Jump to content

இதயம் கிடந்து அழுகிறதே


Recommended Posts

ஈழம் வரும் வேளையென்றே

நினைத்திருந்தோம்..அண்ணா...

பேரிடியாய்.. உன் பிரிவை

உள்வாங்கிக்கொண்டோம்..

வேதனையில்.. விழுந்த

நெஞ்சங்களை காணுகின்றோம்..

தமிழ்ச் செல்வன் அண்ணா

உன்னை நினைந்து விழி ததும்புகிறோம்..

பூத்திருக்கும் புன்னகையில்

ஒளி தருவாய்..நம்

தலைவரவர் கரமிணைந்து

செயல் புரிவாய்..

நெஞ்சமெல்லாம் வாடி நிற்க

எங்கு சென்றாயோ..

நேசமெல்லாம் கண்டு கொள்ள

ஒளிந்து கொண்டாயோ..

அழுதுவிடவேண்டாமென்று..

விழிகளிடம் சொன்னேன்..

இதயம் கிடந்து அழுகிறதே

யாரிடம் சொல்வேன்..

புலிகள் பலம் குறையுமென்று.

எதிரிகள் நகைப்பார்....

உன்னை விதைத்த இடம்..

செழிக்கும் அதை வீணர்கள் அறியார்..

வீரப்புலித் தலைவரரவர்..

சோர்வது இல்லை..

அவர் கரங்களிலே..

உறுதி சேர்ப்போம்..

தூங்கிடு மெல்ல...

அண்ணா தூங்கிடு மெல்ல..

Link to comment
Share on other sites

என்ன சொல்வதென்றே தெரியல..

Link to comment
Share on other sites

வலிகளும் துயரமும் திருப்பிக்கொடுக்கப்படும்..

ஆனால்.. இம்மாவீரர்கள் புன்னகை முகத்தை நாம் காணமுடியுமா..?

Link to comment
Share on other sites

தமிழுக்கு உரம் சேர்த்த நாயகனை இழந்து விட்டோம்.

உனது புன்னகையால் பல்லாயிரம் போராளிகளை வழி நடத்தினாய்.

காலம் கனியும் வேளை உன்னை இழந்து தவிர்க்கின்றோம்.

பேச்சு வார்த்தைகளின் போதும், சர்வதேஷ அரசியல் பிரமுகர்களின் சந்திப்பின்போதும், பத்திரிகையாளர் மாநாட்டின்போதும் உனது புன்னகையே பல வெற்றிகளை ஈட்டித்தந்தன.

இன்று நீயும் இல்லை, உனது புன்னகையுமில்லை.

இருந்தும் உனது கனவை நினைவாக்கும்வரை நாம் ஓயமாட்டோம்.

Link to comment
Share on other sites

அமைதிப்புறா ஒன்று...

அடித்துப்போடப்பட்டு...

ஆளுமை பேசுமாம் ஓநாய்..

அதை அடங்கிக் கேட்குமாம் உலகம்..

விதையாகி ஒளியாகும்..

என் தேசப்பிதாமகனை

அழித்ததே தவறென உணர்வாய்

பேரினப்படையே..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.