Jump to content

திருமலையில் திருடப்படும் தமிழரின் நில ஆட்சி


Recommended Posts

-ஜி.முத்துக்குமார்-

திருகோணமலை மாவட்டம் தமிழர்களை இனரீதியாக பெரும்பான்மையாகக் கொண்டிருந்தும் நிருவாக பரவலாக்கல் அலகுகள் அவர்களை திட்டமிட்டு புறம்தள்ளியிருப்பதை 11 பிரதேச செயலாளர் பிரிவுகளாக மாவட்டம் பிரிக்கப்பட்டிருப்பதைக் கொண்டு அறிந்து கொள்ள முடியும்.

தற்போது திருகோணமலை மாவட்டத்தில் 11 பிரதேச செயலகங்களும் 11 பிரதேச சபைகளும் இரண்டு நகரசபைகளும் செயற்பட்டு வருகின்றன. இவற்றில் சிங்களவர்களுக்கு ஐந்து பிரதேச செயலகப் பிரிவுகளும் ஐந்து பிரதேச சபை பிரிவுகளும் தனிச் சிங்கள பெரும்பான்மை கொண்டதாக எல்லைகள் வகுக்கப்பட்டு தேவைக்கேற்ப நிலங்களும் பிரித்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது. உதாரணத்திற்கு மூதூர் பிரதேச செயலகப் பிரிவுக்குள் வரும் நீலாப்பளை என்ற கிராமம் கங்குவேலி தமிழ்கிராமத்திற்கு வடக்கே மல்லிகைத்தீவு கிராமத்திற்கு மேல் அமைந்துள்ளது. ஆனால், கங்குவேலிக் கிராமத்திற்கு தெற்காக வரைபடத்தில் காட்டி நீலாப்பனை கிராம உத்தியோகத்தர்களவை சேருவில பிரதேச செயலகத்திற்குள் கொண்டு வந்துள்ளார்கள். இது ஒரு எடுத்துக் காட்டு மட்டுமே.

இதேபோல், முஸ்லிம்களுக்காக கிண்ணியா, மூதூர், தம்பலகமம், குச்சவெளி நான்கு பிரதேச செயலகப் பிரிவுகளும், நான்கு பிரதேச சபையும், ஒரு நகரையும் நிருவகிக்கப்பட்டு வருகிறது. தமிழ் மக்களுக்கு இரண்டு பிரதேச சபையும், ஒரு நகரையும், இரண்டு பிரதேச செயலகங்கள் மட்டுமே நிருவாக அலகுகள் என்று கூறக்கூடிய வகையடுத்துள்ளது. தம்பலகமம், மூதூர், குச்சவெளி, திருகோணமலை பட்டினமம் சூழலும் ஆகிய பிரதேச செயலகங்களில் இருந்து தமிழ் மக்களுக்கு (சனத்தொகை, நிலப்பரப்பு, நிருவாகம் மக்களை இலகுவாகச் சென்றடைத்தல் என்ற வரையறைக்குள் வைத்து) ஐந்து புதிய பிரதேச செயலகங்களும் ஐந்து பிரதேச சபைகளும் புதிதாக உருவாக்கப்பட வேண்டும்.

ஆனால், காலம் காலமாக திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் மக்களின் உரிமைகளைப் பறிக்கும் நிலையே தொடர்ந்து சிங்கள அரசாங்கத்தாலும் உள்ளூர் அரசியல் தலைமைகளாலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாம் ஆரம்ப காலத்தை எடுத்துக் கொண்டால் மாவட்டத்தில் கொட்டியாபுரபற்று, தம்பலமப்பற்று, கட்டுக்குளம்பற்று, திருகோணமலை என நான்கு காரியதிகாரி பிரிவுகளே இயங்கி வந்தன.

கொட்டியாபுரபற்று காரியதிகாரி பிரிவின்கீழ் Bரம்பகாலத்தில் தோப்பூர், கிண்ணியா, சம்பூர், கூனித்தீவு, கட்டைபறிச்சான், பள்ளிக்குடியிருப்பு, ஈச்சிலம்பற்று என முஸ்லிம்களுக்கு மூன்று விதானைமார் பிரிவுகளும் தமிழர்களுக்கு ஐந்து விதானைமார் பிரிவுகளும் ஆரம்பத்தில் இருந்தே இயங்கின. 1962 ஆம் ஆண்டு விதானைமார் கிராமசேவையாளராக பதிவிமாற்றம் செய்யப்பட்டபோது சேருவல கிராம அதிகாரி பிரிவும் இணைத்துக் கொள்ளப்பட்டது. அதன் பிற்பாடு உதவி அரசாங்க அதிபர் பிரிவு என்ற நிருவாக முறைமை கொண்டு வரப்பட்டது.

கொட்டியாப்புரபற்று பிரிவுக்குள் இயங்கிய 8 பிரிவுகளில் கிண்ணியா ஈச்சிலம்பற்று தவிர்ந்த பிரிவுகள் மூதூர் உதவி அரசாங்க அதிபர் பிரிவின் கீழ் கொண்டு வரப்பட்டன. இதில் ஆரம்பத்தில் இருந்த 2 முஸ்லிம் பிரிவுகளையும் சனத்தொகைக்கு ஏற்ப 20 பிரிவுகளாகவும் தமிழரின் சனத்தொகைக்கு ஏற்ப 22 பிரிவுகளாகவும் ஜனசக்தி அவிபிருத்திக்காக பிரிவுகள் பிரித்து இலகுவாக்கப்பட்டன. முஸ்லிம் பிரிவுகளில் மூதூர் நகரை அண்டிய 13 பிரிவுகள் 20.2 ஹெக்ரயர் பரப்பளவில் 6005 குடும்பங்களில் 25142 அங்கத்தவர்களைக் கொண்டு இன்று வரையும் இயங்குகின்றன. மூதூர் நகரிலிருந்து 16 கி.மீ. தொலைவிலுள்ள தோப்பூர் பிரதேசமானது 7 கிராம அதிகாரி பிரிவுகளைக் கொணடு 39.9 ஹெக்ரயர் பரப்பளவில் 2726 குடும்பங்களில் 10165 அங்கத்தவரையும் கொண்டு இன்று வரையும் இயங்குகின்றன.

கொட்டியாப்புரபற்றில் இயங்கிய 4 தமிழ் கிராம சேவையாளர் பிரிவுகளையும் சனத்தொகை நிலப்பரப்பிற்கு ஏற்ப 22 ஆகப் பிரித்து செய்யப்பட்டு வருகிறது. மூதூர் கிழக்கில் 11 பிரிவுகளில் 53.9 ஹெக்ரயர் பரப்பளவில் 4058 குடும்பங்களில் 14996 அங்கத்தவரையும் கொண்டு மூதூர் தெற்கு 9 கிராம அதிகாரி பிரிவுகளைக் கொண்ட 55.6 ச.கி.மீ. பரப்பளவில் 2614 குடும்பங்களில் 14065 அங்கத்தவரையும் கொண்டு இன்று வரையும் இயங்குகிறது. இறால்குழி மூதூர் மத்தி ஆகிய தமிழ் கிராமசேவையாளர் பிரிவுகளுடன் சேர்க்க முடியாமையால் நிர்வாக இலகுகருதி மூதூரில் இயங்கும் 13 முஸ்லிம் பிரிவுகளுடன் இணைந்து செயற்பட வேண்டும். மேற்படி விபரங்களைக் கொண்டு ஆராயப்படும் விடயங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கொண்டுச் செல்ல அரசியல் மற்றும் சமூகத் தலைவர்கள் முன்வரவேண்டும்.

