Jump to content

முத்துக்கள் பத்து


Recommended Posts

lee1_2109991h.jpg
 

லீ க்வான் யூவுக்கு இன்று பிறந்தநாள். அவரைப் பற்றி அரிய முத்துக்கள் பத்து...

 சிங்கப்பூர் என்ற தேசத்தை செதுக்கிய சிற்பியான ‘லீ க்வான் யூ’, பாபாக்கள் என்று அழைக்கப்படும் சீனப் பாரம்பரியம் கொண்ட குடும்பத்தில் பிறந்தவர். வாழ்ந்து கெட்ட குடும்பத்தை லீயின் அம்மாதான் தூக்கி நிறுத்தினார்.
 
* சிறு வயதில் லீ க்வான் யூவுக்கு இங்கிலாந்து மீது ஈர்ப்பு அதிகம். முதல் உலகப்போரில் ஜப்பான், இங்கிலாந்தை பந்தாடியபோது அந்த ஈர்ப்பு அவருக்கு போய்விட்டது. அதுவே பின்னாளில் அவரது இங்கிலாந்து எதிர்ப்புக் கொள்கையாக மாறியது.
 
* உலகில் அதிக ஆண்டு காலம் ஜனநாயக அரசு ஒன்றின் பிரதமராக இருந்தவர் லீ. டோயின்பீயின் சிந்தனைகளால் கவரப்பட்டவர். ‘கற்பனைத்திறன் கொண்ட சிறுபான்மையினரே நாட்டை செதுக்குவார்கள்’ என்ற அவரது கருத்தில் நம்பிக்கை கொண்டவர்.
 
* இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை காந்திக்கு எவ்வளவு வருத்தத்தைக் கொடுத்ததோ லீக்கு அந்த அளவு வருத்தம் கொடுத்தது மலேசியா - சிங்கப்பூர் பிரிவினை. இயற்கை வளங்கள் இல்லாத சிங்கப்பூரை மலேசியர்கள் சிலர் ஏற்றுக்கொள்ள மறுத்தனர். அந்த கோபமே லீயின் வைராக்கியமாக மாறி சிங்கப்பூரை வளர்ச்சி பெறச் செய்தது.
 
* ‘அடியாத மாடு படியாது’ என்பதில் நம்பிக்கை கொண்டவர் லீ. ‘‘பள்ளியில் படிக்கும்போது நான் தவறு செய்தால் ஆசிரியர்கள் பிரம்பால் விளாசு வார்கள். அதுவே என்னை ஒழுக்கமாக மாற்றியது. அதனால்தான், தவறு செய்வோருக்கு பிரம்படி கொடுக்கும் தண்டனை அமல்படுத்தினேன்’’ என்பார்.
 
* விளையாட்டு, பொழுதுபோக்கு பிரியர் லீ. கோல்ப், நடனம், நீச்சல் அவருக்கு பிடித்தமானவை. சிகரெட், பீர் பழக்கம் இருப்பதை வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டவர். ஒரு கட்டத்தில் தொப்பை போடுவதால் பீரை நிறுத்தினார். புகைப்பதால் மக்கள் ஓட்டுப்போட யோசிக்கிறார்கள் என்று உளவுத்துறை சொன்னபோது அதையும் நிறுத்தினார்.
 
* லீயை பொறுத்தவரை புனைவு நூல்கள் குப்பை. அவரே பல நூல்கள் எழுதியிருக்கிறார். அவருக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் டாம் கிளான்சி.
 
* இன்றைய அரசியல்வாதிகள் லீயிடம் கற்கவேண்டியதில் முக்கியமானது மதச்சார்பின்மை. ‘அரசியல், பொருளாதாரம் பற்றி ஏதேனும் சொல்ல வேண்டுமானால் உங்கள் மத அங்கிகளை கழற்றிவிட்டு வாருங்கள்’’ என்பார் லீ.
 
* அவரது ஆட்சியில் கேள்விகள் கேட்ட எதிர்க்கட்சியினர், பத்திரிக்கையாளர்கள், மனித உரிமையாளர்கள் சிறையில் தள்ளப்பட்டனர். ஊழல், வறுமை, உள்நாட்டு குழப்பம் என்று சிக்கலாக இருந்த சூழலில் நாட்டை முன்னேற்ற தனக்கு வேறு வழி இல்லை என்றார் லீ.
 
* தன்னைப் பற்றிய சர்ச்சைகளை பொருட்டாக எடுத்துக்கொள்ள மாட்டார். படித்தவர்கள், படித்தவர்களையே திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்கிற அவரது கொள்கை மிகுந்த சர்ச்சையைக் கிளப்பியது. மனித அறிவு வளர்ச்சிக்கும் மரபணுக்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக கருதிய லீ அவ்வாறு அறிவித்தார்.

 

http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%B2%E0%AF%80-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%82-10/article6414580.ece?ref=relatedNews

 

Link to comment
Share on other sites

  • Replies 81
  • Created
  • Last Reply

கிறிஸ் கெயில் 10

 

chris_gayle_2062982h.jpg

 

மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வீரர் கிறிஸ்டோபர் ஹென்றி கெயில் பிறந்தநாள் இன்று. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து...

# சொந்த நாடு ஜமைக்கா. லூக்காஸ் கிரிக்கெட் கிளப்பில் இளமைக் காலத்தில் ஆடியவர். அங்கு இடம் கிடைக்காமல் போயிருந்தால் தெருக்களில்தான் தன் வாழ்க்கையைக் கழித்திருக்க வேண்டும் என்பார்.

# புனே வாரியருக்கு எதிரான ஐ.பி.எல். போட்டியில் 17 பந்துகளில் 50 ரன்கள், 30 பந்துகளில் 100 ரன்கள், யாரும் எட்டாத 175 ரன்கள்.. என்று ஒரே போட்டியில் மூன்று உலக சாதனைகள் நிகழ்த்திய கிரிக்கெட் உலக நாயகன் கெயில். டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்றிலும் சதம் அடித்த முதல் சாகச வீரர்.

# அடித்து மட்டும்தான் ஆடுவார் என்று நினைத்தால் வெரி ஸாரி! ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டியில் ஏழரை மணிநேரம் ‘மட்டை’ போட்டு மண்டைகாய வைத்திருக்கிறார்.

# பேட்டிங் செய்யும்போது இடது கையையும், பவுலிங் செய்ய வலது கையையும் பயன்படுத்துவார்.

lசில ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூருவில் இவர் சிக்ஸர் அடித்த பந்து, ஒரு பெண் குழந்தையின் மூக்கில் பட்டு காயமாகிவிட்டது. பதறிப்போன கெயில், மருத்துவமனைக்குச் சென்று குழந்தைக்கு ஆறுதல் சொல்லி, அன்றைய தினம் வென்ற ‘ஆட்ட நாயகன்’ பரிசை அவளுக்கே கொடுத்துவிட்டார்.

# சொந்த ஊரில் சகோதரருடன் இணைந்து ‘டியூட்டி ஃப்ரைடேஸ்’ என்ற பொழுதுபோக்கு நிறுவனம் நடத்திவருகிறார். மைதானத்தில் நடனமாடும் ரகசியம் அதுதான்.

# இதய வால்வு பாதிக்கப்பட்டதால் சுமார் ஒன்றரை ஆண்டுகள் படாதபாடுபட்டார். ஒரு போட்டியில் நிலைமை மோசமாகி பாதியில் வெளியேற நேரிட்டது. அறுவை சிகிச்சையில் குணமானவர் மீண்டும் சாதனைகளை தொடர்கிறார்.

# டெஸ்ட் போட்டியின் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து ஆரம்பித்து வைத்த ஒரே வீரர் கெயில்தான்.

# இளம் வயதில் ஒல்லியாக இருந்ததால் பந்துகளை பவுண்டரிக்கு விரட்ட எடை மிகுந்த பேட் பயன்படுத்தினார். அதனால்தான் அவரால் அதிகபட்சமாக 126 மீட்டர் தூரம் வரை பந்தைப் பறக்கவிட முடிகிறது.

# கெயில் ஃபோர்ஸ், கெயில் ஸ்ட்ரோம், மாஸ்டர் ஸ்ட்ரோம் - இவை எல்லாம் இவரது பட்டப் பெயர்கள். ஆடுகளத்தில் பெரும்பாலும் கூலாக நடனம் ஆடும் கெயிலையும் சண்டை போடவைத்தவர் ஆஸ்திரேலியாவின் மைக்கேல் கிளார்க்!

 

http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-10/article6430132.ece?widget-art=four-rel

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் யாரும்  பத்துக்கள் கொண்டவர் இல்லையா ஆதவன்???இருந்தால் பகிருங்கள்

Link to comment
Share on other sites

மைக்கேல் ஃபாரடே 10

 

3_2119291h.jpg

 

‘மின்சாரத்தின் தந்தை’ என்று அழைக்கப்படும் மைக்கேல் ஃபாரடேவின் பிறந்தநாள் இன்று. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து...

• சுமார் இரு நூற்றாண்டுகளுக்கு முன்பு மைக்கேல் ஃபாரடே பிறக்காமல் போயிருந்தால் ஒருவேளை நாம் நிரந்தரமாக இருண்ட காலத்திலேயே இருந்திருக்கக்கூடும். ஆம், இவரது முயற்சிகளின் தொடர்ச்சியாகவே மின்சாரம் பொதுப் பயன்பாட்டுக்கு வந்தது.

• தந்தை ஜேம்ஸ் ஃபாரடேவுக்கு கொல்லர் பணி. தெற்கு லண்டனில் பிறந்த மைக்கேலின் இளமைக் காலம் வறுமை நிறைந்தது. ஒரே ஒரு பிரெட் பாக்கெட்டை வைத்து வாரம் முழுக்க சமாளிப்பாராம்.

• மைக்கேல் முதலில் கற்றுக்கொண்ட தொழில் புத்தக பைண்டிங். அதுவே அவருக்கு புத்தகங்கள் மீதான ஈர்ப்பை உருவாக்கியது. புகழ்பெற்ற வேதியியல் விஞ்ஞானி ஹம்ப்ரி டேவியின் எழுத்துகளைப் படித்ததால் ஆர்வம் விஞ்ஞானத்தின் பக்கம் திரும்பியது.

• டேவியின் கூட்டங்களில் அவரது பேச்சை ஆர்வத்துடன் கேட்ட மைக், அதை அவருக்கே எழுதி அனுப்பினார். அசந்துபோன டேவி, மைக்கேலை தனது மாணவனாக சேர்த்துக்கொண்டார். ‘எவ்வளவோ கண்டுபிடித்திருக்கிறேன். ஆனாலும், என் மிகச்சிறந்த கண்டுபிடிப்பு மைக்கேல் ஃபாரடே’ என்பார் டேவி.

• காந்தவியல் – மின்சாரவியல் இடையே உள்ள தொடர்பை ஆய்வுகள் மூலம் நிரூபித்த மேதை மைக்கேல் ஃபாரடே. உலகின் முதல் மின்சார டைனமோ அவராலேயே உருவாக்கப்பட்டது.

• மின்காந்த தூண்டலைக் கண்டுபிடித்தவர். உலோகங்களை பிரித்தெடுக்கும் மின்பகுப்பு முறையை செம்மைப்படுத்தியவர்.

• கம்பிச் சுருளுக்குள் காந்தத்தை நகர்த்துவதன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என்று கண்டறிந்தார். இதன் அடிப்படையில் மின்சார ஜெனரேட்டர், மின்மாற்றியை (டிரான்ஸ்பார்மர்) உருவாக்கினார்.

• நல்ல எழுத்தாளர். அறிவியலை எளிய மனிதனுக்கும் புரிகிற வகையில் எப்படி சொல்ல வேண்டும் என்பதற்கு அவரது ‘மெழுகுவர்த்தியின் வேதியியல் வரலாறு’ புத்தகம் சிறந்த எடுத்துக்காட்டு.

• ‘ஃபாரடே விளைவு’ இன்றைக்கு மூலக்கூறுகளின் வடிவத்தை விளக்கப் பயன்படுகிறது. வாயுக்களை முதன்முதலில் திரவமாக மாற்றி சாதித்தவரும் ஃபாரடேதான்!

• உலகிலேயே அதிகபட்ச பரிசோதனைகள் செய்து பார்த்த அறிவியல் அறிஞர் என்று போற்றப்படுகிறார். பல ஆண்டுகள் ஓயாமல் ஆய்வு செய்ததில், 6 ஆண்டுகள் படுத்த படுக்கையாக கிடக்கும் அளவுக்கு அறிவியல் அவரை ஆக்கிரமித்தது!

 

http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%87-10/article6432345.ece?ref=relatedNews

 

Link to comment
Share on other sites

அகஸ்டஸ் சீசர் 10

 

4_2121116f.jpg

 

ரோம் சாம்ராஜ்யத்தின் முதல் பேரரசர் அகஸ்டஸ் சீசரின் பிறந்த நாள் இன்று. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து...

• ஜூலியஸ் சீசர் தங்கையின் பேரன் அகஸ்டஸ் சீசர். கயஸ் ஆக்டேவியஸ் என்பது இயற்பெயர். 4 வயதில் தந்தையை இழந்தார். சிக்கலான சூழலிலேயே வளர்ந்தார்.

