Jump to content

''கர்ப்பிணியின் வயிற்றை வெட்டி சிசுவை வெளியே வீசினேன்!''


Recommended Posts

குஜராத் வீடியோ-''கர்ப்பிணியின் வயிற்றை வெட்டி சிசுவை வெளியே வீசினேன்!''

குஜராத்தில் முதல்வர் நரேந்திர மோடியின் ஆசிர்வாதத்தோடும், உதவியோடும் தான் மதக் கலவரத்தை நல்லபடியாக நடத்தினோம் என பாஜக, விஎச்பி, பஜ்ரங் தள் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் வெளிப்படையாக கூறியுள்ளனர்.

இதை தெகல்கா இதழ் ரகசியமாக வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளது. இந்தியா டுடே மற்றும் தெகல்கா ஆகியவை இணைந்து நடத்திய இந்த ரகசிய ஆபரேசனில் குஜராத் மதக் கலவரத்தின் இன்னொரு பக்கம் வெளியே வந்துள்ளது.

குஜராத்தில் வன்முறை வெடிக்கக் காரணமாக இருந்தது கோத்ரா ரயில் தீ விபத்து. சுமார் 50க்கும் மேற்பட்ட அப்பாவி ராம பக்தர்கள் பலியான இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து தான் வன்முறை தொடங்கியது.

கோத்ரா தொகுதியின் பாஜக எம்எல்ஏவான ஹரேஷ் பட் பஜ்ரங் தள் அமைப்பின் தேசிய துணைத் தலைவராகவும் உள்ளார். இவரையும் குஜராத் வன்முறையில் நேரடியாகப் பங்கு கொண்ட 7 பேரையும், மோடிக்கு மிக நெருக்கமான அரசு வழக்கறிஞரையும் மேலும் 5 பேரையும் தெகல்கா நிருபர்கள் குழு ரகசியமாய் நெருங்கியது.

அவர்களிடம் குஜராத் வன்முறை குறித்து பேசியது. அப்போது அதை ரகசியமாய் கேமராக்களிடம் படம் பிடித்தது.

ஆனால், தாங்கள் படம் பிடிக்கப்படுவது தெரியாமல் எப்படியெல்லாம் வன்முறையை நடத்தினோம், எப்படி ஒரு கர்ப்பிணி முஸ்லீம் பெண்ணின் வயிற்றைக் கிழித்து உள்ளே இருந்த சிசுவை வெளியே எடுத்துப் போட்டு வெட்டினோம் என்பதையெல்லாம் 'பெரிய சாதனையாக' இவர்கள் பேசியுள்ளனர்.

தெகல்கா நடத்திய இந்த ஆபரேசனுக்கு தலைமை வகித்தவர் அதன் நிருபரான ஆஷிஷ் கெய்தான். அவர் 'விஎச்பியும் இந்துத்துவாவும்' என்ற புத்தகம் எழுதப் போகிறேன். அதற்காக கருத்துக்கள், விவரங்களைத் திரட்டி வருகிறேன் என்று கூறித்தான் இவர்களை நெருங்கியுள்ளார்.

கிட்டத்தட்ட 6 மாத காலமாக இவர்களிடம் பேசி, அதை ரகசியமாக வீடியோ எடுத்து வந்துள்ளார் கெய்தான்.

இந்த வீடியோவில் அவர்கள் பேசியுள்ளது மிக பயங்கரமாக உள்ளது.

வன்முறைக்கு டைம் கொடுத்த மோடி..

கோத்ரா எம்எல்ஏவான பட் கூறுகையில், கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நடந்தவுடன் மோடி தலைமையில் பாஜக பிரமுகர்கள், பஜ்ரங் தள், விஎச்பி, ஆர்எஸ்எஸ் அமைப்பினனரின் கூட்டம் நடந்தது. அதில் நான் உங்களுக்கு 3 நாட்கள் நேரம் தருகிறேன். அதற்குள் என்ன வேண்டுமானாலும் (வன்முறை, கொலை, தாக்குதல்) செய்து கொள்ளுங்கள். ஆனால், 3 நாட்களுக்குப் பின் நான் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டியாக வேண்டும் என்றார்.

மேலும் நரோடா பாட்டியாவில் பெரிய அளவில் ெகாலைகள் நடந்த பின்னர் அதற்காக எங்களை மோடி அழைத்துப் பாராட்டினார் என்று கூறியுள்ளார் பட்.

போலீஸ் உதவியோடு பாம் தயாரித்தோம்...

விஎச்பியைச் சேர்ந்த அனில் படேல், தாபல் ஜெயந்தி படேல் ஆகியோர் கூறுகையில், விஎச்பி தொண்டர்தள் எனது தொழிற்சாலையில் தான் குண்டுகளைத் தயாரித்தனர். ராக்கெட் லாஞ்சர்களைக் கூட தயாரித்து முஸ்லீம்கள் மீது தாக்குதல் நடத்தினோம். இதற்கு போலீசாரும் எங்களுக்கு உதவியாக இருந்தனர்.