மாவட்டத்தில் திட்டமிடப்பட்ட குடியேற்றங்களின் பின்பு சேருவெல, கந்தளாய், பதவிசிறிபுர, கோமரங்கடவல, மொறவெவ என 5 தனிச் சிங்களப் பிரதேச செயலகப் பிரிவுகளும் கிண்ணியா, தம்பலகமம், மூதூர், குச்சவெளி என்பன பெரும்பான்மையாக முஸ்லிம்களைக் கொண்ட பிரதேச செயலகங்களும் திருகோணமலையும் அண்மையில் ஏற்படுத்தப்பட்ட வெருகல் உதவி அரசாங்க அதிபர் காரியாலயமும் தமிழர்களுக்கான பிரதேச செயலகங்களாக இன்றும் இயங்கிவருகின்றன. வெருகல் உதவி அரசாங்க அதிபர் காரியாலயம் 1990 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டாலும் அதைப் பிரதேச செயலகமாக தரமுயர்த்த அரசாங்கம் விரும்பவில்லை. சேருவல பிரதேச செயலக நிருவாகத்தின் கீழ் ஓர் உப அலுவலகமாகவே கடந்த 15 வருடங்கள் செயற்பட்டு வந்தது. 2005 க்குப் பிற்பாடு பிரதேச சபை தேர்தலில் சேருவெல பிரதேசத்தில் தமிழர்கள் ஆட்சியைப் பிடிப்பார்கள் என அஞ்சிய சிங்களத் தலைவர்களின் வற்புறுத்தலால் அரச உயர் மட்டங்கள் வெருகல் உதவி அரசாங்க அதிபர் பிரிவு சுயமாக இயங்கும் நிர்வாகத்தை நடத்த அனுமதித்துள்ளது.

இதேபோன்றே தமிழர்களின் சனத்தொகையை கணிசமாகக் கொண்டிருக்கும் தம்பலகமம். மூதூர் குச்சவெளி போன்ற பிரதேச செயலகங்களும் தமிழர்களுக்காக பிரித்து வழங்கப்பட வேண்டிய பிரதேச செயலகங்களாகும். மூதூர் பிரதேச செயலகம் 42 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை நிர்வகித்து வருகிறது. இவற்றில் 22 தமிழ் பிரிவுகளும் 20 முஸ்லிம் பிரிவுகளும் அடங்கும். 1983 க்குப் பின் அடிக்கடி ஏற்படும் வன்செயல் இடம்பெயர்வுகளால், தமிழர்களின் சனத்தொகையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்பது உண்மை. ஆனால், பிரதேச செயலகப் புள்ளிவிபரங்களின்படி ஏறத்தாழ 7000 முஸ்லிம்கள் அதிகமாக உள்ளதை ஏற்றுக் கொள்ளமுடியாதுள்ளது.

இந்த நிலையில், மூதூர் பிரதேச செயலகத்தை 3 பிரதேச செயலகங்களாகப் பிரித்து மூதூரை முஸ்லிம்களுக்காகவும் மூதூர் கிழக்கை தமிழர்களுக்கும் மூதூர் தெற்கை தமிழ், முஸ்லிம்களுக்காகவும் நிர்வாகத்தை இலகுபடுத்தித் தரும்படி எல்லைகள் மீள்நிர்ணய ஆணைக்குழுவிற்கு முன்னாள் மூதூர் பிரதேச சபை உறுப்பினரான மு.சௌந்தரராஜனால் 1996.06.07 இல் கோரிக்கை முன் வைக்கப்பட்டது. இக்கால கட்டத்தில் திருகோணமலை மாவட்டத்தில் இப்படியான கோரிக்கைகள் எதுவும் ஆணைக்குழுவிற்கு முன் வைக்கப்படவில்லை.

இக்கோரிக்கை மூலம் தமிழ் முஸ்லிம் மக்களின் உறவுகளில் யுத்த நடவடிக்கையினால் பாதிப்பு ஏற்படாமலும் அவரவர் பிரதேசங்களில் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் திட்டங்களை வகுத்து மூதூர் கிழக்கில் 11 தமிழ் கி.உ.பிரிவுகளை உள்ளடக்கிய பிரதேச செயலக அலகொன்றை சம்பூரில் நிறுவுவதென்றும் அவை நல்லூர், பாட்டாளிபுரம், பள்ளிக்குடிருப்பு, கட்டைபறிச்சான், வடக்கு கட்டைபறிச்சான் தெற்கு கடக்கரைச்சேனை, சேனையூர், சம்பூர், மேற்கு சம்பூர் கிழக்கு, கூனித்தீவு, நவரத்தினபுரம் ஆகிய கிராம சேவை உத்தியோகஸ்தர் பிரிவுகளை ஒரு பிரிவாகவும் உள்ளடக்கியிருக்கும். அடுத்து மூதூர் தெற்கில் தமிழ் முஸ்லிம் மக்கள் கலந்துவாழும் எல்லைக் கிராமமான பாலத்தடிச்சேனையில் பிரதேச செயலகம் அமைப்பதென்றும் பரிந்துரைக்கப்பட்டது.

இப்பிரிவில் 9 தமிழ்ப் பிரிவுகளும் அவை மல்லிகைத்தீவு, கிளிவெட்டி, பட்டித்திடல், பெருவெளி, இருதயபுரம், பாலத்தடிச்சேனை, மேன்காமம், கங்குவேலி, பாரதிபுரம் என்பனவையும் ஏழு முஸ்லிம் பிரிவுகளான தோப்பூர், பாலத்தோப்பூர், ஜின்னாநகர், ஆஸாத்நகர், அல்லைநகர் கிழக்கு அல்லைநகர் மேற்கு, இக்பால்நகர் என்பன அடங்கும் என்றும் மல்லிகைத் தீவு, கிளிவெட்டி, தோப்பூர் உபபிரதேச சபைகளுக்கு மத்திய இடமாக இருக்கும் பாலத்தடிச்சேனையே பொருத்தமான இடமாக இருக்கும் என்று எல்லைகள் மீள் நிர்ணயம் ஆணைக்குழுவிற்கு தமிழர்தரப்பால் பிரேரணை முன்வைக்கப்பட்டது.

