Jump to content

திருக்குறள் பொது நூலா?


Recommended Posts

திருச்சிற்றம்பலம்

ஸ்ரீ மெய்கண்ட தேசிகன் திருவடி வாழ்க

திருக்குறள் பொது நூலா?

சித்தாந்த பண்டித பூஷணம் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை

திருநெல்வேலி பேட்டை

eswablueback.jpg

தோற்றுவாய்

விஞ்ஞானிகள் அதிகரிக்கின்றனர். விஞ்ஞானம் வளர்கிறது. அதனால் அற்புதங்கள் பல ஆக்கம் பெறுகின்றன. ஆயினும் அவற்றுள் தீங்கு பயப்பன பல. அவையும் நலத்துக்குப் பயன்படுத்தப்படுமா? அத்தீங்கு அகற்றப்படுமா? அவ்வாசையோடு செய்யப்படும் முயற்சிகளுமுள. நலம் பயக்கும் அற்புதங்களும் பலவே. ஆனால் எதிர்பாராத விதத்தில் ஆபத்துக்கள் அவற்றாலும் விளைவதுண்டு. எப்படியும் அவ்வற்புதங்கள் அற்புதங்களே. அவற்றால் உலகம் செழிக்கிறது. நாகரிகம் மேற்போகிறது. மக்கள் சுகிக்கின்றனர். அதனை நாமுஞ் சம்மதிக்கலாம்.

விஞ்ஞானிகளுக்குப் புகழுண்டு. காணாதவற்றையெல்லாம் அவரறிவு கண்டு வருகிறது. ஆயினும் அவர் நூற்றுக்கணக்கானவரே. ஆனால் அவர் கண்ட அற்புதங்களை அனுபவிப்பவரோ கோடானு கோடியர். எனினும், ஆக்கும் அறிவு போல்வதாமா அனுபவிக்கும் அறிவு? மோட்டார் வண்டியைக் கண்டுபிடித்தவனது அறிவு சிறந்தது. அதில் ஏறிச் செல்பவனுக்கு அவ்வண்டி பற்றிய அறிவு எவ்வளவிருக்கும்? அப்படியிருந்தும் அதில் ஏறிச் செல்கிறவரும் தம்மறிவை மெச்சிக் கொள்கின்றனர். இன்றையவுலகில் அவர் பிறந்தார், இருக்கிறார். அதனால் அவரும் தம்மைப் புத்திசாலிகளென எண்ணிக் கொள்கின்றனர். முன்னோரை இகழ்ந்து பேசுமளவுக்கு அவரிடம் அச்செருக்கு மிகலாயிற்று.

மனிதனுக்கு ஆசையுண்டு. அதற்கு அளவோ? அதையளக்க முயன்றர் பூர்விகர். உலகெல்லாம் ஒரு குடைகீழ் வைத்து ஆள்கிறான் ஓர் அரசன். ஆயினும் அவனாசை அடங்கவில்லை. கடல்மீதிலும் தன் ஆணையைச் செலுத்தலாமா எனவும் அவன் நினைக்கிறான். ஆசைக்கோரளவில்லை. அதைக் காட்ட அக்கடலோடு நின்றனரவர். ஆனால் இன்றைய நிலையென்ன? ர்ஷிய ராக்கெட் வானிற் பறந்தது. எத்தனையோ இலக்கம் மைல்கள் மேற்சென்றது. சந்திரனைத் தாண்டியது. சூரியனையும் எட்டிவிட்டதாம். வானத்திற் கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. சில வருஷங்களே கழிக. அதற்குள் இவ்வுலக மக்கள் அக்கிரகங்களிற் போய் உலவுவர். அங்கும் மக்கள் உளரானால் அவரோடுந் தொடர்பு கொள்வர். போக்குவரத்துக்கான சாதனங்கள் விருத்தியாகும். போக்குவரத்தும் தொடர்ந்து நிகழலாம். அங்கு மக்கள் இல்லையானால் அக்கிரகங்கள் ஆக்கிரமிக்கப்படும். இவ்வுலக மக்களுக்கு அந்நம்பிக்கையுண்டு. இவருக்கு ஆசை மென்மேலும் வளர்கிறது. ஆனால் ஒன்று. அந்தக் கிரகங்களிலிருந்து எவரும் இவ்வுலகத்துக்கு இதுவரை வந்ததில்லை. அங்கு மக்களில்லையா? அவருக்கு ஆசையில்லையா? விஞ்ஞானம் வளரவில்லையா? என்னவோ? இங்குள்ளவரின் அறிவும் ஆசையும் முயற்சியும் நிதர்சனம். அவர் அங்குச் செல்ல முந்திக் கொண்டனர். இவராலாவது எல்லாக் கிரகங்களிலுமுள்ள மக்கள் விரைந்து சந்திக்க. அளவளாவுக, கொண்டுங் கொடுத்துங்குலாவுக. கடவுளென ஒருவரிருந்தால் அவரும் அதற்குத் துணை புரிக.

மற்றைக் கிரகங்களில் விஞ்ஞான வளர்ச்சி இருந்தாலுஞ் சரி இல்லாவிட்டாலுஞ் சரி. இங்குள்ள விஞ்ஞானிகள் அங்கு செல்ல நேர்ந்தால் இவரால் அங்கும் விஞ்ஞானம் வளரக்கூடும். அது அங்குள்ளோர்க்குப் பெரும் பாக்கியம். அதனால் எல்லாக் கிரகங்களுக்கும் பொது நலப் பேருபகாரிகள் விஞ்ஞானிகளேயென்பது தெரிகிறது. அவரால் கிரகங்களின் வக்கிரச் செயல் கூட மறையக்கூடும்.

ஆனால் பாரதி

'வள்ளுவன் றன்னை யுலகினுக்கே தந்து

வான்புகழ் கொண்ட தமிழ்நாடு'

என்றார். திருவள்ளுவரை அவ்வளவு புகழவேண்டுமா? அவரறிவு அதற்குத் தகுதியுடையதா? புகைவண்டி, வானொலி கருவி, வானவூர்தி முதலிவற்றுள் ஒன்றிரண்டையாவது அன்றே அவர் கண்டு பிடித்திருக்கலாம். அது செய்தாரா? எல்லாக் கிரகங்களையும் நேசப்படுத்த அவரால் முடிந்ததா? அவராற் கிடைத்தது ஒரு நூல். அன்று முதல் இன்று வரை அந்நூலாற் பயனெய்தியவர் எத்தனைபேர்? ஒருவரிருவர் பெயர்தானும் யார்கேனுந் தெரியுமா? அந்நூற்குப் பயன்றான் என்னை? அந்நூல் இவ்வுலகத்துள்ள மக்களைத்தானும் ஒன்றுபடுத்தியதா? அவ்வினாக்களுக்கு விடை இன்றுங் கிடைத்தபாடில்லை. எனவே பாரதி பாடிய அப்புகழ் பொருளுடையதாமா? சிந்திக்கவல்லார் சிந்திக்க.

Link to comment
Share on other sites

  • Replies 130
  • Created
  • Last Reply

இப்படி நான் கூறுகிறேன். அது திருவள்ளுவரை இகழ்வதாகும் என்பார் சிலர். அதற்காக அவர் என்மேற் சீறவுஞ் செய்யலாம். எல்லாம் அறிந்தவருமில்லை. ஏதும் அறியாதவருமில்லை. எல்லார்க்கும் ஒவ்வொன்றெளிது என்பது ஒரு நியாயம். விஞ்ஞானிகளும் அறிஞர். திருவள்ளுவரும் அறிஞர். முன்னவரறிவு ஒருவகை. பின்னவரறிவு இன்னொரு வகை. அவரறிவு இவருக்கில்லை. இவரறிவு அவருக்கில்லை. இங்ஙனம் திருவள்ளுவருக்கும் ஒரு வகை வகுத்து அவரறிவை அவ்வளவில் தடுத்து வைப்பார் சிலர். அதனால் திருவள்ளுவரும் அறியாதன பல, அது பற்றி அவருக்கும் அறியாமையுண்டு என்பது அவருக்குங் கருத்தாகும். அவர் தான் என்மேற் சீறுபவர். அச்சீற்றத்தில் அர்த்தமில்லை.

உண்மையில், உலகிற்கே திருவள்ளுவர் ஓர் ஒப்பற்ற மேதைதான். அவரை நன்கு அறிந்தவரே அவரறிவுடைமையைப் புகழ்தற்குரியார். அவரை நன்கு அறிதலாவது யாது? சூரிய மண்டலத்தை எட்டிவிட்டதாகச் சொல்லப்படும் ராக்கெட்டை ஆக்கியவரது அறிவு சாமானியமானதன்று. திருவள்ளுவரறிவும் அன்னதே. ஆனால் யாருடைய அறிவையும் மதிப்பது இரண்டு வழியாலாம். ஒன்று அவரிடமிருக்கும் அறிவின் விளக்கம் பற்றியது. இன்னொன்று அவரை விட்டு நீங்கியிருக்கும் அறியாமை பற்றியது. அறிவு விளங்கப் பெற்றவன் அறிஞனா? அறியாமை நீங்கப் பெற்றவன் அறிஞனா? இப்படி வினவிச் சிந்திக்க வேண்டும். அறிவு விளங்கப் பெற்றவரெல்லாம் அறியாமையில்லாதவரென்று சொல்ல முடியாது. அறியாமை நீங்கப் பெற்றவரை அறிஞரெனத் துணிந்து சொல்லலாம். அவரே தெள்ளறிஞர். ராக்கெட்டையனுப்பிய விஞ்ஞானிக்கும் அறியாமையுண்டு. பிற விஞ்ஞானிகளுக்கும் அ·துண்டு. அது கலவாத அறிவு பிராகிருதராயுள்ள எவரிடமுமில்லை. ஆனால் திருவள்ளுவரிடம் அவ்வறியாமை இம்மியுங் கிடையாது. அ·தறவே நீங்கப் பெற்றவர் அவர். அவர் போன்றோர் ஒரு சிலரேயுளர். அவரெல்லாம் பிராகிருதத் தொடர்பைக் கடந்தவர். திருவள்ளுவரை அறிவுடையாரென்பதை விட அறியாமை அறவே நீங்கப் பெற்றாரெனக் கொண்டு போற்றுபவன் நான்.