பெண்ணின் வயிற்றை கத்தியால் வெட்டினேன்....

பஜ்ரங் தள் தலைவர் பாபு பஜ்ரங்கி கூறுகையில், நான் அந்த கர்ப்பிணி முஸ்லீம் பெண்ணின் வயிற்றை கத்தியால் வெட்டினேன். அதிலிருந்த சிசுவை எடுத்து வெளியே எரிந்து வெட்டினேன் என்று கூறியுள்ளார்.

மதன் சாவல் என்ற பாஜக தொண்டர் கூறுகையில், முன்னாள் காங்கிரஸ் எம்பி ஜாப்ரி தனது பகுதி முஸ்லீம்களை காப்பாற்ற முயன்றார். தனது வீட்டில் அவர்களுக்கு அடைக்கலம் தந்தார். இதையடுத்து நாங்கள் வாள்களுடன் அவரது வீட்டை முற்றுகையிட்டோம். அப்போது கை நிறைய பணத்தை அள்ளிக் கொண்டு வந்த ஜாப்ரி இதை வைத்துக் கொண்டு அனைவரையும் விட்டுவிடுமாறு கூறினார்.

நாங்கள் சரி என்றோம். பணத்தைக் கொடுத்த அவர் கதவைத் திறந்தார். அப்போது வீட்டுக்குள் நுழைந்து அவரைப் பிடித்தோம். இருவர் கையை பிடித்துக் கொள்ள நான் அவரது கைகளை வெட்டினேன் பின்னர் அவரது மர்ம உறுப்பை வெட்டி எரிந்தோம். பின்னர் அவரை துண்டு துண்டாக்கி எரித்துவிட்டோம். அவர் வைத்திருந்த பணத்தையும் எடுத்துக் கொண்டோம் என்று கூறியுள்ளார்.

இன்னொரு தொண்டர் கூறுகையில், நரேந்திர மோடியால் தான் நான் சிறையில் இருந்து வெளியே வந்தேன். அவர் நீதிபதிகளை இடமாற்றம் செய்து தனக்கு வேண்டியவர்களை நியமித்ததால் தப்பித்தேன் என்றார்.

இவை அனைத்தும் வீடியோவில் அப்பட்டமாக அப்படியே பதிவாகியுள்ளன.

குஜராத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் வெளியாகியுள்ள இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெடிகுண்டுகள் செய்தவர்கள் வரலாறு:

HARESH BHATT, who was the Bajrang Dal rashtriya sah sanyojak in 2002 and is now the BJP MLA from Godhra, till the riots a Congress stronghold, made a never-before admission that bombs were made at a firecracker factory he owned. He describes how they assembled country-made explosives, including rocket launchers. These were then distributed to murderous mobs in Ahmedabad

IN 2002, despite curfew in Ahmedabad, swords were brought in from Punjab and country pistols from UP, Bihar and MP. Bhatt boasts that none of these states were under BJP rule then. The consignment of arms crossed the borders not once but many times. “There were tens and tens of them,” Bhatt reveals

IN AN UNRELATED but crucial disclosure, Bhatt says that he trained 40 young men who then went on to demolish the Babri Masjid in December 1992. He trained them like the army does, and ran obstacle courses for them and taught them how to climb a 30-ft rope. The camp still exists in Ahmedabad

DHAWAL JAYANTI PATEL of the VHP used dynamite in his quarries in Sabarkantha. With the help of an old RSS hand, Amrudh Patel, who was an expert in handling explosives, bombs were made in the quarries using dynamite and RDX-based powder

ANIL PATEL, the VHP Vibhag pramukh, talks of how explosives were made in Sabarkantha and then supplied to Ahmedabad

THE VISHWA Hindu Parishad (VHP) and its so-called youth wing, the Bajrang Dal, were the major groups involved in the massacre of Muslims in Gujarat in 2002. Though civil society groups and human rights activists have been vocal about the role of these outfits all through the genocide, only a few of their members have been implicated on charges of murder and rioting. Babu Bajrangi, a Bajrang Dal zealot, is among the few facing trial for their role in the massacre. By and large, most rioters from the VHP and Bajrang Dal, particularly its top leadership, walked away with blood on their hands.

It’s not difficult to see why. The Bajrang Dal and the VHP are nothing but extensions of the BJP, which was in power in the state at the time and also led the coalition government at the Centre. During the investigation, TEHELKA found out how leaders of the VHP and the Bajrang Dal had planned the pogrom. To execute their plan “effectively”, they required military hardware, they required weapons more sophisticated and lethal than swords, knives and tridents, arms better suited to hand-to-hand combat. They needed an arsenal that could kill in large numbers.

The TEHELKA investigation found that the VHP and the Bajrang Dal had transformed themselves into terror outfits that manufactured and distributed bombs, rocket launchers and firearms in large quantities after the Godhra incident. This weaponry was then handed over to murderous mobs across Gujarat.

