Jump to content

பதவியேற்ற உடனேயே தமிழர்களை மறந்து போன புதிய ஜனாதிபதி! - பிரதமர் ரணிலிடம் மனோ கணேசன் காட்டம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
mano-ganesan-350-seithy-news.jpg

தேர்தல் காலங்களில் தமிழர்களின் ஆதரவைக் கோரிப் பெறுவது. தேர்தல் முடிந்ததும் தமிழர்களை உதாசீனம் செய்து உதறித் தள்ளுவது. - இதுதான் தென்னிலங்கை அரசுகளின் காலாகால பரவணிப் பழக்கம். அதை இன்று ஜனாதிபதித் தேர்தல் முடிந்தவுடனேயே செயலில் காட்டத் தொடங்கி விட்டீர்களே! - என்று புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீது சீறி வீழ்ந்தார் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன்.

   

இந்தச் சம்பவம் இன்றிரவு(09) இடம்பெற்றது. இன்று மாலை புதிய ஜனாதிபதி, புதிய பிரதமர் ஆகியோர் பதவியேற்கும் நிகழ்வு கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்றது. அந்த நிகழ்வை ஒட்டி நேற்றிரவு இடம்பெற்ற உரையாடல் ஒன்றின் போதே புதிய பிரதமர் மீது இப்படிப் பாய்ந்து விழுந்தார் மனோ கணேசன்.

இன்று(09) மாலை பதவியேற்ற பின்னர் உரையாற்றிய புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தமது வெற்றிக்கு உழைத்தவர்களைப் பெயர் குறிப்பிட்டு பட்டியலிட்டு நன்றி பாராட்டினார். ஆனால் தமிழ்க் கட்சிகளின் தலைவர்களான சம்பந்தர், மனோ கணேசன், திகாம்பரம், போன்றவர்களின் பெயர்களையோ, கட்சிகளையோ குறிப்பிட்டு நன்றி கூறாமல் - வேண்டுமென்றே தவிர்ப்பவர் போல - தமது உரையை அவர் முடித்துக் கொண்டார்.

இதனால் சீற்றமடைந்த மனோ கணேசன் அது தொடர்பான தனது எரிச்சலை புதிய பிரதமரிடம் கொட்டித் தீர்த்தார். "ரணில் விக்கிரமசிங்க, சரத் பொன்சேகா, சந்திரிகா குமாரதுங்க, சம்பிக்க ரணவக்க, ஹக்கீம், ரிசாட் பதியுதீன் போன்றவர்களின் பெயர்களை எல்லாம் குறிப்பிட்ட புதிய ஜனாதிபதிக்கு ஏனோ சம்பந்தன், மனோ கணேசன், திகாம்பரம் போன்றோரின் பெயர்கள் மட்டும் தெரியவில்லை; அல்லது நினைவுக்கு வரவில்லை.

இவர்களில் சில தலைவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்க ஆரம்பத்தில் முன்வரவில்லை. அவர்களின் மக்கள் ஏற்கனவே மைத்திரிபாலவை ஆதரிக்க முன்வந்து விட்டமையால் வேறு வழியின்றி தமது ஆதரவை வழங்க அவர்கள் முன்வந்தார்கள். அவர்களுக்கு எல்லாம் நன்றி கூறத் தெரிந்த புதிய ஜனாதிபதியின் கணிப்பில் தமிழர் தலைவர்கள் மட்டும் தட்டுப்படாமல் போய்விட்டார்கள்.

தேர்தலில் தோற்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, தம்மை வரவேற்பதாக ஹம்பாந்தோட்டை, மெதமுலன மக்கள் முன்னிலையில் இன்று உரையாற்றினார். "நாட்டின் சகல பகுதிகளிலும் உள்ள மக்கள் தமக்கு வாக்களித்தனர் என்று அங்கு கூறிய அவர் வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்களே தமக்கு வாக்களிக்காமல் விட்டு தோற்கடித்துள்ளனர் என்ற சாரப்பட உரையாற்றினார்.

இந்தத் தேர்தலில் தமக்கு தோல்வியையும், மைத்திரிபால சிறிசேனவுக்கு வெற்றியையும் தேடிக் கொடுத்தவர்கள் யார் என்பதை - இனத்தின் பெயரைக் குறிப்பிடாமல் அவர் வெளிப்படையாகக் கோடி காட்டிப் பேசியுள்ளார். ஆனால் அந்த மக்கள் மூலம் வெற்றியைப் பெற்றவருக்கு மட்டும் அதன் தாற்பரியம் விளங்கவில்லை; புரியவில்லை.

