Jump to content

நிவேதாவின் நிறம் மாறும் உறவோடு கோசல்யாவின் சிற்றுராய்வு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மாத ஆட்காட்டியில் வெளியாகியிருந்த என் நூல் பற்றிய விமர்சனம்

 

 

நிவேதாவின் நிறம் மாறும் உறவோடு கோசல்யாவின் சிற்றுராய்வு

மரபாக வாழ்ந்த இடத்திலிருந்து புலத்தில் வாழ்வை ஆரம்பித்த காலங்கள் பலரைப் படைப்பாளிகளாக . ஆக்கதாரர்களாக தோற்றம் பெற்றவர்கள் எம்மத்தியில் பல படைப்பாளிகள் . இவர்கள் வாழ்வியல் பட்டறிவு வாயிலாக வாய்ப்புப் பெற்றது மெய்யானதே எனலாம் அந்த வகையில் இங்கே நிவேதா உதயராயன் +நிறம் மாறம் உறவு + படைப்பிலக்கியம் சிறப்புப் பெறுகின்றது ..சீரிய உரை நடை வீரிய வார்த்தைகள் ..வட்டார வழக்கான வசனயார்ப்பு. இங்கு கூறப்படும் பதினனைந்து படைப்பாக்கமும் பறைசாற்றி நிற்பது -மெய்யானது. . கதையல்ல மெய்யான மெருகான சம்பவங்களே --- இவைதான். அந்த வகையில் இவரும் மெய்ப்பாடான படைப்பிலக்கிய கர்த்தாவென்று அங்கீகாரம் பெற்றுக் கொள்கின்றார். என் சிற்றுராய்வு சிந்தனைக்குள் முனைப்பெடுக்கிறது.

 

+நீங்க கடிச்சிட்டுத் தாங்கோ + தலைப்பு சிறப்பு. தன்னெழுவில் வாசிக்கத் தூண்டும் .. ஆற அமர அடுத்தவர் கையில் தன் திருமண வாழ்வை அரக்கி ..அரக்கி வருடங்களாக தள்ளிப் போட்டு கொண்டு போகும் ஆண்கள் மனத்தில் ஏற்படும் தாழ்வு மனப்போக்கின் உச்சமே .இயலாமை. இறுதியில் நிச்சயிக்கப்படும் பெண்ணின் ஆராவாரத்துக்கும் நடிப்புக்கும் பலியாகும் இந்த ஆண்மகன் படைப்பு புலத்தில் விதைக்கப்படும் களைகளை இதை அழிக்க இதுவொரு சான்று !

 

+பெண் + தலைப்பினைப் பார்த்ததும் நினைத்தேன் பெண்ணியச் சிந்தனைகளை பெரிதாக கற்பிக்க அல்லது அதன் சார்பானதொரு வக்காலத்து படையலாக இருக்கலாமென்ற எதிர்பார்ப்பு. மாறாக --பெண்ணின் நியாயமான தவிப்பு, தனிமை, அங்கலாப்புகள் இன்னொரு வடிவாமாக பிரபாகித்து சலனம் சஞ்சலமாகி .. அப்பாவி கணவனின் ஆதரவை மீளவும் தேடிவருவது--உழைப்பே கதியென உறைந்து ..வாழ்வை தொலைத்து நிற்கும் சம்பவம் பட்டறிவை காட்டி நிற்பது சிறப்பு.

 

+நினைவு சுடும் + இங்கே எம்மவர்கள் ஆரம்ப கால அவலங்கள் ..கணக்கிடவே இயலாத கடினங்களின் நடுவில் ..புலம் பெயர்ந்த அப்பொழுதுகளில் சந்தித்த விடயங்களைத் தனித்தனி அறியின் சரித்திரங்களாக அறியலாம். இங்கு வந்து சேரும் வரை நடுவில் எதையோ தொலைத்தவராக ..இழந்தவராக சேர்ந்தார்கள் தமிழர் ..அதில் மிகவும் நெஞ்சைத் தொடும் நிகழ்வை முன் கொணரும் ஆக்கமிது. தரமானது .

