Jump to content

சர்க்கரையின் அளவை சரிபாதியாக குறைக்கப் பரிந்துரை


Recommended Posts

140626103152_sugar_intake_promo_624x351_

அதிகமான சர்க்கரை ஆரோக்கியத்துக்கு எதிரி

நம் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளும் சர்க்கரையின் ஒரு நாளைக்கு சுமார் 15 கிராமாக குறைக்கவேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் பரிந்துரை செய்திருக்கிறார்கள். இதனை ஊக்குவிக்க அரசுகள் சர்க்கரை வரி என்கிற புதிய வரியை விதிக்கலாம் என்றும் அவர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.

உலக சுகாதர நிறுவனமும், இங்கே பிரிட்டனின் சுகாதார நிபுணர்களும் சமீபத்தில் அன்றாட உணவில் சேர்க்கப்படும் சர்க்கரையின் அளவை சரிபாதியாக குறைக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்கள்.

 

இன்றைய நிலையில் ஒருவரின் அன்றாட உணவில் இருந்து உடலுக்கு பெறப்படும் சக்தியின் அளவில் அதிகபட்சமாக 10 சதவீதம் வரை உணவில் சேர்க்கப்படும் சர்க்கரையில் இருந்து கிடைக்கலாம் என்று மருத்துவர்கள் அனுமதிக்கிறார்கள். ஆனால் சமீபத்தில் உலக சுகாதார நிறுவனம் கொடுத்திருந்த தனது பரிந்துரையில் இந்தமாதிரி சேர்க்கப்படும் சர்க்கரையில் இருந்து உடலுக்கு கிடைக்கும் சக்தியின் அளவு சரிபாதியாக குறைக்கப்பட வேண்டும்; அதாவது சேர்க்கப்படும் சர்க்கரைச்சக்தியின் அளவு 5 சதவீதமாக குறைக்கப்பட வேண்டும் என்று தெரிவித்திருந்தது.

தற்போது லண்டனில் இருக்கும் ஆய்வாளர்கள் இதுகுறித்து செய்திருக்கும் பரிந்துரையில் இந்த ஐந்து சதவீதத்திற்கு பதிலாக உடலுக்கு கிடைக்கும் உணவில் சேர்க்கப்படும் சர்க்கரை சக்தியின் அளவு 3 சதவீதத்திற்கு மேல் போகாமல் இருக்கவேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்கள்.

சிறார்களின் பற்களை சிதைக்கும் சர்க்கரை

குறிப்பாக பற்களில் ஏற்படும் சிதைவுக்கு உணவில் சேர்க்கப்படும் சர்க்கரையே முக்கிய காரணியாக இருப்பதாக சுட்டிக்காட்டும் லண்டன் ஆய்வாளர்கள்ம், நம் அன்றாட உணவில் சேர்க்கப்படும் சர்க்கரையின் அளவை குறைத்தால் மட்டுமே பற்கள் மற்றும் ஈறுகளில் ஏற்படும் பலவகையான நோய்கள் மற்றும் அதற்கு அரசும் தனிநபர்களும் செலவிடும் கூடுதல் மருத்துவ செலவுகளை குறைக்க முடியும் என்று கணக்கிட்டு தெரிவித்திருக்கிறார்கள்.

130921134657_child_teeth_decay_624x351_p

சர்க்கரை பற்சிதைவை அதிகரிக்கும்

 

குறிப்பாக பற்சிதைவு என்பது பெருமளவு தடுக்கப்படக்கூடிய ஒரு நோய் என்று கூறியுள்ள இந்த ஆய்வாளர்கள், ஒரு குழந்தையின் உணவில் சேர்க்கப்படும் சர்க்கரை அளவு அதிகரிக்க அதிகரிக்க அதற்கேற்றபடி, அந்த குழந்தையின் பற்சிதைவின் அளவும் அதிகரிப்பதாக இந்த ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், பொருளாதார ரீதியில் வளர்ச்சியடைந்த மேற்குலக நாடுகளில் ஒரு நாட்டின் ஒட்டுமொத்த சுகாதாரச் செலவில், 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை பற்கள் தொடர்பான நோய்களுக்காக செலவிடப்படுவதாகவும் இவர்கள் கணக்கிட்டிருக்கிறார்கள்.

பல் மருத்துவத்துக்காக செலவிடப்படும் இந்த 5 முதல் 10 சதவீத அரசு மற்றும் தனியார் பணத்தை, அன்றாட உணவில் சேர்க்கப்படும் சர்க்கரையின் அளவை குறைப்பதன் மூலம் கண்டிப்பாக குறைக்க முடியும் என்றும் இந்த ஆய்வாளர்கள் அரசுகளுக்கு பரிந்துரை செய்திருக்கிறார்கள்.