• ஹிஸ்பேனியா (ஸ்பெயின்) மீது நடந்த தாக்குதலின்போது நடுக்கடலில் ஆயிரக்கணக்கான எதிரி வீரர்களிடம் சிக்கிக்கொண்டார். ஆனாலும், தீரத்துடன் தப்பித்தது, இன்றும் வரலாற்றில் பேசப்படுகிறது. அப்போது அவருக்கு வயது சுமார் 16.

• ஜூலியஸ் சீசர் சர்வாதிகாரி ஆக முயற்சிக்கிறார் என்பதால் படுகொலை செய்யப்பட்டார். அதன் பின் அவரது உயில் திறக்கப்பட்டது. அதில் அகஸ்டஸை வாரிசாக அறிவித்திருந்தார் சீசர்.

• மார்க் ஆன்டனியை போரில் வென்று அகஸ்டஸ் சீசர் நாட்டின் தலைமைப் பொறுப்புக்கு வந்தார். ஆனால், மன்னன் என்று அதிகாரப்பூர்வமாக சொல்லவில்லை. ஆனாலும், தேசம் இவரது கட்டுப்பாட்டுக்கு வந்தது.

• நின்றபடியே பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் ராணுவம், காவல் துறை, தீயணைப்பு துறை ஆகிய அனைத்தையும் முதன்முறையாக அறிமுகப்படுத்தியது அகஸ்டஸ் சீசர்தான். இவரது நினைவாகவே ‘செக்ஸ்ட்டிலிஸ்’ என்று இருந்த மாதத்தின் பெயர் ‘ஆகஸ்ட்’ என மாற்றம் செய்யப்பட்டது

• போர் நிமித்தமாக அற்புதமான சாலைகளை அமைத்தார். உறுதியான அரசியல் சட்டத்தை உருவாக்கி ரோமப் பேரரசில் 200 ஆண்டுகால அமைதிக்கு வழிகோலினார்.

• மக்களின் பொழுதுபோக்குக்காக கிளாடியேட்டர் போர்களை மைதானத்தில் நடத்தினார். 10 ஆயிரம் வீரர்கள் ஒரே சமயத்தில் மோதிக்கொள்ளும் வரலாற்றின் ரத்தப் பக்கங்கள் அவை!

• அகஸ்டஸ் சீசர் ஒழுக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தார். விதிகளுக்கு கட்டுப்படாததால் சொந்த மகளையே நாடு கடத்தினார்.

• அகஸ்டஸ் சீசர் இறந்தபோது அவரை கடவுள் என்று அறிவித்து, அவரையே வழிபட வேண்டும் என்று செனட் அறிவித்தது.

• 100 ஆண்டுகால உள்நாட்டுக் குழப்பங்களுக்கு அகஸ்டஸின் ஆட்சியே மக்களுக்கு அமைதியைத் தந்தது. ‘ரோமை என்னிடம் களிமண்ணாகக் கொடுத்தார்கள். அதை நான் பளிங்காக மாற்றினேன்’ என்பது அவரின் புகழ்பெற்ற வாசகம்.

• ஜூலியஸ் சீசர் தங்கையின் பேரன் அகஸ்டஸ் சீசர். கயஸ் ஆக்டேவியஸ் என்பது இயற்பெயர். 4 வயதில் தந்தையை இழந்தார். சிக்கலான சூழலிலேயே வளர்ந்தார்.

• ஹிஸ்பேனியா (ஸ்பெயின்) மீது நடந்த தாக்குதலின்போது நடுக்கடலில் ஆயிரக்கணக்கான எதிரி வீரர்களிடம் சிக்கிக்கொண்டார். ஆனாலும், தீரத்துடன் தப்பித்தது, இன்றும் வரலாற்றில் பேசப்படுகிறது. அப்போது அவருக்கு வயது சுமார் 16.

• ஜூலியஸ் சீசர் சர்வாதிகாரி ஆக முயற்சிக்கிறார் என்பதால் படுகொலை செய்யப்பட்டார். அதன் பின் அவரது உயில் திறக்கப்பட்டது. அதில் அகஸ்டஸை வாரிசாக அறிவித்திருந்தார் சீசர்.

• மார்க் ஆன்டனியை போரில் வென்று அகஸ்டஸ் சீசர் நாட்டின் தலைமைப் பொறுப்புக்கு வந்தார். ஆனால், மன்னன் என்று அதிகாரப்பூர்வமாக சொல்லவில்லை. ஆனாலும், தேசம் இவரது கட்டுப்பாட்டுக்கு வந்தது.

• lநின்றபடியே பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் ராணுவம், காவல் துறை, தீயணைப்பு துறை ஆகிய அனைத்தையும் முதன்முறையாக அறிமுகப்படுத்தியது அகஸ்டஸ் சீசர்தான். இவரது நினைவாகவே ‘செக்ஸ்ட்டிலிஸ்’ என்று இருந்த மாதத்தின் பெயர் ‘ஆகஸ்ட்’ என மாற்றம் செய்யப்பட்டது

• போர் நிமித்தமாக அற்புதமான சாலைகளை அமைத்தார். உறுதியான அரசியல் சட்டத்தை உருவாக்கி ரோமப் பேரரசில் 200 ஆண்டுகால அமைதிக்கு வழிகோலினார்.

• மக்களின் பொழுதுபோக்குக்காக கிளாடியேட்டர் போர்களை மைதானத்தில் நடத்தினார். 10 ஆயிரம் வீரர்கள் ஒரே சமயத்தில் மோதிக்கொள்ளும் வரலாற்றின் ரத்தப் பக்கங்கள் அவை!

• அகஸ்டஸ் சீசர் ஒழுக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தார். விதிகளுக்கு கட்டுப்படாததால் சொந்த மகளையே நாடு கடத்தினார்.

• அகஸ்டஸ் சீசர் இறந்தபோது அவரை கடவுள் என்று அறிவித்து, அவரையே வழிபட வேண்டும் என்று செனட் அறிவித்தது.

• 100 ஆண்டுகால உள்நாட்டுக் குழப்பங்களுக்கு அகஸ்டஸின் ஆட்சியே மக்களுக்கு அமைதியைத் தந்தது. ‘ரோமை என்னிடம் களிமண்ணாகக் கொடுத்தார்கள். அதை நான் பளிங்காக மாற்றினேன்’ என்பது அவரின் புகழ்பெற்ற வாசகம்.

 

http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%85%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-10/article6436156.ece?widget-art=four-rel

 

Link to comment
Share on other sites

ஹோவர்டு ஃப்ளோரே 

4_2122422h.jpg

 

மனித உயிரைக் காக்கும் பெனிசிலினை கண்டுபிடித்தவர் அலெக்சாண்டர் ஃப்ளெமிங். ஆனால், அதை மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுசென்றவர் ஹோவர்டு ஃப்ளோரே. அவரது பிறந்த நாள் இன்று. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து…

• இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய தம்பதியின் வாரிசு ஹோவர்டு ஃப்ளோரே. பாக்டீரியாக்களைக் கொல்லும் ஆற்றல் வாய்ந்தது லைசோசைம். எச்சில், கண்ணீரில் அது அதிகம் காணப்படுகிறது. அதைக் குறித்தே முதலில் ஆய்வுகள் செய்தார்.

• பெனிசிலினை மருத்துவப் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கு ஃப்ளெமிங், ஹோவர்டு, போரிஸ் செயின் ஆகிய 3 பேரும் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். இதில் மனிதர்களிடம் பெனிசிலின் ஏற்படுத்தும் தாக்கங்களை ஹோவர்டு கண்டறிந்தார்.

• பெனிசிலினை முதலில் எலிகள் மீது பரிசோதிக்க பரிந்துரைத்தவர் ஹோவர்டு. 8 எலிகளுக்கு, உயிரைக் கொல்லும் பாக்டீரியா செலுத்தப்பட்டு, பின்பு பெனிசிலின் செலுத்தினார்கள். 4 பிழைத்தன. பெனிசிலின் காத்த முதல் உயிர்கள் அவை!

• ரோஜா முள் குத்தியதால் ஆல்பர்ட் அலெக்சாண்டர் என்பவருக்கு முகம் வீங்கி அழுகி, ஒரு கண் நீக்கப்பட்டது. அவருக்கு பெனிசிலின் செலுத்தினார் ஹோவர்டு. வேகமாக முன்னேற்றம் தெரிந்தது. ஆனால் போதிய அளவு பெனிசிலின் இல்லாததால் முழுமையாகக் குணம் பெறமுடியாமல் அவர் இறந்தார். பெனிசிலின் செலுத்தப்பட்ட முதல் நபர் அவர்.

• ஆரம்ப காலத்தில் பெனிசிலின் பற்றாக்குறை இருந்ததால், நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் மட்டும் ஆய்வு செய்யலாம் என்றார் ஹோவர்டு.

• இரண்டாம் உலகப் போர் நடந்ததால் ஆய்வுகள் நடத்துவதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் பால் கறக்கும் பழைய கருவிகள், மருத்துவமனை படுக்கைகள், புத்தக அலமாரியின் பிளாஸ்டிக் விரிப்புகள் இவற்றை எல்லாம் கொண்டு ஆய்வுகளைச் செய்தார்கள்.

• உள்நாட்டு நெருக்கடி காரணமாக இங்கிலாந்தில் இருந்து ரகசியமாக அமெரிக்காவுக்குச் சென்றது ஹோவர்டு குழு. அங்கு விவசாய ஆய்வகம் ஒன்றின் ஒத்துழைப்பில் பெரிய அளவில் பெனிசிலினை உற்பத்தி செய்தனர்.

• வட ஆப்ரிக்காவில் போரின்போது வீரர்களுக்கு காயம் ஏற்பட்டால் அந்த பகுதியை வெட்டி, காயத்தை ஆறவிடுவார்கள். அங்கு சென்ற ஹோவர்டு குழுவினர் காயங்களைத் தைத்து பென்சிலின் செலுத்தினர். காயங்கள் வேகமாக ஆறியதை அப்பகுதியினர் அற்புதம் எனக் கருதினார்கள்.

• ஹோவர்டை ஆஸ்திரேலிய அரசு பல வகைகளில் கவுரவப்படுத்தியது. ஆஸ்திரேலிய கரன்சியிலும் அவர் படம் அச்சிடப்பட்டது. ‘‘இது பல்வேறு நபர்களின் உயிர்த் தியாகம் மற்றும் சாதனை’’ என்றார் ஹோவர்டு தன்னடக்கத்துடன்!

• பலரது உயிரையும் பெனிசிலின் காப்பாற்றியதால் ஒருகட்டத்தில் மக்கள் பெருக்கம் அதிகமானது. இதன் பிறகு, உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி மக்கள்தொகையைக் குறைப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார் ஹோவர்டு. ஆனால், அது மட்டும் அவரால் கடைசிவரை முடியவே இல்லை!

 

http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%87-10/article6439465.ece?widget-art=four-rel

 

Link to comment
Share on other sites

ராபர்ட் எட்வர்ட்ஸ் 

 

4_2128630f.jpg

 

சோதனைக் குழாய் குழந்தைகளை உலகுக்குத் தந்த அறிவியல் அறிஞர் ராபர்ட் எட்வர்ட்ஸின் பிறந்த நாள் இன்று. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து...

• இங்கிலாந்தின் பேட்லி நகரில் தொழிலாளர் குடும்பத்தில் பிறந்தார். ஆரம்பத்தில் விவசாய அறிவியலில் இருந்த ஆர்வத்தால் பட்டப்படிப்பு படிக்கச் சென்றவர், காலப்போக்கில் ஆர்வம் இழந்து விலங்கியல் பக்கம் திரும்பினார்.

• எலிகளின் உயிரியல் வளர்ச்சி பற்றி ஆய்வு செய்வது அவரது முனைவர் பட்ட ஆய்வாக அமைந்தது. அப்போது, ஹார்மோன் ஊசி போட்டு பெண் எலிகளிடம் இருந்து அதிக கரு முட்டைகளை உருவாக்கி சாதனை படைத்தார்.

• நோபல் பரிசு பெற்ற எர்னெஸ்ட் ரூதர்போர்டின் பேத்தி ரூத் ஃபவுலரை காதல் திருமணம் புரிந்தார். அவர்களுக்கு 5 பெண் குழந்தைகள் பிறந்தன. மனைவிக்குப் பிரசவம் பார்த்த மருத்துவர் மோலி ரோஸிடம் அவர் ஒரு முக்கிய உதவி கேட்டார். கருமுட்டைகளைத் தரவேண்டும் என்பது அந்த கோரிக்கை.

• கருமுட்டைகளும் கிடைத்தன. அவை வளராது என்று முந்தைய ஆய்வுகள் கூறியபோதிலும், தொடர்ந்து முயற்சித்து, அவற்றை வளரவைத்தார். ஸ்டெப்டோ என்ற மருத்துவருடன் சேர்ந்து ஆராய்ச்சியைத் தொடர்ந்தார்.

• பல கருமுட்டைகளை பெண்களின் கருப்பையில் செலுத்தினர். நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு செலுத்தியும் ஒரே ஒரு பெண் மட்டுமே கர்ப்பம் தரித்தார். அந்த கருவும் கர்ப்பப் பையில் உருவாகாமல் கருமுட்டை (ஃபாலோப்பியன்) குழாயில் உருவாகியிருந்தது.

