Jump to content

வடக்கில் இராணுவத்தின் புதுவருட நிகழ்வுவும் இராணுவ மயமாக்கலின் அரசியலும்


Recommended Posts

Miltry%20Noth1_CI.jpg

 

இலங்கையின் வடக்கில் இராணுவ மயமாக்கல் தொடர்பில் வடக்கு மாகாண சபை முதல் சர்வதேச நாடுகள் வரை குற்றம் சுமத்தி வருகின்றன. குறிப்பாக இராணுவத்தினரின் இந்த நடவடிக்கை மிகவும் சாதாரணமானதல்ல என்றும் பல்வேறு திட்டங்களை பின்புலமாக கொண்டது என்றும் பல்வேறுபட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு வடக்கில் உள்ள குளோபல் செய்தியாளர் ஒருவர். குறிப்பிடுகிறார் 
 
வடக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைநகரம் என வருணிக்கப்பட்ட கிளிநொச்சியில் புதுவருட தினத்தை முன்னிட்டு இராணுவத்தினர் சில நிகழ்வுகளை நடத்தியுள்ளனர். வடக்கில் இராணுவத்திற்கும் மக்களுக்கும் நல்ல உறவு காணப்படுகிறது என்பதை காட்டுவதற்கே இந்த நிகழ்வு என்கிறார் வடக்கில் உள்ள அரசியல் அவதானி ஒருவர். இதை இராணுவத்தின் அரசியல் நிகழ்வு என்றும் அவர் அடையாளப்படுத்துகிறார். 
 
இன்றைய நிகழ்வுக்காக இராணுவத்தினர் கடும் முயற்சியை மேற்கொண்டதாக இராணு சிப்பாய் ஒருவரின் கருத்தை அடிப்படையாகக் கொண்டு GTN செய்தியாளர் குறிப்பிடுகிறார்  ஒருவர். மிகவும் வறிய கிராமங்களுக்குச் சென்று சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை திரட்டி அவர்களை கிளிநொச்சி நகரத்திற்கு இராணுவத்தினர் கொண்டு வந்துள்ளனர். 
 
இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோதும் தொடர்ந்தும் இராணுவ வெளியேற்றம் அல்லது குறைப்பு ஏற்படவில்லை. ஆட்சி மாற்றத்திற்கு வாக்களித்த தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு இராணுவ வெளியேற்றம் என்பதை புதிய அரசும் அறியும். ஆனாலும் வடக்கில் இராணுவத்தினர் வழமை போலவே தமது நடவடிக்கைகளை தொடர்கின்றமை குறித்து குளோபல் தமிழ்ச் செய்தியாளர்களின் பல்வேறு செயதி அறிக்கையிடல்கள் கூறியுள்ளன. 
 
இலங்கை இராணுவம் போர்க்குற்றங்களைப் புரிந்தது அதற்கு எதிராக போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும் என்ற நிலையில் வடக்கு மாகாண சபை இனப்படுகொலை தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி சர்வதேச அளவில் அது குறித்து பேசப்படுகின்ற நிலையில்.அவைகளிலிருந்து தப்பிக்கொள்ள அப்பாவி தமிழ் சிறுவர்களையும் இளைஞர்களையும் இராணுவம் இவ்வாறு ஈடுபடுத்துகின்றனர்.
 
ஆக இராணுவத்தினர் இவ்வாறான ஒரு நடவடிக்கையின் மூலம் ஓர் அரசியல், இராணுவத் தோற்றப்பாட்டை ஏற்படுத்த முயல்வதாக கிளிநொச்சியை சேர்ந்த பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் ஜீரிஎன்னிடம் சுட்டிக்காட்டுகிறார். இதன் மூலம் இராணுவத்திற்கு எதிரான இங்குள்ள நிலைப்பாட்டை - அதாவது யதார்த்ததை மறைப்பதுவே அவர்களின் திட்டம் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
 
