Jump to content

ஐஸ் கிரீம் கேட்ட குழந்தையை காலால் மிதித்துக் கொல்ல முயன்ற தாய்! - செல்வச்சந்நிதி ஆலயத்தில் சம்பவம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
ஐஸ் கிரீம் கேட்ட குழந்தையை காலால் மிதித்துக் கொல்ல முயன்ற தாய்! - செல்வச்சந்நிதி ஆலயத்தில் சம்பவம். 
[Tuesday 2014-09-02 07:00]
mother-child-200-news.jpg
தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய சூழலில் தனது 4 வயதுப் பெண் குழந்தையை பெற்ற தாயே நிலத்தில் போட்டு கழுத்தை நெரித்து கொல்ல முயன்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது.இதனைக் கண்ட பொதுமக்கள் தாயிடம் இருந்து குழந்தையைப் பறித்துக் காப்பாற்றினர். நேற்று இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறைப் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, குழந்தையும் தாயும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இளவாலை பனிப்புலம் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய குறித்த பெண் செல்வச்சந்நிதி ஆலயப் பகுதியில் அர்ச்சனைப் பொருட்களை விற்று வருகிறார். அவருடன் கூடவே 4 வயது மற்றும் 2 வயதுடைய இரு குழந்தைகளும் அங்கு இருந்துள்ளன.
 
நேற்றுக் காலை தனது தாயிடம் ஐஸ்கிறீம் வாங்கித் தருமாறு சிறுமி கோரியுள்ளார். இதனையடுத்து அந்தப் பெண் திடீரென தனது 4 வயதுக் குழந்தையை நிலத்தில் போட்டு அதன் கழுத்தில் காலால் மிதித்துள்ளார். அங்கு நின்று நிலைமையை அவதானித்த பொதுமக்கள் உடனே குழந்தையைத் தாயிடம் இருந்து காப்பாற்ற முனைந்தனர். அவர்களை அருகே நெருங்கவிடாது கடுமையாகத் திட்டித் தீர்த்த அந்தத் தாய் பிள்ளையின் கழுத்தில் மேலும் அழுத்தமாக மிதித்துள்ளார். தாய் மித்ததில் மூச்சுத் திணறி குழந்தையின் கண்கள் பிதுங்கின. அதன் மூக்கில் இருந்து இரத்தம் வெளியேறியது.
 
நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த பொதுமக்கள் உடனே தாயை கீழே தள்ளிவிட்டு குழந்தையை அவரிடம் இருந்து மீட்டுக் காப்பாற்றினர். பின்னர் அப்பகுதி கிராம அலுவலருக்கு விடயத்தை தெரியப்படுத்தி பிள்ளையையும் தாயையும் கிராமஅலுவலரிடம் ஒப்படைத்தனர். அவர் வல்வெட்டித்துறை பொலிஸாரை அழைத்து பிள்ளையை ஒப்படைத்ததார். தாயை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். கழுத்து நெரிக்கப்பட்ட சிறுமி உடனடியாக வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டார்.
 
மேற்படி தாய் கடந்த ஜனவரி மாதம் 20ஆம் திகதி தனது 5 வயது மகளையும் ஒன்றரை வயது மகனையும் கிணற்றுக்குள் போட்டு கொலை செய்ய முற்பட்ட போது அயலவர்களின் முயற்சியால் அவ்விரு சிறுவர்களும் காப்பாற்றப்பட்டிருந்தனர். தொடர்ந்து இளவாலை பொலிஸார் மேற்படி தாயை கைது செய்து யாழ். சிறுவர் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய வேளையில் மேற்படி பெண்ணை நீதிமன்றக் காவலில் வைத்து மனநல சிகிச்சையளிக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
 
அத்துடன் அந்த தாயின் 5 வயது மகளை கைதடி சிறுவர் பாதுகாப்பு இல்லத்தில் வைத்துப் பராமரிக்கவும் ஒன்றரை வயது மகனை பாட்டியிடம் கையளிக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார். நீதிமன்ற காவலில் மனநல சிகிச்சை பெற்ற அத் தாய் நன்னடத்தை அதிகாரியின் கண்காணிப்பின் கீழ் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டதுடன் அவரது குழந்தைகளும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்நிலையிலேயே அவர் தனது 5 வயது மகளை நேற்று கடுமையாகத் தாக்கியுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.http://www.seithy.com/breifNews.php?newsID=116025&category=TamilNews&language=tamil
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனியும்.... இந்தத் தாயிடம், குழந்தைகளை வளர விடுவது உசிதமல்ல. 
அவருக்கும்... ஏதோ, உளவியல் பிரச்சினை உள்ளது.