மூதூர் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட 42 கிராமசேவையாளர் பிரிவுகள்

தமிழ்ப் பிரிவுகள்

பிரிவு, பிரிவுஇல., பரப்பளவு(ச.கி.மீ. )

218, மல்லிகைத்தீவு, 8.4

218,ஏ, கிளிவெட்டி, 4.8

218 பி, பட்டித்திடல், 3.4

218 சீ, கங்கவேலி, 9.4

218 டீ, பெருவெளி, 4.2

218 ஈ, இருதயபுரம், 3.0

218 எப், பாலத்தடிச்சேனை , 9.6

218 ஜி , பாரதிபுரம் , 8.6

218 ஐ , மேங்காமம், 4.2

219, பள்ளிக்குடியிருப்பு, 3.9

219 ஏ, நல்லூர் , 6.4

219 பி பாட்டாளிபுரம், 3.4

220, சம்பூர் கிழக்கு, 3.2

220 ஏ, சம்பூர் மேற்கு, 2.4

221, உனித்தபவு ,4.0

221 ஏ, தவரட்ணபுரம்,8.6

222 , கட்டைப்பறிச்சான் தெற்கு , 4.0

222 ஏ ,சேனையூர், 3.2

222 பி , கட்டைப்பறிச்சான் வடக்கு, 4.6

222 சி , கடற்கரைச்சேனை , 4.0

224 டி ,இறால்குழி ,2.0

223 எப்,மூதூர் மத்தி, 0.4

முஸ்லிம் பிரிவுகள் பிரிவு , பிரிவு இல., பரப்பளவு (ச.கி.மீ. )