சர்க்கரை வரி விதிக்க யோசனை

இது தொடர்பில் அரசுகள் கடுமையான தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்கிறார் இந்த ஆய்வறிக்கையை எழுதியவர்களில் ஒருவரான ஊட்டச்சத்து மருத்துவத்துறை பேராசிரியர் பிலிப்ஸ் ஜேம்ஸ். உதாரணமாக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் பள்ளிகள், மருத்துவமனைகளில் இருக்கும் சாக்லேட் மற்றும் சர்க்கரை கலந்த குளிர்பானங்களை விற்கும் தானியங்கி இயந்திரங்கள் உடனடியாக அகற்றப்படவேண்டும் என்று இவர் அரசுகளுக்கு பரிந்துரை செய்கிறார்.

அடுத்ததாக உணவுப்பொருட்களில் சேர்க்கப்படும் சர்க்கரையின் அளவு 2.5 சதவீத்திற்கு மேல் போனால் அத்தகைய உணவுகளை அதிக சர்க்கரை உள்ள உணவு என்று லேபிள் ஒட்டுவதோடு, அத்தகைய உணவுகள் மீது சர்க்கரை வரி என்கிற கூடுதல் வரியையும் விதிக்கவேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்திருக்கிறார். அதிகரித்த சர்க்கரையை அன்றாடம் சாப்பிடுவது என்பது மிகப்பெரிய பொது சுகாதார பிரச்சனையாக மாறிவிட்டது என்று கூறும் பேராசிரியர் ஜேம்ஸ், இதில் இனியும் காலம் தாழ்த்த முடியாது என்றும் எச்சரிக்கிறார்.

ஆரோக்கியமாக இருக்க அன்றாட சர்க்கரையின் அளவு என்ன?

140127152700_sugar_spoon_getty_624x351_g

ஒரு நாளைக்கு 5 முதல் 7 தேக்கரண்டி சர்க்கரையே சரியான அளவு

 

ஒருவரின் அன்றாட உணவிலிருந்து உடலுக்கு கிடைக்கும் சக்தியின் அளவில் 10 சதவீதத்துக்கு மேல் உணவில் சேர்க்கப்படும் சர்க்கரையால் கிடைக்கக்கூடாது என்கிற முந்தைய அதிகபட்ச அளவையே இன்று பெரும்பாலானவர்கள் கடைபிடிப்பதில்லை என்றும் இந்த ஆய்வில் தெரியவந்திருக்கிறது.

இதில் புதிய பரிந்துரையான 5 சதவீதம் என்பது பெண்களுக்கு ஒரு நாளைக்கு 25 கிராம் சர்க்கரை. அதாவது 5 முதல் 6 தேக்கரண்டி சர்க்கரை. இதுவே ஆண்களுக்கு ஒரு நாளைக்கு 35 கிராம் சர்க்கரை. அதாவது 7 முதல் 8 தேக்கரண்டி சர்க்கரை.

இந்த அளவையும் ஏறக்குறைய சரிபாதியாக குறைக்கவேண்டும் என்று இந்த ஆய்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒலி வடிவில்.

