Jump to content

புதிய அரசில் டக்ளஸ் இணைவதை கூட்டமைப்பு அனுமதிக்காது! சுமந்திரன்


Recommended Posts

புதிதாகப் பொறுப் பேற்றுக் கொண்ட அரசாங்கத்தின் அமைச்சரவையில் டக்ளஸ் தேவானந்தா இடம் பெறுவதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அனுமதிக்காது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்  கருத்துத் தெரிவித்துள்ளார்.

புதிய அரசாங்கத்துடன் இணைந்து செயலாற்றத் தயார் என நேற்று வியாழக்கிழமை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்த கருத்துக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

http://www.pathivu.com/news/36811/57//d,article_full.aspx

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமத்திரன் என்ன பெரிய அப்பாடக்கரா? எங்கன்ட ஈழத்து எம்.ஜி ஆரை தடுத்து நிறுத்த...

Link to comment
Share on other sites

சுமந்திரனை எதிர்ப்பதாக நினைத்து டக்கிளசுக்கு ஆதரளிக்கபோதுகள் எங்கள் கள உறவுகள். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுமந்திரனுக்கும் டக்கிளசுக்கும் என்ன வேறு பாடு என்று மண்டைய போட்டு குழப்ப வேண்டிக்கிடக்குது....

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன்  வந்து,  பதில் சொல்ல வேண்டும்:
இல்லையேல்  கூட்டமைப்பு சிதறும்.
அதனைத்தானே.... சம்பந்தரும், இந்தியாவும் மகிந்தவும் , மைத்திரியும் விரும்புகிறார்கள்.

பிச்சை, எடுக்கும், அரசியல்...... எமக்கு வேண்டாம்.
 

நீ,,, தருகிறாயா..., அல்லது.... நானாக எடுக்கவா?
என்ற.... கோணத்தில், எமது அரசியல் நகர்வுகள் இருக்க வேண்டும்
.

 

பிற்குறிப்பு: இனியும் .... கருத்துக் களத்தில்,  புலி வாந்தி பயன் தராது.
நாம்.... எடுத்து வைக்க அடிகள் பல உள்ளன.
எமது, எதிர்கால சந்ததியின்..... நன்மை கருதி.... இருகரம் கோர்த்து நடப்போம்.

Link to comment
Share on other sites

சம்பந்தன் வந்து, பதில் சொல்ல வேண்டும்:

இல்லையேல் கூட்டமைப்பு சிதறும்.

அதனைத்தானே.... சம்பந்தரும், இந்தியாவும் மகிந்தவும் , மைத்திரியும் விரும்புகிறார்கள்.

பிச்சை, எடுக்கும், அரசியல்...... எமக்கு வேண்டாம்.

நீ,,, தருகிறாயா..., அல்லது.... நானாக எடுக்கவா?

என்ற.... கோணத்தில், எமது அரசியல் நகர்வுகள் இருக்க வேண்டும்.

பிற்குறிப்பு: இனியும் .... கருத்துக் களத்தில், புலி வாந்தி பயன் தராது.

நாம்.... எடுத்து வைக்க அடிகள் பல உள்ளன.

எமது, எதிர்கால சந்ததியின்..... நன்மை கருதி.... இருகரம் கோர்த்து நடப்போம்.

ஒண்டுமே புரியலையே? என்னத்தை சொல்ல வாறிங்க?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனை எதிர்ப்பதாக நினைத்து டக்கிளசுக்கு ஆதரளிக்கபோதுகள் எங்கள் கள உறவுகள். 

டக்களசை ஒருவரும் ஆதரிக்க போவதில்லை.
 
காலம் கடந்துவிட்டது .....
கூட்டமைப்பு தமிழரை கழுதைகள் ஆக்கி விட்டது. 
 
மைத்திரி கூட்டமைப்பின் அனுமதியை ஏன் பெற வேண்டும்? 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது சரிதானே டக்ளஸ் இணைந்தால் சுமந்திரன் நன்கு பதவி கிடைக்காது என்று அவசரப்படுகிறார்.டக்ளஸ் இணைவதை யாராலும் தடுக்க முடியாது.பிரேமதாசா.சந்திரிகா,மகிந்த ஆகிய 3 ஆட்சியிலும் அமைச்சராக இருந்தவர் டக்ளஸ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சபாஸ் சரியான போட்டி.

