Jump to content

சிவப்பாகும் இலங்கை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிவப்பாகும் இலங்கை - குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக - தேவ அபிரா :-

22 செப்டம்பர் 2014

இன்று முகப்புத்தகத்தைப் பார்த்துக்கொண்டிருந்த போது வவுனியா இறம்பைக்குளத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் தமிழ்ப்பெண் போல் உடையணிந்த சீனப்பெண் ஒருவர் பாடசாலைச் சிறுவர்களுடன் நிற்கும் படத்தைக் காண நேர்ந்தது. தேசிய விடுதலைப் போராட்டத்தின் தோல்விக்குப் பிறகு தமிழ்ச் சமூகம் வெளி உலகுடன் நேரிடையாகத் தொடர்பாடலை நிகழ்த்தி வருகிறதென்பது வெள்ளிடை மலை. ஈழவிடுதலைப்போராட்டம் ஆரம்பித்த காலத்தில் சீனத் தோற்றம் கொண்ட சில பிக்குகள் யாழ்நகர வீதிகளில் றாபானைத்தட்டிக் கொண்டு சென்றது நினைவுக்கு வருகிறது. அவர்கள் அரசின் உளவாளிகள் எனக்கருதப்பட்டுப் போராளிகளால் கைது செய்யப்பட்டதும் நினைவுக்கு வருகிறது. இந்தச் சீனப் பெண்மணிக்கு அவரின் பின்னணி எதுவாக இருந்த போதும் அன்று நிலவியது போன்ற ஆபத்து இன்று இல்லை.

வேறு இன மக்கள் தமிழ் மக்களது பாரம்பரிய உடைகளை உடுத்தும் போது, தமிழைப் பேசும் போது தமிழ் மொழியிற் தேவாரம் பாடும் போது நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். முகநூலில் இப்படியான விடையங்களைத் தெரிவிக்கும் பல படங்களும் ஒளிப்பதிவுகளும் வலம் வருகின்றன. இந்த மகிழ்ச்சிக்கு இன்னொரு முகமும் இருக்கிறது அண்மையிற் புலம் பெயர்ந்த தமிழ்க் குடும்பத்துடன் இலங்கைக்குச் சுற்றுலாவுக்கு வந்த அய்ரோப்பியப் பெண்மணி ஒருவர் கசூரினாக்கடற்கரையில் அவரது கலாசார முறைப்படி நீராடிக் கொண்டிருந்த போது அவரிடம் பாலியற் சேட்டைகளைச் செய்யவும் இச்சில மகிழ்ச்சி முகங்கள் முயன்றிருக்கின்றன.

இலங்கையில் வாழும் தமிழர்களை விடவும் புலம் பெயர்ந்த தமிழ்ச் சமூகம் ஏனைய இனங்களுடன் தவிர்க்க முடியாதபடி ஊடாடி வருகிறது. புலம் பெயர்ந்த முதற் தலைமுறையில் ஒரு சிலரும் இரண்டாம் தலைமுறையில் பலரும் ஏனைய இனங்களுடன் திருமணக்கலப்பு வரை சென்றுள்ளனர்; செல்கின்றனர்.

உலகம் கிராமமாக மாறும் போது ஒரு சமூகமாக எமது எண்ணங்களும் பார்வைகளும் அகன்று செல்கின்றன.

இன்னுமேன் வடக்கு கிழக்கில் பரந்து செறிந்திருக்கும் இராணுவத்துடனும் கூட தமிழ் சமூகத்தின் சில உறுப்பினர்களுக்கு உறவும் நெருக்கமும் ஏற்பட்டு வருகிறது. (சாதியம் தொடர்பான விடையத்தில் மட்டும் நமது சமூகம் தனது பார்வைகளைக் குறுக்கி வைத்திருப்பது சமூகவீனமானது)

எவ்வாறாயினும் தமிழ் அடையாளம் என்பது நெகிழ்வுத்தன்மைக்கு உட்பட்டு வருகிறது. சரி பிழைக்கு அப்பால் பண்பாட்டுத்தளத்தில் இது காலப்போக்கில் மாற்றங்களை ஏற்படுத்தலாம்.

