Jump to content

எனது இரவுகளில் எனது அறை...


Recommended Posts

எனது அறையில்
எனது இரவுகளில்
எல்லாம் உயிர்பித்திருக்கிறது
உனது அன்பின் கிருபையால்...

உன் கூந்தலின் கருந்சாந்தெடுத்து
பூசிய மேற்கூரையின்
இருண்ட வெளியின்
தனிமை தீர்க்க
உன் வெண்பற்கள் வெண்மைகொண்டு
வரைந்த நட்சத்திரங்கள்
போதாதென்று சமைந்தது பிறைநிலா
நீ வெட்டியெறிந்த நகத்துண்டுகள் சேர்ந்து

கோள்கள் சில செய்தேன்
முகப்பருக்கள் அளவு கொண்டு
புருவங்கள் இணைந்து
வானவில் பிறந்தது சுவற்றில்
கண்ணீர் பெருக்கில்
சமுத்திரங்கள் கலந்தது
நதிக்கு வடிவம் தராது
திகைத்தேன் சுழித்தாய் உதட்டை
மார்பு குவியம்
மலைத் தொடரானது
வேர்வையில் நனைந்த ரோமங்கள்
மழைக் காடுகளாய் மாறியது

நெற்றிப் பொட்டை சூரியனாய்
தந்துவிட்டு போர்வையினுள் புகுந்தாய்
மெல்லினம் வல்லினமாய் மிகுந்து
உன் பெண்மையின் ஆண்மையில்
அரும்பிய மீசை முடிகளை
சூரிய கதிர்களாய் வரைந்துவிட்டு
தூரிகையை உதறினேன்
முதல் மழைதுளி விழுந்தது
என்னில்....



~ ராஜன் விஷ்வா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புருவங்கள் இணைக்க ... வானவில் பிறக்க

 

மார்புக் குவியம் ... மலை தொடராய் மாற

 

வியர்வை ரோமங்கள் ...மலைக்காடுகளாய் நிற்க

 

இந்தக் கவிதையில்...
தம்பி விஷ்வா ... கவிஞர் வாலியின் வாரிசாக மிளிர்கிறார்...
கவிதையை வேறு ஒரு தொனியிலும் நான் நினைத்துப் பார்கிறேன்...
மிகுதியை இங்கு வந்து கருத்துப் பகிர போகும் நண்பர்களிடம் விட்டு விடுகிறேன்..

அழகான கற்பனை தம்பி விஷ்வா... தொடர்ந்து எழுதுங்கள். :) 

Link to comment
Share on other sites

உன் பெண்மையின் ஆண்மையில்
அரும்பிய மீசை முடிகளை 
சூரிய கதிர்களாய் வரைந்துவிட்டு
தூரிகையை உதறினேன்
முதல் மழைதுளி விழுந்தது
என்னில்....

 

அஹா வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கற்பனை கொஞ்சம் கடன் வாங்க வேண்டி உள்ளது..ம்ம்ம்..

 

 

கற்பனைக்கு பஞ்சம்

இல்லாத அட்சய பாத்திரமாய்

உங்கள் பேனா மழைத் - துளிகளாய்

என்றும் கவித்துளிகளை - யாழ்

மேல் தெளித்து செல்லட்டும்

என் வாழ்த்துக்கள் விஸ்வா.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொங்கும் அலை கடலின்,

ஓங்கார ஓசையுடன்.....,

சங்கென முழங்குகிறது,

சங்கம் வளர்த்த தமிழ்!!

 

அணை கட்டித் தடுத்து விடாதே..,

அது தடையின்றித் தவழட்டும் ! :D

 

வாழ்த்துக்கள் விஷ்வா!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் விஷ்வா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் விஷ்வா  ,  நல்லாயிருக்கு...!

Link to comment
Share on other sites

புருவங்கள் இணைக்க ... வானவில் பிறக்க

மார்புக் குவியம் ... மலை தொடராய் மாற

வியர்வை ரோமங்கள் ...மலைக்காடுகளாய் நிற்க

இந்தக் கவிதையில்...

தம்பி விஷ்வா ... கவிஞர் வாலியின் வாரிசாக மிளிர்கிறார்...

கவிதையை வேறு ஒரு தொனியிலும் நான் நினைத்துப் பார்கிறேன்...

