Jump to content

இலங்கை நிதி நிலைமையில் சீனாவில் தங்கியிருக்கும் நிலை வேகமாக அதிகரிக்கிறது- Aljazeera


Recommended Posts

Mattala_CI.png

2009 ஆம் ஆண்டிலிருந்து இலங்கை சீனாவிடமிருந்து 4 பில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றமை, இலங்கை சீனாவில் பெருமளவு தங்கியிருப்பதை எடுத்துக்காட்டுவதாக விமர்சகர்கள் எச்சரிக்கிறார்கள்.

 

இலங்கையின் புதிய விமானநிலையமாகிய மத்தளை ராஜபக்ஸ சர்வதேச விமானநிலையம் அமைப்பதற்கு சீனா பண உதவியளித்தது. 2009 இல் யுத்தம் நிறைவடைந்ததிலிருந்து 4 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பணத்தை கடன்கள், கொடைகள் மற்றும் உதவிகளாக சீனாவிடமிருந்து பெற்று நிதி நிலையில் இலங்கை சீனாவில் தங்கியிருப்பது  அதிகரித்து வருகிறது. 

அரசாங்கம் கடனைப் பேணுவதன் மூலம் அதிகம் தேவைப்படுவதாக சொல்லி  உட்கட்டமைப்புத் திட்டங்களை செயற்படுத்தி முடிக்க, எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் நாடு நிதிநிலையில் சீனாவில் தங்கியிருக்கும் பாதையை நோக்கி பயனித்துக்கொண்டிருப்பதாக எச்சரிக்கின்றனர்.

தெற்கு கடற்கரை நகரமான அம்பாந்தோட்டையிலுள்ள ஒரு ஆழ்கடல் துறைமுகம் மற்றும் மத்தளை சர்வதேச விமானநிலையம் போன்ற     சுமார் 70 சதவீத இலங்கையின் உட்கட்டமைப்பு திட்டங்களிற்கு சீன வங்கிகள் நிதியுதவியளித்துள்ளன.  

"உலக வங்கி அல்லது சர்வதேச நாணய நிதியம் போல நிபந்தனைகள் விதிக்காது, சீன வங்கிகள் கடன் வழங்குகிறது” என எதிர்க்கட்சி அரசியல்வாதியான கர்ச டி சில்வா அல்ஜசீராவிற்கு கூறியதோடு நிபந்தனையற்ற உடனடிப்பணத்தை பெறுவதின் விருப்பத்திலேயே அரசாங்கம் நடத்தப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.   

   

"சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலகவங்கியின் நிபந்தனைகளை கடைப்பிடிக்க வேண்டியிருந்தால், பெரும்பாலான கடன்களிற்கு ஒப்புதல் கிடைக்காது”  என மேலும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கைக்கு மிகப்பெரியளவில் கொடை வழங்கும் நாடாக ஜப்பான் இருக்கும் அதே வேளை இலங்கைக்கான சீனாவின் நிதிப்பங்களிப்புக்கள் சமீபத்திய ஆண்டுகளில் வேகமாக அதிகரித்துள்ளது.

சீனாவும் இலங்கையும் 1971 ஆம் ஆண்டிலிருந்தே நல்லுறவினைப் பேணி வருவதோடு அன்றிலிருந்து இன்று வரை 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை சீனா நிதியுதவியாக இலங்கைக்கு வழங்கியுள்ளது. ஆனால் 5 வருடங்களிற்கு முன்னர் (2009 இல்) இலங்கையரசிற்கும்  விடுதலைப்புலிகளிற்குமிடையிலான மோதல்கள் முடிவுக்கு வந்த பிற்பாடே பெருமளவான நிதி உதவிகளை சீனா வழங்கி வருகிறது.

அரசாங்கம் சீனாவிற்கு முன்னுரிமையளிக்கின்றமையை மறுத்த    இலங்கையின் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சரான லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, பல நாடுகளுடன் இலங்கை இருதரப்பு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டிருக்கின்றமையை சுட்டிக்காட்டினார்.        