Link to comment
Share on other sites

திருப்பியும் அந்த குழந்தைகளை அந்த மிருகத்திடம் ஏன் திருப்பி கொடுக்கிறார்களோ...அந்த பிள்ளைகளை இறைவன் தான் காப்பாற்ற வேண்டும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
ஐஸ்கிறீம் கேட்ட 5 வயது மகளை தாக்கிய தாய் விடுதலை

 

தொண்டைமானாறு, செல்வச்சந்நிதி ஆலயத்தில் வைத்து தனது 5 வயது மகளை கொடூரமான முறையில் தாக்கிய தாயை, திங்கட்கிழமை (01) மாலை விடுதலை செய்ததாக வல்வெட்டித்துறைப் பொலிஸார், இன்று செவ்வாய்க்கிழமை (02) தெரிவித்தனர்.

தாயின் தாக்குதலால், ஊறணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மகளுக்கு, பாரதூரமான காயங்கள் எதுவும் இல்லையென வைத்தியர் தெரிவித்ததையடுத்து தாயை விடுவித்ததுடன் மகளையும் தாயுடன் அனுப்பி வைத்ததாக பொலிஸார் கூறினர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

 

யாழ்ப்பாணம், தொண்டைமானாறு, செல்வச்சந்நிதி ஆலயத்தில் வைத்து தனது 5 வயது மகளை கொடூரமான முறையில் தாக்கிய தாயொருவரை திங்கட்கிழமை (01) வல்வெட்;டித்துறைப் பொலிஸார் கைது செய்தனர்.

 

இளவாலை, பனிப்புலம் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய தாயே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

 

கைது செய்யப்பட்ட தாய், செல்வச்சந்திநி ஆலய வளாகத்தில் தனது 5 வயது மகளுடன் கற்பூரம் விற்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.

 

இந்நிலையில், திங்கட்கிழமை காலை தனது தாயிடம் ஐஸ்கிறீம் வாங்கித் தருமாறு குறித்த 5 வயது சிறுமி கோரியுள்ளார். இதனையடுத்து அவர் தன் மகளை கடுமையாகத் தாக்கியுள்ளார். இதனால், அச்சிறுமியின் மூக்கு மற்றும் வாயால் இரத்தம் வடிந்துள்ளது.

இதனை அவதானித்த பொதுமக்கள் உடனடியாக செல்வச்சந்நிதி உபபொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், குறித்த பெண்ணை கைது செய்ததுடன் சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

 

 

மேற்படி தாய் கடந்த ஜனவரி மாதம் 20ஆம் திகதி தனது 5 வயது மகளையும் ஒன்றரை வயது மகனையும் கிணற்றுக்குள் போட்டு கொலை செய்ய முற்பட்டுள்ளார் என்றும் அயலவர்களின் முயற்சியால் அவ்விரு சிறுவர்களும் காப்பாற்றப்பட்டுள்ளார்கள்.

தொடர்ந்து, இளவாலை பொலிஸார் மேற்படி தாயை கைது செய்து, யாழ். சிறுவர் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய வேளையில், மேற்படி பெண்ணை நீதிமன்றக் காவலில் வைத்து மனநல சிகிச்சையளிக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

 

அத்துடன், அந்த தாயின் 5 வயது மகளை கைதடி சிறுவர் பாதுகாப்பு இல்லத்தில் வைத்துப் பராமரிக்கவும் ஒன்றரை வயது மகனை பாட்டியிடம் கையளிக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

 

நீதிமன்ற காவலில் மனநல சிகிச்சை பெற்ற அத் தாய், நன்னடத்தை அதிகாரியின் கண்காணிப்பின் கீழ் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டதுடன் அவரது குழந்தைகளும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டன.

