Jump to content

இருபதுக்கு - 20 போட்டிகளின் தலைவராகBoom Boomஅப்ரிடி நியமனம்


Recommended Posts

இருபதுக்கு - 20 போட்டிகளின் தலைவராக அப்ரிடி நியமனம்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இருபதுக்கு-20 போட்டிகளுக்கான தலைவராக அப்ரிடி நியமிக்கப்பட்டுள்ளார்.


எதிர்வரும் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் ஐக்கிய அரபு இராச்சிய தொடர்களில் அப்ரிடி தலைவராக செயற்படவுள்ளார்.

இந்­தி­யாவில் 2016 இல் நடை­பெ­ற­வுள்ள உலக இரு­ப­துக்கு 20 கிரிக்கட் போட்­டி­வரை பாகிஸ்­தானின் இரு­ப­துக்கு 20 கிரிக்கட் அணித் தலைவர் பத­வியை அவர் வகிப்பார் என அந் நாட்டு கிரிக்கட் கட்­டுப்­பாட்டுச் சபை தெரி­வித்­துள்­ளது.

பங்­க­ள­தேஷில் இவ் வருடம் நடை­பெற்ற உலக இரு­ப­துக்கு 20 கிரிக்கட் போட்­டி­களின் முதல் சுற்­றுடன் பாகிஸ்தான் வெளி­யே­றி­யதை அடுத்து மொஹமட் ஹபீஸ் அணித் தலைவர் பத­வியைத் துறந்­தி­ருந்தார். அவ­ருக்குப் பதி­லா­கவே தற்­போது அப்ரிடி புதிய தலை­வ­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.

இப் பத­விக்கு இளை­யவர் ஒரு­வரை நிய­மிப்­பது குறித்து பாகிஸ்தான் கிரிக்கட் கட்­டுப்­பாட்டுச் சபை ஆராய்ந்த போதிலும் எந்­த­வொரு இளைய வீரரும் அப் பத­வியை ஏற்க முன்­வ­ரா­ததால் அனு­ப­வ­சா­லி­யான அப்ரி­டி­யிடம் அந்தப் பொறுப்பு ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளது.

பாகிஸ்தான் கிரிக்கட் அணித் தெரிவுக் குழு­வினர், பயிற்­றுநர் வக்கார் யூனிஸ், பாகிஸ்தான் கிரிக்கட் கட்­டுப்­பாட்டுச் சபைக் குழு­வினர் ஆகி­யோரின் ஒப்­பு­த­லுக்கு அமைய அப்ரிடி தலை­வ­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.

அப்ரி­டியின் நிய­ம­னத்தை பாகிஸ்தான் கிரிக்கட் கட்­டுப்­பாட்டுச் சபையின் தலைவர் ஷஹா­ரியார் கான் அங்­கீ­க­ரித்­துள்ளார்.

அப்ரிடி ஏற்­க­னவே 2009க்கும் 2011க்கும் இடைப்­பட்ட காலத்தில் 19 சர்­வ­தேச இரு­ப­துக்கு 20 கிரிக்கட் போட்­டி­களில் பாகிஸ்­தானின் அணித் தலை­வ­ராக செயற்­பட்­டுள்ளார்.
அவ­ரது தலை­மையில் பாகிஸ்தான் 8 போட்­டி­களில் வெற்­றி­பெற்­ற­துடன் மற்­றைய போட்­டி­களில் தோல்­வியைத் தழு­வி­யது.

74 சர்வ­தேச இரு­ப­துக்கு 20 கிரிக்கட் போட்­டி­களில் விளை­யா­டி­யுள்ள அப்ரிடி 1112 ஓட்­டங்­களை மொத்­த­மாக பெற்­றுள்ள­துடன் 77 விக்கட்களையும் கைப்பற்றியுள்ளார்.

 

http://www.virakesari.lk/articles/2014/09/17/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-20-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.