Jump to content

ஐ.நா கண்காணிப்பின் கீழ் ஓர் இடைக்கால நிர்வக சபை உடனடியாக உருவாக்கப்பட வேண்டும்: தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி


Recommended Posts

5838_content_gajendran_ponnambalam_20.jp

 

 

கிளிநொச்சி நாச்சிக்குடாவைச் சேர்ந்த சின்னத்துரை கிருஸ்ணராஜா (51) என்பவர் ஜ.நா மனித உரிமைகள் பேரவையினால் மேற்கொள்ளப்படும் சர்வதேச விசாரணைக்கு சாட்சியங்களை வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டு பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சுpறிலங்கா அரசின் இச் செயலை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினராகிய நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.  அத்துடன் இவரை விடுவிப்பதற்கு ஐ.நா சபையும், சர்வதேச சமூகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோருகின்றோம்.  

 

ஜ.நா சபையின் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தின் படி ஜ.நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைக்கு சாட்சியங்கள் வழங்குமாறு கோரப்பட்டுள்ள நிலையில் அதற்கு சாட்சியங்களை வழங்க பாதிக்கப்பட்டவர்கள் பலரும் ஆர்வமாக உள்ளனர்.  குறிப்பாக யுத்தத்தில் நோரடியாக பாதிக்கப்பட்டு கொடூர இனவழிப்பு யுத்தத்தின் நேரடி சாட்சிகளாக தற்போது தமிழர் தாயகத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

 

அச்சாட்சிகளில் பலரும் ஐ.நா மனித உரிமைகள பேரவையின் கோரிக்கைக்கு இணங்க குறித்த விசாரனைகளுக்கு சாட்சியம் வழங்க தயாராகவும் ஆர்வமாகவும் உள்ள நிலையில் சாட்சியம் அளிப்பவர்களை கைது செய்யும் ஸ்ரீலங்கா அரசின் நடவடிக்கையானது ஐ.நா சபையின் விசாரனையை குழப்பும் மோமான செயற்பாடாகும்.  அத்துடன் தான் மேற்கொண்ட குற்றங்களை மூடிமறைக்கும் செயற்பாடுமாகும். தமிழர் தாயகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நேரடிச் சாட்சியங்கள் பதிவு செய்யப்படும் போதே ஜ.நா மனித உரிமை பேரவையின் விசாரணைகள் காத்திரமானவையாகவும், நடந்த உண்மைகளையும் தமிழ் மக்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளையும் வெளி உலகிற்கு கொண்டுவரக் கூடியதாகவும் அமையும்.  

 

எனவே தாயகத்திலிருந்து ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் விசாரணைக்கு சாட்சியங்கள் அனுப்பப்படுவதனையும், சாட்சியங்கள் வழங்குபவர்களின் பாதுகாப்பினையும் உறுதிப்படுத்த வேண்டிய கடமை ஐ.நா சபைக்கு உண்டு. இலங்கை அரசினால் செய்யப்படுகின்ற இத்தகைய கைதுகள் இலங்கை அரசின் மீது ஐ.நா கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டடாய தேவையை மீளவும் வலியுறுத்தி நிற்கின்றது.

 

 நாம் கடந்த காலங்களில் தொடர்ச்சியாக பல தடவை தமிழர் தாயகத்தில் வாழ்கின்ற நேரடிச் சாட்சியங்களை முழுமையாக பதிவு செய்வதற்கும் அச்சாட்சியங்களை பாதுகாப்பதற்கும் ஐ.நா சபை ஓர் பொறிமுறையை உருவாக்க வேண்டும் என்று கோரிவருகின்றோம்.  அந்த வகையில் இலங்கை அரசின் இத்தகைய மிலேச்சத்தனமான சட்டவிரோத கைதுகளை தடுத்து நிறுத்தும் வகையில் ஐ.நா மனித உரிமைகள் பேரவை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சாட்சியங்களை பாதுகாக்க தமிழர் தாயகத்தில் ஐ.நா கண்காணிப்பின் கீழ் ஓர் இடைக்கால நிர்வக சபை உடனடியாக உருவாக்கப்பட வேண்டும் என்றும் நாம் கோருகின்றோம்.

 

 

http://thinakkural.lk/article.php?local/fkwdfvo5cp7277dcacff256520392qkloa700c8f88f59cf4a16f9dfcfrbxa#sthash.VdANfnim.dpuf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • https://online.srilankaevisa.lk/ யாராவது முயற்சி செய்து பார்த்தீர்களா? எனக்கு சரிவர வேலை செய்யவில்லை.
    • சர்கரை இல்லாங்கால்லிலுப்பை அஃதுபோல் சொல் ஒன்றின்றி நகைக்க லொல். உடான்ஸ்சுவாமி உரை எவ்வாறு சர்க்கரை இல்லாதவிடத்து, இனிப்பு சுவைக்கு இலுப்பை உபயோகிக்கப்படுகிறதோ, அதே போல,  சிரிப்பதை, நகைப்பு என சொல்லால் எழுதாமல், குறியீடாக லொல் எனவும் எழுதலாம்.  
    • வீசா பெறுவது இலகுவாக்கபடுவது முக்கியம். இழுபறி கூடாது. மற்றும்படி கட்ணங்கள் சம்மந்தமாக குறை சொல்ல ஏதும் இல்லை. அது எல்லாருக்கும் பொதுவானது தானே.  ஆனால் இங்கே என்ன கவனிக்கப்படவேண்டும் என்றால் நாங்கள் வீசா பெற்று சென்று இறங்கும்போது விமானநிலையத்தில் இலங்கை குடிவரவுப்பகுதி கையூட்டு/கைவிசேடம் கேட்டு எங்களுக்கு கரைச்சல் தரக்கூடாது. 
    • ஓம்….இடையிடே இச்சையின்றி வரும் yeah, தோள் குலுக்கல், கண் மேலே உருட்டல், பிறகு கடையில் வாய்தவறி £இல் விலை கேட்பது… எதையும் 100% மறைக்க முடியாது…. ஆனால் அப்பட்டமாய் ஜொலி ஜொலித்தால்…..ஏமாறும் சதவிகிதம் எகிறும். அதே போல் வெளிநாடு என தெரிந்தாலும், ஏமாற்ற முடியாது, விசயம், விலை தெரியும் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதும் கைகொடுக்கும். எந்த வளர்முக நாட்டுக்கு போனாலும் உதவும் உத்திகள்தானே இவை.     நன்றி🙏
    • நான் இதன் மறுவளமாகவே பார்க்கிறேன். அங்கே மண்னெணை, முதல், மா, சகலதும் மானிய விலையில்தான் மக்களுக்கு தரப்படுகிறது.  ஏன் என்றால் அதை விட கூட விலைக்கு விற்றால் அந்த மக்களால் வாங்க முடியாது. அதே போலவே வடையும். அங்கே இவற்றுக்கான விலை அந்த மக்களின் வாங்கு திறனை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் நாம் ஒரு பிரிதானியா வாங்கு திறனோடு போய், இலங்கை வாங்குதிறனுக்குரிய விலையில் பொருட்களை வாங்குவது - ஒரு வகையில் அந்த மக்களிடம் அடிக்கும் கொள்ளையே. ஆனால் எம் அந்நிய செலவாணி வரவால் அதை விட அதிகம் கொடுக்கிறோம் என்பதால் நன்மையே அதிகம். இது எல்லா 3ம் உலக நாட்டுக்கும் பொருந்தும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.