Jump to content

யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்காக போராடத் தயார்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்காக போராட தயாராக இருப்பதாக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் நஜீத் இந்திக்க தெரிவித்துள்ளார்.
 
அண்மையில் வார இதழ் ஒன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
 
 
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மாணவர்களைத் தவறான பாதைக்கு இட்டுச் செல்வதாக அரசாங்கம் குற்றம் சுமத்துகிறமை தொடர்பாக கருத்து தெரிவித்த அவர்.
 
இந்தக் குற்றச்சாட்டு புனையப்பட்ட ஒன்று.  நாங்கள் மாணவர்களைத் தவறான பாதைக்கு ஒருபோதும்  இட்டுச் செல்லவில்லை ஆட்சியிலுள்ள அரசாங்கம் தான் மக்களையும் மாணவர்களையும் குழப்புகிறது.
 
மாணவர்களுக்கு வழங்கப்படும் மகாபொல போன்ற கொடுப்பனவுகள் சரியான முறையில் வழங்கப்படுவதில்லை.இதனால்  67 வீதமான மாணவர்கள் பகுதி நேர வேலைகள் செய்தே பல் கலைக்கழகக் கல்வியினை மேற்கொள்ள வேண்டி உள்ளது.
 
அது மட்டுமின்றி இலவசக் கல்வியை அரசாங்கம் இல்லாதொழித்து தனியாருக்கு கல்வியை விற்பனை செய்ய முயற்சிக்கிறது . இதற்கு பல்கலைக்கழக மாணவர்கள் மட்டும் போராடினால் போதாது.  நாட்டிலுள்ள அனைத்து மக்களும் அரசின் அராஜகத்துக்கு எதிராகக் கிளர்ந்தெழ வேண்டும்.
 
 
கேள்வி-  நாட்டில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிரான வன்முறைகள் கடந்த காலங்களிலும் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தன. போர் நடந்த காலத்தை விடவும் இப்போது இந்த வன்முறைகளின் வீரியம் அதிகரித்து இருப்பதாக உணர்கிறீர்களா?
 
 
பதில் - ஆம்! நிச்சயமாக கடந்த காலங்களையும் விட தற்போது மாணவர் மீதான வன்முறைகள் அதிகரித்துச் செல்வதை ஊடகங்களில் வெளிவரும் செய்திகள் வெளிக்காட்டுகின்றன. முன்னைய காலங்களில் பெரும்பாலும் மறைமுக ரீதியான அழுத்தங்கள், மிரட்டல்கள், அச்சுறுத்தல்கள் என்பனதான் இடம்பெற்றன. அல்லாது விடின் ஆர்ப்பாட்டங்கள் நிகழும் போது மாணவர்களை பொலிஸாரோ, அரசின் கைக்கூலிகளோ தாக்கியிருப்பார்கள்.
 
ஆனால் இப்போது நேரடியாகவே மாணவர்கள் மீது அரசு கைவைக்கத் தொடங்கிவிட்டது. மாணவர் ஒருவரை எந்தவிதக் குற்றச்சாட்டுகளுமின்றி பகிரங்கமாகப் பல்கலைக்கழகத்துக்கு வந்து கைது செய்து இழுத்துப்போகுமளவுக்கு இந்த வன்முறைப் பிசாசு மாணவர்களை நோக்கி ஏவிவிடப்பட்டுள்ளது.
 
 
கேள்வி- ஆனால் நீங்கள் சொல்வது போன்ற நேரடி வன்முறைகளை யாழ்.பல்கலைக் கழக மாணவர்கள் சில தசாப்தங்களுக்கு முன்பிருந்தே அனுபவிக்கத் தொடங்கிவிட்டார்கள். பல பல்கலைக்கழக மாணவர்கள் கொலையுண்டுமிருக்கிறார்கள். இப்படி இலங்கையிலேயே அதிகளவான வன்முறைகளை எதிர்கொண்டவர்களாக யாழ். பல்கலை மாணவர்கள் இருந்த போதும், அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்துக்கும், யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்துக்கும் இடையிலான தொடர்புகள் குறைவடைந்தே உள்ளனவே.அது ஏன்?
 
 
பதில்- உண்மைதான். எமக்கும் யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கும் இடையே  அதிகளவு தொடர்புகள் இல்லைத்தான். கலந்துரையாடல் மட்டுமே சில சந்தர்ப்பங்களில் இடம்பெற்றுள்ளது. நாட்டில் இடம்பெற்ற முப்பது ஆண்டு காலப்போரும்  யாழ். பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்துடனான தொடர்புகளை மேற்கொள்ள தடையாக இருந்தது.
 
தற்போது அவ்வாறான நிலைமை இல்லை. யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு அதிகளவான பிரச்சினைகள் இருக்கின்றன. எங்களுக்கும் நன்றாகத் தெரியும். அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இனம்,பால், மொழிகளுக்கு அப்பாற்பட்ட ஒரு மாணவர் அமைப்பாகும்.நாங்கள் மாணவர்கள் என்ற ரீதியில்தான் பிரச்சினைகளை அணுகுகின்றோமே தவிர இன,மத பேதங்களைக் கவனத்தில் எடுப்பதில்லை.
 
