Jump to content

மைத்திரியை ஆதரித்ததன் மூலம் தமிழ் மக்களுக்கு கூட்டமைப்பு மீண்டும் துரோகம் செய்கிறது - கோத்தபாய


Recommended Posts

gothabaya%20rajapaksha%20966d.jpg

 

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொது எதிரணி வேட்பாளர் மைத்திபாலவுடன் ஒப்பந்தம் செய்துகொள்ளவில்லை எனில் அவர்களுக்கு எதற்காக ஆதரவளிக்கவேண்டும். இருதரப்புக்கும் இடையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளமை வெளியிடப்பட்டால் சிங்கள மக்களின் வாக்குகளை இழக்க நேரிடும் என எதிரணி அஞ்சுகிறதா? அப்படி ஓர் ஒப்பந்தம் செய்துகொள்ளவில்லை எனில் ஏன் அவர்கள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு ஆதரவளித்திருக்கக்கூடாது. மைத்திரிக்கு ஆதரவளிப்பதன் மூலம் மீண்டும் ஒரு முறை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு துரோகம் செய்கிறது. - இவ்வாறு தெரிவித்துள்ளார் பாதூகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்‌ஷ.
 
தமிழ்ப் பத்திரிகைகளின் ஆசிரியர்களுடன் இன்று செவ்வாய்க்கிழமை பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:- நாம் பொய்சொல்லி வாக்குக் கேட்கவில்லை. யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்து வடக்கு, கிழக்கில் எவ்வளவோ அபிவிருத்திகளைச் செய்திருக்கிறோம். இது அந்த மக்களுக்குத் தெரியும். அந்தக் கடந்த கால அனுபங்களை நாங்கள் இப்போது பேசவிரும்பவில்லை.
 
ஆனால் அந்த மக்கள் அனுபவித்த துயரங்களை நாம் இல்லாமல் செய்திருக்கிறோம். அந்த நிலங்களில் புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடிகளை அகற்றியிருக்கிறோம். சரணடைந்த போராளிகளைப் புனர்வாழ்வுக்கு உட்படுத்தி சமூகத்துடன் ஒன்றிணைத்திருக்கிறோம். அபிருவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருக்கிறோம். போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறோம். அங்கு விவசாயகம் முன்னேற்றமடைந்திருக்கிறது.
 
முன்னெப்போதும் இல்லாதவாறு கல்வி மேம்பாடடைந்திருக்கிறது. தற்போது வெளியாகியிருக்கும் உயர்தரப் பரீட்சை முடிவுகளை வைத்து இதனை நீங்கள் அறிந்துகொள்ள முடியும். ஆனால் பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தமிழ் மக்களுக்கு என்ன செய்திருக்கிறார்? அவர் சுகாதார அமைச்சராக இருந்துகூட தமிழ் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இலங்கையில் போர்க்குற்றம் இடம்பெற்றதாகக் கூறுகிற
 
து. அப்படியென்றால் போர்க்குற்றத்தை இழப்பதற்குப் பொறுப்பாக இருந்த இராணுவத் தளபதிக்கு முன்பு நடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஏன் ஆதரவு வழங்கியது? இது அவர்களது இரட்டை நிலைப்பாட்டை வெளிப்படுத்துகிறது. நாம் செய்தவற்றைக் கூறியே வாக்குக் கேட்கிறோம். இல்லாத பொய்களை சொல்லவில்லை.
 
அமைச்சர்களான ஹக்கீமும் ரிசாத் பதியுதீனும் அரசுடன் இணைந்திருந்து அனைத்தையும் பெற்று உழைத்துக்கொண்டு அரசின் முதுகில் குத்தியிருக்கின்றனர். இதனையா இஸ்லாமிய மதம் போதிக்கிறது என எண்ணத் தொன்றுகிறது. இவர்கள் முஸ்லிம் மக்களுக்கு துரோகம் இழைத்திருக்கின்றனர்.
 
முன்னரெல்லாம் ஐ.தே.க. அரசினாலேயே தமிழருக்கெதிரான கொடுமைகள் இழைக்கப்பட்டன. ஆனால் எமது அரசாங்கம் அப்படிச் செய்யவில்லை. இழந்துபோனதாகக் கருதப்பட்ட நகைகளைக் கூட மீள ஒப்படைத்தோம். இதுவே எமது நடவடிக்கையாகும். வடக்கு, கிழக்கு மக்களுக்கு உண்மை தெரியும். அவர்கள் முன்பு அனுபவித்ததுக்கும் இப்போது வாழ்வதற்கும் இடையிலான வித்தியாசத்தை அவர்கள் புரிந்திருப்பார்கள். - என்றார்
 
 
 
Link to comment
Share on other sites

அந்த நிலங்களில் புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடிகளை அகற்றியிருக்கிறோம்.  எம்மால் புதைக்கபட்ட மக்களை மட்டும் தானே மறக்கும்படி கேட்கிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
அவர்கள்(கூட்டமைப்பு)  என்ன வைத்துகொண்டா வஞ்சகம் செய்கிறார்கள் ??? 
"துரோகம்" இந்த ஒன்றை மட்டும் எந்த பிழையும் இல்லாமல் சீரும் சிறப்புமாக செய்ய தெரியும். 
Link to comment
Share on other sites

தமிழ் மக்கள் எப்படி உங்களுக்கு வாக்களிப்பார்கள் . கொலைகார பாவிகளை எப்படி மறக்க முடியும் . மானம் கெட்டவனே .... இந்த பிழைப்புக்கு நீங்கள் செத்து போகலாம் .

Link to comment
Share on other sites

சம்பந்தர்: ஆகவே.. எவரையும் நாங்கள் நம்பவுமில்லை.. நம்பாமல் விடவும் இல்லை..

(மைன்ட் வாய்ஸ்: ஆனால் இந்தியாவை மட்டும் முழுமையாக நம்பிறமாதிரி நடிப்போம். :D )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆடு நனையுதெண்டு அழுகுது ஒரு ஓநாய்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.