில்லை பாருங்கோ :lol: !!ஒவ்வொருத்தரும் இதற்கு ஒவ்வொரு வரைவிலக்கணம் கொடுப்பீனம் தங்கள் மனதை தேற்ற சரியோ........நீங்க ஒன்றும் கவலைபட வேண்டாம் பிறகு எப்படி நிகழ்ச்சி இருந்தது நல்லா பாட்டு படித்தவரோ!! :lol:

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி பஞ்-

" நாம் எமது வாழ்கையை மாற்றி அமைக்க தேவையில்லை ஆனாலும் இந்த வாழ்கையை எமக்கு தந்தவர்களை நினைவுபடுத்தினா நல்லா இருக்கும்" :(

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 17. MI என்று எழுதி  விடுங்கோ.  நன்றி 
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ச‌கோ🙏🥰..............................
    • "சிவப்பு உருவம்"   இரத்தினபுரி கஹவத்தையில் தொடங்கிய கிறீஸ் மர்ம மனிதன் விவகாரம் ஒரு ஊரிலோ, ஒரு மாவட்டத்திலோ மட்டுமல்லாமல், இலங்கையின் பல்வேறு மாவட்டங்களிலும், குறிப்பாக தமிழர், முஸ்லீம்கள் செறிந்து வாழும் பகுதியிலேயே இடம்பெற்றன. இச்சம்பவங்கள் 2011 ஆம் ஆண்டு ஜூலையில் ஆரம்பித்து ஆகஸ்ட்  மாதத்தில் கடுமையாக பரவியது. க்ரீஸ் பூதம் என்பது ஒரு திருடனாகும். அவன் வழமையில் உள்ளாடை மாத்திரமே அணிந்து கொண்டு உடல் பூராவும் க்ரீஸைப் பூசியிருப்பான். துரத்திச் செல்வோர் பிடிக்க முடியாமல் வழுக்கி விழக் கூடிய விதத்தில் க்ரீஸ் பூசப்படுவதுடன், திருடன் இலகுவாகத் தப்பிச் செல்வதற்கும் அது உதவியாக அமைந்து விடும். இப்படியான ஒரு கால கட்டத்தில் தான் நான், மலையகம் பகுதியில் தற்காலிகமாக வேலை நிமிர்த்தம் விடுதி ஒன்றில் தங்கி இருந்தேன்.   நான் தங்கி இருந்த விடுதி, கடல் மட்டத்திலிருந்து 1000-1500 மீட்டர் உயரத்திற்கு உயர்ந்து நிற்கிறது. இந்தப் பகுதி மிகவும் அமைதியாகக் காட்சியளிப்பதுடன் ஒரு  நீர்வீழ்ச்சிக்கு மேலே மலைப்பகுதியில் அமையப் பெற்றுள்ளது. இங்கு இயற்கை எழில் சூழ்ந்த தேயிலை தோட்டங்கள், நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் நிறைந்து காணப்படுகின்றன. மொத்தத்தில்  புத்துணர்ச்சி அளிக்கும் ஒரு குளிர் பிரதேசம் ஆகும். ஒரு வரவேற்பு கம்பளம் போல அமைக்கப் பட்ட மரகத பச்சை தேயிலை தோட்டங்களின் அழகை பார்த்தால் உங்களுக்கு மனதில் ஒருவித மகிழ்ச்சி பொங்கி வழியும். ஆமாம், நீர்வீழ்ச்சிகள், பச்சை பசேல் புல்வெளிகள் மற்றும் அடர்ந்த தேயிலை தோட்டங்கள் இயற்கையாகவே காதலர்களின் கனவை நனவாக்குகிறது. அதற்கு நானும் விதிவிலக்கல்ல.   தேயிலை தோட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியை செல்வி சயந்தியின் தொடர்பு, தற்செயலாக, அந்த பாடசாலையில் நடந்த தைப்பொங்கல் திருவிழா மூலம் கிடைத்தது. அவர் தான் அங்கு நடந்த நாட்டிய மற்றும் நாடகத்துக்கு பொறுப்பாக இருந்தார். அந்த நிகழ்வின் சிறப்புத் தன்மையை போற்ற அவரை சந்தித்தது, அவரின் அழகிலும் நடத்தையிலும் என்னை கவர வைத்து விட்டது. அதன் பின் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக இருவர் மனதிலும் மலர்ந்தது  .    "சிலுசிலு எனக் காற்று வீச கமகம என தேயிலை மணக்க  தொளதொள சட்டையில் வனப்பை காட்டி கிளுகிளுப்பு தந்து கூப்பிடுவது எனோ ?"   "தளதள ததும்பும் இளமை பருவமே   தகதக மின்னும் அழகிய மேனியே  சலசல என ஆறு பாய  வெலவெல என நடுங்குவது எனோ?"    "கலகல பேச்சு நெஞ்சை பறிக்க படபட என இமைகள் கொட்ட   கிசுகிசு ஒன்றை காதில் சொல்லி  சரசர என்று ஓடுவது ஏனோ ?"    ஒரு சனிக்கிழமை நாம் இருவரும் சந்தோசமாக தனியாக கழிக்க நுவரெலியா மாவட்டத்தில் ஹோட்டன் சமவெளியின் (Horton Plains) முடிவுடன் 1,200  மீட்டர் உயரத்தில், 700 - 1000 மீட்டர் செங்குத்து ஆழத்தைக் கொண்ட  உலக முடிவு [world's end] போய் பின், 19 மைல் நேரடி தூரத்தை அல்லது இருமடங்கு வீதி வழித் தூரத்தை கொண்ட  பதுளை மாவட்டத்தில் உள்ள எல்ல [எல்லா / Ella] நகரம் சென்று அங்கு ஒரு நீரூற்றுக்கு அருகில் உள்ள 98 ஏக்கர் உல்லாசப் போக்கிடத்தில் [98 Acres Resort & Spa] தங்கி, ஞாயிறு மாலை அங்கிருந்து திரும்பினோம். இருவரும் மிக மகிழ்வாக பேருந்தில் இருந்து இறங்கி, எம் விடுதிகளுக்கு கால்நடையாக பேசிக் கொண்டு நடக்கத் தொடங்கினோம். நாம் அந்த கும்மிருட்டில் தேயிலை தோட்டங்கள் மற்றும் மரங்களுக்கிடையில் ஒரு மைல் நடக்கவேண்டும். ஆனால் எமக்கு அது பிரச்சனையாகவோ பயமாகவோ இருக்கவில்லை. அவள் அந்த ஊர் ஆசிரியை. நான் அந்த நகர பொறியியலாளர். எம்மை எல்லோருக்கும் தெரியும். அந்த ஊர் மக்கள் மிகவும் மரியாதையும் கண்ணியமும் ஆனவர்கள்.       ஆனால் எம் கணக்கு தப்பு என்பதை சிறிது தூரம் இருவரும் கைகள் கோர்த்தபடி இருட்டில் ஏதேதோ சந்தோசமாக பேசிக் கொண்டு போகும் பொழுது தான் சடுதியாகத் தெரிந்தது. கொஞ்ச தூரத்தில், மரங்களுக் கிடையில் சிவத்த சால்வை அல்லது  துப்பட்டா மட்டும் தலையை மூடி தொங்க, கைவிரல்கள் மட்டும் எதோ கையில் இருக்கும் சிறு ஒளியில் ஒளிர , ஒரே இருட்டான ஒரு சிவப்பு உருவம் எம்மை நோக்கி வருவதைக் கண்டோம்.     கிழக்கு மாகாணம், மலையகம் மற்றும் நாட்டின் சில பகுதிகளில், யாழ்ப்பாணம் உட்பட கிறீஸ் மனிதன் விவகாரம் அடிக்கடி பத்திரிகையில் வருவதைப் பார்த்துள்ளேன், ஆனால் இந்த சிவப்பு உருவம் ஒரு சிவப்பு துணியால் தலையை மூடி தொங்க விட்டுக் கொண்டு வருவது ஆச்சரியமாக இருந்தது. ஒரு வேளை கிறீஸ் பூதத்தின் பரிணாமமாக இருக்கலாம்? அப்படியாயின் அவனை மடக்கி பிடிக்க முடியாது, அவன் உடல் வழுக்கும். ஆனால், அவன் சிவப்பு துணி தொங்க விட்டு வருவது எனக்கு சாதகமாக தெரிந்தது. அந்த துணியை வைத்தே அவனை மடக்க நான் தீர்மானித்தேன். ஏறுதழுவுதல் அல்லது ஜல்லிக்கட்டுவில் நான் நல்ல பயிற்சி பெற்றவன் என்பது எப்படி அவனுக்கு தெரியும்? காளைகளின் கொம்புகளை பிடித்து மடக்கும் தமிழர்களின் வீர விளையாட்டுக்கும் சிவப்பு நிற துணியை காளையிடம் காட்டி மடக்கும் ஸ்பெயின் நாட்டு விளையாட்டுக்கும் உள்ள வேறுபாடு அவனுக்கு என்ன தெரியும் ?. சிவப்பு துணியுடன் எம்மை நோக்கி வருகிறானே, இந்த சிவப்பு உருவம்!    