Jump to content

தமிழ் மக்கள் தமிழீழ கோரிக்கையை முன் வைக்கவில்லை அரசியல் தீர்வுத் திட்டம் ஒன்றையே கோருகின்றனர்


Recommended Posts

தமிழ் மக்கள் தமிழீழ கோரிக்கையை முன் வைக்கவில்லை அரசியல் தீர்வுத் திட்டம் ஒன்றையே கோருகின்றனர்:-

 

பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன்-

Sritharan_CI.jpg

அரசியல் தீர்வுத் திட்டமொன்றையே தமிழ் மக்கள் கோரி நிற்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்கள் தமிழீழ கோரிக்கையை முன்வைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

புலம்பெயர் தமிழர்கள் கூட தனித் தமிழீழமொன்றை கோரி நிற்கவில்லை எனவும், அர்த்தமுள்ள அரசியல் தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டுமென்றே கோருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டுமென்ற தெளிவான கோரிக்கையையே தமது கட்சி கோரி நிற்பதாகத் தெரிவித்துள்ளார்.

அர்த்தமுள்ளதும், கௌரவமானதுமான தீர்வினையே கட்சி விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்கள் இப்போது ஈழக் கோரிக்கைகளை முன்வைக்கவில்லை எனவும் கடந்த காலங்களில் அவ்வாறான ஓர் நிலைமை காணப்பட்ட போதிலும் தற்போது அவ்வாறான சூழ்நிலை கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பாலங்களை அமைப்பதன் மூலமும், வீதிகளை அமைப்பதன் மூலமும் வடக்கு கிழக்கின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

வடக்கில் இந்திய வீட்டுத் திட்டம் அமுல்படுத்தப்பட்டு வருவதாகவும் அதில் மெய்யாகவே வீடுகள் தேவையானவர்களுக்கு வீடுகள் வழங்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தம் நிறைவடைந்து ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ள போதிலும் தமிழ் மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleID/112971/Default.aspx

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடடா சம்பந்தன் சுமந்திரன் இதை சொல்லி இருந்தா ஏக வசனத்தில் திட்டி இருக்கலாம். இப்ப நம்மாளே இப்படிச் சொல்றாரே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன செய்யலாம்? அடக்கு முறைக்குள் நிண்டு பம்முறார், தும்முறார் எண்டு எதுகை மோனையில் அடிச்சு விட வேண்டியதுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 
இப்போது கூட்டமைப்பு மகிந்தவுடன் கூட்டணியும் அமைக்கத்தயங்க மாட்டார்கள்.

இதுதான் கூ.ட்டமைப்பின் ராச தந்திரமாம்.
அடுத்த தேர்தல் வரும்போது தெரியும் அவர்களின் அல்லது மக்களின் கோரிக்கை என்னவென்று.

மக்கள் வேண்டாம் என்றாலும் கூட்டமைப்பே தனி ஈழத்தைத் தூக்கிப் பிடிக்கும்.
கீரைக் கடைக்கும் எதிர்க்கடை வேண்டும் என்பது இதற்குத்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறீதரனுக்கு புலம்பெயர் தமிழர்கள் போன்போட்டு இதைச் சொல்லச் சொல்லி சொன்னவர்களாக்கும்...??!

 

என்ன செய்யுறது.. இப்படி பேசியாவது.. மகிந்தவையை மயக்கலாம் என்று நினைக்கினம். இதிலும் கூட்டமைப்பு தோற்கும்..!!! :icon_idea::lol:

Link to comment
Share on other sites

நாட்டின் உயர் சபையில் கழுதைக்கு ஒப்பானவர்களை அனுமதிக்கக் கூடாது; பாராளுமன்றில் சிறிதரன் எம்.பி. வேண்டுகோள் 

 