மக்களிடம் அறியாமையும் உண்டு. அ·து எதனால் வந்தது? எப்போது வந்தது? யாராலாவது தரப்பட்டதா? அவரேதேடிக் கொண்டனரா? அதற்கு மூலம் யாது? அ·து அறவே தீரக் கூடியதா? அல்லது குட்டம், குன்மம் முதலிய நோய்கள் போல் அவ்வப்போது செய்யப்படும் சாந்தியளவில் அடங்கிப் பிறகு துன்புறுத்திக் கொண்டிருப்பதா? அறவே தீர்தற்கு வாயிலென்ன? அவற்றையெல்லாம் விசாரித்து ஆவன செய்ய வேண்டும். அவ்வகையில் பிராகிருத நூல்கள் சிறிதும் பயன்படா. சமய நூல்களே உதவக் கூடியன. சமயங்கள் பல. ஒவ்வொரு சமயத்தைச் சார்ந்த நூல்களும் அநேகம். ஆயினுமென்? அறியாமையைப் பற்றிய விளக்கமான செய்தி எந்தச் சமயத்திலுண்டு. அந்தச் சமய நூல்களின் சகாயம் வேண்டும். அந்த நூல்களே கற்பவை. திருவள்ளுவர் அவற்றைக் கசடறக் கற்றிருப்பர், கற்றபின் அதற்குத் தக நின்றிருப்பர். அதனால் அவரறியாமை அறவே நீங்கியிருக்கும். அவர் தெள்ளறிஞரானார். அச்சமயம் எது? பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

உரைகள்

திருவள்ளுவர் தந்த நூல் திருக்குறள். அதற்கு உரைகள் பல. அவை பத்து என்றொரு கணக்குண்டு. பத்தாவதாகவுள்ளது பரிமேலமுகரியற்றியது. இந்நூலில் அவர் பெயர் வருமிடங்களில் அழகரென்று சொல்லப்படுவார். அவர் போய்ச் சில நூறு வருடங்களாயின. அக்காலை இத்தமிழகம் எத்தனையோ தமிழ்ப் புலவர்களைப் பெற்றது. இலக்கணிகள், தார்க்கீசர், கவிகள், உரையாசிரியர், நீதிநூல் வல்லார், அரசியல் வல்லார், இன்பநூல் வல்லார், வீட்டு நூலார் எனப் பல துறைகளில் வல்லவர் வந்து போயினர். புலமைப் பஞ்சம் இங்கில்லை. அவரால் ஆக்கப்பட்டு இப்போது கிடைத்தது வரும் நூல்களே அதற்குச் சான்று. ஆனால் அவருள் திருக்குறளுக்குப் பதினோராவது உரையாசிரியராக எவரும் வந்திலர். காரணமென்ன? கெளரவ புத்தி கொண்டு சிந்திக்க. விடை கிடைக்கவே செய்யும். அவ்விடைக்காலத் தமிழ்ப் பெரும் புலவரனைவராலும் அவ்வழகருரை அங்கீகரிக்கப்பட்டது என்பதே விடை. அவ்வுரை இலக்கண தருக்க வரம்புடையது. நடுநிலையிலிருந்து நூலாசிரியர் கருத்தை வாங்கி விளக்குவது. பல ஞான நூல்களிற் பயின்று எழுதப்பட்டது. மக்களையுயர்த்த வேண்டுமென்ற கருணையாலியன்றது. ஆனால் சென்ற சில ஆண்டுகளாகப் பல புத்துரைகள் வெளிவரலாயின. அவற்றுள் நான் சிலவுரைகளைப் படித்தேன். அவை திருக்குறள் கூறும் உண்மைகளைப் புலப்படுத்தவில்லை. தான்றோன்றித்தனமாக எழுதப்பட்டன. உரைக்காரனின் அபத்தக் கொள்கைகள் புகுத்தப்பட்டன, காசு கொடுப்பவரைக் களிப்பிக்கப் போந்தன. நூலைக் கருதாமல் காலத்தைக் கருதின. மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கினாலும் இறங்கலாம். அப்போலியுரைகளைக் கொண்டு சபையேற முடியாது. ஏறினால் அச்சபை பரிகசிக்கும். அவ்வுரைகளுங் கணக்கிற் சேர்ந்தன. இப்போது அவ்வுரைகளின் தொகை பத்தைத் தாண்டி விட்டது. நான் அவற்றையெல்லாம் விட்டுவிடுகிறேன். பிராமண ஸ்தானத்தை வகித்து வருகிற அழகருரையைத் தழுவித் திருக்குறளுக்குப் பொருள் காணு முகத்தால், திருவள்ளுவர் ஆசரித்த சமயம் எதுவாயிருக்குமென ஆராய்வதே இந்நூலின் நோக்கம்.

Link to comment
Share on other sites

நூற்பெயர்

திருக்குறளுக்கு ஒன்பது பெயர்கள் காணப்படுகின்றன. ஆசிரியர் வைத்தனவா அத்தனையும்? ஒன்றிரண்டு அவரிட்டனவாயிருக்கலாம். அவ்வப்போது தோன்றிய புலவர் பெருமக்கள் பலர். அவர் அந்நூலை ஊன்றிப் படித்திருப்பர். அதன் நயம் அவருள்ளத்தைக் கொள்ளை கொண்டிருக்கும். அதனால் மதிப்புரை பல வழங்கியிருப்பாரவர். அம்மதிப்புரைகளே அப்பெயர்கள். அவ்வொன்பதுக்கு மேலும் அன்ன பெயர்கள் இருந்திருக்கலாம். அவை நூலருமையைச் சரியாக விளக்கியிரா. அதனால் கால வெள்ளத்தில் மறைந்து போயிருக்கும். இன்றுவரை நிலைத்திருப்பன அவ் வொன்பது. அவை தள்ளப்படுவன அல்ல. போற்றபடுவனயென்பது அதனாற் புலனாம். அவற்றுட் சிலவற்றை இயைபுபற்றி இங்கு ஆராய வேண்டும்.

Link to comment
Share on other sites

பொதுமறை

'பொதுமறை' யென்பது ஒரு பெயர். பொதுவுடைமையென்ற சொல்லையெடுத்துக்கொள்க. ரஷியப் பொதுவுடைமை, சீனப் பொதுவுடைமையெனப் பலவுள. ரஷியர் சீனப் பொதுவுடைமையில் உரிமை கொள்ளமுடியாது. சீனர் ரஷியப் பொதுவுடைமையில் அப்படியே. அவ்வத்தேச வரம்பு அப்போது வென்னுஞ் சொல்லைக் கட்டுப்படுத்தி அவ்வுடைமையை அவ்வத்தேசத்தார்க்கே உரிமையாக்குகிறது. பொதுவென்னுஞ் சொல்லைப் பற்றிக் கொண்டு எவனும் எல்லாத் தேசங்களின் பொதுவுடைமைகளிலுங் கைவைக்கமாட்டான். வைத்தால் கை தறிபட்டுப்போம். அதுபோல் திருக்குறள் பொது மறையாயினும் அப்பொதுவுக்கும் வரம்புண்டு. அவ்வரம்பைக் கண்டு அதற்கு வெளியில் நிற்பவர் அந்நூலைத் தம்மதெனக் கொள்ளாதிருப்பதே நல்லது.

ஒரு தேசத்திற் பிறந்தவர் அத்தேசத்துக்கு மாத்திரம் பொதுமக்கள். யாமெல்லாம் பொதுவெனச் சொல்லிக்கொண்டு ஒரு தேசத்து மக்கள் மற்றத் தேசங்களுக்கும் பொதுவெனச் சொல்லிக் கொள்ளமாட்டார். அது போலப் பொதுமறையென்பதிலுள்ள பொதுவெனுஞ் சொல் தனக்கெனவொரு பொருளையுடையது. அதைவிட்டு அச்சொல்லே கொண்டு அம்மறை தனக்குப் புறம்பான மறைகளுக்குந் தன்னையுரியதெனச் சொல்லிக் கொள்ளமாட்டாது.

பொதுமக்கள் என்பதொரு பிரயோகம். அப்பொதுவை எவரும் தம்பாற் சார்த்திக்கொள்ள விரும்பார். பொதுமறையென்பதிலுள்ள பொதுவும் அங்ஙனமே.

சித்தாந்த சாத்திரங்களிற் சொரூப லட்சணம், தடத்த லட்சாம் என்ற பிரயோகங்களுள. அவை முறையே சிறப்பியல்பு, பொதுவியல்பு எனத் தமிழிற் பெயர்க்கப்படும். த்ருக்கத்தில் சாமானியம் விசேடம் என இரண்டிலக்கணங்களுள. அவற்றுக்கும் முறையே பொது, சிறப்பு என்பன தமிழ். அப்பொதுக்களின் பொருளும், பொது மறையென்பதிலுள்ள பொதுவின் பொருளும் ஒன்றாகுமா?

சிதம்பர ஆலயம் பொதுவெனப்படும். அப்பொதுப் போன்றதா பொதுமறை யென்பதிலுள்ள பொது?

'வேதமொ டாகம மெய்யா மிறைவனூ

லோதும் பொதுவுஞ் சிறப்புமென் றுன்னுக'

என்றது திருமந்திரம். சிவாகமமென்னுஞ் சிறப்புநூலொன்றுண்டு. அது பற்றி அவ்வேதம் பொதுநூலெனப்பட்டது. அப்பொதுவும், பொதுமறைப்பொதுவும் சமந்தானா?

தெய்வநூல் எதுவும் வயிநயிகருக்குத்தான் வேண்டப்படும் திருக்குறளுந் 'தெய்வநூல்'. அது பிராகிருதருள்பட அனைவருக்கும் பொதுவாதல் யங்ஙனம்?

சூரியன் சந்திரன் முதலியவை எல்லார்க்கும் நலஞ் செய்வன வாய்ப் பொதுவாகும் என்பர் சிலர்.

'அல்லவை புரியா ரேனு மறிவினற் பெரிய ரேனு

மெல்லவர் தமக்கு நண்பா யினியவே புதிதற் பாற்றோ

பல்லுயிர்த் தொகைக்கு மின்பம் பயந்திடு மதிகண் டன்றோ

புல்லிய கமல மெல்லாம் பொலிவழிந் திட்ட வன்றே'

என்ற கந்தபுராணச் செய்யுளால் அவையும் வெறுப்புக் கிலக்காதல் அறியப்படும். அவற்றின் பொதுமைப்போல் பொதுமறைப் பொதுமையும் இருக்குமா? அறிஞர் சிந்தனையில் இன்னும் பல பொதுமைகள் தோன்றலாம். அவற்றையுஞ் சேர்த்துக் கொள்க. பொதுமறையென்பதிலுள்ள பொதுமையென்னுஞ் சொல் தெளிவான விளக்கத்தை வேண்டி நிற்றல் காண்க.

ஆனால் ஒன்று சொல்லப்படும் எல்லா மதங்களுஞ் சம்மதிக்கக் கூடிய அறங்களின் தொகுப்பே திருக்குறள், அதுபற்றி அந்நூலைப் பொதுமறையென்னலாம் என்பது அது. அதுவுஞ் சரியன்று. ஏன்? அப்பொதுவறங்கள் அவ்வச் சமயத்திலேயே கூறப்பட்டுள்ளன. எச் சமயத்தாரும் தம் சமய நூல்களிலேயே அவற்றைக் கற்றுக் கொள்வர். அவர்க்குத் திருக்குறள் அநாவசியம். மேலும் அதிற் காணப்படும் பொதுவறங்களத்தனையும் சர்வ மத சம்மதமுமல்ல. பொதுவறங்கள் Natural Religion என்றும், சிறப்பறங்கள் Revealed Religion என்றும் ஆங்கிலத்திற் சொல்லப்படும். சமயந்தோறும் சிறப்பறங்களுமுள. ஒவ்வொரு சமயமும் மோக்ஷமென ஒரு லக்ஷ¢யத்தை வைத்துக் கொண்டிருக்கிறது. பொதுவறங்களைத் தழுவினாலே போதும், மோக்ஷம் சித்திக்கும் என எச்சமயமுஞ் சொல்லாது. பொதுவறங்களோடு சிறப்பறங்களையும் அனுட்டிக்கவேண்டும். அவ்வனுட்டான பரருக்குத்தான் அச்சமயத்தின் மோக்ஷமுண்டு. அங்ஙனமே ஒவ்வொரு சமயமும் தன் சமயத்தவர்க்கு உபதேசிக்கிறது. திருக்குறள் அச்சிறப்புத் தருமங்களையுஞ் சொல்லாமல் விட்டிருக்குமானால் அந்நூலால் மக்களுக்கு முடிவான லக்ஷ¢யங் கிடைக்கப் போவதில்லையென்பது உறுதி. ஏதாவது ஒரு சமயமும், அதற்கேயுரிய சிறப்பறங்களும் மக்களுக்கு உறுதி பயப்பன என்பது அவருள்ளத்திற்பட்டிருந்தால், அவற்றையும் ஆசிரியர் அந்நூலிற் சொல்லத்தான் வேண்டும், சொல்லியேயிருப்பர். இன்றேல் அந்நூல் முற்றுப் பெற்றதாகாது. அவரும் மக்களுக்காக அதனைச் செய்தவராகார். ஆனால் இவ்வுலக வாழ்க்கையை விரும்புவார் மிகப்பலர். அவர்பாற் பரிபாகம் குறைவு. அவரையும் வழிப்படுத்த வேண்டும். அதற்கான ஒழுகலாறுகளுமுள. அவற்றை ஆசிரியர் அந்நூலில் அதிகமாகச் சொல்லிவைத்தார். மறுவுலக வாழ்க்கையை விரும்புவார் வெகு சிலரே. உள்ளம் பக்குவப்பட்டவர் அவர். அவருக்கு வேண்டும் ஒழுகலாறுகள் வேறு. அவற்றைச் சுருக்கமாகச் சூசகமாகச் சொன்னாற் போதும். அப்படித் தான் அவை சொல்லப்பட்டிருக்கின்றன. சத்திநிபாதர்க்கு வேண்டும் சிவாகமவுண்மைகளைச் சுருக்கமாகவும் சூசகமாகவும், உலகர்க்கு வேண்டுவனவற்றை விரிவாகவும் வெளிப்படையாகவுந் தன்பாற் கொண்ட வேதம் அவ்வியல்புபற்றிப் பொதுநூலெனப்படும். அம் முறையிற் செல்வது திருக்குறள். அது பொதுநூல் எனப்படாது பொதுமறை எனப்படாது பொதுமறை யெனப்பட்டது அவ்வுண்மையைக் காட்டவேயாம். அங்ஙனம் பொதுநூல் என்பதிலுள்ள பொதுவிற்குரிய பொருளைப் பொதுமறையென்பதிலிருந்து பொதுவுக்குப் பொருத்துவதுதான் பொருத்தமென எனக்குத் தோன்றுகிறது.

