Jump to content

மகிந்தவின் கைப்பொம்மையாக செயற்படும் சிவாஜிலிங்கமும் புலம்பெயர் பூனைகளும்


Recommended Posts

 

Published on September 17, 2014-8:12 pm   ·   

 sivajilingam--150x150.gifசிறீலங்கா சுதந்திரக்கட்சியின் பிரதிநிதி ஒருவருடன் இணைந்து வெளிநாட்டுக்கு தமிழ் இளைஞர் யுவதிகளை குடிபெயர்க்கும் கூட்டுவேலையில் ஈடுபட்டுவரும் இராணுவ புலனாய்வாளர்களுடன் தொடர்புகளை கொண்டிருக்கும் ஒருவர், சிவாஜியின் பிரேரணைகளுக்கு பின்னால் தானே இருந்து முழுமூச்சில் செயல்படுவதாக பகிரங்கமாக கூறித்திரிவதாகவும், சிவாஜியின் பிரேரணைக்கு ஆதரவு தெரிவிக்காத கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர்கள் சிலருக்கு தொலைபேசியில் மிரட்டியதாகவும் அறிய முடிகின்றது. 
 
இவற்றிலிருந்து நாம் ஒரு இறுதி முடிவுக்கு வரமுடிகின்றது. ஒரு சிலரின் (இராணுவ புலனாய்வாளர்களினதும் அவர்களது கைக்கூலிகளினதும்)  (Blackmail) நெருக்குதலுக்குள் நின்று கொண்டு சிவாஜிலிங்கம் வேலை செய்கிறார். அல்லது தனது சுயமூளையை யாரிடத்திலோ அடைமானம் வைத்து விட்டு, இரவல் மூளையில் அவர்களின் சுயலாபநோக்கத்திலமைந்த நிகழ்ச்சிநிரலுக்காக வேலை செய்கிறார். அல்லது அவர்கள் தமது குறுகிய விருப்பங்களை, எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கு தெரிந்தோ தெரியாமலோ ஒரு கருவியாக சிவாஜிலிங்கம் பயன்படுத்தப்படுகின்றார் என்பதே அதுவாகும்.
 
சிவாஜிலிங்கத்தை இயக்கும் இராணுவ புலனாய்வாளர்களுடன் தொடர்புகளை கொண்டிருக்கும் அந்த நபர் தொடர்பில் சிவாஜிலிங்கம் மறுப்பு தெரிவிப்பாராக இருந்தால், அந்த நபர் தொடர்பாகவும், அந்த நபருக்கும் சிவாஜிலிங்கத்துக்கும் இடையிலான உறவின் பின்னணி தொடர்பாகவும், அந்த நபருடன் இரகசிய தொடர்புகளை பேணிவரும் ஏனையவர்கள் பற்றியும் முழுமையான விவரங்களை பகிரங்கப்படுத்த முடியும்.
 
முக்கிய கவனத்துக்கு:
 
இனி சிவாஜிலிங்கம் என்ன செய்யப்போகின்றார்? என்பதற்கு அப்பால், இதுவரை என்ன செய்தார்? என்று பார்ப்போமாக இருந்தால், அவரது கடந்தகால செயல்பாடுகள் சந்தேகங்களையும், அதிருப்திகளையும், விசனங்களையுமே கொண்டு வந்துள்ளன. அவரது கடந்தகால கசப்பான செயல்பாடுகளை நோக்குவோமாக இருந்தால்,
 
கூட்டமைப்பின் முடிவுக்கு கட்டுப்படாமல், தன்னிச்சையாக முடிவெடுத்து 2010ம் வருடம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு, மகிந்தவுக்கு எதிரான வாக்குகளை சவாலான எதிர்க்கட்சிக்கு சேரவிடாமல் தன்பக்கம் திசை திருப்பி மகிந்தவின் வெற்றிக்கு மறைமுக ஆதரவு வழங்கியமை.
 
