Jump to content

வடமாகாண மக்களும் சிங்களம் கற்கவேண்டுமாம் - இந்திய பதில் துணைத்தூதர்


Recommended Posts

இந்திய மக்கள் தொகையில் குறைந்தது 50 சதவீதமானோர் இந்தியாவின் இணைப்பு மொழியான ஹிந்தியை கற்றிருப்பதைப்போல வடமாகாண மக்களும் சிங்களம் கற்கவேண்டும் என்பதே தங்களின் ஆர்வம் என்று இந்திய பதில் துணைத்தூதர் எஸ் டி மூர்த்தி தெரிவித்துள்ளார்.

ஹிந்தி மொழி பயன்பாட்டை இந்தியாவில் பரப்பும் நோக்கில் ஆண்டுதோறும் செப்டெம்பர் மாதம் 14ஆம் திகதி கடைபிடிக்கப்படும் ஹிந்தி திவாஸ் என்கிற நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இருக்கும் இந்திய துணைத்தூதரக அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அந்நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய இந்திய பதில் துணைத்தூதர் எஸ் டி மூர்த்தி இந்த கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார் என்று பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. http://www.pathivu.com/news/33868/57//d,article_full.aspx

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய மக்கள் தொகையில் குறைந்தது 50 சதவீதமானோர் இந்தியாவின் இணைப்பு மொழியான ஹிந்தியை கற்றிருப்பதைப்போல வடமாகாண மக்களும் சிங்களம் கற்கவேண்டும் என்பதே தங்களின் ஆர்வம் என்று இந்திய பதில் துணைத்தூதர் எஸ் டி மூர்த்தி தெரிவித்துள்ளார்.

ஹிந்தி மொழி பயன்பாட்டை இந்தியாவில் பரப்பும் நோக்கில் ஆண்டுதோறும் செப்டெம்பர் மாதம் 14ஆம் திகதி கடைபிடிக்கப்படும் ஹிந்தி திவாஸ் என்கிற நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இருக்கும் இந்திய துணைத்தூதரக அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அந்நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய இந்திய பதில் துணைத்தூதர் எஸ் டி மூர்த்தி இந்த கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார் என்று பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. http://www.pathivu.com/news/33868/57//d,article_full.aspx

 

"பச்சைக் கலரு ஜிங்குசா , மஞ்சள் கலரு ஜிங்குசா.." என்ற வரிகள்தான் ஞாபகத்திற்கு வருகிறது! :rolleyes:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய மக்கள் தொகையில் குறைந்தது 50 சதவீதமானோர் இந்தியாவின் இணைப்பு மொழியான ஹிந்தியை கற்றிருப்பதைப்போல வடமாகாண மக்களும் சிங்களம் கற்கவேண்டும் என்பதே தங்களின் ஆர்வம் என்று இந்திய பதில் துணைத்தூதர் எஸ் டி மூர்த்தி தெரிவித்துள்ளார்.

 

தமிழ்நாட்டில் எத்தனை வீதமான ஆட்கள் ஹிந்தி படித்திருக்கிறார்கள்?

இந்திய துணைத் தூதர் மூர்த்திக்கு,  இப்படியான கருத்துக்கள் சொல்ல உரிமையில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மோடி அரசின் சமஸ்கிருதத் திணிப்பு !

பார்ப்பன பண்பாட்டுப் படையெடுப்பே !

மோடி அரசின் சமஸ்கிருத வாரம் !

இந்துத்துவா திணிப்பே அதன் சாரம்!

‘உலக மொழிக்கெல்லாம்

தாய்மொழி சமஸ்கிருதம்’ என்று

பொய் நெல்லைக் குத்திப்

பொங்குகிறார் மோடி.

மோடி - இந்துத்துவா

மோடி அரசின் சமஸ்கிருதத் திணிப்பு !

பார்ப்பன பண்பாட்டுப் படையெடுப்பே !