இராணுவத்தினரின் போர்க்கால நடவடிக்கைகளும் போருக்குப் பிந்தைய நடவடிக்கைகளும் மக்கள் மத்தியில் ஏற்படுத்திய மன வடுக்கள் ஆற்றப்படுவதற்கு இராணுவ வெளியேற்றம் அவசியம் என பலதரப்பட்டவர்களும் வலியுறுத்தும் நிலையில் இராணுவ வெளியேற்றத்தை தடுப்பதற்காகவே இவ்வாறான நிகழ்வுகள் நடத்தப்படுவதாக கிளிநொச்சி மத்திய பாடசாலை ஆசிரியர் ஒருவர் குறிப்பிடுகிறார்.
 
இதேவேளை இராணுவத்தை வெளியேற்றுகின்ற விடயம் தொடர்பில் வடக்கு அரசின் கோரிக்கைக்கு மத்திய அரசு பதில் அளிக்கவில்லை. இந்த விடயங்கள் தொடர்பில் வட மாகாண முதல்வருக்கும் பிரதமர் ரணிலுக்கும் இடையில் நிலவுகின்ற முரண்பாடு என்பது இராணுவத்தை வெளியேற்றக் கோரும் - வெளியேற்ற மறுக்கும் நிலைப்பாடுகளாகும்.
 
இந்த நிலையில் சிவில் வாழ்வில் தொடர்ந்தும் இராணுவத்தின் தலையீடு காணப்படும் என்ற வெளிப்பாட்டை இன்றைய நிகழ்வு உணர்த்துகிறா? அல்லது இராணுவத்தினர் தமது இராணுவ அரசியல் செயற்பாடுகளை வடக்கு களத்தில் தொடர்ந்தும் இவ்வாறு மேற்கொள்ளப்போகின்றனரா? என்ற கேள்வியும் எழுகிறது. 
 
பாடசாலைகளில் இடம்பெறும் நிகழ்வுகள், தனியார் கல்வி நடவடிக்கைகள், ஆயல வழிபாடுகள், வீட்டு நிகழ்வுகள் என அனைத்திலும் இராணுவத்தினர் தலையிட்டு வருகின்ற சிவில் வாழ்வை பாதிக்கும் இராணுவ மயமாக்கல் செயற்பாட்டின் தொடர்ச்சியாகவே இந்த நிகழ்வு நடப்பதாக தெரிவிக்கும் யாழ் பத்திரிகையாளர் ஒருவர் இதுவும் ஓர் இராணுவ மயமாக்கலை அப்பட்டதாக வெளிப்படுத்தும் உதாரணம் என்றும் கூறுகிறார்.
 
 
66&663_NYF_2.jpg
 
66&663_NYF_6.jpg
 
66&663_NYF_7.jpg
 
66&663_NYF_3.jpg
 
 

7SLLI_NYF_3.jpg

 

7SLLI_NYF_4.jpg

7SLLI_NYF_5.jpg

 

7SLLI_NYF_6.jpg

 


54&61_NYF_2.jpg

 

54&61_NYF_1.jpg

 

54&61_NYF_7.jpg

 