இதனால் கூட்டமைப்புக்கும், அதில் அங்கத்துவம் வகிக்கும் தான் சார்ந்த ரெலோ கட்சிக்கும் விசுவாசமாகவும், கட்டுபாடுடனும் நடக்காததால் கட்சியை விட்டு, அக்கட்சியின் தலைமைக்குழுவால் வெளியேற்றப்பட்டார்.
 
வெளியேற்றப்பட்ட இக்காலப்பகுதியில், கூட்டமைப்பை பலவீனப்படுத்த வேண்டும் என்ற மகிந்தவின் ஆலோசனைக்கு அமைவாக, டக்ளஸ் தேவானந்தா, ஆனந்தசங்கரி, புளொட் சித்தார்த்தன், ஈபிஆர்எல்எப் வரதர் அணி ஸ்ரீதரன், ஸ்ரீரெலோ உதயராசா, ரெலோ ஸ்ரீகாந்தா, ஈரோஸ் பிரபா, பிள்ளையான் ஆகியோரை இணைத்து தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு எதிராக “தமிழ் அரங்கம்” எனும் பெயரில் மற்றுமொரு “ஜனநாயக தமிழ் தேசியக்கூட்டமைப்பை” உருவாக்க கடுமையாக வேலை செய்தார்.
 
பின்னர் வல்வெட்டித்துறை நகரசபை தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடப்போவதாக சிவாஜிலிங்கம் மிரட்டியதும், அது தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தர் குலநாயகத்தின் வெற்றியை பாதிக்கும் என்பதால் செல்வம் அடைக்கலநாதனுக்கு தெரியாமல் மாவை.சேனாதிராசாவால் கூட்டமைப்புக்குள் உள்வாங்கப்பட்டு, “இரண்டு வருடங்களுக்கு சிவாஜி தவிசாளர், அடுத்து இரண்டு வருடங்களுக்கு குலநாயகம் தவிசாளர்” என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் வல்வெட்டித்துறை நகரசபைத்தேர்தலில் கூட்டமைப்பின் பெயரால் போட்டியிட வைக்கப்பட்டார்.
 
மக்கள் தீர்ப்பின் பிரகாரம் இவர்கள் இருவரையும் விட அனந்தராஜ் அதிகூடிய வாக்குகளைப்பெற்று தவிசாளராக தெரிவு செய்யப்பட்டதால், தான் தலைவராக தெரிவு செய்யப்படாத அதிருப்தியில், எதிர்க்கட்சியான ஈ.பி.டி.பி உடன் இணைந்து நகரசபையை இயங்க விடாமல் குழப்பங்களை விளைவித்தார். இதன் தொடர்ச்சியாகவே இப்போது மாகாணசபைக்குள்ளும் இவரது குழப்பங்கள் நீளுகின்றன.
 
சிவாஜியின் இந்த செயல்பாடு தொடர்பாக, “மாகாணசபை உறுப்பினர்கள் பொறுப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டும்.” என்று மாவை.சேனாதிராசா இன்று (17.09.2014 அன்று) ஊடகங்கள் ஊடாக பகிரங்கமாகவே அறிவுரையும் கூறியிருக்கின்றார்.
 
ஆர்வம் இருக்கலாம், ஆர்வக்கோளாறு இருத்தல் தகாது என்பார்கள். அதுபோலவே உணர்ச்சி வசப்பட்டு எடுக்கும் முடிவுகள் தனி ஒரு மனிதனின் பெருமையை மட்டுமல்ல, அவரை சார்ந்திருக்கும் ஒரு சமுகத்தின் இருப்பையே குலைத்து விடும்! உணர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பதை விடுத்துவிட்டு, நின்று நிதானித்து சிந்தித்து செயலாற்றுவதே, முன்னேறுவதே சமகாலச்சூழலுக்கு அவசியமாகும். தமிழ் மக்களின் நடைமுறை வாழ்வியலில் இருந்தும், தமது கடந்தகால அரசியல் நடத்தைகளிலிருந்தும் இந்த அநுபவங்களை பொறுப்பு வாய்ந்த மக்கள் பிரதிநிதிகள் இன்னும் கற்றுத்தேற வேண்டியிருக்கிறது.
 
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.