216 , தோப்பூர், 4.0

216 ஏ, அல்லைநகர் கிழக்கு, 3.2

216 பி, எக்பாநகர் , 10.3

216 சி, பாலத்தோப்பூர், 9.6

216 டி, ஜின்னா நகர், 4.8

216 ஈ , அல்லைநகர் மேற்கு, 3.2

223 எச், ஆஷாத்நகர் , 4.8

223 ஏ, மூதூர் கிழக்கு , 2.4

223 பி, ஆனைச்சேனை, 0.4

223 சி, தக்வாநகர், 3.2

223 டி, நெய்தல்நகர், 1.6

223 ஈ, நடுத்தீவு, 0.8

223 ஜி, பாலநகர் ,0.8

224, மூதூர்மேற்கு , 1.2

224 ஏ, பெரியபாலம், 2.4

224 பி, ஆலீம்நகர், 4.0

224 சி, தாகர்நகர் , 2.8

224 ஈ , ஜின்னாநகர் , 0.8

224 எப் , சாபிநகர் , 4.0

244ஜி, ஜாயாநகர், 3.2

தொடரும்

http://www.thinakkural.com/news/2007/3/4/a...s_page22622.htm

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழின அழிப்பு நினைவுநாள் 2024-யேர்மனி 18.5.2024. Posted on May 20, 2024 by சமர்வீரன்  607 0 18.05.2024 சனிக்கிழமை அன்று முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 15ஆவது ஆண்டு நினைவுநாள் யேர்மனியின் டுசில்டோவ் (Düsseldorf)நகரில் பேரெழுச்சியோடு நினைவு கூரப்பட்டது. பிற்பகல் 14:30 மணிக்கு நகரமத்தியில் பெருந்திரளான மக்களோடு ஆரம்பமாகிய பேரணி, தமிழ் இளையோர் அமைப்பின் ஒருங்கிணைப்பிலும் தமிழாலயங்களது ஒப்பனையும் பாவனையும் எனும் வடிவத்தில் முள்ளிவாய்க்கால் காட்சிப்படுத்தல்களோடும் மத்திய மாநிலத்தில் அமைந்துள்ள மாநில நாடாளுமன்றத்தினை நோக்கிப் பேரெழுச்சியோடு நகரத் தொடங்கியது. பேரணி செல்லும் வழியெங்கும் கூடி நின்ற வேற்றின மக்களுக்கு இளையவர்கள் துண்டுப்பிரசுரங்களை வழங்க, பேரணியில் கலந்து கொண்ட மக்கள் வானதிர கொட்டொலிகள் எழுப்பியவாறும் சென்றனர். பிற்பகல் நான்கு மணிக்கு மாநில நாடாளுமன்றத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவிடத்தினை பேரணி வந்தடைந்தது. முள்ளிவாய்க்கால் நினைவுத்திடல் மக்கள் வெள்ளத்தில் நிறைந்திருக்க, நீண்ட காலமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கி வருகின்ற அருட்தந்தை அல்பெர்ட் கோலன் (Albert Koolen) அவர்கள் பொதுச்சுடரினை ஏற்றி வைத்து வணக்க நிகழ்வுகளை அரம்பித்து வைத்தார். தொடர்ந்து மாவீரர்கள் மற்றும் பொதுமக்களிற்கான நினைவிடங்களிற்கு முன்பாக ஈகைச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டது. ஈகைச்சுடரினை 14.04.2009 அன்று புதுக்குடியிருப்பு மாத்தளன் பகுதியில் சிறிலங்கா இராணுவத்துடனான மோதலின்போது வீரச்சாவடைந்த மாவீரர் வீரவேங்கை ராதையன் என்றழைக்கப்படும் செல்லத்தம்பி மயூரன் மற்றும் 21.01.2009 அன்று ஒட்டுசுட்டான் பகுதியில் சிறிலங்கா இராணுவத்துடனான மோதலின்போது வீரச்சாவடைந்த மாவீரர் கப்டன் ராதையன் என்றழைக்கப்படும் செல்லத்தம்பி செந்தூரன் ஆகியோரின் சகோதரரும் ,ஏழு சொந்தங்களை இனவழிப்பின் போது பறிகொடுத்தவருமான செல்வன் செல்லத்தம்பி நிறோஜன் அவர்கள் ஏற்றி வைத்தார். தொடர்ந்து மாவீரர் நினைவுப்படத்திற்கான மலர்மாலையினை 13.07.2008 அன்று மன்னார் பாலமோட்டையில் சிறிலங்கா இராணுவத்துடனான நேரடி மோதலின்போது வீரச்சாவடைந்த போர் உதவிப்படை வீரர் சுப்பிரமணியம் சத்தியபாலன் அவர்களின் மகன் செல்வன். சத்தியபாலன் மயூரன் அவர்களும் பொதுமக்கள் நினைவுப் படத்திற்கான மலர் மாலையினை முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் நேரடிச் சாட்சியமாக விளங்கிய திருமதி. தீபா இரவிச்சந்திரன் அவர்களும் அணிவித்தனர். இதனைத்தொடர்ந்து வருகை தந்திருந்த மக்கள் அனைவரும் சூடம் ஏற்றி, மலர் தூவி வணங்கினர். அகவணக்கத்தோடு டோட்முண்ட் (Dortmund) தமிழாலய மாணவன் ஸ்ரேபான் அயூடிக் வசந்தராஜ் அவர்களதும், லிவக்கூசன் (Leverkusen) தமிழாலய மாணவி சித்திரா வினோதன் அவர்களுதும் கவி வணக்கமும் மதரக்குரலோன் திரு. கண்ணன் அவர்களது இசை வணக்கமும் இடம்பெற்றது. நினைவு வணக்க நிகழ்வில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பற்றிய விளக்க உரை வழங்கப்பட்ட பின்பு முள்ளிவாய்க்கால் இறுதி நாள்களின் சுவடுகள் எனும் தலைப்பில் திருமதி. தீபா இரவிச்சந்திரன் அவர்கள் உரையாற்றினார். இன அழிப்பின் வலிகள் நிறைந்த பாடலிற்கு Frankfurt நகரின் இளைய மாணவர்கள் உணர்வோடு நடனம் வழங்கிய பின்னர் ஐரோபிபிய நாடாளுமன்ற உறுப்பினர் Frau ஒஸ்லேம் டிமீறல் அவர்களின் சார்பில் திரு. Hannis Dräger அவர்கள் உரையாற்றினார். தொடர்ந்து யேர்மன் குருதிஸ்தான் அமைப்பின் சார்பாக Frau மேடியா அவர்களும் உரையாற்றினார். யேர்மன் தமிழ் பெண்கள் அமைப்பினால் முள்ளிவாய்க்காலே திறவுகோல் எனும் நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது. நூல் அறிமுக உரையினை வழங்கிய திருமதி. தீபா இரவிச்சந்திரனிடமிருந்து நூலின் முதல் பிரதியினை யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் Dortmund நகரக் கோட்டப் பொறுப்பாளர் திரு. பாலகிருஸ்ணன் அவர்கள் பெற்றுக்கொண்டார். நூலின் இரண்டாவது பிரதியைப் பெற்றுக்கொண்ட திரு. Albert Koolen அவர்கள் நினைவுரையினையும் வழங்கினார். யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பினது வடிவமைப்பில் முள்ளிவாய்க்கால் இன அழிப்பினைச் சித்தரிக்கும் யேர்மன் மொழியிலான நாடகம் பார்த்தோர் மனங்களை நெகிழச் செய்தது. யேர்மன் கலை பண்பாட்டுக் கழக அசிரியர்களில் ஒருவரான செல்வன்.நிமலன் சத்தியகுமாரின் மாணவர்கள் “ஓலம் கேட்டதா அலை ஓசை கேட்டதா” எனும் பாடலிற்கு உணர்வுபொங்க நடனமாடினர். தமிழர் கலைபண்பாட்டுக்கழகம் அனைத்துலகத்தொடர்பகத்தினால் நடாத்தப்பட்ட தமிழின அழிப்பு தொடர்பான கலைத்திறன் போட்டிகளில் யேர்மன் நாட்டில் கலந்துகொண்ட மாணவர்களுக்கும், வெற்றியீட்டிய மாணவர்களுக்கும் மதிப்பளிப்பு வழங்கப்பட்டது.மதிப்பளிப்பினை யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் பொறுப்பாளர் திரு.சிறீ இரவீந்திரநாதன் அவர்கள் வழங்கினார். முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 15 ஆவது ஆண்டின் வணக்க நிகழ்வில் சிறப்புரையினை திரு. இரா. கதிரவன் (விபி)அவர்கள் வழங்கினார். தொடர்து தமிழ் இளையோர் அமைப்பினைச் சேர்ந்த அனைவரும் ஒருமித்து நின்றபடி உறுதிமொழியினைச் செல்வி.வானதி அவர்கள் வாசிக்க மக்கள் அனைவரும் உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர். நிறைவாக “நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்” எனும் பாடலோடும் “தமழரின் தாகம் தமிழீழத் தாயகம்” எனும் தாரக மந்திரத்தோடும் தமிழின அழிப்பு நினைவு நாள் 2024 வணக்க நிகழ்வுகள் எழுச்சியோடு நிறைவு பெற்றது.   தமிழின அழிப்பு நினைவுநாள் 2024-யேர்மனி 18.5.2024. – குறியீடு (kuriyeedu.com)