• பழமைவாதிகள், அரசுத் தரப்பிடம் இருந்து எதிர்ப்புகள் வந்ததால், மான்செஸ்டர் நகருக்கு வெளியே ஜன்னல்களே இல்லாத ஒரு சிறிய மருத்துவமனையின் ஆய்வகத்தில் தங்களுடைய ஆய்வுகளோடு போராடினர்.

• இறுதியாக, கண்ணாடிக் குடுவையில் வளர்க்கப்பட்ட கருமுட்டையை, 9 ஆண்டுகளாக பிள்ளைப்பேறு இல்லாத பிரவுன் என்ற பெண்ணிடம் செலுத்தினார். செயற்கையாக ஹார்மோன் மூலம் பெறும் கருமுட்டைக்கு பதிலாக, அந்த பெண்ணின் கருமுட்டையையே வளர்த்து செலுத்தினார். கருமுட்டை எடுக்கும் வேலைகளை ஸ்டெப்டோ செய்தார்.

• 1978 ஜூலை 25. உலகில் சோதனைக் குழாய் மூலம் முதல் குழந்தை லூயிஸ் ஜாய் பிரவுன் சுக ஜனனம்!

• உலகம் முழுக்க சோதனைக் குழாய் முறையில் இதுவரை ஏறக்குறைய அரை கோடி குழந்தைகள் பிறந்திருக்கின்றன. நோபல் பரிசை ராபர்ட் எட்வர்ட்ஸ் 2010-ல் பெற்றார். கடந்த ஆண்டு ஏப்ரலில் மறைந்தார்.

• ‘‘வாழ்க்கையில் மிக முக்கியமானது குழந்தை பெறுவதே. இந்த எண்ணம்தான் என்னை வெற்றி பெறச் செய்தது’’ என்றார் எட்வர்ட்ஸ்.

 

http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-10/article6450377.ece?widget-art=four-rel

 

Link to comment
Share on other sites

லால் பகதூர் சாஸ்திரி 10

 

lal2_2137596h.jpg

 

வரலாற்று நாயகர் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாள் இன்று. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து...

# மூன்று மாதக் குழந்தையாக இருந்தபோது கங்கைக் கரையில் தொலைந்து போனார். இடையர்களால் மீட்கப்பட்டு அவர்களால் சிலகாலம் வளர்க்கப்பட்டு பின்னர் மீட்கப்பட்டார். ஒன்றரை வயதில் தந்தை இறந்துவிட, மாமாவின் பராமரிப்பில் வளர்ந்தார்.

# ஒத்துழையாமை இயக்கம் நடைபெற்றபோது மைனராக இருந்தும் சிறை புகுந்தார். பின்னர் உப்பு சத்தியாக்கிரகம், வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கு கொண்டார். ஒன்பது வருடங்களை சிறையில் கழித்தார்.

# உடல் நலமில்லாத மகளைப் பார்க்க பரோலில் வந்தார்; மகள் இறந்துவிடவே மீண்டும் சிறை புகுந்தார். பிரதமராக இருந்தபோது தனது மகன், கல்லூரியில் சேர பரிந்துரை தர மறுத்துவிட்டார்.

# சாதி அடையாளம் அற்றவர். பெயருக்கு பின்னால் இருந்த சாதிப் பெயரைத் துறந்து ஹரிஜன சேவையில் தீவிரமாக ஈடுபட்டார். ‘சாஸ்திரி’ என்கிற பட்டம் அவர் காசி, வித்யா பீடத்தில் படித்துப் பெற்றது.

# சிறந்த நிர்வாகி. ஜி.பி.பந்த் அமைச்சரவையில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது பெண் நடத்துநர்களை கொண்டு வந்தார். உள்துறை அமைச்சராக இருந்தபோது லோக்பாலை அமல்படுத்த அப்போதே அவர் ஆசைப்பட்டார்.

# எளிமையின் உச்சம். காமராஜர் திட்டத்தால் பதவி விலகிய பின்னர் பருப்பு, காய்கறிகளை உணவில் குறைக்கச் சொன்னார். சேமிக்கிற அளவுக்கு சம்பளம் வருவது தெரிந்ததும் சம்பளத்தை குறைத்துக்கொண்டார். ஒருமுறை காஷ்மீர் பயணத்தின்போது சொந்தமாக ஸ்வெட்டர்கூட இல்லாமல் இருந்தார். அவர் இறந்தபோது காருக்கு கட்ட வேண்டிய கடன் பாக்கி இருந்தது.

# போர்க்காலத்தில் ‘ஜெய் ஜவான் ஜெய் கிஸான்' (வீரர்களுக்கு வெற்றி! வேளாண்மைக்கு வெற்றி!) என்கிற கோஷத்தை தந்தார். தேசிய பால்பண்ணை வளர்ச்சி துறையை உண்டாக்கி வெண்மைப் புரட்சிக்கான அடித்தளமிட்டார்.

# நேருவின் மறைவுக்குப் பின்னர் இந்தியாவின் பிரதமர் ஆனார். இந்தித் திணிப்பு, மலையகத் தமிழர்களை அகதிகளாக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது ஆகியவை இவர் மீதான விமர்சனங்கள்.

# கட்ச் பகுதியில் பாகிஸ்தானுடன் நிலத்தகராறில் அமைதி யாக ஒப்பந்தம் செய்துகொண்டார். சீனப்போரில் இந்தியா தோற்றிருந்தது வேறு பாகிஸ்தானுக்கு உத்வேகம் தந்திருந்தது. காஷ்மீரில் கலவரங்கள் சூடு பிடித்தன. சாஸ்திரி தீரத்தோடு வழிகாட்டினார். சர்வதேச எல்லைக் கோட்டை கடந்து லாகூர்வரை இந்திய ராணுவம் பாய்ந்த போது சாஸ்திரியை உலகம் அண்ணாந்து பார்த்தது.

# தாஷ்கண்ட்டில் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின்னர் மர்மமான முறையில் இறந்து போனார். 20 மாதங்களே இந்தியாவை ஆண்டாலும் எளியவர்களின் தலைவராக திகழ்ந்த அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது!

http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-10/article6467971.ece?widget-art=four-rel

 

 

Link to comment
Share on other sites

டெஸ்மாண்ட் டுடு

 

1_2142044f.jpg

 

அன்பு வழியில் தென்ஆப்ரிக்காவில் நிறவெறியை எதிர்த்த பாதிரியார் டெஸ்மாண்ட் டுடுவின் பிறந்த நாள் இன்று. இந்த நாளில் அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து…

• தென் ஆப்ரிக்காவின் கிளர்க்ஸ்டார்ப் நகரில் ஆசிரியர் ஜகாரியா – சமையல் பணியாளர் அலேட்டா தம்பதியின் மகனாக 1931-ல் பிறந்தார். மருத்துவர் ஆகவேண்டும் என்பதே டுடுவின் ஆசை. பணம் இல்லாததால், ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்தார்.

• சோபியா டவுனில் கறுப்பின குடியிருப்புப் பகுதியில் பணியாற்றிய வெள்ளையினப் பாதிரியார் ட்ரெவர் ஹடில்ஸ்டன் தனது தொப்பியைக் கழற்றி டுடுவின் அம்மாவுக்கு வணக்கம் செலுத்துவார். இதைப் பார்த்த டுடுவிடம், வெள்ளையர் மீதான வெறுப்பு தணிந்தது.

• பள்ளிகளில் கறுப்பின பிள்ளைகளுக்கு பாரபட்சம் காட்டப்பட்டதால், கல்வித் துறையை விட்டுவிட்டு, இறையியல் படிக்க இங்கிலாந்து போனார்.

• ஆப்ரிக்காவில் பாதிரியாராக வாழ்க்கையை மீண்டும் தொடங்கியவர் சர்ச்களின் தலைமைப் பாதிரியார் ஆனார்.

• நிறவெறிக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்தார்.

• சொவேடோ எனும் இடத்தில் 10 ஆயிரம் கறுப்பின இளைஞர்கள் போராடினர். 500 பேரை போலீஸார் சுட்டுத் தள்ளினர். ரத்தம் கொதித்த டுடு சொன்னார்: ‘‘கண்டிப்பாக வெல்வோம். உண்மையை பொய்யோ, வெளிச்சத்தை இருளோ, வாழ்வை மரணமோ வெல்லமுடியாது. அன்போடு காத்திருப்போம்.’’

• நோமலிஸோ லீ ஷென்சேன் என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 4 பிள்ளைகள்.

• இஸ்ரேலால் காஸாவில் கொல்லப்பட்ட பாலஸ்தீனர்கள் பற்றி விசாரிக்க ஐ.நா.வால் அனுப்பட்ட குழுவுக்கு தலைமை ஏற்றார். வெளிநாடுகளுக்கு ஒரு யோசனை சொன்னார். ‘‘நிறத்தால் பாகுபடுத்தும் இந்நாட்டில் இருக்கும் உங்களது முதலீடுகளை திரும்பப்பெறுங்கள். இதனால், இழப்பு எங்களுக்குத்தான். அது ஒரு அற்புதமான நோக்கத்துக்கான இழப்பு’’ என்றார். அவர் சொன்னதை அப்படியே ஏற்று, பல நாடுகள் செயல்பட, தென் ஆப்ரிக்கா ஸ்தம்பித்தது. அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

• அதிபரான மண்டேலாவை நாட்டுக்கு அறிமுகப்படுத்தும் வரலாற்றுத் தருணம் டுடுவுக்கு வாய்த்தது. ‘‘இப்போது நான் இறந்தால்கூட பொருத்தமாக இருக்கும். இந்த அற்புதமான நேரத்துக்காகத்தானே போராடினோம்!’’ என்று உணர்ச்சிபொங்கக் கூறினார்.

• தலாய் லாமாவுக்கு தென் ஆப்ரிக்கா விசா மறுத்தபோது, கடுமையாக விமர்சித்தார்.

• எய்ட்ஸ் ஒழிப்பு, வறுமை ஒழிப்பு, பாலின சமத்துவம், மாற்றுப் பாலினத்தவருக்கு ஆதரவு என 82 வயதிலும் சளைக்காமல் பாடுபடுகிறார் டுடு.

 

http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81-10/article6476139.ece?widget-art=four-rel

 

Link to comment
Share on other sites

ரோட்னி ராபர்ட் போர்ட்டர் 

 

3_2143541h.jpg

 

நோய் எதிர்ப்பு சக்திக்கு அடிப்படைப் புரதமான ‘இமினோகுளோபின்’ குறித்து ஆராய்ச்சி செய்து நோபல் பரிசு பெற்ற ரோட்னி ராபர்ட் போர்ட்டரின் பிறந்தநாள் இன்று. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து...

• இங்கிலாந்தில் எழுத்தராக வேலை பார்த்த ஜோசப் போர்ட்டரின் மகன் ரோட்னி ராபர்ட். லிவர்பூல் பல்கலைக்கழகத்தில் உயிர் வேதியியல் துறையில் பட்டம் பெற்றார்.

• வேதியியல் ஆய்வுகளுக்காக 2 முறை நோபல் பரிசு பெற்ற பிரடெரிக் சாங்கரிடம் முனைவர் ஆய்வுக்காக பணிபுரிந்தார். முனைவர் பட்டத்துக்காக அவரிடம் சேர்ந்த முதல் பயிற்சி மாணவரும் இவரே.

• இரண்டாம் உலகப் போரின்போது 6 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றினார். இதன் காரணமாக, அவரது கல்வி தடைபட்டது. அல்ஜீரியா, சிசிலி, இத்தாலி ஆகிய இடங்களில் நடந்த போரில் பணியாற்றிவிட்டு மீண்டும் வந்து ஆய்வுப் பணிகளைத் தொடர்ந்தார்.

• ரத்த வகைகளைக் கண்டுபிடித்த கார்ல் லான்ட்ஸ்டெய்னரின் எழுத்துகளால் ஈர்க்கப்பட்டார். அதுவே இவரை ரத்தம் தொடர்பான ஆராய்ச்சியில் ஆர்வம் காட்டத் தூண்டியது.

• உடலில் அந்நியப் பொருட்கள் புகுந்தால், அதை எதிர்க்கும் விதமாக, உடலில் தானாகவே எதிர் உயிரிகள் (Anti bodies) சுரக்கின்றன. இதற்கு காரணமான ‘இமினோகுளோபின்’ (immunoglobin) குறித்து ஆராய்ந்தார்.

• இமினோகுளோபினுக்குள் ஏராளமான உயிர்ப் பொருட்கள் இருந்தன. அவையே நோய் எதிர்ப்புத் திறனை உறுதி செய்தன. முயலின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட இமினோகுளோபினை ‘பப்பைன்’ என்ற என்ஸைமைக் கொண்டு 3 பாகங்களாகப் பிரித்து சாதித்தார்.

• இமினோகுளோபின் ‘Y’ வடிவில் இருப்பதையும் கண்டுபிடித்தார். அதில் பெரிய துண்டுப்பகுதி எல்லா மூலக்கூறுகளிலும் ஒன்றாக இருக்கிறது. சிறிய இரு துண்டுகள் எந்த அந்நியப் பொருளை உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் எதிர்க்கிறதோ அதற்கேற்ப அமைகிறது என்பதையும் கண்டறிந்து சொன்னார்.

• ஜெரால்டு எடல்மேன் என்பவருடன் இணைந்து இமினோகுளோபினில் இருந்த 1300 அமினோ அமிலங்களையும் வரிசையாகக் கண்டறிந்தார். இதுவே பல்வேறு நோய் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படுவதற்கும், உலகில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும் அடிகோலியது.