http://www.bbc.co.uk/tamil/science/2014/09/140916_sciencesugar.shtml

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் எப்போதும் என்னை தேர்தல் விற்பனர் என்றோ - என் கணிப்புகள் திறம் என்றோ சொன்னதில்லை.  நான் என்ன லயலா கொலிஜா அல்லது இந்தியா டுடேயா? சர்வே எடுக்க. அல்லது சாத்திரக்காரனா🤣 நான் கணிக்கிறேன் என நீங்கள் எழுதுவதே சுத்த பைத்தியக்காரத்தனம். எல்லாரையும் போல் நான் என் கருத்தை எதிர்வுகூறலாக எழுதுகிறேன். அது என் கருத்து மட்டுமே. Pure speculation. அது சரி வரும், பிழைக்கும் - I don’t give a monkey’s.
    • சீமான் பேசுவ‌தை உள‌வுத்துறை தொட்டு ப‌ல‌ர் கேட்ப‌து உண்டு சீமான் தேர்த‌ல் ஆணைய‌த்தை ப‌ற்றி அவ‌தூறாக‌ பொய்யாக‌ பேசி விட்டார் என்று வ‌ழ‌க்கு தொடுக்க‌ வேண்டிய‌து தானே நீங்க‌ள் சொல்லுவ‌து ம‌ட்டும் உண்மை என்று எத‌ன் அடிப்ப‌டையில் ந‌ம்புவ‌து இத‌ற்க்கு உங்க‌ளால் ப‌தில் அளிக்க‌ முடியுமா.....................நேர்மையான‌வ‌ர்க‌ள் என்றால் நேர்மையின் ப‌டி தான் ந‌ட‌ப்பின‌ம் 2009க்கு முத‌ல் ஒரு முக‌ம் 2009க்கு பின் இன்னொரு முக‌ம் இதில் சீனானை ப‌ற்றி விம‌ர்சிப்ப‌து வெக்க‌க் கேடு.................... சீமான் ஊட‌க‌த்துக்கு கொடுத்த‌ பேட்டி அப்ப‌டியே இருக்கு அதை ப‌ல‌ ல‌ச்ச‌ம் பேர் பார்த்து இருக்கின‌ம் தேர்த‌ல் ஆணைய‌த்துக்கு சீமான் பேசின‌து தெரியாம‌ போகுமா அல்ல‌து உள‌வுத்துறை இப்ப‌டியான‌ விடைய‌த்தில் தூங்கி கொண்டு இருக்குமா ஜ‌ன‌நாய‌க‌ நாட்டின் தேர்த‌ல் ஆணைய‌த்தை சீமான் தேவை இல்லாம‌ அவ‌தூறாக‌ பொய்யாக‌ பேசி விட்டார் என்று சீமானை கைது செய்து இருக்க‌லாமே அல்ல‌து சீமான் பிர‌ச்சார‌ம் செய்ய‌க் கூடாது என்று த‌டை விதித்து இருக்க‌லாமே தேர்த‌ல் ஆனைய‌ம்........................பொல்லை கொடுத்து அடி வேண்ட‌ வேண்டாம்😁........................
    • இதுவரை பல தரம் கேட்டும் நீங்கள் பதில் சொல்லாத கேள்வி-  இவ்வளவு மோசமான தேர்தல் முறையில், எப்படியும் தோற்கடிப்பார்கள் என தெரிந்து, அதுவும் தனியே ஏன் 2016 இல் இருந்து போட்டியிட்டு மண்ணை கவ்வுகிறார்? பேசாமல் தேர்தலுக்கு அப்பால் இயக்கம் நடத்தலாமே? வாங்கோ என்னை வசைபாட எனவே வாழும் அகலிகை….சாரி யாழுக்கு வரும் கல்யாண். நான் கஜேஸ் கட்டுகாசு இழப்பார் என கூறவில்லை. நான் வெல்லமாட்டார்கள் என கூறிய அத்தனை தேர்தல்களிலும் அவர்கள் வெல்லவில்லை. கடந்த முறை சொன்னது போலவே யாழில் ஒரு சீட்டை எடுத்தார் பொன்னர். அம்பாறை மக்களை ஏமாற்றி அடுத்த சீட்டை 100 வாக்கு வித்தியாசத்தில் எடுத்தார் குதிரை கஜே.   நேற்று வைரவர் பூசை பலமோ?
    • மற்றவர்களிடம் கேள்வி கேட்கும் போதே நீங்களும் ஏதோ ஒரு ஐடியாவை வைத்துள்ளீர்கள் என நம்புகிறேன்.எடுத்து(துணிவாக) விடுங்கள் பார்க்கலாம். ஆப்பா  இல்லை காப்பா என பின்னர் பார்க்கலாம்.
    • உங்களுக்கு மேலே இருப்பது என் பதில். இப்போ யார் கோமாளி🤣 இதுவும் சீமான் ப்ரோ விட்டா இன்னொரு அவிட்டா. இல்லை என்றால் இப்படி தேர்தல் ஆணையம் சொன்ன ஆதாரம் எங்கே? அண்ணன் சொல்வதை எல்லாம் மொக்கு தம்பிகள் நம்பலாம். எல்லாரும் நம்ப தேவையில்லை. நீங்கள் ஏலவே என்னை 200 உபி என பல இடங்களில் எழுதிவிட்டீர்களே. எனக்கு ஒரு நற்பெயர் மீதும் ஆர்வம் இல்லை. அப்படி புற இருக்கோ இல்லையோ இ டோண்ட் கேர். இருந்தாலும் - சீமான் முகத்திரையை கிழிக்காமல் அந்த பெயரை தக்கவைப்பதிலும் பார்க்க கெட்ட பெயரே மேல்🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.