 

+நிறம் மாறும் உறவு+ உறவுகளின் உன்னதம் உருமாறும் உபத்திரவங்கள் ஆங்காங்கே அரும்புவதாய் அறிந்து அவமானப்பட்டு போனதுண்டு. எம்மினத்தின் சீர்கேட்டுக்காக நாணுவதாக,வேலியே பயிரை மேய்ந்தால் .. விழிப்புணர்வை விதைத்து விடும் பங்குப்பணி நிவேதா போன்ற ஆக்கதாரர்கள்தான் அணி வகுத்து முனைப்பெடுத்து வெளிச்சம் காட்டவேணும் ..அதை இவர்கள் கச்சிதமாக தகுதியோடு தந்துள்ளார் ..

+அக்கா எனக்கொரு கல்யாணம் பேசுங்கோ + காலங்காலமாக கல்யாணத்திற்காக கரைந்து ..யாதகத்தை கடைசியாகக் கொண்டோடும் ..காலம் கடைசியில் எது வந்தாலும் ஏற்கும் மனநிலையை தாங்கும் மனநிலை எம்மவருக்கும் வந்து விடும் இயல்பினையும் எடுத்துக்காட்டுவதோடு இவர்களை வைத்துப் பிழைத்துக் கொள்ளும் உறவுகளும் இங்கே உடைக்கப் பட்டு வெளி வரும் கதை அற்புதம்.

 

+மனதே மயங்காதே + மயங்காத உறங்காத மனதினை வில்லங்கமாக மயக்கம் தரவைக்கும் மானிடம் மக்களிடையே மலிந்து வரும் கால் கோளாக கரையும் காலமிதாக சஞ்சலமும் சாராசரியாக ஏக்கமுறும் மனப்பாங்குகள் .தெரிகிறது .இங்கு நகர்வில் -இல்லாவற்றுக்கு ஏங்கும் இந்த மனித வர்க்கதத்தை எடுத்து வகைப்படுத்த பாத்திரங்களைப் படைத்திருக்கும் பண்பு சிறப்பாகும் .

 

+வாழ்வு வதையாகி + சண்டையோ சச்சரவோ > கோபமோ தாபமோ - அவர்கள் அற்புதவாழ்வை மூதாதையர். அவர்கள் அங்கீகாரமின்றி வாழுமிடங்களிருந்து வலிந்து வரவழைத்து பின் தங்கள் இட்டப்படி அவர்களைத் தன்னலத்திற்காகவே பிரித்து வைத்துப் பார்க்கும்.. வதையாகி உத்தரிக்கும் பெற்றோர் கதைகள் சமகாலத்தில் பவனி வருகிறது .அதையும் தொட்டுப் போன லாபகம் அருமை .

+ரயில் பயணம்+ பயண அனுபவம் எம்மை மீறி நிற்கும் பார்வையும் அக்கறையும்..சமுக சரிவுகளைச் சங்கதிகளை நினைத்து ஏங்கும் ஒரு படைப்பாளியின் தவிப்பு இங்கே தெரிகிறது .

 

+இப்படியும் ஒரு தாய்+ சில வழக்கொழிந்த சொற்கள் வந்து போகிறது ..தாய்மை என்பது சேய்க்காக செய்யும் தியாகங்களைத்தான் தெரியும்.. தன் சேய் சேய்மையாகப் போய் விடுவாளோ என்ற தாபம் .. உறவின் புதுமை சொல்கிறது தாய் பக்கம் ஏற்க மறுக்கிறது. ஆனால் இது கதாசிரியரின் கற்பனையல்ல. மெய்யான சேதியாகலாம் .

