Jump to content

ஆண்மை பரிசோதனைக்காக ஆபாசப் படம் பார்க்க வற்புறுத்தியதாக நித்தி புகார்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்மை பரிசோதனைக்காக ஆபாசப் படம் பார்க்க வற்புறுத்தியதாக நித்தி புகார்!

 

Swami-Nithyananda-to-settle-in-Guntur1.j

 

தமக்கு ஆண்மை பரிசோதனை செய்ய முயன்ற மருத்துவர்களை, பிரதமர் மோடி எனக்கு நெருக்கமானவர் எனக் கூறி நித்யானந்தா மிரட்டியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தன்னை ஆபாச படம் பார்க்கச் சொல்லி தகாத முறையில் நடத்தியதாக கர்நாடக சிஐடி போலீஸார், விக்டோரியா மருத்துவமனை மருத்துவர்கள் மீது புகார் கூறியுள்ள நித்யானந்தா, அவர்களுக்கு தனது வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். கடந்த 2012-ம் ஆண்டு நித்யானந்தாவின் சீடர் ஆர்த்தி ராவ் அவர் மீது பாலியல் பலாத்கார புகார் அளித்தார். எனவே அவருக்கு ஆண்மை பரிசோதனை நடத்த உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது.

  

இதனைத் தொடர்ந்து கடந்த 8-ம் தேதி நித்யானந்தாவுக்கு பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் சுமார் 6 மணி நேரம் ஆண்மை பரிசோதனை நடத்தப்பட்டது. இதற்கு நித்யானந்தா சரியாக‌ ஒத்துழைக்கவில்லை. ஆதலால் ஆண்மை பரிசோதனை முழுமையாக நடத்தவில்லை. நீதிமன்றத்தை நாடி, மீண்டும் ஆண்மை பரிசோதனை நடத்த உத்தரவிடக் கோருவோம் என கர்நாடக சிஐடி போலீஸார் தெரிவித்துள்ளனர்.

நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை மேற்கொண்ட விக்டோரியா மருத்துவமனையின் தலைமை மருத்துவர் துர்கண்ணா நித்யானந்தாவின் பரிசோதனை முடிவுகளை கர்நாடக சிஐடி போலீஸாரிடம் நேற்று சமர்ப்பித்தார்.

 

 

'நான் தெய்வபிறவி'

 

இதனிடையே நித்யானந்தா கர்நாடக சிஐடி போலீஸாருக்கும், ஆண்மை பரிசோதனை மேற்கொண்ட விக்டோரியா மருத்துவமனைக்கும் தனது வழக்கறிஞர் தனஞ்செய் மூலமாக நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், ''நித்யானந்தாவாகிய நான் இந்தியாவில் பெரும்பான்மையாக‌ வாழும் இந்து மக்கள் பெரிதும் மதிக்கும் சாமியாராக இருக்கிறேன். உலகம் முழுவதும் இந்து மதத்தின் பெருமைகளை பறைச்சாற்றி வரும் என்னை ஆண்மை பரிசோதனை என்ற பேரில், கர்நாடக சிஐடி போலீஸாரும் மருத்துவர்களும் அவமதித்துவிட்டனர்.

நான் ஒரு தெய்வப்பிறவி. ஆறு வயது சிறுவனுக்குரிய உடல் வளர்ச்சியிலே இருக்கிறேன். ஆண்மை பரிசோதனையின் போது உடைகளை களையச் சொல்லி கட்டாயப்படுத்தினர். மேலும் தனிமையான அறையில் அடைத்து ஆபாசப்படம் பார்க்கச் சொல்லி கட்டாயப்படுத்தினர். இதற்கு நான் சம்மதிக்காத போது போலீஸாரும் மருத்துவர்களும் என்னை மிரட்டி கட்டாயப்படுத்தினர்.

