Jump to content

வயலிலிருந்து திரும்பியவன்.


Recommended Posts

கால்களில் கிடந்த மண் பொருக்குகளை

தட்டிக் கொண்டிருக்கையில்

சிதைந்து ஓலமிடத் தொடங்கின

விளையாதுபோன பாட்டனின் கனவுகள்.

 

கதைகளில் சொல்லாத

ரேகைகளில் கூறாத

விரல்களால் தீட்டாத

பாட்டனின்  கனவுகள்

கூடி மொய்க்கத்தொடங்கின,

 

விளைந்த நெருக்கத்தில்

நான் அறியாத

பாட்டனின் முத்தமொன்றை பரிசளித்தன,

 

உடல் சிலிர்க்க நடுக்கத்தோடு

முத்தம் வெளியேற்றிய

கண்ணீரை  முகர்ந்தவை,

கால நாற்றங்களால் உணர்வடக்கிக் கொண்டன,

 

கண்ணீர் வெளியேறிய வெற்றிடத்தில்

பாட்டனின் வயல் வளரத்தொடங்கியது.

விளையாத கனவுகள்

உணர்வுடைத்து இனி வேர்விடக் கூடும்.

 

எனிலும்,

நான் இன்றே எனது  வயலை

கொலை செய்துவிடப் போகிறேன்.

Link to comment
Share on other sites

நிறைய தரம் படித்தாலும் என்னால் முழுதாக விளங்க முடியவில்லை :(

(கொஞ்சம் கொஞ்சமாக புரிந்து கொண்டேன்)

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

நிறைய தரம் படித்தாலும் என்னால் முழுதாக விளங்க முடியவில்லை :(

(கொஞ்சம் கொஞ்சமாக புரிந்து கொண்டேன்)

என்ன செய்வது என்று எனக்கும் தான் புரியவில்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் நெற்கொழு அறுவடைகள் பெரும் பாதிப்பைக் கொடுக்குமென்றா வயல்களையே கொலை செய்ய எண்ணுகிறீர்கள்?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.