Guide

Group: Active Members

Posts: 736

Joined: 25-August 07

Member No.: 1,088

டெகல்கா இணையதளம் மோடி குஜராத்தில் இனப்படுகொலை செய்ததை ஆதரப்பூர்வமாக நிருபித்துள்ளது. அதன் மூலம்

http://www.tehelka.com/story_main35.asp?fi...7gujrat_sec.asp

Link to comment
Share on other sites

டெகல்கா நிருபர்கள்தான் முன்னர் ஆயுத மோசடியில் தொடர்புடைய அரசியல்வாதிகளின் பேச்சுக்களை வீடியோவில் பதிவு செய்து அம்பலப்படுத்தினர். இதனால் அப்போது இந்திய பாதுகாப்பு ஜோச் பெர்னாண்டஸ் உட்பட பலர் பதவி விலக நேரிட்டது.

டெகல்கா நிருபர்களின் செயல் பாராட்டத்தக்கது.

Link to comment
Share on other sites

என்னதான் சொன்னாலும் நரேந்திர மோடி தான் மீண்டும் வருவார் அருமையான ஒரு தலைவர் அவர்....இந்துக்களுக்கு இப்படியான தலைவர்களும் இருக்க தான் வேணும்...

Link to comment
Share on other sites

மோடி என்ற இந்த கொடிய கேடிக்கு தகுந்த தண்டனை வழங்க கூடிய நிலையில் இந்திய நீதித்துறை உள்ளதா?

இணைப்புக்கு நன்றி ஈழவன்

Link to comment
Share on other sites

என்னதான் சொன்னாலும் நரேந்திர மோடி தான் மீண்டும் வருவார் அருமையான ஒரு தலைவர் அவர்....இந்துக்களுக்கு இப்படியான தலைவர்களும் இருக்க தான் வேணும்...
அப்படியே மோடியின் பெயர் இருக்கும் இடத்தில் மகிந்தவின் பெயரை போட்டு ரசியுங்கள் :D:D

Link to comment
Share on other sites

இது கேலிக்குறிய செயல் குஜராத் தேர்தலை முன்னிட்டு மோடிக்கு எதிராக பயன்படுத்தும் பிரச்சாரம் குஜராத்தை பொருத்தவரை மக்கள் அவரை 3 ஆவது முறையாகவும் முதல்வராக தேர்தெடுத்து இருந்தார்கள் மோடி ஒரு இரும்பு மனிதர் யாரோ செய்த தப்புக்காக இந்துக்களின் காவலன் மோடி மீது குற்றம் சாட்டுவது அபச்சாரம் குஜராத் மக்களுக்கு தெரியம் குஜராத் மாநிலத்தின அபாரவளர்சி இதை சகிக்க முடியாத காங்கிரஸ்சும் பதவி வெறி பிடித்த சிலரும் செய்யும் பிரசாரம் எடுபட மாட்டாது....வாழ்க மோடி...வாழ்க பிஜேபி.............எப்படி பட்டவாது காங்கிரஸ் குஜராத் ஆட்சியை கைப்பற்ற துடிக்கிது....இப்பொழுது அதுக்கு கிடைத்து இருப்பது இப்படியான பொய்களும் பித்தலாட்டங்களும் நிறைநத பிரச்சாரம் தான்..

Link to comment
Share on other sites

எது பொய் பித்தலாட்டம் கொஞ்சம் உணருங்கள் சுண்டல் நாமும் ஒடுக்கப்ப்ட்டவராக இருந்து ஒரு இனஎறி பிடித்தவருக்கு சப்போட் பண்ணும்படி கதைப்பது கேவலம்

Link to comment
Share on other sites

மோடிக்கும் இதுக்கும் சம்மந்தமே இல்ல மோடியை நேரடியாக எதிர்கொள்ள திரானியற்ற காங்கிரஸ் வக்கில்லா காங்கிரஸ் பொய்களை மோடி மீது ஏவி விட்டு இருக்கின்றது மோடி குஜராத்துக்கு செய்த மாதிரி வேறு எந்த முதல்வரும் செய்யேல்ல..அவர் ஒரு சிறந்த நிர்வாகி

தாய்நாடும் தாய் மொழியும் எந்தவிற்க்கு முக்கியமோ அதேபோல் தான் தாய் மதமும்..அந்தவகையில் அவர் அதிகமாக தன் மதத்தின் மீது பற்று வைத்திருப்பது இனnறிpயாகாது...

மோடி தப்பானவராக இருந்திருந்தால் கோத்ரா சம்பவத்துக்கு பின்னும் அவரை குஜாராத் மக்கள் முதல்வராக தேர்ந்தெடுத்து இருக்க மாட்டார்க்ள்...

கோத்ரா சம்பவம் மோடிக்கும் பிஜேபிக்கும் கலங்கத்தை உண்டுபன்னுவதற்காக செய்படுத்தப்பட்ட ஒரு அரசியல் கீழ்த்தரமான செயல்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மோடி தப்பானவராக இருந்திருந்தால் கோத்ரா சம்பவத்துக்கு பின்னும் அவரை குஜாராத் மக்கள் முதல்வராக தேர்ந்தெடுத்து இருக்க மாட்டார்க்ள்...