Link to comment
Share on other sites

திருவள்ளுவர்

valluvar.jpg

திருக்குறளுக்குத் திருவள்ளுவரென்பது இன்னொரு பெயர். தொல்காப்பியர் செய்த இலக்கணம் தொல்காப்பியம். சேனாவரையர் செய்தவுரை சேனாவரையம். பாணினீ செய்த வியாகரணம் பாணினீயம். அவற்றிற்கு அவ்வாசிரியன்மாரின் பெயர் அப்படியே வரவில்லை. ஈறு திரிந்தே வந்திருக்கிறது. ஆனால் திருக்குறளுக்குத் திருவள்ளுவம் என்ற பெயரில்லை. ஆசிரியர் பெயர் திரியாமல் நூலுக்கு வந்துள்ளது. திருவள்ளுவம் வள்ளுவம் என்பன நேற்றுத் தோன்றின. திருவள்ளுவர் என்ற பெயரின் பொருட் சிறப்பையறியாதார் இட்டன அவை. கடல் மீனுக்கு நுளையனிட்டது பெயர் என்பது பழமொழி. பெருநூல்களின் பெயர்களெல்லாம் அப்படித்தான் வந்தனவென அவர் எண்ணிக் கொண்டனர் போலும். இல்லாவிட்டால் திருவள்ளுவரெனப் பெயரிக்கும்போது அப்பெயர்கள் இடவும் துணிந்திருப்பாரா அவர்? அவர் கிடக்க, திருவள்ளுவரென்ற பெயரிட்ட பெரும் புலவருக்குக் கருத்து யாதாயிருக்கலாம். வேதத்துக்குச் சுயம்பு என்பது இன்னொரு பெயர். அப்பெயர் வரக் காரணத்தை ஆராய்ந்தனர் வேத பண்டிதர் பலர். சுயம்பு என்றால் தானே உண்டானது என்று அர்த்தம். வேதம் ஒருவராலும் ஆக்கப்படாமல் தானே யுண்டானது. அதனால் சுயம்பு எனப்பட்டது என்றனர் ஒரு சாரார். சுயம்பு எனபது சிவபெருமானுக்குப் பெயர், வேதம் அவரால் ஆக்கப்பட்டதால் ஆசிரியர் பெயர் நூலுக்காய் வேதமும் சுயம்பு எனப்பட்டது என்றனர் பிறிதொரு சாரார். அப்புலவருக்கு முற்கருத்துச் சம்மதமன்று, பிற்கருத்தே உடன்பாடு, அதை உலகிற்குத் தெரியப்படுத்த வேண்டும். சுயம்புவென்னும் சிவபெருமானாற் செய்யப்பட்ட வேதம் சுயம்பு எனப்படும் என்ற கொள்கையை அங்கீகரிக்கும் பிற்கால சந்ததியார்க்குத் திருட்டாந்தமொன்றுந் தேவை. திருவள்ளுவர் என்ற ஆசிரியர் பெயரைத் திரிவு செய்யாமல் திருக்குறளுக்கும் இட்டுவைத்து அவ்விரண்டையும் பூர்த்தி செய்தார் அப்புலவர். வேதத்துக்குச் செய்யாமொழி யெனவும் பெயருண்டு. செய்யாமொழியென்பது மனிதராற் செய்யப்படாத நூல் என்ற பொருளுடையது. வேதம் அபெளருஷேயம் என்றதன் பொருளும் அதுவே.

வேதம் கடவுளாற் செய்யப்பட்டதென்பது திருக்குறளிலுங் கண்டவுண்மை.

'பொறிவாயி லைந்தவித்தான் பொய்தீ ரொழுக்க

நெறிநின்றார் நீடுவாழ் வார்' (6)

என்றது நூல். 'அவித்தான் பொய்தீர் ஒழுக்கநெறி - அறுத்தானது மெய்யான ஒழுக்க நெறியின்கண்' என்பது உரை. ஒழுக்க நெறி ஐந்துவித்தானாற் சொல்லப்பட்டமையின் ஆண்டை ஆறனுருவு செய்யுட் கிழமைக்கண் வந்தது. 'கபிலரது பாட்டு என்பது போல' என்பது குறிப்பு.

'நல்லாற்றா னாடி---' (242)

என்றது நூல். 'நல்லாற்றான் - அளவைகளானும் பொருந்துமாற்றானும் நன்றான நெறியி§லே நின்று' என்பது உரை. அளவைகளாவன ----காட்சியும், ----அனுமானமும் கருத்தா மொழியாககிய ஆகமுமென மூன்று என்பது குறிப்பு.

'யாமெய்யா -----' (300)

என்றது நூல். 'யாம் மெய்யாக் கண்டவற்றுள் - யாம் மெய்ந்நூல்களாகக் கண்ட நூல்களுள்' என்பது உரை. 'மெய்யுணர்த்துவனவற்றை மெய்யென்றார். அவையாவன தங்கண் மயக்கமின்மையின் பொருள்களை யுள்ளவாறுணரவல்லராய்க் காமவெகுளிகளின்மையின் அவற்றை யுணர்ந்தவாறே உரைக்கவும் வல்லராய இறைவர். அருளான் உலகத்தார் உறுதி யெய்துதற் பொருட்டுக் கூறிய வாகமங்கள்' என்பது குறிப்பு.

'பற்றுக பற்றற்றான் பற்றினை---' (350)

என்றது நூல். 'பற்று அற்றான் பற்றினைப் பற்றுக - எல்லாப் பொருளையும் பற்றி நின்றே பற்றற்ற இறைவன் ஓதிய வீட்டு நெறியை இதுவே நன்னெறியென்பது மனத்துக் கொள்க' என்பது உரை. 'பற்றற்றான் பற்றென்புழி ஆறாவது செய்யுட் கிழமைக்கண் வந்தது' என்பது குறிப்பு. இப்பிரமாணங்கள் அவ்வுண்மையைப் புலப்படுத்தும்.

Link to comment
Share on other sites

உத்தர வேதம்

உத்திர வேதம் என்பதும் திருக்குறளுக்குப் பெயர். வேதம் என்ற சொல் சம்ஸ்கிருதம். அச்சொல் யோகப் பெயர். யோகப் பெயரெனினும் காரணப் பெயரெனினும் ஒன்றே. வேதம் என்பது அறிதற் கருவி, அறிவு நூல் என்னும் பொருளுடையது. ஆயினும் இருக்கு, எசுர், சாமம், அதர்வணம் என்னும் நான்கிற்கும் அ·து ரூடியுமாம். ரூடிப் பெயர் - இடுகுறிப் பெயர். எவ்வித அடையுமின்றி வேதம் என்று சொன்ன மாத்திரத்தில் அதற்கு இருக்காதி நான்குமே பொருள். ஆகையால் வேதம் என்ற சொல் இருக்காதியவற்றுக்குக் காரண இடுகுறி அல்லது யோகரூடிப் பெயராயிற்று. ஆயுள் வேதம், தனுர்வேதம், காந்தர்வவேதம் முதலியவை அடையடுத்து வெவ்வேறு நூல்களைக் குறிக்கும்.

இக்காலத்தில் அவ்வேதத்தை நிந்திக்கச் சிலர் தலைப்பட்டனர். வேதம் என்பது காரணப் பெயர், அறிவு நூலென்பது அதற்கருத்தம். ஆகலின் அறிவு நூல்களெல்லாம் வேதமே என்பரவர். அவர் காரண இடுகுறிப் பெயரென்னும் இலக்கணப்பகுதிக்கு உலைவைக்கும் இலக்கணக் கொலைஞராவர். அவருள் சாத்தனென்பானொருவன். ஒரு நாள் அவன் அமர்வதற்கு நாற்காலியொன்று வேண்டியிருந்தது. அதனை யெடுத்துவரச்சொல்லி தன் பிரதம மாணாக்கனை ஏவினானவன். அவனிடம் வேதமென்னுஞ் சொற்பொருளைக் கேட்டிருந்த அறிவோடு அம்மாணாக்கன் நாற்காலியைக் கொண்டுவரச் சென்றான். கழுதையொன்று எதிர்ப்பட்டது. அதுவும் நாற்காலிதானேயென்பது அவனுடைய எண்ணம். அவன் அதைக் கொண்டுபோய்த் தனக்கு இலக்கணஞ் சொல்லிக் கொடுத்த குருவாகிய அச்சாத்தன் முன் நிறுத்தி அக்குருவை அதன்மேல் அமரும்படி வேண்டினான். அக்குரு கோபிக்கலாமா? காரண இடுகுறிப் பெயரைக் காரணப் பெயரளவில் வைத்துப் பொருள் கூறித் திரிவதற்கு அப்பதவியே தகும். வேதம் இருக்காதிகளுக்குக் காரண இடுகுறிப் பெயராயிருந்துவருவது சித்தம். திருக்குறள் உத்தரவேதமாயின், இருக்கு முதலிய நான்கும் பூர்வவேதமாகும். உத்தரம் - பின்னர் வந்தது. பூர்வம் - முன்னருள்ளது. பூர்வவேதமில்லையாயின் திருக்குறளுக்கு உத்தரவேதமெனப் பெயர் கொடுக்கப்பட்டிராது. பூர்வத்தை உத்திரம் எதிர்த்துச் சொல்வதில்லை. அநுசரித்தே செல்லும். எதிர்த்துச் செல்வது உத்தரமெனப்படாது. அப்பெயரிட்ட புலவர் இருமொழியிலும் வல்லவராய் அவ்வேத பண்டிதராயுமிருந்திருப்பரென

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருக்குறலில் ஒர் சந்தேகம்.

திருக்குறளில் தமிழ் என்ற ஒரு வார்த்தை எங்காவது வந்திருக்கிறதா?

ஏன் தமிழ் என்ற வார்த்தை இடம்பெறவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருக்குறளில் ஒர் சந்தேகம்.

திருக்குறளில் தமிழ் என்ற ஒரு வார்த்தை எங்காவது வந்திருக்கிறதா?

ஏன் தமிழ் என்ற வார்த்தை இடம்பெறவில்லை.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு.

'எழுத்துக்களுக்கெல்லாம் 'அ' முதலானதாயிருப்பதுபோல உலகுக்கு இறைவன் முதல்வனாக இருக்கிறான்.'