இந்தப் போக்கு புதுமையன்று. இப்படி நடப்பதுதான் தென்னிலங்கை அரசுத் தரப்புக்களின் பரவணிப் பழக்கம். தமிழர்களின் உதவியைப் பெற்றுக் கொண்டு அவர்களின் காலை வாரி விடுவது அவர்களின் போக்கு. அதனை - இத்தகைய வெற்றியை - தமது ஒற்றுமையான வாக்களிப்பு மூலம் உங்களுக்குப் பெற்றுத் தந்த தமிழர்களுக்கு பதவியேற்ற அன்றே - அதிகாரத்துக்கு வந்த உடனேயே - நீங்கள் காட்டுவீர்கள் என்று நாம் நம்பவில்லை." என்று சீறினார் மனோ கணேசன்.

அவரை சமாதானப்படுத்த முயன்ற புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இது குறித்து நாளை சனிக்கிழமை மனோ கணேசனுடன் விரிவாக உரையாடி பிரச்சினையை தீர்த்து வைக்கும் ஒழுங்கைத் தாம் செய்வார் என்று உறுதியளித்தார் என்று அறிய வந்தது.

http://seithy.com/breifNews.php?newsID=124323&category=TamilNews&language=tamil

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

mano-ganesan-350-seithy-news.jpg

-----

இன்று(09) மாலை பதவியேற்ற பின்னர் உரையாற்றிய புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தமது வெற்றிக்கு உழைத்தவர்களைப் பெயர் குறிப்பிட்டு பட்டியலிட்டு நன்றி பாராட்டினார். ஆனால் தமிழ்க் கட்சிகளின் தலைவர்களான சம்பந்தர், மனோ கணேசன், திகாம்பரம், போன்றவர்களின் பெயர்களையோ, கட்சிகளையோ குறிப்பிட்டு நன்றி கூறாமல் - வேண்டுமென்றே தவிர்ப்பவர் போல - தமது உரையை அவர் முடித்துக் கொண்டார்.

இதனால் சீற்றமடைந்த மனோ கணேசன் அது தொடர்பான தனது எரிச்சலை புதிய பிரதமரிடம் கொட்டித் தீர்த்தார். "ரணில் விக்கிரமசிங்க, சரத் பொன்சேகா, சந்திரிகா குமாரதுங்க, சம்பிக்க ரணவக்க, ஹக்கீம், ரிசாட் பதியுதீன் போன்றவர்களின் பெயர்களை எல்லாம் குறிப்பிட்ட புதிய ஜனாதிபதிக்கு ஏனோ சம்பந்தன், மனோ கணேசன், திகாம்பரம் போன்றோரின் பெயர்கள் மட்டும் தெரியவில்லை; அல்லது நினைவுக்கு வரவில்லை.

-------

 

இதனைத்தானே......  ஆரம்பத்திலிருந்தே....  யாழ்களத்திலிருந்து சம்பந்தருக்கு, சொன்னோம்.

கேட்டீங்களா.....  புலம்பெயர் தமிழர், புலிவால் என்று சொன்னவர்கள் எல்லாம்... எங்கே?

 

உண்மையில்... மனோ கணேசன், அகில இலங்கை தமிழருக்கும் தலைமை தாங்கக் கூடிய.. பக்குவம் பெற்ற, துணிச்சல் மிக்க அரசியல்வாதி.

 

ஓட்டுப் போடாத சம்பந்தன், இவரிடம்... பிச்சை வாங்க வேண்டும்.

சம்பந்தனுக்கு.... உடம்பு சரியல்லை என்றால்....

சக்கர நாற்காலி வாங்கி அனுப்ப, புலம் பெயர் தமிழர் ரெடி.

அதை... வைத்து, தள்ளிக் கொண்டு போக....  கோசான், அர்ஜுன்.... போன்றவர்களும் ரெடி.

(கருணாநிதியும்.... முதுகு வலி, சக்கர நாற்காலி என்று தான்... அரசியல் செய்கிறார்)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் முடிவுகள் வெளி வரத் தொடங்கிய நேரம் எங்களுக்குத் தான் வெற்றி என்ற தொனியில்  

பல தமிழ்த் தலைவர்கள்  பேட்டி கொடுத்ததை நினைக்க கவலையாக இருக்கின்றது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மைத்திரி இருப்பதால் இப்படி ரணிலிடம் கேட்க முடிகிறது. மகிந்த இருந்தால் ?