83 ஆம் ஆண்டு கறுப்பு யூலைக்குப் பிறகும் யுஎன்பி ஆட்சிக்கு வந்தது, யுஎன்பி தப்பாயிருந்தால் சிங்கள மக்கள் மீண்டும் அதனைத் தேர்ந்தெடுத்திருக்க மாட்டார்கள். அப்படியா சுண்டல் அண்ணே? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டெகெல்கா தளத்துக்குப் போய்ப் பார்த்த பொழுது இந்த வீடியோ கிளிப் காணக் கிடைத்தது. ஒரு பஜ்ரங் தள் பிரமுகர், கொட்டுகிற துவேஷத்தையும் அதற்குக் கிடைக்கும் கரகோஷத்தையும் பாருங்கள். இந்த மக்கள் மோடியை முதல்வராக்கியதில் ஏதாவது அதிசயம் உண்டா? வெளிநாடு வந்த புதிதில் ஒரு ஆந்திராக் காரர் எனது அறைத் தோழராக இருந்தார். முஸ்லிம் மன்னர்கள் தங்களை முன்னூறு ஆண்டுகள் கொன்று குவித்ததாகவும் தாங்கள் (இந்துக்கள்) சில ஆயிரம் முஸ்லிம்களைத் தான் இப்போது கொல்வதாகவும் பேசுவார். ஒரு பொறியியலாளர், அமெரிக்க வாழ்க்கை முறையை விரும்பி வந்தவர், நான் மிகவும் அதிசயப் பட்டேன். இந்திய நண்பர்கள் கோவித்துக் கொள்ளக் கூடாது. இந்தியா இப்படிப் பட்ட நர மாமிச அரக்கர்களைத் தலைவர்களாக வைத்திருக்கும் வரை நாகரீக ரீதியாக ஒரு வல்லரசாக வரவே வராது!

Link to comment
Share on other sites

உடனே இலங்கை அரசிய கொன்டு;போய் குஜராத்தோடு ஒப்பிட்டு பாப்பிங்களே...

நீங்க என்ன தான் சொன்னாலும் மோடிதான் அடுத்த முதல்வன்...அதனால் தான் இந்த பயத்தில் தான் காங்கிரஸ் குய்யோ முறையோ என்று கூக்குரல் இடுகின்றது பல்லாயிரக்கனக்கான சீங்கியர்கள் படுகொலைக்கு காங்கிரஸ் தான் காரனம்; அதுக்காக அது பஞசாப்பில் ஆட்சிக்குவரவில்லையா? யாரோ செய்த தப்புக்காக யாரையோ சந்தேகிப்து தப்பு மோடியை ஒட்டுமொத்தமாக குற்றத் சாற்றுவதாக இருந்தால் காங்கிரஸ்சும் குற்றத் சாட்ட பட வேண்டியவர்களே...

Link to comment
Share on other sites

moodizv9.png

சி.என்.என்._ .பி.என்., தொலைக்காட்சியில் ஓர் அரசியல் நேர்காணல். நடத்தியவர் பிரபல அரசியல் பேட்டியாளர் கரன் தாப்பர். கிடுக்கிப்பிடி கேள்விகளால் எதிரே இருப்பவரை சிக்கவைப்பதில் சமர்த்தர். நம்மூர் ஜெயலலிதா, வைகோ முதல் பல தேசியத் தலைவர்களை திக்குமுக்காட வைத்தவர். இந்தமுறை அவருக்கு எதிரே அமர்ந்திருந்தார் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி.

ஒவ்வொரு கேள்வியும் தீப்பந்தாகப் பாய்ந்து வந்து மோதின. எல்லாவற்றையும் தனக்கேயுரிய பாணியில் சாமர்த்தியமாக எதிர்கொண்டார் மோடி. திடீரென ஒரு கேள்வி. அவ்வளவுதான். நெருப்பில் பட்ட ரப்பர் பலூன் போல சுருங்கியது மோடியின் முகம். என்னென்னவோ பேசினார். ‘தாகமாக இருக்கிறது, தண்ணீர் வேண்டும்’ என்றார். பதில் சொல்லாமல் தப்பிக்கும் எல்லாவித முயற்சியிலும் ஈடுபட்டார். விளைவு, பேட்டி பாதியிலேயே முடிக்கப்பட்டது. அவசர அவசரமாக வெளியேறினார் நரேந்திர மோடி.

அப்படியே ‘முதல்வன்’ படத்தில் ரகுவரன், அர்ஜுன் நடித்த காட்சி போலவே இருந்தது. விஷயம் என்னவென்றால், கரன் தாப்பர் கேட்டது கோத்ரா மற்றும் குஜராத் கலவரம் பற்றிய கேள்விதான். மோடி பதிலளிக்கத் தடுமாறியது அப்படியே தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இந்தக் காட்சிகள் குஜராத் அரசியலில் மட்டுமல்ல, தேசிய அரசியலிலும் உஷ்ணத்தை அதிகரிக்கச் செய்தது.