மேலும் தகாத முறையிலும் இயற்கைக்கு ஒவ்வாத செயலிலும் ஈடுபடும்படி என்னை வற்புறுத்தினர். இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறேன். எனவே, சம்பந்தப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் உரிய பதில் அளிக்க வேண்டும்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

எனக்கு மோடியை தெரியும்...

 

நித்யானந்தாவின் ஆண்மை பரிசோதனை முடிவுகள் தொடர்பாக கர்நாடக சிஐடி போலீஸாரிடம் பேசிய போது, ''அவரிட‌ம் ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை மட்டுமே முழுமையாக நட‌த்தப்பட்டுள்ளது. ஆண்மை பரிசோதனைக்கு அவர் ஒத்துழைக்காததால் நடத்த முடியவில்லை. அதனால் நாங்கள் ராம்நகர் நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளோம்.

ஆனால் நித்யானந்தா எங்களை முந்திக்கொண்டு நாங்களும் மருத்துவர்களும் ஆண்மை பரிசோதனையின் போது தகாத முறையில் நடந்துகொண்டதாக நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதுமட்டுமில்லாமல் பரிசோதனை செய்த மருத்துவர்களிடம், 'எனக்கு பிரதமர் நரேந்திர மோடியை நன்றாக தெரியும். அவரே பல முறை என்னை சந்தித்து ஆசி வாங்கி இருக்கிறார். என்னை கட்டாயப்படுத்தினால் நீங்கள் தேவையில்லாத பிரச்சினையில் மாட்டிக் கொள்வீர்கள்' என மிரட்டியுள்ளார்.

எனவே மருத்துவர்கள் அச்சத்தின் காரணமாக ஆண்மை பரிசோதனை முடிவு சான்றிதழில் கையெழுத்திட மறுத்துவிட்டனர். அதனால்தான் மருத்துவ அறிக்கை வர மிகவும் தாமதம் ஆனது. இன்னும் விரிவான அறிக்கை தாக்கல் செய்யாததால் நாங்கள் நீதிமன்றத்தை அணுக முடியவில்லை. விக்டோரியா மருத்துவமனையின் விரிவான மருத்துவ அறிக்கை கிடைத்த உடன் நீதிமன்றத்தை அணுகி, மீண்டும் ஆண்மை பரிசோதனை மேற்கொள்வோம். அதற்கும் நித்யானந்தா சம்மதிக்காவிட்டால், அவருக்கு கட்டாய ஆண்மை பரிசோதனை நடக்கும்'' என்றனர்.

 

seithy.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


நித்திக்கான சிற்றுவேசன் சாங். :lol:


சாங் எண் 2.

 

Link to comment
Share on other sites

ஆபாசப்படம் பார்க்கச்சொன்னால் நித்தி ஏன் வருத்தப்படுறார்?? :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆபாசப்படம் பார்க்கச்சொன்னால் நித்தி ஏன் வருத்தப்படுறார்?? :icon_idea:

படத்துக்குப் பதிலா, ஆராவது ஒரு பக்தையை, ஏன் நேரில் அனுப்பிவைக்கக் கூடாது? 

 

என்ற கோபத்தில் தான் !

 

அது மட்டுமில்லை...ஆபாசப் படத்தில்... அதிகம் வெள்ளை தானே இருக்கும் :o ! 

Link to comment
Share on other sites

Paramahamsa Nithyananda's potency test shows him incapable of having intercourse! It is time to drop this absurd case on him! However now some people are speculating that "maybe these tests are not enough" .. "maybe they cannot be proof of impotency" !! Can you believe it!!! For a full year now, the only thing that people wanted was a medical test. Now that it shows a result they don't like, they are accusing the test of being flaky. Why the @#&$ did you ask for test then? Why?

Four years of witch hunting and the police have ZERO (zilch,zip, nada, no) evidence on Swamiji. In fact there is NO VICTIM named in the report! Can you believe it? No Victim! The only rape case in India where there is no victim and even the implied victim who was morphed into the video on the internet has clearly said that the video is fake and that she has no charges except against the channels who have abused her name. Who the heck is the state wasting crores of taxpayer money for??