“இலங்கைக்கு மிகப்பெரியளவில் கடன் வழங்கும் நாடாக ஜப்பான் உள்ளது. நாங்கள் வெளிநாட்டு நேரடி முதலீட்டினை ஊக்குவிப்பது தொடர்பாக டோக்கியோ மிட்சுபிசி வங்கியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டோம். எமது அபிவிருத்தித் திட்டங்களிற்கு நிதியுதவியளிக்கப்போகும் மற்றுமொரு நாடாக  குவைத் உள்ளது. உடனடி கட்டுமான திட்டங்களில் இலங்கைக்கு உதவுவதில் சீனா முனைப்புடன் ஒப்பந்தங்களை எமது நாட்டுடன் செய்கின்றது.”, என யாப்பா அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.  

சீனா மிக உயர்ந்த வட்டி வீதங்களிலேயே  கடனுதவிகள் வழங்குவதாக எதிர்க்கட்சி அரசியல்வாதியான டி சில்வா சுட்டிக்காட்டினார்.  

“2014 ஆம் ஆண்டின் முதலாவது காலாண்டில் ஜப்பான், குவைத் மற்றும் சீனா ஆகிய நாடுகளுடன் மூன்று முக்கிய முதலீட்டு திட்டங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஜப்பான் மற்றும் குவைத்தின் வட்டி விகிதங்கள் முறைய 0.1 மற்றும் 0.2 சதவீதமாக இருக்கையில் , சீனாவின் வட்டி விகிதம்  3.0 சதவீதத்தை கடந்துள்ளது" என்று அவர் மேலும் தெரிவித்தார். 

பொருளாதாரத்தில் சீனாவின் பங்கு

"நாங்கள் சீனாவில் இருந்து பெறப்பட்ட கடன்களைத் திருப்பி செலுத்துவதற்காக  கடன் வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுக்கொண்டிருக்கின்றோம். அரசாங்கம் நம்ப வைப்பது போல சீனாவினால் நிதி உதவி செய்யப்பட்ட திட்டங்கள் பயனளிக்கவில்லை." என அரசாங்கத்தின் மோசமான பொருளாதார திட்டமிடலினை  மேற்கோள்காட்டி அவர் மேலும் தெரிவித்தார்.

சீனாவிடம் இருந்து பெறப்பட்ட கடன்கள் வரத்தக விகிதத்தில் பெறப்பட்டதாக , அதாவது அதிக வட்டி விகிதத்தில் பெறப்பட்டதாகவும், கடன்கள் தொடர்பான  விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் நாட்டிற்கு நாடு வேறுபடுவதாகவும் இலங்கையின் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் செயலாளரான எம்.எம்.சி.பெர்ணான்டோ அல்ஜசீராவிற்கு  தெரிவித்தார்.

209 மில்லியன் அமெரிக்க டொலர்களும் அதற்கான வட்டியுமாக செலவு செய்து புதிதாக கட்டப்பட்ட மத்தளை ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் 16,000 ரூபாய்கள் ($ 120) மட்டுமே வருவாயாக கடந்த வைகாசி மாதம் பெறப்பட்டது என சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன ஏற்றுக்கொண்டார்.

கட்டுமான வேலைகள் சீன நிறுவனங்களிற்கே சென்றதாகவும் எமது நாட்டை சேர்ந்தவர்களிற்கு வேலை வாய்ப்பு வழங்கப்படவில்லை எனவும், வேலை தொடங்கும் முன்பே சர்வதேச விமான சேவைகளுடன் ஒப்பந்தம் செய்யத்தவறியமையால்   இந்த விமானநிலையம் மிக அருமையாகவே தொழிற்படுவதாகவும் கூறி மத்தள விமானநிலையத் திட்டத்தைவி டி சில்வா விமர்சித்தார்.   

