Jump to content

சிறுமி உட்பட மூன்று பெண்கள் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு! கிளிநொச்சியில் சம்பவம்


Recommended Posts

கிளிநொச்சி கிருஷ்ணபுரம் பகுதியில் உள்ள குளம் ஒன்றில் குளிக்கச் சென்ற மூன்று பெண்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இச்சம்பவம் இன்று சனிக்கிழமை நண்பகல் 3 மணியளவில் கிருஷ்ணபுரம் பகுதியில் உள்ள கந்தன்குளத்தில் இடம்பெற்றது. கிருஷ்ணபுரத்தைச் சேர்ந்த ச.தாட்சாயினி (வயது 17), இவரது சகோதரியான ச.நவதாரணி (வயது 11), விநாயகபுரத்தைச் சேர்ந்த எஸ்.நிசாந்தினி (வயது 19) ஆகியோரே குளத்தில் உள்ள சகதியில் சிக்கி உயிரிழந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டது. இவர்களது சடலங்கள் மீட்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வரட்சி காரணமாக இப்பகுதி வீடுகளிலுள்ள கிணற்று நீர் வற்றியதாலேயே இவர்கள் குளத்தில் குளிக்கச்சென்று உயிரிழந்த பரிதாபம் நிகழ்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
 
 
 
Link to comment
Share on other sites

கிளிநொச்சி கிருஷ்ணபுரம் குளத்தில் குளிக்கச் சென்ற மூன்று பாடசாலை மாணவிகளான சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் இன்று சனிக்கிழமை நண்பகல் 3.40 மணியளவில் கிருஷ்ணபுரம் பகுதியில் உள்ள கந்தன்குளத்தில் இடம்பெற்றுள்ளது.
 

die_1.png

கிருஷ்ணபுரத்தைச் சேர்ந்த ச.தாட்சாயினி (வயது 17), இவரது சகோதரியான ச.நவதாரணி (வயது 11), விநாயகபுரத்தைச் சேர்ந்த எஸ்.நிசாந்தினி (வயது 17) ஆகியோரே குளித்துக்கொண்டிருந்த வேளை குளத்தில் உள்ள சகதியில் சிக்கி உயிரிழநதுள்ளனர் என தெரியவருகின்றது. இவர்களது சடலங்கள் மீட்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
 

die_2.png

குளத்தினில் மூழ்கியவர்களை மீட்க உதவி கோரி காவல்துறைக்கு தகவல் வழங்கப்பட்டு சுமார் இரு மணி நேரத்தின் பின்னரே அவர்கள் அங்கு வந்து சேர்ந்ததாக தெரியவருகின்றது.
 

die_3.png

வன்னியினில் நீடித்து வரும் வரட்சி காரணமாக இப்பகுதி வீடுகளிலுள்ள கிணற்று நீர் வற்றியதாலேயே இவர்கள் குளத்தில் குளிக்கச்சென்ற வேளையிலேயே மரணமாகியுள்ளனர்.
 

die_4.png

நேற்று முன்தினம் மன்னாரிலும் இவ்வாறு இரு சிறு குழந்தைகள் குளத்தினில் மூழ்கி உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மரணமும், உயிர் வேதனையும்.... தமிழனை துரத்திக் கொண்டே... வருகின்றது.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த சிறுமிகளுகக்கு அஞ்சலிகளும் அவர்கள் குடும்பத்துக்கு அனுதாபங்களும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போர்,சுனாமி போன்றன தமிழ் மக்களை காவு கொண்டது பத்தாது என்று வரட்சியும் தமிழ்ரை காவு கொள்ளத் தொடங்கிட்டுது.நம் முன்னோர் அந்தளவிற்கு பாவம் செய்திருக்கினம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த சிறுமிகளுகக்கு அஞ்சலிகளும் அவர்கள் குடும்பத்துக்கு அனுதாபங்களும்.

Link to comment
Share on other sites

எல்லா பக்கமும் கடலால் சூழப்பட்ட ஒரு தீவில் நீச்சல் பாடசாலையில் ஒரு கட்டாய பாடமாக இல்லாதது ஏன்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா பக்கமும் கடலால் சூழப்பட்ட ஒரு தீவில் நீச்சல் பாடசாலையில் ஒரு கட்டாய பாடமாக இல்லாதது ஏன்?