மிக வேகமாக வளர்ந்து வரும் சீனப்பொருளாதாரம் காரணமாகச் சீனா அபரிமிதமான அந்நியச்செலவாணியைக் கொண்டிருக்கிறது. இதனால் தனக்குத் தேவையான எரிபொருள் மற்றும் அத்தியாவசியமான உற்பத்திகளுக்கான மூலப் பொருட்களைப்பெற்றுக்கொள்வதற்காக சீனா தனது சந்தைகளை விரிவுபடுத்தும் நோக்குடன் உலகளாவிய ரீதியிற் முதலீடுகளைச் செய்து வருகிறது. இதன் வழி சீனா இலங்கையிலும் பொருளாதார மற்றும் இராணுவக் கேந்திரம் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் தனது முதலீடுகளைச் செய்து வருகிறது

அண்மையில் என்னுடன் பேசிய நண்பர் ஒருவர் இலங்கை சிவப்பு மயமாகி வருகிறதாகச் சொன்னார். இலங்கையில் அதிகரித்து வரும் செஞ்சீன ஆதிக்கத்தைத் தான் அவர் அவ்வாறு குறிப்பிட்டார். இலங்கையில் முன்னொருகாலம் எழுச்சியுற்றிருந்த சீன சார்பு இடதுசாரிகள் இன்றிருந்தால் இதனையிட்டுச் சந்தோசப்பட்டிருப்பார்கள் என்றும் சீன சார்புக் கட்சியான ஜேவிபி இலங்கையில் ஏற்பட்டு வரும் சீன ஆதிக்கத்தையிட்டு ஒரு வார்த்தை பேசவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். மேற்குலகம் மனசாட்சியின்றி யுத்தக்குற்றங்களை வேண்டுமென்றே நிகழ விட்டுப்பின் அதைக்காட்டி இலங்கையை வழிக்கு கொண்டு வரலாம் என்று இலவுகாத்த கிளிபோலிருக்க சிங்களச் சிங்கம் செங்கம்பளம் விரித்துச் சீனச் சிங்கத்தை ஓடோடிச் சென்று வரவேற்ற காட்சியை மேற்குலகம் இயலாமையுடன் பார்த்திருப்பதை அவர் நினைவு படுத்தினார்.

சீன ஆதிக்கம் இலங்கைக்கு கொண்டு வரப்போகும் நன்மைகளை விடவும் தற்போதைய ஆட்சியாளர்களின் இருப்புக்கு கொண்டு வரப்போகிற நன்மைகளே அதிகம்.

அண்மையில் நிகழ்ந்த அநாகரிக தர்மபால அவர்களின் 150 வது பிறந்த தின நிகழ்வில் இலங்கையின் பெரும்பான்மை இனத்தவர்கள் தாங்கள் தங்களைச் "சிங்களபௌத்தர்கள்" எனப் பெருமையுடன் சொல்லக் கூடிய நிலைக்கு அல்லது துட்டகெமுனு குறித்துப் பெருமையுடன் பேசக் கூடிய நிலைக்கு நாட்டைத் தனது அரசாங்கம் மாற்றியுள்ளதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இலங்கையில் சிங்கள பௌத்த பேரினவாத நிலைப்பாட்டுக்கான அடித்தளத்தை நிறுவிய ஒருவரின் பிறந்த நாளில் பெரும்பான்மை இனத்தவர்கள் தங்களச் “சிங்கள பௌத்தர்கள்” என்று சொல்லக்கூடிய பெருமை நிலைக்கு வந்தமைக்கு தாமே காரணம் என்று பெருமையாகக்கூறிக் கொண்ட சனாதிபதி இலங்கையின் சிறுபான்மை இனங்கள் தங்களை “முஸ்லீம்கள்” என்றோ “தமிழர்கள்” என்றோ பெருமையுடன் கூறக் கூடிய சூழ்நிலைகள் நிலவவில்லை என்பதை வேண்டுமென்றே தான் கூறாமல் விட்டிருப்பார். ஏனென்றால் அவர்கள் “வெறும் இலங்கையர்கள் ”