இந்த நாட்டின் கௌரவம் மிக்க உயர் சபையான பாராளுமன்றத்தில் கழுதைகளுக்கு ஒப்பானவர்களை அனுமதிக்கக்கூடாது. அவ்வாறு அனுமதித்தாலும் அவை கத்தாமலாவது பார்த்துக் கொள்ள வேண்டுமென பிரதி சபாநாயர் சந்திம வீரக்கொடியிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட எம்.பி.யான எஸ். சிறிதரன் கோரினார். பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை 2015 ஆம் ஆண்டுக்கான வரவு   செலவுத் திட்டத்தின் மீதான இரண்டாம் நாள் விவாதம் இடம்பெற்றபோது சிறிதரன் எம்.பி.யின் உரைக்கு அரச தரப்பு தேசியப் பட்டியல் எம்.பி.யான ஏ.எச்.எம். அஸ்வர் குறுக்கீடு செய்தபோது சிறிதரன் எம்.பி. இவ்வாறு கோரினார்.

 

http://thinakkural.lk/article.php?local/odcinukfyu3973678004486c13773gyez6119599ed7d199f47da043apwxmp#sthash.LMduwQUd.dpuf

Link to comment
Share on other sites

திரு.ஸ்ரீதரன் தனது பாராளுமன்ற கன்னி உரையிலேயே  தற்போது தெரிவித்த கருத்தையே வலியுறுத்தினார். அத்துடன்  தனது கன்னி உரையிலேயே சிங்கள மக்களையும் சிங்கள அரசியல்வாதிகளையும் நோக்கி தமிழ் மக்களுடைய உரிமைகளை அங்கீகரிக்குமாறும் கடந்த காலத்தை மறந்து எல்லோரும் சேர்ந்து இந்த நாட்டை உன்னத நிலைக்கு கொண்டு செல்வோம் என்றும்  மிகவும் உருக்கமான வேண்டுகோள் விடுத்தார். அது மட்டுமல்ல மேலும் ஒரு தடவை அல்லது இரண்டு தடவை பாராளுமன்றத்தில் இதே போல மிகவும் உருக்கமான பாணியில் உரையாற்றினார். அவரின் அந்த உரைகளின் காணோலிகளும் வெளியாகி இருந்தன. எடுத்தேன் கவிழ்தேன் பாணியில் அவர் என்றும் உரையாற்றியதில்லை. ஏதோ சுமந்திரனையும் சம்பந்தரையும் போற்றியும் மற்ற அதே கடசி உறுப்பினரை நக்கல் பண்ணியும் ஒரே கட்சிக்குள்ளேயே கோஷ்சி அரசியலை வளர்க்கும்  சில  பிரசங்கிகள் ஸ்ரீதரனின் பாராளுமன்ற கன்னி உரையையும் அதற்கு பின்பு அவரின் உரைகளையும் கேட்டுவிட்டு கருத்து எழுதவேண்டும்.

Link to comment
Share on other sites

அடடா சம்பந்தன் சுமந்திரன் இதை சொல்லி இருந்தா ஏக வசனத்தில் திட்டி இருக்கலாம். இப்ப நம்மாளே இப்படிச் சொல்றாரே?

 

 

http://www.ceylontoday.lk/51-75865-news-detail-we-have-given-up-eelam-sampanthan-tna-vs-mr.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதைச் சொல்ல சிறிதரனுக்கோ சம்பந்தருக்கோ அதிகாரம் கிடையாது.தமிழீழத் தனியரசுக் கோரிக்கையை முன்னிறுத்தி தேர்தல் விஞ்ஞானத்தில் குறிப்பிட்டு மக்கள் ஆணையைப்பெற்ற 1977 ஆண்டுத் தேர்தலின் பின்னர் அதற்கு மாற்றீடான கோரிக்கையை முன் வைத்து மக்கள் ஆணையைப் பெறவில்லை.ஆக அந்தக் கோரிக்கை அப்படியேதான் இருக்கிறது .இடைப்பட்ட காலத்தில் ஒரு இடைக்காலத் தீர்வை பெற்றுக்
கொள்வதற்கு தமிழினம் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.புலிகள் கூட இடைக்காலத்தீர்வை வரவேற்று இருந்தார்கள். இதன் பொருள் தமிழீழத் கோரிக்கை கை விடப்பட்டது என்பது அல்ல.
 

 

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.