Jump to content

சுவிட்சர்லாந்து பற்றிய மனதைப் பிரமிக்க வைக்கும் 12 அம்சங்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

swiss.jpgசுவிட்சர்லாந்தில் கடும் குளிர் காலத்தில் இரவு முழுதும் வெண்பனி பொழிந்து பாதைகளில் வாகனங்கள் பயணிக்கவே முடியாது

என்ற நிலை ஏற்பட்டாலும் காலை 8 மணிக்குள் அனைத்து முக்கிய பிரதான பாதைகளும் துப்பரவாக்கப் பட்டு பயணிக்க ஏற்றதாக மாற்றப் பட்டு விடும்.

2. உலகில் அணுவாயுத யுத்தம் ஏற்பட்டால் தனது நாட்டு மக்கள் அனைவரையுமே நிலத்தின் கீழ் அமைக்கப்பட்ட பாதுகாப்பு அறைகளில் குடியமர்த்தவும் மேலும் பல மாதங்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றும் வசதியும் சுவிட்சர்லாந்திடம் உள்ளதாக தகவல்கள் உள்ளன.

swissfort.jpg

3. சுவிட்சர்லாந்தில் உள் நாட்டு யுத்தம் ஏற்பட்டால் தனது அதிவேகப் பாதைகளில் மிக விரைவாக விமானங்கள் தரை இறங்க அல்லது டேக் ஆஃப் ஆக உதவும் விதத்தில் உடனடியாக மாற்றி அமைக்கும் தொழிநுட்பத்தைக் கொண்டிருக்கின்றதாம்.

4. ஒலியை விட வேகமாகப் பயணிக்கும் சூப்பர் சோனிக் விமானங்களை சுவிஸ் வான் பரப்பில் பயிற்சி நடவடிக்கைக்காக பயன்படுத்தினால் அதன் உச்சக் கட்ட வேகத்தில் ஒரு போதும் பயணிக்க முடியாது. காரணம் சுவிட்சர்லாந்து மிகச் சிறிய நாடு என்பதால் ஒலியின் வேகத்துக்கு அண்மையாகப் பயணித்தால் இன்னொரு நாட்டின் வான் பரப்பில் கட்டுப்பாட்டை மீறி நுழைய நேரிடலாம்!. ஆனால் பிரத்தியேகமாக சூப்பர் சோனிக் வேகத்தில் பயணிக்க பிரான்ஸின் அனுமதியை சுவிஸ் பெற்றுள்ளது

.8095983927_d680fca1ff_c_o.jpg

5. சுவிட்சர்லாந்தின் லௌசான்னே மாநிலத்தில் அரசால் வழங்கப்படும் குப்பைப் பையின் அளவை விட அதிகளவு குப்பையை வீசினால் அதற்கேப்ப குப்பைக்கான வரியும் அதிகரிக்கும் அத்துடன் ஏனைய மாநிலங்களில் அரசின் குப்பைப் பையைத் தவிர வேறு பையை குப்பைக்காகப் பயன்படுத்தினால் சட்டச் சிக்கல்களை எதிர் நோக்கவும் நேரிடும். குப்பைகளை பிரித்து எறிவதிலும் கடுமையான சட்டதிட்டங்களை பின்பற்றுகின்றது அந்நாடு. பொது இடங்களை சுத்தமாக வைத்திருப்பதில் அரசும் அந்நாட்டு மக்களும் மிகுந்த அக்கறை உடையவர்கள்.

6. ஒப்பீட்டளவில் மிகச் சிறிய நாடான சுவிட்சர்லாந்தில் 4 தேசிய மொழிகள் பேசப் படுகின்றன. அவையாவன ஜேர்மன், பிரெஞ்சு, இத்தாலியன் மற்றும் ரோமன் ஆகும். 

7. பால் உற்பத்தி மற்றும் சாக்லேட்டுக்கு பிரபலமான சுவிட்சர்லாந்தில் சாக்கலேட்டுக்கள் தங்கத்தைப் போன்று ஜொலிக்கும் விதத்தில் உருவாக்கவும் நுட்பங்கள் கையாளப் படுகின்றதாம்.

Gold-Chocolate-EN.jpg

8. சுவிட்சர்லாந்து தனது நாட்டுக்குத் தரை வழியாக எதிரிகள் ஊடுருவதைத் தடுக்க மிகச் சொற்பமான இராணுவத்தினரைக் கொண்டு இலகுவாக தடுக்க முடியும். மேலும் சில பொத்தான்களை அழுத்துவதன் மூலம் சுவிட்சர்லாந்துக்குள் நுழையும் அனைத்து வழிகளிலும் உள்ள முக்கிய சுரங்கப் பாதைகளையும் ஸ்டீல் டியூப் மூலம் அதிவேகப் பாதைகளையும் மூடி விட முடியுமாம்.