இலங்கையில் சீன ஆதிக்கம் கொண்டு வரப்போகும் சுரண்டல்கள் மற்றும் கலாசார பண்பாட்டுத்தாக்கங்கள் குறித்துச் சிங்கள அடிப்படைவாதிகள் ஏற்கனவே கவலைப்பட ஆரம்பித்து விட்டனர். ஆனால் இலங்கை சனாதிபதிக்கு இருக்கும் கவலைகள் இவைதான்:

· ஒன்று மேற்குலகு விரித்து வரும் யுத்தக்குற்ற விசாரணை வலையில் இருந்தும் ஆட்சிமாற்றச் சதிகளில் இருந்தும் இருந்து தப்பிக்கொள்ள வேண்டும்

· சிங்கள பௌத்த பேரினவாத உணர்வுகளைத் தூண்டி வாக்கு வங்கியைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும்.

சீன சனாதிபதியின் இலங்கை வரவின் போது இலங்கையும் சீனாவும் இணைந்து பயங்கரவாதம், தீவிரவாதம், பிரிவினைவாதம் போன்றவற்றிக்கான தமது எதிர்ப்பையும் வெளியிட்டுள்ளன இந்த நிலையில் ஆசிய அரசியல் கட்சிகளின் 8ம் சர்வதேச மாநாட்டை கொழும்பு தாமரைத் தடாகம் மஹிந்த ராஜபக்ஸ அரங்கில் ஆரம்பித்து வைத்துப் பேசிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அனைத்து பயங்கரவாதிகளும் ஒரே விதமானவர்கள் எனவும் அனைத்து பயங்கரவாதிகளும் அப்பாவிப் பொதுமக்களைப் படுகொலை செய்யவே தயாராகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.

இங்கேயும் கூட அவர் வேண்டுமென்றே கூறாமல் விட்ட விடையம் என்ன வெனில் அனைத்து அரசாங்கங்களும் கூட ஒரேமாதிரியானவை என்பது தான்.

சீனாவில் சிறுபான்மை இனங்களுக்கு என்ன நடக்கிறது என்பதை அறியாமல் இருக்குமளவுக்கு இலங்கை சனாதிபதி முட்டாளல்ல. ஏனெனிலில் காஸ்மீரிலும் மணிப்பூரிலும் நாகலாந்திலும் ஆந்திரக்காடுகளிலும் நிகழும் மனித உரிமை மீறல்களைக் கூறி இந்தியாவைப்பார்த்துக் கொடுப்புக்குள் சிரிக்கும் மகிந்த அவர்களுக்கு திபெத்திலும் ஒய்கூரிலும் நடக்கும் இன ஒடுக்குமுறைகள் தெரியாதவை அல்ல.

உலகத்தின் அனைத்து அரசாங்கங்களும் கூட அப்பாவி மக்களைக் கொல்லத் தயாராகத்தான் இருக்கின்றன என்ற உண்மையைச் சாதாரண மக்கள் அறிந்து தான் இருக்கிறார்கள்.

இலங்கை சிவப்பாகி வருகிறது என்று கவலைப்பட்ட நண்பருக்கு நான் சொன்னேன் சுதந்திரத்திற்குப் பின்னான இலங்கை நான்கு முறை உண்மையிலும் சிவப்பாகி இருக்கிறது தெரியுமாவென்றேன். தெரியாதென்றார்