தமிழ் என்று கூறாவிட்டாலும் "அ"கரம் என்பதன் மூலம் தமிழை சுட்டிவிட்டார் வள்ளுவர்..! அவர் பலதையும் நேரடியாகச் சொல்லவில்லையே.. உட்பொருள் வைத்துத்தான் சொல்லியுள்ளார்..! :P

Link to comment
Share on other sites

இந்தத் தலைப்பில் என்ன பேசப்படுகின்றது என நமது அறிவுக்கு எட்டவில்லை. உங்களுக்கு ஏதாவது புரிகின்றதா? :rolleyes:

திருக்குறள் சகல பொதுநூலகங்களிலும் காணப்படுவதனால் இது பொதுநூலாகவே இருக்கவேண்டும்... :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"பொது நூல்" என்றால் என்ன?

"நீங்க சொல்லுறதும் சரி; நைனா சொல்லுறதும் சரி; அம்மணி சொல்லுறது சரி" என்ற மாதிரியா? :rolleyes:

Link to comment
Share on other sites

பைபில் பொதுநூலா?

குரான் பொதுநூலா?

பகவத்கீதை பொதுநூலா?

பால பாடம் பொதுநூலா?

ராமாயணம் பொதுநூலா?

நளவெண்பா பொதுநூலா?

Link to comment
Share on other sites

பைபில் பொதுநூலா?

குரான் பொதுநூலா?

பகவத்கீதை பொதுநூலா?

பால பாடம் பொதுநூலா?

ராமாயணம் பொதுநூலா?

நளவெண்பா பொதுநூலா?

இவை எல்லாம் பொது நூல் இல்லை

முகாமைத்துவம் படிக்கிறவனுக்கு அந்த நூல் தான் பொது நூல்

மர்ய்த்துவன் படிக்கிறவ்னுக்கு அந்த நூல் தான் பொது நூல்

அப்படியே என்ன் படிக்கிறோம் அவன் அவனுக்கு அது தான் பொது நூல்

:P

Link to comment
Share on other sites

பல கடவுளர்

'இந்திரன்' (25), 'செய்யபவள்' (167), 'தவ்வை' (167), 'அடியளந்தான்' (610), 'கூற்று' (765)

முதலிய பல கடவுளரின் பிரஸ்தாபம் திருக்குறளிலுண்டு. அவரும் இருபாலாராயிருக்கின்றனர்.

'வானோர்க்கும்' (18), 'அகல் விசும்புளார்' (25), 'தேவரனையர்' (1073)

என்ற பிரயோகங்களால் எண்ணிறந்த கடவுளருண்மை அதிற் சம்மதிக்கப் பட்டது புலனாம். 'மூவரு முப்பத்து மூவரு மற்றொழிந்த தேவரும்' என்ற திருவாசகத்தோடு அவற்றையியைத்துக் காண்க. ஆனால் ஒரே கடவுள் தானுண்டு என்கிற சமயங்களும் பலவே. தோட்டியின் குடில்போல்வன அவை. அக்குடிலில் தோட்டி தலைவன் தான். ஆனால் அடிமைகள் கிடையா. திருவள்ளுவர் கொண்ட சமயமோ அரசமாளிகை போல்வது. அங்குத் தோட்டி முதல் மந்திரி வரை ஆயிரக் கணக்கான ஊழியர் இருப்பர். அரசன் அத்தனை பேருக்கும் ஆண்டவன், அதிகாரி, தலைவன், அச்சமயத்திலும் மாணிக்கவாசகர் அருளியது போல் கணக்கிலடங்காக் கடவுளரிருப்பர். அவரெல்லாந் தொண்டர்கள். அச்சமயத்து இறைவன் ஒருவனே. அவனே தலைவன், அக்கடவுளரடங்கலும் அவனுக்கு உடைமையே. அங்ஙனமாகத், தோட்டிக் குடில்கள் போன்ற மதங்கள் திருக்குறளைத் தமக்கும் உரியதாக எப்படிச் சொல்லலாம்? மேலும் அந்நூலில் வருகிற கடவுளர் அம்மதங்களுக்கு உடன்பாடுமல்ல.

Link to comment
Share on other sites

பொய்ச் சமயங்களும் மெய்ச் சமயமும்

பொய்வந்துழலுஞ் சமயங்கள் பலவாயிருக்கலாம். ஆனால் மெய்ச் சமயம் ஒன்றே தான் இருக்க முடியும் என்பது ஆசிரியரின் அழுத்தமான கொள்கை.

'இருள்சே ரிருவினையுஞ் சேரா விறைவன்

பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு' (5)

என்றது நூல். இறைவன் பொருள்சேர் புகழ் புரிந்தார் மாட்டு - இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழை விரும்பினாரிடத்து' என்பது உரை.

'இறைமைக் குணங்களிலராயினாரை உடையரெனக் கருதி அறிவிலார் கூறுகின்ற புகழ்கள் பொருள் சேரா வாகலின், அவை முற்றவுமுடைய இறைவன் புகழே பொருள்சேர் புகழெனப்பட்டது' என்பது குறிப்பு.

வேதசிவாகமங்களிற் பிரஸ்தாபிக்கப்படும் இறைவன் ஒருவனுளன், அவனே முழுமுதற் பொருள், அவ்விறைவன்பாலுள்ள குணங்கள் அவனுக்கேயுரியன. அவையே இறைமைக் குணங்கள். அவனைக் கண்டு அக்குணங்களைச் சொல்லிச் சொல்லிப் புகழ வேண்டும். அவனைக் காண்டலாலது வேதாகமங்கள் கூறும் அவனுண்மையை அளவைகளால் துணிதல். அங்ஙனம் கண்டு அக்குணங்களாற் புகழ்வது அவன் விஷயத்தில் பொருள்சேர் புகழாகும். அதற்கு ஒரே சமயந்தான் இருக்க முடியும். இரண்டு மூன்று இருக்கலாமென்பது அறியாமை. மற்றைச் சமயங்கள் எத்தகையன? அவ்விறைவனல்லாத பிற சேதனங்கனைத்தும் உயிர்கள். அவற்றுள் தத்தமக்கு இஷ்டமான ஒவ்வொருயிரை அச்சமயங்கள் எடுத்துக் கொண்டு அதன்மேல் அவ்விறைமைக் குணங்களையேற்றி அந்தந்தவுயிரையே தந்தம் இறைவனெனப் புகழும். அப்புகழ்களெல்லாம் பொருள் சேராப் புகழ்கள். அங்ஙனம் புகழ்பவர் அறிவிலார். ஒருவனைப் புகழ் விரும்பினால் முதலில் அவனையும் அவனிடமுள்ள குணங்களையும் ஆராய்ந்து கண்டுகொள்ளவேண்டும். பிறகு அக்குணங்களே கொண்டு அவனை புகழ வேண்டும். அவனைத் தெரியாமல் பிறனுக்குரிய குணங்களை அவனிடம் ஆரோபித்துப் புகழ்வது மடமை. இவ்வுண்மை கடைப்பிடிக்கற்பாலது. மெய்யான இறைவனை வணங்குஞ்சமயம் ஒன்றேயுண்டு. மற்றவையெல்லாம் போலியிறைவரை வணங்குஞ் சமயங்களே யென்ற வுண்மையைப் 'பொருள்சேர் புகழ்' என்ற தொடரால் ஆசிரியர் சூசிப்பித்தனர். அழகர் அதைப் பலருமறியப் பகிரங்கப்படுத்தினர். பொய்ச் சமயங்களில்லையானால் அத்தொடர் தோற்றற் கவசியமேயில்லை. அச்சமயங்கள் திருக்குறளிற் பாத்தியதை கொண்டாடலாமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு.

'எழுத்துக்களுக்கெல்லாம் 'அ' முதலானதாயிருப்பதுபோல உலகுக்கு இறைவன் முதல்வனாக இருக்கிறான்.'

தமிழ் என்று கூறாவிட்டாலும் "அ"கரம் என்பதன் மூலம் தமிழை சுட்டிவிட்டார் வள்ளுவர்..! அவர் பலதையும் நேரடியாகச் சொல்லவில்லையே.. உட்பொருள் வைத்துத்தான் சொல்லியுள்ளார்..! :P

தமிழ் என்ற சொல்லை நேரிடையாக பாவித்திருக்கலாமே என்பதே எனது ஆதங்கம்

Link to comment
Share on other sites

இறைமைக் குணங்களும் இறைவனும்

'ஆதிபகவன்' (1) 'வாலறிவன்' (2) 'மலர்மிசையேகினான்' (3) 'வேண்டுதல் வேண்டாமையிலான்' (4) 'இறைவன்' (5) 'பொறிவாயிலைந்தவித்தான்' (6) 'தனக்குவமையில்லாதான்' (7) 'அறவாழியந்தணன்' (8)

எனத் திருக்குறளில் எட்டுப் பிரயோகங்கள் வருகின்றன.

அவை இறைமைக் குணங்களை விளங்குவனவாகும். அக்குணங்கள் அந்த வரிசைப்படி தன்வயம், இயற்கையறிவு, முற்றுணர்வு, இயல்பாகவே பாசங்களினீங்குதல், பேராற்றல், தூயவுடம்பு, வரம்பிலின்பம், பேரருள் என்பன. 'எண்குணத்தான்' (9) என்பது அந்த எட்டு வகைப்பட்ட குணங்களையுடையான் என்னும் பொருளுடையதாய் அக்குணங்களின் தொகுப்புணர்த்தியவாறு. இறைமைக் குணங்களெனப் படுவனவெல்லாம் அவ்வெட்டினுள் அடங்கும். ஒன்பதாவதாக எண்ணத் தகுந்த, கருதத் தகுந்த குணம் வேறில்லை. எச்சமயத்திலுஞ் சொல்லப்பட்டிலது. ஆகலின் எண் குணத்தான் என்பதற்குத் கருதத் தகுந்த குணமுடையான் எனப் பொருள் கூறுவது பயனற்றது. அப்பொருள் கூறுவார் தம் கருத்தை அத்தொடருக்குட் புகுத்துகிறாரென்க. மனிதனது கருத்தைக் கடந்தது இறைமைக்குணம். அந்த எட்டுக் குணங்களுஞ் சைவாகமத்திற் கூறப்பட்டன என்பதை நூலோடியைந்து அழகர் தங்கருத்தாகக் கொண்டார். அவை வைணவாகமத்திற் கூறப்படாமை அவருக்குத் தெரியும். ஆகலின் அவ்வாகமந் தள்ளப்பட்டது. அணிமா முதலியன சித்திகளே. குணங்களல்ல. கடையிலா வறிவு முதலியன ஆருகத நூற் கொள்கை. ஆருகதமோ நாத்திகம். ஆகலின் குறிப்பில் அவையெல்லாம் எடுத்துக் காட்டித் தள்ளப்பட்டன.

உலகில் உயிர்கள் பிறக்கின்றன. பிறப்புச் சுகமுடையதா? துன்பமுடையதா?

'பிறவிப் பெருங்கடல் ----' (10),

'மாணாப் பிறப்பு' (351),

'பிறப்பென்னும் பேதைமை ----' (358),

'வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை ---' (362)

என்றது நூல். 'காரண காரியத் தொடர்ச்சியாய்க் கரையின்றி வருதலின், பிறவிப் பெருங்கடலென்றார்'.

'நரகர், விலங்கு, மக்கள், தேவர் என்னும் நால்வகைப் பிறப்பினுமுள்ளது துன்பமேயாகலின், மாணாப் பிறப்பென்றார். இதனாற் பிறப்புத் துன்பமென்பதூஉம், அதற்கு முதற்காரணம் அவிச்சையென்பதூஉங் கூறப்பட்டன'.

'ஐவகைக் குற்றங்களுள் அவிச்சை ஏனைய நான்கிற்குங் காரண மாதலுடைமையின், அச்சிறப்புப் பற்றி அதனையே பிறப்பிற்குக் காரணமாக்கிக் கூறினார்' என்பது குறிப்பு.

'வேண்டுங்கால் பிறவாமை வேண்டும் - பிறப்புத் துன்ப மாதலறிந்தவன் ஒன்றை வேண்டிற் பிறவாமையை வேண்டும்' என்பது உரை.

