Jump to content

இந்தியா செல்வதா? – விக்கிக்கு நிபந்தனை விதிக்கிறது அரசு?!


Recommended Posts

இந்தியா செல்வதா? – விக்கிக்கு நிபந்தனை விதிக்கிறது அரசு?!

 

இந்தியாவின் அழைப்பையேற்று வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் இந்தியா செல்வதாயின் இலங்கை அரசாங்கத்துக்கு அறிவிக்கவேண்டியது அவசியமாகும் என்று ஆளும் கட்சியின் பிரதம கொரடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.

எதிர்க்கட்சியை சேர்ந்தவராக இருப்பினும் நாட்டின் அரசியலமைப்புக்கு ஏற்பவே விக்கினேஸ்வரன் வட மாகாணத்துக்கு முதலமைச்சராக இருக்கின்றார். எனவே அவர் அரசியலமைப்புக்கு ஏற்பவே செயற்படவேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
 
வட மாகாண சபை முதலமைச்சராக இருக்கும் சி.வி. விக்கினேஸ்வரன் ஓய்வுபெற்ற நீதியரசர். எனவே சட்டம் பற்றியும் அரசியலமைப்பை பின்பற்றவேண்டிய தேவை குறித்தும் அவருக்கு நன்றாக தெரியும் என்றும் தினேஷ் குணவர்த்தன கூறினார்.
 
வட மாகாண முதலமைச்சரை இந்தியா அழைத்து பேச்சு நடத்தவுள்ளதாக வெளிவரும் தகவல்கள் தொடர்பிலும் கூட்டமைப்பை இந்தியா அழைத்து பேசியமை தொடர்பில் அரசாங்கம் வெட்கப்படவேண்டும் என்று எதிர்க்கட்சியினர் தெரிவித்துள்ளமை குறித்தும் விபரிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
 
ஆளும் கட்சியின் பிரதம கொரடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன இந்த விடயம் குறித்து மேலும் குறிப்பிடுகையில்,
 
நாட்டில் உள்ள அமைச்சர்கள் பிரதியமைச்சர்கள் முதலமைச்சர்கள் அரச அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரும் அரசியலமைப்பின் கீழேயே வருகின்றனர். முதலமைச்சர்களாக பதவிவகிக்கின்ற அனைவரும் அரசியலமைப்புக்கு அமைவாகவே செயற்படவேண்டும். எதிர்க்கட்சியின் சார்பில் ஒரு மாகாணத்தில் முதலமைச்சராக ஒருவர் இருந்தாலும் அவர் அரசியலமைப்புக்கு உட்பட்டே செயற்படவேண்டும். அரசியலமைப்பை மீறி யாரும் செயற்பட முடியாது. அதுமட்டுமன்றி நிதி மற்றும் நிர்வாக விடயங்களும் அரசியலமைப்புக்கு உட்பட்டே இடம்பெறவேண்டும்.
 
இந்நிலையில் அமைச்சர் ஒருவரோ அல்லது பிரதியமைச்சர் ஒருவரோ மாகாண முதலமைச்சரோ வெளிநாடு செல்லவேண்டுமாயின் அது குறித்து அரசாங்கத்துக்கு அறிவிக்கவேண்டும். இது சம்பிரதாயமாகும். இவ்வாறு அறிவித்துவிட்டு சென்றால்தான் தூதரக மட்டங்களில் உரிய ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படும்.
 
அந்தவகையில் இந்தியாவின் அழைப்பையேற்று வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் அந்நாட்டுக்கு செல்வதாயின் இலங்கை அரசாங்கத்துக்கு அறிவிக்கவேண்டியது அவசியமாகும். இந்த சம்பிரதாயத்தை அவர் கடைபிடிக்கவேண்டும். வட மாகாண சபை முதலமைச்சராக இருக்கும் சி.வி. விக்கினேஸ்வரன் ஓய்வுபெற்ற நீதியரசர். எனவே சட்டம் பற்றியும் அரசியலமைப்பை பின்பற்றவேண்டிய தேவை குறித்தும் அவருக்கு நன்றாக தெரியும் என்று நம்புகின்றோம்.
 
கூட்டமைப்பு இந்தியா விஜயம்
 
 
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்திய விஜயம் அரசாங்கத்துக்கு தோல்வி என்று கூறப்படுவதை ஏற்க முடியாது. இந்த விடயத்தை வெற்றி தோல்வி என்ற வகையில் நாங்கள் பார்க்கவில்லை. அதுமட்டுமன்றி கூட்டமைப்பின் இந்திய விஜயம் தொடர்பில் அரசாங்கம் அலட்டிக்கொள்ளவுமில்லை.
 
காரணம் அவ்வப்போது இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு சென்று கூட்டமைப்பு பொய்களை கூறிவரும் என்பது எம் அனைவருக்கும் தெரியும். எனவே இது தொடர்பில் அலட்டிக்கொள்ளவில்லை என்றார்.
 
தோல்வியல்ல
 
இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான இந்தியாவின் சந்திப்பு தொடர்பில் அரசாங்கம் வெட்கப்படவேணடும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளமை குறித்து கருத்து வெளியிட்ட அமைச்சர் தினேஷ் குணவர்த்தன, ”அரசாங்கம் வெட்கப்படவேண்டிய எந்த அவசியமும் இல்லை. ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சிக்காலத்திலும் இவ்வாறு தமிழ்த் தலைவர்கள் இந்தியாவுக்கு விஜயம் செய்து சந்திப்புக்களை நடத்தியிருந்தார்கள். எனவே இது அலட்டிக்கொள்ளவேண்டிய விடயமல்ல. மற்றும் இந்த விடயத்தில் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை” என்று கூறினார்.
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.