இந்நிலையிலேயே அவர், தனது 5 வயது மகளை நேற்று கடுமையாகத் தாக்கியுள்ளார். எனினும் பொலிஸார் அவரை விடுவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

 

http://www.e-jaffna.com/archives/31092

Link to comment
Share on other sites

உறவுகளைப் பறிகொடுத்த நிலை, வறுமை உள்ளிட்ட பல காரணிகளால் இது போன்ற உளவியல் தாக்கத்திற்குள்ளானோர் நிறைந்த தேசமாக எம் தமிழ்த் தாயகம் மாறி வருகிறது. பொருளாதார ரீதியாக கைகொடுத்து உதவ வேண்டிய புலத் தமிழர்களில் பலர் ஊரில் கோயில்களுக்குக் கோபுரம் கட்டித் தங்கள் பகதியை வெளிக்காட்டி விட்டு அடங்கி விடுகிறார்கள்..

 

ஊர்ச் சங்கங்கள், பழைய மாணவர் சங்கங்கள் உள்ளிட்ட பலவும் இந்தப் படங்காட்டும் செயற்பாட்டுக்கு விதிவிலக்கல்ல..... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ மண்ணில் வீசப்பட்ட குண்டுகள்/நச்சுவாயு குண்டுகளின் தாக்கத்தை இப்படியான சம்பவங்கள் மூலம் உணரமுடிகின்றது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உறவுகளைப் பறிகொடுத்த நிலை, வறுமை உள்ளிட்ட பல காரணிகளால் இது போன்ற உளவியல் தாக்கத்திற்குள்ளானோர் நிறைந்த தேசமாக எம் தமிழ்த் தாயகம் மாறி வருகிறது. பொருளாதார ரீதியாக கைகொடுத்து உதவ வேண்டிய புலத் தமிழர்களில் பலர் ஊரில் கோயில்களுக்குக் கோபுரம் கட்டித் தங்கள் பகதியை வெளிக்காட்டி விட்டு அடங்கி விடுகிறார்கள்..

 

ஊர்ச் சங்கங்கள், பழைய மாணவர் சங்கங்கள் உள்ளிட்ட பலவும் இந்தப் படங்காட்டும் செயற்பாட்டுக்கு விதிவிலக்கல்ல..... 

உண்மை இது தான்!

 

அந்தத் தாயிடம் அடுத்தவேளைச் சாப்பாட்டுக்கூடப் பணமில்லாமல் இருந்திருக்கலாம்! அதற்காக 'ஐஸ்கிரீம்' கேட்ட குழந்தையிடம் கோபப்பட்டிருக்கலாம்!

 

இல்லாவிட்டால் அந்த ஐஸ்கிரீமில் என்னென்ன கலந்திருக்குமோ என்ற தாயின் ' பாதுகாப்புணர்வு' எச்சரித்திருக்கலாம்!

 

பலரது சிந்தனை.... பிரித்தானிய மகாராணியின் குழந்தைத் தனமான சிந்தனை போலவே உள்ளது!

 

பாண் இல்லாவிட்டால், கேக்கைச் சாப்பிடலாம் தானே..! :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊர்ச் சங்கங்கள், பழைய மாணவர் சங்கங்கள் உள்ளிட்ட பலவும் இந்தப் படங்காட்டும் செயற்பாட்டுக்கு விதிவிலக்கல்ல..... 

 

இந்த அமைப்புக்கள் வடமாகாணசபை மூலம் இந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முன்வரவேண்டும்...பூணைக்கு மணி கட்டுவது யார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை இது தான்!

 

அந்தத் தாயிடம் அடுத்தவேளைச் சாப்பாட்டுக்கூடப் பணமில்லாமல் இருந்திருக்கலாம்! அதற்காக 'ஐஸ்கிரீம்' கேட்ட குழந்தையிடம் கோபப்பட்டிருக்கலாம்!

 

இல்லாவிட்டால் அந்த ஐஸ்கிரீமில் என்னென்ன கலந்திருக்குமோ என்ற தாயின் ' பாதுகாப்புணர்வு' எச்சரித்திருக்கலாம்!

