Jump to content

ஒரு பேப்பருக்குத் தரமான ஆக்கங்கள் கோரப்படுகின்றன.


Recommended Posts

அய்ரோப்பா எங்கும் வினியோகிக்கப்படும் ஒரு பேப்பரில் பிரசுரிக்க எனத் தரமான ஆக்கங்கள் கோரப்படுகின்றன.இணையத்தில் இருந்து பத்திரிகைகளில் உங்கள் ஆக்கங்களை வெளியிட உங்களுக்கு ஒரு அரிய சந்தர்ப்பம்.உங்கள் எழுதுத் திறனை பரந்துபட்ட வாசகர் வட்டத்திற்கு நகர்த்தவும் உங்கள் சிந்தனைகளை அய்ரோப்பியா வாழ் தமிழர்களிடம் எடுத்துச் செல்லவும் யாழ்க் களம் இப்போது 'விரியம்' என்னும் பகுதியினூடாகா உங்களுக்குக் களம் அமைத்துத் தருகிறது.வெறும் வாதப்பிரதிவாதங்களுக்கு அப்பால் காத்திரமான எழுத்தாற்றலை ஊக்குவிப்பதற்கான யாழ் களத்தின் முயற்சி இது.

ஆக்கங்கள் கீழக் கண்ட விதிமுறைகளுக்கு அமைவாக இருக்க வேண்டும். யாழ்க்கள ஒரு பேப்பர் குழுமம் பிரசுரிப்பது பற்றிய இறுதி முடிவை எடுக்கும்.ஆக்கங்களை நீங்கள் யாழ்க் களத்தில் தகுந்த பகுதிகளில் இணைத்து விட்டு, அதன் கீழ் ஒரு பேப்பர் குழுமத்தின் பரிசீலனைக்கு எனக் குறிப்பிடலாம்.அல்லது தனி மடல் மூலம் யாழ்க்கள ஒரு பேப்பர் குழுமத்தின் எந்த உறுப்பினரிடமும் அறியத் தரலாம்.

தற்போதைய உறுப்பினர்கள்,

நாரதர்,சாத்திரியார்,குறுக்கா

Link to comment
Share on other sites

நாரதர் அண்ணை, நீங்களே எழுதிக்குடுக்கலாமே? ஒரு பேர்ப்பரில் பெரியார், பாரதியார், இராமாயணம், இராம பாளம் பற்றிய செய்திகளை பிரசுரிப்பார்களா? அப்படி என்றால் இங்கு இருந்து ஒரு தொகை ஆக்கங்களை நீங்கள் எதிர்பார்க்க முடியும்.

ஒரு பேர்ப்பர் இலவச வெளியீடா அல்லது சிறு தொகை வருமானமும் இதற்கு உள்ளதா? இந்த விளம்பரத்தை யாழ் உறவோசையில் போடாமல் யாழ் முகப்பில் போட்டால் ஓரளவு பலன் உண்டு என்று நினைக்கின்றேன்.

இங்கு இருப்பவர்கள் பொழுதுபோக்காக எழுதுபவர்கள், நான் உட்பட.. ஐயோ சாமி, நாங்கள் வெளியாலையும் பொழுதுபோக்காக எழுதி ஆக்களிட்ட அடி வாங்க ஏலாது. ஆளை விடுங்கோ. முழுப்பெயர், முகவரி எல்லாம் கேட்கிறீங்கள் பயமாய் இருக்கு.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்.

அண்மை காலங்களாக மதங்களை இழிவு படுத்தும் நோக்கோடு திட்டமிடப்பட்டு சில

தினிப்புக்களை தொடராக செய்து வரும் இந்த பத்திரிகையில் எவ்வாறு தரமான ஆக்கங்கள் முன் வைக்கப்படும்....???

தமிழின எழுச்சியை மேம்படுத்திய அல்லது நிலை நிறுத்திய சாரம்சங்களை அல்லது அதன் செய்திகளை

பரப்பி அந்த மக்களை எழழு;சி கொள்ள வைக்கும் நியாய தர்மங்களை விலக்கி திட்டமிடப்பட்ட தனி நபர் தாக்குதல்களும்

பழிவாங்கும் நிலைகளும் தொடரும் வேளையில் எவ்வாறு இளையவர்களின் படைப்புக்களுக்கு இந்த

பத்திhகை சுதந்திரமான சுதந்திர போக்கை விரிக்கும்...?.

தன்தோன்றித் தனமாக அவர்களின் தலைப்புக்களை மாற்றி அவை எற்புடையதல்ல என ஆசிரியர் குழுமம் என்ற

அபச்சார குழுமம் வெட்டி ஒட்டி அந்த கருத்துக்களை சிதைத்து பொருளற்ற படைப்பாக அவை சொல்ல வந்த செய்திகளை

வேறு முனை திருப்பி அந்த படைப்புக்களை அவமதிக்கும் செயல்களை முற்போக்காக கொண்ட இந்த ஊடகத்தில் எவ்வாறு

அவர்கள் சொல்ல வந்த செய்திகளை தீர்க்கமாக கூறிவிட இவை இடமளிக்கும்...???

மதங்களை இழிக்கும் நோக்கோடு மதங்களின் விளம்பரங்களை தாங்கி அந்த மதங்களை இழிக்கும் இந்த ஊடகத்தில்

எவ்வாறு மனித தர்மமும் மனித நாகரிகமும் சுதந்திரஊடக சுதந்திரமும் காக்கப்படும்...??