இதனால் எவ்வகைப்பட்ட பிறப்புக்கும் அவிச்சையே காரணம், பிறப்புக்களெல்லாந் துன்பமே தருவன என்பது ஆசிரியர் கொள்கை. வினைகளில் தீவினை மாத்திரந்தான் பிறப்பைத் தருமென்பதில்லை. நல்வினையும் பிறப்புத் தருவதே.

'இருள்சே ரிருவினையுஞ் சேரா ----'

என்றது நூல். 'இருள்சேர் இருவினையும் சேரா - மயக்கத்தைப் பற்றி வரும் நல்வினை தீவினையென்னுமிரண்டு வினையும் உளவாகா' என்பது உரை.

'நல்வினையும் பிறத்தற்கேது ---' என்பது குறிப்பு. ஆகவே இறைவனாயுள்ளவனுக்கு அவிச்சையும் இருவினையுங் காரணமாக வரும் பிறப்பு இருக்கமுடியாதென்பது திண்ணம். ஆனால் கடவுள் பிறக்கலாம், அவர் பிறப்பதற்கு அவிச்சையும், இருவினையுங் காரணமாகா, அவர் சுவேச்சையாற் பிறக்கிறார் என்று கூறி மகிழுஞ் சமயங்களுமுள. அவிச்சையும், இருவினையுங் காரணமாகாத பிறப்பும் உண்டெனத் திருவள்ளுவர் யாண்டுஞ் சொன்னதில்லை. தம் கடவுள் பிறப்பதற்கு அவரது சுவேச்சையே காரணம் எனக் கூறுகிற சமயங்கள் பிறப்பின் காரணத்தில் முரண்பாட்டையேற்றி மக்களுக்குப் பிறப்புப் பற்றிய கவலையும், அதிலிருந்து விடுபடுவதற்கான முயற்சியும் உளவாகாதபடி தடுத்துவிடும்.

மேலும் ஆஸ்திகராயிருக்க விரும்புவாருக்கு ஒரு பொறுப்பான வேலையுண்டு. மெய்யான இறைவனாவான் எவன்? போலியிறைவராவார் எவர்? என்பதைக் கண்டு கொள்வதே அவ்வேலை. காண்டலாவது இதுவென்பதும், போலியிறைவராவார் இவரென்பதும் முன் சொல்லப்பட்டன. அவ்விருவகையாரையும் பிரித்தறிவதற்கு வாயில் ஒன்றேயுண்டு. மெய்யான இறைவன் பிறக்கமாட்டான். போலியிறைவரெல்லாம் பிறப்பர். பிறப்பின்மையும், பிறப்புண்மையுமே அவ்வாயில், சித்தியார் சூத்திரம் 2 செய்யுள் 25ல்

'நால்வகை யோனியுள் ஒரு யோனிவாய்ப்பட்டுப் பிறப்பனயாவை அவையெல்லாஞ் சீவவர்க்கம். அவ்வாறு பிறத்தலில்லது யாது அது பதிப்பொரு ளென்னு மிது வொன்றே ஏனைச் செயல்களான் வேற்றுமையறிய வாராத வவ்விரண்டற்குந் தம்முள் வேற்றுமையறிய நிற்பதாகலின், ஏனைத் தேவரெல்லாம் அங்ஙனம் பிறந்திறத்தல் கேட்கப்படுதலானும்,'... என்றருளிய சிவஞான முனிவரின் உரையைக் காண்க. 'வேதனைப்படு மிறக்கும் பிறக்கு மேல் வினையுஞ் செய்யும்' என்ற குறைபாடுடைய உயிர்களுள் ஒன்றை இறைவனெனக் கொண்ட மதம் அக்குறைகள் தன் கடவுளுக்கில்லாதது போற் காட்டிப் பிரசார வேலைகள் பல செய்யும். அவையெல்லாம் வெற்றிரைச்சல். மாதாவுதரத்துட் கருவாய்த் தங்கி யோனிசனாக வெளிப்படுதல் என்னும் பிறப்பு உயிர்களுக்கேயுண்டு. இறைவனுக்கும் அ·திருந்தால் அவன் உயிர்களின் பிறவித் துன்பத்தை யொழிப்பதெப்படி? ஓட்டை மரக்கலம் பிறிதோரோட்டை மரக்கலத்தைக் கரையேற்றுமா?

இனிப், பிறவாமையைக் குணமாகவுடைய அம்மெய்யான இறைவன் யார்? திருவள்ளுவர் வேத சிவாகமங்களை இறைவன் வாக்கெனக் கொண்டு விசுவசித்தவர். அவர் கூறும் விடையைக் காணாலாம். வேதம்,

'அஜாதோஜாத இத்யேவம் கச்சித் பீரு: ப்ரபத்யதே! ருத்யத்தே

தக்ஷ¢ணம் முகம் தேந மாம் பாஹிநித்யாச: !!' (சுவேதா)

என்றது அதற்குத் தமிழ்

'பெரும்பிணி யிதனைத் தீர்க்கு மருத்துவன் பிறவியில்லாப்

பரம்பொரு ளான முக்கட்பரமனே யென்று தேறி

முரண்பயில் விடையோன் றென்பான் முகத்தினைச் சரண்மெய்தி

விரும்பிவீ டுறுதற் பாலார் பிறப்பினை வெருவப் பெற்றார்'

என்ற காஞ்சிப்புராணம். அதனால் பிறப்பில்லாத இறைவர் சிவபிரானெ யென்பதும், அவரே உயிர்களைப் பிறவிப் பெருங்கடலிலிருந்து கரையேற்றுபவரென்பதும் பெறப்பட்டன.

Siva.jpg

வேதம்,

'தமீச்வராணாம் பரமம் மஹேச்வரம் தம் தைவதாநாம்

பரமஞ்ச தைவதம்! பதிம் பதீநாம் பரமம் பரஸ்தாத் விதாம

தேவம் புவநேச மீட்யம்!! நதஸ்ய காரியம் கரணஞ்ச

வித்யதே நதித் ஸமாச்சாப் யதிகச்சத்ருச்யதே' (சுவேதா)

'பராத் பரதரம் ப்ரஹ்ம யத் பராத் பரதோ ஹரி: ! தத்

பராத் பரதோ ஹீசஸ் தஸ்மாத் துல்யோ திகோநஹி! ' (சரபம்)

என்றது. அதற்குத் தமிழ்

'மற்றாருந் தன்னொபா ரில்லான்' (தேவாரம்)

'..........கச்சிமயானத்தான்...................

Link to comment
Share on other sites

'சங்கரோ பகவா நாத்யோ ராக்ஷ ஸகலா: ப்ரஜா:',

'மஹேசோ பகவா நாதி தேவ:' (சரபம்)

எனக் கூறி வலியுறுத்துகிறது. ஆதிபகவன் என்பது அவ்விறைவனுக்கு உத்தேசம். உத்தேசம் - பெயர். பெயரை முதலிற் கூறாமல் இலக்கணங்காணவும், பரி¨க்ஷ செய்யவுங் கூடாது. அ·து உத்தேசம் என்பதைக் காட்டவே 'ஆதிபகவன் - ஆதிபகவன்' என்று உரை கூறினார் அழகர்.

'சீர் கொளிறை யொன்றுண்டத் தெய்வநீ யென்றொப்பாற்

சோர்விலடை யாற்றெனிந் தேஞ் சோமேசா - வோரி

லகரமுதல வெழுத்தெல்லா மாதி

பகவன் முதற்றே யுலகு'

என்ற சிவஞான முனிவரர் திருவாக்கு அவ்வுண்மைகளனைத்தையும் விளக்கி நிற்பதறிக.

திருக்குறள் புணர்ச்சி மகிழ்தல் என்னும் 111 -ஆவது அதிகாரத்தில்,

'தாழ்வீழ்வார் மென்றோட் டுயிலி னினிதுகொ

றாமரைக் கண்ணா னுலகு' (1103)

என வருகிறது. அதில் செங்கண்மாலுலகம் நிரதிசயவின்பமுடையது என்றாரழகர். அங்ஙனமாயின் தாமரைக் கண்ணனாகிய திருமாலே பரம்பொருளெனக் கொண்டவராதல் வேண்டும் ஆசிரியர். அப்படியா? அன்று. ஏன்? ஊடலுவகை என்னும் 133-ஆவது அதிகாரத்தில் ஆசிரியர்

'புலத்தலிற் புத்தேணா டுண்டோ நிலத்தொடு

நீரியைந் தன்னா ரகத்து' (1323)

என்றார். அதன் குறிப்பில் 'அப்புலவி பின்னே பேரின்பம் பயவா நின்றது' என்று காணப்படுகிறது. பேரின்பமும் நிரதிசயவின்பமும் ஒன்றே. புத்தேர் நாடென்பது எது?

'புத்தேளுலகத்தும் - தேவருலகத்தும்' (213)

என்ற உரையால் தேவருலகமே அதுவாம். இவ்வுலகத்தது சிற்றின்பம். அதை நோக்கத் தேவருலகம் பேரின்பத்தது. அதிற் சிறந்தது தாமரைக் கண்ணானுலகம். அவ்வளவே. அவ்வுலகை முத்தியுலகென்பதும், அக்கண்ணானைப் பரம்பொருளென்பதும் செல்லா. தாமரைக் கண்ணான் என்ற பிரயோகமே அதனை விளக்கும். திருமால் தம் கண்ணொன்றைப் பிடுங்கித் தாமரை பூவாகக் கொண்டு சிவபிரான் திருவடியில் அர்ச்சித்து அப்பிரானிடமிருந்து சக்கரத்தைப் பரிசாகப் பெற்றார். தாமரைக் கண்ணன் என்ற பெயரும் அவருக்குக் கிடைத்தது. அவ்வரலாற்றை,

'யோவாம பாதார்ச்சித விஷ்ணு நேதரஸ் தஸ்மை ததெள

சக்ரமதிவ ஹ்ருஷ்ட:! தஸ்மை ருத்ராய நமோ அஸ்து!' (சரபம்)

என்றது வேதம். அங்ஙனம் சிவபெருமானால் அநுக்கிரக்கிக்கப்பட்டவர் திருமால். அடுத்து,

'அடியளந்தான் றாஅயது' (610)

என்று தொடரைக் கவனிக்கலாம்.

'அடியளந்தான் தாயது எல்லாம் - தன்னடியளவானே எல்லாவுலகையுமளந்த இறைவன் கடந்த பரப்பு முழுதையும்' என்றது உரை. திருமால் திரிவிக்கிரமவதாரத்தில் உலகைத் தம் பாதத்தால் அளந்தார். இறுதியில் அவ்வவதாரம் சிட்சிக்கப்பட்டது. சிட்சித்தவர் சிவபெருமானே. வேதம் அச்சரிதத்தை.

'யோ மத்ஸ்ய கூர்ம வராஹ ஸிம்ஹாந் விஷ்ணும்

க்ரமந்தம் வாமந மாதிதேவ:! விவிக்லபம் பீட்யமாநம்

ஜகாந பஸ்கீசகார மந்மதம் யமஞ்ச! தஸ்மை ருத்ராய

நமோ அஸ்து!'

என்று கூறி விளக்கியது.

'குறளா யணைந்து மூவடிமண் கொண்டு நெடுகி மூவுலகுந்

திறலா னளந்து மாவலியைச் சிறையிற் படுத்து வியந்தானை

யிறவே சவட்டி வெரிநெலும்பை யெழிற்கங் காளப் படையென்ன

வறவோர் வழுத்தக் கைக்கொண்ட வங்க ணாளன் றிருவுருவம்'

gangalar.jpg

என்றது காஞ்சிப்புராணமும். அங்ஙனம் சிவபெருமானால் நிக்கிரகிக்கப் பட்டவர் திருமால். சிவபெருமான் செய்யும் நிக்கிரக அனுக்கிரகங்களுக்கு இலக்காயவர் திருமால். அடியளந்தான், தாமரைக்கண்ணான் என்பவற்றை அவ்வுண்மை விளக்கத்திற்காகவே ஆசிரியர் எடுத்தாண்டார். தாமரைக் கண்ணானுலகு மாயைக்குட்பட்டதொரு போகத்தானம். சிவலோகமே. மாயையைக் கடந்த முத்தித்தானம். அச் சிவபெருமானே மெய்யான இறைவனெனக் கொள்ளாத மதம் திருக்குறளுக்குப் புறம்பே.

