Jump to content

இராணுவத்திற்கு இயந்திரத்தை வழங்க நல்லூர் பிரதேச சபைத்தவிசாளர் மறுப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவத்திற்கு இயந்திரத்தை வழங்க நல்லூர் பிரதேச சபைத்தவிசாளர் மறுப்பு
2014-09-01 10:12:46
3023.jpg
யாழ். நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்களிலுள்ள கழிவுகளை அகற்றுவதற்கு, நல்லூர் பிரதேச சபையின் கழிவகற்றும் உழவு இயந்திரத்தைத் தரும்படி இராணு வத்தினர் கோரிய போதும் தான் அதனை மறுத்து விட்டதாக, நல்லூர் பிரதேச சபை தவிசாளர் பா.வசந்தகுமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, நல்லூர்ப் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் அகற்றப்படும் கழிவுகள் இதுவரைகாலமும், கோண்டாவில் டிப்போவிற்கு அருகிலுள்ள தனியாருக்கு சொந்தமான காணி ஒன்றிலேயே போடப்பட்டு வந்தன. 

இந்நிலையில், மேற்படி காணியில் கழிவுகள் நிரம்பியதாலும், மேலும் கழிவுகள் போடுவதற்கு காணி உரிமையாளர் மறுத்தமையால் அங்கு கழிவுகள் போடமுடியாத நிலை ஏற்பட்டது. 

இதனையடுத்து, அரியாலைப் பகுதியில் பிரதேச சபைக்கு அன்பளிப்பாகக் கிடைத்த 2 ஏக்கர் காணியை கழிவுகள் கொட்டுவதற்கும், தொடர்ந்து அவற்றை பசளையாக்கும் திட்டமும் 2 மில்லியன் ரூபா செலவில் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டது. 

ஆயினும், அப்பிரதேசம் நன்னீர் சேகரிப்புத் திட்டத்தின் கீழ்வரும் பிரதேசமென்றும், மேலும் அந்தப் பகுதியைச் சூழ விவசாயம் மேற்கொள்ளப்படுகின்றமையால் அங்கு கழிவுகளைப் போடுவதற்கு கமநல சேவைகள் திணைக்களமும், வடமாகாண விவசாய அமைச்சும் மறுத்திருந்தது. 

நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்களில் இருந்து சேகரிக்கப்படும் கழிவுகளைப் கொட்டுவதற்கு இடம் இல்லாத காரணத்தால் கடந்த 27ஆம் திகதி முதல் பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்களில் கழிவுகள் அகற்றும் நடவடிக்கையை பிரதேச சபை தவிசாளர் நிறுத்தியிருந்தார்.  

இந்நிலையில், நேற்று முன் தினம் பிரதேச சபைக்குச் சென்ற இராணுவத்தினர் கழிவுகளைக் கொட்டுவதற்குரிய இடங்கள் தங்களிடம் இருக்கின்றது எனவும், ஆகையால் கழிவகற்றும் உழவு இயந்திரத்தை தரும்படியும் தவிசாளரிடம் கேட்ட போது அதற்கு அவர் மறுப்புத் தெரிவித்துள்ளார் என மேலும் தெரியவருகிறது. 

 
 
Link to comment
Share on other sites

இராணுவத்திற்கு இயந்திரத்தை வழங்க நல்லூர் பிரதேச சபைத்தவிசாளர் மறுப்பு

2014-09-01 10:12:46

நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்களில் இருந்து சேகரிக்கப்படும் கழிவுகளைப் கொட்டுவதற்கு இடம் இல்லாத காரணத்தால் கடந்த 27ஆம் திகதி முதல் பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்களில் கழிவுகள் அகற்றும் நடவடிக்கையை பிரதேச சபை தவிசாளர் நிறுத்தியிருந்தார்.  

