Jump to content

சில அனாமதேய இணையத்தளங்கள் மீது மனித உரிமை செயற்பாட்டாளர் கிருபாகரன் சட்டநடவடிக்கை


Recommended Posts

kirupakaran1.jpg
 
மே 2009ன் பின்னர், சில ஊடகங்கள் இணையதளங்கள், தாம் நினைத்தவாறு, ஊடகத்துறையில் தமது அனுபவத்திற்கு ஏற்றவாறு, மிகவும் பண்பற்ற முறையில், பல பிரமுகர்கள், தனி நபர்கள், வியாபார ஸ்தாபனங்கள், ஆலயங்கள் ஆகியவை பற்றி, பல அனாமதேயமாகவும், சில பொய்யான பெயர்களுடனும் வெளியிட்டு வருவது தெரிந்ததே.
 
 இவ்வடிப்படையில், 1990ம் ஆண்டு முதல், பிரான்சை தளமாக கொண்டு இயங்கும், தமிழர் மனிதர் உரிமை மையமும், கடந்த 24 வருடங்களாக சர்வதேசத்தில் மனிதர் உரிமை செயற்பாட்டாளராக திகழும், இதன் பொதுச் செயலாளரான, திரு. ச. வி. கிருபாகரன் பற்றி, சில மோசமான விசமத்தனமான விமர்சனங்களை மிக அண்மைக்காலத்தில் சில இணையதளங்களில் வெளியாகியிருந்தது.
 
 இப்படியான பல செயற்திட்டங்களை, முன்பு பல வருடங்களாக, சிறிலங்கா அரசு ஆதரவு கொழும்பு ஆங்கில, சிங்கள ஊடகங்கள், தமிழர் மனிதர் உரிமைகள் மையம், அதனது பொதுச் செயலாளரான கிருபாகரன் பற்றியும் வெளியிட்டிருந்தனர். இறுதியில்,ஐ.நா. ஊடகப்பிரிவின் தலையிட்டினால், கொழும்பு ஊடகங்கள் கிருபாகரனிடம் மன்னிப்பும் கோரினர்.
 
 மிக அண்மையில் ச. வி.கிருபாகரனுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் நோக்கில், ஏதேச்சையான விசமத்தனமான குற்றச்சாட்டுகளை, கட்டுரை செய்தி வடிவில் வெளியிட்ட சில இணையதளங்கள் மீது, சட்ட நடவடிக்கைக்கான வேலை திட்டங்கள் கிருபாகரனும், தமிழர் மனிதர் உரிமைகள் மையமும் ஆரம்பித்துள்ளனர்.
 
 ஏற்கனவே பிரான்ஸிலிருந்து இயக்கப்படும் ஓர் இணையதளம் மீது, சட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், அதேவேளை, பிரித்தானியாவிலிருந்து இயங்கும் இன்னுமொரு இணையதளம் மீது சட்ட நடவடிக்கைக்கான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
 கிருபாகரன் பற்றிய அவதூறான கட்டுரையை, வெளியிட்ட ஒரு இணையதளம், சில மணி நேரத்தின் பின்னர் கட்டுரையை வாபஸ் பெற்றிருந்தாலும், இதற்கான சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு பிரித்தானிய சட்டத்தில் இடம் உள்ளது.
 
 தமிழர் மனிதர் உரிமை மையமும், இதன் பொதுச் செயலாளரான கிருபாகரனும், கடந்த 24 வருடங்களாக, தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் காரணிகளினால் பதிக்கப்பட்ட- இறந்தவர், கைது செய்யப்பட்டோர், சித்திரவதை செய்யப்பட்டோர், பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டோர், போன்றோரின் விபரங்களை, சர்வதேசத்திற்கும் ஐ.நா.மனித உரிமை பிரிவிற்கும் வழங்கி வந்துள்ளார்கள் என்பதற்கு ஆயிரம் ஆதாரங்கள் உள்ளன. இதை தெரியாதோர் யாரும் இருப்பின், இவற்றை சிறிலங்கா அரசிடமே வினாவி அறிந்து கொள்ளலாம்.
 
 கிருபாகரனின் இச் செயற்பாட்டை, இந் நாளில் தமது பெயருக்கும் புகழுக்கும் ஐ. நா. மனித உரிமை சபையில், தமது “வரவை” பதிவு செய்வோர் சிலர், தமது புகழ் பாடும் செயற்பாட்டிற்கு, கிருபாகரன் ஓர் தடைக்கலாக இருப்பதாக எண்ணுகின்றனர்.
 
 இச் சட்ட நடவடிக்கை முடிவுக்கு வரும் கட்டத்தில், பல லட்சம் யூரோ அபராதத்துடன் கூடிய, சில வருட சிறை தண்டனையும் ஏற்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது. இச் சட்ட நடவடிக்கையில், இந்த இணையதளத்தினால் ஏற்கனவே பதிப்பிற்குள்ளான,சில கல்விமான்கள், முக்கிய ஸ்தாபனங்களின்
பிரதிநிதிகள் போன்ற பலர் சாட்சியமளிக்கவுள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில அனாமதேய இணையத்தளங்கள் மீது மனித உரிமை செயற்பாட்டாளர் கிருபாகரன் சட்டநடவடிக்கை

 

நல்லவிடயம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது தனக்கு வந்த பிறகு எடுக்கும் முடிவு..!

 

இதற்க்கு முன்னா் பலா் அனாமதேயமாக விமா்சிக்கப்பட்டிருந்தமை பற்றி யாரும் அக்கறைப்படவில்லை..!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.