நிச்சயமாக நீச்சல் அனைத்து மாணவர்களுக்கும் பயிற்றப்படவேண்டும்!

 

மாணவிகளின் மரணங்கள், தவிர்த்திருக்கப்படக் கூடியவை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சிறுமிகளின் பெற்றோருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

 

ஒரே நேரத்தில் மூன்று பேரும் சகதியில் சிக்கி மரணம்.......... மர்மமாகவே இருக்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சிறுமிகளின் பெற்றோருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

 

ஒரே நேரத்தில் மூன்று பேரும் சகதியில் சிக்கி மரணம்.......... மர்மமாகவே இருக்கின்றது.

எனக்கும் முதலில் அப்படித்தான் தோன்றியது ...........
ஆனால் முதலில் சிறுமி அகபட்டு இருந்தால் ...... மற்ற இருவரும் காப்பாற்ற முனைதிருப்பார்கள். அப்படி இது நடந்திருக்கும்.
அல்லி  தாமரை இருக்கும் குளம் என்றால் காலை வைக்காது விடுவதே நல்லம். கீழே இருக்கும் சேற்றின் ஆழம் காலை விடும் மட்டும் தெரியாது. காலை குத்தி மேல் எழும்பவும் முடியாது.
 
இப்படி அநியாமாக ....... இத்தனை  கொடிய போரில் தப்பி இப்படி இறந்துவிட்டார்கள். 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போர்,சுனாமி போன்றன தமிழ் மக்களை காவு கொண்டது பத்தாது என்று வரட்சியும் தமிழ்ரை காவு கொள்ளத் தொடங்கிட்டுது.நம் முன்னோர் அந்தளவிற்கு பாவம் செய்திருக்கினம்

 

இவற்றில்  சில கேள்விகள் உண்டு

 

அண்மையில் ஒருவர் மேடையில் பேசினார்

தீவுப்பகுதி  மக்கள்

பெரும்  போரிலோ

இயற்கை அழிவுகளிலோ (சுனாமியிலோ)

மாட்டிக்கொண்டது கிடையாது

இது அவர்களது முன்னோர்கள் செய்த புண்ணியம் என்று...

 

 

இப்படியான பேச்சுக்கள்

நம்பிக்கைகள்மீது எனக்கு உடன்பாடில்லை..

மரத்தால் விழுந்த மக்களை

நாமும் ஏறி  மிதிக்கணுமா???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சியில் குடிக்க நீர் இல்லாத அளவிற்கு வரட்சியாம்.குளிப்பதற்காக தாமரைப் பூக்கள் உள்ள சேறு குளத்தில் கால் வைத்தவர்களே மூழ்கி மரணமாகி உள்ளனர்

இவற்றில் சில கேள்விகள் உண்டு

அண்மையில் ஒருவர் மேடையில் பேசினார்

தீவுப்பகுதி மக்கள்

பெரும் போரிலோ

இயற்கை அழிவுகளிலோ (சுனாமியிலோ)

மாட்டிக்கொண்டது கிடையாது

இது அவர்களது முன்னோர்கள் செய்த புண்ணியம் என்று...

இப்படியான பேச்சுக்கள்

நம்பிக்கைகள்மீது எனக்கு உடன்பாடில்லை..

மரத்தால் விழுந்த மக்களை

நாமும் ஏறி மிதிக்கணுமா???

ஆம் அண்ணா அவர்கள் செய்த பாவம் தான்... ஏன் கிளிநொச்சி,முல்லைத்தீவு,அம்பாறை மக்களே திரும்ப,திரும்ப பாதிக்கப்படுகின்றார்கள்?...சிங்கள மக்களோ அல்லது யாழ்,மட்டு,திருகோணமலை மக்களோ பெரும்பாலும் பாதிப்படையவில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2 மணி நேரம் தாமதித்து ஒரு மீட்புப் பணி செய்யும் நிலை.