  

இதற்கு, " இந்த விமானநிலையம் அதன் முழு சம்பாதிக்கும் திறனை அடைய நேரம் எடுக்கும்." என்று கூறி சிவில் விமான போக்குவரத்து அமைச்சரான ஜயரத்ன மறுதளித்து பேசினார். 

இலங்கைக்கு சீனா கடன்களை வழங்குவது தொடர்ந்து அதிகரிக்கையில்  நிதி உதவி மற்றும் கொடைகள் வழங்கப்படுவது இந்தியாவுடன் ஒப்பிடுகையில் குறைவாகவே காணப்படுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியா இவ்வாறு 348 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதி உதவி செய்துள்ளது.

இந்த இரண்டு தெற்கு ஆசிய நாடுகள் இடையேயான  உறவுகள் ஊசலாடுகின்ற போதிலும், கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக  சிங்களப் பெரும்பான்மை அரசாங்கத்தை எதிர்த்துப்போராடியவர்களும் இந்தியாவுடன் நெருங்கிய தொடர்பினையுடையவர்களுமான தமிழ் மக்களிற்கு புனர்வாழ்வளிக்கப்படுவதற்கென இந்தியா நிதியுதவிகளை வழங்கி வருகின்றது.

இலங்கையின் சீனாவிற்கான ஏற்றுமதி 1.2 சதவீதமாகவே இருக்கையில், இந்தியாவிற்கான இலங்கையின் ஒட்டுமொத்த ஏற்றுமதி 1 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக கடந்த ஐந்து ஆண்டுகளில் அதிகரித்துள்ளது.  அதே நேரம் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களில் 16 சதவீதம் சீனாவினுடையதாகும்.

இந்தியாவின் நலன்கள்:

 “இலங்கையில் சீனாவின் நிதி விரிவாக்கம் எமது நாட்டை அபிவிருத்தி செய்வதில் குறைந்தளவு பங்களிப்பையே வழங்குகின்றது. மாறாக, இந்த  சீனாவின் நிதி விரிவாக்கமானது   அதனது  "முத்து மாலை" திட்டத்தினை ஏற்படுத்துவதன் மூலம் இந்து சமூத்திரத்தை சூழவுள்ள நாடுகளில் பீஜிங் தனது செல்வாக்கை அதிகரிக்கவே உதவுகின்றது” என அரசியல் ஆய்வாளரான  சானக பெரேரா குறிப்பிடுகிறார்.

 

"இலங்கையில் சீனாவின் திட்டங்கள் அனைத்தும்  உட்கட்டமைப்பு சார்ந்ததாயும் அவற்றில் பெரும்பாலானவை கடற்கரையோரங்களை  சார்ந்தும்  இருக்கிறது” என பெரேரா அல்ஜசீராவிற்கு  கூறினார்.

"அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் மத்தளை விமானநிலையம் ஆகியவை இப்பிராந்தியத்தில் சீனாவின் திட்டங்களுக்கு ஏதுவாயிருக்கும். சீனாவுக்கு இந்த திட்டங்கள் தடையில்லாத அனுமதியை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது."

கிழக்கு கடற்கரையில் ஒரு விமான பராமரிப்பு மையம் அமைக்க சீனாவிற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக  எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இதனை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசும் ஏற்றுக்கொண்டார்.

இவ்வாறான உடன்படிக்கைகள் இந்தியா மற்றும் இலங்கையிடையேயான  உறவுகள் மீது ஒரு இருண்ட நிழலை உருவாக்கும் என்றும் இது இலங்கையின் இறைமையை வலியுறுத்தும் 1987 ஆம் ஆண்டு இலங்கை-இந்திய ஒப்பந்தத்திற்கு எதிராக செல்லும் எனவும் பெரேரா கூறுகிறார். 