இதனால்தான் மனோவும் சம்பந்தனும் மைத்திரியை வர வைத்தனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மைத்திரி இருப்பதால் இப்படி ரணிலிடம் கேட்க முடிகிறது. மகிந்த இருந்தால் ?

இதனால்தான் மனோவும் சம்பந்தனும் மைத்திரியை வர வைத்தனர்.

 

மகிந்த ஜனாதிபதியாய்... வந்த புதிதில்,

வடக்கு மாகாணத்தில்... அகதி முகாமில் வைத்து.. சாப்பாட்டுப் பார்சலால் எறிந்து தமது எதிரிப்பை காட்டியர்கள் எம் மக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் காட்டுவார்கள், காட்டினார்கள். ஆனால் தலைவர்கள் ஒன்றும் செய்ய முடியாத நிலையில் வேணுமெண்டால் பசிலிடம் கெஞ்சுங்கள் என்ற நிலைதான் இருந்தது.

இன்று மனோவால் ரணிலிடம் காட்டம் காட்ட முடிகிறது, ரணிலும் சமாதானம் செய்ய வேண்டியிருக்கிறது. இதில் இருந்து தொடங்க வேண்டும் எமது ராஜதந்த்ஹிர நகர்வு.

ஒரு கணக்குச் சொல்கிறேன் விளங்குதா என்று பாருங்கள்.

போர்க்குற்ற விசாரணை என்பது எமக்கு இருக்கும் பிரதான ஆயுதம். இனித்தான் இதை கூட்டமைப்பு கையில் எடுக்க வேண்டும். இனக்கொலை தீர்மானத்தையும் நிறைவேற்றலாம்.

மைத்திரியோ ரணிலோ மகிந்த/ ராணுவ தளபதிகளை விசாரணைக்கு அனுப்ப முடியாது. அப்படி அனுப்பினால் அது அரசியற் தற்கொலைக்குச் சமன்.

ஆனால் ஐநா விசாரணையில் பிடி நன்றாக இறுகி விட்டது. இந்நிலையில் விசாரணைகளை நீர்த்துப் போக செய்ய - தமிழர் தரப்பின் ஒத்துழைப்பு இன்றியமையாததாகும்.

இந்நிலையில் போர்க்குற்ற விசாரணயை ஒரு பேரம் பேசு பொருளாக பாவித்து நமக்குரிய உச்சபட்ச சுயாட்சியை அடைய நாம் முயலவேண்டும்.

இதன் முதல்படிதான் மைத்திரியின் ஏற்றமும் மகிந்தவின் இறக்கமும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் காட்டுவார்கள், காட்டினார்கள். ஆனால் தலைவர்கள் ஒன்றும் செய்ய முடியாத நிலையில் வேணுமெண்டால் பசிலிடம் கெஞ்சுங்கள் என்ற நிலைதான் இருந்தது.

இன்று மனோவால் ரணிலிடம் காட்டம் காட்ட முடிகிறது, ரணிலும் சமாதானம் செய்ய வேண்டியிருக்கிறது. இதில் இருந்து தொடங்க வேண்டும் எமது ராஜதந்த்ஹிர நகர்வு.

ஒரு கணக்குச் சொல்கிறேன் விளங்குதா என்று பாருங்கள்.

போர்க்குற்ற விசாரணை என்பது எமக்கு இருக்கும் பிரதான ஆயுதம். இனித்தான் இதை கூட்டமைப்பு கையில் எடுக்க வேண்டும். இனக்கொலை தீர்மானத்தையும் நிறைவேற்றலாம்.

மைத்திரியோ ரணிலோ மகிந்த/ ராணுவ தளபதிகளை விசாரணைக்கு அனுப்ப முடியாது. அப்படி அனுப்பினால் அது அரசியற் தற்கொலைக்குச் சமன்.

ஆனால் ஐநா விசாரணையில் பிடி நன்றாக இறுகி விட்டது. இந்நிலையில் விசாரணைகளை நீர்த்துப் போக செய்ய - தமிழர் தரப்பின் ஒத்துழைப்பு இன்றியமையாததாகும்.

இந்நிலையில் போர்க்குற்ற விசாரணயை ஒரு பேரம் பேசு பொருளாக பாவித்து நமக்குரிய உச்சபட்ச சுயாட்சியை அடைய நாம் முயலவேண்டும்.

இதன் முதல்படிதான் மைத்திரியின் ஏற்றமும் மகிந்தவின் இறக்கமும்.

கனவு காண எல்லாருக்கும் உரிமை உள்ளது தொடருங்கள் வேறை ?

Link to comment
Share on other sites

கனவு காண எல்லாருக்கும் உரிமை உள்ளது தொடருங்கள் வேறை ?