மேலும் எதிரி நாட்டின் இராணுவ கவச வாகனங்கள் அதிவேகப் பாதையையே சுரங்கங்களையோ தாண்டுவதை 1 மணித்தியாலத்துக்குள் பூரணமாகத் தடுக்க முடியும். இதற்கு உதவியாக அனைத்து முக்கிய பாலங்களிலும் எப்போதும் தயாராக வெடிகுண்டுப் பெட்டிகள் மறைத்து வைக்கப் பட்டுள்ளதுடன் மத்தியிலுள்ள ஒரு சுவிட்சைத் தட்டுவதன் மூலம் அனைத்து முக்கிய பெயர் பலகைகளும் மூடப்படுமாறு செய்யவும் முடியும். இதைவிடப் பல மலைகளின் அடிவாரத்தில் வலிமையான இராணுவத் தளங்களும் காணப் படுகின்றனவாம்.

9. சுவிட்சர்லாந்தின் பல கார்கள் எப்போதும் புதியவையாக இருக்கும். குறித்த வாகனத்தில் ஏதும் கீறல் அல்லது நெளிவு ஏற்பட்டால் வெகு விரைவில் அது திருத்தம் செய்யப் பட்டுவிட வேண்டும். ஏனெனில் வாகனத்தின் தரம் மற்றும் பாதுகாப்பை குறிப்பிட்ட கால எல்லைக்குள் பரிசோதனை செய்யும் சட்டதிட்டங்களும் அங்கு கடுமையானவையாக இருக்கின்றன.

94.png

10. சுவிஸ் அரசு தனது நாட்டில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கையைக் குறைத்து அவரவர் தகுதிக்கு ஏற்ற விதத்தில் வேலை வாய்ப்பை வழங்குவதன் மூலமும் இலகுவாக வேலையைக் கற்றுக் கொண்டு தானியங்கி முறையில் செயற்படக் கூடிய திறமையையும் வளர்த்து வருகின்றது. இதன் மூலம் சமூக ரீதியான உதவிப் பணம் வழங்கப் படுபவர்கள் தொகையையும் குறைப்பதிலும் தீவிர கவனம் செலுத்தி வருகின்றது

11. சுவிட்சர்லாந்தின் பொதுமக்கள் வாகனப் போக்குவரத்து மிகத் திறமையாக இயங்கி வருகின்றது. ஒரு தனித்த டிக்கெட்டில் ஒரு நாள் முழுவதும் அல்லது ஒரு வருடத்திற்கு பஸ், ரயில், படகு, கேபிள் கார் என அனைத்து வாகனங்களிலும் பயணிக்க முடியும். மற்றும் ஒவ்வொரு மணித்தியாலத்துக்கும் அல்லது ஒவ்வொரு 1/2 மணித்தியாலத்துக்கும் ஒரு தடவை சுவிட்சர்லாந்தின் அனைத்து பிரதான ரயில் நிலையங்களிலும் ரயில் வந்த படியே இருக்கும். எனவே ஒன்றுக்கு மேற்பட்ட ரயில்களில் பயணிக்கும் போது சராசரியாக 20 நிமிடங்களுக்குள் எந்த ஒரு ரயில் நிலையத்திலும் தேவையான ரயிலைக் கைப்பற்ற முடியும். ரயிலில் டிக்கெட் இன்றி பலதடவை பயணித்து மாட்டிக்கொண்டால் அது ஒரு கிரிமினல் குற்றமாக கருதப்படும். 

12. சுவிஸ் அரசு சராசரியாக வேலை இல்லாதவர்களுக்கு 2 வருடங்களுக்கு உதவிப் பணம் அளிக்கும். இதில் சுற்றுலாப் பயணம் தவிர்த்து அவசிய பிராயணங்கள் மற்றூம் தங்குமிட செலவு ஆகியவையும் உள்ளடக்கப் பட்டுள்ளது.

இவை பல இணையத்தளங்களிலிருந்து திரட்டப்பட்ட தகவல்களாகும்.

http://www.4tamilmedia.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவீசிலை இருக்கிற எங்கடைசனம் குடுத்துவைச்ச சனம்... :D

 

Spoiler

இருக்கிறதெண்டால் ஒண்டில் சுவீசிலை இருக்கோணும் இல்லாட்டி கனடாவிலை இருக்கோணும்.நாமள் இப்பிடியே இருக்க வேண்டியதுதான்.. :icon_mrgreen: 

.https://www.facebook.com/video/video.php?v=486651224750995

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவீசிலை இருக்கிற எங்கடைசனம் குடுத்துவைச்ச சனம்... :D

 

Spoiler

இருக்கிறதெண்டால் ஒண்டில் சுவீசிலை இருக்கோணும் இல்லாட்டி கனடாவிலை இருக்கோணும்.நாமள் இப்பிடியே இருக்க வேண்டியதுதான்.. :icon_mrgreen: 

.https://www.facebook.com/video/video.php?v=486651224750995

 

சுவிஸில் உள்ளவை.. டபுள் பெனிபிட் எடுக்க லண்டனுக்கு குடிபெயர்வதை என்னெண்டு எடுக்கிறது கு.சாண்ணா. சுப்பர்.. டூப்பர்.. சுழியர்கள் என்றோ..! :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சிறிய நாடு இவ்வளவு வளங்களுடன் இருப்பது மிகவும் மகிழ்ச்சியான விடையம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.