    • ஐ.நா. அறிக்கையை நிராகரிக்கும் இலங்கை – கடுமையான பதிலடி கொடுக்கவும் திட்டம் May 21, 2024   வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் பொறுப்புக் கூறலைக் வலியுறுத்தி ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் வெள்ளிக்கிழமை விடுத்த அறிக்கையை இலங்கை நிராகரித்துள்ளது. 2009 ஆம் ஆண்டு மே 18 ஆம் திகதி விடுதலைப் புலிகளுடனான ஆயுத மோதல் முடிவுக்கு வருவதற்கு முன்னதாக அறிக்கை வெளியிடப்பட்ட நேரம் குறித்தும் இலங்கை கேள்வி எழுப்பியுள்ளது. வெள்ளிக்கிழமை, ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் “இலங்கையில் பலவந்தமாக காணாமல் போனவர்களுக்கான பொறுப்புக்கூறல்” என்ற தலைப்பில் 45 பக்க அறிக்கையை வெளியிட்டது. “இலங்கையில் தொடரும் பொறுப்புக்கூறல் பற்றாக்குறை” பற்றிக் குறிப்பிட்டு, உள்நாட்டு மட்டத்தில் புதுப்பிக்கப்பட்ட நடவடிக்கைக்கு அழைப்பு விடுத்தது. குற்றவியல் நீதி மற்றும் பிற தொடர்புடைய செயல்முறைகள். இந்த விவகாரத்தில் சர்வதேச சமூகம் இலங்கையுடன் தொடர்பு கொள்ளவேண்டும் என்றும், உலகளாவிய அதிகாரவரம்பு அல்லது பிற அதிகார வரம்புகளைப் பயன்படுத்தி விசாரணைகள் மற்றும் வழக்குகளைத் தூண்டுதல் மற்றும் இலக்குத் தடைகள் தேவை என்றும் அறிக்கை கோருகிறது. அறிக்கை வெளிவந்த நேரம் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான குற்றச்சாட்டுகள் முழுவதையும் அரசியலாக்குவது போல் தெரிகிறது என்று, வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் கூறினார். மூத்த பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு எதிராக இதுபோன்ற “ஆதாரமற்ற, தெளிவற்ற மற்றும் பக்கச்சார்பான” அறிக்கையை வெளியிட்ட ஐ.நா.மனித உரிமைகள் உயர் ஆணையர் வோல்கர் டர்க் எந்த ஐ.நா உறுப்பு நாடுகளாலும் கட்டாயப்படுத்தப்படவில்லை என்று அவர் கூறினார். ஐ.நாவுக்கான (ஜெனீவா) தூதுவர் ஹிமாலி அருணதிலகா, உயர் ஸ்தானிகர் வோல்கர் டர்க்கிற்கு கடிதம் எழுதவுள்ளார், இந்த அறிக்கையை வெளியிடுவதற்கான அவரது ஒருதலைப்பட்ச முன்முயற்சி மற்றும் புறம்பான நலன்களுக்கு சேவை செய்வதற்கான ஆணை அல்லது அதிகாரம் இல்லாதபோது அதன் நோக்கம் குறித்து கேள்வி எழுப்பினார். ஐ.நா. உயர் ஸ்தானிகராலயத்தின் நெறிமுறை மீறல் குறித்து மற்ற உறுப்பு நாடுகளுடனும் அவர் பேச உள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், குறிப்பாக மூன்று தசாப்தங்களின் இறுதிக் கட்டங்களில் போர்க்களத்தில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதுடன் முடிவுக்கு வந்த நீண்ட ஆயுத மோதலில் இறந்தவர்களை நினைவு கூரும் வகையில் இலங்கையின் வடக்கிலும் மேற்குத் தலைநகரங்களிலும் புலம்பெயர் இலங்கையர்களின் ஒரு பிரிவினரால் நினைவு நிகழ்வுகள் நடாத்தப்பட்டு வரும் வேளையில் அதற்கு முந்தைய நாள் குறித்த நேரப் பிரச்சினையை பேச்சாளர் எழுப்பினார். ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்தில் தற்போதுமனித உரிமை மீறல்கள் பற்றிய தெளிவான விபரங்கள் வெளிருகையிலும், “உலகில் வேறு பகுதிகளில் மொத்த மனித உரிமை மீறல்கள் நடக்கும் நேரத்தில்” இலங்கையை குறிவைக்கும் ஐ.நா. முகமையின் முயற்சியே இது என்றும் பேச்சாளர் கூறினார்.   https://www.ilakku.org/ஐ-நா-அறிக்கையை-நிராகரிக்/  
    • தமிழ் இனப்படுகொலையை அங்கீகரிக்க கோரி பிரித்தானிய பிரதமருக்கு இருவேறு மனுக்கள்! adminMay 20, 2024 இலங்கையில் நடந்த ஈழத்தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலையின் உச்சமான மே 18 அவலத்தின் 15 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வுகளின் போது, பிரித்தானிய பிரதமரிடன் இரு அமைப்புக்களால் இருவேறு மகஜர்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. முதல் மனுவானது, இலங்கை அரசாங்கத்தால் தமிழ் மக்களுக்கு எதி்ராக நடாத்தப்பட்டது மற்றும் நடாத்தப்பட்டுக் கொண்டிருப்பது திட்டமிட்ட இனப்படுகொலையே என்பதை பிரித்தானிய அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, இனப்படுகொலையை தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான சர்வதேச மையம் (International Centre for Prevention and prosecution of Genocide (ICPPG)) என்ற அமைப்பினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதனை செயற்பாட்டாளர்களும் பாதிக்கப்பட்டவர்களுமான மனுமயூரன் கிருபானந்தா மனுநீதி, சசிகரன் செல்வசுந்தரம், கஜானன் சுந்தரலிங்கம், றோய் ஜக்சன் ஜேசுதாசன், துஷானி இராஜவரோதயம் மற்றும் சுபமகிஷா வரதராஜா ஆகியோர் சமர்ப்பித்தனர். இந்த மனுவில், கனடாவில் இடம்பெற்றதை போல, பிரித்தானிய பாராளுமன்றமும் சிறிலங்காவால் இழைக்கப்படுவது தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை என்பதை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும், அவ்வாறு ஏற்றுக்கொள்வதற்கு தீர்ப்பாயமொன்று அவசியமெனில், அதனை உள்ளக ரீதியிலோ அல்லது ஏனைய நாடுகளுடன் இணைந்தோ நிறுவவேண்டும் என்றும் இந்த கோரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டாவது மனுவானது, இலங்கையில் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் நாடுகடந்த உறவுகளின் சங்கத்தினரால் (Association of Exiled Relatives of the