1971ம் ஆண்டிலும் 1989 ஆண்டிலும் நிகழ்ந்த ஜே.வி.பி கிளர்ச்சிகளின் போது கிளர்ச்சியாளர்களும் அரசும் ஒருவரை ஒருவரும் அப்பாவிமக்களையும் கொன்ற போது போது இலங்கை இரண்டு முறைகள் மனிதர்களின் இரத்தத்தால் சிவப்பானது. பின்னர் இந்திய இராணுவம் அப்பாவித் தமிழ் மக்களைக் கொன்ற போது இலங்கை மூன்றாம் முறை சிவப்பானது. இறுதியாக முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்ட போது இலங்கை நான்காம் முறையும் சிவப்பானது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/111806/language/ta-IN/article.aspx

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதையே தான் நானும் சுட்டிக் காட்டியிருக்கிறேன்: தமிழ் நாட்டில் தமிழின் நிலை, யூ ரியூபில் சீமான் தம்பிகளின் பிரச்சார வீடியோக்கள் பார்ப்போரைப் பொறுத்த வரையில் கீழ் நிலை  என நினைக்க வைக்கும் பிரமை நிலை. உண்மை நிலை வேறு. இதை அறிய நான் சுட்டிக் காட்டியிருக்கும் செயல் திட்டங்களை ஒரு தடவை சென்று தேடிப் பார்த்து அறிந்த பின்னர் எழுதுங்கள். மறு பக்கம், நீங்கள் மௌனமாக சீமானின் பாசாங்கைக் கடக்க முயல்வதாகத் தெரிகிறது. மொழியை வளர்ப்பதென்பது ஆட்சியில் இருக்கும் அரசின் கடமை மட்டுமல்ல, ஆட்சிக்கு வர முனையும் எதிர்கட்சியின் கடமையும் தான். தமிழுக்கு மொளகாய்ப் பொடி லேபலில் இரண்டாம் இடம் கொடுத்தமைக்குக் கொதித்த செந்தமிழன் சீமான், தானே மகனுக்கு தமிழ் மூலம் கல்வி கொடுக்கத் தயங்குவதை "தனிப் பட்ட குடும்ப விவகாரம்" என பம்முவது வேடிக்கை😂!
    • அதைத்தானே ராசா  நானும் சொன்னேன் அதே கம்பி தான்...
    • இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம்  கிடைச்சு 75ஆண்டு ஆக‌ போகுது இந்தியா இதுவ‌ரை என்ன‌ முன்னேற்ற‌த்தை க‌ண்டு இருக்கு சொல்லுங்கோ நாட்டான்மை அண்ணா 😁😜............................ அமெரிக்க‌ன் ஒலிம்பிக் போட்டியில் 100ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்லுகின‌ம் இந்தியா வெறும‌னே ஒரு ப‌த‌க்க‌ம்............இந்திய‌ர்க‌ள் எந்த‌ விளையாட்டில் திற‌மையான‌வ‌ர்க‌ள் சொல்ல‌ப் போனால் கிரிக்கேட் விளையாட்டை த‌விற‌ வேறு விளையாட்டில் இந்திய‌ர்க‌ள் பூச்சிய‌ம்.................ஹிந்தி தினிப்ப‌தில் காட்டும் ஆர்வ‌ம்  பிள்ளைக‌ளுக்கு விளையாட்டு அக்க‌டாமி திற‌ந்து அதில் திற‌மையை காட்டும் வீர‌ர்க‌ளை புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப‌லாமே................28கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்கின‌மாம்................யூடுப்பில் ம‌த்திய‌ அர‌சு இந்தியாவை புக‌ழ் பாட‌ சில‌ர‌  அம‌த்தி இருக்கின‌ம்.....................பெரும்பாலான‌ ப‌ண‌த்தை போர் த‌ள‌பாட‌ங்க‌ளை வேண்ட‌ ம‌ற்றும் இராணுவ‌த்துக்கே ம‌த்திய‌ அர‌சு ப‌ண‌த்தை ஒதுக்குது................ இந்தியாவே நாறி போய் கிட‌க்கு..........இந்தியா வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் எத்த‌னையாவ‌து இட‌த்தில் இருக்குது..............இந்தியா என்றாலே பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கும் நாடு என்று தான் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள்.................   இந்தியாவை விட‌ சின்ன‌ நாடுக‌ள் எவ‌ள‌வோ முன்னேற்ற‌ம் அடைந்து விட்டார்க‌ள்..............