Jump to content

இன்று பெரியாரின் 135ஆவது பிறந்த நாள்


Recommended Posts

தொண்டு செய்து பழுத்த பழம்

தூய தாடி மார்பில் விழும்

மண்டை சுரப்பை உலகு தொழும்

மனக்குகையில் சிறுத்தை எழும்

அவர்தாம் பெரியார்

பார் அவர்தாம் பெரியார்.

- புரட்சி கவிஞர் பாரதிதாசன்

இன்று பெரியாரின் 135ஆவது பிறந்த நாள். இன்றைய தினத்தில் தமிழ் சமூகத்திற்கு இக்காலத்திற்கும் பொருத்தமாக இருக்கும் பெரியாரின் கொள்கைகளை சிந்திப்போம் அவருடைய சில கருத்துக்கள் சில பேச்சுக்கள் ஏற்றுக்கொள்ள முடியாததாக விமர்சனத்துக்கு உற்பட்டத்தாக இருக்கலாம் ஆனால் ஜாதியின் பிடியாலும் ஆணாதிக்க வெறியாலும் கட்டுண்டு இருந்தவர்களுக்கு பெரியாரின் வரவு ஒரு புது ஷக்திய கொடுத்தது என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை.....

Link to comment
Share on other sites

பிறப்பின் அடிப்படையில் அடிமை சங்கிலி திறக்க ஒரு 'அறிவின் திறவுகோல்' சென்ற நூற்றாண்டில் பிறந்து தன் வாழ்நாள் முழுவதும் சமூக சீர்திருத்ததிற்கே பணியாற்றி மறைந்தார்.அவர் தாம் 'தந்தை பெரியார்' 'பகுத்தறிவு பகலவன்.'

எறும்பும் ,ஈசலும் பிறந்த வண்ணம் இருந்து மடிய மனிதன் மட்டும் விமானம் படைத்தான்.ஏவுகணை தொடுத்தான்.எப்படி சாத்தியம் ?மனிதனின் பகுத்தறிவால் விளைந்தது..

அறிவியல் ஆராய்ச்சியில் மண்ணும்,விண்ணும் விளங்க பெற்றவன் .நாளைய பலன் என்ன? குறி கேட்டு போலி சாமியார் வாசல்,ஜோசியக்காரன் வீதிகளில் அலைகிறான் நிர்வாண பூஜை என்றாலும் தன் வீட்டு பெண்ணை தயங்காமல் அனுப்புகிறான்.

உழைத்தால் உயரலாம் ' என்று எண்ணாமல் ஏற்றம் காண மலை ஏறுகிறான்.

இன்னும் பல ,பல மூடநம்பிக்கைகள் முட்டுக்கட்டைகளாய் ................................

படித்தவன் ,பாமரன் ,ஏழை ,பணக்காரன் வித்தியாசம் இல்லாமல் மூளைக்கு போட்ட விலங்காய்..................................

மூளை விலங்கை உடைக்க அறிவோம் நாம்

'மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு'

'கடவுளை மற,மனிதனை நினை' என்றவரை .....

சுயமரியாதை சொன்னவரை ......................

சுயமரியாதை பெறுவோம் நாம் .

மரியாதை ,தகுதி என்பது பிறப்பின் அடிப்படையில் இல்லை .அது குணத்தின் அடிப்படையில் என உணர்வோம்.

சோம்பேறியாக ,சாப்பிட்டு ,சாப்பிட்டு தூங்குகிறவனுக்கும் ஓடி,ஓடி உழைக்கின்றவனுக்கும்...............

கொடுப்பவனுக்கும்,பிடுங்குபவனுக்கும் ................

மற்றவர் உணர்வுகளை மதிப்பவனுக்கும்,உதாசீனம் செய்பவனுக்கும் ...............

நல்லவனுக்கும் ,கெட்டவனுக்கும் ....................

தகுதி நிச்சயம் ஒன்றல்ல............தகுதி என்பது குணத்தால் மட்டுமே.........