• நோய்த் தொற்றில் இருந்து உடலைக் காக்கும் துணை புரதங்கள் பற்றியும் ஆய்வுகள் செய்தார். ‘க்ளைகோ’ உயிரியல் துறையை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் நிறுவினார்.

• நோய் எதிர் உயிரியின் வடிவத்தைக் கண்டறிந்ததற்காக, மருத்துவத் துறைக்கான நோபல் பரிசை 1972-ல் ஜெரால்ட் எடல்மேனுடன் சேர்ந்து பெற்றார். அதன் பிறகும், ஓயாமல் மருத்துவ ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். 67 வயதில் கார் விபத்தில் இறந்தார்.

 

http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-10/article6479168.ece?widget-art=four-rel

 

Link to comment
Share on other sites

ரோஜர் மூர் 

 

 

roger_moore_2153076f.jpg

 

சீனியர் ஜேம்ஸ்பாண்ட் நடிகர் ரோஜர் மூரின் பிறந்தநாள் இன்று. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து...

• லண்டனில் பிறந்தவர். அப்பா போல போலீஸாக வேண்டும் என்பது லட்சியம். ஆனால், ஓவியராகி, பின்னர் திரைப்பட அனிமேஷன் துறைக்கு வந்தார். அதிலும் நிலைக்கவில்லை.

• பிறகு, புகைப்படக் கலைஞரான நண்பரின் உதவியால் மாடலிங் செய்தார். ஆனாலும், பெரிதாக சாதிக்கமுடியவில்லை. ஜட்டி, பனியன், பற்பசை விளம்பரத்துக்குதான் கூப்பிட்டார்கள்.

• மாடலிங் செய்தபோது ஹாலிவுட்டில் நடிக்க ஆசை துளிர்த்தது. ராயல் அகாடமி ஆஃப் டிரமாடிக் ஆர்ட் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்தார். முதலில் தெரு நாடகங்கள், டிவி தொடர்களில் வாய்ப்பு வந்தது.

• 1945-ல் ஹாலிவுட்டில் துணை நடிகர் வாய்ப்பு கிடைத்தது. 5 ஆண்டுகள் உழைத்தும் பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்காததால் வெறுத்துப்போனவர் மீண்டும் டிவி சீரியலுக்கு சென்றார். ‘டிராயிங் ரூம் டிடெக்டிவ்’, ‘தி செயின்ட்’ ஆகிய டிவி தொடர்கள் இவரை உளவாளியாக பிரபலமாக்கின.

• ஒருவழியாக 46 வயதில் கதாநாயகன் ஆனார். 1973-ல் வெளிவந்த ‘லிவ் அண்ட் லெட் டை’ திரைப்படத்தில் ஜேம்ஸ்பாண்ட் அவதரித்தார்.

• 1985 வரை ‘ஃபார் யுவர் ஐஸ் ஒன்லி’, ‘ஏ வியூ டு எ கில்’ உட்பட ஏழு படங்களில் 12 ஆண்டுகள் ஜேம்ஸ்பாண்ட் எடுத்த ஆக்ஷன் அவதாரங்கள் உலகை திரும்பிப் பார்க்கச் செய்தன. அதிக ஆண்டு காலம் 007 ஆக கோலோச்சிய ஒரே நட்சத்திரம் ரோஜர்.

• படப்பிடிப்பில் துப்பாக்கியும் கையுமாக திரிபவருக்கு உண்மையில் துப்பாக்கி, வெடிபொருட்களைக் கண்டால் பயம். ஆமாம், அவருக்கு ஹோலோஃபோபியா நோய் இருந்தது.

• ஜூனியர் ஜேம்ஸ்பாண்ட் டேனியல் கிரெய்க் நடித்த படத்தில் வில்லனாக நடிப்பது இவரது தீராத ஆசை.

• டிவி நிகழ்ச்சிகள், புத்தகம் எழுதுவது என்று 86 வயதிலும் சுறுசுறுப்பாக இயங்கிவரும் இந்த முன்னாள் 007, தான் நடித்தது உட்பட எந்த ஒரு ஜேம்ஸ்பாண்ட் படத்தையும் முழுமையாக பார்த்ததில்லையாம்!

• தற்போது யுனிசெஃப் நல்லெண்ணத் தூதராக இருக்கிறார். எல்லாவற்றையும்விட இந்த பணியே மிகுந்த மனநிறைவு அளிப்பதாக கூறுகிறார்.

 

http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-10/article6497753.ece?widget-art=four-rel

 

Link to comment
Share on other sites

ஆஸ்கர் வைல்ட் 

 

hor_2156217f.jpg

 

புரட்சிப் போராட்டங்களை ஆதரிக்கும் கவிதைகளை எழுதி, புகழ்பெற்ற தாய்க்கும், ஏழைகளின் பார்வை இழப்பைத் தடுப்பதற்காக தனது சொந்த செலவில் கண் மருத்துவமனையை ஆரம்பித்து, சேவையாற்றிய தந்தைக்கும் மகனாக அயர்லாந்தின் டியுப்லின் நகரில் பிறந்தவர்.

• ஒன்பது வயது வரை வீட்டிலேயே கல்வி பயின்றார். பின்னர், பள்ளியில் சேர்ந்து படித்த சமயத்தில் கிரேக்க மற்றும் ரோமானிய இலக்கியங்களிலும் தத்துவங்களிலும் காதல் பிறந்தது. கல்லூரியில் கிரேக்க மொழிப் பாடத்தில் தலைசிறந்த மாணவனாக தங்கப் பதக்கம் வென்றார்.

• உடல்நலம் பாதிக்கப்பட்டு பத்து வயதில் உயிரிழந்த தங்கையின் நினைவாக அவளது ஒரு கற்றை தலைமுடியை ஒரு அலங்கார உறையில் வைத்து பத்திரப் படுத்திக்கொண்ட பாசக்கார அண்ணன் இவர்.

• ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் படித்தபோதுதான் தனது படைப்பாற்றலை உலகுக்கு வெளிப்படுத்தினார். இவர் எழுதிய ‘ரவேனா’ என்ற கவிதை பல்கலைக்கழகத்தின் மிகச் சிறந்த ஆங்கிலப் படைப்புக்கான பரிசை வென்றது.

• அழகியலைப் பரப்புவதில் தணியாத தாகம் கொண்டிருந்த இவர், இது தொடர்பாக உரை நிகழ்த்துவதற்காக அமெரிக்கா முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இவரது நாவன்மை அமெரிக்க மக்களை வசீகரித்ததால் 140-க்கும் மேற்பட்ட சொற்பொழிவுகளை நிகழ்த்தினார்.

• விற்பனை சரிந்திருந்த ‘லேடீஸ் வேர்ல்ட்' என்ற மகளிர் இதழின் ஆசிரியர் பொறுப்பேற்று இரண்டாண்டுகளில் அதன் விற்பனையை அதிகரித்துக்காட்டினார். பெண்களின் உணர்வுகளையும், அறிவாற்றலையும் பிரதிபலிக்கும் கட்டுரைகளை வெளியிட்டு புகழ்பெற்றார்.

• ‘ஹேப்பி பிரின்ஸ் அன்ட் அதர் டேல்ஸ்' என்ற குழந்தைகளுக்காக சிறுகதைத் தொகுப்பு, அழகியல் குறித்த இன்டன்ஷன் என்ற கட்டுரைத் தொகுப்பு உள்ளிட்ட படைப்புகள் இவருக்கு மேலும் புகழ் சேர்த்தன. த பிக்சர் ஆஃப் டோரியன் கிரே என்ற இவரது நாடகத்தில் இடம் பெறும் மூன்று கதாபாத்திரங்கள் தன்னைப் பிரதிபலிப்பதாக ஆஸ்கர் குறிப்பிட்டுள்ளார். உலகம் முழுவதும் இந்தப் படைப்பு தற்போது பாராட்டுகளைப் பெற்றுள்ளபோதிலும், அந்த நாளில் ஒழுக்கக்கேட்டை ஆதரிப்பதாக கடும் கண்டனக் கணைகளை சந்தித்தன.

• 1892-ல் இவரது முதல் நாடகம் லேடி வின்டர்மியர்’ஸ் ஃபேன். ஏ வுமன் ஆஃப் நோ இம்பார்ட்டன்ஸ், அன் ஐடியல் ஹஸ்பன்ட், த இம்பார்ட்டன்ட் ஆஃப் பீயிங் ஏர்னஸ்ட் ஆகியன இவரது தலைசிறந்த நாடகங்களாகப் போற்றப்படுகின்றன.

• லார்ட் ஆல்ஃப்ரட் டக்ளஸ் என்ற இளம் நண்பருடன் இவர் நெருக்கமாக உறவாடிய குற்றத்துக்காக இரண்டாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. விடுதலை அடைந்ததும் சிறை அனுபவங்களை சித்தரிக்கும் ‘The Ballad of Reading Gaol’ என்ற கவிதையை எழுதி முடித்தார். உடல் நலமும் மனநலமும் பாதிக்கப்பட்டு 46- ஆவது வயதில் இறந்தார்.

• நீதிமன்றத்தில் நடைபெற்ற மூன்றுகட்ட விசாரணையை மையமாக வைத்து இவர் மறைவுக்குப் பிறகு எழுதப்பட்ட ‘The Trials of Oscar Wild’ நாடகம் நாடக ரசிகர்களிடையே இப்போதும் மகத்தான வரவேற்பைப் பெற்றுள்ளது.

 

http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-10/article6505187.ece?widget-art=four-rel

 

Link to comment
Share on other sites

மே கரோல் ஜெமிசன்

 

ds_2158708f.jpg

 

முதன்முதலாக விண்வெளிப் பயணம் மேற்கொண்ட அமெரிக்க ஆப்ரிக்க வீராங்கனை மே கரோல் ஜெமிசனின் பிறந்தநாள் இன்று. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து…

• அமெரிக்காவில் ஆப்ரிக்க வம்சாவளித் தம்பதிக்கு பிறந்தவர். குழந்தைப் பருவத்திலேயே அறிவியலில் ஆர்வம் மிக்கவர்.

• விண்வெளி அறிவியல் தொடர்பான தகவல்களை பள்ளி நூலகத்தில் தேடித் தேடிப் படிப்பார். நடனம், நாடகத்திலும் கெட்டிக்காரர். இவரது வெற்றிக்கு உறுதுணையாக இருந்தனர் பெற்றோர்.

• பள்ளியில் கறுப்பின மாணவ அமைப்பின் தலைவராக இருந்தார். தேசிய உதவித்தொகை பெற்று ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து வேதியியல் இன்ஜினீயரிங், ஆப்ரிக்க அமெரிக்கன் ஸ்டடீஸ் என இரட்டை பட்டம் பெற்றார். பின்னர் மருத்துவக் கல்வியையும் முடித்தார். கியூபா, கென்யா, தாய்லாந்தில் மருத்துவ சேவையில் ஈடுபட்டார்.

• லாஸ்ஏஞ்சல்ஸில் பணிபுரிந்தபோது, விண்வெளி ஆசை விஸ்வரூபம் எடுத்தது. நாசா பயிற்சிக்கு விண்ணப்பித்தார். அப்போது, ‘சேலஞ்சர்’ விண்கலம் வெடித்துச் சிதறி 7 பேர் இறந்ததால், பயிற்சித் திட்டத்தை நாசா ஒத்திவைத்தது.

• ஜெமிசனின் லட்சிய தாகத்தை இச்சம்பவம் தணித்துவிடவில்லை. மீண்டும் விண்ணப்பித்தார். ‘‘பலியானவர்களுக்காக வருந்துகிறேன். ஆனால், விண்வெளிப் பயணம் குறித்த எனது ஆர்வம் சிறிதும் குறையவில்லை’’ என்றார்.

• 2000 பேரில் ஜெமிசன் உட்பட 15 பேர் தேர்வாகினர். இவர் உட்பட 7 பேர் எண்டோவர் விண்கலத்தில் 1992 செப்டம்பர் 12-ம் தேதி விண்வெளிக்குப் புறப்பட்டனர். விண்வெளியில் 8 நாள் தங்கியிருந்த ஜெமிசன், விண்வெளி வீரர்களின் எடைக்குறைவு, உடல்நலக்குறைவு குறித்து ஆய்வு செய்தார். உலகமே பதைபதைப்புடன் காத்திருக்க.. செப்டம்பர் 10-ம் தேதி ஜெமிசன் குழுவினர் வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பினர்.

• விண்வெளிக்குச் சென்ற முதல் அமெரிக்க, ஆப்ரிக்க வீராங்கனை என்று சாதனை படைத்த இவருக்கு பாராட்டு குவிந்தது. ‘‘ஜெமிசன் கம்பீரமான, புத்திசாலித்தனமான, உண்மையான, உறுதியான இளம்பெண்’’ என புகழாரம் சூட்டியுள்ளார் நாசாவின் முக்கிய அதிகாரி.

• குழந்தைப் பருவ ஊட்டச்சத்து குறைபாட்டைத் தடுக்கும் பணியில் ஜெமிசன் பணியாற்றி வருகிறார். அன்றாட வாழ்வில் தொழில்நுட்பப் பயன்பாடு குறித்த ஆய்வு நிறுவனம் நடத்துகிறார்.