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்துடன் யாழ். பல்கலைகழக மாணவர்களும் இணைந்து செயற்பட வேண்டுமென்பதே எங்களின் விருப்பமும். அவ்வாறு யாழ்.பல்கலை மாணவர்களும் எம்முடன் இணைந்து கொண்டால் எமக்குப் பலம்.அத்துடன் யாழ்.பல்கலை மாணவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் நாம் உடனடி நடவடிக்கையில் இறங்கும் இந்தப் பிணைப்பு அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=787033587128446862#sthash.pNcYxxkG.dpuf

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வ‌ள‌ந்து வ‌ரும் க‌ட்சி தொட‌ர்ந்து பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில்   ஆண்க‌ளுக்கு 20 / பெண்க‌ளுக்கு 20  ச‌ட்ட‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஆண்க‌ளுக்கு 120 / பெண்க‌ளுக்கு 120 இதில் யார் ஒட்டை எப்ப‌டி பிரிப்ப‌து வெற்றிய‌ இல‌க்காக‌ ப‌ய‌ணிக்கும் க‌ட்சி புல‌வ‌ர் அண்ணா தேர்த‌ல் ஆணைய‌த்தின் கூத்துக‌ளை விப‌ர‌மாய் எழுதி இருக்கிறார் முடிந்தால் ப‌தில் அளியுங்கோ இந்த‌ தேர்த‌ல் விதிமுறை இந்த‌ முறை தான் பார்க்கிறேன் த‌மிழ் நாட்டில் ஒரே நேர‌த்தில் ம‌ற்ற‌ மானில‌ங்க‌ளில் பிரித்து பிரித்து வைப்ப‌து...................2019க‌ளிம் இந்த‌ விதிமுறை இருந்த‌ மாதிரி தெரிய‌ வில்லை................................ அண்ணாம‌லையில் ஆட்க‌ள் காசு கொடுக்க‌ போன‌ இட‌த்தில் பிடி ப‌ட்டு த‌லைய‌ காட்டாம‌ தெறிச்சு ஓடின‌வை ஓம் யூன்4ம் திக‌தி பாப்போம்...............................
    • இப்படிக்கு இந்த தரவுகள் அனைத்தும்  தமிழ்நாட்டில் நேரடியாக இரு கண்களாலும் பார்த்து சேகரிக்கப்பட்டது. 🤣
    • நீங்கள் மீள மீள பொய்யை சொல்வதால் உண்மை ஆகாது. 1.தேசிய அல்லது குறைந்தது  மாநில கட்சி அந்தஸ்து இருந்தால் மட்டுமே நிரந்தர சின்னம். 2. மாநில கட்சி அந்தஸ்துக்கு ஒன்றில் 10% வாக்கு அல்லது 2% வாக்கும் இரு லோக்சபா சீட்டில் வெற்றியும் அடைந்திருக்க வேண்டும். 3. இது இரெண்டும் நாதக வுக்கு இல்லை. 4. மாநில கட்சி அந்தஸ்து இல்லாவிடின் - தேர்தல் அறிவிக்கப்பட்டு யார் முதலில் கோருகிறார்களோ அவர்களுக்கே சின்னம் கொடுக்கப்படும். 5. சீமான் அசட்டையாக தூங்கி கொண்டிருக்க ஏனையோர் (திமுக) தந்திரமாக சுயேட்சை மூலம் அந்த சின்னத்தை கோரி விட்டது. 6. வாசனுக்கு இப்படி யாரும் செய்யவில்லை. 7. திருமாவின் சின்னத்தையும், வைகோவின் சின்னத்தையும் இன்னொரு தக்க காரணம் சொல்லி மடக்கினாலும், திருமா போராடி வென்றார். வைகோ விட்டு விட்டார். 8. சீமானும் சுப்ரீம் கோர்ட் வரை போனார். முடியவில்லை. 9. தேர்தல் ஆணையம் களவு செய்கிறதெனில் சுப்ரீம் கோர்ட்டும் அதை ஆமோதித்ததா? உண்மையில் இதில் ஆணையத்தின் எந்த பாரபட்சமும் இல்லை, சீமானின் சோம்பேறித்தனத்தை பாவித்து திமுக சின்னத்தை சுயேட்சை மூலம் தந்திரமாக முடக்கி விட்டது. இதை பற்றி யாழில் பல்வேறு திரிகளில் பல பக்கம் எழுதியுள்ளேன். தங்களை அப்பக்கங்கள் நோக்கி பணிவுடன் திசை காட்டி அமைகிறேன்.
    • திருநெல்வேலி மக்களவை தொகுதியில் பாஜகவின் நயினார் நாகேந்திரன் வெற்றிபெறுவார் என ஊகிக்கின்றேன்.
    • ஏன் அந்தக்கவலை? தமிழ்நாட்டில் பிஜேபி ஆட்சிக்கு வந்தால் அப்படி என்ன பெரிதாக கெடுதல் நடந்து விடும்?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.