நிதிநிலையில் இலங்கை சீனாவில் தங்கியிருப்பதால், இலங்கை சிறிய அளவையே பெறமுடியுமாயிருப்பதாகவும், ஆனால் இலங்கை அரசாங்கம் கவனமாக இல்லாவிடின்  அதிகம் இழப்பதற்கு நேரிடும் எனவும் பெரேரா மேலும்  எச்சரித்தார்.

Aljazeera இணையத்தளத்தில் வெளியான இப்பத்தி குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது - தமிழில், இனியவன்

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/111028/language/ta-IN/article.aspx

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
    • பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் 29 MAR, 2024 | 02:32 PM   இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினம் (29) பெரிய வெள்ளியாக உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இன்று பெரிய வெள்ளியை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன. மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் துன்பங்களை அனுபவித்து சிலுவைச் சாவினை ஏற்றுக்கொண்ட இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் வெள்ளியான இன்று மட்டக்களப்பில் உள்ள பல தேவாலயங்களில் சிலுவைப் பாதை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.    தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயம்  மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இந்த சிலுவைப் பாதை ஊர்வலம் குருக்கள்மடம் தூய அசீசியார் ஆலயத்தில் இருந்து செட்டியாளயம், மாங்காடு, தேற்றாத்தீவு ஆகிய ஊர்களின் பிரதான வீதியூடாக தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தை வந்தடைந்தது. புனித யூதாததேயு திருத்தலத்தின் அருட்தந்தையின் தலைமையில் நடைபெற்ற இந்த சிலுவைப் பாதை நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். புளியந்தீவு புனித மரியாள் பேராலயம்  மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பிரதான சிலுவைப்பாதை நிகழ்வு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி ஜே.நிக்ஸன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.  இந்த சிலுவைப் பாதை புனித மரியாள் பேராலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, மத்திய வீதி வழியாக சென்று, வைத்தியசாலை வீதியை அடைந்து, மீண்டும் பேராலயத்தை  அடைந்தது.  இந்த சிலுவைப்பாதையில் அதிகளவிலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பக்திபூர்வமாக சிலுவை சுமந்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை நினைவுகூரும் உயிர்த்த ஞாயிறு தேவாராதனை ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெறவுள்ளது.  https://www.virakesari.lk/article/179968
    • அபிவிருத்தி லொத்தர் சபை அதன் 40 வருட வரலாற்றில் 2023 இல் அதிகூடிய இலாபத்தை பதிவு செய்துள்ளது. இதன்படி, அபிவிருத்தி லொத்தர் சபையானது 2022-2023 ஆம் ஆண்டில் 32% இலாபமீட்டி புதிய சாதனையை படைத்துள்ளது, இது 2022 இல் பெற்ற இலாபத்தின் இருமடங்காகும். இதன்டபடி, ஜனாதிபதி நிதியத்திற்கு அபிவிருத்தி லொத்தர் சபையினால் வழங்கப்பட்ட பங்களிப்பு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 13 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 3,622,506,725 ரூபா 03 பில்லியன் இலக்கை கடந்துள்ளது. அதே சமயம், அரசாங்கத்திற்கான பங்களிப்பை 6% உயர்த்தி 5,193,833,721 ரூபாவினை வழங்கியுள்ளது. அவிருத்தி லொத்தர் சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஜித் குணரத்ன நாரங்கல இது குறித்து கருத்து தெரிவிக்கையில், சவாலான காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்மறையான விளைவுகளை குறைக்க அபிவிருத்தி லொத்தர் சபை கையாண்ட உத்திகளால் மிகக் குறுகிய காலத்தில் வருமான அதிகரிக்க வழி செய்துள்ளது. வழமையான லொத்தர் சீட்டுகள் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசேட சீட்டுகளுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை அதிகரிக்க அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்நாட்டு பயனாளிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக லொத்தர் சீட்டுகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தலைவர் தெரிவித்தார். அபிவிருத்தி லொத்தர் சபையின் வருமானத்தில் 50% இந்த நாட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படுவதாகவும் அவர் அவர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/297543
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.