கடவுள் வாழ்த்தில் ஆதிபகவன், வாலறிவன், மலர்மிசை யேகினான் முதலிய ஆண்பாற் சொற்களே வருகின்றன. அவனைப் பெண்ணெனக் கொண்டு வணங்கும் மதம் அந்நூலுக்கு அயலே.

Link to comment
Share on other sites

உயிர்

உயிரென்னுஞ் சொல் தனக்கெனப் பொருளில்லாதது என்கிறது ஒரு சமயம். உயிர் பிரமத்தின் விசேடணம் என்கிறது இன்னொரு சமயம். இறைவன் மனிதவுடலையுண்டாக்கி அதன் மூக்கில் தன் சுவாசத்தை ஊதி உயிரை இடையில் சிருட்டித்தான் என்கிறது மற்றொரு சமயம். இப்படிப் பட்ட சமயங்கள் இன்னும் பல. ஆனால் திருக்குறள்.

'மன்னுயிர்' (244), 'மன்னுயிர்க்கு' (318), 'உடம்போ டுயிரிடை நட்பு' (338) என்றது.

'மன்உயிர் - நிலைபேறுடைய உயிர்கள்' என்பது உரை.

'உயிர்களெல்லாம் நித்தமாகலின், மன்னுயிரென்றார்' என்பது குறிப்பு.

'மன்உயிர்க்கு - நிலைபேறுடைய உயிர்கட்கு' என்பது உரை.

'சேதனமாய் அருவாய் நித்தமாய உயிரும், அசேதனமாய் உருவாய் அநித்தமாய உடம்பும் தம்முண் மாறாகலின், வினை வயத்தாற் கூடிய தல்லது நட்பில் வென்ப தறிக.'

என்பது குறிப்பு. உயிரைப் பற்றி விபரீத புத்தி கொண்டுள்ள மேற்காட்டிய சமயங்கள் உயிர் நித்தப் பொருளென்கிற திருக்குறளைத் தமக்கும் உகந்ததென்றல் வீண்பேச்சென்க.

இன்னும், உயிர் மனிதனுக்கேயுண்டு, மிருக முதலிய பிற பிராணிகளுக்கில்லை. அவற்றினிடங் காணப்படுவது இயற்கையுணர்ச்சி (Instinct) யே, அவையறந்தால் அப்போதே அவ்வுணர்ச்சியும் நசித்துச் சூனியமாய்ப் போம் எனக் கூறும் சில சமயங்கள். ஆனால்

'தன்னுயிர் நீப்பினும் செய்ற்க தான்பிறி

தின்னுயிர் நீக்கும் வினை' (327)

என்றது நூல். அதனால், ஏனைப் பிராணிகளுக்கும் உயிருண்டு, அவற்றிற்கு அவ்வுயிர் இனியதுமாகும் என்பது தெரிகிறது. பிராணிகளை வதை செய்வதும், வதைக்கப்பட்ட பிணங்களைத் தின்பதுமாகிய பாவங்களைச் செய்யத் தூண்டும் அச்சமயங்கள் திருக்குறளில் உரிமை கொண்டாடலாமா?

Link to comment
Share on other sites

பிறப்பு

மனிதன் ஒருமுறையே பிறப்பான் எனச் சில சமயங் கூறும், திருக்குறளோ,

'பிறவிப் பெருங்கடல்' (10)

'எழுபிறப்புத் தீயவை தீண்டா' (62)

'உயிருடம்பி னீக்கியா ரென்ப செயிருடம்பிற்

செல்லாத்தீ வாழ்க்கை யவர்' (330)

'உறங்குவது போலுஞ் சாக்கா டுறங்கி

விழிப்பது போலும் பிறப்பு' (339)

என்றது. 'காரண காரியத் தொடர்ச்சியாய்க் கரையின்றி வருதலின், பிறவிப் பெருங்கடலென்றார்' என்பது குறிப்பு.

எழுபிறப்பும் தீயவை தீண்டா - 'வினை வயத்தாற் பிறக்கும் பிறப்பேழின்கண்ணும் ஒருவனைத் துன்பங்கள் சென்றடையா' என்பது உரை.

'செயிர் உடம்பிள் செல்லாத் தீவாழ்க்கையவர் - நோக்கலாகா நோயுடம்புடனே வறுமை கூர்ந்த இழிதொழில் வாழ்க்கையினை யுடையாரை, உயிர் உடம்பின் நீக்கியார் என்ப - இவர் முற்பிறப்பின்கண் உயிர்களை அவை நின்ற வுடம்பினின்று நீக்கினவரென்று சொல்லுவார் வினை விளைவுகளையறிந்தோர்' என்பது உரை.

'உறங்குதலும் விழித்தலும் உயிர்கட்கு இயல்பாய்க் கடிதின் மாறி மாறி வருகின்றாற்போலச் சாக்காடும் பிறப்பும் இயல்பாய்க் கடிதின் மாறி மாறி வருமென்பது கருத்து' என்பது குறிப்பு. 'உயிருடம்பின்' என்ற திருக்குறள் உரையநுமானமுமாம். உயிர்கள் மாறி மாறிப் பிறக்கும் என்ற திருக்குறளுக்கு உயிர்கள் ஒரு முறை தான் பிறக்கும் என்ற சமயங்கள் உவப்புடையவாமா?

Link to comment
Share on other sites

சுவர்க்க நரகம்

சுவர்க்க நரகம் என வேறுலகங்களில்லை என்கின்றன சில சமயங்கள்.

'புத்தே ளுலகத்தும் ----' (213)

'தேவ ரனையர் கயவ ரவருந்தா

மேவன செய்தொழுக லான்' (1073)

'அண்ணாத்தல் செய்யா தளறு' (255)

என்றது நூல். 'ஈவாரும் ஏற்பாருமின்றி எல்லாரும் ஒரு தன்மைய ராதலின், புத்தே ளுலகத் தரிதாயிற்று' என்பது குறிப்பு.

அவரும் தாம் மேவன செய்து ஒழுகலான் - அ·தியாதனானெனின், தேவரைப் போன்று தம்மை நியமிப்பாரின்றிக் கயவருந் தாம் விரும்புவனவற்றைச் செய்தொழுகலான்' என்பது உரை.

'நெடுங்காலம் நிரயத்து ளழுந்தும்' என்பது குறிப்பு. அவற்றில் சுவர்க்கம் அங்குள்ள தேவர்களின் ஒழுகலாற்றோடு வர்ணிக்கப்படுவது காண்க. இவ்வுலகத்தில்லாத் நீண்ட கொடிய துன்பங்கள் நிறைந்தது நரகம் எனத் தெரிகிறது. அவற்றை மறுக்கும் மதங்கள் அந்நூலைத் தொடலாமா?

Link to comment
Share on other sites

இறைவன் நிமித்த காரணம்

இறைவன் வேதாகமங்களை யியற்றினானென்ற விஷயம் முன் விளக்கப்பட்டது. 'கற்றீண்டு' (356) என்றதன் குறிப்பில் 'வீட்டிற்கு நிமித்த காரணமாய முதற்பொருளை' என்பதும் 'பிறப்பென்னும்' (358) என்றதன் உரையில் 'வீட்டிற்கு நிமித்த காரணமாய செவ்விய பொருளை' என்பதும் காணப்படுகின்றன. 'உலகியற்றியான்' (1062) என்ற நூற்றொடருக்கு 'இவ்வுலகத்தைப் படைத்தவன்' என்பது உரை. அவனுக்குத் தனித்த உபாதான காரணத்தன்மையாவது, நிமித்தோபதான காரணத்தன்மை யாவது உண்டெனத் தொனிக்கும்படி தானும் ஒரு பாக்கூடச் செய்தாரிலர் ஆசிரியர். ஆகலின் அவன் உலகிற்கு நிமித்த காரணமேயாவானென்கிற திருக்குறளுக்கு நிமித்தோ பாதான காரணமாவா னென்கிற சமயங்கள் முற்றிலும் புறகே.

Link to comment
Share on other sites

அவிச்சை

'இன்ன தன்மைத்தென ஒருவராலுங் கூறப்படாமையின் அவிச்சையை இருள்' என்றது 5இன் குறிப்பு. 'ஒரு பொருளுங் காட்டா திருவளுருவங்காட்டு மிரு பொருளுங் காட்டாதிது' என்பது திருவருட்பயன். இருள் பொருளைக் காட்டாது, தன்னை காட்டும்; ஆணவமலம் தன்னையுங் காட்டாது என்பது கருத்து. அங்ஙனமாய அவிச்சையை (ஆணவத்தை) இன்ன தன்மைத்தென யாராற் கூற முடியும்? ஒருவராலுமாகாது. 'காமம், வெகுளி' (360) என்றதன் குறிப்பு 'அநாதியாய அவிச்சை' யென்கின்றது. ஆணவம் அநாதியாய தொரு மலமென்பது கொள்ளப்பட்டது. அம் மலம் இல்லையென்ற சமயங்களுக்குத் திருக்குறளின் தொடர்பு ஏன்?

வினை

வினை அல்லது கருமமலம் என்பதொன்றில்லையென்பர் சில சமயிகள். 'இருள்சே ரிவினையும்' (5) என்ற தொடருக்கு 'மயக்கத்தைப் பற்றி வரும் நல்வினை தீவினை யென்னு மிரண்டு வினையும்' என்பது உரை. 'அளவின்கண்' (2860) என்றதன் உரைக் குறிப்பில் 'அதற்கு (உயிர்ப் பொருளுக்கு) அநாதியாய் வருகின்ற நல்வினை தீவினைக்குற்ற விளைவுகள்' என வருகின்றது. 338 - இன் குறிப்பு முன்னர்க் காட்டப்பட்டது. கருமமலம், உயிர்க்கு அநாதியாய் வருவதென்பது காண்க. அம்மலத்தை யில்லையென்பவர்க்குத் திருக்குறளிலுந் தொடர்பில்லையென்பது.

Link to comment
Share on other sites

மாயை

தத்துவ வுணர்வு, தத்துவ ஞானம், மெய்யுணர்தல் என்பன ஒன்று அ·தாவதென்னை?

'சுவையொளி யூறோசை நாற்றமென் றைந்தின்

வகைதெரிவான் கட்டே யுலகு' (27)

என்றது நூல். தத்துவம் இருபத்தைந்து. அவற்றையறிந்தவனே உலகை யறிந்தவன். அவ்விருபத்தைந்தும் பிரகிருதி பிரகிருதியின்பாற்பட்டவை. சாங்கிய நூல் அவ்வளவே சொல்லும். புருடதத்துவமாவது பஞ்ச கஞ்சுகத்தோடு கூடியது. பஞ்ச கஞ்சுகங்களாவன காலம், நியதி, கலை, வித்தை அராகம் என்பன. அவை அசுத்த மாயா காரியங்கள். சுத்தமாயா காரியங்கள் வேறு. சைவ சமயத்தில் தத்துவங்கள் முப்பத்தாறு. அவை மாயேயாம். தோன்றி நின்று மறைவன. அவற்றிற்கு உபாதாநம் மாயை. அது நித்தம். அதனை உடன்படாத சமயிகளுக்குத் திருக்குறள் அயலாகும்.