• அமெரிக்காவின் இனவெறிக் கொடுமைக்கு ஜெமிசனும் தப்பவில்லை. ஒருமுறை போக்குவரத்து விதிமீறலுக்காக காரில் இருந்து இவரை இறக்கிய காவல் அதிகாரி, மணிக்கட்டை முறுக்கி கீழே தள்ளி அவமானப்படுத்தினார்.

• இந்த உலகத்தையும் சமுதாயத்தையும் மாற்றக்கூடிய சக்தி படைத்தவர்கள் தாங்கள் என்பதை பெண்கள் இன்னும் உணரவில்லையே என்பதுதான் ஜெமிசனின் ஆதங்கம்.

 

http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-10/article6509670.ece?widget-art=four-rel

 

Link to comment
Share on other sites

மார்ட்டினா நவரத்திலோவா 10

martinaa_2161582h_2161600h.jpg

 

உலகப் புகழ்பெற்ற டென்னிஸ் வீராங்கனை மார்ட்டினா நவரத்திலோவாவின் பிறந்தநாள் இன்று. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து...

# இவரது பாட்டி, செக்கோஸ்லோவேகியா கூட்டமைப்பின் மகளிர் டென்னிஸ் களத்தின் 2-ம் தரவரிசை வீராங்கனை. அம்மாவும் டென்னிஸ் வீராங்கனை.

# மூன்று வயதில் டென்னிஸ் பழகியவர், 15-வது வயதில் செக்கோஸ்லோவேகியா தேசிய டென்னிஸ் சாம்பியன் பட்டம் வென்றார். 1975-ம் ஆண்டில் தொழில்முறை டென்னிஸ் வீராங்கனையானார்.

# 9 விம்பிள்டன் ஒற்றையர் சாம்பியன் பட்டங்கள், 167 ஒற்றையர், 177 இரட்டையர் சாம்பியன் பட்டங்கள் உட்பட 59 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். 7 ஆண்டுகளாக ஒற்றையர் ஆட்டத்தில் உலகின் முதல் தரவரிசை வீராங்கனை, 15 ஆண்டுகளாக டாப்-3, 19 ஆண்டுகளாக டாப்-5 என தொடர்ந்து 20 ஆண்டுகளாக ஒற்றையர் ஆட்டத்தில் உலகின் டாப்-10 பட்டியலை அலங்கரித்த சாதனையாளர்.

# ஒற்றையர், இரட்டையர் விளையாட்டுப் போட்டிகளில் தொடர்ந்து 200 வாரங்களுக்கும் மேல் முதலிடத்தைத் தக்கவைத்துக்கொண்ட ஒரே வீராங்கனை. வேகம், போர்க்குணம், கட்டுக்கோப்பான உடல் என மகளிர் டென்னிஸ் ஆட்டத்தை புதிய பரிணாமத்துக்கு இட்டுச் சென்றவர்.

# பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே 1981-ம் ஆண்டு அமெரிக்க குடியுரிமை பெற்றார். 2008-ல் செக் குடியரசின் குடியுரிமை கிடைத்தாலும், அமெரிக்க குடியுரிமையை இழக்க விரும்பவில்லை.

# ஆண் - பெண் வித்தியாசமின்றி யாரும் யாருடனும் இணைந்து வாழலாம் என்ற தனது கருத்தை பகிரங்கமாக அறிவித்தவர். தன்பாலினச் சேர்க்கையாளர்கள், பாலினம் மாறியவர்கள், திருநங்கைகள் உள்ளிட்டோரின் உரிமைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.

# ஒற்றையர் ஆட்டத்தில் இருந்து 1994-ல் ஓய்வு பெற்றார். 2003-ல் விம்பிள்டன் கலப்பு இரட்டையர் ஆட்டத்தில், லியாண்டர் பயஸுடன் இணைந்து களமிறங்கி சாம்பியன் பட்டம் வென்றார். 46-வது வயதில் விம்பிள்டனில் வெற்றி பெற்ற ஒரே வீராங்கனை இவர்தான். 2006-ல் அமெரிக்க ஓபன் கலப்பு இரட்டையர் ஆட்டத்தில் வெற்றி பெற்றதுடன் ஓய்வு பெற்றார்.

# மார்பகப் புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்ற சில மாதங்களிலேயே கிளிமாஞ்சாரோ மலை ஏற முயற்சித்தார். நுரையீரல் பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

# இவர் சைவ உணவு விரும்பி. விலங்குகள் வதை தடுப்பு பிரச்சாரமும் மேற்கொண்டார். நடுவில் ஒருமுறை புரோட்டீன் பற்றாக்குறை காரணமாக மீன் சாப்பிட நேர்ந்தது. பின்பு அதையும் விட்டு முழு சைவமாக மாறிவிட்டார்.

# அமெரிக்க ஓபன் டென்னிஸ் விளையாட்டுப் போட்டிகளுக்கான வர்ணனையாளராக தொடர்கிறார். சுய சரிதை, 3 மர்ம நாவல்கள் உள்ளிட்ட புத்தகங்களை எழுதியுள்ளார்.

 

http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE-10/article6512450.ece?widget-art=four-rel

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Very Informative articles.Thank you Mr. Athavan

Link to comment
Share on other sites

ஆஸ்வால்டு ஏவரி 10

 

d_2165949h.jpg

ஆஸ்வால்டு ஏவரி

மரபணுவின் குணங்களை ஒவ்வொரு தலைமுறைக்கும் கொண்டு வருவது டி.என்.ஏ.தான் என்பதைக் கண்டறிந்த விஞ்ஞானி ஆஸ்வால்டு தியடோர் ஏவரியின் பிறந்தநாள் இன்று. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து…

 

# கனடாவில் பிறந்தவர். அமெரிக் காவின் நியூயார்க் நகரில் உள்ள தேவாலயத்தில் தந்தைக்கு வேலை கிடைத்ததால் குடும்பத் தோடு குடிபெயர்ந்தார். சிறுவ னாக இருந்த ஏவரியின் கார்னட் வாத்திய இசை, தேவாலய பக்தர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த திறமை அவருக்கு உதவித் தொகை யையும் பெற்றுத் தந்தது.

 

# 1904-ம் ஆண்டில் மருத்துவக் கல்வி முடித்து மருத்துவ ராகப் பணியாற்றினார். சக மனிதன் குறித்த இவரது கவலை, மருத்துவ ஆராய்ச்சியாளராக களமிறக்கியது.

 

# குணப்படுத்த முடியாத நோய்கள் தொடர்பாக இவருக்குள் இருந்த அடுக்கடுக்கான கேள்விகள், பாக்டீரியா குறித்த ஆராய்ச்சியில் ஈடுபடத் தூண்டியது.

 

# ப்ரூக்ளினில் உள்ள ஹோக்லாண்ட் மருத்துவ ஆய்வுக்கூடத்தின் இணை இயக்குநர் பொறுப்பை 1907-ல் ஏற்றார். இங்கு நோய் எதிர்ப்புத் திறன் மற்றும் ரசாயன மாற்றங்கள் குறித்து பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார்.

 

# காசநோய்க்குக் காரணமான பாக்டீரியா குறித்து இவர் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரை, ராக்ஃபெல்லர் மருத்துவ ஆய்வு மைய இயக்குநர் ருஃபஸ்கோலை மிகவும் கவர்ந்தது. அவரது அழைப்பை ஏற்று, அங்கு பணியில் சேர்ந்தார். 1948-ல் ஓய்வு பெறும் வரை ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தார்.

 

# நிமோனியா காய்ச்சலை ஏற்படுத்தும் பாக்டீரியா தொடர் பான முக்கிய ஆய்வை வேறு இரண்டு மருத்துவ ஆராய்ச்சியாளர்களின் உதவியுடன் மேற்கொண்டார். சுமார் 20 காலன் பாக்டீரியாக்களை ஒவ்வொரு கட்டமாகத் தூய்மைப்படுத்தி ஆய்வு நடத்தியபோது, டிஆக்ஸி ரைபோ நியூக்ளிக் ஆசிட் எனப்படும் டி.என்.ஏ. ரகசியத்தைக் கண்டறிந்தார்.

 

# மரபணுக்கள் புரோட்டீன்களால் மட்டுமே ஆனவை என்று அதுவரை மருத்துவ உலகம் ஆணித்தரமாக நம்பியிருந்ததை இந்த கண்டுபிடிப்பு தகர்த்தது.

 

# பரம்பரை அடிப்படையிலான மரபணுவின் குணங்களை ஒவ்வொரு தலைமுறைக்கும் கொண்டு வருவது டி.என்.ஏ.தான் என்பதைக் கண்டுபிடித்தார். ஆனாலும் இதை பகிரங்கமாக அறிவிக்காமல், நெருங்கிய நண்பர்களிடம் மட்டும் பகிர்ந்துகொண்டார்.

 

# 1944-ல் டி.என்.ஏ. குறித்து இவரும் இவருடைய சகாக்களும் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரைக்கு மருத்துவ ஆராய்ச்சியாளர்களிடம் பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. டி.என்.ஏ. குறித்த ஏவரியின் வேறொரு ஆராய்ச்சிக் கட்டுரையால் ஈர்க்கப்பட்ட ஜோஷுவா லெடர்பெர்க் என்ற மருத்துவ மாணவர், பாக்டீரியா அடிப்படையிலான மரபணுவியல் குறித்து ஆய்வு செய்து 1959-ல் நோபல் பரிசு பெற்றார்.

 

# ஏவரி மேற்கொண்ட டி.என்.ஏ. ஆராய்ச்சியை அடித்தளமாக கொண்டு அடுத்தடுத்து நடத்தப்பட்ட ஆய்வுகள் இவரது வரலாற்றுப் பெருமைவாய்ந்த கண்டுபிடிப்பை உறுதி செய்தன. மரணத்துக்குப் பிறகுதான் அவருக்கு அங்கீகாரம் கிடைத்தது.

 

http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-10/article6520592.ece?widget-art=four-rel

 

Link to comment
Share on other sites

லியூவன்ஹாக் 10

 

2_2169990f.jpg

 

ஹாலந்து ஆராய்ச்சியாளர் ஆன்டனி வான் லியூவன்ஹாக்கின் பிறந்தநாள் இன்று. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து…

• வியாபாரக் குடும்பத்தில் பிறந்தவர். ஆரம்பக் கல்வி மட்டுமே படித்தவர், உறவினரிடம் கணிதம், இயற்பியல் கற்றார். தெரிந்த ஒரே மொழி, தாய்மொழி டச்சு.

• 22 வயதில் ஜவுளிக்கடை ஆரம்பித்தார். உள்ளூர் அரசியலிலும் பிரபலமானார். நூல்இழைகளின் தரத்தைப் பரிசோதிக்க ஜவுளி வியாபாரிகள் பூதக்கண்ணாடி பயன்படுத்துவது வழக்கம். இவர் அதுபோலச் செய்தது நூலிழைகளுக்கும் அப்பாற்பட்ட நுணுக்கமான ரகசியங்களைக் கண்டறியும் ஆர்வத்தை தூண்டியது.

• 1668-ல் சாதாரண லென்ஸ்களை தயாரிக்கக் கற்றார். ராபர்ட் ஹூக் எழுதிய ‘மைக்ரோகிராஃபியா’ என்ற புத்தகத்தைப் பார்த்த இவருக்கு மைக்ரோஸ்கோப் தயாரிப்பதில் ஆர்வம் பிறந்தது. மெல்லிய லென்ஸ், மைக்ரோஸ்கோப் தயாரித்து ஆராய்ச்சியில் இறங்கினார். ஒருசெல் உயிரினம் குறித்து முதன்முதலில் அறிவித்தார்.

• பொருளை 30 மடங்கு பெரிதாக்கிக் காட்டும் மைக்ரோஸ்கோப் கருவிகள்தான் இவரது காலத்தில் இருந்தன. இவர் உருவாக்கிய மைக்ரோஸ்கோப் 200 மடங்குக்கும் அதிகமாக பெரிதாக்கிக் காட்டின. இதுகுறித்து லண்டனில் உள்ள ராயல் சொசைட்டி இதழில் கட்டுரை வெளியானதும் பிரபலமடைந்தார்.

• ரத்த அணுக்கள், உயிரினங்களின் விந்தணுக்களை முதன்முதலில் கண்டறிந்தார். ரத்தச் சிவப்பு அணுக்கள் பற்றி முதன்முறையாகப் பதிவு செய்தார். மைக்ரோஸ்கோப் வழியாக உயிரினங்களில் காணும் காட்சிகளை ஓவியர் உதவியுடன் வரைந்து உரிய விளக்கங்களை குறிப்பிட்டு, லண்டன் ராயல் சொசைட்டிக்கு தொடர்ந்து அனுப்பினார்.

• 500-க்கும் மேற்பட்ட ஆப்டிகல் லென்ஸ்களை தயாரித்தார். 25 விதமான மைக்ரோஸ்கோப்களை உருவாக்கினார்.

• ஒரு ஆய்வுக் கட்டுரை, ஆராய்ச்சிப் புத்தகம்கூட இவர் எழுதியது இல்லை. ஆனால், ராயல் சொசைட்டிக்கு இவர் அனுப்பிய 1677 கடிதங்களும் நுண்ணுயிரியலில் புதிய கண்டுபிடிப்புகளுக்கு அடித்தளமாக அமைந்தன. ராயல் சொசைட்டி நூலகத்தில் இந்த கடிதங்கள் முக்கிய ஆவணங்களாக இன்றும் பாதுகாக்கப்படுகின்றன.