மோடியின் தடுமாற்றத்துக்கு இதுவரை பா.ஜ.க. தரப்பில் யாரும் விளக்கம் அளிக்கவில்லை. ஆனால், அதற்கு பதிலளிக்கும் விதமாக தெஹல்கா இணையதளம் சென்ற வாரம் வீடியோகாட்சி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கோத்ரா தொகுதியின் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினரான ஹரேஷ் பட் உள்ளிட்ட சிலருடைய பேட்டிகள் ஒளிபரப்பாகின. அவர்கள் அத்தனை பேருமே கோத்ரா மற்றும் குஜராத் கலவரத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்கள்.

கொஞ்சம் விளக்கமாகப் பார்க்கலாம்.

ரகசிய கேமரா மூலம் அரசியல்வாதிகளின் முகத்திரையைக் கிழிப்பது தெஹல்காவுக்கு வழக்கமான விஷயம்தான். இந்தமுறை அவர்கள் குறிவைத்தது நரேந்திர மோடியை. இதற்காக கோத்ரா சட்டமன்ற உறுப்பினர், குஜராத் கலவரத்தில் களத்தில் இறங்கி ‘செயல்பட்ட’ ஏழு பேர், மோடிக்கு நெருக்கமானவராகக் கருதப்படும் அரசு வழக்கறிஞர் ஒருவர் மற்றும் ஐந்து குஜராத் ‘கரசேவகர்கள்’ ஆகியோருக்கு வலை விரிப்பது என முடிவு செய்தது தெஹல்கா நிருபர் குழு. இவர்களுக்குத் தலைமை, ஆஷிஷ் கெய்தான் என்கிற நிருபர். கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் அவர்களைத் தொடர்ந்து சந்தித்துப் பேசிக்கொண்டே இருந்தனர்.

‘அய்யா, நாங்கள் இந்துத்வாவைப் பற்றி புத்தகம் எழுதிக் கொண்டிருக்கிறோம். புத்தகத்தின் பெயர் '‘வி.ஹெச்.பி.யும் இந்துத்வாவும்.’ அதற்கு உங்களுடைய கருத்துக்கள் அவசியமாகின்றன. புத்தகத்துக்காக நாடு முழுக்கத் தகவல்கள் திரட்டிக் கொண்டிருக்கிறோம். நிறையப் பேர் பேசியிருக்கிறார்கள். நீங்களும் பேசினால் புத்தகம் மிகச்சிறப்பாக வரும். குறிப்பாக, கோத்ரா ரயில் எரிப்பு மற்றும் குஜராத் கலவரத்தைப் பற்றிப் பேச வேண்டும். இந்துத்வத்தின் பெருமை எல்லோர் மத்தியிலும் பரவும்.'

இதுதான் அந்த நிருபர் ஆஷிஷ் கெய்தான் விரித்த வலை. ‘இந்துத்வா பரவும்’ என்கிற வார்த்தைகள் அவர்களைச் சுண்டி இழுத்துவிட்டன. மளமளவென நடந்த சம்பவங்களை வார்த்தை விடாமல் ஒப்பித்துவிட்டனர்.

அப்படி என்ன சொல்லிவிட்டார்கள் அவர்கள்?

ஒவ்வொரு நபராகப் பார்க்கலாம்.

சட்டமன்ற உறுப்பினர் ஹரேஷ் பட்:

‘கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நடந்தவுடன் மோடி தலைமையில் பா.ஜ.க. பிரமுகர்கள், பஜ்ரங் தள், வி.ஹெ.ச்பி., ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரின் கூட்டம் நடந்தது. அதில் பேசிய மோடி, ‘நான் உங்களுக்கு மூன்று நாட்கள் அவகாசம் தருகிறேன். அதற்குள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள். ஆனால், மூன்று நாட்களுக்குப் பின் நான் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டியாக வேண்டும்’ என்றார். அதன்பிறகு பெரிய அளவில் கொலைச்சம்பவங்கள் நடந்த பிறகு எங்களை அழைத்த மோடி, எல்லோரையும் பாராட்டினார்.’

மதன் சாவல் பா.ஜ.க. தொண்டர்:

‘முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக ஓடினோம். அவர்களை எல்லாம் முன்னாள் காங்கிரஸ் எம்.பி. ஜாப்ரி தன்னுடைய வீட்டுக்குள் அழைத்துப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். உடனே நாங்கள் ஆயுதங்களுடன் அந்த வீட்டை முற்றுகையிட்டோம். உடனே அவர் பணத்தைக் கொண்டுவந்து கொடுத்து எங்களையெல்லாம் கலைந்து போகச் சொன்னார். நாங்களும் சரி என்றோம். அவர் பணத்தைத் தருவதற்காகக் கதவைத் திறந்ததும் விருட்டென வீட்டுக்குள் நுழைந்துவிட்டோம். உடனடியாக இருவர் அவரை மடக்கிப் பிடிக்க, அவருடைய கையை நான் வெட்டினேன். அவருடைய ஆண்குறியையும் வெட்டினேன். பிறகு அவரைத் துண்டு துண்டாக வெட்டி வீசிவிட்டு, பணத்தை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டோம். மோடியின் முயற்சியால்தான் எங்களால் சிறையில் இருந்து வெளியே வர முடிந்தது. நீதிபதிகளை இடமாற்றம் செய்து, வசதியான நீதிபதிகளை பணியிலமர்த்தியதால் எங்களுக்கு சுலபமாக ஜாமீன் கிடைத்தது.’