மறுகாலனியாக்கக் கொள்கையை

பார்ப்பனப் பாசிச வழியில்

உறுதிப்படுத்தும் பிரதமர் மோடி,

‘கடவுள் மொழி சமஸ்கிருத’த்தின்

ஆர்.எஸ்.எஸ் புத்திரனே

என்று புரிந்து கொள்வோம்!

நூறாண்டு முன்பே

பார்ப்பனப் பொய்களைச் சுட்டெரித்து

சமஸ்கிருதத்திலிருந்து

முற்றாக வேறுபட்ட

தனி மூல மொழி திராவிடத் தமிழ் என்று

முழங்கினார் கால்டுவெல்.

சமஸ்கிருதம் – இந்தி என்று

எங்கு எப்போது திணிக்கப்பட்டாலும்,

அதை எதிர்த்து முறியடிப்போம்!

கல்வியில் தமிழ் பயிற்றுமொழி

அரசு அலுவலகங்களில் தமிழே நிர்வாக மொழி

நீதி மன்றங்களில் தமிழே வழக்காடும் மொழி

என அனைத்து துறைகளிலும்

தமிழை ஆணையில் வைப்போம்.

மோடி அரசின் பார்ப்பனீய பண்பாட்டுத் திணிப்பு, இந்தி – சமஸ்கிருதத் திணிப்பு

இந்து – இந்தி-இந்தியா என்ற இந்து ராட்டிரத் திணிப்பே !

பார்ப்பன இந்துமதவெறிப் பாசிசத்துக்கு எதிரான இன்றைய போரில்

தமிழ் மரபைக் களத்தில் நிறுத்தும் போர்வாளான கால்டுவெல்லை உயர்த்திப் பிடிப்போம்!

பெரியார் பிறந்த மண்ணில் பார்ப்பனீயத்துக்கு எதிராக ஒன்றிணைவோம்!........நன்றி வினவுhttp://www.vinavu.com/2014/09/12/rsyf-conference-on-sanskrit-imposition/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய மக்கள் தொகையில் குறைந்தது 50 சதவீதமானோர் இந்தியாவின் இணைப்பு மொழியான ஹிந்தியை கற்றிருப்பதைப்போல ..

 

மிகத் தவறான தகவலை பதவியிலிருப்போர் பரப்புரை செய்வது கண்டிக்கத் தக்கது. :wub:

 

இந்தி என்பது பலவேறு வடகத்திய மொழிகளின் கூட்டுக்கலவை மொழியாக அறியப்படுகிறது..அதில் வெஸ்டன் ஹிந்தி, ஈஸ்டன் ஹிந்தி, பீகாரி போன்ற கலவைகளும் அதன் உட்பிரிவுகளும் உள்ளன.

மொத்த ஹிந்தி உட்பிரிவுகளும் சேர்த்து 1991 வருட கணக்குப்படி 39.29 சதவீதமாக இருந்த ஹிந்தி பேசுவோர் எண்ணிக்கை 2001 வருட கணக்குப்படி 41.03 சதவீதமாக மாறி உள்ளனர்.

 

 

விக்கிப்பீடியா

Link to comment
Share on other sites

தமிழனை வீரத்தினால் வெல்லமுடியாத ஆரியம் அவனை ஆன்மிகவழியில் இந்துக்களாக மாறவைத்து சுலபமாக அடக்கி அடிமைகொண்டதை வரலாறுகள் தெரிவிக்கின்றன. இந்துமதம் மனித வாழ்வுக்கான சிறந்த வழிமுறைகளைக் கொண்டுள்ளது. ஆனாலும் தமிழரை அடிமையாக வைத்திருப்பதையே அதன் இதிகாசக் கதைகளும், தேவார பக்திப் பாடல்களும் அடிப்படையாகக் கொண்டுள்ளதைக் அவதானிக்கலாம். அது தெரிந்தும் அதன் பிடியிலிருந்தும் வெளிவர முடியாது அவன் ஓர்மம் தடுக்கிறது. அத்துடன் 'தமிழன் பிடி உடும்புப்பிடி'. பிடித்ததை உயிர்போனாலும் விடமாட்டான். அதுவே அவன் அழிவுக்கு காரணமானது யதார்த்தம். தமிழ் மெள்ளச் சாகும் என்கிறார்கள். அது தவறு தமிழ் மெள்ளக் கொல்லப்படுகிறது. ஆனையை வைத்து ஆனையைப் பிடிப்பதுபோல் தமிழனைக்கொண்டே தமிழ் கொல்லப்படுகிறது. :(    
 
