Jump to content

மாவட்ட மட்ட தாச்சி போட்டி ஆலடி சிந்து-தாவடி காளியம்பாள் இன்று பலப்பரீட்சை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மாவட்ட மட்ட தாச்சி போட்டி ஆலடி சிந்து-தாவடி காளியம்பாள் இன்று பலப்பரீட்சை
2014-08-30 10:38:22
3012.jpg

யாழ்.மாவட்ட தாச்சி விளையாட்டுச் சங்கம் இலங்கை வங்கி, வர்த்தக வங்கி, மக்கள் வங்கி ஆதரவில் மாவட்ட மட்டத்தில் தாச்சிப் போட்டிகளை நடத்தி வருகின்றது.

இப்போட்டிகள் மின்னொளியில் கைதடி விநாயகர் விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.

தொடரின் இறுதிப்போட்டி இன்று சனிக்கிழமை இடம்பெறவுள்ளது. இவ் இறுதிப் போட்டிக்கு தாவடி காளியம்பாள் விளையாட்டுக்கழகமும் ஆலடி சிந்து வி.க.மோத வுள்ளன.

முன்னதாக இடம்பெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் தாவடி காளியம்பாள் விளையாட்டுக்கழகமும் பண்டத்தரிப்பு சாந்தை விநாயகர் விளையாட்டுக்கழகமும் மோதியது.

போட்டியின் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய தாவடி காளியம்பாள் விளையாட்டுக்கழகம் அடுத்தடுத்து பழங்களைப் போட்டு முன்னிலை பெற்றது.

முதல் பாதியின் போது 5:4 என்னும் பழங்கள் அடிப்படையில் இருந்த தாவடி காளியம்பாள் விளையாட்டுக்கழகம் இரண்டாவது பாதியில் மேலும் 4 பழங்களைப் போட பதிலுக்கு பண்டத்தரிப்பு சாந்தை விநாயகர் விளையாட்டுக்கழகம்  மேலும் ஒரு பழத்தையே பெற போட்டியில் 9:5 பழங்கள் அடிப்படையில் தாவடி காளியம்பாள் விளையாட்டுக்கழகம் வெற்றி பெற்று இறுதிக்கு தகுதி பெற்றது.

ஏனைய அரையிறுதிப் போட்டியில் மயிலிட்டி வள்ளுவர் விளையாட்டுக்கழக அணியும் உடுவில் ஆலடி சிந்து விளையாட்டுக்கழகம் ஆரம்பம் முதலே பழங்களைப் பெற்ற போதும் மயிலிட்டி வள்ளுவர் வி.க.தொடர்ச்சியாக போராடியது. 

முதற்பாதியில் 5:3 என்னும் பழங்கள் அடிப்படையில் முன்னிலையிலிருந்த ஆலடி சிந்து விளையாட்டுக்கழகம் இரண்டாவது பாதியில் மேலும் 5 பழங்களைப்பெற பதிலு க்கு மயிலிட்டி வள்ளுவர் விளையாட்டுக்கழகம் 3 பழங்களையே பெற்றது. 

இதனால் இப் போட்டியில் 10:6 பழங்கள் என்னும் அடிப்படையில் ஆலடி சிந்து  விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்று இறுதிக்கு முன்னேறியது. 

யாழ்.மாவட்ட தாச்சி விளையாட்டுச் சங்க தலைவர் செ.சண்முகலிங்கம் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக வடமாகாண கல்வி பண்பாட்டலுல்கள் விளையாட்டுத்துறை அமைச்சர் த.குருகுலராஜா, சிறப்பு விருந்தினர்களாக மாகாண சபை உறுப்பினர்களான இ.ஆர்னல்ட், பா.கஜதீபன், கே.சயந்தன், யாழ். மாவட்ட விளையாட்டு அதிகாரி எஸ்.மோகன் உள்ளிட்டவர்கள் விருந்தினர்களாக கலந்து கொள்ளவுள்ளனர்.   

 
நன்றி - வலம்புரி
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.