• அவரது நுணுக்கமான ஆய்வுத் திறனும், தணியாத ஆர்வமும் ‘நுண்ணுயிரியல் தந்தை’ என்ற பெருமையை பெற்றுத் தந்தன.

• அறிவியல் மேதைகள் மட்டும் அங்கம் வகிக்கும் லண்டன் ராயல் சொசைட்டி, இவரது ஆய்வுத் திறனை கவுரவித்து இவரையும் உறுப்பினராக சேர்த்துக்கொண்டது.

• கடைசிவரை நுண்ணுயிரி ஆராய்ச்சியில் ஈடுபட்ட இவர் 90-வது வயதில் இறந்தார்.

 

http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-10/article6528446.ece?widget-art=four-rel

 

Link to comment
Share on other sites

 

பிகாசோ 10

 

2_2171104f.jpg

 

ஓவியர், சிற்பி, கவிஞர், நாடக ஆசிரியர் என்று பன்முகத் திறமை கொண்ட பாப்லோ பிகாசோவின் பிறந்தநாள் இன்று. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து…

 

• பிறந்தது ஸ்பெயினில். வாழ்நாளில் பெரும் பகுதியைக் கழித்தது பிரான்ஸில். இவரது ஓவியக் கலை ஈடுபாடு குழந்தைப் பருவத்திலேயே வெளிப்பட்டது. இவர் முதலில் உச்சரித்த வார்த்தை ‘பென்சில்’ என்பதுதானாம். இதை அவரது தாய் பூரிப்போடு சொல்வார். ஓவியப் பள்ளி ஆசிரியரான தந்தையிடம் 7 வயதில் ஓவியப் பயிற்சியைத் தொடங்கினார். 13 வயதிலேயே தந்தையை விஞ்சிய தனயன் ஆனார்.

 

• பள்ளிப் பருவத்தில், பாடம் என்றாலே இவருக்கு கசப்பு. மோசமான மாணவனாக கருதப்பட்டார். ஒருமுறை சேட்டை அதிகமாகி, தனி அறையில் அடைத்தார்கள். உற்சாகமானவர் நோட்டுப் புத்தகத்தில் வரைய ஆரம்பித்துவிட்டார். ‘‘அந்த தனிமை ரொம்ப பிடித்திருந்தது. நிரந்தரமாக அடைத்து வைத்திருந்தால்கூட மகிழ்ச்சியாக இருந்திருப்பேன்’’ என்று பின்னாளில் கூறியிருக்கிறார்.

 

• பார்சிலோனா நுண்கலைக் கல்லூரி நுழைவுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றதால் 14 வயது சிறுவன் பிகாசோவுக்கு விதிவிலக்கு அளித்து சேர்த்துக்கொண்டனர். ஆனால், கல்லூரியின் கட்டுப்பாடுகள் பிடிக்காமல் வகுப்புகளை ‘கட்’ அடித்துவிட்டு வீதிகளில் சுற்றித் திரிவார். கண்ணில்பட்ட காட்சிகளை மனதில் பதியவைத்து ஓவியங்களாகத் தீட்டுவார். மாட்ரிட் நகரில் உள்ள சான் பெர்னாண்டோ ராயல் அகாடமியில் ஓவியக் கலை பயின்றபோதும் இதேபோலத்தான்.

 

• பாரம்பரிய ஓவிய பாணியில் இருந்து 18 வயதில் முழுவதுமாக விடுவித்துக்கொண்டு புதிய முயற்சிகளில் இறங்கினார்.

 

• ‘யங் லேடீஸ் ஆஃப் அவென்யூ’ என்ற ஓவியம் மூலம் கியூபிசம் எனப்படும் புதிய பாணியை அறிமுகப்படுத்தினார். 5 பாலியல் தொழிலாளர்களை சித்தரிக்கும் இந்த ஓவியம், வெவ்வேறு கோணங்களில் பார்க்கும்போது மாறுபட்ட விஷயங்களை உணர்த்தும். இந்த ஓவியம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினாலும், கலை உலகில் புதிய புரட்சியை உருவாக்கியது.

 

• சிற்பம் வடிப்பது, செராமிக் ஓவியம் தீட்டுவதிலும் தனித்தன்மையுடன் பிரகாசித்தார்.

 

• அமைதியின் அடையாளச் சின்னமாக ஆலிவ் இலைகள், புறாவை பிரபலப்படுத்தியவர் இவர்தான்.

 

• ஸ்பெயினின் கெர்னிகா கிராமத்தை ஹிட்லரின் நாஜிப் படை குண்டு வீசி நாசமாக்கியதைக் கண்டித்து ‘கெர்னிகா’ என்ற ஓவியத்தை தீட்டினார். அது இவரது போர் எதிர்ப்பு மனோபாவத்தை வெளிப்படுத்தியது.

 

• இவரது வாழ்க்கையை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட சில திரைப்படங்களில் ‘தி மிஸ்ட்ரி ஆஃப் பிகாசோ’ திரைப்படம் குறிப்பிடத்தக்கது. இது 1955-ல் வெளியானது.

 

• 2 ஆயிரம் சிற்பங்கள், 1200-க்கும் மேற்பட்ட ஓவியங்கள், 3 ஆயிரம் மண்பாண்ட சிற்பங்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான கலைப் படைப்புகளுக்கு உயிர்கொடுத்த பிகாசோ, 93-வது வயதில் இறந்தார்.

 

http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%87%E0%AE%BE-10/article6531021.ece?widget-art=four-rel

 

Link to comment
Share on other sites

நெப்போலியன் ஹில் 10

 

neps_2172218h.jpg

 

வெற்றி சூத்திரங்களின் நாயகன் நெப்போலியன் ஹில்லின் பிறந்தநாள் இன்று. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து...

 

* அமெரிக்காவின் தென் மேற்கு வர்ஜீனியாவில் பிறந்தவர். சிறு வயதிலேயே தாய் இறந்து விட்டார். யாருக்கும் அடங்காமல் சுற்றித் திரிந்த சிறுவனை, தந்தையின் 2-வது மனைவிதான் நல்வழிப்படுத்தினார்.

 

* 15 வயதில் உள்ளூர் பத்திரிகையில் நிருபரானார். அங்கு பணி யாற்றிக்கொண்டே சட்டக் கல்லூரியில் சேர்ந்தார். வருமானம் போதாமல் சட்டக் கல்வியை பாதியிலேயே நிறுத்திவிட்டார்.

 

* 1908-ல் பிரபல சாதனையாளர்களை பேட்டி கண்டு எழுதினார். பிட்ஸ்பர்க் நகரத்தின் பிரபல எஃகு நிறுவன அதிபர் ஆண்ட்ரூ கார்னகியை பேட்டி கண்டது இவரது வாழ்க்கையின் திருப்புமுனையாக அமைந்தது.

* ஹில்லிடம் ஒரு சவால் விடுத்தார் கார்னகி. ‘‘எந்த சமரசமும் செய்துகொள்ளாமல் 20 ஆண்டுகள் தொடர்ந்து வெற்றிக்கான கோட்பாடுகளை ஆவணப்படுத்தி பதிவு செய்ய வேண்டும்’’ என்பதுதான் அது. இதன்மூலம் நிறைய சாதனையாளர்களை ஹில்லிடம் அறிமுகப்படுத்தினார் கார்னகி.

 

* 20 ஆண்டு காலத்தில் ஏராளமான வாய்ப்புகள் குவிந்தன. தியோடர் ரூஸ்வெல்ட், தாமஸ் எடிசன், ஜான் டி. ராக்ஃபெல்லர், ஹென்றி ஃபோர்டு, அலெக்சாண்டர் கிரஹாம் பெல் உள்ளிட்டவர்களை சந்தித்து வெற்றிக் கோட்பாடுகளைத் திரட்டினார்.

l‘‘இலக்கில் உறுதியோடு இருப்பது, தனக்கு என்ன தேவை என்பதை மிகச் சரியாக தெரிந்து வைத்திருப்பது.. இந்த இரண்டும் இருந்தால் வெற்றி பெறுவது சிரமமாக இருக்காது’’ என்ற கார்னகியின் கோட்பாடுகள்தான் ஹில்லின் சுய முன்னேற்றப் படைப்புகளுக்கு அடித்தளம்.

 

* வெற்றிக் கோட்பாடுகளுக்காக ஹில் தொடங்கிய பத்திரிகை பெரும் வெற்றி பெற்றது. கடந்த 50 ஆண்டு காலத்தில் மாபெரும் சாதனையாளர்களின் வெற்றி சூத்திரங்கள் அடங்கிய ‘தி லா ஆஃப் சக்சஸ்’ என்ற புத்தகத்தை 1928-ல் வெளியிட்டார். இந்த புத்தகம் விற்பனையில் சாதனை படைத்தது. இவரது இன்னொரு படைப்பு ‘திங்க் அண்ட் குரோ ரிச்’ 1930-ல் வெளியானது. கோடிக்கணக்கான பிரதிகள் விற்றுள்ளது.

 

* உட்ரோ வில்சன், பிராங்க்ளின் ரூஸ்வெல்ட் ஆகிய இரு அமெரிக்க அதிபர்களுக்கு ஆலோசகராக இருந்திருக்கிறார்.

lதனி நபர் சாதனைக்கான இவரது தத்துவம் ஆழமானது, விசாலமானது. ஒருவருக்குள் புதைந்துக்கிடக்கும் ஆற்றலை அவரே கண்டறிய உதவுவதுதான் இவரது படைப்புகள் என்கிறார்கள்.

 

* இவரது வெற்றித் தத்துவங்கள் உலகம் முழுவதும் பல கோடி பேரை வெற்றியாளர்களாக, செல்வந்தர்களாக மாற்றி வருகின்றன. ‘வெற்றி அறிவியலின் தந்தை’ என்று போற்றப்படும் நெப்போலியன் ஹில் 87-ம் வயதில் காலமானார்.

 

http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-10/article6533806.ece?widget-art=four-rel

 

Link to comment
Share on other sites

ஐஸக் மெரிட் சிங்கர் 10

 

isaac_singer_2173883h.jpg

 

நியுயார்க் நகரின் பிட்ஸ்டவுனில் பிறந்தவர். 12 வயதில் வீட்டை விட்டு வெளியேறிய இவர், எங்கெங்கோ சுற்றி, கிடைத்த வேலைகளைச் செய்து ஒரு மெக்கானிக்காகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.
 
* மெக்கானிக்காக இருந்த அவர் ஓயாமல் ஏதாவது புதிய பொருளைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தார். 1839-ல் இல்லினோயிசில் இருந்தபோது, பாறை துளையிடும் இயந்திரத்தைக் கண்டறிந்தார். அதன் காப்புரிமையை விற்றார். நடிகனாக வேண்டும் என்ற ஆசையால், அந்தப் பணத்தில் ‘மெரிட் ப்ளேயர்ஸ்’ என்னும் நாடகக் குழுவை உருவாக்கி, நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, ஐஸக் மெரிட் என்ற பெயரில் மேடைகளில் தோன்றினார்.
 
* ஒன்பது வருடங்கள் தொடர்ந்த இந்த நாடகக் குழுவின் தொடர் தோல்விகளால் குழு கலைக்கப்பட்டது. நடிப்புத் தொழில் கை கொடுக்கவில்லை என்பதால் சிங்கர் துவண்டுவிடவில்லை. மீண்டும் மெக்கானிக்காகவும், கண்டுபிடிப்பாளராகவும் மறுஅவதாரம் எடுத்தார்.
 
* 1949-ல் மரம் மற்றும் உலோகம் செதுக்கும் கருவியை உருவாக்கி அதற்கு காப்புரிமை பெற்றார். சொந்தமாக ஒரு தொழிற்சாலையை உருவாக்கி உற்பத்தியைத் தொடங்கினார். துரதிர்ஷ்டவசமாக, அங்கு ஏற்பட்ட ஒரு வெடி விபத்தில் தொழிற்சாலை தரைமட்டமானது.
 
* 1950-ல் ஒரு தையல் இயந்திரக் கடையில் பழுது பார்க்கும் மெக்கானிக்காக வேலை பார்த்தார். முதலாளி அவரிடம் தையல் இயந்திரம் ஒன்றைப் பழுது பார்க்கும்படி கூறினார். சிங்கரின் கண்டுபிடிப்பாளர் மூளை உடனே செயல்பட்டது. ஒரு சில நாட்களிலேயே உயர்தரம் வாய்ந்த புதுமையான முறையில் அதை மேம்படுத்தினார். மிகவும் சவுகரியமாகவும், ஒரு நிமிடத்திற்கு 900 தையல் போடக்கூடிய அதி வேகத் திறன் வாய்ந்ததாகவும் அது செயல்பட்டது.
 
* அதற்கு சிங்கர் தையல் மிஷின் என்று பெயரிட்டார். இதற்கான காப்புரிமைக்காக இவர் விண்ணப்பித்தபோது, இதன் அடிப்படை எலியாஸ் ஹவ் என்பவருடைய கண்டுபிடிப்பு என்பதால், அவர் சிங்கர் மீது வழக்கு தொடர்ந்தார். வழக்கில் எலியாஸ் வென்றார். இந்தத் தோல்வியும் இவரை ஒன்றும் செய்துவிடவில்லை. அதிர்ஷ்டவசமாக, அவர் தான் தயாரித்த இயந்திரங்களைத் உற்பத்திசெய்யக் கூடாது என்று தீர்ப்பில் தடை விதிக்கப்படவில்லை. 1857-ல், எட்வர்ட் கிளார்க் என்பவருடன் கூட்டாகச் சேர்ந்து ஐ.எம். சிங்கர் & கம்பெனியைத் தொடங்கினார்.
 