http://www.army.lk/detailed.php?NewsId=9560

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சீமான் தமிழ் தேசியத்தைப் பேசுகிறார், உண்மை - ஈழத்தில் கஜேந்திரகுமார் அணி தமிழ் தேசியத்தைப் பேசுவது போல பேசுகிறார்😎. இதனால் மட்டும் தமிழ் தேசியம் வாழும் என்றால், நீங்கள் குறிப்பிடும் தமிழ் தேசியம் "யூ ரியூப்" வியாபார தமிழ் தேசியம் என எடுத்துக் கொள்கிறேன்! இந்த "திராவிடர்-தமிழர் ஆணி" ஈழவருக்கு தேவையில்லாத ஆணி என்கிறேன். இதனால், தமிழ் நாட்டில் ஆட்சியில் இருக்கப் போகும் கட்சிகளோடும் (குறைந்த பட்சம் புலத்தில் வாழும்) ஈழவர் பகைத்துக் கொள்ள வேண்டி வரும். இன்னொரு பக்கம், சீமான் தம்பிகள் முன்மாதிரியில் போலிச் செய்திகள், வைரல் வீடியோக்கள், யாழில் நடப்பது போன்ற எங்களிடையேயான அர்த்தமில்லாத சண்டைகளும் வளரும். இதெல்லாம் "ஈழவரான எங்களுக்கு ரொம்ப நல்லது!" என்று நீங்கள் சொன்னால் நான் நம்புகிறேன்!  
    • உங்களுக்கு இந்தியா பற்றி நான் தந்திருப்பது தரவுகளை. நீங்கள் மேலே அலம்பியிருப்பது இந்தியா தொடர்பான உங்கள் ஆத்திரக் கருத்துக்களை. இந்தியா மீது அபிமானம் எனக்கும் இல்லை - ஆனால், தரவுகளை நோக்கித் தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் பற்றிய கருத்துக்கள் வர வேண்டும், அந்த நாட்டை விரும்புகிறோமா வெறுக்கிறோமா என்பதை ஒட்டியல்ல. பொருளாதார வளர்ச்சி ஊழலால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது இந்தியாவில். ஆனால், மனித வளம் அதையும் மீறி இந்தியாவை முன்னேற்றி வருகிறது. இந்தியா போன்ற கலாச்சாரப் பின்னணி கொண்ட, ஆனால் மனித வளம் மிகக் குறைந்த பாகிஸ்தானிலோ. வங்க தேசத்திலோ இந்தியாவில் இருப்பது போன்ற வளர்ச்சி இல்லை - இது உங்களுக்குக் கசக்கலாம், ஆனால் யதார்த்தம் அது தான்.
    • அருமையான கண்ணோட்டம் அழகான சிந்தனைகள் ......நல்லாயிருக்கு ......!  👍 இந்தக் கவிதையை நீங்கள் யாழ் அகவை 26 ல் பதியலாமே .......இப்பவும் நிர்வாகத்தில் சொன்னால் மாற்றிவிடுவார்கள்.........நாளையுடன் திகதி முடியுது என்று நினைக்கிறேன்.........!  
    • சீமானை எதிர்ப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் சீமானை ஆதரிப்பவர்கள்  கண்மூடித்தனமாக உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு மயங்கி சீமானை ஆதரிப்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது.நாங்கள் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் தமிழ்த்தேசியத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் .அதை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஆரியத்தை விட திராவிடமே தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியத்தை அழிப்பதில் முன்நிற்கிறார்கள்.ஆரியம் வட இந்தியாவில் நிலை கொண்டிருப்பதால் அதன் ஆபத்து பெரிய அளவில் இருக்காது.ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்ப்பற்றாளர்களாக காட்டிக்கொண்டு தமிழ்த்தேசியத்தை இல்லாதொழிப்பதற்கு திராவிடம் அயராது வேலை செய்கிறது.சீமானின் எழுச்சி அவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.முன்பும் ஆதித்தனார் சிலம்புச்செல்வர் கிபெவிசுவநாதம் பழ நெடுமாறன் போன்றோர் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் அவர்கள் இயக்கமாக இயங்கினார்களே ஒழிய தேர்தல் அரசியலில் கவனத்தை பெரிய அளவில் குவிக்க வில்லை.திராவிடத்திற்கும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை.அவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலே தமிழ்த்தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.
    • நல்ல கருத்து எனது  கேள்விக்கு உங்களிடமிருந்து  தான்  சரியான  பதில் வந்திருக்கிறது   ஆனால் நீங்கள்  குறிப்பிடும்  (ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள்) இவர்கள்  எத்தனை  வீதம்?? இவர்கள் 50 க்கு  அதிகமான  வீதம்இருந்தால் மகிழ்ச்சியே...  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.