பஜ்ரங் தள் தலைவர் பாபு பஜ்ரங்கி:

‘வழியில் தென்பட்ட கர்ப்பிணிப் பெண் முஸ்லிம் என்று தெரிந்ததும் கையில் வைத்திருந்த கத்தியை எடுத்து அவளுடைய வயிற்றில் குத்தினேன். உள்ளே இருந்த சிசுவை வெளியே எடுத்து வீசி எறிந்தேன்.’

அனில் படேல் மற்றும் தாபல் ஜெயந்தி படேல்:

‘எனக்குச் சொந்தமான தொழிற்சாலையில்தான் கலவரத்தின் போது பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்டன. அந்தப் பணியில் வி.ஹெச்.பி. தொண்டர்கள் ஈடுபட்டனர். எல்லா விஷயமும் போலீஸாருக்குத் தெரியும். ஆனால், அவற்றைக் கண்டுகொள்ளவில்லை. இன்னும் சொல்லப்போனால், விஷயம் வெளியே கசியாதவாறு அவர்கள்தான் பார்த்துக்கொண்டனர். அந்தக் குண்டுகளை வைத்துத்தான் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தினோம்.’

பிரகாஷ் ரத்தோட்:

‘பா.ஜ.க. எம்.எல்.ஏ. மாயா பென் தெருத்தெருவாகச் சென்று தொண்டர்களைக் கலவரம் செய்வதற்கு ஊக்கப்படுத்தினார். ‘முஸ்லிம்கள் ஒருவரைக் கூட விடக்கூடாது. வேகமாகக் கொன்று குவியுங்கள்’ என்று ஆவேசமாகக் கூறிக்கொண்டே நடந்தார்.’

சுரேஷ் ரிச்சர்ட்:

‘முஸ்லிம் மக்கள் இருக்கும் இடங்கள் எங்கு இருக்கிறது என்று தெரியாமல் நாங்கள் திணறியபோது போலீஸாரே சில இடங்களைச் சுட்டிக் காட்டினர். நாங்கள் அங்கு சென்று கதவுகளை மூடிவிட்டு, அவர்களை உள்ளேயே வைத்து எரித்துவிட்டோம்.’

அரசு வக்கீல் அரவிந்த் பாண்ட்யா:

‘கலவரத்தில் ஈடுபட்ட தொண்டர்களுக்கு எதிரான வழக்குகள் எல்லாம் ஒன்றும் இல்லாமல் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள மோடி சில உத்தரவுகளைப் பிறப்பித்தார். காவல்துறை அதிகாரிகள் இந்துக்களுக்குச் சாதகமாக நடந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

கோத்ரா சம்பவம் மோடியை ரொம்பவே வருத்தப்பட வைத்திருந்தது. அகமதாபாத்தில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியான ஜுஹபுரா பகுதியில் தானே குண்டு வீசத் தயாராக இருப்பதாக அவர் கூறி வந்தார். ஆனால், முதல்வர் பதவியில் இருந்ததால் அப்படிச் செய்ய முடியவில்லையே என்று வருத்தப்பட்டார். முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்ட தினத்தை ஒவ்வோர் ஆண்டும் கொண்டாட வேண்டும் என்றார் மோடி.’

வி.ஹெச்.பி. பொதுச் செயலாளர் திலீப் திரிவேதி:

‘மாநிலம் முழுவதும் உள்ள வக்கீல்கள் எங்களுக்குச் சாதகமாக இருந்தனர். கலவரத்தில் ஈடுபட்டவர்களுக்குச் சாதகமாக அவர்கள் வாதாடினர்!’

மேலே இருக்கும் கருத்துகள் அத்தனையும் குஜராத் கலவரத்துக்கு மோடியின் பங்களிப்பை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தியுள்ளன.

சமீபத்தில் சர்ச்சைக்குள்ளான ராமர் பால விவகாரம் தங்களுக்குத் தேனை வார்க்கப் போகிறது என்று நினைத்துக் கொண்டிருக்கும் சமயத்தில், தேளை வார்த்திருக்கிறது தெஹல்கா வீடியோ.

விரைவில் நடைபெற இருக்கும் குஜராத் சட்டமன்றத் தேர்தலில் இந்த வீடியோ பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். என்ன செய்யப் போகிறார் மோடி?

நன்றி குமுதம் ரிப்போர்ட்டர்.

Link to comment
Share on other sites

தெஹல்கா தோலுரித்துக் காட்டிய குஜராத் கலவர உண்மைகள் குறித்து?