Enforced Disappearances in Sri Lanka – United Kingdom (AERED-UK)) கையளிக்கப்பட்டது. இம் மனுவிலும் இனப்படுகொலை என்பதை அங்கீகரிக்கும்படியும், இலங்கை இராணுவத்தளபதி ஜெனரல்சவேந்திர சில்வா, முன்னாள் இலங்கை ஐனாதிபதிகள் மகிந்த ராஐபக்‌ஷ மற்றும் கோத்தபாய ராஐபக்‌ஷ உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளை அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளை பின்பற்றி பிரித்தானிய அரசாங்கம் தடைவிதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் அனைத்து ஆதாரங்களும் சமர்பிக்கபட்ட பின்னரும் FDCO நடவடிக்கை எடுக்காமல் இருப்பது கணாமல் ஆக்கபட்டவர்களின் குடும்பங்கள் மற்றும் இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட தமிழ் சமூகத்திற்கு எமாற்றத்தை தருவதாகவும் அத்துடன் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சகத்துடன் அண்மையில் பாதிக்கபட்ட தமிழர்களிற்கு சந்திப்பு ஒன்றினை ஏற்படுத்திதருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இம்மனுவினை, இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பி்ரித்தானியா வாழ் உறவுகள் கையளித்தனர். குறிப்பாக, 18 மே 2009 வெள்ளைக்கொடியுடன் வண.பிதா.பிரான்சிஸ் தலைமையில் சரண்டைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களான தமிழீழ காவல்துறையின் இரண்டாவது பொறுப்பாளரான மாதவன் மாஸ்டர் (சிவபாலசுந்தரம் சிவசிதம்பரம்)அவர்களின் மகனான கோகுலன் சிவசிதம்பரம், தளபதி ஜெரி (விக்டர் விமலசிங்கம் அமரசிங்கம்) அவர்களின் மகனான புகழினியன் விக்டர் விமலசிங்கம், நீதிநிர்வாகதுறை பொறுப்பாளர் பரா (இளையதம்பி பரராஜசிங்கம்) அவர்களுடைய பேரனாகிய ஈஸ்வரன் ஜெனார்த்தனன், கேணல் கண்ணன் (ஞானச்செல்வம் உதயராஜா) அவர்களின் மகனான உதயராஜா பவசுதன், போராளியான யூக்சின் வினோஜினி அந்தோனிப்பிள்ளை அவர்களின் சகோதரியாகிய மேரி யூலியானா சசிகரன் மற்றும் அஹிதர் பாலசுப்பிரமணியம் அவர்களின் தம்பியான அனுஷன் பாலசுப்பிரமணியம் ஆகியோர் நேரடியாக பிரதமர் அலுவலகத்தில் கையளித்தனர் பிரித்தானியா புலம் பெயர் தமிழர்களின் இரண்டாவது வாழ்விடமாக திகழ்கின்ற போதிலும், இலங்கையில் தமிழின அழிப்பு இடம்பெற்றது என்ற உண்மையை ஏற்றுக்கொள்வதற்கான எந்தவொரு நடவடிக்கையும் பிரிட்டனால் முன்னெடுக்கப்படாமை கவலையளிக்கின்றது. அதை நிவர்த்தி செய்யும் வகையில், கடந்த 2021 இல் சீனாவின் உர்கர் மக்களுக்கு இனஅழிப்பு நடைபெற்றதை பிரித்தானியா முறையாக ஏற்றது போன்று, சிறிலங்காவின் தமிழின அழிப்பையும் பிரித்தானிய பாராளுமன்று ஏற்க வேண்டும்” என்றும் இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் 1,40,000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் காயமுற்றதுடன் பலர் இடம்பெயர்ந்த போது 58 ஆவது படைப்பிரிவிற்கு தலைமை தாங்கி இராணுவத்தை நேரடியாக வழி நடத்திய சவேந்திர சில்வா உள்ளிட்ட யுத்தக்குற்றவாளிகளை தடை செய்ய பிரித்தானிய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் இந்த மனுக்களில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.   https://globaltamilnews.net/2024/203205/  
    • இஸ்ரேல், ஹமாஸ் தலைவர்களிற்கு எதிராக பிடியாணை - வரவேற்கின்றது பிரான்ஸ் Published By: RAJEEBAN   21 MAY, 2024 | 10:20 AM   இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் ஹமாஸ் தலைவர்களிற்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கவேண்டும் என ஐசிசியின் வழக்குரைஞர் வேண்டுகோள் விடுத்துள்ளதை பிரான்ஸ் வரவேற்றுள்ளது. ஐசிசியின் வழக்குரைஞர் தனது வேண்டுகோளிற்கு ஆதரவாக சமர்ப்பிக்கும்  ஆதாரங்களை ஆராய்ந்த பின்னர் விசாரணைக்கு முந்தைய நீதிமன்றம் இஸ்ரேல் தொடர்பில் தனது முடிவை எடுக்கலாம் என பிரான்சின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அதன் சுதந்திரம் தண்டனையிலிருந்து விலக்களித்தல் ஆகியவற்றிற்கு எதிரான போராட்டம் ஆகியவற்றை பிரான்ஸ் ஆதரிக்கின்றது என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த பல மாதங்களாக சர்வதேச மனிதாபிமான சட்டங்களை இறுக்கமாக பின்பற்றவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி வந்துள்ளதாக தெரிவித்துள்ள பிரான்ஸ், காசா பள்ளத்தாக்கில் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதையும் மனிதாபிமான உதவிகள் மறுக்கப்படுவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வேண்டுகோள் தொடர்பில் மேற்குலகின் ஏனைய நாடுகளின் நிலைப்பாட்டிற்கும்  பிரான்ஸ் நிலைப்பாட்டிற்கும் இடையில் பெரும் வேறுபாடு காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/184108
    • வலுவான கொல்கத்தாவை சன்ரைசர்ஸ் அணியின் சூறாவளி பேட்டிங் சாய்க்குமா? பிளேஆஃபில் இன்று மோதல் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழ் 35 நிமிடங்களுக்கு முன்னர் ஐபிஎல் டி20 2024 சீசன் இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது. ஆமதாபாத்தில் இன்று இரவு நடக்கும் ப்ளே ஆஃப் போட்டியின் முதல் தகுதிச் சுற்று ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மோதுகிறது. எந்த ஆடுகளம்? பட மூலாதாரம்,GETTY IMAGES இரு அணிகளிலும் பவர் ஹிட்டர் பேட்டர்கள் அதிகம் இருப்பதால், இன்று நடக்கும் ஆட்டத்தில் ரன் மழைக்கு எந்தக் குறையும் இருக்காது, வாண வேடிக்கைக்கும் பஞ்சமிருக்காது. ஆனால் எந்த ஆடுகளத்தைப் பயன்படுத்தப் போகிறார்கள் என்பதில்தான் ஆட்டத்தின் ஸ்வாரஸ்யம் இருக்கிறது. ஏனென்றால் ஆமதாபாத்தில் உள்ள இரு விக்கெட்டுகளில் சிவப்பு மண் கொண்ட விக்கெட் பேட்டர்களுக்கு சாதகமானது. பந்து நன்றாக பவுன்ஸ் ஆகி, பேட்டர்களை நோக்கி நன்கு வரும். முதலில் பேட் செய்யும் அணி 200 ரன்களுக்கு மேல் அடிக்க முடியும். சேஸிங்கும் சுவாரசியமாக இருக்கக் கூடிய விக்கெட். ஆனால், கறுப்பு மண் கொண்ட விக்கெட்டில் 165 ரன்களைக் கடப்பதே பெரும்பாடாக இருக்கும். சுழற்பந்துவீச்சாளர்களுக்கு ஏற்ற மெதுவான விக்கெட்டாக இருக்கும். இதுவரை நேருக்கு நேர் பட மூலாதாரம்,SPORTZPICS இரு அணிகளும் ஐபிஎல் தொடரில் இதுவரை 26 முறை மோதியுள்ளன. இதில் கொல்கத்தா 17 முறை வெற்றி பெற்றுள்ளது, சன்ரைசர்ஸ் 9 முறை தான் வெற்றுள்ளது.