* இந்த நிறுவனம் புதுமையான உத்திகளைப் பயன்படுத்தி, உற்பத்திச் செலவைக் குறைத்து, வேலைக்குச் செல்லாத நடுத்தர வர்க்கக் குடும்பப் பெண்களும் வாங்கிப் பயன்படுத்தும் வகையில் குறைந்த விலையில் தையல் இயந்திரத்தைத் தயாரித்து விற்பனை செய்தது.1860-ல் உலகிலேயே மிகப் பெரிய அளவில் தையல் இயந்திரம் உற்பத்தி செய்யும் நிறுவனமாக இது உயர்ந்தது. மேலும் 22 புதிய தயாரிப்புகளுக்கான காப்புரிமைகளை இந்த நிறுவனம் பெற்றது.
 
* முதன்முதலாக வீட்டு உபயோகத் தையல் இயந்திரத்தை மிகப்பெரிய அளவில் உற்பத்தி செய்த நிறுவனத்தைத் தொடங்கியவர் சிங்கர். இவரது கண்டுபிடிப்புகளால் அமெரிக்கா அதுவரை கண்டிராத மிகப் பெரிய தொழிற்துறை வளர்ச்சியைக் கண்டது.
 
* இவர் பல திருமணங்கள் செய்துகொண்டவர். திருமணங்கள் மூலமாகவும் திருமணம் இல்லாமலும் ஒரு டஜனுக்கும் மேற்பட்ட வாரிசுகள் உண்டு.
 
* சிங்கர் ஆறடி ஐந்தங்குலம் கொண்ட ‘உயர்ந்த’ மனிதர். பூஜ்ஜியத்திலிருந்து வாழ்க்கையைத் தொடங்கிய இவர், தன் உழைப்பாலும் புதுமைக் கண்ணோட்டத்தாலும் மேதைமையாலும் மிக உயர்ந்த இடத்தை எட்டினார். தனது 63-வது வயதில் மரணமடைந்தார் இந்தச் சாதனையாளர்.
 
Link to comment
Share on other sites

வில்லியம்ஹென்றி கேட்ஸ் (பில் கேட்ஸ்) 10

 

billgates_1876548f.jpg

 

கணினி ஜாம்பவான் பில்கேட்ஸின் பிறந்த நாள் இன்று. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து...
 
• வாஷிங்டனில் பிறந்தவர். அம்மா செல்லம். சிறு வயதிலேயே வாசிப்புப் பழக்கம் தொற்றிக் கொண்டது. பள்ளியில் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் ஆச்சர்யமூட்டும் வகையில் அசத்தினார்.
 
• கணினி நிறுவனம் ஒன்று மாணவர்களுக்குக் கணினிப் பாடம் சொல்லித்தர முன்வந்தது. கணினியைப் பார்த்தவுடனே காந்தம்போலக் கவரப்பட்டார் பில்கேட்ஸ். குறுகிய நாட்களிலேயே அடிப்படை கணினி லாங்குவேஜில் டிக்-டாக்-டோ என்கிற தனது முதல் கணினி நிரலை வடிவமைத்தார்.
 
• பால் ஆலனைச் சந்தித்தது கேட்ஸுக்கு மட்டுமல்ல... கணினி உலகத்துக்கே திருப்புமுனை. 1970-ல் இருவரும் இணைந்து நகரின் போக்குவரத்தைக் கண்காணிக்கும் கணினி தொழில்நுட்பத்தை உருவாக்கினார்கள். கேட்ஸுக்கு அப்போது வயது 15. இருவரும் இணைந்து நிறுவனம் தொடங்க ஆசைப்பட்டனர். ஆனால், கேட்ஸின் பெற்றோர் ஆசையோ வேறாக இருந்தது. வலுக்கட்டாயமாக வழக்கறிஞர் தொழிலுக்குப் படிக்க அனுப்பிவிட்டார்கள்.
 
• கணினியை மறக்க முடியாதவர் கல்லூரிப் படிப்பை பாதியில் உதறினார். ஆலன் வேலை பார்த்த நிறுவனத்தில் சேர்ந்தார். அங்கு ‘ஆல்டர் 8800’ தொழில்நுட்பம் பற்றி கேட்ஸ் அறிந்தார். இதை நியு மெக்சிகோ நகரில் உள்ள மைக்ரோ இன்ஸ்ட்ருமன்டேஷன் அன்ட் டெலிமெட்ரி சிஸ்டம் (எம்.ஐ.டி.எஸ்) என்ற சிறுநிறுவனம் உருவாக்கியிருந்தது.
 
• 1975-ல் இருவரும் இணைந்து ‘மைக்ரோ சாஃப்ட்’ நிறுவனத்தைத் தொடங்கினர். 1978-ம் ஆண்டு அந்த நிறுவனம் இரண்டரை மில்லியன் டாலர் வருவாய் ஈட்டியது. அப்போது கேட்ஸுக்கு வயது 23.
 
• மென்பொருள் வடிவமைப்பில் மட்டுமல்லாமல் வியாபார உத்திகளிலும் புரட்சியைப் புகுத்தினார் கேட்ஸ். 1980-ல் ஐ.பி.எம்-உடன் தொழில் ஒப்பந்தம் செய்துகொண்டனர்.
 
• 1983-ல் பிரிட்டனிலும், ஜப்பானிலும் மைக்ரோசாஃப்ட் கிளை பரப்பியது. போட்டி நிறுவனங்களாக இருந்தாலும், ஆப்பிளும் மைக்ரோசாஃப்டும் கண்டுபிடிப்புகளைப் பகிர்ந்து கொண்டன. உங்கள் கைகளில் தவழும் வின்டோஸ் பிறந்தது இப்படிதான்.
 
• கேட்ஸ் நூலாசிரியரும்கூட. தனது சகாக்களுடன் இணைந்து இரண்டு நூல்களை எழுதினார். தனி நபர் கணினிப் பயன்பாட்டுப் புரட்சி மற்றும் அதிவேகத் தகவல் தொடர்பின் வரவு உலகை எவ்வாறு மாற்றப்போகிறது என்பதைப் பற்றி அவர் அதில் எழுதினார்.
 
• தன் நிறுவனத்தின் பணிபுரிந்த மெலின்டாவை திருமணம் புரிந்தார். மெலின்டாவின் மனிதநேயம் இவரையும் பற்றிக் கொண்டது. ‘வில்லியம் ஹெச். கேட்ஸ் ஃபவுண்டேஷன்’ மற்றும் ‘பில் அன்ட் மெலின்டா கேட்ஸ் ஃபவுண்டேஷன்’ தொடங்கப்பட்டன. உலகம் முழுவதும் நலிவுற்றோருக்கு கல்வியும் மருத்துவமும் அளிக்கின்றன அந்த அமைப்புகள்.
 
• 20-ம் நூற்றாண்டின் செல்வாக்கு மிகுந்த நபர் என்றது டைம் பத்திரிகை. உலகம் முழுவதும் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்கள் கேட்ஸுக்கு கவுரவ முனைவர் பட்டம் வழங்கி, கவுரவம் தேடிக் கொண்டன.
 
Link to comment
Share on other sites

வாலி 10

 

vaali_2176473f.jpg

 

எழுத்துகளை என்றென்றும் இளமை மாறாமல் வைத்திருந்த ‘வாலிபக் கவிஞர்’ வாலியின் பிறந்தநாள் இன்று. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து...
 
• பிறந்தது ஸ்ரீரங்கம். இயற்பெயர் டி.எஸ்.ரெங்கராஜன். சிறு வயதிலேயே நாடகம் எழுதுவார். ‘நேதாஜி’ என்ற கையெழுத்துப் பத்திரிகை நடத்தினார். அப்போதே இவரது நாடகங்கள் திருச்சி அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பாகின.
 
• சிறந்த ஓவியர். சென்னை ஓவியக் கல்லூரியில் ஓர் ஆண்டு படித்தார். ஓவியர் மாலி போல ஆகவேண்டும் என்பது ஆசை. ரெங்கராஜன், ‘வாலி’யான ரகசியம் இதுதான்.
 
• சினிமாவுக்கு அழைத்துவந்தவர் டி.எம்.சவுந்தரராஜன். எம்.ஜி.ஆர்., சிவாஜி ஆகிய இருவருக்குமே வாலியைப் பிடிக்கும். எம்.ஜி.ஆர். இவரை ‘ஆண்டவனே’ என்பார். சிவாஜிக்கோ இவர் ‘வாத்தியார்’. வாலி வீட்டு தோசை - மிளகாய்ப் பொடிக்கு தமிழ்த் திரையுலகில் ரசிகர் பட்டாளமே இருந்தது.
 
• விருப்ப விளையாட்டு கிரிக்கெட். கிரிக்கெட் விவரங்களை விரல் நுனியில் வைத்திருப்பார். ஒரு வீரரின் பலம், பலவீனம் பற்றி விரிவாக, நுணுக்கமாக அலசுவார்.
 
• காதல், காமம், தாய்மை, தாலாட்டு, பக்தி, சோகம், குத்துப்பாட்டு என வாலியின் வரிகள் பயணிக்காத உணர்வுகளே இல்லை. சூழலைச் சொல்லி முடிப்பதற்குள் பல்லவி முடித்து சரணத்துக்கு போயிருப்பார். எம்.ஜி.ஆர். தொடங்கி தனுஷ் வரைக்கும் பாடல் எழுதிய நான்கு தலைமுறை பாடலாசிரியர்.
 
• வாலியின் தத்துவப் பாடல்களில் கண்ணதாசன் சாயல் இருக்கும். அதுகுறித்து கேட்டால், ‘தங்கத்துடன்தானே ஒப்பிடுகிறார்கள்.. தகரத்துடன் இல்லையே’ என்பார் பெருமையாக.
 
• தமிழக அரசின் சிறந்த திரைப்படப் பாடலாசிரியர் விருதை 5 முறை பெற்றவர். பத்ம, பாரதி விருது, கலைமாமணி உள்ளிட்ட விருதுகளையும் பெற்றவர்.
 
• கோபம் அதிகம். ‘பாரதவிலாஸ்’ படத்தில் ‘இந்திய நாடு என் வீடு’ பாடல் எழுதினார். அந்தப் பாடலுக்கு தேசிய விருது கொடுக்க வாலியிடம் அதிகாரிகள் பயோடேட்டா கேட்டார்கள். ‘‘பாட்டுக்கு தகுதி இருந்தா யாரு.. என்னன்னு விசாரிக்காம தரணும். என்கிட்டயே நான் யார்னு கேட்டு தர்றதா இருந்தா, விருதே வேண்டாம்’’ என்றார் சூடாக!
 
• 15 ஆயிரத்துக்கும் அதிகமான திரைப்பாடல்கள், 17 திரைப்படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதியவர். ‘வடைமாலை’ என்ற படத்தை மாருதி ராவுடன் இணைந்து இயக்கினார். ராமாயணம், மகாபாரதம் ஆகிய இதிகாசங்களை புதுக்கவிதை வடிவில் படைத்தார். சில படங்களிலும் நடித்துள்ளார்.
 
• பொய் பிடிக்காது. தமிழ்த் திரையுலகில் சுமார் அரை நூற்றாண்டு காலம் ஆதிக்கம் செலுத்தியவர், கடந்த ஆண்டு காலமானார்.
 
Link to comment
Share on other sites

சர்தார் வல்லபாய் படேல் 10

 

5_2180371h.jpg

 

இந்தியாவின் ‘இரும்பு மனிதர்’ என்று போற்றப்படும் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாள் இன்று. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து…

• குஜராத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். சிறுவனாக இருந்தபோது உடம்பில் கட்டி வந்தது. நாட்டு வைத்தியரிடம் அழைத்துப் போனார்கள். இரும்புக் கம்பியை சூடாக்கி, கட்டியை உடைக்க முற்பட்ட வைத்தியர், சிறுவனின் பிஞ்சு முகத்தைப் பார்த்து தயங்கினார். ‘ஐயா! சீக்கிரம் வையுங்கள். சூடு ஆறிவிடப்போகிறது’ என்றதாம் அந்த இரும்புக் குழந்தை.

• படிப்பில் கெட்டிக்காரர். சட்டக் கல்வி முடித்து வழக்கறிஞர் ஆனார். நல்ல வருமானம் வந்ததால், முதலில் தன் அண்ணனை லண்டன் அனுப்பி சட்ட மேற்படிப்பு படிக்க வைத்தார். அவர் திரும்பியதும் தானும் லண்டன் சென்று பாரிஸ்டர் பட்டம் பெற்றார்.

• அகமதாபாத்தில் வக்கீல் தொழில் நடத்தியபோது உள்ளூர் மக்களின் பிரச்சினைகளுக்கு உதவி, பிரபலமானார். 1917-ம் ஆண்டு மாநகராட்சித் தேர்தலில் வெற்றி பெற்றார். சுதேசி இயக்கம் உச்சத்தில் இருந்தபோது காந்திஜியின் உரையைக் கேட்டவர், வக்கீல் தொழிலை உதறி சுதேசி இயக்கத்தில் இணைந்தார்.