சுய ஆட்சிக்கு இடமில்லை என்று MY3 கூறியதாக ஞாபகம் !!!!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல்லக்கில் போவதற்காக..தமிழர்களின் உரிமையை தாரை வார்த்த கூட்டத்தை சிங்களவன்.. அவ்வளவு இலகுவாக எனி கணக்கில் எடுக்கமாட்டான். தமிழர்களை சிங்களவன் கணக்கில் எடுத்த காலம்..அது பிரபாகரனோட முடிந்துவிட்டது. எனி இன்னொரு பிரபாகரன் வந்தால் உண்டு. :icon_idea::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐநா போர்க்குற்ற விசாரணையை.. யாரப்பா முன்னெடுக்கிறது. சம்பந்தன்.. சுமந்திரன்.. போர்க்குற்றம்.. இனப்படுகொலையை உச்சரிக்கவே மாட்டன் என்று சபதம் எடுத்திட்டார்கள். அங்கினை அனந்தி.. சசிதரன்.. கஜேந்திரன் என்று பேசுறது எல்லாம்.. வெளிநாட்டுப் புலிப்பினாமிகள் சொல்லிக் கொடுத்தது என்று சொல்லுறேள்.

 

புலம்பெயர் புலி பினாமிகள் தான் அங்கின ஏதோ தங்களால் இயன்ற ஆதாரங்களை சேகரித்துச்..செய்யுதுங்கள். அதுவும் உங்களுக்கு பிடிக்குதில்ல.

 

இப்ப என்னடான்னா.. போர்க்குற்ற விசாரணையை வைச்சு மைத்திரியை வளைச்சுப் போட ராச தந்திரம் வகுக்கப் போகினமாம்..????! நல்லா கதை விடுறேள். இதையே புலம்பெயர் ஆட்கள் சொன்னா.. புலிப் பினாமி. இப்ப நீங்க சுத்தி அடிச்சு அந்த பினாமி வட்டத்தை நோக்கி தானே வாறேள். அதுக்குள்ள எதுக்கு தேவை இல்லாத பிகு.

 

சம்பந்தனையும்.. சுமந்திரனையும்.. கூட்டிக்கிட்டு வாங்க. பிரபாகரனை... புலிகளை திட்டி சம்பந்தன் சிங்கள மக்களிடமோ.. சிங்கள தலைவர்களிடமோ நன்மதிப்பை பெற முடியாது. அதற்கு மைத்திரி சம்பந்தனை அடியோடு மறந்த இந்த நிகழ்வு சாட்சி. இதையே பிரபாகரனை பற்றி உண்மையைப் பேசி இருந்தால்.. தமிழ் மக்களாவது ஆறுதல் பட்டிருப்பார்கள். பாவம்.. சம்பந்தன் வகையறாக்கள். சிங்கக் கொடியை தூக்கிப் பிடிச்சும் பொன்சேகா தேர்தல் முடிய கழட்டிவிட்டிட்டு. இப்ப மைத்திரி..????! நம்ம பிழைப்பு இப்படியாப் போச்சே. :D:icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் காட்டுவார்கள், காட்டினார்கள். ஆனால் தலைவர்கள் ஒன்றும் செய்ய முடியாத நிலையில் வேணுமெண்டால் பசிலிடம் கெஞ்சுங்கள் என்ற நிலைதான் இருந்தது.

இன்று மனோவால் ரணிலிடம் காட்டம் காட்ட முடிகிறது, ரணிலும் சமாதானம் செய்ய வேண்டியிருக்கிறது. இதில் இருந்து தொடங்க வேண்டும் எமது ராஜதந்த்ஹிர நகர்வு.

ஒரு கணக்குச் சொல்கிறேன் விளங்குதா என்று பாருங்கள்.

போர்க்குற்ற விசாரணை என்பது எமக்கு இருக்கும் பிரதான ஆயுதம். இனித்தான் இதை கூட்டமைப்பு கையில் எடுக்க வேண்டும். இனக்கொலை தீர்மானத்தையும் நிறைவேற்றலாம்.

மைத்திரியோ ரணிலோ மகிந்த/ ராணுவ தளபதிகளை விசாரணைக்கு அனுப்ப முடியாது. அப்படி அனுப்பினால் அது அரசியற் தற்கொலைக்குச் சமன்.

ஆனால் ஐநா விசாரணையில் பிடி நன்றாக இறுகி விட்டது. இந்நிலையில் விசாரணைகளை நீர்த்துப் போக செய்ய - தமிழர் தரப்பின் ஒத்துழைப்பு இன்றியமையாததாகும்.

