Jump to content

இனியாவது நிறுத்துங்கள் அரசியல் விளையாட்டை!


Recommended Posts

இனியாவது நிறுத்துங்கள் அரசியல் விளையாட்டை!
 

 

நாங்கள் இந்தியாவில் வசிக்கவில்லை. கிரிக்கெட் விளையாடுவதற்காகவே இங்கு வந்திருக்கிறோம். நாங்கள் தாயகம் திரும்புகிறபோது எங்களின் கிரிக்கெட் ஆட்டத்தாலும், செயல்களாலும் இங்குள்ள மக்களின் மனங்களை கவர்ந்து செல்வோம். இங்கே எங்களுடைய வீரர்களுக்கும், பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கும் நல்ல வரவேற்பு இருக்கிறது. அதை அழிக்க நாங்கள் விரும்பவில்லை.

இப்படி மிக அழகாக முதிர்ச்சியோடு பேசியிருப்பவர் வேறு யாருமல்ல, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரும், சாம்பியன்ஸ் லீக்கில் விளையாடி வரும் லாகூர் லயன்ஸ் அணியின் கேப்டனுமான முகமது ஹபீஸ்தான்.

 

விளையாட்டில் அரசியலை கலக்காதீர்கள். பிரச்சினை என்பது இரு நாடுகளின் அரசியல்வாதிகளுக்கு இடையில்தான். வீரர்களாகிய எங்களுக்கு இடையே இல்லை. எங்களை இணைந்து விளையாட அனுமதியுங்கள். உங்களின் ஆதாயத்துக்காக அரசியல் சாயம் பூசி எங்களின் கனவுகளை சிதைக்காதீர்கள். விளையாட்டிலும் விரோதத்தை நுழைக்காதீர்கள் என்பதைத்தான் முகமது ஹபீஸ் சூசகமாக கூறியிருப்பாரோ என எண்ணத் தோன்றுகிறது.

 

முகமது ஹபீஸின் முதிர்ச்சியான பேச்சிலிருந்தே அவர் எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பதை உணரமுடியும். இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பிரச்சினை எப்போது ஓயும் என்பதற்கு யாரிடமும் பதில் இல்லை. அதுவரை இரு நாடுகள் இடையே விளையாட்டு போட்டியே நடைபெறக்கூடாது என நிறுத்திவைப்பது எப்படி சரியான முடிவாக இருக்க முடியும்?

 

தனிமைப்படுத்தப்பட்ட பாகிஸ்தான்

2008-ல் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் மும்பையில் தாக்குதல் நடத்திய பிறகு 2012 டிசம்பருக்கு முன்பு வரை இந்தியா-பாக். இடையிலான கிரிக்கெட் தொடர் நடைபெறவில்லை. 2009-ல் பாகிஸ்தான் சென்ற இலங்கை வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய பிறகு பாதுகாப்பை காரணம் காட்டி அங்கு சென்று விளையாட அனைத்து அணிகளும் மறுத்துவிட்டன. அதன்பிறகு விளையாட்டுத்துறையில் தனிமைப்படுத்தப்பட்டது பாகிஸ்தான்.

 

2012-ம் ஆண்டின் இறுதியில் இந்தியா-பாக். இடையே ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்ற பிறகும்கூட ஐபிஎல் போட்டியில் விளையாட பாகிஸ்தானியர்கள் அனுமதிக்கப்படவில்லை. உலகம் முழுவதிலும் உள்ள வீரர்கள் ஐபிஎல் போட்டியில் ஆடுகிறார்கள். ஆனால் திறமைக்கு பெயர்பெற்ற பாகிஸ்தானியர்களோ தொலைக்காட்சியில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

மற்ற நாடுகளைப் போன்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் செல்வாக்கு படைத்ததல்ல. இந்தியாவில் கிரிக்கெட் வீரர்கள் சம்பாதிக்கும் அளவுக்கு பாகிஸ்தான் வீரர்களுக்கு பெரிய அளவில் ஊதியம் இல்லை. அதனால்தான் அவர்களும் ஐபிஎல் போட்டியில் விளையாட வாய்ப்பு கேட்டு காத்திருக்கிறார்கள்.