 

இதே மேற்குநாடுகளில் என்றால்.. உடனடியாக மீட்புப்படை உலங்குவானூர்திகள்.. படகுகள் மூலம் மீட்பு நடத்தப்பட்டிருக்கும்.

 

எமது மண்ணை நாமே ஆளும் நிலை இன்மையால் தான் இப்படியான மலிவான கவனக் குறைவான மரணங்கள் நிகழ்கின்றன.

 

எமது மண்ணில் எமது மக்களை பாதுகாப்பாக நடந்து கொள்ள எச்சரிக்கை விடவோ.. தடுக்கவோ யாரும் இல்லை. அவர்களுக்கு ஒரு ஆபத்து என்றால் அக்கறையோடு செயற்படும் வளங்கள் மனித வலு இல்லை. இதனால் தாம் எம் மக்கள் இப்படியான மற்றும் தற்கொலைகள் மூலமான சாவுகளுக்கு இலக்காகி வருகின்றனர்.

 

எதிரிகளுக்கு வால்பிடிக்க உள்ள கூட்டம் அளவிற்கு கூட.. எமது மக்கள் மீது தன்னார்வம் கொண்டு செயற்பட ஆக்களில்லை..! அதுதான் இந்த அவலங்களுக்குக் காரணமே அன்றி.. பாவம் பணியாரம் என்று எதுவும் இல்லை..! இன்னும் மேற்குலகில் வசிக்கும் எம்மவர்கள் கூட முழு மூடத்தனங்களோடு.. வாழ்கின்றமை தான் எம்மினத்தின் சாபக்கேடு.  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான...... குளங்களுக்கு அருகில், 
இனியாவது.....
"சேறு உள்ள குளம், உள்ளே... கால் வைப்பது உயிருக்கு ஆபத்தானது."
என்ற எச்சரிக்கை பலகை ஒன்றை, அங்குள்ள சமூக ஆர்வலர்கள்,  நாட்டி வைக்க முன் வரவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உரிய நேரத்தில் உதவி கிடைக்காதும் அந்த மக்கள் செய்த பாவம் தான்.தமிழனாய்ப் பிறந்த பாவம்

இப்படியான...... குளங்களுக்கு அருகில், 

இனியாவது.....

"சேறு உள்ள குளம், உள்ளே... கால் வைப்பது உயிருக்கு ஆபத்தானது."

என்ற எச்சரிக்கை பலகை ஒன்றை, அங்குள்ள சமூக ஆர்வலர்கள்,நாட்டி வைக்க முன் வரவேண்டும்.

தமிழ்சிறி சேறு,தாமரைக்குளம் எனத் தெரிஞ்சு தான் காலை வைச்சிருப்பினம்.தண்ணீ இல்லா விட்டால் என்ன செய்கிறது

Link to comment
Share on other sites

வன்னியிலையும் யாழ்ப்பாணத்திலையும் மழை இல்லை... ஆனால் தெற்கிலை, அடை மழை...  

 

ஒரு வேளை இதுவும் திட்டமிட இன அழிப்பின் ஒரு அங்கமோ என்னவோ...   

 

 weather modification technology இல்  சீனர்களின் கையே உயர்ந்து இருக்கிறது...   சீனாவின் ஒலிம்பிக் ஆரம்ப நாள் போட்டிகளின் போது கருக்கொண்ட  மழையை  திசை மாற்றியது பற்றி மேற்கு உலக ஊடகங்கள் வாய் பிளந்து எழுதி கொண்டன...

 

அதே சமயம் சீன நிறுவனங்களே வடக்கில் வீதி புனரமைப்பு முதல் பல வேலைதிட்டங்களை செயற்படுத்துகின்றன...   மழை அவர்களின் வேலையை பாதிக்கமல் இருக்க எடுக்கும் நடவடிக்கையாக கூட இருக்கலாம்... 