 

சம்பந்தனின் வேட்டியில தொத்திக் கொண்டு.. பின் கதவால வந்த சுமந்திரனே இப்படி சொல்லும் போது.. புருசனை டக்கிளசின் குண்டுக்கு பறிகொடுத்து எம் பி யா உள்ள விஜயகலா சும்மா இருக்குமா..??! :):icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமத்திரனை விட டக்லசுக்கு தான் யாழில் கூட செல்வாக்கு. :lol:

Link to comment
Share on other sites

சந்திரிகாவின் அன்புக்கும் பாசத்திற்கும் உரியவர் டக்ளசு. சந்திகாவின் ஆதரவினால் அன்று உயிர் பிழைத்தவர் டக்ளசு. :D   

 

ரணிலின் அன்புக்கும் பாசத்திற்கும் உரியவர் கருணா. ரணிலின் ஆதரவினால் அன்று தப்பிப் பிழைத்தவர் கருணா. :lol:   

 

தற்போது மைத்திரியின் அங்கங்களாக இருப்பவர்களில் சந்திகாவும் ரணிலும் முதன்மையானவர்கள். :o  

 

இதற்குமேலும் சொல்வதற்கு என்ன இருக்கிறது. :(   

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனை எதிர்ப்பதாக நினைத்து டக்கிளசுக்கு ஆதரளிக்கபோதுகள் எங்கள் கள உறவுகள். 

 

 நாலு வருசத்துக்கு ஒருக்கால் யு என் பிக்கும் சுதந்திரகட்சிக்கும்  மாத்தி மாத்தி வோட்டு  போட்டு சிங்களவனிட்டையே அடிவாங்கி திளைப்பவர்கள் ஈழத்தமிழர்கள்.... :(

 

எப்பிடியும் வாறமாசம் மைத்திரியை திட்டத்தொடங்கிடுவம் எண்டு நினைக்கிறன்  :D  :icon_idea:

Link to comment
Share on other sites

அது சரிதானே டக்ளஸ் இணைந்தால் சுமந்திரன் நன்கு பதவி கிடைக்காது என்று அவசரப்படுகிறார்.டக்ளஸ் இணைவதை யாராலும் தடுக்க முடியாது.பிரேமதாசா.சந்திரிகா,மகிந்த ஆகிய 3 ஆட்சியிலும் அமைச்சராக இருந்தவர் டக்ளஸ்

 

இப்பிடித்தான் நாங்க இருப்பம். பதவி வேண்டுமா வேண்டாமா என்பதுக்கு அப்பால் எதிர்க்கிரதிலேயே இருப்பம்.  டக்கிளஸ் புதிய அரசில் இணைவதை தடுப்பதுக்கு கூடமைப்புக்கும் சுமந்திரனுக்கும் உரிமை மாத்திரம் இல்லை கடமையும் இருக்கு.

 

அனாலும் நாங்கள் அதையே நக்கலடிப்பம்.

 

நல்ல விளங்கும் எங்கள் இனம்.

Link to comment
Share on other sites

புதிதாக 60 அமைச்சர்கள் பதவியேற்பு புதிதாக தெரிவுசெய்யப்படவுள்ள அமைச்சர்கள் மற்றும் அமைச்சுக்களின் ஒதுக்கீடுகளில் டக்ளஸ் தேவானந்தாவிற்கு இடமில்லை என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.   புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இணைந்து அமைச்சர்கள் மற்றும் அமைச்சு ஒதுக்கீடுகளை மேற்கொள்ளும் நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.   இந்த நடவடிக்கையிலேயே ஈ.பி.டி.பியினருக்கு அமைச்சரவையில் எந்தவித ஒதுக்கீடும் செய்யப்படவில்லை என அறியமுடிகின்றது.    மேலும், அமைச்சரவை அந்தஸ்துள்ள 25 அமைச்சர்கள், 10 அமைச்சரவை அந்தஸ்து இல்லாத அமைச்சர்கள் , 25 பிரதி அமைச்சர்கள் என 60 பேர் நாளை அல்லது நாளை மறுதினம் பதவியேற்கவுள்ளனர் என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.   குறித்த அமைச்சுக்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கும் முக்கிய அமைச்சு வழங்கப்படவுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

 

  - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=563553798310654117#sthash.ZEKM0WN0.dpuf

Link to comment
Share on other sites

டக்கிக்கு மண் அள்ளக் கடகம் கொடுக்காவிட்டாலும்.... கறண்டியாவது கொடுப்பார்கள். சிங்களமா...! கொக்கா...! இருந்து பாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டக்கிக்கு மண் அள்ளக் கடகம் கொடுக்காவிட்டாலும்.... கறண்டியாவது கொடுப்பார்கள். சிங்களமா...! கொக்கா...! இருந்து பாருங்கள்.

 

"புலம் பெயர்ந்த தமிழ்மக்களுடன் நல்லுறவு அமைச்சர்" புதிய அமைச்சு உருவாக்கி டக்கியிடம் கொடுக்கப்போகிறார்கள்

Link to comment
Share on other sites

டக்கிலஸ் மாமாவுக்கு கொடுத்திருந்த அமைச்சு பதவியை சுமந்திரனுக்கு கொடுப்பதாக அறிய முடிகிறது.

 

நல்லிணக்கம் மற்றும் மிள்கடுமான அமைச்சு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.