 

பலரது சிந்தனை.... பிரித்தானிய மகாராணியின் குழந்தைத் தனமான சிந்தனை போலவே உள்ளது!

 

பாண் இல்லாவிட்டால், கேக்கைச் சாப்பிடலாம் தானே..! :o

 

இதோட.. வெளிநாட்டுக்கு அகதின்னு ஓடியாந்திட்டு.. ஊருக்கு படங்காட்டப் போறவை.. பிள்ளைகளுக்கு ஆசைப்பட்டதுகளை அளவு கணக்கில்லாமல்.. வேண்டிக் கொடுக்கின்ற போது.. யுத்த வலுவை தாங்கி நின்ற.. அந்த உள்ளூர் பிள்ளைகள் ஒரு ஐஸ் கிறீம் கூட வாங்கிக் குடிக்க முடியாத நிலை... இந்த ஏக்கமும் கூட.. அந்தத் தாயை பைத்தியம் ஆக்கி இருக்கலாம்.

 

இது வெறுமனவே பொருண்மியம் சம்பந்தப்பட்ட பிரச்சனை அல்ல. எமது சமூக ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுத்தும்.. உளவியல் பிரச்சனை.. ஆக்கிரமிப்பு தந்த உளவியல் பிரச்சனை.. போரின் பின் எமது ஒரு பகுதி சமூகம் கவனிப்பாரற்று.. ஏழ்மையில்.. உள் நாட்டுக்குள்ளேயே இடம்பெயர்ந்து குடிசையில் வாழவிடப்பட்ட.. சமூகக் கவனிப்பாரற்ற பிரச்சனை.. அது தரும் உளவியல் பிரச்சனை.. என்று பல காரணிகளை உள்ளடக்கி உள்ளது.

 

இந்த ஒற்றைச் சம்பவம்.. பல பிரச்சனைகளை அடையாளம் காணவும்... தூய நியாய சிந்தனையோடு செயற்படவும்.. எம்மவர்களை தூண்டினால்.. அன்றி... இவ்வாறான நிகழ்வுகள் தொடர்வதை தடுக்க முடியாது.

 

மேற்கு நாடுகள் உழைப்பவனிடம் வரி என்று வாங்கி இல்லாத அகதிங்களுக்கு கொடுத்து ஊருக்கு  "படங்காட்ட" அனுப்பி வைக்கிறது தெரியாமல்.. கண்டபடிக்கு செலவழிக்கும் நம்மவர்களுக்கு உள்ள வசதி போல ஒன்று அங்கும் உள்ளூர் மக்களுக்கு வர வேண்டும். அப்படி ஒன்று இல்லையேல்.... ஒன்று இருந்து சீரழியும். இன்னொன்று இல்லாமல் சீரழியும். இதையே எம் சமூகம் சந்தித்து நிற்கும்..! :icon_idea:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னதான் சொன்னாலும்,என்னதான் கஷ்டம் வந்தாலும் இப்படியான செயலை ஒரு ஒழுங்கான தாய் செய்யமாட்டார். நாங்கள் எல்லாவற்றையும் தமிழர் பிரச்சனையோடு சம்பந்தபடுத்தமுடியாது.... இப்படியான தாய் விடுதலைப்புலிகள் இருந்தாலும் இப்படித்தான் செய்வார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னதான் சொன்னாலும்,என்னதான் கஷ்டம் வந்தாலும் இப்படியான செயலை ஒரு ஒழுங்கான தாய் செய்யமாட்டார். நாங்கள் எல்லாவற்றையும் தமிழர் பிரச்சனையோடு சம்பந்தபடுத்தமுடியாது.... இப்படியான தாய் விடுதலைப்புலிகள் இருந்தாலும் இப்படித்தான் செய்வார்.

 

நீங்க வேற..

 

யாரிலாவது தூக்கிப்போட்டுவிட்டு

நாம  தப்பிக்கணும்..

 

புலிகள் இருந்தால் அவர்கள் மீது..