உயிர் சேதனமாய் அருவாய் நித்தமாயுள்ள பொருள் என்பது முன்காட்டப்பட்டது. 'புருடன் தானொன்றிற் றோன்றாமையானும்' தன்கட்டோன்றுவனவின்மையானும் இரண்டுமல்லன்' என்றது 27- இன் உரைக்குறிப்பு. புருடன் - உயிர், 422 - இன் குறிப்பில் 'அ·து (அறிவு) உயிர்க்குணம்' என்றிருக்கிறது. அதனால் உயிர் குணியென்பது சித்தம். அத்தகைய உயிரைச் சத்துப்போலி, சிதாபாசன் என்பவெல்லாம் திருக்குறளுக்கு மாறானவை.

'பிறப்பென்னும் பேதமை நீங்கச் சிறப்பென்னுஞ்

செம்பொருள் காண்ப தறிவு' (358)

என்றது நூல். 'பிறப்பு என்னும் பேதமை நீங்க - பிறப்பிறகு முதற் காரண மாய அவிச்சை கெட, சிறப்பு என்னும் செம்பொருள் காண்பது அறிவு - வீட்டிற்கு நிமித்த காரணமாய செவ்விய பொருளைக் காண்பதே ஒருவர்க்கு மெய்யுணர்வாவது' என்பது உரை. 352- இன் உரைக்குறிப்பில் 'வீடாவது நிரதிசய வின்பமென்பதூஉம், அதற்கு நிமித்த காரணம் கேவலப் பொருளென்பதூஉம், கூறப்பட்டன' என வருகிறது. பிறப்பிற்கு முதற்காரணமாய அவிச்சை கெடப் பெறுதலும், நிரதிசய வின்பம் அடையப் பெறுதலுமே உயிர்க்கு முத்தியாகும். உயிர் அருவுடம்பு உருவுடம்பு என்பவற்றிலிருந்து விடுபட வேண்டும். அதன் சேதனத் தன்மை விளங்கும் அதிற் சிவஞானம் பிரகாசிக்கும். அவ்வுயிர் அதனைக் கண்டு கொண்டிருப்பது நிரதிசய 'வின்பத்தாய் நிற்ற' (370 இன் குறிப்பு)லாம். 'அவ்வுயிர்க்கு உடம்பு மிகை' (345) யே 'எற்றைக்கும் எச்சீர் வாய்ந்த காயமும் பகைமையன்றோ' என்றது தணிக்கைப் புராணமும், காயம் - உடம்பு. ஆகவே முத்தியிலும் உயிர்க்குத் தேகமுண்டெனக் கொள்ளுஞ் சமயங்களுக்குத் திருக்குறளின் தொடர்பு ஏன்?

Link to comment
Share on other sites

கேவலப் பொருள்

358இல் செம்பொருள் என்ற சொல் வருகிறது. 'தோற்றக் கேடுகளின்மையின் நித்தமாய், நோன்மையாற் றன்னை யொன்றுங் கலத்தலின்மையிற் றூய்தாய்த், தானெல்லாவற்றையுங் கலந்து நிற்கின்ற முதற்பொருள் விகாரமின்றி எஞ்ஞான்றும் ஒரு தன்மைத்தாதல் பற்றி, அதனைச் செம்பொருளென்றார்' என்றது அதன் குறிப்பு. அப்பொருளைக் காணகையாவதென்னை? 'உயிர் தன்னவிச்சை கெட்டு அதனொடு ஒற்றுமையுற இடைவிடாது பாவித்தல்' இதுவும் அக்குறிப்பு. அப்பாவனைக் கவசியமென்னை? 'உயிர் உடம்பினீங்குங் காலத்து அதனால் யாதொன்று பாவிக்கப்பட்டது அ·து அதுவாய்த் தோன்றுமென்பது எல்லாவாகமங்கட்குந் துணிபாகலின், வீடெய்துவார்க்கு அக்காலத்துப் பிறப்பிற்கேதுவாய பாவனை கெடுதற் பொருட்டுக் கேவலப் பொருளையே பாவி' த்தல் வேண்டும். இதுவும் அக்குறிப்பு. செம்பொருள், 'மெய்ப்பொருள்' (356), 'உள்ளது' (357) என்பனவெல்லாம் அக்கேவலப்பொருளே. கேவலப்பொருளென்றாலும் அப்பொருளின் சிறப்புப் பெயர் வெளிப்படக் கூறப்பட்டதாகாது. திருக்குறள் தனக்குப் பூர்வமாகிய வேதத்திற்போய் ஆராயும் படி நம்மைச் செலுத்துகிறது. வேதம்,

'யநா தமஸ்தந் நதிவா ந ராத்ரிர் ந ஸந்த சாஸச்

சிவ ஏவ கேவலா: !' (சுவேதா)

என்றது. அதற்குத் தமிழ்

'பகலிர விலதுள தெனும்ப குப்பிலா

வகலரு மிருள்பொதி யநாதி காலையி

லுகலரும் பரசிவ னொருவ னேயுளன்

மிகுபொரு ளவனிடை வெளிப்பட் டோங்குமால்'