திமிங்கலத்தை தவிர்ப்போம் என அறை கூவல் விடும் இவர்கள் அந்தி தமிங்கலத்தில் சரமரியாக உரையாடுவதை அந்த

வாசகன் எவ்வாறு ஏற்று கொள்வான்..ஏற்று கொள்ள முடியும்...???

இவையாவும் கலைந்து ஆக்க நிலையான ஆக்கங்களை முரண்பாடுகள் அற்ற விதியில் விரிக்கப்படுமாயின் அவை

தரமானதாகவும் நிலையானவையாகவும் நிலை நிற்கும்...

அவ்வாறெனின் யாழ்கள நாயகர்கள் இவற்றில் திறம்பட உழைக்கமடியும் நல்ல பல அறிஞர்களை தமிழ்தேசியம் பால் உருவாக்க முடியும்'...????

இவற்றுக்குள் சுயநலமற்ற தெளிதல் வேண்டும்...நெடுக்கால போவனும் இவற்றில் ஒர் அங்கமாக இருப்பதால்

மழுங்கடித்தல் நிகழாது என அவரின் எழுத்தின் மூலம் உறுதி எடுக்கலாம்...

இருப்பின் இவர்களின் நடவடிக்கைகளின் நடைமுறையை பொறுத்தே மிகுதி தெரிந்து கொள்ள புரிந்த கொள்ள முடியும்...

இவர்களின் இவ் நல்லென்ன முயற்சிக்கும் சிந்தனை போக்கிற்கும் தலை வணங்கி

விடை பெறுகின்றேன் ..

நன்றி...

ஓர் அன்பன் அனுப்பியதை இங்கு தருகின்றேன்..இவை மின்னஞ்சல் மூலம் எனக்கு வந்தவை...

Link to comment
Share on other sites

ஒரு அன்பன்் எனக்கு அனுப்பியதை இங்கு தருககிறேன்.இவை மின்னஞ்சல் மூலம் எனக்கு வந்தவை

ஒ காவல்துறை இதுகூட உங்கள் சொந்த கருத்துகிடையாதா?? :lol::( அப்பரி. :lol: நாரதர் இங்கு கேட்டது உங்களால் சுயமாக சிந்தித்து சொந்தமாக ஏதாவது எழுத முடியுமானால் எழுதி தரும்படி. :(:(

அதுசரி ஒரு சந்தேகம் யாரோ ஒரு அன்பர் ஒரு பேப்பரை பற்றி எழுதி அதை ஏன் உங்களிறற்கு மின்னஞ்சல் செசய்யவேண்டும் நீங்கள்ஒரு பேப்பரின் ஆசிரியரா??? அல்லது??????? :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மதங்களை கொச்சைப்படுத்துவது வேறு நாஸ்தீக வாதம் வேறு.

அப்படி மதங்களை கொச்சைப்படுத்துவதாக ஆக்கங்கள வந்ததாக நான் அறியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

]மதங்களை கொச்சைப்படுத்துவது வேறு நாஸ்தீக வாதம் வேறு.

அப்படி மதங்களை கொச்சைப்படுத்துவதாக ஆக்கங்கள வந்ததாக நான் அறியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:lol: ஒருபேப்பர் இப்பிடி எல்லாம் நல்ல விசயம் செய்யுதா???????????????????????????? முன்னேற்றம்தான்:........................... வெளிநாடுகளில கோயில்களயும் மதங்களயும் ஒழிக்க ஒருபேப்பர் இன்னும் நல்லா தீவிரமா செயற்படணும்........................................... இந்த மதங்களும் மதங்கள தூக்கித் திரியிறவையும் மக்கள இழிவுபடுத்துகினம்.............................

.... தமிழை இழிவுபடுத்தியினம்.......................... அந்து மதத்த கொச்சைப்படுத்துறதில தப்பேயில்ல.................................... நல்ல ஒரு விசயத்த பற்றி தப்பா எழுதினால் தான் கொச்சைப்படுத்துறது.......................

............... மக்கள முட்டாளாக்கி வைச்சிருக்கிற விசயங்கள பற்றி உண்மையள எழுதின அதுக்கு பேர் கொச்சப்படுத்திறதில்ல.................

................. ஒரு பேப்பர் இன்னும் பல மடங்கு தீவிரமா இந்த விசயத்தில நடக்கோணும்.............................

வெளிநாடுகளில மக்குளின்ர போராட்டத் தீவிரத்த மழுங்கடிக்கச் செய்யிறதுக்கு தான் இந்த மதங்கள் செயல்படுகுது........................... பண்டிகைகள் பூசைகள் கொண்டாட்டங்கள் தேரிழுத்தல் தேங்கா உடைக்கல்................ எண்டு மக்கள் சக்தியை திசை திருப்பி போராட்டத்தில இருந்து திசை திருப்புற நோக்கத்தோட தான் மதங்கள் வெளிநாட்டில கையாளபடுது................ மக்கள் சக்தியையும் தமிழற்ற பொருளாதாரத்தையும் இந்த மதங்களும் மதவாதிகளும் வீணாக்கி மழுங்கடிக்கினம்..................... ஒருபேப்பர் இதுகள அம்பலப்படுத்தோணும்.......................

............. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பூனைக்குட்டிக்கு குளிராலை சன்னி புடிச்சுட்டுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப கோயில்களை இழுத்துப் பூட்டிட்டு அங்கெல்லாம் சாராயம் ஊத்தினா மக்கள் விழிப்புணர்வு பெற்று அறிவு பெருகி.. சனிக்கிரகத்தில ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பினமாக்கும்..! ஓசிப் பேப்பர் இதை செய்ய முன் வரனும். முதலில கோயில் வாசலில ஓசிப் பேப்பர் போடுறதை நிறுத்திப் போட்டு......... வாயால.. விளாசினா நல்லா இருக்கும். இந்த ஓசிப் பேப்பர்களால மாநகரசபைக்கு குப்பை பெருகிறதா அவை கவலை வெளியிடுகினமே தவிர... வேற...........???! :lol::lol:

Link to comment
Share on other sites

....வெளிநாடுகளில மக்குளின்ர போராட்டத் தீவிரத்த மழுங்கடிக்கச் செய்யிறதுக்கு தான் இந்த மதங்கள் செயல்படுகுது........................... பண்டிகைகள் பூசைகள் கொண்டாட்டங்கள் தேரிழுத்தல் தேங்கா உடைக்கல்................ எண்டு மக்கள் சக்தியை திசை திருப்பி போராட்டத்தில இருந்து திசை திருப்புற நோக்கத்தோட தான் மதங்கள் வெளிநாட்டில கையாளபடுது................ மக்கள் சக்தியையும் தமிழற்ற பொருளாதாரத்தையும் இந்த மதங்களும் மதவாதிகளும் வீணாக்கி மழுங்கடிக்கினம்..................... ஒருபேப்பர் இதுகள அம்பலப்படுத்தோணும்.......................

............. :lol:

கொழும்பில் கூட மக்களை கோவில் மற்றும் நாடகத்தொடர்கள் என்று போதையில் வைத்திருக்க மகாராஜா குழுமம் மகிந்தவுடன் சேர்ந்து பணியாற்றுகின்றது.

இப்போதும் கூட கொட்டகேன, காலி வீதி, போன்ற பகுதிகளில் இளைஞர்கள் பிரதட்டை அடிப்பதும் போர்த் தேங்காய் அடிப்பதும், பெண்கள் பால்குட பவனி என்று வீதி முழுவதும் பாலை சிந்தி திரிவதும் நடக்கிறது.

நாளோன்றுக்கு 4 பேர் வீதம் கொல்லப்படும் மக்கள் குறித்து எந்த சலனமும் இங்கு காண்பிக்கப்படுவதில்லை. அங்கு இதை பற்றி பிரஸ்தாபித்தால் அது மதவிரோதமாக கூறி நிர்வாகத்தினர், முறைத்துப் பார்க்கின்றனர். மதம் மக்களுக்காகவெனில் இந்த மத வியாபாரிகளும், அவர்களின் வியாபாரப் பண்டமாகிய கடவுளும் ஆக்கபூர்வமாக இந்த அவலத்தை தீர்க்க என்ன செய்கின்றனர்?

கேட்டால் "எல்லாம் அவன் செயல்!", "எப்போதோ முடிந்த கதை!"

பிற்குறிப்பு:

நான் பிறப்பால் ஒரு இந்து, பழக்கதோசத்தாலும், குடும்ப அழுத்தத்தாலும் இறைவனை வழிபடுபவன்.

"அன்பே சிவம்"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில் கூட மக்களை கோவில் மற்றும் நாடகத்தொடர்கள் என்று போதையில் வைத்திருக்க மகாராஜா குழுமம் மகிந்தவுடன் சேர்ந்து பணியாற்றுகின்றது.

இப்போதும் கூட கொட்டகேன, காலி வீதி, போன்ற பகுதிகளில் இளைஞர்கள் பிரதட்டை அடிப்பதும் போர்த் தேங்காய் அடிப்பதும், பெண்கள் பால்குட பவனி என்று வீதி முழுவதும் பாலை சிந்தி திரிவதும் நடக்கிறது.

நாளோன்றுக்கு 4 பேர் வீதம் கொல்லப்படும் மக்கள் குறித்து எந்த சலனமும் இங்கு காண்பிக்கப்படுவதில்லை. அங்கு இதை பற்றி பிரஸ்தாபித்தால் அது மதவிரோதமாக கூறி நிர்வாகத்தினர், முறைத்துப் பார்க்கின்றனர். மதம் மக்களுக்காகவெனில் இந்த மத வியாபாரிகளும், அவர்களின் வியாபாரப் பண்டமாகிய கடவுளும் ஆக்கபூர்வமாக இந்த அவலத்தை தீர்க்க என்ன செய்கின்றனர்?

கேட்டால் "எல்லாம் அவன் செயல்!", "எப்போதோ முடிந்த கதை!"

பிற்குறிப்பு:

நான் பிறப்பால் ஒரு இந்து, பழக்கதோசத்தாலும், குடும்ப அழுத்தத்தாலும் இறைவனை வழிபடுபவன்.

"அன்பே சிவம்"

சாணக்கியா அப்ப நீங்கள் மக்களட்ட என்ன எதிர்பார்க்கிறீர்கள்.. நீங்கள் எதிர்பார்க்கிற வகையில மக்களை வழிநடத்தி மகிந்த அரசுக்கு எதிரா இராணுவத்துக்கு எதிரா ஆட்கடத்தல் கும்பல்களுக்கு எதிரா கொழும்பில மக்கள் அணியைத் திரட்டி செயற்பட உங்களால் தலைமை தாங்க முடியுமா..??!

மக்கள் கடவுளை நம்பி வீணாப் போகினம் என்று கவலைப்படுகிறவர்கள் தங்கள் பங்குக்கு கடவுளைத் திட்டி வீணாப் போகின்றனர். இரண்டு தரப்புமே சாதிக்க நினைக்கல்ல. கடவுளை நம்புறவை எல்லாரும் நாட்டுச் சூழலையிட்டு வரத்தப்படாமலும் இல்லை. அதேபோல் நாத்திகம் பேசுறவையும் நாட்டுச் சூழலை நங்குணர்ந்துதான் நடக்கினம் என்று சொல்லும் படியும் இல்லை.