The three other "witnesses" on the case have all been shown to be criminals. Lenin's extortion plans and his background connections with porn and media houses have been exposed. The accusations of Arthi Rao - his partner in bed and crime - have been shown to be thoroughly false by the US medical records released by the US courts who have then found her guilty and fined her half a million dollars! The third accuser - Vinay Bharadwaj - cousin of Ranganath Bharadwaj of Samaya TV - has been convicted by a Seattle court on 3 serious charges of child molestation and is currently spending 5 years in a US federal prison.

No credible witness. No evidence. And here is the clincher - no crime! And all this against a person incapable of committing the crime. Can it get more absurd than this. Govt of Karnataka and COD, please don't get fooled by vested interests and uninformed public opinion. Save yourself from further wastage of money and resources and drop the case!

 

இந்த அறிக்கையின் மூலம் தெரியவருவது:- நித்தியானந்த சுவாமி ஒரு ஆண்மையற்றவர்.இவர் மீது குற்றம் சுமத்திய பெண்மணி தன்னை மறந்து பல தடவை சுவாமிகளுடன் உறவு கொண்டதாக தெரிவித்திருந்தார்.இப்படி சொல்வதற்காக பல இலட்சங்கள் கை மாறியிருக்கலாம் எது எப்படியோ? சாதாரண ஒற்றை வைத்தியருடன் செய்ய வேண்டிய பரிசோதனையை கர் நாடகப் பொலிஸ் பல இலட்சங்களைச் செலவளித்து இல்லை என்றுதான் அறிக்கை வந்துள்ளது.ஏற்கனவே அந்த அம்மாவை அமெரிக்க நீதி மன்று தண்டனை மற்றும் குற்றப்பணம் அறவிட்டதாக எண்ணுகின்றேன்.இங்கும் அதே நிலைதான் வரப்போகின்றது போல

Link to comment
Share on other sites

நீலப்பறவை இணைத்ததைப் பார்க்க.. அது ஒரு முறையான அறிக்கைபோல் இல்லை.. யாரோ ஒரு நித்தி பக்தர் எழுதியதுபோல் இருக்கு.. :D

ஆண்மை இல்லை என்றால் ரஞ்சிதா அன்று கொடுத்த மாத்திரை என்ன?? :unsure: வயாகராவா இருக்குமோ!! சும்மா இருந்த நித்தியை நடுரோட்டுக்கு இழுத்து நாறடிச்சிட்டாங்களே..!! :(:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்மை பரிசோதனைக்காக ஆபாசப் படம் பார்க்க வற்புறுத்தியதாக நித்தி புகார்!

 

படத்துக்குப் பதிலா, ஆராவது ஒரு பக்தையை, ஏன் நேரில் அனுப்பிவைக்கக் கூடாது? 

 

என்ற கோபத்தில் தான் !

 

அது மட்டுமில்லை...ஆபாசப் படத்தில்... அதிகம் வெள்ளை தானே இருக்கும் :o ! 

 

நான் முன்பே கூறிய முறைக்குத்தான் நித்தானந்தா

பயப்படுகிறார்..... :icon_mrgreen:  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிமேல் இந்தியாவில் சாமியார்களுக்கு லைசென்ஸ் கொடுக்க வேண்டும், அதற்கு முதலே ஆண்மைப்பரிசோதனை செய்து அதற்கான சான்றிதழும் வழங்கினால் இப்படியான பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்
 நோற் திஸ் பொயின்ற்  மை லோர்ட் :D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி ஆண்மைப்பரிசோதனை என்றால் என்ன? அதனை எப்படி பரிசோதிப்பது??  :rolleyes:

Link to comment
Share on other sites

அதுசரி ஆண்மைப்பரிசோதனை என்றால் என்ன? அதனை எப்படி பரிசோதிப்பது??   :rolleyes:

 

மிஸ்டர் டமிலுக்கு தெரிந்திருக்கும்.விசாரித்து பார்க்கவும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.