 

+அந்த மூட்டைப் பூச்சி+ ; ஆகா ! அற்பமான விடயமெனில் அந்தக்காலத்து சின்ன சின்னக் களவுகள் சேதியறியா ..விளையாட்டுக்கள் நினைப்பெடுக்கும் பாங்கு இங்கே சேர்க்கப் பட்டு மீட்கப் படுவது தேவையான நினைவுத் திருப்தி ...எனலாம் .

 

+முதல் கடிதம்+ இந்தப் பகிர்வும் சிறப்பு ..முதல் கடிதம் என்றால் .. இன்னும் கடிதம் இருக்கமோ ...சென்றல் கொலிச் மாணவர்கள் சேட்டைகள் காலம் பெரிது ... இவர்களின் படையல்கள் அனைத்துமே >சந்தித்தவை > கேட்டவை <பார்த்தவை அதை நிவேதா நெறிப்படுத்தி நகரும் நன்னயம் எழுச்சியாக எடுத்துப் போய் விரிக்கும் விதம் கச்சிதமே !

 

+நினைத்தாலே நெஞ்சு பக் பக்+ 13 கதை .இந்த எண்ணைப் போல் --இடத்தில் பதட்டம் இப்படீயுமா??? மாக்களிடையே மனிதம் மரத்துப் போய் மர்ம உலகோடு வாழ்கிறோமா .. ) ஆணுக்கு ஆண் அடிமை யா..அது இந்த சேர்வால் தான் உருப் பெற்றதா ? மிக நீண்டதாய் இருக்கிறது . சலிப்பு ஏற்பட்டது இதை யாராலும் சகிக்க இயலாத சம்பவத்திரள் ..இயற்கை தான் இவர்களைக் காக்க வேணும் என்று மனம் கேட்டது..போய்.. எம்மினம் எங்கே நிற்கிறது ..என்ற ஆதங்கத்தை ஆசிரியர் எற்படுத்திய உணர்வு தோன்றியது.

 

+வசந்தம் தொலைத்த வாழ்வு+ வாழ்வியலில் வசந்தம் ஏகாந்தமதை தொலைத்து அதை மீட்க முனைப்பெடுக்கும் விண்ணாலங்கள் விரைவியெழும் வித்தகம் பாறிக்கடக்கிறது. கொஞ்சம் நீண்டே விட்டது .. கருத்துச் செறிவு ..கதாபாத்திர கலாபிப்புகள் மனோபாவ சித்தரிப்பு சிறப்புத் தர உந்துகிறது !

 

+நட்பின் கதை + இதில் நட்பு ஒரு தலை நட்பே தென்படுகிறது. பள்ளிப் பால்ய சிநேகம் பக்கமாக இழுத்து வரா வறுமை காட்டப் படுகிறது .. இப்படி நட்புகள் மலிந்த போதும் ..இதை இழுத்துப் போகும் பொறுமை எவருக்குள்ளும் ஏற்படாது .... இப்படியான தோழமையை இடையில் இறக்கி விட்டு போய் கொண்டிருக்கும் பாங்கற்று --ஆனால் தொடர்ந்தும் வளர்க்க தெண்டிக்கும் தோரணை ..இன்றைய காலத்திற்கு ஒவ்வாத ஒரு கட்டம் -- இதுபோல இருக்கிறார்கள் என்பதை சொல்லி போன சிறப்பு நிவேதா வின் சமுகப் பார்வை விரியவும் . பணி சார்பாக விரவும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் !

 

-கோசல்யா சொர்ணலிங்கம் - முல்கைம், யேர்மனி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோசல்யா சொர்ணலிங்கம் அவர்களுக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி சகோதரி...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருகைக்கு நன்றி அண்ணா

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1988 இல் இருந்து 1997 (என நினைக்கிறேன்) நடைமுறையில் இருந்த இலங்கை தமிழ் இலக்கியம் தரம் 10, 11 பாட நூலில் “சிரிக்க தெரிந்த பாரசீகன்” என்று ஒரு கட்டுரை இருந்தது. நல்ல ஜோக்குகள் பல அதில் கையாளப்பட்டிருந்தது. அதில் (நினைவில் இருந்து) ஒரு ஜோக்: அரசவையில் ஒருவன் பொய்யாக தன்னை இறைதூதன் என கூறிய வழக்கை விசாரிக்கிறார் கலிபா. கலிபா: உனக்குத் தெரியுமா, பொய்யாக தம்மை இறைவனால் அனுப்பபட்ட தூதர் என கூறி மக்களை ஏமாற்றிய பலரை நான் கடும் சித்திரவதையுடன் கூடிய மரண தண்டணைக்கு ஆளாக்கியுள்ளேன்! குற்றம் சாட்டபட்டவர்: ஓ….கலிபா! நன்றே செய்தாய்….. நான் எவரையும் அவ்வாறு அனுப்பவில்லை!!!
    • விடுமுறைகள் தொடங்க போகுது. நம்மவர்கள் கூடுதலாக மத்திய கிழக்கூடாகவே பயணிக்கிறார்கள். ஆனபடியால் சட்டுபுட்டென்று அலுவல்களை முடியுங்கோ.
    • சிறிதோ பெரிதோ தவறு தவறு தானே அண்ணா.  இவர்கள் பலமுறை செய்து ருசிப்பட்டவர்களாக இருக்க வாய்ப்புண்டு. ஆனால் ஏழை எளிய மக்களாக இருந்து அமெரிக்க படிப்புக்கு முயற்சித்து அதன் அழுத்தம் காரணமாக இவ்வாறு நடந்திருந்தால் இவர்களுக்காக நானும் இரங்குகிறேன்.
    • இஸ்ரேல் இரானுக்குள் (நின்று, அதன் முகவர்களை பாவித்து) தாக்குதல் செய்தது போல தோன்றுகிறது. இப்படி செய்வதற்கு இஸ்ரேல்   இரு கூட்டங்களை பாவிக்கிறது. ஒன்று, ஈரானில் இருந்து இஸ்ரேலுக்கு வந்த  யூதர்களால். இவர்களால் ஈரானியர்களாகவே (Persian) இரானுக்குள் புழங்க முடியும்.  ஈரானின் இப்போதும் யூதர்கள் இருக்கிறார்கள், அனால், முன்பை விட மிக குறைவு. மற்றது, ஈரானில் கொடூர ஆட்சி ஷா வுக்கு, மொசாட், Savak எனும் கொடூர (இரகசிய) போலீசை உருவாக்கி கொடுத்தது.   உண்மையில், Savak ஐ உருவாக்கி தருமாறு ஷா கேட்டது CIA இடம். ஏனெனில், CIA தான், பிரித்தானியரின் வேண்டுதலில் , 1953 இல்  ஈரானின் உண்மையான சனநாயக   அரசை கவிட்டு, Sha ஐ ஆட்சிக்கு கொண்டுவந்தது. இந்த  ஈரானின் உண்மையான சனநாயக ஆட்சி 1953 இல்  கவிழ்த்தலின் முக்கிய காரணம், அன்றைய உண்மையான சனநாயக ஈரானிய அரசாங்கம் எண்ணெய் வளத்தை, கம்பனியை தேசியமயப்படுத்தியது, அதில் பிரித்தானியரின் BP தேசியமயப்படுத்தப்பட்டது. CIA