இந்நிலையில் போர்க்குற்ற விசாரணயை ஒரு பேரம் பேசு பொருளாக பாவித்து நமக்குரிய உச்சபட்ச சுயாட்சியை அடைய நாம் முயலவேண்டும்.

இதன் முதல்படிதான் மைத்திரியின் ஏற்றமும் மகிந்தவின் இறக்கமும்.

சுமத்திரன் இருக்கும் மட்டும் இது  நடக்காத விடயம் பவிசுக்கும் பணத்துக்கும் ஆசைப்பட்டு வந்தவர்களால் இது முடியவே முடியாது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன், சம்பந்தன், சீவி மாவை இவர்களால் மட்டுமே இது முடியும்.

கிட்டத்தட்ட 3 மாததுக்கு முன்பே சொன்னேன். விடயங்கள் ஒரு நேர்கோட்டில் வருகிறன - இந்தியாவும் மேற்கும் மகிந்தரை கைகழுவி விட்டது, சீன நீர்மூழ்கிகள் வந்தது மகிந்தரின் கடை மிரட்டல் என்று.

இல்லவே இல்லை - மேற்குலகு என்று ஒன்றே இல்லை. இலங்கை பற்றி அவர்களுக்கு ஒரு பொது நிலைப்பாடில்லை. என்று சொன்னீர்கள்.

புலம் பெயர் அழுத்ததினால்தான் போர்க்குற்ற விசாரணை வந்தது என்பது உண்மையிலேயே ஒரு மாயை. இதை விட பல மடங்கு அழுத்தம் கொடுத்தும் எம்மால் 2009 அழிவை ஏன் தடுக்க முடியவில்லை. ஏனினில் அது அப்படித்தான் நடக்க வேண்டும் நெறி மேற்க்கு தீர்மானித்து விட்டது.

மகிந்த மேற்க்குக்கு இந்தியாவுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றதாலேயே அவருக்கு இவ்வளவும் நடந்தது.

மேற்க்கு மகிந்தவை வழிக்கு கொண்டுவர பாவித்த ஒரு ஆயுதம் போர்க்குற்ற விசாரணை. போரை முடிவுக்கு கொண்டுவர மகிந்த இந்தியா மேற்க்குக்கு கொடுத்த அதே உறுதி மொழியை இப்போ ரணிலும் மைத்திரியும் செய்தாக வேண்டும்.

தனிநாடு என்பது இப்போ இலங்கையை பொறுத்தவரை ஒரு தெரிவே இல்லை. சிங்களவர்களும், இந்த்ஹியர்களும், முஸ்லீம்களும், மேற்க்கும், தமிழர்களும் கூட இப்போ அதை பற்றி அலட்டிக்கொள்வதில்லை. பிரபா வோடு அந்த கோரிக்கையும் செத்து விட்டது. இது அங்கே இப்போ ஒரு வரலாறு. எல்லாளன் தனி அரசமைத்தான், சங்கிலியன் போத்துகீசரை எதிர்தான் என்பது போல பிரபா தனிநாடு கேட்டு முன்பு போராடினார் என்பதுதான் இப்போ அங்கே தமிழர் மனநிலை.

ஆனால் எம்மை நாமே ஆள வேண்டும், எமது நிலம் பறிபோக கூடாது, இனப்பரம்பல் மாறக்கூடாது, போலீஸ் அதிகாரம் வேண்டும், காணி அதிகாரம் வேண்டும் எனும் மக்களின் அபிலாசைகள் இன்னும் அப்படியேதான் இருக்கிறது. ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் சொல்லுவதும் அதையே.

மைத்திரி ஒற்றையாட்சியை மாற்ற மாட்டேன் என்பது உண்மைதான். கேட்பதை எல்லாம் அவர் தங்க தட்டில் வைத்து தந்தால் அப்புறம் அவர் எல்லோ கூட்டமைப்பு இடத்தில் இருக்க வேண்டும்?

கூட்டமைப்பின் நோக்கு மூவகை பட வேண்டும்.