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் (அது ஒரு விபத்து என்று முடிவானது வேறு விஷயம்) நடந்து முடிந்தவுடன் முஸ்லிம்களைப் பழி வாங்கும் திட்டம் அங்கிருந்த மத வெறியர்களிடம் தோன்றிவிட்டது. அவர்களுக்குத் தேவையெல்லாம் தலைவர் மோடியின் கண்ணசைப்புத்தான். வந்தார் மோடி. போலீஸை அழைத்து அவர்களை ‘கை கட்டி வாய் பொத்தி வேடிக்கை பாருங்கள், அல்லது இவர்களோடு சேர்ந்து கொண்டு அவர்களை அடித்துக் கொல்லுங்கள்’ என்று கட்டளையிட்டார். இந்திய_ பாகிஸ்தான் பிரிவினைக்கு அப்புறம் மகா கோரமான இனப்படுகொலை ஆரம்பித்தது. மனிதக்கறி தின்னும் ஓநாய்கள் வெறியுடன் பாய்ந்தன. படுகொலைகளை, பாலியல் வல்லுறவுகளை, உடல் உறுப்புகளை அறுத்து எறிந்ததை எவ்வளவு ஆனந்தத்துடன் தெஹல்காவிடம் சொல்கிறார்கள் அந்தக் கொலைகாரர்கள். (‘ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றைக் கிழித்து உள்ளே இருந்த குழந்தையைக் கொன்றேன்’). ஒரு மாநிலத்தின் சட்ட ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டியவர் ரத்த வெறி பிடித்த வானரப்படையைத் தூண்டி விட்டு ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்று குவித்த கொடூரம் காந்தி பிறந்த மாநிலத்திலா நடந்தது? எத்தனை பேர் அந்தப் படுகொலைகளை சைக்கோத்தனத்துடன் விவரிக்கிறார்கள். எவ்வளவு மகிழ்ச்சியுடன் அந்த சம்பவங்களை அசை போடுகிறார்கள். ஒருவர் சொல் கிறார் ”மோடி மட்டும் முதல்வராக இல்லாதிருந்தால் அவரே முஸ்லிம் பகுதியில் குண்டுகளை வீசியிருப்பார்.’’ கொலைகாரர்களை வீடு தேடி வந்து பாராட்டிய ஒரு வெறிநாய், முதல்வர் பதவியில் இருப்பது வெட்கக்கேடு. இருக்க வேண்டிய இடம் தூக்குமேடை.............

நன்றி குமுதம் அரசு பதில்

Link to comment
Share on other sites

thellka111107ls4.png

நினைத்துப் பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது... எப்படி இதைச் சாதித்தார்கள் என்று!

ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகம் மற்ற மூன்று தூண்களான நீதித்துறை, நிர்வாகத்துறை, ஆட்சித் துறையால் சாதிக்க முடியாததை சாதித்துள்ளது.

தெஹல்கா என்ற ஆங்கில வார இதழின் அஷிஷ்கேதான் தலைமையிலான நிருபர்கள் குழு பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங்தள், விஷ்வஹிந்த் பரிஷத் முக்கியஸ்தர்கள், அரசு வழக்கறிஞர்கள், சாட்சிகள் போன்றோரிடம் தங்களை இந்துத்துவாவின் பெருமைகள் பற்றி ஆய்வு செய்து புத்தகம் எழுதப் போவதாக அறிமுகப்படுத்திக்கொண்டு நட்பை வலுப்படுத்தி, நம்பிக்கையைப் பெற்று, குஜராத் கலவரத்தை எப்படி நிகழ்த்தினார்கள் என்பதை அவர்கள் வாயாலேயே பேச வைத்து ரகசியமாக பதிவு செய்து அம்பலப்படுத்தியுள்ளது. இதயத்துடிப்பையே ஸ்தம்பிக்க வைக்கும் அதிர்ச்சிகரமான உண்மைகள் இதில் வெளிவந்துள்ளன.

முதலாவதாக, கோத்ராவில் சபர்மதி எக்ஸ்பிரஸ் தீப்பிடித்து எரிந்ததற்கு முஸ்லிம்கள் காரணமா? இல்லையா? என்பதை தெஹல்காவின் புலனாய்வு தெளிவுபடுத்தியுள்ளது. இந்த ரயில் பெட்டியை இஸ்லாமியர்கள்தான் எரித்தார்கள் என்பதை நிலைநாட்ட குஜராத் அரசாங்கம் எடுத்துக்கொண்ட முயற்சிகள் அபாரமானவையாகும்.

பெட்ரோல் பங்க் ஊழியர் ரஞ்சித்சிங்கிற்கு ‘முஸ்லிம்கள் 140 லிட்டர் பெட்ரோல் வாங்கிச் சென்றார்கள்’ என்று கூறுவதற்காக தரப்பட்ட ரூ.50,000, டீ விற்கும் சிறுவன் அஜய்பாரியாவிடம், ‘நான்தான் பெட்ரோல் கேன்களை ரிக்ஷாவில் எடுத்து வைத்தேன்’ என்று பணம் தந்து நிர்ப்பந்தப்படுத்தி பெற்ற வாக்குமூலம், குறிப்பிட்ட தினத்தன்று வெளிநாட்டில் இருந்த ‘மவலபியாகூப்’ என்பவரை ‘தீ வைத்தார்’ என்று கைது செய்து நிரூபிக்க முடியாமல் திணறிய போலீஸ், சம்பவத்தின்போது அங்கே இல்லாத ‘பதக்’ என்பவரை ‘முஸ்லிம்கள் எரித்ததைப் பார்த்தேன்’ என்று சொல்ல வைத்தது.