மிகுதியை இங்கு வந்து கருத்துப் பகிர போகும் நண்பர்களிடம் விட்டு விடுகிறேன்..

அழகான கற்பனை தம்பி விஷ்வா... தொடர்ந்து எழுதுங்கள். :)

அண்ணே கவிஞர் எழுதியிருக்க தொனியில மட்டும் புரிஞ்சுக்கனும், குறிப்பா இந்தா கவிதைய... நானே பயந்து பயந்து எழுதியிருக்கேன். நீங்க வேற மாட்டிவிடுறிங்க நம்ம மக்கள்கிட்ட... நன்றி சசி அண்ணா வாழ்த்திற்கு :)

உன் பெண்மையின் ஆண்மையில்

அரும்பிய மீசை முடிகளை

சூரிய கதிர்களாய் வரைந்துவிட்டு

தூரிகையை உதறினேன்

முதல் மழைதுளி விழுந்தது

என்னில்....

அஹா வாழ்த்துக்கள்.

வாழ்த்திற்கும் வரவிற்கும் நன்றிகளண்ணா....!
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தம்பிக்கு வாலிப தாபம் வந்துட்டுது..

கற்பனை

அனுபவசாலிகளையே   மீறுகிறது..

 

நல்லதொரு பங்காளி  கிடைக்கவாழ்த்துக்கள்...

 

தொடரட்டும் கவிதைத்துளிகள்.... :icon_mrgreen: 

Link to comment
Share on other sites

கற்பனை கொஞ்சம் கடன் வாங்க வேண்டி உள்ளது..ம்ம்ம்..

கற்பனைக்கு பஞ்சம்

இல்லாத அட்சய பாத்திரமாய்

உங்கள் பேனா மழைத் - துளிகளாய்

என்றும் கவித்துளிகளை - யாழ்

மேல் தெளித்து செல்லட்டும்

என் வாழ்த்துக்கள் விஸ்வா.

என் அட்சய பாத்திரத்தில் பிச்சையிட்டு என்னை வளர்த்தும் நல் உள்ளங்களுக்கும் யாழ் களத்திற்க்குமே என் எண்ணங்களை காணிக்கையாக்குகிறேன்...

மனமார வாழ்த்திய உங்களன்பிற்கு மிக்க நன்றிகள் அக்கா :)

Link to comment
Share on other sites

பொங்கும் அலை கடலின்,

ஓங்கார ஓசையுடன்.....,

சங்கென முழங்குகிறது,

சங்கம் வளர்த்த தமிழ்!!

அணை கட்டித் தடுத்து விடாதே..,

அது தடையின்றித் தவழட்டும் ! :D

வாழ்த்துக்கள் விஷ்வா!

இதே வேகத்தில் தவழ விட்டால் சீக்கிரம் குவாக்குவா சத்தம் கேட்டிடும் புங்கையண்ணே. ஒரு குழந்தைக்கு இன்னொரு குழந்தையா :)

உங்கள் வாழ்த்துக்களால் இயல்பினும் மதிப்பு கூடுகிறது கவிதை :)

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் விஷ்வா

நன்றி புத்தன் அண்ணா :)

வாழ்த்துக்கள் விஷ்வா , நல்லாயிருக்கு...!

உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி :) நன்றிகள் பல...!
Link to comment
Share on other sites

தம்பிக்கு வாலிப தாபம் வந்துட்டுது..

கற்பனை

அனுபவசாலிகளையே மீறுகிறது..

நல்லதொரு பங்காளி கிடைக்கவாழ்த்துக்கள்...

தொடரட்டும் கவிதைத்துளிகள்.... :icon_mrgreen:

அனுபவசாலியா ? அய்யகோ...! என் கற்பிற்க்கு இப்படியொரு சோதனையா :(

அருமையான கவிதை வாழ்த்துக்கள் விஷ்வா

நன்றிகள் அண்ணா...
Link to comment
Share on other sites

நன்றாக இருக்கின்றது விஷ்வா

 

வரிகளுக்கு இடையில் சிறு இடைவெளிகள் விட்டால் வாசிக்க இன்னும் இலகுவாக இருக்கும் என நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

நன்றாக இருக்கின்றது விஷ்வா

வரிகளுக்கு இடையில் சிறு இடைவெளிகள் விட்டால் வாசிக்க இன்னும் இலகுவாக இருக்கும் என நினைக்கின்றேன்.