மிக கிட்டிய நோக்கு - வட ஆளுனர் மாற்றம், ராணுவ பிரசன்ன குறைப்பு, சிவில் நிர்வாகம் மீண்டும் சிவிலியன்களிடம், கெடுபிடிகளில் தளர்வு

இடக்கால நோக்கு - பொலீஸ் காணி அதிகாரம் சேர் மாகாண அரசு (13)

நீண்ட கால நோக்கு - வட-கிழக்கு இணைந்த மாகாண அரசுக்கு அதிகமான அதிகாரம் உடைய, ஆனால் பிரிந்து போகும் அதிகாரமற்ற நியானி அலகு. இதுக்கு முஸ்லீம்களின் பங்களிப்பு அவசியம் - இல்லையேல் வட கிழக்கு இணைப்பு ஒரு போதும் சாத்தியமாகாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல்லக்கில் போவதற்காக..தமிழர்களின் உரிமையை தாரை வார்த்த கூட்டத்தை சிங்களவன்.. அவ்வளவு இலகுவாக எனி கணக்கில் எடுக்கமாட்டான். தமிழர்களை சிங்களவன் கணக்கில் எடுத்த காலம்..அது பிரபாகரனோட முடிந்துவிட்டது. எனி இன்னொரு பிரபாகரன் வந்தால் உண்டு. :icon_idea::)

 

வந்த பிரபாகரனை வைது முடியேல இன்னாெரு பிரபாகரனா? வேண்டாம். எத்தனை பிரபாகரன் வந்தாலும் விட மாட்டாேம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன், சம்பந்தன், சீவி மாவை இவர்களால் மட்டுமே இது முடியும்.

கிட்டத்தட்ட 3 மாததுக்கு முன்பே சொன்னேன். விடயங்கள் ஒரு நேர்கோட்டில் வருகிறன - இந்தியாவும் மேற்கும் மகிந்தரை கைகழுவி விட்டது, சீன நீர்மூழ்கிகள் வந்தது மகிந்தரின் கடை மிரட்டல் என்று.

இல்லவே இல்லை - மேற்குலகு என்று ஒன்றே இல்லை. இலங்கை பற்றி அவர்களுக்கு ஒரு பொது நிலைப்பாடில்லை. என்று சொன்னீர்கள்.

புலம் பெயர் அழுத்ததினால்தான் போர்க்குற்ற விசாரணை வந்தது என்பது உண்மையிலேயே ஒரு மாயை. இதை விட பல மடங்கு அழுத்தம் கொடுத்தும் எம்மால் 2009 அழிவை ஏன் தடுக்க முடியவில்லை. ஏனினில் அது அப்படித்தான் நடக்க வேண்டும் நெறி மேற்க்கு தீர்மானித்து விட்டது.

மகிந்த மேற்க்குக்கு இந்தியாவுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றதாலேயே அவருக்கு இவ்வளவும் நடந்தது.

மேற்க்கு மகிந்தவை வழிக்கு கொண்டுவர பாவித்த ஒரு ஆயுதம் போர்க்குற்ற விசாரணை. போரை முடிவுக்கு கொண்டுவர மகிந்த இந்தியா மேற்க்குக்கு கொடுத்த அதே உறுதி மொழியை இப்போ ரணிலும் மைத்திரியும் செய்தாக வேண்டும்.

தனிநாடு என்பது இப்போ இலங்கையை பொறுத்தவரை ஒரு தெரிவே இல்லை. சிங்களவர்களும், இந்த்ஹியர்களும், முஸ்லீம்களும், மேற்க்கும், தமிழர்களும் கூட இப்போ அதை பற்றி அலட்டிக்கொள்வதில்லை. பிரபா வோடு அந்த கோரிக்கையும் செத்து விட்டது. இது அங்கே இப்போ ஒரு வரலாறு. எல்லாளன் தனி அரசமைத்தான், சங்கிலியன் போத்துகீசரை எதிர்தான் என்பது போல பிரபா தனிநாடு கேட்டு முன்பு போராடினார் என்பதுதான் இப்போ அங்கே தமிழர் மனநிலை.

ஆனால் எம்மை நாமே ஆள வேண்டும், எமது நிலம் பறிபோக கூடாது, இனப்பரம்பல் மாறக்கூடாது, போலீஸ் அதிகாரம் வேண்டும், காணி அதிகாரம் வேண்டும் எனும் மக்களின் அபிலாசைகள் இன்னும் அப்படியேதான் இருக்கிறது. ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் சொல்லுவதும் அதையே.

மைத்திரி ஒற்றையாட்சியை மாற்ற மாட்டேன் என்பது உண்மைதான். கேட்பதை எல்லாம் அவர் தங்க தட்டில் வைத்து தந்தால் அப்புறம் அவர் எல்லோ கூட்டமைப்பு இடத்தில் இருக்க வேண்டும்?

கூட்டமைப்பின் நோக்கு மூவகை பட வேண்டும்.

