Jump to content

TNA வசமுள்ள நல்லூர் பிரதேச சபையில் கழிவகற்றும் நடவடிக்கையில் உள்ளக முரண்பாடு


Recommended Posts

TNA வசமுள்ள நல்லூர் பிரதேச சபையில் கழிவகற்றும் நடவடிக்கையில் உள்ளக முரண்பாடு:-

 

இராணுவத்தினர் பணியினை பொறுப்பேற்றனர்:-

nallur_CI.jpg

 கூட்டமைப்பு வசமுள்ள நல்லூர் பிரதேச சபையினர் கழிவகற்றும் நடவடிக்கையை உள்ளக  முரண்பாடுகளால் இடைநிறுத்தியுள்ளதால் இராணுவத்தினர் அப்பணியினை மேற்கொள்ள தொடங்கியுள்ளனர். நல்லூர் பிரதேச சபையினர் கழிவுகளை கொட்டுவதற்கு இடம் இல்லை என கூறி கடந்த புதன்கிழமை தொடக்கம் கழிவகற்றும் பணியினை இடைநிறுத்தி உள்ளனர். அதனை அடுத்து திருநெல்வேலி இராணுவத்தினர் நல்லூர் பிரதேச சபைக்கு உட்பட்ட திருநெல்வேலி சந்தையினை துப்பரவு செய்யும் பணியில் இன்று ஞாயிற்றுகிழமை ஈடுபட்டனர்.அதற்கு பிரதேச சபை வாகனங்களை அவர்கள் பயன்படுத்தினர்.

கூட்டமைப்பின் முன்னேற்பாடற்ற உள்ளக முரண்பாடுகளை தூண்டிவி;ட்டு அதன் மூலம் தமிழ் மக்களது மனங்களை வெல்லும் யாழ்.மாவட்ட இராணுவத்தளபதி உதய பெரேராவின் நடவடிக்கைகளின் ஒன்றாக இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பினில் மேலும் தெரியவருகையினில் யாழ் கண்டி நெடுஞ்சாலையில் நாவற்குழி பாலத்திற்கும் யாழ்.வளைவுக்கும் இடையில் உள்ள நன்னீர் தேங்கும் வயல் காணிக்குள் கழிவுகளை கொட்டுவதற்கு நல்லூர் பிரதேச சபை கடந்த வாரம் முயற்சியினை மேற்கொண்டது. அவ் முயற்சிக்கு கமநல சேவைகள் திணைக்களமும் வடமாகாண விவசாய அமைச்சும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், மீறி கழிவுகள் அங்கு கொட்டப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தது. அதனை அடுத்து நல்லூர் பிரதேச சபையினால் அவ் முயற்சி கைவிடப்பட்டது.

 

நல்லூர் பிரதேச சபை கழிவுகளை கொண்டுவதற்கு முனைந்த காணி தனியார் ஒருவரினால் அன்பளிப்பாக கொடுக்கப்பட்ட 2 ஏக்கர் காணியாகும். குறித்த தனியாருக்கு அப்பிரதேசத்தில் 14 ஏக்கர் காணி உள்ளது ஆனால் அக்hணிகளுக்கு வயல் வரம்புகளே பாதையாக காணப்படுகின்றது. தனது காணிக்கு பாதையினை போடுவதற்காக அவர் பல தடவைகள் முயற்சித்த போதிலும் வயல் காணிக்குள் பாதை போடுவதற்கு கமநல சேவைகள் திணைக்களம் அனுமதி அளிக்கவில்லை

 

அதனை அடுத்து குறித்த தனி நபர் நல்லூர் பிரதேச சபைக்கு தனது 14 ஏக்கர் காணியின் முடிவில் உள்ள 2ஏக்கர் காணியினை நன்கொடையாக கொடுத்து அக் காணியை பிரதேச சபை பயன்படுத்துமாறு கூறினார். அக் காணியை நன்கொடையாக பெற்றுக்கொண்ட நல்லூர் பிரதேச சபை அக் காணிக்கு 2 மில்லியன் ரூபாய் செலவில் பாதை அமைத்துள்ளது. வயல் காணிக்குள் பாதை அமைக்க கமநல சேவைகள் திணைக்களம் அனுமதி அளிக்காத போதிலும் அதனையும் மீறி நல்லூர் பிரதேச சபை வயல் காணிக்குள் பாதையினை அமைத்தது

 

2 மில்லியன் ரூபாயில் அமைக்கப்பட்ட அப்பாதையானது கட்டட இடிபாடுகளை கொண்டே அமைக்கப்பட்டுள்ளது அப் பாதைக்கே 2 மில்லியன் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாக நல்லூர் பிரதேச சபை கூறுகின்றது.

இந் நிலையில் கடந்த 26ம் திகதி செவ்வாய்க்கிழமை அக் காணிக்குள் கழிவுகளை கொட்டுவதற்காக நல்லூர் பிரதேச சபை முயற்சிகளை மேற்கொண்ட வேளை அவ் முயற்சியினை உடனடியாக கைவிடும் மாறு கமநல சேவைகள் திணைக்களமும் வடமாகாண விவசாய அமைச்சும் உத்தரவு இட்டது.

 

உத்தரவை மீறி அவ் வயல் காணிக்குள் கழிவுகளை கொட்டினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தது அதனை அடுத்து நல்லூர் பிரதேச சபை அவ் முயற்சியை கைவிட்டதுடன் கழிவுகளை கொட்டுவதற்கு இடம் இல்லை என காரணம் கூறி நல்லூர் பிரதேச சபைக்கு உட்பட பிரதேசத்தில் கழிவகற்றும் நடவடிக்கையையும் கைவிட்டது.

 

கடந்த ஒரு வார காலமாக நல்லூர் பிரதேச சபை கழிவகற்றல் நடவடிக்கையில் ஈடுபடாததால் நேற்றைய தினம்  சனிக்கிழமை நல்லூர் பிரதேச சபையிடம் திருநெல்வேலி இராணுவ முகாமை சேர்ந்த இராணுவத்தினர் தாம் கழிவகற்றும் பணியில் ஈடுபடுவதகாவும் அதற்காக நல்லூர் பிரதேச சபையின் வாகனத்தை தரும்மாரும் கோரியிருந்தனர்.

 

அதற்கு நல்லூர் பிரதேச சபை தவிசாளர் கழிவுகளை கொட்டுவதற்கு இடம் இல்லாமையால் தான் தாம் கழிவகற்றும் பணியை இடைநிறுத்தி உள்ளதாகவும் தமக்கு இடம் கிடைத்தும் அப் பணியை மீள தொடருவோம் என கூறியிருந்தார்.

அதற்கு இராணுவத்தினர் உங்களுக்கு இடம் கிடைக்கும் வரை நாம் அந்த பணியை செய்கின்றோம் எமக்கு கழிவுகளை கொட்டுவதற்கு இடம் உள்ளது நாம் அங்கே இவ் கழிவுகளை கொட்டுகின்றோம் என கூறி இன்று (30) ஞாயிற்றுக்கிழமை மாலை நல்லூர் பிரதேச சபையின் வாகனத்தை தருமாறு கோரி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/111120/language/ta-IN/TNA------.aspx

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.