Jump to content

.அரசின் தாக்குதல்களிலிருந்து தமிழரைக் காப்பாற்றுங்கள்! ஆர்பர் அம்மையாரிடம் தமிழ்க் கூட்டமைப்பு அவசர வேண்டுகோள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Posted on : Sat Oct 27 7:15:00 2007

.அரசின் தாக்குதல்களிலிருந்து தமிழரைக் காப்பாற்றுங்கள்! ஆர்பர் அம்மையாரிடம் தமிழ்க் கூட்டமைப்பு அவசர வேண்டுகோள்

அரசின் தாக்குதல் நடவடிக்கையில் இருந்து இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க உடன் நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மனித உரிமைகளுக்கான ஐ.நா. ஆணையாளர் லூயிஸ் ஆர்பர் அம்மையா ரிடம் அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத் துள்ளது.

இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட் டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, லூயிஸ் ஆர்பருக்கு அவசர மனு ஒன்றை அனுப்பிவைத்துள்ளார். அதி லேயே மேற்கண்டவாறு கோரிக்கை விடுக் கப்பட்டிருக்கின்றது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளவை வருமாறு:

நீங்கள் அண்மையில் இலங்கைக்கு மேற் கொண்ட விஜயத்தின்போது இங்கு இடம் பெற்றுவரும் மனித உரிமை மீறல் நடவடிக் கைகளை நன்கு அவதானித்திருப்பீர்கள் என்று நாம் நம்புகின்றோம்.

இந்த மனித உரிமை மீறல் நடவடிக்கை களைக் கட்டுப்படுத்தும் அவற்றைக் கண்

காணிக்கும் நோக்கில் இலங்கையில் ஐ.நா. மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஒன்று நிறுவப்பட வேண்டியதன் அவசியத்தை நீங்கள் வலியுறுத்தினீர்கள்.

ஆனால், இலங்கை அரசு நீங்கள் விடுத்த இந்த வேண்டுகோளை முற்றாக நிராகரித்து விட்டது. அது குறித்து நாம் மிகுந்த கவலை யடைகிறோம்.

இந்த நிலையில் புலிகள் அநுராதபுர விமா னப் படைத்தளம் மீது தாக்குதல் நடத்தி னர். இத்தாக்குதல் அரசிற்கு பாரிய சேதத்தை ஏற்படுத்தியதோடு இராணுவ ரீதியில் அரச தலைவர்களின் மன சமநிலைத் தன்மையை குழம்பச் செய்துள்ளது.

இதன் காரணமாக அரசு வடக்கில் மக் கள் செறிந்து வாழும் பகுதிகள் மீது கிபிர் விமா னங்கள் மூலம் விமானத் தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதேபோல் பல்குழல் மற் றும், ஷெல் தாக்குதல்களையும் நடத்துகின்றது.

இத்தாக்குதலால் கர்ப்பிணிப் பெண் மற்றும் கைக்குழந்தை உட்பட பல தமிழ் அப் பாவிப் பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். அப் பகுதியில் மக்கள் இப்போது இடம்பெயரத் தொடங்கியுள்ளனர்.

அது மாத்திரமின்றி அநுராதபுரத் தாக் குதலில் உயிரிழந்த புலிகளின் சடலங் களைப் புலிகளிடம் கையளிக்காது அந்த உடல்களில் இருந்து ஆடைகளை அப்புறப் படுத்தி முழு நிர்வாணப்படுத்தி அவற்றை மக்களின் பார்வைக்கு அரசு வைத்துள்ளது.

அவ்வாறு நிர்வாணமாக்கப்பட்ட சடலங் களில் பெண் புலிகளின் உடல்களும் அடங்குகின்றன.

அரசின் இந்தச் செயற்பாடானது வழமை யான யுத்தச் செயற்பாட்டு முறைகளை மீறும் போக்காகும். அது மாத்திரமன்றி இது ஜெனிவா உடன்படிக்கைக்கு உட்பட்ட யுத்த நடைமுறைகளை மீறும் இந்த அரசின் நாகரிகமற்ற செயற்பாடாகவும் அமைந்துள்ளது.

இந்த நிலைமையானது இலங்கையில் குறிப்பாக தமிழ் மக்களுக்கு எதிரான பாரிய யுத்தம் ஒன்று முன்னெடுக்கப்படுகின்றது என்ற அச்சத்தைத் எம்மத்தியில் தோற்று வித்துள்ளது.

இலங்கை அரசின் கண்மூடித்தனமான எல்லைமீறிய கொடுங்கோண்மையான இன அழிப்பு நடவடிக்கையில் இருந்து இலங்கையில் உள்ள தமிழ்த் தேசத்தைக் காப்பது குறித்து ஐ.நா. செயலாளர் நாயகத் திற்கு விளக்கி உரிய நடவடிக்கையை எடுக்கவைப்பது மிகவும் கட்டாயமானதாக வும், அவசரமானதாகவும் ஆகியுள்ளது.

ஆகவே, இந்த நடவடிக்கையை மிகத் துரிதமாக மேற்கொள்ளுமாறு நாம் உங்களைக் கேட்டுக்கொள்கிறோம் என்று குறிப் பிடப்பட்டுள்ளது. (சி)

http://www.uthayan.com/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.