மக்கள் சூழலுக்கு ஏற்ப தங்களால இயன்றதைச் செய்ய முனைகின்றனர் என்பதுதான் உண்மை. வன்னில உள்ள மக்களுக்கு உள்ள சூழ்நிலை வேற யாழ்ப்பாணம் வவுனியா, தென் தமிழீழம் என்று இராணுவக் கட்டுப்பாட்டுக்க இருக்கிற மக்களின் சூழ்நிலை வேற கொழும்பு மற்றும் தென்னிலங்கையில் உள்ள தமிழ் மக்களின் சூழ்நிலை வேற புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்கின்றவர்களின் சூழ்நிலை வேற..! மக்கள் தங்கள் சூழ்நிலைக்கு ஏற்ப தான் தெரிவுகளைச் செய்வர். சரியான வழிநடத்தல் இல்லை என்றால் மக்களின் தெரிவுகள் அவர்களின் சொந்த இரசணைப்போக்கில் அமையும். எல்லா இடத்திலும் மக்களை நாங்க விரும்பிறது போல நாட்டுப் பிரச்சைக்காக 24 மணி நேரமும் கவலைப்பட்டிட்டு இரு என்று நினைக்கிறதும் ஒரு வீணாப் போற நினைவுதான்..!

சூழலுக்கு ஏற்ப தன்னை தக்க வைக்க தெரிஞ்சவனால தான் போராட்டத்தை தொடங்க முடியும் நகர்த்திச் செல்ல முடியும் வெற்றிகளைப் பெற முடியும். சூழல் குழப்பத்தோடு தானும் குழம்பி மக்களையும் குழப்பினா.. அது தெளிவற்ற நிலைதான். இலட்சி உறுதி மிக்க மக்கள் சாமி கும்பிட்டால் என்ன நாடகம் பார்த்தால் என்ன இலட்சியத்தை நிறைவேற்றும் சந்தர்ப்பம் கிடைக்கேக்க பொங்கி எழுவார்கள்.

எத்தனையோ கரும்புலிகள் தென்னிலங்கையிலேயே வாழ்ந்து கோவில் கும்பிட்டு.. நாடகம் பார்த்து.. ஏன் திருமணம் செய்து வாழ்ந்து கூட இலட்சியத்தை நிறைவு செய்திருக்காங்க. அப்ப அவங்களை எல்லாம் நீங்க கோவில் கும்பிடாம இருந்தால் தான் போராளிகள் என்பீர்களா..??! கோவில்களை நாடகங்களை பகிஸ்கரிப்பதுதான் மக்கள் துயரில் பங்கெடுப்பது.. நாடகம் பார்க்காமல் வன்னில குண்டு போடுறதைப் பற்றி மட்டும் வீட்டுக்க குசு குசுத்துக் கதைத்தபடி இருக்கிறது தான் மக்கள் அக்கறை என்று கருதி நீங்கள் அவற்றையா மக்களிடம் எதிர்பார்க்கிறீர்கள்..??!

நானும் பிரேமதாச சந்திரிக்கா அம்மையார் காலங்களில் தென்னிலங்கையில் தான் வாழ்ந்தேன். தென்னிலங்கையில் வாழும் போது வீதியில் மறந்தும் தமிழ் கதைக்கமாட்டேன். தினமும் வீரகேசரி படிப்பேன். 1997/98 இல் இருந்து தினக்குரலும் படிப்பேன். ஆங்கிலப்பத்திரிகைகளும் படிப்பேன். தினமும் விடயங்களைச் சேகரித்துக் கொண்டு தென்னிலங்கையில் வாழும் மக்களைப் போலத்தான் வாழ்ந்தேன். நான் அங்கு வித்தியாசமா வாழ்ந்தா சந்தேகத்தின் பேரில் இப்ப உள்ளதான் இருந்திருப்பேன்..!

இப்படித்தான் பிற மக்களும் வாழ்கின்றனர். புகலிடத்தில் பாருங்கள்.. புலி மீது தடை என்றதும் தமிழ்செல்வன் அண்ணாவுக்கு அஞ்சலி செய்து பிரசுரங்கள் வெளியிடக் கூட தயங்கி தயங்கித்தான் நிகழ்வுகளைச் செய்கின்றனர். இணையத்தில் ஏற்றுவது இலகு. ஆனால் நடைமுறையில் ஒவ்வொன்றையும் செய்யும் போது எதிர்கொள்ளும் சூழல் என்பது சவால்கள் நிறைந்ததாகவே அமைந்துள்ளது. மக்கள் பலருக்கு இந்தச் சவாலை சமாளிக்க வழி தெரியவும் இல்ல வழி காட்ட யாரும் இல்லை என்ற நிலைதான் இருக்குது. பிரச்சனை எங்கையோ இருக்க கடவுளும் பால் குடமும் நாடகமும் தான் பிரச்சனைக்கு காரணம் என்பது போல நாம் விடயங்களை அணுகுவதால் தீர்வு என்பது எதிர்பார்க்கப்பட்ட விளைவுகளைத் தருவதில்லை என்பது உண்மையே..!