இல்லாவிட்டால்

எவராவது மாட்டத்தானே வேண்டும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதோட.. வெளிநாட்டுக்கு அகதின்னு ஓடியாந்திட்டு.. ஊருக்கு படங்காட்டப் போறவை.. பிள்ளைகளுக்கு ஆசைப்பட்டதுகளை அளவு கணக்கில்லாமல்.. வேண்டிக் கொடுக்கின்ற போது.. யுத்த வலுவை தாங்கி நின்ற.. அந்த உள்ளூர் பிள்ளைகள் ஒரு ஐஸ் கிறீம் கூட வாங்கிக் குடிக்க முடியாத நிலை... இந்த ஏக்கமும் கூட.. அந்தத் தாயை பைத்தியம் ஆக்கி இருக்கலாம்.

 

இது வெறுமனவே பொருண்மியம் சம்பந்தப்பட்ட பிரச்சனை அல்ல. எமது சமூக ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுத்தும்.. உளவியல் பிரச்சனை.. ஆக்கிரமிப்பு தந்த உளவியல் பிரச்சனை.. போரின் பின் எமது ஒரு பகுதி சமூகம் கவனிப்பாரற்று.. ஏழ்மையில்.. உள் நாட்டுக்குள்ளேயே இடம்பெயர்ந்து குடிசையில் வாழவிடப்பட்ட.. சமூகக் கவனிப்பாரற்ற பிரச்சனை.. அது தரும் உளவியல் பிரச்சனை.. என்று பல காரணிகளை உள்ளடக்கி உள்ளது.

 

இந்த ஒற்றைச் சம்பவம்.. பல பிரச்சனைகளை அடையாளம் காணவும்... தூய நியாய சிந்தனையோடு செயற்படவும்.. எம்மவர்களை தூண்டினால்.. அன்றி... இவ்வாறான நிகழ்வுகள் தொடர்வதை தடுக்க முடியாது.

 

மேற்கு நாடுகள் உழைப்பவனிடம் வரி என்று வாங்கி இல்லாத அகதிங்களுக்கு கொடுத்து ஊருக்கு  "படங்காட்ட" அனுப்பி வைக்கிறது தெரியாமல்.. கண்டபடிக்கு செலவழிக்கும் நம்மவர்களுக்கு உள்ள வசதி போல ஒன்று அங்கும் உள்ளூர் மக்களுக்கு வர வேண்டும். அப்படி ஒன்று இல்லையேல்.... ஒன்று இருந்து சீரழியும். இன்னொன்று இல்லாமல் சீரழியும். இதையே எம் சமூகம் சந்தித்து நிற்கும்..! :icon_idea:

 

 

 

அத்தனையும் உண்மை

 

அண்மையில்  எனக்குத்தெரிந்த ஒரு குடும்பம்

இங்கிருந்து வகேசனுக்குப்போய் வேலணையில் தங்கியிருந்தார்கள்

 

காலையில்  பாண் வண்டிலும்

மதியம் Icecream வண்டியும்

மாலையில் கேக் வண்டியும் வருமாம் (3 வண்டியின் வியாபாரிகளும்  சிங்களவர்கள் - நன்றி  டக்லசு மாமா)

 

இவர்களது பிள்ளைகள் வாங்கப்போக

பக்கத்து பக்கத்து பிள்ளைகளும் வந்து விடுங்களாம்

தான் ஒவ்வொரு நாளும் அவர்களுக்கும் வாங்கிக்கொடுத்தாக சொன்னார்...

ஆனால் அந்த பரிதாபநிலை தன்னை அழவைத்தாகவும் சொன்னார்.

 

இது ஒரு பெரும் ஏற்றத்தாழ்வு

இந்த நிலையை  புலம் பெயர் மக்கள் போக்கமுடியும்..

Link to comment
Share on other sites

அதென்னவோ தெரியவில்லை...தேசியகாவலர்களின் சொந்தக்காரர்கள் மட்டும் ஊரில் பிச்சைகாரர்களாக இருக்கிறார்கள்....

ஊரில் உள்ள "எல்லாரும்" பிச்சைக்காரர்கள் என்றால் யாருக்கு அந்த சிங்கலவியாபாரிகள் விற்கிறார்கள்?

கடனுக்கு கொடுகிரார்களா? அல்லது திரும்பி போகிறார்களா? அப்படி திரும்பி லாபம் இல்லாமல் போனால் பிரச்னை இல்லைதானே...

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.