Link to comment
Share on other sites

ஒவ்வொருவருக்கும் அவரவர் தாய்மொழி முக்கியமானது. அவரவர் மொழிகளுக்கு அவர்களுக்கே உரிய கெளரவத்தை கொடுத்து அந்த மக்களுக்கான உரிமைகளை அங்கீகரிக்கும் போது இந்த மொழியை படி அந்த மொழியை படி என்று கூற வேண்டிய அவசியமே இல்லை. மக்கள் தாமே விரும்பி தமது சகோதர மொழிகளை படிப்பாரகள். அதையே நாம் ஐரோப்பிய நாடுகளில் பார்க்கிறோம். ஆகவே மொழியை படி என்று அறிவுரை கூற முன்பு அவரவர் தாய்மொழிக்கு கெளரவம் கொடுக்கும் மனித பண்பை இந்திய ஆளும் வர்க்கத்தினர் கற்று கொள்ளட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூர்த்தி தான் கீழிருந்து கையேந்துவது போல் இலங்கைத்தமிழரையும் செய்யச் சொல்லுகிறது. பதவிக்காக என்னும் செய்யும் கூட்டம். நான் பேராதனை பல்கலைக்கழகத்திலிருந்த போதுகூட சிங்களம் கற்கவில்லை. இது என்னுடனிருந்த ஒரு சக தமிழ் மாணவருக்கு சங்கத்தை ஏற்படுத்தியது, ஏனேனில் அவர் practical classஇல் சக சிங்கள group matesஉடன் சிங்களம் கதைக்கத் தயாராக இருந்தார் ஆனால் நான் எல்லோரும் பொதுமொழியில் (English)கதைக்கவேண்டுமென்று வற்புறுத்தினேன். ஒரு சிங்கள மாணவனைத்தவிர மிகுதியானோர் என்னுடன் மிகவும் கோபமாக இருந்தார்கள். இது நடந்தது 1996 -2000 வரை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராசவன்னியன்- நீங்கள் சொன்ன 41% இந்தியை தாய்மொழியாக கொண்டோர் அளவு, ஆனால் மூர்த்தி சொல்லும் 50% இந்தி கற்றிருப்போரின் அளவு. இதில் தாய் மொழியாக கொண்டவர் + தமிழராய், பஞ்சாபியாய் பிறந்து ஹிந்தி பேசுவோரும் அடங்குவர். ஆக மூர்த்தி பிழையான தகவல் ஏதும் தரவில்லை.

நாம் சிங்களம் படிக்கத்தான் வேண்டும். தமிழ் மொழி எமது அடையாளம் அதை கைவிடமுடியாது. ஆனால் இன்னொரு மொழியை படிப்பதில் தப்பேதும் இல்லை.

சிங்களத்தை திணித்தால் எதிர்போம். தனி சிங்கள சட்டம் வந்தால் எதிர்ப்போம் அவை நியாயம். ஆனால் நாமாகவே ஒரு மொழியை ஒதுக்கி வைக்க கூடாது.

ரவிராஜ், மனோ கனேசன் போன்றோர் சிங்கள மக்களுக்கு சிங்களத்தில் எடுத்து சொன்ன எம் பிரச்சினையின் 1% ஐ கூட தனித்தமிழ்ச் சிங்கம் மாவை எடுத்து சொல்லவில்லை.

நாம் எம் உரிமைகளை வெல்ல தேவையான அரிய ஆயுதங்களில் மிக முக்கியமானது சிங்கள மொழி அறிவு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூர்த்தியைத் துரத்தவேணும்.  பிச்சை வேணாம் நாயைப் பிடி.  துணைத் தூதரகமே தேவையில்லை.  இது பெரிய ஆபத்தில் கொண்டு போய்ச் சேர்க்கப்போகுது. 