யார் இந்த கடவுளை இல்லை என்போர் என்று பார்த்தீர்கள் என்றால் குழப்பத்தில் உள்ள மக்கள் மத்தியில் தெளிவற்ற ஒரு நிலை உள்ளதை உணர்ந்து அதற்குள் தங்கள் சித்தாந்தங்களை சிந்த நினைப்பவர்கள். போராடும் சூழலில் இழப்புக்கள் துயரங்கள் மலிந்திருக்கும். மக்களுக்கு வாழ்க்கையில் மட்டுமல்ல உலக நடைமுறைகளில் கூட நம்பிக்கை இழந்திருக்கும். அவ்வாறான சூழலில் கடவுளை எதிரியாகக் காட்டுவதும் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தி துன்பத்தில் மூழ்க விடுவதும் தான் இவர்களின் பணி. இது ஒருவகையில் குழம்பிப் போயுள்ள மக்களை குழப்பியடிச்சு எதிரிக்கு சாதகமாக அவர்களை இட்டுச் செல்லுதல் என்பதாகக் கூட அமையலாம். எனவே இந்த நாத்திகவாதிகளின் செயற்பாடுகள் தொடர்பில் விழிப்போடு இருக்க வேண்டும். அவர்கள் தேர்ந்தெடுத்துள்ள சூழல் அபாயகரமானது. அவர்களின் தெரிவுகள் ஆபத்தானவையாகக் கூட அமையலாம். அமைதியான சூழலில் இந்த நாத்திகவாதிகள் இருப்பிடம் தெரியாமல் இருந்தனர். ஆனால்... போர் சூழலில் எதிரியின் பிரச்சாரங்களோடு இவர்களும் தங்களின் திருக்கூத்துக்களோடு களமிறங்கியுள்ளனர். இது குழப்பத்தோடு குழப்பத்தை அதிகரித்து மக்களைக் குழப்பி.. தங்களை விளம்பரப்படுத்தும் செயலின் ஓர் அங்கம்.

புகலிடத்தில் ஆலயங்களில் தான் ஈழத்தில் இருந்து வருபவர்கள் மக்களை சந்தித்து அங்குள்ள நிலைகளை விளக்கி மக்களோடு துயர்களைப் பகிர்கின்றனர். ஆலயங்கள் தான் தமிழர் மொழி கலாசார பண்பாட்டுக் கோலங்களை அடுத்த சந்ததிக்கு காவி அவர்களையும் தமிழர்கள் என்று அடையாளப்படுத்தும் பெரும்பணியைச் செய்கின்றன. வியாபாரம் நடக்குது என்பதற்காக தேவைகளைப் புறக்கணிக்க முடியாது.

ஈழத்தில் ஆங்கிலேயர் ஆட்சியின் போதும் கூட தமிழ் சைவத்தின் மூலம் தான் காக்கப்பட்டது. ஆங்கில (கிறிஸ்தவ) மிசனறிகளில் ஆங்கில மொழி மோகம் திணிக்கப்பட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பது ஊக்கிவிக்கப்பட்ட சூழலில் சைவப் பாடசாலைகள் தான் தமிழ் மொழிக் கல்வியை ஊட்டி மக்களுக்கு தமிழுணர்வை ஏற்படுத்தின. அதே சூழல் புலம்பெயர் தேசங்களில் நிலையானதாக இருக்கிறது.

நாம் எமக்கு வசதியாக வாதங்களை இணையத்தில் அரங்கேற்றி விட்டுப் போகின்றோம். உதாரணத்துக்குப் பாருங்கள் ஈ வெ ராமசாமியை பெரியார் மண்ணாங்கட்டி என்று கொண்டு முழங்கித் தள்ளுகின்றார்கள். இந்த ஈ வெ ராமசாமி என்பவரின் கொள்கையைக் காவித்திரிய சிடி அடிப்பவர்கள் தமிழ் மொழியை கற்பது பற்றி அதன் அவசியம் அதன் நடைமுறை பற்றி ஒரு சிடியை அடித்து இலவசமாக புலம்பெயர் தேசங்களில் உள்ள பாடசாலைகளுக்கு அனுப்பட்டும் பார்ப்பம். கடவுள் இல்லை.. கோவிலை இடிப்பம் என்று கூவித் திரிந்து சுயவிளம்பரமும் வியாபாரமும் அரசியலும் நடத்த நினைக்கிற கூட்டம் மக்களையும் எதிர்கால சந்ததியையும் நிகழ்கால போராட்டச் சூழலுக்கு என்று தயார்படுத்த என்னத்தைச் செய்கிறார்கள்..???! புலம்பெயர் தேசங்களில் உள்ள கோவில்கள் செய்யும் பங்களிப்புகளில் 1% தானும் இவர்கள் செய்கின்றனரா..??!

அண்மையில் தமிழ்செல்வன் அண்ணாவின் மறைவில் கூட மக்கள் கோவில்களில் கூடித்தான் தங்கள் துயர்களைப் பகிர்ந்து கொண்டனர். மக்களுக்கு தங்கள் துயரை பகிர்ந்து கொள்ள கூட முடியாத தகாத சூழல் உள்ள நிலையில், அவர்களாகவே அதற்கு ஒரு வடிகாலைத் தேடிக் கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய சூழலை உருவாக்கி வைத்துக் கொண்டு.. சிலர் கோயிலை இடிப்பம்.. சாமியைக் கொல்லுவம்.. என்று இப்பதான் நாத்திக வாதம் செய்து கொண்டிருக்கின்றனர். உங்களால் எப்படி ஆன்மீகவாதத்தை தவறென்று தற்போது இனங்காண முடிகிறதோ அப்படித்தான் போராட்டச் சூழலை உணர்த்தாது அல்லது உணராது நாத்திகவாதம் செய்வதும் ஒரு வகையில் போராட்டத்தை விட்டு விலகிய சிந்தனையின் வெளிப்பாடுதான்.