 

இப்ப நான் சொல்ல வந்ததை சொல்லி விடுகிறேன்...   வன்னியில் இருக்கும் எனது உறவினர் பலரிடம் இருந்து கேட்டது...  மழை மேகம் கருக்கட்டும் போது எல்லாம் ஒரு வெள்ளை நிற விமானம் பறப்பதாகவும் அதோடு மேகங்களும் விலகி வேறு திசையில் போய் விடுவதாகவும் சொல்கிறார்கள்.. 

 

இது நடப்பதுக்கு சாத்தியம் இல்லை எண்டு சொல்பவர்களுக்கு  ஒரு  கட்டுரையையும் இணைத்து விடுகிறேன்... 

 

How China Stopped the Rain for the Beijing Olympics

http://bkcreative.hubpages.com/hub/China-Stopped-the-Rain-for-the-Beijing-Olympics

 

 

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.

தல சொல்ற விடயம் science fiction போலிருந்தாலும் அதில் விடயமிருக்கலாம்.

வேண்டுமென்றே வரட்சியாக்கி, தமிழரை நகரங்களுக்கு இடம்பெயர்த்து, பின் கைவிடப்பட்ட காணிகளை குடியேற்ற பயன் படுத்தலாம்.

ஆனால் மொன்சூன் போன்ற பாரிய காலநிலையை ஒர் வெள்ளை பிளேனை கொண்டு மாற்றுவதும் சாத்தியமாக தெரியவில்லை.

இது வெறும் எல் நீனோ பாதிப்பாகவும் இருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.

தல சொல்ற விடயம் science fiction போலிருந்தாலும் அதில் விடயமிருக்கலாம்.

வேண்டுமென்றே வரட்சியாக்கி, தமிழரை நகரங்களுக்கு இடம்பெயர்த்து, பின் கைவிடப்பட்ட காணிகளை குடியேற்ற பயன் படுத்தலாம்.

ஆனால் மொன்சூன் போன்ற பாரிய காலநிலையை ஒர் வெள்ளை பிளேனை கொண்டு மாற்றுவதும் சாத்தியமாக தெரியவில்லை.

இது வெறும் எல் நீனோ பாதிப்பாகவும் இருக்கலாம்.

மழையை வரவழைக்க கட்டார் குவைத் போன்ற நாடுகள் ஒரு மொய்சரைசறை பயன்படுத்துவதாகவும்.
அதனால் பூமியின் இயற்கை சமநிலை குழம்பி இருப்பதாகவும். global warming காரர்கள் ஒரு குற்றசாட்டை வைத்திருக்கிறார்கள்.
 
குறித்த இடத்தில் மழை பெய்யாது தடுக்கலாம் என்றுதான் நான் நினைக்கிறேன்.
பெரிய storm வருபோது வேண்டுமானால் முடியாது போகலாம்.
Link to comment
Share on other sites

ஆழ்ந்த இரங்கல்கள்.

தல சொல்ற விடயம் science fiction போலிருந்தாலும் அதில் விடயமிருக்கலாம்.

வேண்டுமென்றே வரட்சியாக்கி, தமிழரை நகரங்களுக்கு இடம்பெயர்த்து, பின் கைவிடப்பட்ட காணிகளை குடியேற்ற பயன் படுத்தலாம்.

ஆனால் மொன்சூன் போன்ற பாரிய காலநிலையை ஒர் வெள்ளை பிளேனை கொண்டு மாற்றுவதும் சாத்தியமாக தெரியவில்லை.

இது வெறும் எல் நீனோ பாதிப்பாகவும் இருக்கலாம்.

 

மழையை முற்றாக பெய்யாது இலகுவாக  கலைந்து போக வைக்கலாம் எண்று நானும் நினைக்கவில்லை...   ஆனால்  பெய்ய இருக்கும் மழையை திசை மாற்றி வேறு இடத்தில்  பெய்ய வைக்க முடியும் எண்றே நினைக்கிறேன்... !!!   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா பக்கமும் கடலால் சூழப்பட்ட ஒரு தீவில் நீச்சல் பாடசாலையில் ஒரு கட்டாய பாடமாக இல்லாதது ஏன்?

இளம்தளிர்களை இழந்து துயருள்வாடும் உறவுகளோடு ஆழ்ந்த இரங்கலைப் பகிர்ந்து கொள்கின்றேன். 
 