 

வதைக்கப்படும் வீரர்கள்

ஹாக்கி இந்தியா லீ்க் போட்டியில் விளையாடும் வாய்ப்பை பாகிஸ்தானியர்கள் பெற்றபோதிலும், கடைசி நேரத்தில் வட மாநிலத்தவர்களின் பலத்த எதிர்ப்பு காரணமாக ஒரு போட்டியில்கூட விளையாடாத நிலையில் திருப்பியனுப்பப்பட்டார்கள். தமிழகத்தில்கூட சமீபத்தில் ஆசிய இளையோர் வாலிபால் போட்டியில் விளையாடுவதற்காக இலங்கை சென்ற இரு வீரர்கள் போட்டி தொடங்கும் தினத்தில் திருப்பியழைக்கப்பட்ட சம்பவம் நடந்தது.

பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதற்காக, அப்பாவி விளையாட்டு வீரர்களை தண்டிப்பது எந்த வகையில் நியாயம்? விளையாட்டு வீரர்களுக்கு தடை விதிப்பதன் மூலம் பயங்கரவாதத்தை தடுத்துவிட முடியுமா? இல்லை நீண்டகால அரசியல் பிரச்சினைகளுக்குத்தான் தீர்வு கிடைத்துவிடுமா? நிச்சயம் எந்தத் தீர்வும் கிடைக்காது.

 

மறுக்கப்படும் வாய்ப்புகள்

அரசியல் மோதல்களைக் காரணம் காட்டி இனி நமக்கும், அந்த நாட்டுக்கும் இடையே ஒட்டும் இல்லை, உறவும் இல்லை. அதனால் இனி அந்த நாட்டு அணியுடனோ அல்லது அந்த நாட்டிலோ சென்று எந்த வீரரும் விளையாடக்கூடாது என மிக எளிதாக அறிவித்துவிடுகிறார்கள்.

இதுபோன்ற அதிரடி உத்தரவுகளை பிறப்பிப்பதற்கு முன்பாக விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையை பற்றி ஒரு நொடியாவது சிந்தித்திருப்பார்களா? இப்போது ஆள்பவர்கள், அடுத்த தேர்தலில் தோற்றால், அதற்கடுத்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றலாம். தேவைப்பட்டால் முன்பு தடை விதித்த நாடுகளுடன் மீண்டும் கை கோத்துக் கொள்ளலாம். ஆனால் ஒரு விளையாட்டு வீரரின் வாழ்க்கை என்பது 18 முதல் 35 வயதுக்குள் முடிவுக்கு வந்துவிடும். இந்த காலத்தில் அவருக்கு மறுக்கப்படும் வாய்ப்புகள் பிறகு எப்போதுமே கிடைக்காது.

 

விளையாட வேண்டாம்

இன்றைய உலகில் பணபலம் கொண்ட ஒருவர் எளிதாக ஆட்சியைப் பிடித்துவிடலாம். ஆனால் விளையாட்டு அப்படியல்ல. ஒவ்வொருவரும் முழுமையான வீரர்களாக உருவெடுப்பதற்காக எந்த அளவுக்கு மெனக்கெட்டிருப்பார்கள். அவர்கள் தங்களின் கனவை நனவாக்க எவ்வளவு போராடியிருப்பார்கள்? அவர்களுடைய பெற்றோர் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறார்கள். எத்தனையோ தடைகளைத் தாண்டி முன்னேறி வரும் வீரர்களின் வாழ்க்கையை ஆட்சியாளர்களின் ஒரே அறிவிப்பு சிதைத்துவிடுகிறது.

விளையாட்டு வீரர்களுக்கு நழுவிய வாய்ப்பு மீண்டும் கிடைக்காது. இனியாவது விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையில் விளையாடாமல், அவர்களின் நலனை மனதில் கொண்டு ஆட்சியாளர்கள் செயல்பட வேண்டும் என்பதே விளையாட்டு ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.

 

 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88/article6428955.ece

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.