விடுதலை வேண்டி நிற்கும் மக்கள் நாத்திகம் பேசவில்லை. கோவில்களை இழுத்து மூடச் சொல்லவில்லை. தேவாலயங்களை மூடச் சொல்லவில்லை. மாறாக கோவில்கள் தேவாலயங்கள் மக்களுக்கு அடைக்கலம் வழங்கும் இடங்களாக போர்ச் சூழலில் தீர்மானிக்கப்படுகின்றன. இந்திய இராணுவத்தின் அகோர செல் வீச்சுக்கு நல்லூர் ஆலயம் மக்களுக்கு புகலிடம் அளிக்கவில்லை என்றால் இன்று பலர் உயிருடன் இருக்கமாட்டார்கள். போராளிகளும் இராணுவமும் கோவில்களை மதிக்க முன்னுரிமை அளித்தனர். அதேபோல் மடு தேவாலயம். இப்படி கோவில்கள் போர்ச் சூழலில் மக்களின் தகாத சூழலை அவர்கள் கடந்து வர பங்களிக்கின்றனவே தவிர அவை நாத்திக வாதிகளைப் போல சும்மா கடவுளை தேடி நேரத்தை வீணடிச்சுக் கொண்டு மட்டும் நிற்கவில்லை.

கொழும்பில் கூட பெரியவர்கள் கூடி தீர்மானம் எடுக்கும் இடங்களாக கோவில்கள் விளங்குகின்றன. பெளத்த பிக்குகள் கூட இராமகிருஷ்ண மிசன் போன்றவற்றோடு நெருங்கிய தொடர்புகளை வைத்திருக்கின்றனர். பல இளைஞர் யுவதிகள் அங்கு வசதிகளை பாதுகாப்பைப் பெறுகின்றனர். நாத்திகம் பேசும் கூட்டம் இப்படி எதையாவது மக்களின் பாதுகாப்புக் கருதி செய்திருக்குதா..???! :lol:

கடவுள் இருக்கிராரா இல்லையா என்பதல்ல முக்கியம். மக்களின் துயரைத் துடைக்க அல்லது அவர்களின் துயரோடு எது அதிகம் பங்களித்து ஆறுதல் தருகுதோ அதை மக்கள் நாடுவர். மக்களின் துயரைப் பற்றி கிஞ்சிதமும் அக்கறைப்படாது கொள்கை பேசிட்டு இருந்தால் அந்தக் கொள்கைகளும் பேச்சுக்களும் மக்களை நெருங்கவே முடியாது. அதுதான் கடவுள் இல்லை என்ற நாத்திகத்தின் தோல்விக்கு முக்கிய காரணம். நாத்திகம் பேசி.. வீணாப்போனவர்களைக் காட்டிலும் கோவிலுக்குப் போய் பயனுள்ள சிலவற்றைச் செய்தால் கூட அது தான் மக்களின் தேவையைப் பூர்த்தி செய்யும்.

மக்கள் சேவையே மகேசன் சேவை. மக்கள் தான் கடவுள்..! உயிர்கள் தான் கடவுள். கோவில் சிலைகளில் கடவுளைத் தேடி அதை அழிக்க முற்படும் முட்டாள்கள் தான் நாத்திக வாதிகள். கோவில் சிலைகளில் மக்களின் உணர்வுகளை பிரதிபலித்து மக்களை ஒருங்கிணைப்பவர்கள் தான் ஆன்மீகவாதிகள்..! எது உபயோகமானது..??! தீர்மானிப்பது உங்கள் கையில்..! :lol:

Link to comment
Share on other sites

இவ்வளவு பெரிசா எழுதிறதை விட, இரண்டு வார்த்தையில என்னை திட்டிட்டு போயிருந்தா சந்தோசப்பட்டிருப்பன். இதை வாசிச்சு பதில் எழுத எனக்கு ஒருநாள் அவகாசம் தேவை கண்டியளோ!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 17. MI என்று எழுதி  விடுங்கோ.  நன்றி 
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ச‌கோ🙏🥰..............................
    • "சிவப்பு உருவம்"   இரத்தினபுரி கஹவத்தையில் தொடங்கிய கிறீஸ் மர்ம மனிதன் விவகாரம் ஒரு ஊரிலோ, ஒரு மாவட்டத்திலோ மட்டுமல்லாமல், இலங்கையின் பல்வேறு மாவட்டங்களிலும், குறிப்பாக தமிழர், முஸ்லீம்கள் செறிந்து வாழும் பகுதியிலேயே இடம்பெற்றன. இச்சம்பவங்கள் 2011 ஆம் ஆண்டு ஜூலையில் ஆரம்பித்து ஆகஸ்ட்  மாதத்தில் கடுமையாக பரவியது. க்ரீஸ் பூதம் என்பது ஒரு திருடனாகும். அவன் வழமையில் உள்ளாடை மாத்திரமே அணிந்து கொண்டு உடல் பூராவும் க்ரீஸைப் பூசியிருப்பான். துரத்திச் செல்வோர் பிடிக்க முடியாமல் வழுக்கி விழக் கூடிய விதத்தில் க்ரீஸ் பூசப்படுவதுடன், திருடன் இலகுவாகத் தப்பிச் செல்வதற்கும் அது உதவியாக அமைந்து விடும். இப்படியான ஒரு கால கட்டத்தில் தான் நான், மலையகம் பகுதியில் தற்காலிகமாக வேலை நிமிர்த்தம் விடுதி ஒன்றில் தங்கி இருந்தேன்.   நான் தங்கி இருந்த விடுதி, கடல் மட்டத்திலிருந்து 1000-1500 மீட்டர் உயரத்திற்கு உயர்ந்து நிற்கிறது. இந்தப் பகுதி மிகவும் அமைதியாகக் காட்சியளிப்பதுடன் ஒரு  நீர்வீழ்ச்சிக்கு மேலே மலைப்பகுதியில் அமையப் பெற்றுள்ளது. இங்கு இயற்கை எழில் சூழ்ந்த தேயிலை தோட்டங்கள், நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் நிறைந்து காணப்படுகின்றன. மொத்தத்தில்  புத்துணர்ச்சி அளிக்கும் ஒரு குளிர் பிரதேசம் ஆகும். ஒரு வரவேற்பு கம்பளம் போல அமைக்கப் பட்ட மரகத பச்சை தேயிலை தோட்டங்களின் அழகை பார்த்தால் உங்களுக்கு மனதில் ஒருவித மகிழ்ச்சி பொங்கி வழியும். ஆமாம், நீர்வீழ்ச்சிகள், பச்சை பசேல் புல்வெளிகள் மற்றும் அடர்ந்த தேயிலை தோட்டங்கள் இயற்கையாகவே காதலர்களின் கனவை நனவாக்குகிறது. அதற்கு நானும் விதிவிலக்கல்ல.   தேயிலை தோட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியை செல்வி சயந்தியின் தொடர்பு, தற்செயலாக, அந்த பாடசாலையில் நடந்த தைப்பொங்கல் திருவிழா மூலம் கிடைத்தது. அவர் தான் அங்கு நடந்த நாட்டிய மற்றும் நாடகத்துக்கு பொறுப்பாக இருந்தார். அந்த நிகழ்வின் சிறப்புத் தன்மையை போற்ற அவரை சந்தித்தது, அவரின் அழகிலும் நடத்தையிலும் என்னை கவர வைத்து விட்டது. அதன் பின் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக இருவர் மனதிலும் மலர்ந்தது  .    "சிலுசிலு எனக் காற்று வீச கமகம என தேயிலை மணக்க  தொளதொள சட்டையில் வனப்பை காட்டி கிளுகிளுப்பு தந்து கூப்பிடுவது எனோ ?"   "தளதள ததும்பும் இளமை பருவமே   தகதக மின்னும் அழகிய மேனியே  சலசல என ஆறு பாய  வெலவெல என நடுங்குவது எனோ?"    "கலகல பேச்சு நெஞ்சை பறிக்க படபட என இமைகள் கொட்ட   கிசுகிசு ஒன்றை காதில் சொல்லி  சரசர என்று ஓடுவது ஏனோ ?"    ஒரு சனிக்கிழமை நாம் இருவரும் சந்தோசமாக தனியாக கழிக்க நுவரெலியா மாவட்டத்தில் ஹோட்டன் சமவெளியின் (Horton Plains) முடிவுடன் 1,200  மீட்டர் உயரத்தில், 700 - 1000 மீட்டர் செங்குத்து ஆழத்தைக் கொண்ட  உலக முடிவு [world's end] போய் பின், 19 மைல் நேரடி தூரத்தை அல்லது இருமடங்கு வீதி வழித் தூரத்தை கொண்ட  பதுளை மாவட்டத்தில் உள்ள எல்ல [எல்லா / Ella] நகரம் சென்று அங்கு ஒரு நீரூற்றுக்கு அருகில் உள்ள 98 ஏக்கர் உல்லாசப் போக்கிடத்தில் [98 Acres Resort & Spa] தங்கி, ஞாயிறு மாலை அங்கிருந்து திரும்பினோம். இருவரும் மிக மகிழ்வாக பேருந்தில் இருந்து இறங்கி, எம் விடுதிகளுக்கு கால்நடையாக பேசிக் கொண்டு நடக்கத் தொடங்கினோம். நாம் அந்த கும்மிருட்டில் தேயிலை தோட்டங்கள் மற்றும் மரங்களுக்கிடையில் ஒரு மைல் நடக்கவேண்டும். ஆனால் எமக்கு அது பிரச்சனையாகவோ பயமாகவோ இருக்கவில்லை. அவள் அந்த ஊர் ஆசிரியை. நான் அந்த நகர பொறியியலாளர். எம்மை எல்லோருக்கும் தெரியும். அந்த ஊர் மக்கள் மிகவும் மரியாதையும் கண்ணியமும் ஆனவர்கள்.       