இந்தியா அன்று தொட்டு இப்ப‌ வ‌ரை அதே நிலை தான்.............இந்தியா 2020இல் வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ ஆகிவிடும் என்று போலி விம்ப‌த்தை க‌ட்டு அவுட்டு விட்டார்க‌ளே இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடா வ‌ந்திட்டா..............இந்திய‌ர்க‌ளுக்கு வ‌ல்ல‌ர‌சுசின் அர்த்த‌ம் தெரியாது.................இந்திய‌ர்க‌ள் ஒற்றுமை இல்லை அத‌னால் தான் சிறு முன்னேற்ற‌த்தையும் இதுவ‌ரை அடைய‌ வில்லை..............த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ள் டெல்லிக்கு போனால் டெல்லியில் அவைச்சு த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ளுக்கு ஊமை குத்து குத்தின‌ம் ..................இந்தியா ஏற்றும‌தி செய்வ‌தை விட‌ இற‌க்கு ம‌தி தான் அதிக‌ம்................டென்மார்க் சிறிய‌ நாடு டென்மார்க் காசின் பெரும‌திக்கு இந்தியாவின் ரூபாய் 11 அடி த‌ள்ளி நிக்க‌னும்   இந்தியா ஊழ‌ல் நாடு அன்டை நாடான‌ சீன‌னின் நாட்டு வ‌ள‌ர்சியை பார்த்தும் இந்திய‌ர்க‌ளுக்கு சூடு சுர‌ணை வ‌ர‌ வில்லை.............மொத்த‌த்தில் இந்தியா ஒரு குப்பை நாடு.............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை நேரில் போய் பாருங்கோ எப்ப‌டி வைச்சு இருக்கிறாங்க‌ள் என்று..................   ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்வ‌தில்லை அது தான் டென்மார் நோர்வே சுவிட‌ன் பின்லாந் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் அடைந்து இருக்கு...............இந்த‌ நாளு நாட்டிலும் டென்மார்க் சிட்டிச‌ன் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் லோன் எடுக்க‌லாம்..................அப்ப‌டி ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாடுக‌ளுக்கு உல‌க‌ அள‌வில் ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு............இந்தியா  வெறும‌ன‌ குப்பை தொட்டி நாடு..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஒரு விசிட் அடிக்க‌னும் ஜ‌ரோப்பாவுக்கு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு அப்ப‌ உண‌ருவின‌ம் இந்திய‌ம் திராவிட‌ம் என்ற‌ போர்வைக்குள் இருந்து நாம் ஏமாந்து விட்டோம் என்று இதை யாரும் மூடி ம‌றைக்க‌ முடியாது இது தான் உண்மையும் கூட‌......................இந்தியாவை த‌விர்த்து விட்டு உல‌க‌ம் இய‌ங்கும் சீன‌ன் இல்லாம‌ இந்த‌ உல‌க‌ம் இய‌ங்காது.............இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ சீன‌னின் முன்னேற்ற‌ம் இந்தியாவை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்...........நீங்க‌ள் பாவிக்கும் ஜ‌போனில் கூட‌ சீன‌னின் பொருல் இருக்கும்............இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு..............................................................
    • இங்கே நான் சீமானையோ அவர் மகனையே பற்றி பேசவில்லை. தமிழ்நாட்டில் தமிழின் நிலை எங்கே எப்படி இருக்கிறதென்பதை சுருக்கமாக சிவகுமார் சொல்கிறார் என்பதற்காக இணைத்த காணொளி.
    • இதைவிட முக்கியமானது புலனாய்வுப் பிரிவுகளின் அச்சுறுத்தல் என எண்ணுகிறேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.