• குஜராத்தில் கேடா என்ற இடத்தில் பயங்கர பஞ்சம். ஆங்கிலேய அரசிடம் வரி விலக்கு கேட்டு விவசாயிகள் போரா டினர். அரசு பணியாததால் காந்தி, படேல் தலைமையில் வரிகொடாமைப் போராட்டம் வெடித்தது. அரசு பணிந்தது. வரி ரத்தானது. படேலின் முதல் வெற்றி இது!

• பார்டோலி என்ற இடத்தில் விவசாயிகள் நலன் காக்க நடைபெற்ற மற்றொரு சத்தியாக்கிரகப் போராட்டத்திலும் படேலுக்கு வெற்றி கிடைத்தது. அப்போதிருந்து மக்களால் ‘சர்தார்’ என்று அன்போடு அழைக்கப்பட்டார். அதன் பிறகு போராட்டங்களும் சிறைவாசமும் அவருக்கு வாடிக்கையாகிப் போனது.

• வட்டமேஜை மாநாட்டு தோல்விக்குப் பிறகு காந்தி, படேல் கைது செய்யப்பட்டனர். எரவாடா மத்திய சிறையில் அடைக்கப்பட்டபோது இருவருக்கும் நெருக்கம் வளர்ந்தது.

• சுதந்திரப் போராட்டத்தின் சிப்பாய் என்று அழைக்கப்பட்டார். இந்திய விவசாயிகளின் ஆன்மாவாக கருதப்பட்டார். நவீன இந்தியாவை உருவாக்கியவர்களில் முக்கியமானவர். சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராகவும் துணைப் பிரதமராகவும் பணியாற்றினார்.

• நாடு முழுவதும் ஆங்காங்கே துண்டு துண்டாக மன்னராட்சி நடந்துகொண்டிருந்த 565 ராஜ்ஜியங்களை ஒன்றிணைத்ததுதான் உள்துறை அமைச்சராக அவர் ஆற்றிய முதல் பணி. வி.பி.மேனனுடன் இணைந்து அகண்ட பாரதத்தை அமைத்தார்.

• அகண்ட பாரதம் அவ்வளவு எளிதாக அமையவில்லை. அந்த இலக்குக்காக சகல வழிகளையும் பின்பற்றினார். சர்ச்சைகள், எதிர்ப்புகள் எழுந்தாலும் இரும்பு மனிதராக நின்று சமாளித்தார்.

• 75-ம் வயதில் இறந்தார். 1991-ல் படேலுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

 

http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-10/article6551311.ece?widget-art=four-rel

 

Link to comment
Share on other sites

ஜார்ஜ் புல் 10

 

GeorgeBoole1_2183378h.jpg

 
நவீன கணிதவியல் வல்லுநரும் ‘அல்ஜீப்ரா’ பிதாமகருமான ஜார்ஜ் புல் பிறந்தநாள் இன்று. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து…
 
* இங்கிலாந்தில் பிறந்தவர். பள்ளிப் படிப்பின்போதே அறிவாற்றலுடன் விளங்கிய குழந்தை மேதை. 12 வயதில் லத்தீன் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். ஜெர்மன், பிரெஞ்சு, கிரேக்க மொழிகளை சிறு பருவத்திலேயே கற்றுத் தேர்ந்தார்.
 
* தந்தை நடத்திய காலணித் தொழில் நொடித்ததால் 16 வயதில் குடும்பப் பொறுப்பை ஏற்றார். பள்ளியில் உதவி ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். 20 வயதில் சொந்தமாக ஒரு பள்ளியை நிறுவினார். கணிதம் மீதான ஆர்வத்தால், ஆராய்ச்சிப் புத்தகங்களைத் தேடித் தேடிப் படித்தார். லிங்கன்ஸ் மெக்கானிக்ஸ் இன்ஸ்டிடியூட்டில் ஐசக் நியூட்டனின் புத்தகங்களைப் படித்து அல்ஜீப்ராவில் உயர்நிலை கணக்குகளுக்குத் தீர்வு காணத் தொடங்கினார்.
 
* அவருக்கு சமூக அக்கறையும் அதிகம். சமூக அவலங்களை எதிர்த்தார். பாலியல் தொழிலாளர்களுக்காக மறுவாழ்வு இல்லம் தொடங்கினார்.
 
* 1838-ல் தொடங்கி கணிதத் துறை வல்லுநர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டார். அல்ஜீப்ராவை ஆழ்ந்து படித்தார். பல்வேறு ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதினார்.
 
* மழைக்குக்கூட கல்லூரிப் பக்கம் ஒதுங்காதவர், அயர்லாந்தின் க்வீன்ஸ் கல்லூரியில் கணிதத் துறையின் முதல் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். டப்ளின், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகங்கள் இவருக்கு கவுரவப் பட்டங்கள் வழங்கின. ராயல் சொசைட்டியின் உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
* நுண்கணிதம், இயற்கணிதம், வகையீட்டு சமன்பாடுகள் ஆகியவற்றில் ஆராய்ச்சி மேற்கொண்டு புதிய கோட்பாடுகளை வகுத்தார். 50-க்கும் மேலான அவரது ஆய்வுக் கட்டுரைகள் மிகவும் பிரபலமாயின.
 
* கேம்பிரிட்ஜ் கணித இதழில் ‘அனலிடிகல் டிரான்ஸ்பர்மேஷன் தியரி’ குறித்த தொடர் கட்டுரைகளை 24-வது வயதில் எழுதினார். தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேலாக இவர் எழுதிய கட்டுரைகள் கணிதத் துறையின் புதிர்களை எளிமையாக புரியவைத்தன.
 
* 1884-ம் ஆண்டு பிலாஸபிகல் டிரான்ஸாக் ஷன் ஆப் தி ராயல் சொசைட்டி என்ற ஆய்வுக் கட்டுரைக்காக ராயல் சொசைட்டியின் தங்கப் பதக்கம் பெற்றார். அதில்தான் அல்ஜீப்ரா - கால்குலஸ் இணைப்பு குறித்து விளக்கியிருந்தார். தற்போது பூலன் அல்ஜீப்ரா எனப்படும் லாஜிக்கல் அல்ஜீப்ரா குறித்த ஆராய்ச்சியையும் தொடங்கினார்.
 
* இன்றைய டிஜிட்டல் கம்ப்யூட்டர் சர்க்யூட்களுக்கு அடிப்படை வடிவமைப்பு இவர் உருவாக்கிய பூலன் அல்ஜீப்ரா. அதனாலேயே அல்ஜீப்ராவின் பிதாமகர் என்று அழைக்கப்படுகிறார்.
 
* கணித மேதையும் தத்துவவாதியுமான ஜார்ஜ், கணினி அறிவியல் துறை தோன்றக் காரணமானவர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். இவர் 49-வது வயதில் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்தார்.
 
Link to comment
Share on other sites

Untitled_2185829h.jpg

 

தொழில் நிறுவனத்தைத் தொடங்கிய காந்தியவாதி ஜம்னாலால் பஜாஜ் பிறந்தநாள் இன்று. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து…
 
 ராஜஸ்தானில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். உறவுக்கார பணக்கார தம்பதியின் பேரனாகத் தத்தெடுக்கப்பட்டார். தொழில் நுணுக்கங்களை கற்று, தாத்தா இறப்பதற்கு முன்பு குடும்பத் தொழிலை எடுத்து நடத்தும் அளவுக்கு முன்னேறினார். பின்னாளில் பஜாஜ் குழுமமாக புகழ்பெறவிருந்த தொழில் நிறுவனத்தை1926-ல் தொடங்கினார்.
 
 முதல் உலகப் போரின்போது நிதி வழங்கிய இவருக்கு பிரிட்டிஷ் அரசு ராய் பகதூர் விருது வழங்கியது. 1921-ல் ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்துகொண்டபோது அதை திருப்பிக்கொடுத்துவிட்டார்.
 
 மகாத்மா காந்தி தென் ஆப்ரிக்காவில் இருந்து திரும்பியவுடன், அவரது கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு சுதந்திரப் போராட்டத்தில் இணைந்தார். அனைவரும் சுதேசிப் பொருட்களைப் பயன்படுத்துவதே நாட்டின் வறுமையைப் போக்கும் என்ற காந்தியின் தொலைநோக்கு இவருக்குள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது.
 
 ஆங்கிலேயர்கள் இங்கிருந்து மலிவு விலையில் பருத்தியை வாங்கி இங்கிலாந்துக்கு அனுப்பி அங்கிருந்து விலை அதிகமான துணிகளாக இறக்குமதி செய்வதையும் கண்டார். சுதேசிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
 
 காந்தியின் எளிய வாழ்க்கை பிடித்ததால், மனைவி, மக்களோடு சபர்மதி ஆசிரமத்துக்கு வந்து சிலகாலம் தங்கியிருந்தார். 1923-ல் கொடி சத்தியாகிரகத்தில் பங்கேற்றார். காந்திக்கு மிகவும் நெருக்கமான சகாவாக, அவரைப் பின்பற்றினார். காந்தி இவரை தன் மகன்போலக் கருதினார்.
 
 காந்தி வார்தாவில் தங்கியிருந்து சுதந்திரப் போராட்டப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது இவரது விருப்பம். 1930-ல் வார்தா அருகே உள்ள சேவாகிராம் என்ற கிராமத்தில் காந்தி வசிக்கத் தொடங்கினார். காந்தி சேவா சங்கத்தின் தலைவராக ஜம்னாலால் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு காங்கிரஸ் செயற்குழு உறுப்பினராகவும், 1933-ல் காங்கிரஸ் பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
 தீண்டாமை ஒழிப்பு, இந்தி பிரச்சாரம், கதர் ஆடை மற்றும் கிராமத் தொழில் மேம்பாடு ஆகியவற்றில் முழு மூச்சுடன் பங்கேற்றார். கதர் அணிவதை வலியுறுத்தி நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டார்.
 
 தேசப் பொது மொழி அவசியம் என்று காந்திபோலவே இவரும் கருதினார். இந்தியைப் பரப்ப, ராஜாஜியுடன் சேர்ந்து தட்சிண பாரத இந்தி பிரச்சார சபா தொடங்கினார்.
 
ஹரிஜன மக்களுக்காக வார்தாவில் 1928-ல் லட்சுமி நாராயண் மந்திர் என்ற கோயிலை சொந்த செலவில் கட்டினார். சமபந்தி போஜனங்களில் கலந்துகொண்டார். தனது வயல்கள், தோட்டங்களில் பொதுக் கிணறுகளை வெட்டினார்.
 
 தனது செல்வத்தில் பெரும் பங்கையும் தொழில் லாபத்தையும் சமுதாய நலன்களுக்காகவே செலவிட்டார். ‘தனிநபர் ஆதாயத்தைவிட சமுதாய நலன்தான் முக்கியம்’ என்பதில் வலுவான நம்பிக்கை கொண்டிருந்தார். 53-வது வயதில் காலமானார்.
 

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாடு ஒரு மாநிலம்  தமிழ்நாடு தனிநாடு இல்லை  தமிழ்நாடு வெளிநாட்டு கொள்கையில் 1% கூட. இதுவரை பங்களிப்புகள் செய்யவில்லை   செய்ய முடியாது  தமிழ்நாடு இந்தியா மத்திய அரசாங்கத்தினால் ஆளப்படுகிறது  தமிழ்நாட்டில்,.சீமான் கமல்   விஐய்.  ஸ்டாலின் உதயநிதி   நெடுமாறன். வைகோ      கருணாநிதி  எம் ஜி” ஆர்    அண்ணா,.......இப்படி எவர் முதல்வர் பதவியில் இருந்தாலும்   வெளிநாட்டுத்தமிழராகிய. இலங்கை தமிழருக்கு 1% கூட பிரயோஜனம் இல்லை    தமிழ்நாட்டில் 7 கோடி தமிழனும் தமிழ் ஈழம்  மலர வேண்டும் என்று ஆதரித்தாலும்.  தமிழ் ஈழம்  கிடைக்காது  எனவே… ஏன் குதிக்க வேண்டும்???  இந்த சீமான் ஏன் குதிக்கிறார??  என்பது தான் கேள்வி??  ஆனால்  சீமான்  தமிழ்நாட்டில் அரசியல் செய்யலாம்  முதல்வராக வரலாம்”   தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்யலாம்    எங்கள் ஆதரவு 100% உண்டு”   கண்டிப்பாக ஆதரிப்பேன் ஆனால்  இலங்கை தமிழருக்கு  அது செய்வேன் இது செய்வேன்   என்று  ஏமாற்றக்கூடாது 😀
    • பகிர்வுக்கு நன்றி ஏராளன் ........!   🙏
    • என‌க்கு தெரிஞ்சு கேலி சித்திர‌ம் வ‌ரைவ‌து உண்மையில் த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் கார்ட்டூன் பாலா தான்...............த‌மிழ் நாட்டில் நிக்கும் போது ச‌கோத‌ர் காட்டூன் பாலா கூட‌ ப‌ழ‌கும் வாய்ப்பு கிடைச்ச‌து ப‌ழ‌க‌ மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர்............அவ‌ர் வ‌ரையும் சித்திர‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளை வ‌யித்தில் புளியை க‌ரைக்கும்.....................
    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.