இளைய தலைமுறையினரின் இழப்பு என்பது ஈடுசெய்யமுடியாதது. கிளிநொச்சிப் பகுதியிலே உள்ள சிறியகுளங்களாகக் கருதப்படும் குளங்கள் தூர்வாப்படுவதோ பராமரிப்புச் செய்வதோ இல்லாத குளங்களாகும். அத்தோடு அவை அல்லிகளால் நிறைந்திருக்கும். குளிப்பதற்குப் பாதுகாப்பனதும் அல்ல. இதுபோன்ற குளங்களை இனங்கண்டு பராமரிப்புக்கு உட்படுத்துதல், பாதுகாப்பாகக் குளிப்பதற்கான பகுதியை உருவாக்கிவிடுதல், எச்சரிக்கை அறிவிப்புக்களை வைத்தல் போன்றவற்றை கரைச்சி பிரதேசசபை, கிளிநொச்சி நகரசபை, கிருஸ்ணபுர கிராம அபிவிருத்திச் சங்கம் போன்ற நிர்வாகங்கள் விழிப்புணர்வுச் செயற்பாடுகளைச் செய்து இனிமேலும் இதுபோன்ற துயரங்கள் நிகழாதவாறு தடுக்க முன்வரவேண்டும்.அதேவேளை பசி கரணியமாகத் தாமரைக்கிழங்கு எடுக்கச் சென்று இதுபோன்ற  துயர்மரணங்கள் நிகழ்ந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.  
 
பாடசாலைகளில் நீச்சலைக் கற்பிக்கும் செயற்பாடுகளை உருவாக்குதல் வேண்டும். இதனூடாகவும் இதுபோன்ற துர்மரணங்களைத் தவிர்க்கலாம். இதுதொடர்பாக வடமாகாண கல்வி மற்றும் விளைiயாட்டுத்துறையினர் ஒருங்கிணந்து செயற்படுவது பயனுடையதாக இருக்கும். 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மக்களினதும் அரச அதிகாரிகளினதும் அசட்டையால் வந்த வினை.
மக்களின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்யமுடியாத கையாலாகத்தனமான

அரச அதிகாரிகள் தங்கள் பிள்ளைகளுக்கு இப்படி ஒரு நிகழ்வு வந்தாலும் திருந்துவார்களோ தெரியவில்லை.

ஆழ்ந்த இரங்கல்கள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
    • நிச்சயமாக  @goshan_cheக்கு புதிய சம்பவம் என்று அவருக்கு தெரிந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால்.... அவர் @பெருமாள் யும், @பையன்26யும் கலாய்ப்பதற்காக அடி மட்டத்திற்கு இறங்கி... "தூர் வாரியிருக்கிறார்". 😂 நமக்கும் அவரை கலாய்ப்பதில் ஒரு அலாதி இன்பம். 🙂
    • நான் நினைக்கின்றேன் அவருக்கு தெரியும் இது புதிது என்று.  ஆனால் பையனின் கருத்தை மட்டும் வைத்து எப்படி சம்பவம் பழையதுதான் என்று அடிச்சு சத்தியம் பண்ணினாரோ தெரியவில்லை. ஓருவர் இங்கு எழுதுவதை மட்டும் வைத்து தனது நிலைப்பாட்டினை மாற்றும் ஆள் அல்ல அவர்.0
    • ஈரான் ஜனாதிபதியின் இலங்கை வருகை : கண்கானிப்பு நடவடிக்கையில் அமெரிக்க உளவுத்துறை. ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இலங்கை வருகையை இஸ்ரேலின் மொசாட் புலனாய்வு சேவையும், அமெரிக்க எப்.பி.ஐ உளவுத்துறையும் கண்காணித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொள்வதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி எதிர்வரும் புதன்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்நிலையில், இலங்கையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறையில் உள்ளதோடு, ஈரானிய சிரேஷ்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குழுவொன்று அண்மையில் இலங்கைக்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தது. ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும், சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேவேளை, கொழும்பிற்கு அழைத்து வரப்படும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1379001
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.