அதன் குளிர் யுத்தத்தை வேலைப்பளுவால்,  Savak ஐ பயிற்சி அளித்து உருவாகுவதை Mosad இடம் அளித்தது. Mosad கொடூர Savak ஐ உருவாக்கியது. ஷா, Savak  இன் மிக கொடுமையான ஆட்சியை எதிர்க்க ஈரான் மண்ணில் அதுவாக பிறந்ததே இந்த முல்லாக்கள். முல்லாக்கள் ஆட்சியை பிடித்து, அகப்பட்ட Savak எல்லோரையும் (கொடூரமாக) கொன்றது, அனால், ஈரான் பெரும்பான்மை மக்கள் அதை வரவேற்றனர் அல்லது நிம்மதி அடைந்தனர். (முல்லாக்களுக்கும், ஈரான் மக்களுக்கும் உள்ள உறவு மேற்கால் சொல்லப்படுவது போல ஒரே வெறுப்பு அல்ல. சிலவற்றை எதிர்க்கிறாரக்ள் , சிலவற்றை வரவேற்றுகிறாரக்ள், முக்கியாக, அணுத்துறை, தொழில்நுட்ப வளர்ச்சி, இராணுவ வளர்ச்சி, குறிப்பாக அமெரிக்கா எதிர்ப்பு போன்றவை. மேற்கின் பிரச்சனை, மசகு, படிம எண்ணை, வாயு  நழுவி, மசகு, படிம எண்ணெய், வாயுவில் தவழ்ந்து மசகு, படிம எண்ணெய், வாயுவில் விழும்  ஈரானில், மேற்கிற்கு  ஒத்து ஊதக்கூடிய ஆட்சி இல்லாதது, ஈரானின் மக்கள் பற்றி முதலை கண்ணீர்  வடிக்கிறது).  முல்லாக்கள் கொன்று  எஞ்சிய Savak இன் எச்சம், சொச்சத்தை, Mosad தத்தெடுத்து பேணி வருகிறது, இரானுக்குள் இருந்து ஆட்தேர்வும் செய்கிறது, தாக்குதலுக்கு பாவிக்கிறது.  (சிறு குறிப்பு: இப்போதைய யூதர், தம்மை யூதர் என்று அழைக்கத்தொடங்கியது, சைரஸ் கிமு 500-550 களில் அவர்களை (யூதரை) (இப்போதைய ஈரானில்) அடிமை சிறைவாசத்தில் இருந்து  விடுவித்து, விடுவிக்கப்பட்டவர்கள் Judea வந்ததினால் என்று அவர்களே சொல்கிறார்கள். அதன் முதல் (யூதர்கள்) இஸ்ரேல் இன் புதல்வர்கள் என்றே அழைக்கப்பட்டார்கள். இங்கு இஸ்ரேல் என்பது, ஆபிரகாமின் பேரன் Jacob, இஸ்ரேல் (இராச்சியம் அல்ல) என்று பெயர் மாற்றப்பட்டவர் (கடவுளினால் என்கிறது விவிலியம்), அதுக்கும் முதல், Canaan (இப்போதைய இஸ்ரேல், பலஸ்தீன், பகுதி ஜோர்டான், சிரியா)  ஐ பிடிக்கும் வரையிலும் ஆபிரகாம் ஐயும் உள்ளடக்கி Hebrew என்ற அடையாளம் என்கிறது (Hebrew) விவிலியம். ).  (இன்னொரு வளமாக, திராவிடர் என்ற கூட்டமும், இப்போதைய ஈரானின் சாகிறோஸ் மலைப்பகுதியில் இருந்து வந்த, ஒழுங்குபடுத்தப்பட்ட விவசாயத்தை வாழ்வாதரமாக கொண்ட மக்கள் கூட்டம் என்பதற்கு விஞ்ஞான  ஆதாரங்கள் பெருகி வருகிறது. இதில் ஒரு பகுதியை சிறீனிவாச ஐயங்கார், 1920 களில் சொல்லி இருந்தார்.)
    • போட்டியில் இணைந்துகொண்ட @கறுப்பிக்கும் @Eppothum Thamizhan க்கும் வெற்றிக்கனியைப் பறிக்க வாழ்த்துக்கள்! @கறுப்பி 17 கேள்விக்கு பதிலைத் தாருங்கள்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.