இந்த சீசனில் இரு அணிகளும் ஒரு முறை மோதிக்கொண்ட ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணியை 4 ரன்களில் தோற்கடித்தது கொல்கத்தா அணி.   சம வலிமையில் அணிகள் பட மூலாதாரம்,SPORTZPICS பந்துவீச்சு, பேட்டிங்கில் இரு அணிகளும் சம வலிமை பெற்ற அணிகளாகத் திகழ்வதால் எந்த அணியையும் குறைத்து மதிப்பிட முடியாது. கொல்கத்தா அணியில் பில் சால்ட் இங்கிலாந்து புறப்பட்டதால் அவருக்குப் பதிலாக ஆப்கானிஸ்தான் விக்கெட் கீப்பர் குர்பாஸ் சேர்க்கப்பட்டுள்ளார். சுனில் நரைனின் மிரட்டல் ஃபார்ம், ஸ்ரேயாஸ், வெங்கடேஷ் அய்யர், ரிங்கு சிங், ரஸல், ராமன்தீப் சிங் என பேட்டிங்கில் வலிமையான படை இருக்கிறது. அதேபோல சன்ரைசர்ஸ் அணியில் டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி, மார்க்ரம், நிதிஷ்குமார் ரெட்டி, கிளாசன், அப்துல் சமது என தரமான பவர் ஹிட்டர்கள் உள்ளனர். கொல்கத்தாவில் குர்பாஸ் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ரஹ்மனுல்லா குர்பாஸ் இதில் கொல்கத்தா அணியில் முதல்முறையாக ரஹ்மனுல்லா குர்பாஸ் இன்று களமிறங்க உள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த மார்ச் மாதத்துக்குப்பின் இவர் எந்த போட்டியிலும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல சன்ரைசர்ஸ் அணிக்கு 3வது இடத்தில் ராகுல் திரிபாதி ஃபார்மில் இருப்பது அந்த அணிக்கு வலிமையாகும். இந்த சீசனில் இரு அணிகளும் விளையாடியபோது அந்த ஆட்டத்தில் டிராவிஸ் ஹெட் சன்ரைசர்ஸ் அணியில் சேர்க்கப்படவில்லை. இதனால் இந்த ஆட்டத்தில் ஹெட் களமிறங்கி நரைன், வருண் சக்ரவர்த்தி பந்துவீச்சை எதிர்கொள்வது சுவாரசியம் மிகுந்ததாக இருக்கும்.   கம்மின்ஸ் - ஸ்டார்க் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பாட் கம்மின்ஸ் சன்ரைசர்ஸ் அணியில் பாட் கம்மின்ஸ் எனும் உலகத் தரமான பந்துவீச்சாளர் இருப்பதைப் போல், கொல்கத்தா அணியில் மிட்ஷெல் ஸ்டார்க் இருப்பது போட்டியின் சுவாரசியத்தை மேலும் அதிகப்படுத்தும். இது தவிர கொல்கத்தா அணியில் ஹர்சித் ராணா, வைபவ் அரோரா, ரஸல் ஆகியோரும் வேகப்பந்துவீச்சுக்கு இருக்கிறார்கள். சன்ரைசர்ஸ் அணியில் நடராஜன், புவனேஷ்வர் குமார், நிதிஷ்குமார் ரெட்டி ஆகிய வேகப் பந்துவீச்சாளர்களும் இருப்பது போட்டியை சமநிலைப்படுத்தும். நரைன், வருண்- விஜயகாந்த் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சுனில் நரைன் சுழற்பந்துவீச்சிலும் இரு அணிகளும் சம வலிமையோடு களமிறங்குகின்றன. கொல்கத்தா அணியில் சுனில் நரைன், வருண் சக்ரவர்த்தி இருப்பதைப் போல், சன்ரைசர்ஸ் அணியில் இலங்கை வீரர் விஜயகாந்த், ஷாபாஸ் அகமது இருவரும் இருக்கிறார்கள். இதில் சன்ரைசர்ஸ் சுழற்பந்துவீச்சாளர்களை விட கொல்கத்தாவின் சுழற்பந்துவீச்சு மேம்பட்டதாக இருக்கிறது.   இம்பாக்ட் ப்ளேயர் முக்கிய பங்கு பட மூலாதாரம்,GETTY IMAGES இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா அணி இம்பாக்ட் ப்ளேயராக பேட்டிங்கை வலிமைப்படுத்த நிதிஷ் ராணாவையும், பந்துவீச்சில் இடதுகை சுழற்பந்துவீச்சாளர் அங்குல் ராய் அல்லது வைபவ் அரோரா இருவரில் ஒருவரை ஆடுகளத்தின் தன்மையைப் பொருத்து பயன்படுத்தலாம். அதேபோல சன்ரைசர்ஸ் அணி இம்பாக்ட் ப்ளேயராக தமிழக வீரர் நடராஜன், அல்லது சுழற்பந்துவீச்சாளர் விஜயகாந்த் இருவரில் ஒருவரை பயன்படுத்தக்கூடும். முக்கியத்துவமான ஆட்டம் என்பதால், எய்டன் மார்க்ரம் அணியில் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. மார்க்ரம் அணிக்குள் வரும் பட்சத்தில் ஷாபாஸ் அகமது அல்லது விஜயகாந்த் அமரவைக்கப்படலாம். மார்க்ரம் வரும்போது பேட்டிங் வரிசை வலுப்படும், சுழற்பந்துவீச்சுக்கும் உதவுவார். குறிப்பாக கொல்கத்தாவின் இடதுகை பேட்டர்களுக்கு எதிராக மார்க்ரம் ஆஃப் ஸ்பின் நன்கு எடுபடும். இது தவிர பந்துவீச்சில் இடதுகை பந்துவச்சாளர் தேவை எனும் பட்சத்தில் ஜெயதேவ் உனத்கட் வருவதற்கும் வாய்ப்புள்ளது. ரிங்கு சிங் மீது எதிர்பார்ப்பு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ரிங்கு சிங் கொல்கத்தா அணியில் ரிங்கு சிங்கிற்கு 2023 சீசனைப் போல் இல்லாமல், இந்த சீசன் பெரிதான வாய்ப்புகளை வழங்கிய சீசனாக அமையவில்லை. அதனால்தான் அவரால் இந்திய அணியிலும் டி20 உலகக் கோப்பைத் தொடரிலும் இடம் பெற முடியவில்லை. இந்த சீசனில் ரிங்கு சிங் 11 இன்னிங்ஸ்களில் 113 பந்துகளை மட்டுமே சந்தித்து, 168 ரன் சேர்த்துள்ளார். ஃபினிஷர், பவர் ஹிட்டராகக் கருதப்படும் ரிங்கு சிங் ஆட்டம் பெரிதாக எதிர்பார்க்கப்படுகிறது. நடராஜன் மிரட்டல் ஃபார்ம் பட மூலாதாரம்,GETTY IMAGES அதேபோல, சன்ரைசர்ஸ் அணியில் நடராஜன் பந்துவீச்சு பெரிதாக எதிர்பார்க்கப்படுகிறது. பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் பந்துவீச்சாளர்கள் மோசமாகப் பந்துவீசிய நிலையில் நடராஜன் பந்துவீச்சு மட்டுமே சிறப்பாக இருந்தது. யார்கர் மட்டும் நடராஜன் தற்போது வீசாமல், ஸ்லோ பவுன்ஸர், ஷார்ட் பால் போன்றவற்றை வீசும் வித்தைகளை கற்றுள்ளார். குறிப்பாக நடுப்பகுதி, டெத் ஓவர்களில் நடராஜன் பந்துவீச்சு இன்றைய ஆட்டத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.   