ஆனால் எம் கணக்கு தப்பு என்பதை சிறிது தூரம் இருவரும் கைகள் கோர்த்தபடி இருட்டில் ஏதேதோ சந்தோசமாக பேசிக் கொண்டு போகும் பொழுது தான் சடுதியாகத் தெரிந்தது. கொஞ்ச தூரத்தில், மரங்களுக் கிடையில் சிவத்த சால்வை அல்லது  துப்பட்டா மட்டும் தலையை மூடி தொங்க, கைவிரல்கள் மட்டும் எதோ கையில் இருக்கும் சிறு ஒளியில் ஒளிர , ஒரே இருட்டான ஒரு சிவப்பு உருவம் எம்மை நோக்கி வருவதைக் கண்டோம்.     கிழக்கு மாகாணம், மலையகம் மற்றும் நாட்டின் சில பகுதிகளில், யாழ்ப்பாணம் உட்பட கிறீஸ் மனிதன் விவகாரம் அடிக்கடி பத்திரிகையில் வருவதைப் பார்த்துள்ளேன், ஆனால் இந்த சிவப்பு உருவம் ஒரு சிவப்பு துணியால் தலையை மூடி தொங்க விட்டுக் கொண்டு வருவது ஆச்சரியமாக இருந்தது. ஒரு வேளை கிறீஸ் பூதத்தின் பரிணாமமாக இருக்கலாம்? அப்படியாயின் அவனை மடக்கி பிடிக்க முடியாது, அவன் உடல் வழுக்கும். ஆனால், அவன் சிவப்பு துணி தொங்க விட்டு வருவது எனக்கு சாதகமாக தெரிந்தது. அந்த துணியை வைத்தே அவனை மடக்க நான் தீர்மானித்தேன். ஏறுதழுவுதல் அல்லது ஜல்லிக்கட்டுவில் நான் நல்ல பயிற்சி பெற்றவன் என்பது எப்படி அவனுக்கு தெரியும்? காளைகளின் கொம்புகளை பிடித்து மடக்கும் தமிழர்களின் வீர விளையாட்டுக்கும் சிவப்பு நிற துணியை காளையிடம் காட்டி மடக்கும் ஸ்பெயின் நாட்டு விளையாட்டுக்கும் உள்ள வேறுபாடு அவனுக்கு என்ன தெரியும் ?. சிவப்பு துணியுடன் எம்மை நோக்கி வருகிறானே, இந்த சிவப்பு உருவம்!    நான் மிக நிதானமாக, ஆனால் அவசரமாக அவளிடம் எனது பையில் இருந்த சிகரெட் தீமூட்டியை கொடுத்து, பக்கத்தில் இருந்த மரத்தின் பின் ஒழிந்து இருந்து, அவன் என்னை நெருங்கும் பொழுது அதை தீம்மூடி அவனின் சிவப்பு துணிக்கு எரியூட்டக் கூடியதாக  எறியச் சொன்னேன். அவள் உயர் வகுப்புக்கு பிரயோக கணிதம் படிப்பிக்கும் ஆசிரியர் தானே, ஆகவே அவள் சரியாக செய்வாள் என்பதில் நல்ல நம்பிக்கை எனக்கு இருந்தது. அது மட்டும் அல்ல, பெரும்பாலான கிறீஸ் வகைகள் இலகுவாக எரியக்  கூடியவையும் ஆகும். நானும் கவனமாக அவன் நெருங்கும் பொழுது சிவப்பு துணியின் இரு தொங்களையும் தேவைப்பட்டால் பிடித்து இழுத்து, சிவத்த உருவத்தை  மடக்கி பிடிக்க ஆயத்தமாக முழு பலத்துடன் இருந்தேன்.   இந்த கிறீஸ் மர்ம மனிதர்கள் துட்டுகைமுனு அரசனின் வாளைத் தேடி அலைந்ததாக எத்தனை கதைகள் அன்று செய்திகளாக வந்தன. இது ஒன்றே இவர்கள் தமிழர்களை குறி வைத்து தாக்கியதுக்கு சிறந்த உதாரணமாக இருக்கிறது. எல்லாளனின் நீதியான, சமத்துவமான, எதிரியையும் மதிக்கும் திறமையான ஆட்சிக்கு எதிராகவே அன்று அவன் சைவ மதத்தான் என்ற ஒரே காரணத்தால் துட்டுகைமுனு அவனை எதிர்த்தான் என்பது வரலாறு. அப்ப சிங்களம் என்ற மொழி வளர்ச்சி அடையாத காலம். ஆகவே சிங்கள தமிழ் வேற்றுமை அங்கு இருக்க முடியாது. அது மட்டும் அல்ல துட்டுகைமுனு சிங்களவனாக இருக்கவும் முடியாது. அது தெரியாத முட்டால்கள் தான் இந்த கிறீஸ் பூதங்கள்!    எல்லாம் நாம் திட்டம் போட்ட படி  நிறைவேற, பாவம் அந்த சிவப்பு உருவம் என்னிடம் முறையாக அகப்பட்டார். என் நீள்காற் சட்டையின் வார், அந்த சிவப்பு உருவத்தை, ஒரு மரத்துடன் கட்ட உதவியது. அவன் உடலில் ஏற்பட்ட எரிகாயங்களால் சத்தம் போட, ஊர்க்காரர்கள் எல்லாம் திரண்டு விட்டார்கள். அதன் பின் எமக்கு என்ன வேலை. அவர்களிடம் மிகுதி பொறுப்பை கொடுத்து விட்டு நாம் எம் விடுதிகளுக்கு போனோம் . ஆனால் அவள் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை!  ஆகவே அவளை என் விடுதியில் உறங்க சொல்லி விட்டு , காவலுக்கு அவள் பக்கத்திலேயே , அவளை, அவள் அழகை ரசித்தபடி, அந்த சிவப்பு உருவத்துக்கு நன்றி கூறிக்கொண்டு இருந்தேன்!!    "சயனகோலம் அவளின் அழகு கோலம்  சரிந்த படுக்கையில் தேவதை கோலம்  சங்கு கழுத்து சிவப்பாய் ஒளிர்ந்து  சங்கடம் தருகிறது அவளின் பார்வை"     "சயந்தி அவள் இந்திரன் மகள் சந்திரன் போன்ற அழகு நிலா  சரீரம் தரும் கவர்ச்சி மயக்கத்தில்  சற்று நானும் என்னை மறந்தேன்"     "சக்கர தோடு கழுத்தை தொட  சடை பின்னல் அவிழ்ந்து விழ  சலங்கை கால் இசை எழுப்ப  சங்காரம் செய்யுது இள நகை"   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.