மிக கிட்டிய நோக்கு - வட ஆளுனர் மாற்றம், ராணுவ பிரசன்ன குறைப்பு, சிவில் நிர்வாகம் மீண்டும் சிவிலியன்களிடம், கெடுபிடிகளில் தளர்வு

இடக்கால நோக்கு - பொலீஸ் காணி அதிகாரம் சேர் மாகாண அரசு (13)

நீண்ட கால நோக்கு - வட-கிழக்கு இணைந்த மாகாண அரசுக்கு அதிகமான அதிகாரம் உடைய, ஆனால் பிரிந்து போகும் அதிகாரமற்ற நியானி அலகு. இதுக்கு முஸ்லீம்களின் பங்களிப்பு அவசியம் - இல்லையேல் வட கிழக்கு இணைப்பு ஒரு போதும் சாத்தியமாகாது.

அது என்ன வாக்கு என்று தெரிந்துகொள்ள முடியுமா ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புரையோடிப் போயிருக்கும் இனப்பிரச்சினைக்கு ஒன்றுபட்ட இலங்கைக்குள், காத்திரமான அதிகாரப் பரவலாக்கம் கொண்ட தீர்வை வழங்குவதன் மூலம் இலங்கையை மேற்கு/இந்தியாவின் சுற்றுப் பாதையில் இருந்து விலகி சீனா சார்பு நிலை எடுக்காமல் பார்த்துக்கொள்வேன்.

இதுதான் அது. ஆதாரம் எல்லாம் கேளாதேயுங்கோ. நான் ஒன்றும் எட்வேட் ஸ்னோடன் ஓ அல்லது அசாஞ் சோ இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புரையோடிப் போயிருக்கும் இனப்பிரச்சினைக்கு ஒன்றுபட்ட இலங்கைக்குள், காத்திரமான அதிகாரப் பரவலாக்கம் கொண்ட தீர்வை வழங்குவதன் மூலம் இலங்கையை மேற்கு/இந்தியாவின் சுற்றுப் பாதையில் இருந்து விலகி சீனா சார்பு நிலை எடுக்காமல் பார்த்துக்கொள்வேன்.

இதுதான் அது. ஆதாரம் எல்லாம் கேளாதேயுங்கோ. நான் ஒன்றும் எட்வேட் ஸ்னோடன் ஓ அல்லது அசாஞ் சோ இல்லை.

உங்கள் கற்பனைகளுக்கும் புளுகுவதற்க்கும் யாழ்களம் கிடைத்தது எங்களின் துர்அதிஸ்ட்டம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போதான் மைத்திரியின் உரையை கேட்டேன்,

ரிச்சாத்தின் அ இ ம க, ஹக்கீம் இன் சிலமுக என்று தன்னொடு இணைந்த பெரிய கட்சிகளை அவை இணைந்த தேதிப்படி சொல்லி வருபவர், திரவிட ஜாதிக சங்விதானய (கூட்டமைப்பு) க்கும் நன்றி சொல்கிறார். கூட்டமைப்பு ஒரு கட்சியில்லை எனும் போது அதை சம்பந்தரின் கூட்டமைப்பு என்று சொல்லுவது முறையாகாது.

மனோவை மட்டுமில்லை இன்னும் 40 சிறிய கட்சிகளை சொல்ல நேரம் இல்லை என்கிறார்.

இதை மனோ பெரிது படுத்தியிருப்பார் என்று நான் நினைக்கவில்லை.

இது புலம்பெயர் மக்களின் சிங்களம் தெரியாமையை செய்தி ஊடகம் ஒன்று கீழ்தரமாக தன் பரப்புரைக்கு பயம்ப்டுத்துவதாகவே படுகிறது.

வாத்தியார் விளக்கம் ஓகேயா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி சரி மண் படவில்லை அடுத்த முறை my3      திரவிட ஜாதிக சங்விதானய என சொல்லும்போது விசில் அடிக்க ரெடியாவம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டக்கி கூட்டமைப்பை விட பரவாயில்லை என்று யோசிக்கும் தவறாசா வகையறாக்களுக்கு நாம் சொல்லுவதெல்லாம் பொய் புழுகு போல்தான் தெரியும்.

காமெடி என்னெண்டா புலிப்பினாமிகளும், டக்கியின் வவ்வாலுகளும் இப்ப ஒண்ணுக்க ஒண்ணாயீட்டாங்க :)

வடக்கு கிழக்கில்தான் இவ்விரு பகுதியையும் சீந்தவும் ஆளில்லை.