ஆடுகளம் எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆமதாபாத் நரேந்திர மோதி மைதானம் ஆமதாபாத்தில் இரு விதமான ஆடுகளங்களில் எதை பயன்படுத்தப்போகிறார்கள் என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஆடுகளம் பயன்படுத்துவதைப் பொருத்துதான் இரு அணிகளிலும் வீரர்கள் தேர்வுகூட அமையலாம். சிவப்பு மண் கொண்ட தட்டையான ஆடுகளத்தை தேர்வு செய்தால், நிச்சயமாக ஸ்கோர் 200 ரன்களைக் கடக்கும். இந்த ஆடுகளத்தில் 200 ரன்கள் இருமுறை சேஸிங் செய்யப்பட்டு அதிகபட்சமாக 231 ரன்கள் அடிக்கப்பட்டுள்ளது. ஆட்டத்துக்கு சுவாரசியத்தைக் கூட்ட வேண்டுமென்றால் இந்த ஆடுகளத்தை பயன்படுத்தலாம். கறுப்பு மண் கொண்ட ஆடுகளம் மெதுவானது. பேட்டர்கள் பெரிதாக எந்த ஷாட்களையும் அடிக்க முடியாத கடுமையான ஆடுகளம். சுழற்பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செய்யும் இந்த ஆடுகளத்தில் ஆட்டம் நடந்தால் 165 ரன்களைக் கடப்பதே சிரமம். டாஸ் முக்கியப் பங்கு பட மூலாதாரம்,SPORTZPICS இன்றைய டாஸ் ஆட்டத்தில் முக்கியப் பங்கு வகிக்கும். சிவப்பு மண் கொண்ட ஆடுகளத்தில் இதுவரை 6 போட்டிகள் நடந்துள்ளன. அதில் 2 போட்டிகளில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த அணிகள் வென்றுள்ளன. பெரிய ஸ்கோரை அடித்தாலும் டிபெண்ட் செய்ய முடியும், இரவு நேரத்தில் பனிப்பொழிவும் பெரிதாக இருக்காது. சன்ரைசர்ஸ் அணியும் இதுவரை பெற்ற வெற்றிகளில் 2 மட்டுமே சேஸிங் மூலம் பெற்றுள்ளது. மற்ற 5 வெற்றிகளுமே முதலில் பேட் செய்து டிபெண்ட் செய்துதான் வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட் செய்து பெரிய ஸ்கோரை அடித்து அதை டிபெண்ட் செய்வதைத்தான் சன்ரைசர்ஸ் விரும்புகிறது, அதுதான் அந்த அணிக்கு வசதியாக இருக்கிறது. சன்ரைசர்ஸ் முதலில் பேட் செய்த போது ரன்ரேட், சேஸிங் செய்தபோது இருந்ததைவிட 1.07 சதவீதம் அதிகமாக இருக்கிறது. கொல்கத்தா அணி இந்த சீசனில் 3 முறை சேஸிங் செய்து வென்றுள்ளது. 6 முறை ஸ்கோரை டிபெண்ட் செய்துள்ளது. ஆனால், இன்றைய ஆட்டத்தில் ஒருவேளை கொல்கத்தா டாஸ் வென்றால், முதலில் பேட் செய்யும் வாய்ப்பை சன்ரைசர்ஸ் அணிக்கு நிச்சயம் வழங்காது. ஆதலால் இன்று டாஸ் யார் வெல்லப் போகிறார்கள் என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. சுனில் நரைன் - புவனேஷ்வர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சுனில் நரைன் இந்த சீசனில் கொல்கத்தா அணிக்கு யானை பலத்தை தரும் ஆல்ரவுண்டராக சுனில் நரைன் இருந்து வருகிறார். இந்த சீசனில் சதம் அடித்து 400 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். கொல்கத்தா அணி மாபெரும் வெற்றிகளைப் பெற்றதற்கு சுனில் நரைன், பில்சால்ட் கூட்டணி முக்கியக் காரணம். சுனில் நரைன் களத்தில் இருந்தாலே கொல்கத்தாவுக்கு பாதி வெற்றியை உறுதி செய்துவிடுகிறார். ஆதலால் இன்றைய ஆட்டத்தில் சுனில் நரைனை வீழ்த்த சன்ரைசர்ஸ் பெரிய திட்டத்தோடு வரும். குறிப்பாக, ஐபிஎல்லில் இதுவரை பவர்ப்ளேயில் புவனேஷ்வர் ஓவரில் 34 பந்துகளில் நரைன் 31 ரன்கள் மட்டுமே சேர்த்து ஒருமுறை விக்கெட்டை இழந்துள்ளார். ஆதலால், இந்த முறை நரைனுக்கு எதிராக புவனேஷ்வரின் ஸ்விங் பந்துவீச்சை ஆயுதமாக சன்ரைசர்ஸ் பயன்படுத்தும். அதேபோல ஸ்ரேயாஸ், வெங்கேடஷ் இருவருமே ஸ்விங் பந்துவீச்சை விளையாடக் கூடிய அளவுக்கு பெரிய பேட்டர்கள் இல்லை. ஆதலால் இருவருக்கு எதிராகவும் புவனேஷ்வர் பெரிய துருப்புச்சீட்டாக இருப்பார். ஸ்ரேயாஸ் அய்யரை மட்டும் 3 முறை புவனேஷ்வர் ஆட்டமிழக்கச் செய்துள்ளார். அதேசமயம் குர்பாஸுக்கு எதிராக 4 பந்துகள் வீசிய புவனேஷ் 2 முறை விக்கெட் எடுத்துள்ளார், ஒரு ரன்கூட வழங்கவில்லை. இது சன்ரைசர்ஸ் அணிக்கு கூடுதல் போனஸ். திட்டங்கள் தேவை பட மூலாதாரம்,SPORTZPICS படக்குறிப்பு,சன்ரைசர்ஸ் கேப்டன் பாட் கம்மின்ஸ் மற்றும் கொல்கத்தா அணி கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் சன்ரைசர்ஸ் அணியின் டிராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா, கிளாசன் மூவரும் கொல்கத்தாவுக்கு பெரிய தலைவலியை ஏற்படுத்தலாம். பஞ்சாப் அணிக்கு எதிராக ஹெட் டக்அவுட் ஆன பின்பும், அபிஷேக் தனது அதிரடியை நிறுத்தாமல் வெளுத்து கட்டினார். அதிலும் சுழற்பந்துவீச்சுக்கு எதிராக ஈவு இரக்கமின்றி அபிஷேக் விளையாடக் கூடியவர். அதலால், நரைன், வருணுக்கு எதிராக அபிஷேக்கின் பேட்டிங் பெரிதாக எதிர்பார்க்கப்படுகிறது. ஹெட் சுழற்பந்துவீச்சுக்கு எதிராக பலவீனமானவர். ஆனால் வேகப்பந்துவீச்சை வெளுத்துவிடுவார் என்பதால், இருவருக்கும் பல உத்திகளை வகுக்கவேண்டிய கட்டாயத்தில் கொல்கத்தா இருக்கிறது. சன்ரைசர்ஸ் அணிக்கு நடுவரிசையில் தூணாக செயல்படுபவர் ஹென்ரிச் கிளாசன். கொல்கத்தா அணி கிளாசனுக்கு எதிராக யாரைப் பயன்படுத்தப் போகிறார்கள் என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. சுழற்பந்துவீச்சு, இடதுகை வேகப்பந்துவீச்சை கிளாசன் புரட்டி எடுப்பார் என்பதால், ரஸல் பந்துவீச்சை தான் கொல்கத்தா கையில் எடுக்கக்கூடும். ஏனென்றால் பந்துவீச்சில் வேரியேஷன்களை வெளிப்படுத்தக் கூடியவராக ரஸல் இருக்கிறார்.   ரஸலை வீழ்த்தும் ஆயுதம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆந்த்ரே ரஸல் கொல்கத்தா அணிக்கு நடுவரிசையில் பலமாகவும், பந்துவீச்சில் ஆபத்பாந்தவனாக இருப்பவர் ஆந்த்ரே ரஸல். தேவைப்படும் நேரத்தில் பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் விஸ்வரூபமெடுத்து ரஸல் விளையாடக்கூடியவர். கொல்கத்தாவுக்கு ஃபினிஷ் செய்யும் நேரத்தில் ரஸலின் ஸ்ட்ரைக் ரேட் 185 ஆக இருக்கிறது. அனைத்து பந்துவீச்சுக்கு எதிராக துவம்சம் செய்யும் ஆட்டத்தை வெளிப்படுத்தும் ரஸல், லெக் ஸ்பின்னுக்கு எதிராக பெரிதாக இதுவரை ஸ்கோர் செய்யவில்லை. 28 பந்துகளில் 41 ரன்கள் சேர்த்து ஒருமுறை லெக்ஸ்பின்னில் ரஸல் ஆட்டமிழந்துள்ளார். ரஸல் களத்துக்கு வருவதைப் பொருத்து சன்ரைசர்ஸ் அணி லெக் ஸ்பின்னர் விஜயகாந்தை கொண்டுவரும். இந்த ஆட்டத்தில் எந்த அணி வெல்லும், யார் ஆதிக்கம் செய்வார்கள் என்று கணிக்க முடியாத அளவுக்கு இரு அணிகளும் சம வலிமை படைத்தவர்களாக இருப்பதுதான் போட்டியின் உச்சகட்ட சுவாரசியம். https://www.bbc.com/tamil/articles/c9wwpxpkz0ko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.