என்றது காஞ்சிப்புராணம். ஆகவே அக்கேவலப் பொருள் அல்லது செம்பொருளாவார் சிவபிரானேயென்பது திருக்குறட் கருத்தாதல் ஓர்க. கேவலம்- தனி. கேவலவுணர்வு அல்லது 'மாசறு காட்சி' (352) என்பதுஞ் சிவஞானமே. எல்லைவுயிர்களுக்கும் 'வீடாகிய ஈறிலின்பன்' (328 இன் குறிப்பு) ஈயவல்ல பிரான் சிவபெருமானேயென்பதைச் சம்மதியாத சமயங்கள் திருக்குறளைச் சம்மதிப்பது நாடகமே.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கொழும்பு மக்கள் செல்லமாக OGF  என அழைக்கும் இவ்விடத்தில் - எல்லாமுமே விலைதான்.  டிசைனர் வகைகள் வெளிநாட்டு விலையிலும், உணவு/உள்ளூர் பொருட்கள் வெளியில் விற்பதை விட இரு மடங்கு விலையிலும் இருந்ததாக நினைவு.  பல்கனியுடன் கூடிய உணவு/பார் பகுதி உண்டு. குடிமக்கள் சூரியன் மறைவதை ரசித்தபடி லாகிரி வஸ்தாதுகளை உறிஞ்சுகிறார்கள்.
    • 🤣 விட்டா தூக்கி கொண்டு போய் கோம்பையன் மணலில் வச்சிடுவியள் போல கிடக்கு🤣. இல்லை…காலமாகிய அம்மாவின் பென்சன் கணக்கு உண்மையில் மூடப்பட்டுவிட்டதை உறுதி செய்யச் சென்றேன். 
    • ஆறு பெண்கள் கலந்து கொண்டார்கள் என்று எழுதினால் குறைந்தா போய்விடும்
    • மட்டக்களப்பு: நிலப்பயன்பாடும் – சனத்தொகை வளர்ச்சியும் March 27, 2024 — அழகு குணசீலன் — மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவுகின்ற நிலத்தட்டுப்பாடு, குறைந்தளவான நிலப்பரப்பில் வாழ்கின்ற மக்கள் செறிவை -அடர்த்தியை அதிகரித்திருக்கிறது. இது வரையறுக்கப்பட்ட இயற்கை வளங்களுக்கும், வரையறுக்கப்படாத அல்லது கட்டுப்படுத்த முடியாத மக்கள் தேவைக்கும் இடையிலான சமநிலைத்தளம்பல். இந்த நிலையானது தேசிய இயற்கை வளங்களை – நீண்ட காலமாக சமூக, பொருளாதார, அரசியல் மாற்றங்களுக்கு ஏற்ப முகாமைத்துவம் செய்யத்தவறியதன் விளைவு. மனித சக்திக்கு அப்பாற்பட்டு இயற்கை வளங்களை அதிகரிக்கமுடியாத ஜதார்த்தத்தில், மனித சமூகம் தான் சார்ந்த சமூக, பொருளாதார வாழ்வியல் பண்புகளில் காலத்திற்கு ஏற்ப ஒரு நெகிழ்ச்சி போக்கை கைக்கொள்வதன் மூலமே ஒரு குறிப்பிட்ட காலத்திற்காவது இந்த பிரச்சினையை பின் போடமுடியும். இதற்கான கொள்கைவகுப்பு, அரசியல் நிர்வாக முகாமைத்துவம் மட்டக்களப்பில் இருக்கவில்லை. காலத்திற்கு ஏற்ற சமூக, பொருளாதார வாழ்வியல் பண்பியல் மாற்றத்தில் மட்டக்களப்பின் இன,மத, கலாச்சார, பண்பாட்டு பாரம்பரியங்கள் நெகிழ்ச்சியற்ற இறுக்கமான போக்கை கொண்டிருப்பது நிலநெருக்கடியை மேலும் ஊக்கப்படுத்துவதாக உள்ளது. மட்டக்களப்பின் சமூகக்கட்டமைப்பு சார்ந்த பொருளாதார வாழ்வியலில் பிரதான பொருளாதார நடவடிக்கைகளாக விவசாயம், மீன்பிடி, வியாபாரம் உள்ள நிலையில் மக்கள் அதற்கு பொருத்தமான இடத்தை பொருளாதார வாழ்வியல் சார்ந்து தெரிவு செய்கிறார்கள். இது மானியசமூதாயம் முதலான வரலாற்று போக்கு. கடற்றொழிலாளர்களை எவ்வாறு வயல்வெளிகளில் குடியேற்ற முடியாதோ அவ்வாறு நகரம்சார் வியாபார சமூகம் ஒன்றை கடற்கரைகளிலும், விவசாயம்சார் நிலங்களிலும் குடியேற்ற முடியாது. அதே வேளை மறுபக்கத்தில் மக்கள் தொகை அதிகரிப்பு சேவைகள் துறையில் பெரும் வீக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் மூலமான வேலைவாய்ப்புகள் காரணமாக மக்கள் நகரம்சார்ந்து வாழவேண்டிய பொருளாதார கட்டாயம் ஏற்பட்டுள்ளது. வர்த்தக சமூகம் ஒன்று நுகர்வோர் இல்லாத அல்லது குறைவாக உள்ள நிலையில் எவ்வாறு வியாபாரம் செய்ய முடியும். விவசாயம், மீன்பிடி என்பனவும் இன்று தன்னிறைவு பொருளாதார நடவடிக்கைகளாக இல்லாமல் வர்த்தக நோக்கிலான சந்தை பொருளாதாரமாக மாறிவிட்டன. அத்துடன் சமூகவளர்சிக்கு ஏற்ப சமூகசேவைகள் கல்வி, வைத்தியம், போக்குவரத்து மற்றும் நுகர்வு என்பனவற்றின் சமகால, எதிர்கால தேவைகருதி மக்கள் அவை இலகுவாகவும், தரமாகவும், தாராளமாகவும் கிடைக்கக்கூடிய இடங்களை வாழ்வதற்கு தெரிவு செய்கின்றனர். இந்த நிலை சனத்தொகை அடர்த்தியை குறிப்பிட்ட பகுதிக்குள் அதிகரிக்க காரணமாகின்றது . மக்கள் இயல்பாகவே சமூக , பொருளாதார வசதி வாய்ப்புகள் குறைந்த இடங்களில் வாழவும் ஆர்வம் காட்டுவதில்லை. இவை எல்லாம் அரசியல் பேசுகின்ற காரணங்களை விடவும் முக்கியமானவை. அரசியல் தனக்கு தேவையானதை பேசுகிறது. மக்கள் தமக்கு தேவையானதை, பொருத்தமானதை, வசதியானதை, விருப்பமானதை செய்கிறார்கள். மக்களுக்கு வழிகாட்ட முடியாத அரசியல்வரட்சி  குறுக்கு வழிகளை நாடுகிறது.  மட்டக்களப்பு மாவட்டத்தின் 346 கிராமசேவகர் பிரிவுகளில் 49 கிராமசேவகர் பிரிவுகள் முஸ்லீம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் நான்கு பிரதேச செயலகங்களுக்குள் உட்பட்டவை. மிகுதி 297 கிராமசேவகர் பிரிவுகள் தமிழ் மக்களை பெரும்பான்மையாக கொண்ட பத்து பிரதேச செயலகங்களுக்குள் அடங்குகின்றன. இதன் விகிதாசாரம் 6:1. மட்டக்களப்பு மாவட்டத்தின் 965 கிராமங்கள் இந்த  346 கிராமசேவகர் பிரிவுகளுக்குள் பங்கிடப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 65 கிராமங்களை முஸ்லீம் கிராமங்கள் என்று அடையாளப்படுத்தினாலும் 900 கிராமங்கள் தமிழ், சிங்கள கிராமங்கள். இதன் விகிதாசாரம் ஏறக்குறைய 15:1. இங்கு கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய முக்கியமான விடயம் மட்டக்களப்பு மாவட்டத்தின் நிலப்பயன்பாட்டு பாணி. மாவட்டத்தின் மொத்த 2,854 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் காட்டுவள நிலங்கள் 40 வீதம். விவசாயநிலங்கள் 37 வீதம். ஆக, 75 வீதத்திற்கும் அதிகமான  நிலங்கள் இந்த இரண்டு தேவைகளுக்கும் பயன்படுத்தப்படுகின்ற நிலையில் எஞ்சி இருப்பது 25 வீதத்திற்கும் குறைவான நிலப்பரப்பு மட்டுமே.  இந்த 25 வீதத்தில் பயன்பாடின்றி அல்லது பயன்பாட்டிற்கு பொருத்தமற்ற தரிசு நிலங்களாக உள்ள நிலப்பரப்பு 6வீதம். நீர்நிலைகள் 5வீதம், சதுப்பு நிலங்கள் 2வீதம்,  வீட்டு வசதி, வீட்டு தோட்டங்களுக்கான நிலம் 5வீதம். ஆக, இன்னும் விவசாயம் செய்யக்கூடிய, பயன்பாட்டிற்கு உட்படுத்தப்படாத நிலப்பரப்பு 5 வீதம் மட்டுமே உள்ளது. மேலும் விவசாய நிலங்கள் 37 வீதம் தனியாருக்கு சொந்தமானவை என்பதும், 40 வீதமான வனபரிபாலன, வனவிலங்கு புகலிட பாதுகாப்பு நிலங்கள்  அரச நிலங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மாவட்டம் கொண்டுள்ள 120 கிலோமீட்டர் நீளமான கடற்கரையானது, கடற்கரையோர, சுற்றாடல் பாதுகாப்பு, உல்லாசப்பிரயாணத்துறை விருத்திக்கானது. உள்நாட்டு நீர்நிலைகளைப் பொறுத்தமட்டில் குளங்கள், வாவிகள், ஆறுகள்,தோணாக்கள்…. என்று 342 நீர்நிலைகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இந்த 342 இல் பத்துக்கும் குறைவான சிறிய நீர்நிலைகளே நான்கு முஸ்லீம் பிரதேச செயலகப் பிரிவிலும் உள்ளன. மிகுதி 330 க்கும் அதிகமானவை தமிழ்மக்களின் விவசாயவாழ்விடங்களுக்கு உட்பட்டவை. அதிகமானவை விவசாய உற்பத்தி, மீன்பிடி, கால்நடை வளர்ப்போடு தொடர்பு பட்டவை. பட்டிருப்பு தொகுதி முற்று முழுதாகவும், மட்டக்களப்பு தொகுதியின் மேற்குகரை விவசாய உற்பத்தி பெருநிலப்பரப்பில்  99 வீதமும் வரலாற்று காலம் முதல் தமிழர் வாழ்விடங்கள். அதேபோன்று எழுவான்கரையில் காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி பிரதேசங்களை சார்ந்த நிலப்பரப்பில் முஸ்லீம் மக்களும், ஏனைய எழுவான் பகுதிகளை தமிழ்மக்களும் சேர்ந்து நிர்வகித்தும், வாழ்ந்தும் வருகின்றனர். குறிப்பாக மண்முனை, கோறளை, ஏறாவூர் பற்றுக்களில் பல பண்டைய சிறிய முஸ்லீம் கிராமங்கள் அங்கும், இங்கும் சிதறிக்கிடக்கின்றன.  இதில்  மன்னம்பிட்டி பிரதேச தமிழ், முஸ்லீம் பாரம்பரிய கிராமங்களும் அடங்கும். இந்த சிதறல் மன்னம்பிட்டி பிரதேசம் பொலனறுவை மாவட்டத்துடன் இணைக்கப்படும் வரை மகாவலி வரை நீண்டுகிடந்தது. அதே போன்று 1961 இல் அம்பாறை மாவட்டம் உருவாக்கப்பட்டபோது மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து ஒருபகுதி அந்தமாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. உண்மையில் மட்டக்களப்பு மாவட்டம் தனது பூர்விக நிலப்பரப்பில் ஒரு பகுதியை வடமேற்காகவும், தெற்காகவும் இழந்து நிற்கிறது.  மட்டக்களப்பு மாவட்ட சனத்தொகை வளர்ச்சியை உற்று நோக்குகையில் பொதுவாக காணிப்பிரச்சினையை ஒரு பொதுவான காரணமாக கொள்ள முடியாது. ஆனால் சில தேர்வு செய்யப்பட்ட பகுதிகளில் இது ஒரு சிறப்பு பிரச்சினை என்பதையும் மறுப்பதற்கில்லை. கடந்த நான்கு தசாப்தங்களை நோக்கினால் 1981 இல் 2,37,787 ஆக இருந்த தமிழர் சனத்தொகை 2012 இல் 3,82,300 ஆக அதிகரித்துள்ளது. இது சுமார் 1,50,000 பேரினால் அதிகரித்துள்ளது.  1981 இல் முஸ்லீம்களின் சனத்தொகை 78,829 இல் இருந்து 2012 இல் 1,33,844 ஆக உயர்ந்துள்ளது. இது சுமார் 50,00 பேரினால் அதிகரித்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் சராசரி சனத்தொகை வளர்ச்சி ஏறக்குறைய ஒரு வீதமாக இருக்கின்ற நிலையில் இதை காணிநெருக்கடிக்கான முக்கிய காரணமாக சமகாலத்தில் கொள்ள முடியாது. இதனால் தான் வாழ்வியல் முறை, வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம், போக்குவரத்து போன்ற சமூக, பொருளாதார காரணிகள் முக்கியம் பெறுகின்றன. இந்த வளர்ச்சிக்கு-தேவைக்கு சமாந்தரமாக காணி, வீடமைப்பு வசதிகள், சனத்தொகை செறிவை ஐதாக்குவதற்கான திட்டமிடல் நடவடிக்கைகள் தேசிய, மாகாண, மாவட்ட மட்டத்தில் செய்யப்படவில்லை. தமிழ்ஆயத அமைப்புக்களின் வன்முறையினால் வாழ்விடங்களை விட்டுவெளியே முஸ்லீம் மக்கள்  விரும்பினால் அந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்யப்படவேண்டும். குறிப்பாக பாவற்கொடிச்சேனை, உறுகாமம் போன்றவற்றை குறிப்பிடலாம்.  அதேபோல் புல்லுமலை, தியாவட்டவான், புனானை போன்ற பகுதிகளில் இருந்து வெளியேறிய மக்களும் விரும்பினால் மீள்குடியேற வாய்ப்பளிக்கப்படவேண்டும். இங்கு இவர்கள் தங்கள் காணி உரிமையை உறுதிப்படுத்துவதற்கான விதிவிலக்கான நிர்வாக நடைமுறைகள் பின்பற்றப்படவேண்டியது அவசியம். இதற்கான வழிவகைகளை அரசியல் ஊடாகத்தேடாது “எங்கள் பங்கைத்தானே கேட்கிறோம்” என்பதால் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாது. முஸ்லீம் தலைமைகள் “பங்கு” என்று எதைக் கருதுகிறார்கள்? மட்டக்களப்பு மாவட்ட மொத்த நிலப்பரப்பில், சனத்தொகை விகிதாசாரத்திற்குரியதா? இல்லை பாவனைக்குரியதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலப்பரப்பில் ஒரு பங்கா?  அல்லது தமிழ்த்தரப்பு வன்முறையினால் இடம்பெயர்ந்தவர்கள் மீளக்குடியேறுவதா? அல்லது தவறான வழியில் தனிநபர் காணிகள் எடுக்கப்பட்டிருந்தால் அதுவா?  அல்லது நீங்கள் பங்கு என்று குறிப்பிடுவது மலையும், காடும், கடலும் கொண்ட நிலப்பரப்பில் ஒரு பங்கா?   இந்த கேள்விகளுக்கு ஒரு பதில் இருந்தால் அதில் இருந்து நகரமுடியும். அவ்வாறு இல்லாமல் நஸீர் அகமட்டின் வார்த்தைகளை மீள உச்சரிப்பதாலோ, அவரின் மொத்த சனத்தொகை அடிப்படையிலான காணிப்பங்கீட்டை கோருவதனாலோ இதற்கு தீர்வு காண முடியாது. கல்முனை தமிழ் பிரதேச தரம் உயர்வுக்கு ஹரிஷ் போடுகின்ற தடைகளை முஸ்லீம் காங்கிரஸ் அரசியல் பயங்கரவாதம் என்று சொல்லலாமா…..?    https://arangamnews.com/?p=10587  
    • திருக்கோவில் வைத்தியசாலைக்கு எதிராக ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது. March 28, 2024 (கனகராசா சரவணன்) திருக்கோவில் மரதன் ஓடிய 16 வயது மாணவன் உயிரிழந்தது தொடர்பாக  வைத்தியசாலைக்கு முன்னால் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வைத்தியசாலைக்கு தேசம் ஏற்படுத்திய சம்பவம் தொடர்பாக தலைமறைவாகி வந்த மேலும் 4 பேர் புதன்கிழமை (27) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். கடந்த திங்கட்கிழமை (11) ம் திகதி திருக்கோவில் மெதடிஸ்த மாகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டியை முன்னிட்டு இடம்பெற்ற மரதன் ஓட்டப் போட்டியில் பங்குபற்றிய திருக்கோவில் 3 ம் பிரிவு துரையப்பா வீதியைச் சேர்ந்த 16 வயதுடைய ஜெயக்குமார் விதுர்ஜன்; என்ற மாணவன் மயங்கிவீழந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச் சம்பவத்தையடுத்து திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் கவலையீனமாக குறித்த மாணவன் உயிரிழந்தார் என குற்றம்சாட்டு தெரிவித்து வைத்தியசாலைக்கு முன்னால் ஒன்று திரண்ட பொதுமக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட் நிலையில் வைத்தியசாலை மீது கல்வீச்சு தாக்குதல் நடாத்தியதில் கட்டிடத்தின் பல யன்னல் கண்ணாடிகள் உடைந்து தேசமடைந்ததுடன் வைத்தியசாலை பெயர்  பலகையை உடைத்து சேதப்படுத்தியதையடுத்தினர். இதனையடுத்து வைத்தியசாலைக்கு சேதம் விளைவித்த 35  பேரை இனங்கண்டு கொண்ட பொலிசார் பெண் ஒருவர் உட்பட 6 பேரை கடந்த 22ம் திகதி வெள்ளிக்கிழமை (22) கைது செய்து அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதையடுத்து அவர்களை எதிர்வரும் 4ம் திகதி வரையுமான 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் இதனை தொடர்ந்து தலைமறைவாகிவந்த 4 பேரை சம்பவதினமான இன்று கைது செய்துள்ளதையடுத்து இதவரை பெண் ஒருவர் உட்பட 11 பேரை கைது செய்துள்ளதாகவும் ஏனைய தலைமறைவாகியுள்ளவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.   https://www.supeedsam.com/198438/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.