நான் மிக நிதானமாக, ஆனால் அவசரமாக அவளிடம் எனது பையில் இருந்த சிகரெட் தீமூட்டியை கொடுத்து, பக்கத்தில் இருந்த மரத்தின் பின் ஒழிந்து இருந்து, அவன் என்னை நெருங்கும் பொழுது அதை தீம்மூடி அவனின் சிவப்பு துணிக்கு எரியூட்டக் கூடியதாக  எறியச் சொன்னேன். அவள் உயர் வகுப்புக்கு பிரயோக கணிதம் படிப்பிக்கும் ஆசிரியர் தானே, ஆகவே அவள் சரியாக செய்வாள் என்பதில் நல்ல நம்பிக்கை எனக்கு இருந்தது. அது மட்டும் அல்ல, பெரும்பாலான கிறீஸ் வகைகள் இலகுவாக எரியக்  கூடியவையும் ஆகும். நானும் கவனமாக அவன் நெருங்கும் பொழுது சிவப்பு துணியின் இரு தொங்களையும் தேவைப்பட்டால் பிடித்து இழுத்து, சிவத்த உருவத்தை  மடக்கி பிடிக்க ஆயத்தமாக முழு பலத்துடன் இருந்தேன்.   இந்த கிறீஸ் மர்ம மனிதர்கள் துட்டுகைமுனு அரசனின் வாளைத் தேடி அலைந்ததாக எத்தனை கதைகள் அன்று செய்திகளாக வந்தன. இது ஒன்றே இவர்கள் தமிழர்களை குறி வைத்து தாக்கியதுக்கு சிறந்த உதாரணமாக இருக்கிறது. எல்லாளனின் நீதியான, சமத்துவமான, எதிரியையும் மதிக்கும் திறமையான ஆட்சிக்கு எதிராகவே அன்று அவன் சைவ மதத்தான் என்ற ஒரே காரணத்தால் துட்டுகைமுனு அவனை எதிர்த்தான் என்பது வரலாறு. அப்ப சிங்களம் என்ற மொழி வளர்ச்சி அடையாத காலம். ஆகவே சிங்கள தமிழ் வேற்றுமை அங்கு இருக்க முடியாது. அது மட்டும் அல்ல துட்டுகைமுனு சிங்களவனாக இருக்கவும் முடியாது. அது தெரியாத முட்டால்கள் தான் இந்த கிறீஸ் பூதங்கள்!    எல்லாம் நாம் திட்டம் போட்ட படி  நிறைவேற, பாவம் அந்த சிவப்பு உருவம் என்னிடம் முறையாக அகப்பட்டார். என் நீள்காற் சட்டையின் வார், அந்த சிவப்பு உருவத்தை, ஒரு மரத்துடன் கட்ட உதவியது. அவன் உடலில் ஏற்பட்ட எரிகாயங்களால் சத்தம் போட, ஊர்க்காரர்கள் எல்லாம் திரண்டு விட்டார்கள். அதன் பின் எமக்கு என்ன வேலை. அவர்களிடம் மிகுதி பொறுப்பை கொடுத்து விட்டு நாம் எம் விடுதிகளுக்கு போனோம் . ஆனால் அவள் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை!  ஆகவே அவளை என் விடுதியில் உறங்க சொல்லி விட்டு , காவலுக்கு அவள் பக்கத்திலேயே , அவளை, அவள் அழகை ரசித்தபடி, அந்த சிவப்பு உருவத்துக்கு நன்றி கூறிக்கொண்டு இருந்தேன்!!    "சயனகோலம் அவளின் அழகு கோலம்  சரிந்த படுக்கையில் தேவதை கோலம்  சங்கு கழுத்து சிவப்பாய் ஒளிர்ந்து  சங்கடம் தருகிறது அவளின் பார்வை"     "சயந்தி அவள் இந்திரன் மகள் சந்திரன் போன்ற அழகு நிலா  சரீரம் தரும் கவர்ச்சி மயக்கத்தில்  சற்று நானும் என்னை மறந்தேன்"     "சக்கர தோடு கழுத்தை தொட  சடை பின்னல் அவிழ்ந்து விழ  சலங்கை கால் இசை எழுப்ப  சங்காரம் செய்யுது இள நகை"   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.