Link to comment
Share on other sites

ஐநா போர்க்குற்ற விசாரணையை.. யாரப்பா முன்னெடுக்கிறது. சம்பந்தன்.. சுமந்திரன்.. போர்க்குற்றம்.. இனப்படுகொலையை உச்சரிக்கவே மாட்டன் என்று சபதம் எடுத்திட்டார்கள். அங்கினை அனந்தி.. சசிதரன்.. கஜேந்திரன் என்று பேசுறது எல்லாம்.. வெளிநாட்டுப் புலிப்பினாமிகள் சொல்லிக் கொடுத்தது என்று சொல்லுறேள்.-நெடுக்ஸ் .

 

இது என்ன கேள்வி .ஐ நா போர்க்குற்றவிசாரணையை ஐ நா தான் எடுக்குது .புலம்பெயர்ந்த சில அமைப்புகள் எதோ தாங்கள் தான் அதை எடுப்பது மாதிரி படம் காட்ட அதை நம்பி அதற்கு பின்னால் ஒரு கூட்டம் .இவர்களால் ஒரு சிறு அழுத்தத்தை உதவிகளை செய்ய முடியுமே அல்லாது வேறு எதையும் செய்யமுடியாது ,அதே போலத்தான் கூட்டமைப்பின் நிலைமையும் .

கூட்டமைப்பும் புலம் பெயர் அமைப்புகளும் விசாரணை தேவையில்லை என்றாலும் விசாரணை நடந்தே தீரும் .

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐநா போர்க்குற்ற விசாரணையை.. யாரப்பா முன்னெடுக்கிறது. சம்பந்தன்.. சுமந்திரன்.. போர்க்குற்றம்.. இனப்படுகொலையை உச்சரிக்கவே மாட்டன் என்று சபதம் எடுத்திட்டார்கள். அங்கினை அனந்தி.. சசிதரன்.. கஜேந்திரன் என்று பேசுறது எல்லாம்.. வெளிநாட்டுப் புலிப்பினாமிகள் சொல்லிக் கொடுத்தது என்று சொல்லுறேள்.-நெடுக்ஸ் .

 

இது என்ன கேள்வி .ஐ நா போர்க்குற்றவிசாரணையை ஐ நா தான் எடுக்குது .புலம்பெயர்ந்த சில அமைப்புகள் எதோ தாங்கள் தான் அதை எடுப்பது மாதிரி படம் காட்ட அதை நம்பி அதற்கு பின்னால் ஒரு கூட்டம் .இவர்களால் ஒரு சிறு அழுத்தத்தை உதவிகளை செய்ய முடியுமே அல்லாது வேறு எதையும் செய்யமுடியாது ,அதே போலத்தான் கூட்டமைப்பின் நிலைமையும் .

 

கூட்டமைப்பும் புலம் பெயர் அமைப்புகளும் விசாரணை தேவையில்லை என்றாலும் விசாரணை நடந்தே தீரும் .

 

ஆமாண்ணே. ஐநா போர்க்குற்ற விசாரணை சுயமா கிளம்பி புயலைக் கிளப்பிக்கிட்டு இருக்குது. இப்ப நீங்க வங்கக்கடலில் மீன்பிடிப்படகில்.. எப் எவ் மைக்கை வைச்சிருந்து தமிழீழம் மீட்டிங்கல்ல.. அப்படி.

 

இதில சுமந்திரன்... சம்பந்தன்.. நாங்க.. நீங்க என்ன செய்யக் கிடக்கு. பாப் கோனை வாங்கி சப்பிக்கிட்டு கிரிக்கெட் மட்ச் பார்த்தா விசாரணை சுமூகமா முடியும். 

 

உங்கட கருத்துக்கு ஒரு லைக்கு...!!! :lol::D

Link to comment
Share on other sites

TNA யாழ்ப்பாண

முக்கிய அரசியல் வாதி ஒருவருடன் பேசும் போது அவர் சொன்னது

நான்: என்னண்ணே மக்களை ஒரு மாதிரி பெருவாரியா மைத்திரிக்கி வாக்கு போட வைச்சிட்டீங்க பிறகென்ன.....

அதுக்கு அவர்: அட போடா தம்பி

மக்கள் ஏற்க்கனவே பெருவாரியா மைத்திரிக்கி வாக்கு போட முடிவு பண்ணிட்டீனம்..... அதை நாங்க கடைசி நேரம் அறிக்கை விட்டு பயன்படுத்திக்கொண்டோம்

அம்புட்டுத்தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீக்கா அந்த கட்சியிலேயும் யாரும் சேருவீனமே? நாங்கள் ராஜபக்சபின் எலும்பு நக்கிகள். இப்போ மேய்பான் அற்ற மந்தைகள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணைந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.