சுயமரியாதை பெற ,தகுதியை வளர்த்து கொள்ள வேண்டும்.மற்றவரிடம் கை ஏந்தாமல் ,தன் உழைப்பில் உண்டு ,நாணயக்காரனாக,நம்பிக்கையானவனாக ,நேர்மையானவனாக,உண்மையானவனாக ஒரு மனிதன் இருந்தால் 'சுயமரியாதையுடன் சுகமாய் 'வாழலாம்.

பெரியார் பிறந்த நாளில் உறுதிக்கொள்வோம் ............'சுயமரியாதையுடன்' வாழ்வதற்கு

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஹிந்தி மொழிக்கு எதிராக‌ போராடி ஆட்சிய‌ பிடித்த‌ திராவிட‌ம் உத‌ய‌நிதியின் ம‌க‌ன் எந்த‌ நாட்டில் ப‌டித்து முடிந்து விட்டு த‌மிழ் நாடு வ‌ந்தார்..................ஏன் உற‌வே புல‌ம்பெய‌ர் நாட்டில் த‌ங்க‌ட‌ பிள்ளைக‌ள் ஆங்கில‌த்தில் க‌தைப்ப‌து பெருமை என்று நினைக்கும் ப‌ல‌ர் இருக்கின‌ம் யாழில் இனி ப‌ழைய‌ திரிக‌ளை தேடி பார்த்தா தெரொயும்...............நான் நினைக்கிறேன் சீமானின் ம‌க‌னுக்கு த‌மிழ் க‌தைக்க‌ தெரியும்.................இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ர் ம‌ற்றும் அவ‌ரின் ம‌க‌ன் உத‌ய‌நிதி இவ‌ர்களுக்கு ஒழுங்காய் த‌மிழே வாசிக்க‌ தெரியாது.........ச‌ரி முத‌ல‌மைச்ச‌ர் ஜ‌யாவுக்கு வ‌ய‌தாகி விட்ட‌து ஏதோ த‌டுமாறுகிறார் வாசிக்கும் போது உத‌ய‌நிதி அவ‌ரின் அப்பாவை விட‌ த‌மிழின் ஒழுங்காய் வாசிக்க‌ முடிவ‌தில்லையே உற‌வே...............சீமானின் ம‌க‌ன் மேடை ஏறி த‌மிழில் பேசும் கால‌ம் வ‌ரும் அப்போது விவாதிப்போம் இதை ப‌ற்றி.............என‌து ந‌ண்ப‌ன் கூட‌ அவ‌னின் இர‌ண்டு ம‌க‌ன்க‌ளை காசு க‌ட்டி தான் ப‌டிப்ப‌க்கிறார்............அது சில‌ரின் பெற்றோர் எடுக்கும் முடிவு அதில் நாம் மூக்கை நுழைத்து அவ‌மான‌ ப‌டுவ‌திலும் பார்க்க‌ பேசாம‌ இருக்க‌லாம்............ஒரு முறை த‌மிழ் நாட்டை ஆளும் வாய்ப்பு சீமானுக்கு கிடைச்சா அவ‌ர் சொன்ன‌ எல்லாத்தையும் செய்ய‌ த‌வ‌றினால் விம‌ர்சிக்க‌லாம் ஒரு தொகுதியிலும் இதுவ‌ரை வெல்லாத‌ ஒருவ‌ரை வ‌சை பாடுவ‌து அழ‌க‌ல்ல‌ உற‌வே........................
    • உந்தாள் முந்தியும் ஒருக்கால் கம்பி எண்ணினதெல்லோ? 
    • “அந்த மக்களிடம் அற்ப விலைக்கு வாங்கி, புலம் பெயர் மக்களிடம் அறாவிலைக்கு விற்கும் கந்துவட்டி வகை வியாபாரிகளை” இதனை எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள்? உதாரணமாக ஓர் பொருளின் சிறீலங்கா v பிரித்தானிய விலையை கூறுங்கள். எனக்கு தெரிந்தவர்களிடம் அதனை விசாரித்து கூறுகிறேன்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.