Jump to content

தமிழர் தாயகத்தில் நடந்ததும், நடப்பதும் இனப்படுகொலையே! – கூட்டமைப்பு சார்பில் சுமந்திரன் அறிவிப்பு.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Sumanthiran-MP-300-seithy.jpg

வடகிழக்கு தமிழர் தாயகத்தில் நடைபெற்றதும், நடைபெற்றுக் கொண்டிருப்பதும் திட்டமிட்ட இன அழிப்பே என்று தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன். யாழ். ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதுகுறித்துக் கருத்து தெரிவித்த அவர், ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தினால் அமைக்கப்பட்டிருக்கும் சர்வதேச விசாரணைக் குழு போர்க்குற்றங்கள், மனிதாபிமானத்திற்கு மாறான குற்றங்கள் உள்ளிட்ட பல குற்றங்கள் தொடர்பில் ஆய்வு செய்கின்றது.

   

அதனுள் இன அழிப்பு அல்லது இனப்படுகொலையும் உள்ளடங்கும். எனவே பல குற்றங்கள் தொடர்பில் ஆய்வு செய்யும் ஒரு விசாரணைக் குழுவிடம் ஒரு குற்றத்தை மட்டும் நாம் தூக்கிக் காண்பிக்க முடியுமா? அவ்வாறெனில் நாம் மற்றைய குற்றங்கள் கண்டறியப்பட்டு விடக்கூடாது என நினைக்கிறோமா? அல்லது மற்றைய குற்றங்களுக்கு எமக்கு நீதி வேண்டாம் என நினைக்கிறோமா? மேற்படி தீர்மானம் தொடர்பில் நாம் வழங்கியிருக்கும் வியாக்கியானம் சர்வதேச சட்ட நிபுணர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. மேலும் அந்தப் பிரேரணையின் கருப்பொருள் தமிழர் தாயகத்தில் நடைபெற்றது ஓர் இன அழிப்பு என்பதே. ஆனால் அதனை நாங்கள் மறுக்கவில்லை.

அதேபோன்று அது தொடர்பில் பேசுவதற்கு நாம் அச்சம் கொள்ளவுமில்லை. நாங்கள் முன்னதாகவே நாடாளுமன்றில் கூட அவ்வாறு பேசியிருக்கின்றோம். எனினும் இனப்படுகொலை எனப்படும் குற்றம் நடைபெற்றுள்ளதா? என்பதை தீர்மானிப்பதற்கு முதலில் குற்றமனம் என்பது நிரூபிக்கப்படவேண்டும். இதனால் ஐ.நா செயலாளர் நாயகத்திற்கு, விளக்கமளித்த சர்வதேச நிபுணர்கள் இனப்படுகொலை அல்லது இன அழிப்பு என்பது தொடர்பில் விளக்கமளிக்கவில்லை. அவர்கள் மனித உரிமை மீறல்களும் அதனுடன் ஒத்த மற்றய சர்வதேச குற்றங்களும் நடந்தனவா என்பதையே ஆய்வு செய்யவுள்ளார்கள்.

எனவே அதனுள் இனப் படுகொலை அல்லது இன அழிப்பு, என்னும் விடயமும் உள்ளடக்கப்படுகின்றது. அதாவது போர்க்குற்றங்கள், மனிதத்துவத்திற்கு மாறான குற்றங்கள், அழிப்பு நடவடிக்கைகள், துன்புறுத்தல்கள் போன்றன. எனவே நடைபெறும் விசாரணைகள் இங்கே எவ்விதமான சர்வதேச குற்றம் நடைபெற்றிருக்கின்றது. என்பதனை ஆய்வு செய்வதற்காகவே நடைபெறுகின்றது. எனவே இனப்படுகொலை அல்லது இன அழிப்பு உள்ளிட்ட பல குற்றங்கள் தொடர்பிலான விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கையில். அதில் உள்ள இனப்படுகொலை என்ற ஒரு விடயத்தை மட்டும் தூக்கிப் பிடித்துக்கொண்டு நிற்பது புத்திசாலித்தனமான நடவடிக்கையாக அமையப்போவதில்லை.

மேலும் அவ்வாறான எங்கள் நடவடிக்கை குறித்த சர்வதேச விசாரணை நடவடிக்கைகளை மலினப்படுத்தும் ஒரு நடவடிக்கையாகவே அமையும். எனவே எவ்வாறான குற்றம் இங்கே நடைபெற்றது. என்பது கண்டறியப்படவேண்டும். அதற்கு முன்னர் அவர்களுடைய சுயாதீனமான விசாரணையில் நாங்கள் குறுக்கிட்டு,அவர்களுடைய விசாரணையின் பெறுமதியை குறைத்துவிடக் கூடாது. அதற்காகவே நாம் வடமாகாண சபையின் பிரேரணை ஒன்றுக்கு அவ்வாறு வியாக்கியானம் வழங்கினோம். அதனைவிட வேறு அச்சம் அல்லது அதனை பேசுவதில் எமக்கு மாறுபட்ட கருத்துக்கள் உள்ளதாக யாரும் நினைத்து விடவேண்டாம். என்றார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=119176&category=TamilNews&language=tamil

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.