உவர் சொல்லுறபடி செய்தால் இன்னும் பத்து வருசத்தில் தமிழ் தெரிந்தவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.  ஏன் ஆங்கில அறிவும் தமிழர்களிடமிருந்து இல்லாமற் போகும். 

நம்முடைய தமிழ் நாட்டில நாங்க எதுக்கு அண்டை நாட்டு மொழியைப் படிக்க வேணும்? விளங்கவில்லை! 

 

ஏலுமெண்டால் உவருடையதும் துணைத் தூதரகத்தினதும் பேச்சு செய்ல்களைக் கண்டித்து உடனடியாக உலகளாவிய ரீதியில் கண்டன ஈ மெயில்களை அனுப்ப யாழ் இணையம் நடவடிக்கையெடுக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

மூர்த்தியைத் துரத்தவேணும்.  பிச்சை வேணாம் நாயைப் பிடி.  துணைத் தூதரகமே தேவையில்லை.  இது பெரிய ஆபத்தில் கொண்டு போய்ச் சேர்க்கப்போகுது. 

உவர் சொல்லுறபடி செய்தால் இன்னும் பத்து வருசத்தில் தமிழ் தெரிந்தவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.  ஏன் ஆங்கில அறிவும் தமிழர்களிடமிருந்து இல்லாமற் போகும். 

நம்முடைய தமிழ் நாட்டில நாங்க எதுக்கு அண்டை நாட்டு மொழியைப் படிக்க வேணும்? விளங்கவில்லை! 

 

ஏலுமெண்டால் உவருடையதும் துணைத் தூதரகத்தினதும் பேச்சு செய்ல்களைக் கண்டித்து உடனடியாக உலகளாவிய ரீதியில் கண்டன ஈ மெயில்களை அனுப்ப யாழ் இணையம் நடவடிக்கையெடுக்க வேண்டும்.

 

அப்பப்பா இவ்வளவு சீரியசா இந்த விடயத்தை எடுத்துவிட்டீர்களா ஹா ஹா ஹா. calm calm. ......................dont be tension.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Why should we study another country's language. 

 

English is the international language.  Tamils should study English as well as Chinese Mandarin for our future benefits in the long run.  Why other languages? 

 

I think Mr. Moorthy from Jaffna Indian consulate should keep shut his mouth without uttering nonsense.  He is not here to advise the people.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்பும் இப்பவும் கொழும்பில் குப்பை கொட்டிய எம்வர்கள் சிங்களம் கதைப்பார்கள்.இப்ப தமிழ் கடைகளிலும்(வட பகுதி)சிங்களம் தொிந்தவர்களுக்கு வேலைக்கு முதலிடம்.தானாக செய்வது தவறு இல்லை.வற்ப்புறித்தினால் அது தவறு தான்.இதே மாதிரித்தான் குடியேற்றமும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்பும் இப்பவும் கொழும்பில் குப்பை கொட்டிய எம்வர்கள் சிங்களம் கதைப்பார்கள்.இப்ப தமிழ் கடைகளிலும்(வட பகுதி)சிங்களம் தொிந்தவர்களுக்கு வேலைக்கு முதலிடம்.தானாக செய்வது தவறு இல்லை.வற்ப்புறித்தினால் அது தவறு தான்.இதே மாதிரித்தான் குடியேற்றமும்.

 

 

கொழும்பில்  போய்

தமிழன் சிங்களம் கதைப்பதற்கு மாற்றீடு

சிங்களவன் யாழ்ப்பாணத்தில் தமிழில் கதைப்பதாகும்..

 

மற்றும்படி

தமிழரைப்பொறுத்தமட்டில்

மெல்ல மெல்ல முனுகல் குறைவடைந்து..

இறுதியில்.............?? :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்து சமுத்திரப் பிராந்தியத்தில்.. அதிகம் பேசப்படும் மொழிகளில் ஒன்றான தமிழை தான் சிங்களவர்கள் கற்றுக் கொள்ள ஆலோசனை வழங்க வேண்டும். செய்வார்களா "ஹிந்தி"ய வால்பிடிகள்..! :icon_idea::rolleyes:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.