நாதுராம் கோட்சே, கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்திக் கொண்டு காந்தியை சுட்டுக்கொன்றதுதான் நினைவிற்கு வருகிறது. ஆனால் அவசரப்பட்டு அவனை முஸ்லிம் என அறிவித்துவிடாமல், நிதானமாக விசாரித்தறிந்து காந்தியை கொன்றது இந்துதான்’ என்று ரேடியோவில் அறிவிக்கச் செய்தார் அன்றைய பிரதமர் ஜவஹர்லால்நேரு.

ஆனால் குஜராத் முதல்வர் நரேந்திரமோடி சம்பவ இடத்திற்கு விசிட் செய்த அந்த நிமிடத்திலேயே, ‘இது ஒரு சமுதாயத்தின் பயங்கரவாதச் செயல்’ என்றார். இந்துத்துவ அமைப்புகளின் துவேஷத் தீ கனன்று எரிய அவரே எண்ணெய் வார்த்தார்.

ஒன்றா, இரண்டா... சுமார் 2,000 மனித உயிர்கள் இஸ்லாமியர்கள் என்பதாலேயே வேட்டையாடப்பட்டது. சொந்த மண்ணிலேயே லட்சக்கணக்கானவர்கள் அகதிகளான அவலமும் இந்த இருபத்தியோராம் நூற்றாண்டிலேயே தான் நிகழ்ந்துள்ளது.

ஒரு நாடு அல்லது ஒரு இனம் இவற்றின் மீதான துவேஷத்தை திட்டமிட்டு கட்டமைத்தே இது போன்ற இனப் படுகொலைகள், பேரழிவுகள் வரலாற்றில் சாத்தியமாகியுள்ளது. போர்களின் போது எதிரிகளை வீழ்த்த, பெரும் தீமைகளை அரங்கேற்ற ஒரு ‘பரிசுத்தமான உயர்ந்த நோக்கம்!’ மக்கள் மனதில் விதைக்கப்படுவது வரலாறு நெடுகிலும் நடந்துள்ளது. குஜராத்தில் ‘ஜெய்ராம்’ என்ற கோஷத்துடன் ஒன்றுபட்டு இஸ்லாமியர் களைக் கொல்வது என்பது புனிதச் செயலாக இந்துக்களுக்கு போதிக்கப்பட்டுள்ளது.

சிலுவைப்போர்களின் போது குழந்தைகளின் சிலுவைப்படை பலகொடிய அழிவுகளுக்குப் பயன்பட்டு, பலியிடப்பட்டனர். இரண்டாம் உலகப்போரில் ஹிட்லர் ஜெர்மானிய சமூகத்தினரை கொலை வெறியர்களாக மாற்ற முடிந்திருக்கிறது.

ஆனால் இவ்வளவு நாகரிகம் வளர்ந்த 21_ஆம் நூற்றாண்டிலும் அந்த வரலாறு திரும்ப வேண்டுமா?

இஸ்லாமியர்களுக்கு எதிரான துவேஷ மனப்பான்மைக்கு முதலில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இந்துக்களுக்கு சில விஷயங்களில் தெளிவை உண்டாக்க வேண்டும். எல்லாவற்றையும் வாளும், நெருப்புமே சாதிக்குமென்பது பைத்தியக்காரத்தனத்தின் உச்சகட்டம்!

இப்படி பைத்தியக்காரத்தனத்தின் உச்சத்திற்கு மக்களை கொண்டு சென்றதால்தான் நரேந்திரமோடி போன்றவர்களும், அவர் சார்ந்த இந்து இயக்கங்களும் குஜராத்தில் இவ்வளவு வன்முறைகளை நிகழ்த்த முடிந்தது.

இதே இந்தியாவின் மற்ற பகுதிகளில் சகிப்புத்தன்மையின் சாட்சியமாக இந்து மதத்தை நம்பும் கோடிக்கணக்கான இந்துக்களும் வாழ்கின்றனர்.

‘அகம் பிரம்மாஸ்மி’ அகமே தெய்வம். தத்துவமஸி.. நீயே கடவுள் என்ற உபநிஷத்தின்படி ஒவ்வொரு மனிதனுமே தெய்வம்!

‘‘காக்கை குருவி எங்கள் ஜாதி’’ நீள் கடலும், வானும் மலையும் எங்கள் கூட்டம்’’ என்ற வேத வாழ்வை விரும்பிய மகாகவி பாரதியாரின் பிரகடனத்தை ஒரு உண்மையான இந்துவின் பிரகடனமாக இந்தியாவெங்கும் ஒலிக்கச் செய்வோம்..

நன்றி குமுதம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.