Jump to content

ஜனாதிபதி வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை அமைச்சர் - ஜனக பண்டார


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

'போதைப் பொருள், எதனோல், சாரயக் கடத்தல்காரர்கள்; பாராளுமன்றில் அங்கம் வகிக்க ராஜபக்ஸ அரசாங்கமே காரணம்'

Mahi%20cring_CI.jpg


ஜனாதிபதி வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என பாராளுமன்றில் ஆளும் கட்சியின் முக்கிய அமைச்சர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.


காணி அபிவிருத்தி அமைச்சு தொடர்பிலான பாராளுமன்ற வரவு செலவுத் திட்ட விவாதத்தில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக பண்டாரநாயக்க தென்னக்கோன் இவ்வாறு ஜனாதிபதி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.


அமைச்சர் ஒருவர் தமது பெயரைப் பொறித்து காணிகளை விநியோகம் செய்துள்ளதாகவும் இதனை தாம் ஜனாதிபதியிடம் முறைப்பாடு செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.


குறித்த அமைச்சருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி உடனே தமக்கு பதிலளித்த போதிலும் இதுவரையில் ஜனாதிபதி எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.


போதைப் பொருள் கடத்தல்காரர்கள், எதனோல் கடத்தல்காரர்கள் மற்றும் சாரயக் கடத்தல்காரர்கள் நாட்டின் பாராளுமன்றில் அங்கம் வகிக்கத் தொடங்கியதன் பின்னரே இந்த சீரழிவு நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் இதற்கு இந்த இரசாங்கமே காரணம் எனவும் அவர் பகிரங்கமாக விமர்சனம் செய்துள்ளார்.


இந்த சீரழிவு ஏற்பட்டமைக்கான காரணம் இவ்வாறானவர்கள் பாராளுமன்றில் அங்கம் வகிக்கின்றமையே என தாம் தைரியமாக குறிப்பிடுவதாகத் தெரிவித்துள்ளார்.


அரசாங்கத்தின் சில நாடவடிக்கைகள் குறித்து கடும் அதிருப்தி அடைவதாகத் தெரிவித்துள்ளார்.

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/113748/language/ta-IN/article.aspx

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.