நன்றிகள் நிழலியண்ணா, இதை கவனத்தில் கொள்கிறேன் இனி.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை நன்றாக இருக்கின்றது. வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

உங்கள் கற்பனை.. இந்தப் பாடல் வரிகளுக்குரிய.. கவிஞரின் கற்பனையோடு.. மிக நெருங்கி வந்து.. நிற்கிறது..!

 

ரசிக்கக் கூடிய நல்ல படைப்பு. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை நன்றாக இருக்கின்றது. வாழ்த்துக்கள்.ராஜன் விஷ்வா

Link to comment
Share on other sites

கவிதை நன்றாக இருக்கின்றது. வாழ்த்துக்கள்.

நன்றி கு.சா மாமா :D

http://youtu.be/r4NY_oXjj9Q

உங்கள் கற்பனை.. இந்தப் பாடல் வரிகளுக்குரிய.. கவிஞரின் கற்பனையோடு.. மிக நெருங்கி வந்து.. நிற்கிறது..!

ரசிக்கக் கூடிய நல்ல படைப்பு. :)

வாழ்த்திற்கு நன்றி நெடுக்கண்ணே, அந்தளவுக்கெல்லாம் நான் ஈடில்லை... பாடல் இணைப்பிற்கு மிக்க நன்றி. நான் விரும்பி கேட்கும் பாடலிது :)

http://youtu.be/r4NY_oXjj9Q

உங்கள் கற்பனை.. இந்தப் பாடல் வரிகளுக்குரிய.. கவிஞரின் கற்பனையோடு.. மிக நெருங்கி வந்து.. நிற்கிறது..!

ரசிக்கக் கூடிய நல்ல படைப்பு. :)

வாழ்த்திற்கு நன்றி நெடுக்கண்ணே, அந்தளவுக்கெல்லாம் நான் ஈடில்லை... பாடல் இணைப்பிற்கு மிக்க நன்றி. நான் விரும்பி கேட்கும் பாடலிது :)

கவிதை நன்றாக இருக்கின்றது. வாழ்த்துக்கள்.ராஜன் விஷ்வா

ஈஈஈஈஈ :) தேங்யூ :)

கவிதை நன்றாக இருக்கின்றது. வாழ்த்துக்கள்.ராஜன் விஷ்வா

ஈஈஈஈஈ :) தேங்யூ :)
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை நன்று, இன்னும் எழுத வேணும்.

 

அது சரி, உங்கள் குருநாதர் ஏன் கம்மெண்டு இருக்கிறேர்? சிஷ்யனின் கவிதைக்கு ஒரு கருத்து எழுதாமல் என்ன குருநாதர்? இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்! :D

Link to comment
Share on other sites

குருநாதர் மனிதகுல நன்மைக்காக மிக முக்கியமான ஆராய்ச்சியில் ஆசிரமத்தில் பெண் சிஷ்யைகளுடன் இருக்கிறார்... கவிதையை படித்து ஆராய்ச்சியின் திசைமாறி முடிவு வேறுமாதிரியாக வந்துவிடலாம் என்பதால் அமைதி காக்கிறார் :D

வரவிற்கு நன்றிகள் ஜஸ்ரின் அண்ணா...

Link to comment
Share on other sites

:)அழகான வரிகள் ராஜன் நண்பா !..

 
எனது அறை
வெளிச்சத்தின் விளிம்பினையும்
இருட்டின் ஆரம்பத்தையும் தவிர
எதையுமே எனக்கு
தெளிவாய் காட்டியதேயில்லை
நடு நிசியிலும்
என்னோடு கூட விழித்திருக்கும்
அரிக்கன் விளக்கு .

எனது தனிமையை
யாருமே வெறித்துப்பார்ததில்லை
எனது அறையை தவிர.

நான் வெளியேறிய தருணங்களில்
எனது படுக்கை
மௌனமாய் ஆசுவாசம் கொள்ளும்

என்னை பிரியும்
எனது அறை
தனிமையில் அப்படி
என்னதான் செய்யுமோ..!!

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.