Jump to content

ஆண்மைக் குறைவு..! திருமணத்துக்கு முன் மருத்துவ பரிசோதனை! மத்திய-மாநில அரசுகளுக்கு நீதிமன்றம் நோடீஸ்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்மைக் குறைவு..! திருமணத்துக்கு முன் மருத்துவ பரிசோதனை! மத்திய-மாநில அரசுகளுக்கு நீதிமன்றம் நோடீஸ்!

[Friday 2014-09-19 21:00]
marriage-cartoon-190914-200-india.jpg

தேனி மாவட்டம், போடி நாயக்கனூரைச் சேர்ந்த வாலிபருக்கும், திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. அந்தப் பெண் தனது கணவருக்கு ஆண்மைக் குறைவு இருப்பதாக கூறி விவாகரத்து கேட்டு திருச்சி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. ஆண்மைக் குறைவு உள்ளதை மறைத்து ஏமாற்றி திருமணம் செய்ததாக கணவர் மற்றும் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருச்சி சமூக நலத்துறை அதிகாரியிடம் புகார் கொடுத்தார். சமூக நலத்துறை அதிகாரியின் அறிக்கை அடிப்படையில் திருச்சி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் தனியாக ஒரு வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அந்த வாலிபர் மற்றும் குடும்பத்தினர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

  

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், “ஆண்மைக் குறைவு, இல்லற உறவில் விருப்பமின்மை போன்ற காரணங்களினால் குடும்ப உறவில் விரிசல் ஏற்படுகிறது. இதன் காரணமாக இரு தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். சமூகத்தில் இந்த பிரச்சினை தற்போது பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண திருமணத்துக்கு முன்பு ஆண், பெண் இருவருக்கும் மருத்துவ பரிசோதனை கட்டாயம் என்று ஏன் சட்டம் கொண்டு வரக் கூடாது என்பதற்கு மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும்” என்று கூறி இருந்தது.

இது குறித்து பொதுமக்கள், வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள், டாக்டர்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று நீதிபதி அறிவித்து இருந்தார். இது தொடர்பான சிறப்பு விசாரணை கடந்த 5–ந் தேதி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் நடந்தது. அரசு தரப்பில் கூடுதல் அரசு வழக்கறிஞர் மோகன், அரசு வழக்கறிஞர்கள் ஏ.பி.பாலசுப்பிரமணி, கந்தசாமி ஆகியோர் ஆஜராகினர்.

விசாரணை தொடங்கியதும், பாதிக்கப்பட்ட பெண்கள் சிலர் நீதிபதி முன்பு ஆஜராகி ஆண்மைக்குறைவு பிரச்சினை காரணமாக தங்களது எதிர்காலம் பாழாகி விட்டதாக கண்ணீர் மல்க தெரிவித்தனர். அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் கேட்டறிந்த நீதிபதி, இந்த விவகாரத்தில் என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் தனது கருத்துக்களை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு இருந்தார்.

இந்நிலையில் நேற்று மீண்டும் இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது, அப்போது மத்திய, மாநில அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்டனர். அதனைத் தொடர்ந்து வருகிற 23–ந்தேதி அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.

 

.seithy.com

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.