இந்நிலையில், நேற்று முன் தினம் பிரதேச சபைக்குச் சென்ற இராணுவத்தினர் கழிவுகளைக் கொட்டுவதற்குரிய இடங்கள் தங்களிடம் இருக்கின்றது எனவும், ஆகையால் கழிவகற்றும் உழவு இயந்திரத்தை தரும்படியும் தவிசாளரிடம் கேட்ட போது அதற்கு அவர் மறுப்புத் தெரிவித்துள்ளார் என மேலும் தெரியவருகிறது. 

தவிசாளருக்கு மூன்று தெரிவுகளே உள்ளன:
  • நல்லூர் நாறுவது தொடர்வதை தடுக்க உடனடியாக கழிவகற்ற மாற்றிடம் கண்டுபிடிக்க வேண்டும்.
  • இராணுவம் தரும் உதவியை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
  • பதவி விலகி வேறு ஆற்றல் மிக்கவருக்கு இடம் விட வேண்டும்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தவிசாளர் அவர்களே..

 

1. இடைக்காலத் தீர்வாக பிற நகரசபைகளோடு பேசி தற்காலிகமாக கழிவைக் கொட்ட நடவடிக்கை எடுங்கள்.

 

2.குறிப்பிட்ட காலத்துக்குள் சரியான கழிவகற்றல் இடங்களைக் கண்டுபிடித்து.. சேதனக் கழிவுகள்.. செயற்கைக் கழிவுகள் என்று தரம் பிரித்து.. கழிவுகளில் இருந்து அடுத்த உற்பத்திகளுக்கு வழிபாருங்கள்.

 

3. சிவில் நடவடிக்கைகளுக்குள் எந்த இராணுவ ரீதியான தலையீடுகளையும் அனுமதிக்காதீர்கள்.

 

4. சதுப்பு நிலப் பிரதேசங்களை தெரிவு செய்து சேதனக் கழிவுகளை அங்கு கொட்டுவது.. எதிர்காலத்திற்கு நல்லது. செயற்கைக் கழிவுகளை சுழற்சி முறைக்குப் பயன்படுத்தும் வகைக்கு சேமிக்க முனையுங்கள். சுழற்சி முறை தொழில்நுட்பங்களை வரவழைக்க முயலுங்கள்.

 

5. இந்தப் பிரச்சனையை நகரசபை சரியான ஆற்றலுள்ளோர்களின் ஆலோசனையோடு.. யாழ் பல்கலைக்கழகத்தின் உதவியோடு.. நீண்ட கால நோக்கோடு தீர்ப்பதே சிறந்தது..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

6. சேதனக் கழிவுகளில் இருந்து மிதேன் போன்ற எரிவாயு உற்பத்திக்கு வழிபாருங்கள். அத்தோடு விவசாயத்துக்கு தேவையான சேதன உரத்தையும் பெற்றுக் கொள்ளலாம். சரியான திட்டமிடலே அவசியம். இராணுவத் தலையீடு அல்ல...!

 

Biogas_plant_sketch.jpg

 

வீடுகளுக்கான திட்டம்.


Schematic-of-a-biogas-plant.jpg

 

 

நகரக் கழிவுகளுக்கான திட்டம்.

Link to comment
Share on other sites

6. சேதனக் கழிவுகளில் இருந்து மிதேன் போன்ற எரிவாயு உற்பத்திக்கு வழிபாருங்கள். அத்தோடு விவசாயத்துக்கு தேவையான சேதன உரத்தையும் பெற்றுக் கொள்ளலாம். சரியான திட்டமிடலே அவசியம். இராணுவத் தலையீடு அல்ல...!

தொலை தூரத்தில் இருந்து இந்த இணையம் ஊடாக நெடுக்கு அவர்கள் தன்னால் முடிந்ததை செய்ய முயல்வதற்கு பாராட்டுகள். மற்றவர்களும் இந்த முன்மாதிரியை பின்பற்ற வேண்டும்.

தவிசாளரின் மின்னஞ்சலையும் தொலைபேசி இலக்கத்தையும் கண்டுபிடிக்க கூடியவர்கள் இந்த களத்தில் அதை பிரசுரித்தால் பலரும் அதை பயன்படுத்துவர்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.